1. தான் ஜொள்ளு விடுகிறோம் என்று தெரிந்தே விடுவார்கள், அது தேவை அல்லது தவிர்க்க இயலாதது என்பது இவர்களது நிலைப்பாடாக இருக்கும்.

2. ஜொள்ளு விடுவார்கள் ஆனால் நான் உத்தமன், ஒரு பெண்ணை கூட ஏறெடுத்து பார்க்கமாட்டேன் னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க,  இவர்களை நீயும் "ஜொள்ளு"தான் ன்னு சொல்லிவிட்டால் போதும், கோபத்தில் கொப்பளித்து, கத்திக்க்கூப்பாடு போட்டு, ஆஹா ஓஹோ எங்கப்பன் குதிருக்குள் இல்லை என நிரூபிப்பார்கள். பாவம் தான் :)

3. ஜொள்ளுவிடுவதை,  ஜொள்ளுவிடும் பெண்ணிடமே சொல்லிவிட்டு விடுவார்கள்.இவர்களுக்கு உண்மை விளிம்பிகள் என்ற நினைப்பு, இதை அனைவரிடமும் பயன்படுத்துவார்கள் என்று அறியாத பெண்கள், தெரியாமல் கவிழ்ந்துவிடுவது என்னவோ உண்மைதான். பொய் சொல்லறவனை விடவும், உண்மையை சொல்ற ஆணை பெண்ணுக்கு பிடிக்கும் என்று தெரிந்து க்கொண்டு அதற்கு தகுந்தார் போன்று செயல்படும் நல்லவர்கள் இவர்கள். 



4.  இன்னும் சிலர், ஜொள்ளு விடுவது, வெளியில் தெரியவே க்கூடாது என ரொம்பவே சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ஜொள்ளுவிடுவார்கள். பல பெண்களுக்கு இவர்களை அடையாளம் கண்டுக்கொள்ள சிரமமே.

5. பெண்களை "அழகு" என்று பார்த்து, ஒரு குறிப்பிட்ட இடத்தோடு தன் பார்வையை, நினைவை நிறுத்திக்கொள்ளும் நாகரீகமான ஜொள்ளர்கள் ஒரு வகை. 

6. 5 ஆவது பாயின்ட்டை படித்து முடித்தவுடன், நாம் இதில் தான் வருகிறோம் என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும்  ஜொள்ளர்கள் அனைவரும் இதில் வருவார்கள். :)

7. சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஜொள்ளுபவர்கள். அதாவது இவர்கள் ரெகுலர் ஜொள்ளர்கள் இல்லை, ஆனால் தனிமையாக ஒரு பெண்ணோடு இருக்கும் நேரத்தில், சந்தர்ப்பம், தனிமை, இதுவரை இல்லாத உணர்வு ன்னு ஏதோ ஒன்று வந்து தொலைய, ஜொள்ள ஆரம்பித்து விடுவார்கள். அந்த பெண் கூட இவர்களை இப்படி இதுவரை பார்த்திருக்க மாட்டாள், அதனால் அவளுக்கும் தர்மசங்கடமாக இருக்கும்.  "என்ன கொடுமைடா இது, இவனும் எல்லார் மாதிரியா ன்னு"  யோசிப்பாள்

8. ஆன்லைன் முகமூடி ஜொள்ளர்கள். முகத்தை மறைத்து, வேற்று பெயரில் பெண்களிடம் ஜொள்ளுபவர்கள். இதே ஆள் நிஜ பெயரில் அதே பெண்களோடு நேரடியாக மிகவும் நன்றாக பேசக்கூடிய நல்லவராக இருப்பார்.

9. ரொம்ப பாவமானவங்க இவங்கத்தான். சாதாரணமாக பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு பேசுவார்கள், ஆனால் டன் டன் ஆக ஜொள்ளு வடியும்.. அது அவர்களுக்கு தெரியவே தெரியாது. ஜொள்ளுவிடுகிறோம் என்ற பிரஞ்ஞை இல்லாமல் ஜொள்ளுபவர்கள். இவர்களிடம் சொல்லியும் பயனில்லை. :)

10. இரண்டும் கெட்டான் வகை ஜொள்ளர்கள். ஜொள்ளுவிடனும்னும் ஆசை இருக்கும், விடாமல் நல்ல பெயர் வாங்கனும்னும் ஆசை இருக்கும், இரண்டையும் சரிவர செய்ய முடியாமல் தடுமாறி...  நமக்கு சிரிப்பை வரவழைப்பார்கள். எதாவது ஒன்றை செய்துத்தொலை என்று நாமே சொல்லிவிடலாம் என்று தோன்றும். :)

11. இதை மறந்தேவிட்டேன்.  வயதான கேசுகள். மகள் வயது இருக்கும் பெண்ணிடம் வழிந்து க்கொண்டு நிற்பார்களே பார்க்கலாம், சின்ன வயதுக்காரர்களை கூட ஏதாவது திட்டி சமாளித்து விடலாம், இவர்களை வயதின் காரணமாக ஒன்றும் செய்யவும் முடியாது. சகித்துக்கொள்ளவும் முடியாது. இவர்களின் தொல்லையின் விழுக்காடு மற்றவற்றை விட அதிகம்.

இதில் எனக்கு பிடிக்காத, அதிகமாக கோபப்பட வைக்கும் ஜொள்ளர்கள் -  இரண்டாவது மற்றும் மூன்றாவது வகையை சேர்ந்தவர்கள் தான்.  மற்றவர்களை எல்லாம் பிடிக்கும் என்ற அர்த்தம் இல்லை. மற்றவர்கள் மேல் கோபம் வருவதில்லை.

இந்த வகை ஆட்கள் மட்டும் என்னிடம் சிக்கினால்.. அவர்களை  பேசவே விடுவதில்லை..பேச விட்டால் போதும்.. நான் இப்படி, அப்படி ன்னு ஜூப்பர் டூப்பர் கதை சொல்லி படம் க்காட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அப்படியே காதை திருப்பி அனுப்பலாம் போல கோவம் வரும். யார் பெத்த புள்ளையோ நம்ம கையில அடி வாங்கி நிஜமாவே காதுக்  கோணி போச்சின்னா.. என்ன பண்றது..ன்னு , கோபத்தை அடிக்கக்கொண்டு, போ போ.. ரொம்ப கஷ்டப்படாத, இங்க ஒன்னும் உன் வேல நடக்காது, கிளம்பு, வேற வேல இருந்தால் பாருன்னு சொல்லி அனுப்ப வேண்டியதாக இருக்கும்.

என்னுடைய நண்பர் ஒருவர், ஓவர் ஜொள்ளு. "அட கருமம் புடிச்சவனே..லிமிட் டா இரு.. ஓவரா ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல ன்னு சொல்லுவேன். அவன் அப்பத்தான், "நீ பிடிக்கல ன்னு சொல்லும் போதே.. உனக்கு பிடிச்சி இருக்குன்னு தெரியும் னு "சொல்லுவான்.  "அட எப்படிடா இப்படி எல்லாம் னு " ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்டால் போதும் "பெண்களின் குணமாச்சே அது, எனக்கு தெரியும்"என்பான்.. "அட கட்டயில போறவனே... நான் பொண்ணே இல்லன்னு நீ நினைச்சா கூட பரவாயில்லை... நான் சொல்றது உண்மைத்தாண்டா.. ஓவர் ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல.. ஒவ்வேக்க்க்க்,  பிரண்டாக  ஃப்ரியா இருந்து தொலைக்க முடியல.. உன் நினைப்பை சரி செய்துக்கோ' ன்னு சொல்லி இருக்கேன். 

நாம் என்ன சொன்னாலும், அதை நம்பாமல் திரும்பவும், தான் செய்வதையே செய்து இம்சை செய்யும் சில கேசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது? ஒதுங்கி போவதை தவிர வழியில்லை. :)).  எல்லா பெண்களுக்குமே தன்னிடம் தவறாக பேசும், நடந்துக்கொள்ளும் ஆண்களை இனம் கண்டுக்கொள்ள முடியும். பலர் தெரிந்தும், அதை விரும்பி ரசித்து, பேசாமல் இருந்து விடுவார்கள். எல்லை மீறும் போது, அந்த ஆணை மட்டும் குற்றம் சொல்லுவார்கள். முதல் வார்த்தையிலேயே ஒரு பெண் நினைத்தால் இவற்றை எல்லாம் நிறுத்த முடியும். !

ஜொள்ளுவிடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான செயலில்லை. இனக்கவர்ச்சியே. இதை கடந்து வருவதும், தேங்கி நிற்பதும் தனிமனித கட்டுப்பாட்டில் உள்ளது.  நம் வரைமுறை என்ன, அடுத்தவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கிறதா, அதனால் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  என்னை போன்ற ரொம்ப சென்சிட்டிவ்'ஆனவர்களுக்கு இவை எல்லாம் ரொம்பவே தர்மசங்கடத்தை தரும் என்பது நான் உணர்ந்து சொல்லும் கருத்து.

அணில் குட்டி அனிதா:
  கவி நீங்க யாரை பாத்தும் ஜொள்ளு விட மாட்டீங்களா? ரெம்ப நல்லவங்களா? ...............சரி சரி நோ முறைச்சிப்பை,  நீங்க பொம்பளைன்னு மறந்து போயி தொலச்சிட்டேன்.. பொம்பளைன்னா எது செஞ்சாலும் தப்பில்லேங்ஓஓஓஒ..!! நீங்க கன்டினியூங்கோஓஓஓஓ!  நான் வரேங்கோஓஓஓ !! பைங்கோஓஓஒ !!

பீட்டர் தாத்ஸ் :A morning-glory at my window satisfies me more than the metaphysics of books.  ~Walt Whitman

பின்குறிப்பு : இது எந்த ஒரு ப்ளாகரையும் குறிப்பிடுவது இல்லை. இந்த பதிவு பொதுவாக எழுதப்பட்டது. யாரையாவது குறிப்பிட்டு எழுதி இருப்பதாக, அவருக்கோ அவரை சார்ந்தவர்களுக்கோ தெரிந்தால், அதற்கு என் எழுத்து பொறுப்பல்லவே. ஏனென்றால், ப்ளாகில் ஆண்/பெண் யாரிடமும் அதிகமாக நான் பேசுவதில்லை. இது அனைவரும் அறிந்ததே. நன்றி, வணக்கம்.
.