ஐயங்கார் வெதுப்பகம் ரொட்டியும் சங்கமம் திரட்டியும்


விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சாந்தி திரை அரங்கம் (நான் படிக்கும் காலத்திலேயே ஏதோ பிரச்சனையில் மூடிவிட்டார்கள்) வரும் வழியில் ரயில் நிலையத்தை ஒட்டி, அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளி செல்லும் தெருவில் ஒரு ஐயங்கார் வெதுப்பகம் இருந்தது. (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை). எனக்கு தெரிந்து அந்த பகுதியில் அது ஒன்று தான் வெதுப்பகம்.  

எனக்கோ அண்ணன்'களுக்கோ காய்ச்சல் வந்தால், அங்கு சென்று சுடச்சுட ரொட்டி வாங்கிட்டு வந்து தருவார்கள்.  மாலை 3-4 மணி வாக்கில் சென்றால், சுடச்சுட ரொட்டி கிடைக்கும்.  அது ஐயங்கார் வெதுப்பகத்தின் சொந்த உருவாக்கம், ரொட்டி கேட்டப்பிறகு, முழுசாக இருக்கும் ரொட்டியை நம் எதிரில் கட்டை மேல் வைத்து துண்டுகள் போட்டு, மெல்லிய வெள்ளை கவரால் சுற்றித்தருவார்கள். அதற்கு தயாரிப்பாளர் பெயர் எதுவும் இருக்காது. ரொட்டி. மிருதுவாக ருசியாக  இருக்கும். இப்போது போல மளிகை க்கடையில் எல்லாம் ரொட்டி கிடைப்பது இல்லை. ரயில் நிலையம் வரை நடந்து சென்று வாங்கி வர வேண்டும் என்பதால் ரொட்டி வாங்குவதை மிகப்பெரிய வேலையாக நினைப்போம்.

எங்களுக்கு காய்ச்சல் என்பது வருடத்திற்கு ஒரு முறை வந்தால் அதிகம்.அப்படியே வந்தாலும், மிளகு ரசமும், மிளகு தட்டிப்போட்ட மீன் குழம்பும், வயக்காட்டு நண்டு குழம்பும் வைத்து ஒரே வேளையில் காய்ச்சலை இறக்கி விடுவதில் ஆயா கெட்டி. வயல் நண்டுவை பற்றி சொல்லியே ஆகனும். காய்ச்சல் வரும் நேரம், விடாத நெஞ்சு சளி, இருமல் இருக்கும் நேரங்களில், இந்த நண்டு வரும். யாரிடமோ சொல்லி வைத்து வாங்குவார்கள், இது வரும் போதே கச்சா முச்சான்னு ஒன்றோடு ஒன்று மோதி சத்தம் எழுப்பிக்கிட்டே வரும். அதை வேடிக்கை பார்க்கும் போதே பாதி காய்ச்சல் ஓடிப்போயிடும். :). உயிரோடு அதை ஒவ்வொன்றாய் எடுத்து அம்மியில் வைத்து நச்சக்" ன்னு குழவியை அதன் உடம்பின் மேல் போடுவார்கள். அவ்வளது தான் ஆள் அவுட்.  பிறகு எடுத்து சுத்தம் செய்து குழம்பு ரெடி. கடல் நண்டுவை விட, கழனிவெளி நண்டு தான் சூப்பர் ருசி.

ரொட்டிக்கு வருவோம், குடும்ப டாக்டர் ராஜாராம் மனசு வைத்தால் மட்டுமே ரொட்டி சாப்பிட வாய்ப்புண்டு. சாப்பாடே கூடாது என அறிவுரை செய்தால் ஒழிய இந்த ரொட்டியும் கிடைக்காது. சாப்பாடு வேண்டாம் என்றாலும் அடுத்து வந்து நிற்பது கஞ்சி தான். நொய் அரிசிக்கஞ்சி, அர்ரொட்டி மாவு கஞ்சி என்று எதையாவது செய்து க்கொடுப்பார்கள். தொட்டுக்கொள்ள காரமில்லாத உப்பு நார்ந்தங்காய் ஊறுகாய். (ஸ்ஸ்ஸாஆ.)  இதை எழுதும் போது, அந்த கஞ்சியும் ஊறுகாயும் கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. கஞ்சிக்கூட வைத்து விடலாம், அந்த ஊறுகாய். சான்சே இல்ல.  ஆனால் அப்போதோ மனம் ரொட்டிக்கு தான் ஏங்கியது. . அதற்கு கண்டிப்பாக சாப்பாடு சாப்பிட முடியாத வாய் கசப்போடு கூடிய காய்ச்சல் வந்தே ஆகவேண்டும். அநாவசியமாக ரொட்டி வாங்கித்தரவே மாட்டார்கள். கடையில் சென்று ரொட்டி வாங்கி சாப்பிடுவது கெட்ட பழக்கம், காய்ச்சல் என்றால் மருந்து போல் சாப்பிட வேண்டிய லிஸ்டில் மட்டும் வருபவை.

ஓரிரு முறை அந்த வெதுப்பகத்திற்கு நானும் சென்று ரொட்டி வாங்கி வந்த நினைவு இருக்கிறது. பொதுவாக வெளி வேலைகளுக்கு, கடைகளுக்கு என்னை அனுப்பவுதில்லை. அனுப்பினாலும் கூட அண்ணன், அத்தை, அத்தை மகள், மகன் என்று யாராவது வருவார்கள்.

இருங்க..இருங்க..... தலைப்பில் ரொட்டிக்கும் திரட்டிக்கும் என்ன சம்பந்தம் னு தெரியாமல் படித்துக்கொண்டு வருபவர்களுக்கு............... சங்கமம் திரட்டியின் அறிமுகம்..
================================================================
பிரபல பதிவர் + இயக்குனரும், இந்திய நாட்டின் மீதும்,  தமிழ் நாடு மற்றும் மொழியின் மீதும் தீராத தீவிர காதல் கொண்டிருக்கும் அமெரிக்கரான (?!) திருவாளர் இளா அவர்கள், தமிழ் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ் திரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.  நம்மை எல்லாம் நம்பி ஆரம்பித்த அவரை நாம் கைவிடலாமா?? விடவேக்கூடாது. அந்த திரட்டியில் உங்களின் பதிவை சேர்ப்பது மிகவும் எளிதுதான். ஒரு Gmail கணக்கு இருந்தாலே போதுமானது.  இதை படிக்கும் போதே, www.isangamam.com லிங்கை க்ளிக்கி, ஓடிப்போய்  ஒரு "உள்ளேன் ஐயா"  போட்டுட்டு, உங்க வலைப்பதிவையும் இணைச்சுட்டு வந்து  மிச்சத்தை படிங்க. அப்பத்தான் அமெரிக்காவில் இருந்து எனக்கு கமிஷன் வந்து சேரும்.
    
உங்க பதிவை சேர்த்துட்டீங்களா?  வாங்க திரும்ப ரொட்டி சாப்பிட கிளம்புவோம்.
===============================================================
வீட்டில் எங்கள் மூவருக்கு மட்டும் தான் இந்த ரொட்டி கணக்கு. அதுவும் காய்ச்சலை சாக்காக வைத்து அடம் பிடித்து ரொட்டி வேண்டுமென கேட்கும் ஒரே ஆள் நான் தான். அண்ணன்கள் கஞ்சி கொடுத்தால் குடித்துவிட்டு பேசாமல் இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் அடம் பிடிப்பது,  கேட்டதை தராவிட்டால் உண்ணாவிரதம் இருந்து சாதிப்பது போன்ற எல்லா நற்செயல்களும் செய்து, நற்செயல்களுக்கு ஏற்றவாறு எல்லோரிடமும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிவாங்குவதும் நானாகத்தான் இருக்கும். பெண் குழந்தை இப்படித்தான் இருக்கனும்னு சட்டம் திட்டம் பேசும் வீட்டில், பெண் குழந்தையை அடிப்பதில் மட்டும் தயவு தாட்சன்யம் பார்த்தது இல்லை. யப்பா என்னா அடி.. அதுவும் எது கையில் கிடைக்குதோ அதை வைத்து அடி பின்னிடுவாங்க பின்னி..ம்ம்ம்...இப்ப நினைத்து பார்த்தால் கூட, என் உடம்பு எவ்வளவு அடி உதைகளை தாங்கி, கடந்து வந்து இருக்கிறது என்பதை நினைத்து பிரம்மிப்பாக உள்ளது.  குடும்ப குல விளக்கு என ஒரு பக்கம் போற்றப்பட்ட என்னை மட்டுமே பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது....... எவ்வளவு நல்லவளா இருந்து இருக்கேன்னு மட்டும் புரியுது. . 

இப்படி அடி உதை வாங்கினாலும், அது ஒரு காலம், ரொட்டிக்காக ஏங்கிய காலம் ! வருசத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ கிடைக்குமா அதற்காக காய்ச்சல் வருமா என்று எதிர்பார்த்ததுப்போக , இன்று வாரத்திற்கு 3-4 நாட்கள் காலை நேர உணவில் ரொட்டி சேர்ந்துவிட்டது. மைதா ரொட்டி போக, இப்போது கோதுமை ரொட்டி வந்துவிட்டது. பிரட் ஆம்லெட், பிரட் ரோஸ்டு வித் ஜாம் , சீஸ் & பட்டர், பிரட் சான்ட்விஜ், பிரட் ஃப்ரென்ச் ஃப்ரை , பிரட் முட்டை பொரியல்,  பிரட் & பால். இப்படி ரொட்டியில் செய்யும் உணவுகள் உடலுக்கு நல்லது கலோரி குறைவு என சாப்பிடுவதும் அதிகமாகிவிட்டது.  காலை வேளை அவசரத்தில் செய்வதற்கும் மிகவும் எளிதாக உள்ளது.

சீஸ், பட்டர்,  முட்டை  பால் எல்லாம் கலோரி குறைச்சலா என கேட்டால், முட்டை தவிர மற்றவை கொழுப்பு நீக்கியதாகத்தான் வாங்குகிறோம். நாம் கடைக்கு போனாலே,  ரொட்டியை எடுத்து கையில் கடைக்காரர் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.   ரொட்டி இல்லாத வாரம் இருப்பதே இல்லை.

எப்போது ரொட்டி சாப்பிட்டாலும், காய்ச்சல் நினைவுகளும், காய்ச்சல் வரும் போது ரொட்டிக்காக அடம் பிடித்த நினைவுகளும், ஐயங்கார் வெதுப்பகமும் நினைவில் வராமல் இருப்பதில்லை.

அணில் குட்டி : மக்கா... ரொட்டிய பத்தி படிச்சதுல சங்கமம் திரட்டியில் பதிய மறந்துடாதீங்க. யாரும் பதியாமல் போனால், திரட்டி ஓனர் அமெரிக்காவிலிருந்து துப்பினால், எங்கையும் நடுவில் விழாமல் நேரா கவி முஞ்சி மேல வந்து தான் விழும்.. ஹி ஹி...அது அந்தம்மாவோட கவலை நமக்கென்ன..??

நீங்களும் உங்க பதிவில் சங்கமம் திரட்டியை விளம்பரம் செய்தீங்கன்னா, அமெரிக்காவில் இருந்து கமிஷன் வரும் ! அதான் இப்ப மேட்டர்..  விளம்பரம் செய்து கமிஷனை வாங்க மறக்காதீங்க .. திரட்டி ஓனர் அமெரிக்காஆஆஆ......ங்கறதையும் மறந்துடாதீங்க.. :)

பீட்டர் தாத்ஸ் : Good days are to be gathered like grapes, to be trodden and bottled into wine and kept for age to sip at ease beside the fire. 
Our memories are the only paradise from which we can never be expelled
.

நல்லதொரு குடும்பம்....

நவீன் : ஏன்ப்பா இவ்ளோ கஷ்டப்படறீங்க, நம்ம வீட்டு ஃபோட்டோகிராபர் கிட்ட கேளுங்க .. அவங்க சொல்ற இடத்தில் நின்னு எடுத்தா..நல்லா வரும்.

போட்டோ எல்லாம் எடுத்து முடிந்து, நவீன் தோழி என்னிடம் தனியாக...


நவீன் தோழி : ஆன்ட்டி, நீங்க என்ன வேல பார்க்கறீங்க

கவி : அட்மின் & ஹெச் ஆர்

நவீன் தோழி : ஹோ..ரியிலி...பட்,  நீங்க பெரிய ஃபோட்டோகிராபரா ஆன்ட்டி.. உங்களுக்கு ஃபோட்டோகிராஃபிதான் பேஷனா ஆன்ட்டி.........

கவி : அவ்வ்வ்வ்.... .. (அசிங்கப்பட்டாடா ஆட்டோக்காரி )
 
********

கவி : ப்பா.. இன்னைக்காச்சும் பேப்பரை கடையில் போட்டுடுங்க..

பழம்நீ: நிறுத்து................. அத்தோட நிறுத்து........  போடறேன்...

கவி :  (கடுப்பாக.) ம்க்கும் இப்படிதான் வார வாரம் சொல்றீங்க.. ஒரு மாசத்துக்கு மேல அப்படியே கிடக்கு.. நான் போட்டுடவா?

பழம்நீ: வேணாம். ஒரு மாசம் தானே ஆச்சி.. கிடக்கட்டும். அதை அதை வருசக்கணக்கா என்ன செய்யறதுன்னே தெரியாம இந்த வீட்டுல வச்சி இருக்கேனில்ல.. இது கிடந்தா பரவாயில்லை..
 
கவி: ஆங்.. ...... 

***********

நவீன் : அம்மா, உன் முகத்தில கண்ணு தாம்ம்மா இருக்கு.. எவ்ளாம் பெரிய கண்ணு....

கவி : :) :)

பழம்நீ: உன் முகத்தில மூக்கும் , கண்ணும் தாண்டி இருக்கு..

கவி : அய்யய்ய .. .. என்ன சும்மா எப்பப்பாத்தாலும் கண்ணு இருக்கு மூக்கு இருக்குன்னு..முகத்தில் வேற என்ன இருக்குமாம்?

பழம்நீ : முகம் இருக்கனும்டீ...

கவி: ஞே... ! 

*************

கவி : வாவ்.. .என்னா சூப்பரா இருக்கு சாம்பார். . ஆனாலும் உங்க பொண்டாட்டி சமைக்கிற சாம்பார் சூப்பர்ர்ர்ர்ராஆஆ இருக்கு... என்னா டேஸ்ட் என்னா டேஸ்ட்

பழம்நீ - ஆமாம்மா என் பொண்டாட்டி ஒரு சாம்பார்..... அவ புள்ள சாம்பாரோ சாம்பார்... 

கவி: .. :((((       சாம்பார் ரொம்ப பிடிக்கும்னு சாப்பிட்டா... அவங்க எல்லாம் சாம்பாரா..?

பழம்நீ : நேராவே சொல்லியும் கேள்வி கேக்கும் போதே தெரியல...

கவி : .......அவ்வ்வ்...

**********

(காலை 6 மணி)

கவி : ப்பா... இன்னைக்கு என்ன டிபன் செய்யட்டும் ?

பழம்நீ: பிட்ஸா

கவி : அவ்வ்.... பிட்ஸா செய்ய நோ Base . (காலங்காத்தால என்ன கொடுமைடா இது)

பழம்நீ: மக்ரோனி

கவி : நான் வாங்கல

பழம்நீ : ம்ம்ம் ....அந்த இத்தாலி ஃபுட்...... பாஸ்தா...

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அதெல்லாம் நான் வாங்கறது இல்லப்பா.. 

பழம்நீ - பர்கர் ...

கவி :  யப்பாஆஆஆ ....... என்ன டிபன் செய்யட்டும்னு சொல்லித்தொலைங்க.. இத்தாலி, அமெரிக்கா, அண்டார்ட்டிக்கான்னுக்கிட்டு

பழம்நீ : ஏய் நீ எப்பேர்ப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்டி... பொறுப்பா என்ன டிபன் வேணும்னு கேட்டுட்டு போயி, அதை தவிர்த்து மத்ததை செய்ய போற.. எத்தனையோ  தரம் பாத்தாச்சு... போடி போ.. .  உன் இஷ்டத்துக்கு எதையாது செய்துக்கோ.... 

கவி : :((((((  (என்ன இவ்ளோ சீக்கிரம் தெளிவா ஆகிட்டாரு?)

***********

கவி :  ப்பாஆஆஆஆ   எத்தனை நாளா சொல்றேன், வலது கண் அடிச்சிக்கிட்டே இருக்கு. இப்படி தொடர்ந்து அடிச்சதே இல்லை. எதாச்சும் செய்ங்கப்பா எரிச்சல் எரிச்சலா இருக்கு... :(

பழம்நீ: ( என் எதிரில் வந்து நின்று ) உன்னோட வலது கைய அந்த கண்ணுக்கு நேரா கொண்டு வா ....

கவி : ம்ம்... ஆச்சி..அப்புறம் ???

பழம்நீ : இப்ப.. உன்னை இத்தனை நாளா அடிக்கற அந்த கண்ணை, நீ உன் வலது கையால திருப்பி அடி......

கவி : ஆங்க்.... :((

*********

பழம்நீ : என்னடி இது? :((( (செம கடுப்பில்)

கவி : ஹி ஹி..அதுவா சேமியா புட்டு. அணில் சேமியாவில் தானே செய்வேன். ஆனா ஒரு சேஞ்சுக்கு பேம்பினோவில் ட்ரை பண்ணலாம்னு பார்த்தா ............ஸ்ஸ்ஸ் இப்படி வந்துடுத்துப்பா...... எஸ்க்யூஸ்மீ...  :) 

பழம்நீ : (அதே கடுப்பில்)  எப்பிட்ரீ இதை சாப்பிடறது... ?

கவி : கையாலதாம்ப்பா...

பழம்நீ : கிர்ர்ர்ர்ர்ர்...........

*************

கவி : (ரொம்ப மும்மரமாக இரவு 9.30 மணிக்கு மேல் அலுவல் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவரை)  ப்பா.. .இங்க வாங்களேன் உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லனும், ரொம்ப முக்கியம். .இப்ப சொல்லாட்டி மறந்துடுவேன்...

பழம்நீ : (எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்து) ........ ம்ம் சொல்லு...

கவி : இல்ல எனக்கு தூக்கம் தூக்கமா வருதா... நான் தூங்கறதை யாராச்சும் வேடிக்கை பார்த்தா நல்லா இருக்கும்னு தோணிச்சி அதான் கூப்பிட்டிட்டேன். ... எதிர் ல உக்காந்து கொஞ்சம் வேடிக்கை பார்க்கறீங்களா?

பழம்நீ : அடி.. #@$#%$@$#^%  . .எவண்டி உன்னை எல்லாம் பெத்தது.. ?! :(((

கவி : :)))))))))  ஹி ஹி.. எங்கப்பா ன்னு சொல்லமாட்டேனே. .அவரு ஆம்பளையாச்சே அவராலே பெத்துக்க முடியாதே.... :)))

பழம்நீ:  அட ஆண்டவா இன்னும் எத்தனை வருசத்துக்கோ......இதெல்லாம்.... .

கவி :...... :)))))))))

************

கவி : அப்பா கார்ட் வச்சி இருக்கியாடா... ?

நவீன் : இல்லம்மா.

கவி : கவர்மென்டு ஆபிஸ் போனால் டக்குன்னு அப்பா கார்ட்டை எடுத்து க்காட்டு, அவரை யாரும் மதிக்க மாட்டாங்க. .ஆனா அவர் கார்ட்டை காட்டின்னா கொஞ்சமாச்சும் மரியாதையா பதில் சொல்லுவாங்க..

பழம்நீ: மவளே ஆனாலும், உனக்கு இருக்க திமுரு இந்த உலகத்தில் வேற யாருக்கும் இருக்காதுடி...

கவி : ஹி ஹி.. தாங்ஸ் ஆபிசர்.. :)))

************

நவீன் : ஏன் உன் மூஞ்சி சைஸ் க்கு கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்க

கவி : சன் லைட் அலர்ஜிடா... கண்ணுல   தண்ணி தண்ணியா வருதுடா..... அதான்..

நவீன் : நொள்ளக்கண்ணு ன்னு நேரா சொல்லேன்.. ..ரொம்ம்ம்ம்ம்ப பில்டப் கொடுக்கற.. ..

கவி : கிர்ர்ர்ர்ர். !  (சன் க்ளாஸ் போடறது ஒரு குத்தமாய்யா?)

***********

அணில் குட்டி : துப்பின கதை எல்லாம் வெளிய வரக்காணோம்... ???

பீட்டர் தாத்ஸ் : Other things may change us, but we start and end with family”

ஞானத்தங்கமே..

நீ
நான்
நாம்
நம் குழந்தை
இவ்வாழ்க்கை
பறவை
நாய் 
உயிரற்ற " மரம் "
                                        (பூவும் காயும் கனியும் வாசமும் காற்றும்.........)
மரம்

அத்தனையும் மாயை !


அழியாத ஒன்றை எடுத்துக்கூறு
..............................

அழியாத ஒன்றை மட்டும் எடுத்துக்கூறு
அடங்காத ஆசை மட்டுமே

அழியாத வரிசையில் முன்னின்று சிரித்தது
மற்றவரையும் சிரித்து பார்க்க செய்தது

ஆசையை அழித்தவன் உண்டோ
ஆசையை அடியோடு அழித்தவன் உண்டோ

இல்லை...
வேகமாய் சொல்லி.. 

ஆசை தொடர்கிறது ...........
மாயையும் தொடர்கிறது........


குட்டையில் ஊறிய மட்டைகள் !


அன்னா ஹசாரே வந்து தான் நமக்கு ஊழலை எதிர்க்க சொல்லித்தரனும். அதற்கு பிறகு நாமெல்லாம் அவர் வழியில் கொடித்தூக்கி , ஆர்பாட்டம் செய்து ஊழலை எதிர்க்க வேண்டும்.  அது வரைக்கும் "ஊழல்" அப்படீன்னா நமக்கு என்னான்னே தெரியாது. பார்த்ததே இல்லை செய்ததே இல்லை. நாமெல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க. !

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது பல பஸ்கர்கள், அன்னா ஹசாரேக்கு சப்போர்ட் செய்து பஸ் விட்டது மட்டுமல்ல,

"ஒரு வேளை சாப்பாட்டை நான் தியாகம் செய்துவிட்டேன் நீங்கள் செய்யவில்லையா? " # அட அட அட.... ?! :))))))))))))))

# ஊரு பக்கமெல்லாம் செவ்வாய், வெள்ளி, சனி மூன்று நாளும் நம் வீட்டு பெண்கள் விரதம் இருப்பாங்க.. . இவரு ஒரு வேள பட்டினியாம், ஊழல் நின்னுப்போச்சாம். ரோடுல நடக்கும் போது ஃபிகருங்களை மட்டும் பார்க்காமல் அங்கிட்டும் இங்கிட்டும் கொஞ்சம் பாருங்க.. உங்களை போன்ற சகமனிதன், பல நாட்கள் பட்டினியில் கிடப்பது தெரியும். இவரு இருக்காராம்மா ஒரு நாள் பட்டினி..... 

"இனி நான் ஊழலுக்கு உடந்தையாக இருக்கமாட்டேன்" # அட அட அட அட  !! :))))))))))))

# அப்ப இதுவரைக்கும் இருந்தீங்களா?

இது மாதிரி இன்னும் எத்தனை எத்தனையோ...... சிலிர்த்து போச்சி சிலிர்த்து................. என் மயிற்கால்கள் !

அப்ப நமக்கு சொந்தமாக எப்பவுமே மூளை வேலைசெய்தது இல்லை. தலைவர் னு ஒருத்தர் எல்லாத்துக்கும் வேணும். இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன், ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து,ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவிட்டால், ஊழல் போயிடுமாய்யா? தனிமனிதனாக என்ன செய்யறோம்? எப்படி அன்றாட வாழ்க்கையில் இருக்கிறோம்னு வாய் கிழிய பேசுபவர்களும் எழுதுபவர்களும் இருக்கிறார்களா?  ம்ம்..மூக்கை விட்டு தான் அவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் சென்று பார்க்க வேண்டும் !

எனக்கு நினைவு தெரிந்து, எதற்குமே லஞ்சம் கொடுத்து என் வேலையை நான் செய்ததில்லை என்று சொன்னால் யாரும் இதை நம்புவீர்களா என்று எனக்கு தெரியவில்லை.  இதை நான் நினைவு தெரிந்து செய்ய ஆரம்பித்தது என்னுடைய 13.5 வயதில். சின்ன அண்ணனுக்கு பள்ளியில் டிசி வாங்க சென்ற போது, இரண்டு மூன்று நாட்கள் அலைய வைக்க, ஆயா, என்னை உடன் செல்லுமாறு அனுப்பினார்கள். பள்ளி அலுவலக ப்யூன் , என்னிடம் பணம் கேட்க, அங்கேயே சத்தம் போட்டு கூட்டத்தை கூட்ட, அலுவலகத்தில் அத்தனை ஆசிரியர்களும் ஆஜர். அண்ணன் பயந்து போயி அலுவலகத்தை விட்டு வெளியேற, நான் கேட்பவர்கள் அத்தனைப்பேருக்கும், அண்ணன் எத்தனை முறை பள்ளிக்கு வந்தார், ஒரு டிசி க்கொடுக்க ஏன் இத்தனை தாமதம் நடக்கிறது, மேலும் தேவையில்லாமல் எதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும்? என்று கேள்வி சாதாரணமாக கேட்காமல் , குரலை உயர்த்தி கேட்டுக்கொண்டு இருந்தேன். பாவடை சட்டை அணிந்த சின்ன பெண், ஆச்சரியத்துடன் ஆசிரியர்கள் என்னை கவனித்துக்கொண்டு இருந்தார்கள்.

இத்தனைக்கும் எனக்கும் அந்த பள்ளிக்கும் சம்பந்தமில்லை. என்னை யாரும் அறிந்திருக்கவில்லை. அண்ணன் தான் அங்கே படித்தார். அண்ணனுடைய வாத்தியாரிடம் நான் ஆங்கிலம் , கணிதம் ட்யூஷன் சென்றதால், என்னை அவருக்கு மட்டும்  தெரிந்திருந்தது. பஞ்சாயத்திற்கு வந்ததும் அவரே தான். அவருடைய மாணவியாக  ஓரளவு என்னைப்பற்றி தெரிந்து வைத்திருந்ததால், "இங்கவாம்மா, சத்தம் போடக்கூடாது, பணம் நீ கொடுக்க வேண்டாம், டிசி கொடுக்க நான் ஏற்பாடு செய்யறேன், வா என, க்ளர்க் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று , எழுதி கையெழுத்து இட்டு இருந்த டிசி யை கிழித்து க்கொடுத்து அனுப்பிவைத்தார். ப்யூன் அன்று கேட்ட பணம் ரூ. 2/-  ( :) )

பிற்பாடு, எங்கள் அனைவரது சான்றிதழ்களும் தீ விபத்தில் எரிந்து போனபோது, சென்னை டிபிஐ அலுவலகத்திற்கு தினம்  காலையில் சென்று, அதிகாரியின் அறை வாசலில் நிற்பேன். மாலை தான் திரும்பி வருவேன். அங்கேயும் பணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்தேன், அதனால் சரியான நேரத்திற்கு சான்றிதழ்களை கொடுக்க முடியாமல், என் மேற்படிப்பு ஒரு வருடம் நடுவில் தடைப்பட்டது, இருந்தாலும், ஒரு மாதம் காத்திருந்து , நடையாக நடந்து வாங்கினே ஒழிய, பணம் கொடுக்கவில்லை.

அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய சிரமம் தான், ஆனால் தன் வேலை முடியவேண்டும் என நாமாகத்தான் அவர்களுக்கு பணம் கொடுத்து கொடுத்து பழக்கி, அதையே இன்று அவர்கள் தங்களின் அன்றாட கட்டாயப்பழக்கமாகி வைத்து இருக்கிறார்கள்.

கடந்த 20 நாட்களாக,  நவீன் போலிஸ் வெரிஃபிகேஷனுக்கு அலைகிறான். பணம், அது சம்பந்தமாக எந்த காவல் நிலையம் சென்றாலும் பணம்.  ப்ளாகர் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டபோது ரூ 500/- கொடுத்தால் வேலை நடக்குமே என்று சொன்னார். வீட்டில் இதனால் பிரச்சனை என்பதை விடவும், என்னை உடன் அழைத்து செல்ல இருவருமே விரும்பவில்லை,  நிச்சயம் நான் பணம் தரமாட்டேன், பணம் கேட்பவர்களை சும்மாவும் விடமாட்டேன். தேவையில்லாமல் பிரச்சனை என்னால் அதிகமாகும், இது எனக்குமே தெரிந்திருந்தாலும், பணம் கொடுக்காமல் என்னால் அந்த வேலையை செய்ய முடியும், தேவையில்லாமல் அலைந்துக்கொண்டு இருக்கிறான், வருகிறேன் என நானும் கேட்டு கேட்டு பார்த்து ஓய்ந்துவிட்டேன்.

இதோ நேற்று வேளச்சேரி காவல் நிலையத்தில் பணம் கொடுத்துவிட்டு வந்து இருக்கிறான். ஆனாலும் சான்றிதழ் கைக்கு வரவில்லை, பணம் வாங்கியப்பிறகும், நாளை வாவென அனுப்பிவிட்டனர்.  இன்று அவனருகில் அமர்ந்து, எதற்கு அன்னா ஹசாரே க்கு ஆதரவு தெரிவித்து, வண்டியில் கல்லூரி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஊர்கோலம் சென்றீர்கள்?. டைம் பாஸா  நவீன்?  பணம் கொடுக்காமல் அந்த வேலை செய்ய உன்னை நீ பழக்கி க்கொள்ள வேண்டும், பணம் வாங்காமல் செய்ய வேண்டியது தான் அவனுடைய வேலை. அதை நம்மைப்போல் ஒருவர், இருவர் கூட புரியவைக்காவிட்டால் எப்படி? பணம் கொடுப்பது சரியான்னு யோசித்து பார்த்தியா? என்னால் இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றேன். (ரகசிய குரல், பழம்நீ காதில் நான் பேசியது விழுந்தால், இந்த உலகத்தில் வாழவே தகுதியில்லாத பெண் என்று ஒரு மணி நேரம் காதில் ரத்தம் வரும் அளவு லக்சர் கேட்க வேண்டி கிடைக்கும்)

நிஜமான வருத்தத்தோடு, மனம் முகம் சோர்ந்து,  செய்வதறியாது அவன் சொன்ன பதில். "அம்மா, பணம் கொடுக்கும் போதே ரொம்ப மோசமாக பேசறானுங்க, போலிஸ் ஸ்டேசனுக்கு எல்லாம் நீ வரவேணாம்னு தான் உன்னை கூட்டிட்டு போகல.. அந்த அட்மாஸ்ஃபியர் சரி இல்லமா.. நீ எல்லாம் அதை சகிச்சிக்கமாட்ட ....நீ பெண், சட்டென்று உன்னிடம் பணம் கேட்க மாட்டார்கள், ஆனால் ஆண்களிடம் அப்படியில்லை.... நீ அதை புரிஞ்சிக்கனும்..அப்பா சொல்ற மாதிரி நீ இதை எல்லாம் கண்டுக்காத . விட்ரு "

முடிந்தது. குழந்தையும் பழகிவிட்டான். :(( . இனி அவனுக்கும் காசு கொடுத்தால் வேலை நடக்கும் என்பது புரிந்து போனது அல்லது புரியவைத்துவிட்டார்கள். . " நான் ஆண், நீ பெண் போன்ற உதாரணங்கள் சொல்லி என்னை சமாளிக்க கற்றுக்கொண்டான். 

அணில் குட்டி : புள்ளயும் உங்கள மாதிரி ஒரு வருசம் படிக்காம வூட்டுல இருக்கட்டுமா? ...  இவிங்க ரொம்ப நல்லவங்களாமா....... ம்க்கும் ! காசை கொடுத்து இருந்தா ஒரு வருசம் வெட்டியா படிக்காம வீணடிச்சி இருக்க வேணாம்.... போற இடத்தில் எல்லாம் எல்லாத்துக்கும் பொங்கிட்டு, ஒன்னுக்கு பத்து தரம் அலைஞ்சிட்டு.............. அம்மணி.. போயி வேல எதாது இருந்தா பாருங்க...

பீட்டர் தாத்ஸ் : “Though the bribe be small, yet the fault is great”
.

கன்னா பின்னா'ன்னு ஒரு கதம்பம்

=> ஆட்டோ டிரைவர் ஒருவர், மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல், கூவம் ஆற்றில் குதித்து விட்டார். தீயணைப்பு துறையினர் வந்து கூவத்தை துழாவி அவரை காப்பாற்றிவிட்டனர். அந்தம்மா, இந்த மனுசனை எவ்ளோ டார்ச்சர் செய்து இருந்தால், ஓவ்வ்வ்வ்வேக் கூவத்தில் குதித்து இருப்பார்? ஆட்டோ டிரைவரே.. உங்களை மாதிரி எல்லாரும் குதிக்க ஆரம்பித்தால், கூவம் ஆறு முழுக்க ஆண்கள் தான் நீச்சல் அடித்துக்கொண்டு இருப்பார்கள், தீயணைப்பு துறைக்கு 24 மணி நேரமும் வேலை இருந்துக்கொண்டே இருக்கும்.

=> மனைவி பொது இடங்களிலும், சினிமா அரங்குகளிலும் வாய்விட்டு சத்தம் போட்டு எல்லோரும் திரும்பி பார்க்கும் அளவுக்கு சிரிப்பதால், அவனமானப்பட்டு, அசிங்கப்பட்டு கூனி குறுகி அவஸ்தைப்பட்ட ஒருவர், மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார்- செய்தி. பெண்கள் வெளி இடங்களில் சத்தம் போட்டு சிரிப்பது அத்தனை அசிங்கப்படக்கூடிய விசயமா?? நான் வேற இப்ப எல்லாம் பாலாஜி நிகழ்ச்சிய ரேடியோவில் கேட்டு, அநியாயத்துக்கு தனியாவே ரோடுல சத்தம் போட்டு சிரிக்கறேன்.. விவாகரத்து அளவுக்கு போச்சின்னா பாலாஜி மேல கேஸ் போட்டுக்கலாம்னு முடிவு செய்து இருக்கேன்.




















=> " ழ கஃபே " - (Zha Cafe) உணவு விடுதி என்ற எண்ணமே வராமல் நம் வீடு போல உணரச்செய்தது. நண்பர்கள் கூட மிக சிறந்த இடம். காற்று, வெளிச்சம், கவனிப்பு இவை மூன்றுமே இன்னும் தேவை. விலை அதிகம். கருப்பட்டி காப்பி கொடுத்த கண்ணாடி குடுவை பிடித்திருந்தது. கேமராக்கும். சஞ்சய் தனியாக அங்கிருக்கும் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது கவர்ந்தது. வேறு இடங்களில் குழந்தைகள் இத்தனை சுதந்திரமாக விளையாட வாய்ப்புகள் குறைவு அல்லது இல்லை.

=> பஸ் டிக்கட் விலை ஏற்றம் கட்டுப்படி ஆகலை, வண்டியிலேயே போனால் பஸ்ஸில் போவதை விட 450 ரூ குறையுது. வாங்கற சம்பளத்தை அம்மாவிற்கு மொய் எழுதவே சரியாகிடும் போல இருக்கு. அதற்கு பதில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிடலாம். ஐடி'யில் சம்பாதிப்பவர்கள் தவிர வேறு யாரும் தொடர்ந்து பஸ்'ஸில் போக முடியாது என்றே நினைக்கிறேன். எல்லாமே இரு மடங்கு. ! # அம்மா (போட்ட) நாமம் வாழ்க !

=> ஒரு வருடம் முடிய போகிற நேரம், இன்று தான், ஜிம் ட்ரைனரை "நீங்க பிசியோதெரிஃபி படிச்சி இருக்கீங்களா" என்று கேட்டேன். அவருக்கே அவரிடம் நான் பேசியது ஆச்சரியம். ரொம்ப ஆர்வமாக மேற்கொண்டு கேட்க போவதற்கு பதில் சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார். முதுகு வலிக்கு என்ன எக்ஸர்ஸைஸ் செய்யனும், என்றேன். எடுத்தவுடனே ஹீல்ஸ் போடறீங்களா..(ஆமாம் ) போடாதீங்க, வண்டி ஓட்டாதீங்க.. (பஸ் ஸில் போக சொல்றாரே, அம்மாவோட ஆளா இருக்குமோ?) பந்து மேல மல்லாக்க படுத்து முன்ன பின்ன மூவ் பண்ணுங்க, சின்ன பந்து மேல் பக்கம் தூக்கி கொடுக்கற எக்சர்சைஸ் செய்ங்க. இரண்டுக்குமே இன்னொருவர் கூட வேணும், இது வேலைக்கு ஆகாது என யூடியூபில் தேடினேன். ரொம்ப ஈசியாக யோகா "பூனை ஸ்ட்ர்ச்சஸ்" விடியோ கிடைத்தது. http://www.youtube.com/watch?v=3zaW9a1ouC4 முதுகு வலி போயே போச்சி. ! :)

=> முதலில் வேலாயுதம் பார்த்த பிறகு 7 ஆம் அறிவு பார்த்ததாலோ என்னவோ, எல்லோரும் சொன்ன அளவு படம் மோசமில்லை. குறிப்பாக வேலாயுதம் அளவிற்கு தலைவலி இல்லை. சுருதி இடுப்பை வளைத்து (சுற்றும்) ஆடும் இடங்களில் கமல்ஜி ஆடுவதை போன்றே இருக்கிறது.

=> நேத்திக்கு முழுக்க உன்னை பார்க்கல' ன்னு வேலைக்கு செல்லும் முன் நவீனை எழுப்பி அவனுடன் இரண்டு வார்த்தை பேச, ஒரு நாள் பாக்கலன்னு வந்து நிக்கற, வேலை, படிப்புன்னு வெளியூர் போனா என்ன செய்வ. ?! :( . பிரிவை சந்திக்கும் நாள் நெருங்கிக்கொண்டு உள்ளது. அவனை பார்க்காமல் என் நாட்களை நகர்த்த என்னை நான் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அவன் செல்லுமிடமெல்லாம் செல்லவும் முடியும் என்றாலும், கணவரை தனியே விட்டு செல்லவும் முடியாது. என்னுள்ளே நானே கலங்கியும், தெளிந்தும், தெளிந்தும் கலங்கியும்... .. வாழ்க்கையின் கட்டங்கள்

=> முத்துலட்சுமியின் மகள் மாதினி பாடிய பாடல், பாடுவதற்கு ரொம்பவே கஷ்டமான பாடல், நல்ல முயற்சி செய்து பாடியிருக்கிறார். http://youtu.be/Hj0QGoYQB80. கேட்டு பாருங்கள்.. உங்களுக்கும் பிடிக்கும்.


=> கிரண் பேடி யின் நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்த்தேன். அவரின் பதில்களிலிருந்து - சமைக்க தெரியும், ஆம்லெட் செய்வேன், எல்லா காய்கரியையும் மூன்று நிமிடங்கள் வேகவைத்து சூப்பு செய்து குடிப்பேன். பிரியாணி செய்யத்தெரியுமா என்றால் தெரியாது.

கைப்பை என்ற ஒன்று என்னிடம் இல்லவே இல்லை. என் உடையில் 4 பாக்கெட்கள் இருக்கின்றன. அவை இருக்கும் போது கைப்பை எதற்கு?

அணில் குட்டி : கவி, பதிவை உங்களுக்காக எழுதறீங்களா இல்ல மத்தவங்களுக்காக எழுதறீங்களா.... ?  கூடவே இருக்க எனக்கு தெரியல... உங்களுக்காச்சும் தெரியுமா?

பீட்டர் தாத்ஸ் : Every creature is better alive than dead, men and moose and pine trees, and he who understands it aright will rather preserve its life than destroy it.

சில நேரங்களில் சில மனிதர்கள்......

........நம்மை ஆச்சரியப்பட வைத்துவிடுகிறார்கள். அவர்களை பற்றிய எண்ணங்கள் சில பல நாட்கள் நம்மைவிட்டு நீங்குவதில்லை.. அப்படி ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன்.

அலுவலகத்திற்கு, காசோலை வாங்க வந்தவர், காசோலையை பெற்றுக்கொண்டு, அதை பையில் வைத்தபடி என்னைப்பார்த்துக்கொண்டே இருந்தார். ஏதோ சொல்ல போகிறார், அல்லது ஏதோ கேட்கப்போகிறார் என எதிர்பார்த்து அவ்வப்போது பார்வையை அவர் மேல் செலுத்தியும், என் வேலையையும் பார்த்தபடி இருந்தேன். நினைத்தபடியே

"மேடம்... இதெல்லாம் கொஞ்சம் பார்க்கறீங்களா?"

பையில் இருந்து பட்டாம்பூச்சி, பச்சைக்கிளி சிறிய முதல் பெரிய படங்கள் அடங்கிய குளிர் சாதனப்பெட்டி மற்றும் சுவர்களில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்கள் அவை.

"கொடுங்க பார்க்கலாம்..." வாங்கிப்பார்த்தவாரே, சற்றே ஆச்சரியத்துடன். .இதெல்லாம் எப்படி உங்கக்கிட்ட...?? என்ன விதமான வியாபாரம் இது புரியல...

"எனக்கு வீடு அரக்கோணம் மேடம், எங்க ஆபிஸ் அட்ரஸ் தான் தெரியுமே உங்களுக்கு, ஸ்பென்ஸர்ஸ் ல வேல, அங்க இருந்து ரயில் ல வர போக வர 3 மணி நேரம் செலவாகும். இதில் ரயில் வரைக்குமே போக வர இரண்டு மணி நேரத்துக்கு மேல செலவிட வேண்டி இருக்கு. ரயிலில் சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரம் இதை வித்துடுவேன்... " சிரிக்கிறார்.

(அட? எப்படி இப்படி எல்லாம்ம்ம்ம்ம்ம்... )

"நல்ல ஐடியாங்க.. இதெல்லாம் நல்லா விற்குமாங்க ?"

"வித்துடும் மேடம்.... நிறைய வாங்கறாங்க.. பேமென்ட் வாங்கப்போற இடத்தில் கூட சில சமயம் வியாபாரம் ஆகும் மேடம்.."

"ம்ம்ம்...அதான் தெரியுதே... சரி வாங்கிக்கிறேன்... எவ்ளோ ?

"25 ரூபாய் மேடம்"

" :))))) விலை அதிகம்... கவரை விட்டு எடுக்கும் போதே பட்டாம்பூச்சி தனித்தனியா வந்துடும் போல இருக்கே.. ....(குத்து மதிப்பாக சொன்னேன்) "

"தனியா வந்துட்டா லைட்டா ஃபெவி ஸ்டிக் தடவி ஒட்டிடுங்க.. வேற ஒன்னும் ஆகாது மேடம்.. நல்லா இருக்கும் மேடம்"

"அப்ப ஃபெவி ஸ்டிக்'க்கு யாரு காசு தருவா?"

"20 ரூ தாங்க மேடம்..."

"ம்ம்ம்ம் குட்"

அதிகம் பேசாமல் டக்கென்று பேரத்தை முடித்து, பணத்தை வாங்கிக்கொண்டும் கிளம்பிவிட்டார். ஒரு தனியார் ட்ராவல்ஸில், "ஆபிஸ் பாய்" ஆக வேலை செய்யும் இவர்,வருமானத்திற்கு தன் பயண நேரத்தையும் பயன் படுத்திக்கொள்வது ...

நம்மில் பலர் பயண நேரங்களில் செய்யும் வேலை.. பேச்சு,தொலைபேசியில் மணிக்காக பேச்சு, அதைவிட்டால் ஒருவரோடு ஒருவர் அக்கம் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து கேவலமான சண்டை. .அதையும் விட்டால் தூக்கம், இப்ப அதிகமாக பார்ப்பது காதில் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்பது..

தேவை என்ற ஒன்றும் இதில் அடங்கி இருக்கிறது. தேவை என்பது இங்கு பணம் மட்டுமே இல்லை. பணத்தை தாண்டி அந்த பயண நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த அவருக்கு தோன்றி இருக்கிறது. அதையுமே ஒரு தேவையாக (தேடலாக) எடுத்துக்கொள்ளலாம்.

நம் தேவைகள் பேசவதிலும், பாட்டுக்கேட்கபதிலும் முடிந்து போகிறது..... . :(

அணில் குட்டி : ஹி ஹி ஹி.... மனசாட்சியே இல்லாம பேசறதுல யாருக்காச்சும் அவார்டு கொடுக்கனும்னா அது அம்மணிக்கு தான்... கடைசி வரிய படிங்க.. அதை மட்டும் தான் இவங்க செய்யறாங்க...

பீட்டர் தாத்ஸ் :

It’s not enough to be busy, so are the ants. The question is, what are we busy about?

Ordinary people think merely of spending time. Great people think of using it.

Time = life; therefore, waste your time and waste of your life, or master your time and master your life.

Time is the school in which we learn, time is the fire in which we burn.

Better three hours too soon, than one minute too late.
- William Shakespeare

கலாசலா கலசலா கல்லாச கலசலா .........

எலந்தபயம் எலந்தபயம் ஆஆஆங்க்க்...



காதோடு தான் நான் பாடுவேன்..



பளிங்கினால் ஒரு மாளிகை.....



பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்..



என்னா மாதிரி பாட்டுங்க.......... என்னமா பாடியிருக்காங்க...

ம்ம்ம்..... என்னத்த சொல்றது ”கலாசலா கலசலா” பாட்டை கேட்கும் போது, எல்.ஆர். ஈஸ்வரி அம்மா பாடிய மற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நினைவுக்கு வருகிறது...

அணில் குட்டி : சரி இப்ப என்ன சொல்லவரீங்க... ??

பீட்டர் தாத்ஸ் : Old is Gold ! what else can tell ?! :)

எங்க வீட்டு சமையல் - வாழைப்பூ

வாழைப்பூ வடை : 

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது : 1 கப் (250 கி -300கி)
கடலை பருப்பு : 200 கிராம்
காய்ந்தமிளகாய் : 4 -5
லவங்கம் : 2
சோம்பு - 1/4 ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : சிறிது
வெங்காயம் : 1 (போடாமலும் செய்யலாம்)
எண்ணெய் : தேவையான அளவு

செய்முறை : கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும். கடலை பருப்பை முக்கால் பங்கு எடுத்து அதனுடன், நறுக்கிய வாழைப்பூ, காய்ந்தமிளகாய், சோம்பு, லவங்கம், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்,. நன்கு அரைந்தவுடன், மிச்சம் இருக்கும் கால் பகுதி பருப்பை போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து, கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்ந்து பிசைந்து, வடைகளாக தட்டி போட்டு, சிவந்தவுடன் எடுக்கவும். சுடச்சுட சாப்பிட்டால் தான் இது ருசியாக இருக்கும்.

வாழைப்பூ பொறியல் :

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ ஆய்ந்து நறுக்கியது : ஒரு கப்
காய்ந்த மிளகாய் : 2
பயத்தம் பருப்பு : 1/4 கப்
கடுகு , உளத்தம் பருப்பு : தாளிக்க
மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
உப்பு : தேவையான அளவு
கருவேப்பிலை : சிறிது
 எண்ணெய் : தாளிக்க
தேங்காய் துருவியது : தேவையான அளவு

செய்முறை : வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, உளத்தம் பருப்பு , காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு , கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், லேசாக சிவந்தவுடன், பயத்தம் பருப்பை போட்டு வதக்கவும், லேசாக சிவக்கும் போது வாழைப்பூவை கொட்டி கிளரி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும். நடுநடுவே கிளரி விடவும். 5-8 நிமிடங்களுக்குள் வெந்துவிடும். வெந்தவுடன் தேங்காய் தூவி கிளரி இறக்கிவிடவும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் : வாழைப்பூவை ஆய்ந்து எடுக்கும் போது கடைசியாக வெள்ளை நிறத்தில் ஆயமுடியாமல் ரொம்ப குட்டி இதழ்கள் மாவுப்போல மிஞ்சும், அதை அப்படியே பச்சையாக சாப்பிட குடல் புண் ஆற்றும், மற்றும் கர்ப்பபைக்கும் நல்லது.

துவர்ப்பாக இருப்பதால் சமைக்கும் முன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து ஊறவைத்து பிறகு சமைக்கலாம். சற்றே துவர்ப்பு குறையும்.

அணில் குட்டி : மக்கா.. வாழைப்பூவில் கூட்டு, அவியல் கூட செய்யலாம். ஆனா நம்ம கவி'க்கு அதெல்லாம் செய்ய தெரியாது. ...ஹி ஹி... தெரியாததை தெரியாதுன்னு சொல்லாம வாழைப்பூவில் இவ்ளோ தான் செய்யமுடிந்த மாதிரி எழுதிட்டு போயிட்டாங்க... . நீங்க அதெல்லாமும் செய்து பாருங்க.. ..

பீட்டர் தாத்ஸ் : One cannot think well, love well, sleep well, if one has not dined well.

நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து....

என் சொந்த வேலைகள் போக நேரம் கிடைப்பின், குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட  பிடித்தமானதாக இருந்தது. ஆனால், இரண்டு முறை குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று வந்ததில், அந்த குழந்தைகளின் முகத்தில் இருக்கும் ஏக்கம், அவர்களின் வயதுக்கும், வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லா ஆடைகள், அவர்களின் படிப்பு, பேச்சு என என்னால் மனதளவில் ஏற்றுக்கொள்ளமுடியாத  சில விஷயங்களால் மனபாரம் அதிகமானதால் போவதை நிறுத்திக்கொண்டேன். தள்ளியிருந்து உதவி செய்வது மட்டுமே என்னால் முடிந்தது என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். பல வருடங்களுக்கு பிறகு, போகும் வழியில் இந்த இல்லத்தின் பெயர் பலகை பார்த்து, ஒரு முறை சென்று பார்க்கலாமே என ஆவலில் சென்றேன்.. ஒரு மணி நேரம், அவர்களுக்கு என்னால் நிச்சயம் சந்தோஷம் தான்... நம்மை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக நினைத்து முகத்தில் அத்தனை சந்தோஷம். எல்லோருமே வயதானவர்கள். ஆண், பெண் என கலந்து தான் இருந்தார்கள். 

சரஸ்வதி பாட்டி 90 வயது, திரும்பவும் என்னை அதே மனநிலைக்கு  எடுத்துவந்துவிட்டார். :(. பார்வையில்லை, ”குட் ஈவினிங்” என்று சொல்லி என்னை இழுத்து மிகவும் இறுக்கமாக அணைத்துக்கொண்டார். சில நிமிடங்கள் என்னை விடவில்லை. பிறகு பேச ஆரம்பித்தார், அப்போதும் என் கையை இறுகப்பிடித்தவாரே பேசினார். நடு நடுவே ஆங்கிலம் :). சாப்பிட்டு விட்டு போகச்சொல்லி தொந்தரவும் செய்தார்.:) இரண்டு மனநிலை சரியில்லாத ஆண்கள், இவர்களில் பலருக்கும் சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்று இருப்பது, வேதனை. 

வந்தப்பிறகு அதை நடத்தும் திரு.சூரியக்குமாரிடம் விபரங்களை கேட்டு மெயில் அனுப்பினேன்.  நீங்களும் அவற்றை படித்து, அவர்களின் இணையத்தளத்தை பார்வையிட்டு, உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில், தயவு கூர்ந்து உங்களால் ஆன உதவியை செய்யவும்.

அவரிடம் கேட்டறிந்தவை :

1.  எத்தனை ப்பேர் இங்கே வசிக்கிறார்கள்?
11 பாட்டிகளும் 2 தாத்தாக்களும் 2 மாற்றுதிறனாளிகளுமாய் மொத்தம் 15 நபர்கள் இல்லத்தில் வசிக்கின்றனர். இரு பாட்டிகள்  (80 வயது & 65 வயது) விரைவில் சேர இருக்கிறார்கள். மொத்தம் 17 நபர்கள் மட்டுமே இங்கு தங்க இயலும்.

2. எந்த வயதினர் ?
பெரும்பாலான பாட்டிகளுக்கு வயது 80க்கும் அதிகம். அனைவரையும் சேர்த்த சராசரி வயது 74 ஆகும்.

3. மனநிலை பாதிக்கப்பட்டவர் நிலைப்பற்றி.
எங்கள் இல்லத்தில் சஞ்ஜீவிக்கு 48 வயது ஆகிறது. பிறவியிலேயே உடல்வளர்ச்சி குன்றி படுக்கையிலேயே காலம் கழிக்கும் இவருக்கு இவரையும், இவரது இடத்தையும் சுத்தமாக பராமரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பாலகுமார் (26) மனப்பிறழ்ச்சி நோயால் அவதிப்படுபவர். அடுத்தவருக்கு தீமை விளைவிக்கும் செயல்களை தவிர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ருத்ரன் அவர்களின் மருத்துவ ஆலோசனையுடன் பாலகுமார் விரைவில் குணமடையும் வாய்ப்புகள்  தென்படுகின்றன.

கமலம்மாள் (95) ஆதரவில்லாமல் வந்து சேர்ந்திருக்கும் இவரது தள்ளாமை பிரச்சினைகளுடன், கத்துவது, துணியை அவிழ்த்துக்கொள்வது போன்ற குணம் மாறி நடந்து கொள்பவர். இவ்வில்லம் இவர்களையும், சாதாரணமானவர்களுடன் இணைத்து போதுமான அளவில் கவனித்துக்கொள்ள உதவியாளர்களுக்கும் சொல்லித்தரப்பட்டுள்ளது.

4.  என்னுடைய தோழியாகிவிட்ட சரஸ்வதி பாட்டி  :) பற்றி 
சரஸ்வதி (90) முழுவதுமாக பார்வையின்றி சிரமப்படுபவர். அனைத்து உறவினர்கள் இருந்தும் ஒதுக்கப்பட்டுள்ள இவர் இல்லத்திற்கு வந்து சேர்ந்த முதல் சிலபேர்களுடன் மூத்தவர். சிறிது சிறிதாக (20-25 வருடங்களில்) பார்வை போனதற்கு தாம் சிந்திய கண்ணீர்கள் காரணமாகும் என்கிறார். பார்வையற்ற இவரை வெளியே தள்ளி விரட்டிவிட்டார் இவரது மருமகள்.

5. இந்த இல்லம் தொடங்கிய திரு. சாரதி பற்றிய விபரங்கள் .
இல்லத்தின் அமைப்பாளர் ஸ்ரீ.பார்த்தசாரதி அவர்கள் ஆச்சரியப்படத்தக்க ஒரு சமூக சேவகர். சென்னை கிண்டி-யில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிபருவத்திலேயே சிவானந்த குருகுலத்திற்கு சென்றுவந்தபின் ஏற்பட்ட தூண்டுதலால் தமது சேவைகளை துவங்கிவிட்டவர். பல சேவை நிலையங்களுக்கும் சென்று அவர்களுடன் நாள்முழுதும் தங்கியிருந்து பணிகளை செய்து வாரஇறுதிகளை கழித்தவர். 
புற்றுநோய் மருத்துவமனை - இல்லம், ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், பிறவி பிரச்சினைகளுடன் உள்ளவர் என பலதரப்பட்டவர்களுக்கும் அன்புடன் பணிசெய்தவர். அவரது அனைத்து நண்பர்கள் - அவர்களது நண்பர்களும் என சேவைப்படையை உருவாக்கிக்கொண்டு இருந்தவர். குடிசைபகுதிகளுக்கு சென்று சுத்தம் செய்து உதவியும், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு முகாம்கள் என அமைத்து எளியோரின் அன்பை பெற்றவர். எக்ஸ்னோரா, காவல்துறையின் நண்பர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் பல மக்கள் பங்களிப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்.

பார்த்தசாரதி அவரது 26 வயதில் நம்மையும் அவரது குடும்பத்தினரையும் விட்டு மறைந்து ஒரு பெரிய இழப்பை உணர்த்தியுள்ளார். தன்னார்வ தொண்டுகளை அவர்தம் செயல்களிலிருந்தே கற்றவர்கள் நாங்கள். அவர் காட்டிய வழியிலேயே அவருக்காகவும், அவர்மீது கொண்டிருந்த நட்பிற்க்காகவும், கைவிடப்பட/உதவிகிடைக்காத இளைஞர் - நலிந்த - முதிர்ந்த மக்களுக்காகவும் பலவிதமான சேவைகளையும் தொடருகிறோம். மனித சேவை மகத்தானது, பங்குகொண்டு பெரும்பேறடையுங்கள்.


6. உங்களின் வங்கி முகவரி, வங்கி கணக்கு விபரம் :
Bank Particulars:
C R Suriyakumar,
Indian Overseas Bank, (Br Code: 001296)
SB A/c: 1296 010000 18606,
Velachery, Chennai 600042
IFSC Code: IOBA0001296

7. Tax exception details.
Donation to this Trust is exempted U/S 80G of the Income Tax Act 1961 vide notification No. DIT(E). NO.2(1035)/08-09 dt. 29-07-2009.

இல்லத்திற்கு (ஆரதி அறக்கட்டளைக்கு) அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரித்துறையின் அறிக்கை எண். DIT(E). NO.2(1035)/08-09 தேதி. 29-07-2009. படி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

8. Contact Person:
Dr. C.R.Suriyakumar, Ph.D.,D.Ag.,
Secretary - Aarathy Trust

முனைவர். சௌ.ரா. சூரியக்குமார்
செயலாளர் - ஆரதி அறக்கட்டளை

கைபேசி எண்: 94449 04947, 8122002261
தொலைபேசி எண்: 2245 6596
மின்னஞ்சல்: info@aarathy.org, suryakmr@gmail.com
இணையத்தளம்: www.aarathy.org

முகவரி:
இதயவாசல் முதியோர் இல்லம்,
ஆரதி அறக்கட்டளை,
1-C, வேளச்சேரி மெயின் ரோடு,
நாகேந்திரா நகர்
வேளச்சேரி செக்போஸ்ட்
சென்னை 600042

அணில் குட்டி : இவ்ளோ சொல்லி இருக்காங்க, ஹோம் ல பாட்டிங்க தீபாவளிக்காக செய்துக்கிட்டு இருந்த கை முறுக்கை நல்லா அமுக்கிட்டு வந்தாங்க சொன்னாங்களா ???? நல்லா சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு...  ஒரு வார்த்தை க்கூட முறுக்கை பத்தி சொல்லல... நன்றியில்லா கவிதா...

நான் சொல்றேன்.... பாட்டிங்க செய்த கை முறுக்கு ஜூப்பரோ ஜூப்பர். கவி  தீபாவளிக்கு முன்ன ப்ளான் பண்ணி இதுக்காகவே போயி இருப்பாங்களோ ?!  கை முறுக்கு அம்புட்டு ருசி.. :) ஹி ஹிஹி... :)

பீட்டர் தாத்ஸ் : The tragedy of old age is not that one is old, but that one is young.

அப்பாடக்கர் ' ரின் டச்சோ டச்சூ....

இத்தனை நாள் வவாச வில் தனியாவே டீ ய ஆத்து ஆத்து ஆத்திக்கிட்டு இருந்தவரு, தீடீர்னு  பெரிய "அப்பாடக்கர்" ஆகிட்டாரு.  ..அதாவது....

இவரு...ஒரு குறும்படம் எடுக்கறேன் 'னு கிட்டத்தட்ட ஒரு வருச காலமாக சொல்லிக்கிட்டு இருந்தாரு...  சரி நிசமாத்தான் எடுக்கறாரு போலன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா.. இந்தா இன்னைக்கு .. இந்தா நாளைக்கு , இந்தா மறுநாளைக்கு, இந்தா முந்தா நாளைக்கு ரீலிஸ் ’ன்னு சொல்லி சொல்லி,  ஒரு கட்டத்தில் இனி படம் வரும் ஆனா வராது ங்ற ரேஞ்சுக்கு நம்மளை எல்லாம் கொண்டுவந்துட்டாரு..... ஒரு நாள் பாருங்க.. தீடீர்னு, அவருக்கே அவருக்கு தெரியாம படத்தை ரிலீஸ் செய்துட்டாரூஉ....


இந்த வலையுலகம் எத்தனை படங்களை விமர்சித்திருக்கிறது ?  அசிங்க அசிங்கமாக திட்டி இருக்கிறது...?? கேவல கேவலமாக துப்பி இருக்கிறது ?!! ஆனால்...வவாச டீ கடை ஓனர்,  கடலை யின் மொத்த குத்தகைக்கார
விவசாயி என்கிற விவாஜி என்கிற இளா இயக்கிய ”அப்பாடக்கரை ” பற்றி யாருமே எழுதலையே னு இந்த பக்கம் , அதோ அந்த பக்கம், அன்னாந்து பாத்தா கூரை மேல, ஓடிப்போயி தண்ணிக்குள்ளார  எல்லாம் உக்காந்து, உங்க மேல சத்தியமா கவலை எல்லாம் படலைங்க.. ஆனால்ல்ல்ல்ல்ல்,  நாம ஏன் இதை சான்ஸ் ஆ எடுத்துக்கிட்டு, இந்த வலையுலக விமர்சன மகாஜனத்தோட  ஜனமா ஐக்கிய மாகக்கூடாதுன்னு ஒரு ஆஆஆர்ர்ர்ர்ர்வத்தில் அப்பாடக்கரை பார்க்க உக்காந்தேன்..............ரைட்டூஉ................   குறும்படம்னு இல்ல சொன்னாங்க.........?!!
டீடெயில் ஆப்ஃ தி அப்பாடக்கர் க்கு போவோமா ஊர்கோலம் ?!

முதல் டச் :
இந்த படத்தை பார்த்தவுடனே எனக்கு என்னா தோணிச்சின்னா... இயக்குனர்க்கு இன்ஸ்டென்ட் ஆக  ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி” னு பேரு வைக்கலாம். இதுல நடிச்ச அத்தனை பயப்புள்ளைக்கும் ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டி மிரட்டி சொல்லி கொடுத்து இருப்பாரு போல... அத்தனை பயப்புள்ளையும் நம்மக்கிட்ட மட்டு மரியாதை இல்லாம விரலை காட்டி காட்டி பேசுதுங்க... சரி அதுப்போட்டும்னு பார்த்தா, இயக்குனரும், அவரோட ஆள்காட்டி விரலை ஒரு சீன் ல காட்டிட்டு போக மறக்கல...  இப்படி ஒரு சீன் லையாச்சும் அவரோட படத்தில் அவரு இருக்கனும்னு நினைச்சதால இயக்குனர் ரவிக்குமார் ஐ நினைவுப்படுத்தி ..தனக்குள்ளும் ஒரு ரவிக்குமார் இருப்பதை வெளிப்படுத்தி நம்மை டச்'சிட்டாரு.

இரண்டாவது டச் :

அமெரிக்காவில் படம் புடிச்சாலும் நேட்டிவிட்டி போவவே க்கூடாதுன்னு ரொம்ப பாடுப்பட்டு இருக்காரு... அதுல ஒரு சீனுக்காக.... குளம் குட்டையின் தேடி கண்டுப்பிடிச்சி போயி நின்னு , நம்மூரு பாசையில ......(அதை ஆள்காட்டி விரல் அப்பாசாமி யே டப் பும் செய்து இருக்காரு)   கசங்காத  பொட்டிப்போட்ட டீ சர்ட் டும், லுங்கியும் கட்டிக்கிட்டு பேசறாங்க பாருங்க. .இங்கத்தான் நம்ம இயக்குனர் நிக்கறாரு.. ! எப்படி?????  இயக்குனர் இமயம் பாரதிராஜை வை அப்படியே நம் கண்ணுமுன்னாடி கொண்டாந்து நிக்க வைக்கறாரு... உக்காரவைக்கறாரு... ஏன்சிக்க வைக்கறாரு... ஆக இயக்குனர் பாரதிராஜா' வை டச்சிட்டாருங்கோவ்..

மூணாவது டச் :

கறுப்பு'னு ஒரு பயபுள்ள.. வேல தேடுது தேடுது தேடுது தேடுது.... ... ம்ம்..பாக்கும்போது,....எனக்கெ
ல்லாம் ரத்தக்கண்ணீர் வந்துடுத்து .. வெளியப்போற ரத்தத்ததை சரிக்கட்ட ஒரு கையில ப்ளெட் ஐ ஏத்திக்கிட்டே பாக்கிறேன்...அப்படி ஒரு தேடல்... அந்த தேடலை.. நம்ம இயக்குனர் எப்படி டச்சிங் டச்சிங் ஆ சொல்லி இருக்காரு தெரியுமா??!   கறுப்பு’ வோட மொத்த  ஃப்லீங்சையும் புடிச்சி இழுத்தாந்து அவரு கால்கிட்ட போடறாரு...  காலை மட்டும்... டைட்டிங் டைட்டிங் க்ளோஸபில் காட்டராரு... ..அப்ப நம்ம கண்ணுக்கு தெரியறது யாருன்னு டக்குன்னு சொல்லுங்க.. ஆங்..அவரே தான்.. இயக்குனர் மிஷ்கின்.. :) அடடா.. நம்ம அப்பாசாமிக்குள்ள எத்தனை டச்சிங் டிச்சிங் இயக்குனர்ங்க..இருக்காங்க ..அப்படியே .வாயப்பொளந்துக்கிட்டு...அடுத்த டச்சிங்..க்கு போவோம்......

நாலாவது டச் :

பேச்சிலர் ரூம் செட்டப்... ஆணியே அடிக்கமுடியாத ஒரு ரூமில், எலக்ட்ரிக் மெயின் பாக்ஸ் ஸில் கொடியை கட்டி,அதில கன்னாபின்னான்னு துணிகளை போட்டு வச்சி, ஒரு தலக்காணி கவர் போட்டு, இன்னொன்னு போடாம,  டபரா டம்ளர், டீ கடை நாயர், அவரிடம் வேல செய்யும் சின்னப்பையன் கையி, வாடிக்கா எண்ணெய் பாட்டில், தரையில் உக்காந்து தட்டற கம்பியூட்டர், மானிட்டரில் ஜோ ' னு யதார்தத்தை அங்க அங்க...இங்க இங்க நு அள்ளி தெளி தெளின்னு தெளிச்சி இருக்காரு... .....ம்ம்ம்ம்......இந்த தெளிப்பு எல்லாம் யாரை நமக்கு டச் பண்ணுது ????  ... ஆங் ...அவரே அவரே அவரே தான் இயக்குனர் மகேந்திரன்....... டச்சூஊ...

அஞ்சாவது டச் :
கேமராவும் லைட்டிங்கும் படம் முழுக்க நம்ம கூடவே விடாது கறுப்பாட்டுமே வருது... என்ன மா வளச்சி வளச்சி, மேல , கீழ , இந்தா அந்த சைட்ல, அந்தா இந்த சைட்ல, நடு நடுவுல என்னா ஜூமிங்கு.. அப்புறம்... லாங் ஷாட்டு.. . டைட்டு க்ளோசப்பூ... கைய தனியா,  காலத்தனியா.. மூக்கை தனியா.ன்னு,  .அட மீசைய ஒருத்தர் சீவுவாரு ...  பெல்ட்டு மாட்டறாரு.. . கிராமத்து சீன் ல ...  இந்த கோடியில நின்னு ஒரு ஷாட்...  டீக்கடை நாயரை கூப்பிடற காட்சியில சைட் ல வர லைட்டிங்கு..... ராத்திரி எஃபெக்ட் ப்ர்ஃவெக்ஷன் நு எங்க எல்லாம் கேமரா பேசனுமோ அங்க எல்லாம் கண்டிப்பா பேசல..ங்க ஆனா............ பாட்டா பாடி இருக்கு.....  இது யார் டச்சுன்னு கேட்டீங்க பிச்சிப்புடுவேன் பிச்சி.. .. பிசி ஸ்ரீராமையும் பாலுமகேந்திராவையும் கலந்துக்கட்டி சும்மா சூப்பரா டச்சி இருக்காரு......

ஆறாவது டச்
:
இது தாங்க இந்த படத்துலியே சூப்பர் டூப்பர் காட்சி.....  மாஸ்டர் சூர்யா னு ஒரு அப்பாடக்கர்...  இவரு . ஒரே ஷாட் ல இயக்குனர் சொன்னதை பேசி நடிச்சி இருக்காராம்.....அட நம்பவே முடியல...  இவரு தாங்க படத்தை ச்சும்மா கும்முனு தூக்கி நிறுத்தறாரு.... இவரையும் ஆள்காட்டி விரலை காட்டவச்சிட்டாரு நம்ம இயக்குனர்... இந்த பயப்புள்ள இப்பவே இம்புட்டு ஸ்டைலா இருக்கே.. வருங்காலத்துல எப்படி இருக்குமோஒ? (#லைட்டா பொறாமை.! சரி வுடுங்க தனியா கவனிச்சிக்கலாம்) ...நம்ம இயக்குனர்  இப்படி ஒரே ஒரு காட்சியில் மொத்த படத்தின் க்ளாப்ஸையும் வாங்கிக்கிட்டு போறதால...இயக்குனர் பாக்கியராஜ் ‘ஐ டக்குன்னு நினைவுக்கு கொண்டு வந்து டச்சு டச்சுன்னு டச்சராரு... . ..

ஏழாவது டச்.:

...  வவாச வின் போர்வாள்(ல்)... பவர் வாள்(ல்) எவர் கிரீன் கச்சேரி தேவ் தான் வசனகர்த்தா.. ..........னு...... டைட்டில் ல சொல்றாங்க.. ம்ம்ம்... ஸ்டெடியா, க்ளாசிக்கா .. தெரிஞ்சாலும் நடு நடுவில் ரேண்டி பேசற வசனங்கள் சிலதில் பஞ்ச்சிங் பஞ்சிங்...”தண்ணி அடிக்கும் போது பேசற வசனம்.... ..  குளக்கரையில் பேசும் வசனம் நு சிலது எல்லாம் டச்சிங் டச்சிங்.. . தேவ் அண்ணாச்சியின் மைக் பிடிச்சா நிறுத்தாத பேச்சு தெரிஞ்சதாலோ என்னமோ... வசனாகர்த்தாவின் கைகள் ரொம்பவும் இறுக்கமாக கட்டப்பட்டு விட்டதோ ????????? அப்படீங்கறா சந்தேகம் எழாமல் இல்லை. அப்பாடக்கர் இயக்குனர் "ஆள்காட்டி விரல் அப்பாசாமி" தான் விளக்கம் அளிக்கோனும்...

எட்டாவது டச் :

மியூஜிக்... ஆரம்பமே அசத்தல்... கொஞ்சம் நடுவிலே டவுனு... திரும்ப.. கொஞ்சம் ஏத்தம்.. திரும்ப கொஞ்சம் டவுனு.. மொத்தத்தில்... பல இடங்களில் ஏத்தம்.. சில இடங்களில் சரிவு.. நடு நடுவுல  ச்சிசுவேசன் சாங்கு.போட்டு இருக்காரே ஆகாகஹாக..அதுல தான்  டச்சிங் டச்சிங்கு.. மியூஜிக் க்கும் இயக்குனரே போல...  அதனால் அதுக்கும் ஒரு டச்சிங் சேர்த்து மொத்தம் 3 டச்சிங் கொடுக்கலாம்..... எக்கச்சக்க மியூஜிக் இயக்கனருங்க வந்துட்டாங்க..அதனால இவரை இப்பத்திக்கு தேவா வோட புள்ள ஒருத்தர் இருப்பாரே அவரோட டச்சலாம்... :))) ( அணிலு இதுக்காக மட்டுமே இயக்குனர் இந்தியா வரும்போது இருக்குடீஈஈ)

எட்டாவது டச் :

இது குறும்படம் நு சொல்ற நெடும் படமாக இருந்தாலும்... ஓவராத்தான் ஒரு வருசமா உழைச்சி இருக்காங்க..  ரேண்டி'னு ஒருத்தர் வராரு... அடடா... அடா அடா ஆ படம் முழுக்க இவரோட நடிப்பூ... ஃப்பூ னு ஊதி தள்ளி இருக்காரு..... குடுத்த காசுக்கு மேலாள "நான் இருக்கேன்" நான் இருக்கேன்னு" ...கூவி கூவி நடிச்சி இருக்காரு...அடுத்து 'எட்டாம் அறிவு' னு ஒரு படம் எடுத்தா இவரைத்தான் ஹூரோவா ப்போட நானு ரெக்கமண்டு செய்வேன்... (என்ன கொஞ்சம் கிட்டக்க வந்து கையை நீட்டி பேசறப்போ, யோவ் இனிமே நீ கைய நீட்டின... கடிச்சி துப்பிடுவேன்.. நு சொல்லனும் போல மனசுக்குள்ள தோணிச்சி.. இதையெல்லாம் வெளியில சொல்ல முடியுமா சொல்லுங்க..) அப்புறம் கறுப்பு.....  வவாச த்து சிங்கம் ஒன்னு மூஞ்சி அச்சு அசலா இதே மாதிரி இருக்கும்..அதுவும் இப்ப இதே மாதிரி தாடி மீசை வச்சிக்கிட்டு சுத்துது...அது யார்னு சங்கத்து சிங்கங்களே மூஞ்சிய பாத்து பாத்து கடிச்சிக்கட்டும்... இவரு.. = நேச்சுரல்  நல்லாவே நடிச்சி இருக்காரு.. அப்புறம் நம்ம லிட்டில் அப்பாடக்கர் சூர்யா..  .. சொல்லனுமா என்ன? டச்சோ டச்சூஊ....

ஒன்பதாவது டச் :

இதுல சில ப்ளஸ் சஸ், கொஞ்சம் மைனஸ் சஸ்ஸ டச்சலாம்...  . ஒரு காட்சி நடக்கும் போது..சைட்ல பொட்டிப்போட்டு பின்னாடி நடப்பதை காட்டியது.. ரெசியூம் திருத்துவது, கூகுல் சர்ச் பண்றது.... மொபைல் ரிங் ஆகும் சீனு, பெல்ட் போடும் சீனு, (அது யாரு சீனு நு கேட்டா தலை மேல நறுக் குன்னு கொட்டுவேன்...) தலையில புத்தகத்தை கவுத்துப்போட்டு கையை அசைக்கும் சீனு, சூர்யாவின் நேம் போர்ட்... என ....சில காட்சிகள் சபாஷ்.. போட்டு நம்மை நிசமாவே டச்சுகிறது

படிக்கட் சீன்.. அப்பாடக்கரு... அப்பாடக்கர் வேல பார்த்து இருப்பது தெரியது..... டப்பிங் சில இடங்களில் சோம்பேரியா பின்னாடி வருது... இன்ட்ரவியூ போகும் சீனில் பின்னால் அமெரிக்க வண்டிகள், ரூம்களில் அமெரிக்க வாசனை னு லைட்டா அமெரிக்க மைனஸ் டச்சிங்ஸ் இருக்கு.. அதிகமாக இல்லாமல் இருக்க முயற்சித்த இயக்கனரின் திறமை டச்சிங் டச்சிங் ..


10 ஆவது டச் :

வேற என்னவா இருக்கும்... சொந்த புராணம் தான்... ஒரு வழியா அப்பாடக்கர் விமர்சனத்தை எழுதியாச்சி...  இனி... நானும் ஒரு வலையுலக விமர்சகர்..னு பேர் வாங்கிடுவேன்.. எளக்கியவாதி, முற்போக்கு, பிற்போக்குவாதி முக்கியவியாதி, முனுகியவியாதி ன்னு ஏதோ ஒரு பட்டம் எனக்கு கொடுக்கப்படும்னு நினைச்சாவே.... டச் டச் டச் டச் சிங்கா தான் இருக்கு....... அதுக்காகவே படம் எடுத்த இயக்குனர் ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி அப்பாடக்கர் - க்கு ஒரு கும்பிடு போட்டுக்கிட்டு எஸ் ஆகறேன்.... .

இதே போல நீங்களும் வந்து அவரை டச்சிட்டு மட்டும் போவாதீங்க.... நல்லா கொட்டி, தட்டி , திட்டிட்டும் போங்க.. ஹி ஹி..அப்பத்தானே எனக்கு பொழுது ப்போகும்...


இப்படிக்கு வலையுலக விமர்சகர் வரிசையில் இடம்பிடிக்க தவியா தவிக்கும்  உங்களின் -
அணில் குட்டி ! அணில் குட்டி !.அணில் குட்டி ! (இது எக்கோ) )
.

ஏழாம் அறிவு - Movie Review by Naveen !


Movie Review: 7aam Arivu

7aam Arivu was one of the most anticipated movies of the year, directed by A.R.Murugadoss.

For the first half hour It starts off well exploring the Pallava dynasty around Kanchipuram 1600 years ago which was rich in medicine and martial arts at that point of time. It is here where we first meet Bodhi Dharmar (Suriya) a Pallava Prince who travels to China under his mothers instructions to spread his knowledge on medicine and martial arts. It takes him 3 years to finally reach China where an interesting life awaits him.

The present day portrays Suriya as Aravind a circus worker who hails from Kanchipuram himself. He is casual, playful and mindlessly falls in love with Subha Srinivasan (Shruti) a geneticist. Shruti does a good job as a geneticist but her Tamil accent is horrible at the least.

The first half of the film leads you to expect something big in the second half. But it all goes downhill from there. Operation red was a downright joke and the dialogues that explain it will tickle your funny bone rather than explain the plot and the way our protagonists deal with a national crisis makes you think "Dude! I have more brains than that!!!!". Realism is as rare as a Strawberry Tiger and logic goes right out the window in the second half where disappointment takes a major share among all the other feelings the film gives you.

The villan Dong Lee (Johnny Tri Nguyen) is one of the plus's of the film plays the role of a martial arts expert who can control minds. Believe it or not Dong lee actually gets more whistle's and claps than Suriya does.

Harris's Music generally aids the story line and adds a bit of spice to it but here it disrupts the plot and creates a sense of irritation. Removing the music would have helped the plot a bit.

Overall 7aam Arivu starts off well enough and ends with a large dose of disappointment. 

Would I watch it again? I dont think so.

By
Naveen



Kavitha;s Note : OMG ... This is the first Review & Writeup from Naveen in my blog !  I am so excited to post this. I felt that he could write well & now guess he proved.   Wish You All The Very Best Baby ! I Love You !

க்ளிக்....க்ளிக்....க்ளிக்..

 பேரூந்த நிறுத்தத்தில் தினம் வரும் இவருக்கு கண்கள் தெரியாது., சத்தத்தை வைத்தே பஸ் நிற்கும் இடம் நோக்கி சென்று, இறங்குமிடம் கேட்டு, ஏறுவார். சில சமயங்களில் உதவி இருக்கிறேன். ஆனால் இவரின் தன்னம்பிக்கை - ?! தினம் பிரம்மிக்கும் விஷயம்....
 ஜவுளிக்கடை பொம்மைக்கூட கட்டுதம்மா பட்டுசேலை... 
 குண்டு மல்லிகைப்பூ -ன்னு சொன்னால் நம்பனும் ! (ரோஜாவென்று நினைத்தே வாங்கினேன்.. அலுவலக நண்பர் கொடுத்தது)
 என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த இந்த ஆயா, என்னை த்தூங்கவிடாமல் ரம்பம் போட்டுவிட்டு, தூங்கறதை பாருங்க..
 திருப்பதியில் என் முன்னே சென்ற ஆந்திரா பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்... சூப்பர் டிசைன்ஸ்.. கிராமங்களிலிருந்து கண்டெடுக்கவேண்டியவை..
 அவருடன் வந்த இன்னொரு பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்...
அலுவலகம் போகும் வழியில், நேற்றைய மழையில் வேரோடு சாய்ந்தவிட்ட மரம்.

*  Mobile photos.

NRI கொசுத்தொல்லைகள்

ஆன்சைட்’க்கு ஒரு மாசமோ,  இரண்டு மாசமோ  இல்ல ஒரு வருசம்னே வச்சிக்கோங்களேன், அமெரிக்கா போவாங்க. ஆனா வந்தப்பிறகு இவங்க பண்ற அலும்பு இருக்கே. இதுல அங்கவே செட்டில் ஆகிற நம்ம மக்கள் போடற சீன் இருக்கே ஸ்ஸ்யப்பா முடியாது.

* ஏதோ 3-4 வருஷத்துக்கு ஒரு தரம் வாராங்களே, நம்ம சொந்தமாச்சே, நமக்கு இருக்க வேலைகளுக்கு நடுவில்  இப்ப பார்க்காட்டா  இதுக்கு அப்புறம் எப்ப பார்க்க முடியுமோன்னு, இவங்களை அதுவும் சென்னை ட்ராஃபிக்ல அடி உதை குத்து எல்லாம் வாங்கி பார்க்கப்போனால்.. என்னமோ இவங்கக்கிட்ட நாம் ஒன்னுமே இல்லாம பிச்ச எடுக்க வந்த ரேஞ்சிக்கு பேச ஆரம்பிப்பாங்க... ”கவிதா , வரும் போது நிறைய க்கொண்டு வந்தேன்.. ஆனா பாரு நீ வரத்துக்குள்ள எல்லாம் காலியா போச்சி, அடுத்த முறை வரும் போது எடுத்துக்கிட்டு வரேன்”

இல்ல நாங்க கேட்டோமா? கேக்காமயே ஏன் இந்த பில்டப்பூ?   என்னமோ இவங்க கொண்டு வந்து கொடுக்கற 4 ரூ சோப்பும், 10 ரூ செண்டும் இல்லாம நம்ம வாழ்க்கையை ஓட்டவே முடியாதுப்பாரு...?!  தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்க எல்லாம் அமெரிக்கா போயிட்டா இந்தியாவே பிச்சை எடுக்குதுன்னு நினைச்சிக்குவீங்களா?

* அமெரிக்கா போயிட்டு வந்தாவே பீட்டரே தனி பீட்டர்த்தான்.. . இங்க இருக்கவரைக்கும் தெருவை ரோடு ந்னு சொல்றவங்க அங்கப்போயிட்டு வந்தா பார்க்கனுமே.. “லேன்” ந்னு சொல்லுவாங்க..இந்த ஊர்ல எங்க "லேன்" இருக்கு?  இது பரவாயில்லை,   வார்த்தைக்கு வார்த்த பிரிஃபிக்ஸ் ஆக "ஆசம்...ஆசம்" ன்னு சேர்த்துக்கிட்டு படம் காட்டுவாங்கு... பாருங்க..

அவங்க "ஆசம்" ன்னு சொல்லும் போது.. "ச்சீ.... நீங்க ரொம்ப "மோசம்" ன்னு   காது "சோசம்" ஆகிற அளவு விளாசனும் போல இருக்கும்......... 

* அடுத்து, பார்க்கும் எல்லாத்தையும் அமெரிக்காவோட ஒப்பிட்டு பேசுவாங்க.. பாருங்க. .அப்படியே கொமட்டுலேயே குத்தனும் போல இருக்கும். ! அங்க எல்லாம் இப்படி இல்ல.. ஏன் இந்தியா இன்னும் அப்படியே இருக்கு... .நான் போனப்ப இருந்ததை விட ரொம்ப மோசமா இருக்கு.. ஏன் இப்படி எச்சி த்துப்பறாங்க.. ஏன் இப்படி குப்பை கொட்டறாங்க.. ஹோ...... நோ பவர்.....அங்க எல்லாம் சான்ஸே இல்லத்தெரியுமா........ கொசு கடிச்சி ப்பாரு. முகமெல்லாம் எபப்டி இருக்குன்னு ?! யூநோ.. .அங்கெல்லாம் இன்ஸெக்ட்ஸே ஃப்ரீ... ந்னு கொடுக்கற பில்டப் இருக்கே..

ம்ம்ம் அப்புறம் ???!  உங்க பரம்பரையே அமெரிக்கா அதிபராவே இருந்தவங்களா... ? சொல்லவே இல்ல? !


* ஆண்களை விடுங்க..இந்த பொண்ணுங்க போனால், தலை அலங்காரம் முதல்ல மாறும். பின்னலோ, குதிரைவாலோ போயி எப்பவும் ஃப்ரி ஹேர் தான். அப்புறம் உடைகள் மேல கொஞ்சம் குறையும், கீழக்கொஞ்சம் ஏறும். கேட்டா எங்க பரம்பரையில் இப்படித்தான் நாங்க ட்ரஸ் செய்வோம்னு ரேஞ்சுக்கு சீன் போடுவாங்க.

இங்க முகத்தில் எண்ணெய் வடிய அருக்காணி சடைப்போட்டுக்கிட்டு மூக்கு ஒழிகினது எல்லாம் மறந்தே போச்சா அம்மணிங்களா?.

* அடுத்து கடன், ஒரு வேள வெளிநாட்டில் இருந்து வரவங்கள குறிவைத்தே எல்லோரும் பணம் கேட்பாங்களானு தெரியல..நாம சாதாரணமாக பேசிக்கிட்டு இருக்கும் போதே அவங்களோட சொத்துக்கணக்கு எல்லாம் சொல்லுவாங்க. அமெரிக்காவில் இருந்தாலும் நான் பிச்சைக்காரன் ரேஞ்சிக்கு சொல்லி, நாம அவங்கக்கிட்ட பணம் கேட்காத அளவு நம்மை மனதளவில் தயார்படுத்துவாங்க..  எல்லா பில்டப் பும் முடிஞ்சி, "உனக்கு எதாது ஹெல்ப் வேணும்னா என்னைய கேளூஊஊ கண்டிப்பா செய்வேன்னு "  சொல்லி முடிப்பாங்க.

அது எப்படிங்க? இதெல்லாம் அமெரிக்கா போனா தானா வருமா.?. இல்ல அங்க ஏதாச்சும் இதுக்குன்னு தனியா க்ளாஸ் நடத்தறாங்களா??


*அடுத்து புள்ளைங்கக்கிட்ட தமிழ்ல பேசவே மாட்டாங்க. நம்மக்கிட்ட தமிழ்ல பேசுவாங்க..நடுவுல புள்ளைங்க வந்தா அவங்கக்கிட்ட ஒரே பீட்டர் தான். ஏன்ப்பா தமிழ் சொல்லி த்தரலியான்னு கேட்டா.. கொன்ச் கொன்ச் த்ரியும்.. ஆனா இங்கிலீஷ் நா ஈசியா புரிஞ்சிக்குவாங்க..அதனால் இங்கிலீஷ்லியே பேசிடுவோம் நு சொல்லுவாங்க. புள்ளைங்க நம்ம என்னவோ வேற்று கிரகத்து ஆட்களை பார்ப்பது போல மேலும் கீழும் பார்க்கும். சரி நாமும் குழந்தைங்கக்கிட்ட பேசி வைப்போம்னு.. அதான் தமிழ் தெரியாதே... Hai I am your Chitthi / Athai.... means..your mom;s younger sister/ your dad's younger sister" னு சொன்னாப்போதும்.. ஒரு மாதிரி வினோதமாக ”ஹாய்...சித்தி../அத்த....  இட்ஸ் கிரேட்.. டு சி யூ.. ஹே.. யூ கேரியான்.. மீத் யூ லேத்தர்.. ” ந்னு நாலு வார்த்தைக்கு மேல பேசமுடியாமல் ஓடி போயிடுவாங்க.  

சொந்தக்காரங்க வருவாங்க. .எல்லாம் பக்கி பனாதிங்க.. .அதுங்க க்கிட்ட நின்னு பேசாத ன்னு சொல்லியே கூட்டுட்டு வருவாங்களோ?

* அடுத்து டைம் ஸோன் பிரச்சனை. வந்து ஒரு 1 வாரத்திலிருந்து 10 நாளாவது, இவங்க அர்த்த ராத்திரியில் எழுந்து நடமாடுவாங்க. டிவி ய வச்சிக்கிட்டு பார்க்கிறது... கண்ட நேரத்தில் சாப்பிடறதுன்னு ஒரு மார்க்கமாவே இருப்பாங்க... .தனியா இருக்காங்களேன்னு பாவம் பார்த்து நாமும் கூட சேர்ந்து முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருந்தா............ சரி செய்யறோமேன்னு இல்லாம.. அமெரிக்கா மொக்கைய ஆரம்பிச்சி ... ராத்திரி பொழுதையும் நிம்மதியா விட்டுவைக்க மாட்டாங்க..

இங்க இருக்க கொசுத்தொல்லை இல்லாம அமெரிக்காவிலிருந்த வந்த கொசு ..இங்க இருக்கறதையாச்சும். அடிச்சே கொல்லலாம்..ஆனா இதுங்கல... ?! 

* கடைசியா இந்த ஆசம் அமெரிக்க மாப்பிள்ளைகள். ஒரு வீட்டுல நாலு மாப்பிள்ளை இருந்தாலும், அதுல ஒரே ஒருத்தர் அமெரிக்காவில் இருந்துட்டா போதும்.. அடடடா டாஆ.... முடியாதுடா சாமி.. ! :) இவரு தான் அந்த குடும்பத்தையே அமெரிக்கா போயி உசத்திட்டத்தா நினைச்சிக்குவாரு.. அதிகம் பேசமாட்டாரு.... அடுத்தவங்க எது பேசினாலும். .ஒரு கிரேட் ஸ்மைல் பண்ணுவாரு.... என்ன சொன்னாலும் டவுன் டு எர்த் ஆ இருப்பாரு.....எல்லா இடத்திலும் முக்காப்பேண்ட்ஐ போட்டுக்கிட்டு சுத்துவாரு, . ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆ காமிச்சிக்குவாரு...  நம்ம மக்களோ இங்க இருக்க உள்நாட்டு மூணு மாப்பிள்ளைய மாட்டைவிட கேவலமா மதிப்பாங்க.. ஆனா இவரை விழுந்து விழுந்து கவனிப்பாங்க...

பேசாமயே ...கிரேட் ஸமைலியோடயே..வந்த வேலைய முடிச்சிட்டு அமெரிக்கா பேரைச்சொல்லி எவ்ளோ கறக்க முடியுமோ கறந்துட்டு  கிளம்பிடுவாரு.... :)) இவரு தான் இருக்கறதிலேயே ரெம்ப நல்லவரு...

===========

இளா எழுதிய  NRI கொசுத்தொல்லைகள் பதிவை அச்சு அசலாக காப்பி செய்து எழுதியது. :). அவரிடம் ப்ர்மிஷன் கேட்டு (ஒரு வருசம் முடிஞ்சி இருக்குமோ?) மெயில் அனுப்பிய போது.. .எவ்ளோ திட்டிக்கனுமோ திட்டிக்கோங்கன்னு பெரிய மனசோட பர்மிஷன் கொடுத்தாரு. நன்றி இளா.

அணில் குட்டி : எச்சூச்சுமி கவி.. உங்க புள்ள  ஜிஆர்ஈ..எழுதிட்டாரு.. ட்டோஃபல் எழுதப்போறாரு...  .... இதெல்லாம் எதுக்கு ?! ...ச்ச்சும்மா ஒரு இன்ஃபோ க்கு கேட்டேன்.. ...  அப்புறம் இன்னொரு மேட்டரு கேக்கனும்.. சத்தமா கேட்டா உங்கள எல்லாரும் கல்லால அடிப்பாங்க. .காதக்கொடுங்க. .ரகசியமா கேக்கறேன்.. "உங்க புள்ளைக்கு தமிழ் படிக்கத்தெரியுமா? "   (மக்கா நீங்களும் கவிதா காதை  இழுத்து இதே கேள்வி ய கேட்டுட்டு போவீங்களாம்)

பீட்டர் தாத்ஸ் :  Patience when teased is often transformed into rage

வெள்ளை காக்கா

போன வாரம் தஞ்சாவூர் போயிட்டு வந்ததிலிருந்து சிவா'விடம் ஒரு மாற்றம் தெரிந்தது.  சொந்தக்காரர்கள் திருமணம் என்று சென்று வந்தான். ஆனால் அவன் வந்தலிருந்து கவனிக்கிறோம்... எப்போதும் போல இல்லை. வேலை நேரங்களில், விசிட்டர் ரூம் சோபாவில் அடிக்கடி சென்று தனியாக அமர்ந்து கொள்கிறான், அங்கிருக்கும் கண்ணாடியிட்ட கதவின் முன் வேடிக்கை பார்த்தவாறு நேரம் போவதே தெரியாமல் நிற்கிறான். கத்தி கதறி கூப்பிட்டால் தான் சாப்பிடவே வருகிறான். எப்போதும் போல் நடக்கும் அரட்டை கச்சேரி எல்லாம் நின்றுவிட்டது, தனிமையில் இருப்பதை விரும்புவதாக தெரிந்தது... விட்டறவா முடியும்..?!

"ஏன் டா என்ன ஆச்சி உனக்கு "  

".............................................. .......... ஒரு பொண்ணை பாத்தேன்..  ரொம்ப பிடிச்சி போச்சி... உன் கிட்ட சொல்லனும் தான் இருந்தேன்.. ஆனா எப்படி சொல்றது தான் தெரியல.. "

"ஓ...அதான் மேட்டரா.. ஹே பொண்ணு எப்படிடா இருக்கா...? "

"ம்ம் போட்டோ இருக்கு பாக்கறியா? "

"என்ன கேக்கற....எடுடா முதல்ல... "

ஓடி போயி, அவனுடைய டெஸ்க்கிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து வந்து "யார் ன்னு சொல்லு பாக்கலாம்".  என்று சிரித்தான்.

அது ஒரு குரூப் போட்டோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடிவில்,  தாவணி போட்ட இரண்டு பெண்கள் இருந்தனர். ஒரு பெண் அழகாக லட்சணமாக இருந்தாள், மற்றவள் ரொம்பவே சுமார் ரகம், கொஞ்சம் குண்டு, கண்ணாடி போட்டு இருந்தாள். நான் அந்த அழகான பெண்ணை காட்டி "இவள் தானே ?" என்றேன்.

சிரித்துக்கொண்டே "நினைச்சேன் நீ அவளை தான் சொல்லுவேன். .அவ இல்ல. .பக்கத்துல இருக்கு இல்ல கண்ணாடி அது தான்.."

சட்டென்று மறைக்க முடியாத முக வாட்டத்தோடு . "ஏன்ன் இப்படி? நிஜமாவே இவளையா பிடிச்சி இருக்கு...?

"ம்ம்.. அவ ரொம்ப நல்ல பொண்ணு அனுஷ்...  அவள கல்யாணத்தில் தான் முதல்ல பாத்தேன்...உனக்கு தான் தெரியுமே எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் மூணு நாள் நடக்கும். அவள கவனிச்சிட்டே இருந்தேன்.  ரொம்ப இன்னசன்ட்.. அவள கூப்பிட்டு "அங்க பாரு வெள்ளை காக்கா பறக்குது ன்னு சொல்லி பார்... அவளும் ஓடி வந்து எங்க எங்க ன்னு பார்ப்பா" அதான் எனக்கு அவக்கிட்ட பிடிச்சி இருந்தது...அவ்ளோ குழந்தைத்தனம் வெகுளித்தனம் அவ கிட்ட இருக்கு..... ரொம்ப யோசிச்சி அவ தான் என் வாழ்க்கை ன்னு முடிவு செய்துட்டேன்.

"சொல்லிட்டியா? "

"சொல்லிட்டேன் ... ஆனா ரொம்ப பயப்படறா...  பதில் எதுவும் சொல்லல... அவ சொல்லாட்டி பரவாயில்ல. .அவ எனக்கு தான், அதை நான் முடிவு பண்ணிட்டேன்..  போக போக சரின்னு சொல்லிடுவா...... குழந்தை அவளுக்கு என்ன தெரியும்.."

"டேய்... உனக்கே ஓவரா இல்ல.. குழந்தைய போய் லவ் பண்றேன் னு சொல்ற... "

திரும்பவும் வாய்விட்டு சிரித்தான். "மனசால அவ குழந்தை ன்னு சொன்னேன்.... " சரி உனக்கு பிடிச்சி இருக்கா...? "

"அது எப்படிடா மனசாட்சியே இல்லாம இப்படி எல்லாம் கேள்வி கேக்கனும்னு உனக்கு தோணுது...என்னைய பாத்தா கேனச்சி மாதிரியே இருக்கா உனக்கு???.. கேக்கறான் பாரு கேள்வி..  ...அது சரி என்ன படிச்சி இருக்கா?"

"ப்ளஸ் 2....."

"என்னது ப்ள்ஸ் 2 வா?  ஏண்டா.. இது எல்லாம் வேலைக்கு ஆகுமா.. ரொம்ப சின்ன பொண்ணு.. அவ எப்ப படிச்சி முடிச்சி. . உன்னைவிட ரொம்ப சின்னவ டா..."

"ஆமா 7 வருஷம்... "

"தெரிஞ்சுமா?"

"என்னவோ அவ என் மனசுல பதிஞ்சிட்டா... எத்தன வருஷம் னாலும் காத்திருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..."

"என்னமோ போ... பொண்ணும் சுமார் தான்.......சிவா நல்லா யோசிச்சிக்கோ...... சரி நம்ம மக்க கிட்ட சொல்லிடவா? "

வாய்விட்டு சிரித்தான். ."சொல்லாமலா இருக்க போற... உன் கிட்ட சொன்னா பிபிஸி கிட்ட சொன்ன மாதிரியாச்சே...  "

"ஹோ..நான் பிபிசி யா..போடா..யூஸ்லஸ்.. நான் போறேன்..நீயே சொல்லிக்கோ....."

"ஏய்ய் ஏய்ய்...ஏய்...நில்லு.... " கையை பிடித்து இழுத்தான்... "இப்படி போனா எப்படி..?  நீதான் எனக்கு எல்லாம்........உன்னைவிட்டா எனக்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்க சொல்லு....."

"என்ன...நாய் வால் ஆட்டுது..?"

"ஆமா அனுஷ்.. அவங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்...  பசங்க எல்லாம் போன் செய்து அத்தன ஈசியா பேசமுடியாது.... நீதான் போன் செய்து அவள கூப்பிட்டு என் கூட பேசவைக்கனும்.. ...

"ஆஹா.. ராசா... இதை தான் கண்ணாடி முன்ன நின்னு இத்தனநாளா யோசிச்சிக்கிட்டு இருந்தியா...? அடேய்.... என் ஆருயிர் தோழர்களா எல்லாரும் இங்க  வாங்க. .அண்ணன் ஏதோ மேட்டர் சொல்றாரு.....  வந்து கேளுங்க......,   சிவா... எல்லாரும் ஒக்கே சொன்னா தான் செய்வேன். .இப்பவே சொல்லிட்டேன்... .எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.. இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது......"
***********

நாங்கள் மொத்தம் எட்டு பேர், நான் மட்டுமே பெண்.. ஆனால் அந்த வித்தியாசம் இதுவரை எங்களிடம் வந்ததில்லை. எப்போதும் எங்கேயும் ஒன்றாகவே இருப்போம். இதில் ஒருவன் தான் சிவா. மற்றவர்கள் ராம், கணேஷ், ஆர்கே, ரகு, பட்டாபி, குமரன். எல்லோரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலுமே மற்றவர்களை விட ராம், சிவா, மற்றும் கணேஷ் ரொம்பவும் நெருக்கமானவர்கள்.

எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லை... எப்போதும் சிரிப்பும் கூத்தும் பாட்டும் என்று அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ரொம்ப ஜாலியாக இருப்போம்..... ..

குமரன், ஆர்கே தவிர வேறு யாரும் பெண்களை பற்றி அதிகம் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் எந்த நேரமும் பெண் தோழிகளை பற்றியும் அவர்களுடன் ஊர் சுற்றிய கதை, சைட் அடிச்ச கதை என்று பேசி க்கொண்டே இருப்பார்கள், இதில் ஆர்கே.. குமரனை விட ரொம்பவே அதிகம்.. காதலர்கள் தினத்தில் ஆர்கே அலுவலகமே வரமாட்டான்.. ஒன்றா இரண்டா.. சீக்கிரம் முடித்துவிட்டு வர... அந்த நாள் முழுதும் பெண்களுடனேயே கழிப்பான். அடுத்த நாள் வந்தால் , என்னை தவிர மற்ற எல்லோரும்.. "மச்சி. .இங்க வாடா உன்னை ஒரு தரம் கட்டி பிடிச்சிக்கிறோம்.. அப்படியாது எங்க ஆசையை தீத்துக்கறோம் ன்னு லைன் கட்டி கட்டிப்பிடிச்சி.. அவனின் காதலர் தினத்தை இவர்களும் கொண்டாடி மகிழ்வார்கள்..

எல்லாவற்றிக்கும் நடுவே சிவா'வின் காதல் தான் எங்கள் அனைவருக்குமே முதல் காதல். எல்லோருமே சந்தோஷமாக இருந்தோம், அவன் காதலை அவனுடன் சேர்ந்து நாங்களும் ரசிக்க ஆரம்பித்திருந்தோம். அவனுக்காக போன் செய்ய நானே நியமிக்க பட்டேன். 

ஆயிற்று.. போன் செய்ய ஆரம்பித்து, குந்தவை'வின் தோழி ன்னு அவங்க அம்மா க்கிட்ட அறிமுகம் செய்துக்கிட்டு ஃபோன் கை மாறியவுடன் சிவாவிடம் கொடுத்துவிட்டு அவன் பேசுவதை பார்த்து ரசிப்பது எங்கள் அனைவருக்கும் வாடிக்கையாகி விட்டது..

காதலிக்கறதே பிடிக்காது என்று இருந்த எனக்கு. .சிவாவின் காதல் கதை கேட்கவே நேரம் போதாமல் போனது. எந்த நேரம் பாத்தாலும் அனுஷ் வாயேன். .இன்னைக்கு அவ என்ன சொன்னா தெரியுமா.. .ன்னு ஆரம்பித்தால்.. என் காதில் ரத்தம் வரும் வரை பேசிக்கிட்டே இருப்பான்.. ..கேட்டு கேட்டு  குந்தவை என் மனதிலும் ஆழ பதிந்துவிட்டாள்.. ஒரு சின்ன குழந்தையாக.....

அடுத்த வந்த மாதத்தில் ஒரு நாள் தஞ்சாவூர் சென்று வந்தான்.  வந்ததிலிருந்து அலுவலகத்தில் வேலை பளு காரணமாக யாருமே ஒழுங்காக பேசிக்கொள்ள முடியவில்லை...  மாலை வீட்டிற்கு கிளம்பும் முன்... அனுஷ் நில்லு.. உன் கிட்ட பேசனும் னு சொல்லி, அலுவலகத்தில் வெளியே இருந்த தோட்டத்திற்கு கூட்டி சென்றான்...  யாரும் இல்லாத ஒரு ஓரம்....நேரம் ஆகிறது என்பதை பொருட்படுத்தாமல் , கையை பிடித்து இழுத்து புல் தரையில் அமர வைத்தான்.

"பொண்ணுங்ககிட்ட இப்படி தனியா உட்காந்து... தொட்டு.. தடவி பேசறது எல்லாம் ஒரு சுகம் இல்ல அனுஷ்..."

"ஹான்...செருப்பு........ வந்த விஷயத்தை சொல்லு..".

"நீ கோவப்பட்டா ரொம்ப அழகா இருக்க அனுஷ்.."

"அடச்சீ... டைம் ஆச்சுடா. .சொல்ல வந்தத சொல்லு...போனும்..."

"ஐ லவ் யூ அனுஷ்..."

"நான் கிளம்பறேன்.. ஆளவிடு.......... .."

"சரி சரி.. கூல் கூல்..ச்சும்மா...... .... இந்த தரம்.. அவள பாத்தப்ப... தனியா கூட்டிட்டு போயி... ரொம்ப நெருக்கமா உட்காந்து பேசினேன் அனுஷ்...."

"ம்ம்ம்..."

"அது சொல்லவே முடியாத ஒரு உணர்வு....... அவளோட நெருக்கும்... பார்வை, மூச்சு காத்து... லேசா அப்பப்ப காத்துல வந்து தொட்ட தாவணி.. .. அவ தலைய ஆட்டி பேசும் போது எல்லாம் காதுல கூடவே ஆடின ஜிமிக்கி........ அவ  உள்ளங்கைய பிடிச்சி இழுத்து வச்சி அழுத்தி பேசினது...................................................  அனுஷ்.. . பொண்ணுங்க எல்லாம் தேவதைங்க ....... அவங்களோட நெருக்கும்... நெஞ்சை உறுக்கி எடுக்குது..... என்னமோ ஒரு இனம் புரியாத சந்தோஷம்....இது வரைக்கும் கிடைக்காத சந்தோஷம்..................எப்படி சொல்றது.... அவக்கிட்ட இப்படி பேசினது... அங்கேயே அவ கூடவே எப்பவும் இருந்திடனும் போல  இருக்கு........மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா....."

"...டேய் என்னடா ஆச்சி உனக்கு......இப்படி உறுகி ஓடற..........."

"உனக்கு புரியலையா அனுஷ்.... "

"...........................ம்ம்ம்... .....................புரியுது... ................................. ஆனா .லிமிட் டா இரு... அவள உண்மையா காதலிச்சா. .இந்த நெருக்கத்தை எல்லாம் அவாய்ட் பண்ணு. .சின்ன பொண்ணு.. இப்பத்தான் +2 படிக்கறா.. அவ மனசு சலன படக்கூடாது.....உன்னை மாதிரி இல்ல அவ..  படிக்கனும்.. ஸ்கூல் ஃபைனல் .. நல்லா மார்க் எடுத்தாத்தான் காலேஜ் நல்ல சீட் கிடைக்கும்..... இதை மறந்துடாத... ... சரி நான் கிளம்பவா?"

"இல்ல இரு.. " இன்னும் சொல்லனும்...

"இல்லடா.. டைம் ஆச்சி நாளைக்கு சொல்லு கேக்கறேன்.. உன் மூடு வேற ஒரு மாதிரியா இருக்கு இன்னைக்கு, உன் பக்கத்துல உக்கார எனக்கே பயம்மா இருக்குடா............."

"ஹா ஹா ஹா ......." .வாய்விட்டு சிரித்தான்.......

அடுத்தநாள்... டீ டைம்... 'அனுஷ்... நீ சொன்னத யோசிச்சேன்....நீ சொல்றது ரைட் தான்.... அவ முதல்ல நல்லா படிக்கனும்......!!"

.......................
   
# ஏப்ரல் '11 மாதம் தேவதை இதழில் வெளிவந்தது. நன்றி தேவதை.

கட்டைவிரல் மெட்டி..

திருமணம் ஆகாதப்பெண்களும் அணியக்கூடியது தான் கட்டைவிரல் மெட்டி. எத்தனைப்பேர் இதனை  பார்த்திருக்கிறார்கள் / பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சிறு வயதில் பல வருடங்கள் வீட்டில் இருக்கும் போது மட்டும் அணிந்து இருக்கிறேன். ஆண்டு விடுமுறைகளில் முழுநாளும், விஷேஷ நாட்கள், திருமணங்கள் என இந்த மெட்டியை அணிந்துக்கொள்ள பல காரணங்கள் இருந்தன.
(படத்தை பெரிதாக்கி பார்க்கவும் )

ஆயா,  இரண்டு டிசைனில் என் கால் கட்டைவிரல் அளவிற்கு மெட்டி செய்து வைத்திருந்தார்கள். படத்தில் உள்ளது போலவே இருக்கும். தீ விபத்தில் அழிந்துவிட்டதால், வரைந்திருக்கிறேன். மேல் புறம் நடுவில் 5-6 முத்துக்கள் கொண்ட சலங்கை ஒன்று இருக்கும். கீழ்பகுதி தட்டையாக செப்பு தகட்டில் செய்து இருப்பார்கள்.  நடக்கும் போது தேய்மானம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. மற்ற பகுதியெல்லாம் வெள்ளியால் செய்யப்பட்டு இருக்கும். நாம் சாதாரணமாக அணியும் மெட்டியைப்போல இல்லாது, பெரியதாக கட்டைவிரல் உள்ளே போகக்கூடியதாக இருக்கும். திருமணத்தன்றும், மெட்டிவிரலில் மெட்டி வருவதற்கு முன் அதற்கு முன் விரலில் இந்த மெட்டியை அணிந்திருந்தேன். :).

இதனை எங்கள் வீட்டைத்தவிர வேறு எங்கும் பார்த்தது இல்லை. என் காலில் இருப்பதை பார்த்து அத்தை மகள் கேட்பாள், அவளுக்கு டிசைன் கம்மியாக இருப்பதை மட்டும் கொடுக்க சம்மதித்து இருக்கிறேன். வீட்டிற்கு போவதற்கு முன், கவனமாக  அதை திருப்பி வாங்காமல் அனுப்ப மாட்டேன். சில சமயம் அதற்காக அழுதும் கூட இருக்கிறாள். அவளுக்கு மேல் அடம் பிடிப்பதில் நான் 'மன்னி' என்பதால், என்னிடம் வம்பு வேண்டாம் என்று, அவளை சமாதானம் செய்து, ஆயா, மெட்டியை வாங்கிவிட்டுத்தான் அனுப்புவார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த அல்லது என்னை கவர்ந்த வேறு சில நகைகள் நத்து'ம், புல்லாக்கு'ம். எப்போதுமே நகைகள் அணிந்துக்கொள்வதில் விருப்பம் இருந்ததில்லை. எனக்கு ஆர்வம் இல்லையென்றாலும் ஆயா அத்தனை சுலபமாக என்னை விட்டுவிடவில்லை. எனக்கு பிடிக்கிறதோ இல்லை, எந்நேரமும் ஏதோ ஒரு அலங்காரம் செய்துக்கொண்டே இருப்பார்கள். அதில் ரொம்பவே எங்க வீட்டில் கஷ்டப்படறவங்க "ஆண்டாள்" தான்.. :).  எத்தனை முறை இந்த ஆண்டாள் வேஷம் போட்டாகிவிட்டது. வீட்டில் ரெடிமேடாக ஆண்டாள் அலங்காரத்திற்கான 'பின் தலை கொண்டையும், சைட் கொண்டையும் ' இருக்கும். ஒரு பச்சக்கிளி பொம்மை வேறு!  என் திருமணத்திற்கு, முதல் நலங்கின் போதும் ஆண்டாளாக நிற்கவைத்தார்கள். பல்வேறு வயதுகளில் ஆண்டாள் வேஷம் போட்டு இருந்தாலும், திருமணத்திற்கு முன் போட்ட வேஷத்தில் ஆண்டாள் அழகாகவே இருந்தாள்.

திருமணம் வரும் வரையில், நத்து, புல்லாக்கின் மேல் எனக்கு ஆசை இருக்குமென ஆயாவிற்கே தெரியவில்லை. திருமணத்தன்று, மணப்பெண் அலங்கார நகைகளை நானே தேர்தெடுத்தேன். எதையும் இது வேண்டுமென கேட்காத நான், இந்த நகைகள் தான் வேண்டும். வேறு அணியமாட்டேன் என்று சொன்னது, ஆயாவிற்கு வியப்பளித்தது. ஆயா சொல்லிய எதையும் அணிந்துக் கொள்ளவில்லை.

சிகப்புக்கலர் கல் நகைகள் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லாமே வெள்ளைக்கல் வைத்த நகைகள்.

நத்து, புல்லாக்கு  ஏன் எனக்கு பிடிக்கும் என்ற காரணம் தெரியவில்லை. எங்க வீட்டு பெண் குழந்தைகளில் நான் மட்டுமே நத்து, புல்லாக்கு வேண்டுமென கேட்டு வாங்கி ப்போட்டுக்கொண்டு மற்றவர்களை எரிச்சல் படுத்தினேன். . புல்லாக்கு சரியாக மேல் உதட்டில் மேல் வந்து விழும். பேசவும், சாப்பிடவும் நிச்சயம் கஷ்டமாக இருக்கும். குறிப்பாக திருமணத்தன்று பால் பழம் கொடுக்கும் போது, யாராவது ஒருவர். புல்லாக்கை மேல் தூக்கி பிடித்து, குடிக்க வைத்தார்கள். நகைகளை அவிழ்க்கக்கூடாது என்பதால், அது சற்று சங்கடமாகவே இருந்தது.  ஆனால் அதை அணியும் போது தனி அழகு பெண்ணின் முகத்திற்கு வருகிறதென்பதை மறுக்கமுடியாது.

இரண்டுமே திருகு அல்லாது பிரஸ்ஸிங் டைப் நகைகள். மூக்கிலிருந்து நழுவி விடாமல் இருக்க மிகவும் அழுத்திவிடுவார்கள், நிச்சயம் வலி இருக்கும். அவற்றையெல்லாம் தாண்டி அணிந்துக்கொள்ள நினைப்பது, அந்த ஒரு நாள் தவிர்த்து, அந்த நகைகள் அணிய சந்தர்ப்பம் கிடைக்காது என்பதே. !.  அதற்கு பிறகு , நத்து, புல்லாக்கு எப்பவுமே அணியவில்லை.  கட்டைவிரல் மெட்டியும் கூட....

அணில் குட்டி : இப்ப நத்து, புல்லாக்கு, வங்கி, ஒட்டியானம்னு போட்டு ப்பார்த்தேன்... ஹய்யோ... ஹய்யோஓஓஓஒ..... :))))))))))...

பீட்டர் தாத்ஸ் : One men's memory is like a box where a man should mingle his jewels with his old shoes.
பொன்ஸ் : உங்களுக்காக !! :)


  

படங்கள் : நன்றி கூகுல்.

கன்னா பின்னா'ன்னு ஒரு கதம்பம்

* ஒரு டி-ஷர்ட் எடுத்துத்தர வரீங்களாவென, பஸ் நிறுத்தம் போற வழியில் இருக்கும் நடைப்பாதை கடைக்கு அழைத்தான் அலுவலக ட்ரைவர். நானும், இன்னொரு நண்பருமாக மூவர் சென்றோம், எடுத்துப்பார்த்துக்கொண்டு இருக்கும் போது, நான் அவனைப்பார்க்க, ரூ.100/- க்குள் வேணும் என்றான். தேர்ந்தெடுத்துவிட்டு, கடைக்காரரிடம் விலையை கேட்க 120 என்றார். நான் ரூ.60/- க்கு கொடுங்கன்னு கேட்டது தான், நிமிர்ந்து பார்த்து முறைத்தார். "மேடம் இந்த காலத்தில்(எந்த காலம்? நாங்க என்ன அக்பர் காலத்தில் வாழ்ந்துட்டு இப்ப ஆவியாவா அலையறோம்)  60 ரூபாய் க்கு எல்லாம் டிஷர்ட் விக்கறது இல்லை" என்றார்.  "அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு என் கூட வாங்க , 60ரூ என்ன 40ரூ க்கு டிஷர்ட் நான் வாங்கித்தரேன்னு கூப்பிட்டேன். (இப்படி எல்லாம் பேசாட்டி, நாயி நம்மை கவ்விடும் நு பெரியவங்க சொல்லி இருக்காங்க.) கடைசியில் பேரம் முடிந்தது ரூ.80 க்கு.

* ஒரு எமகாதகன், நான் பயணம் செய்யும் போது, கைப்பேசியில் பேசறவரை பேசிவிட்டு,"யாரோ பஸ் ல ஃபோன் ல பேசறவங்கள பத்தி, அவங்க ப்ளாக் ல எழுதி இருந்தாங்க, படிச்ச ஞாபகம்”  ஃபோனை வச்சிட்டான்.  :(  (ஏன் ஏன் ஏன்.. இனிமே பஸ்ல இருக்கும் போது எமகாதகன் மட்டுமில்ல எவன்/எவள் ஃபோன் வந்தாலும் பேசுவியா? பேசுவியா? பேசுவியா? -  )
   
* வாலி திரைப்படத்திற்கு பிறகு அஜித் மேல் கவனத்தை திருப்பியப்படம் மங்காத்தா எனலாம். த்ரிஷா +அஜித் டூயட் பாடல் படமாக்கப்பட்டவிதம் கவர்ந்தது. ஒரே ஒரு காட்சியில் சில மணித்துளிகள், தொப்பையை இழுத்துப்பிடுத்து அஜித் சட்டையில்லாமல் வருகிறார். விசில் பறக்கிறது. எல்லாரும் சூர்யா ஆகிவிடமுடியுமா?. ”மச்சி ஓபன் தி பாட்டில்” பாடலில் என்னா டான்ஸ்?!! குறிப்பாக அஜித் ஆடும் நடனும் க்ளாஸ் ! தியேட்டரில் லைனாக நின்று அதே மாதிரி ஆடினார்கள். கலக்கல்ஸ்! வீட்டுக்காரரோட சினிமாக்கு போகக்கூடாதுன்னு நினைச்ச பலநேரங்களில் இதுவும் ஒன்று. பாட்டுக்கு நடுவில் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு காட்சியில்....அஜித்..ம்ம்ம்ம்ம்ம்ம்.... ஸ்டைலு !   கொஞ்சமா மெலிஞ்சுடுங்களேன்.. இன்னமும் அழகா இருப்பீங்க.
 
* ஹூஸைனம்மா பதிவுகளை படிக்காமல் விடமாட்டேன், எப்படியும் சேர்த்துவைத்தாவது மொத்தமாக படித்துவிடுவேன். நேற்று ஒரு பதிவில் சூரிய ஒளியில் மின்னும் பாட்டில் அதிலிருந்து கிடைக்கும் ஒளி என  மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வெளிச்சம் கிடைக்கும் செய்தியை எழுதி இருந்தார்கள். தேவையான ஒன்றாகப்பட்டது. சுட்டுட்டேன். நன்றி ஹூஸைனம்மா! :).


ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நகரான மனிலாவில், வீட்டில் வெளிச்சம் கிடைக்க ஒரு எளிய முறையைக் கடைபிடிக்கிறார்கள். என்னன்னா, ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது. இதையே, கூரையில் ஒரு துளையிட்டு கண்ணாடி போட்டால் என்ன என்று கேட்கலாம். அப்படிச் செய்தால், அது அந்தத் துளையின் நேரே மட்டும்தான் ஒளிபாய்ச்சும். இந்த ‘பாட்டில் முறை’யிலோ, அறை முழுவதுற்குமாக, 55 வாட்ஸ் அளவு வெளிச்சம் கிடைக்கிறதாம். தண்ணீரில் பாசி பிடிக்காமலிருக்க, நான்கைந்து ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரையும் கலந்துவிட்டால், சுமார் நான்கு வருடங்கள் வரை இந்த ஒற்றை பாட்டில் தொடர்ந்து மங்காமல் வெளிச்சம் தருமாம்!! ஒரே அறைக் கூரையில் நான்கைந்து பாட்டில்களை மாட்டிவிட்டால், வெளிச்ச வெள்ளம்தானாம். ஆஃப்-ஆன் பண்ணும் சிரமமில்லை. மின்சாரக் கட்டணக் கவலையில்லை!!

* மனித உணர்வுகளோடு தொடர்ந்து விளையாடுபவர்களை...............
..... ”செக்” வைத்து தூக்கனும். செக் வைக்க அவர்களே வழி வகுக்கும் வரை காத்திருக்கலாம்/ கண்டிப்பாக வழி வகுப்பார்கள் ! # தெளிவு/அனுபவம்/வாழ்க்கை.

* மறுபடியும் ஆண்களை தொடர்கிறேன். இரு சக்கர வாகனம் ஓட்டுவதும், வேகமும் புதிதல்ல, ஆனால் நெடுந்தொலைவு பயணம், மிக நெரிசலான போக்குவரத்து இருக்கும் வீதிகளில் செல்லும் போது, மிக லாகவமாகவும், வேகமாகவும் வண்டி ஓட்ட ஆண்களை போல பெண்ககளால் முடியாது. அப்படி வண்டி ஓட்டும் ஏதேனும் ஒரு ஆணை பின் தொடர்ந்து, என் வண்டி ஓட்டும் திறனை வளர்த்துக்கொள்வது வழக்கம் மட்டுமல்ல, பிடித்தமான விஷயமும் கூட. அந்த ஒருவர்,  ஒரே ஆளாக இல்லாமல் அவ்வப்போது நடுநடுவில் என்னை முந்திச்செல்லும் யாரோ ஒருவராக இருப்பார். நடுவில் சில ஆண்டுகள் இதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போக.. மீண்டும்...தொடர்கிறேன்.  இன்னமுமே அவர்களை போன்று ”கட்” கொடுக்க, லாரி/பஸ் டயர் வரை சாய்ந்து வளைந்து செல்வது போன்றவை எல்லாம் செய்யவில்லை. செய்யத்துணியவும் இல்லை. சில்லறை பொறுக்கினால், முதலில் வரும் வார்த்தை “பொம்பளைக்கு இதெல்லாம் தேவையா? நீ என்ன ஆம்பளையா?”. சரி விடுங்க...


* மெட்ரோ ரயில் திட்டம் என்னமோ ரொம்பவும் பிடிக்கிறது. சென்னையை சுற்றி மிக அற்புதமான திட்டமாக தெரிகிறது. 2015 க்குள் முடியும் என்று சொல்லுகிறார்கள். அது வரை போக்குவரத்து நெரிசல், பள்ளம் மேடு..சகிப்புத்தன்மை நமக்கு வேண்டும்,  இல்லையென்றால் மட்டும்..?! :) சென்னைப்போக்குவரத்து புதுசா என்ன?

* அம்மா ஆட்சி - புதிய பச்சைக்கலர் அம்மா படம் போட்ட மாநகர பேரூந்துகளை கோயம்பேடு பஸ் நிறுத்தத்தில் பார்க்கமுடிந்தது. அர்ஜன்ட்டா ஒரு டவுட்.. அம்மா மாடு, ஆடு எல்லாம் கொடுக்கறாங்களே. .அதுக்கும் பச்சைக்கலர் அடிப்பாங்களா? !  அம்மா வாழ்க. அம்மா நாமம் வாழ்க !  பச்சைக்கலர் பெயின்ட் மேனுஃபேக்சுரர் கோடீஸ்வரர் ஆக !கோடிஸ்வரர் கம்பெனி யில் எனக்கு லட்சங்களில் சம்பளம் கிடைக்கும்படி ஒரு வேலை கிடைக்க. அட, பச்சைக்கலர் நம் வாழ்வியல்பை எங்கோ தூக்கி செல்கிறதே?!

* அலுவலகம் விட்டு வரும் போது மட்டுமே ஏடிஎம் போக நேரம் இருக்கும். 8 - 8.30 மணி வாக்கில் வீட்டுக்கு திரும்பும் போது அப்படியே வேளச்சேரி ஐசிஐசிஐ வங்கிக்கு செல்லுவேன். நான் செல்லும் போதெல்லாம் சொல்லிவைத்தது போல ஏடிஎம் மூடி இருக்கும்.. பணம் நிரப்ப ஒவ்வொரு முறையும் எப்படியும் 20 நிமிஷம் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு முன் , பணம் தீர்ந்துப்போனால் மட்டுமே வந்து நிரப்புவார்கள் என்ற எண்ணம் இருந்தது. ஆனால்  தினப்படி காலையிலிருந்து இரவு வரை பணத்தோடு சென்னையை சுற்றும் டீம் இருப்பதாக புரிந்துக்கொண்டேன். # செக்கியூரிட்டி கொடுத்த தகவல். இது வேலைக்கு ஆகாது என, அப்படியே பொடி நடையாக வந்து ஹெச்.பி பெட்ரோல் பங்க், பாங்க் ஆஃப் பரோடா வில் பணம் எடுத்துக்கொள்வேன்.

* தமிழ்நாட்டில் குல்ஃபி சாப்பிடுவது நின்று போய் பல வருடங்கள் ஆகின்றன. ரொம்பவும் மோசமான பல அனுபவங்களே காரணம்.:(. பைபாஸ் ஹெச்.பி பெட்ரோல் பங்க்; க்கும் அம்மன் கோயிலுக்கும் நடுவில், பஞ்சாப் குல்ஃபி (வண்டி) கடை ஒன்றில் குல்ஃபி ரொம்ப நல்லா இருக்கு.  # உயிரை பணையம் வைத்து கண்டுப்பிடிச்சது.

* ரவுண்டு க்கு முதல்முதலாக சென்ற வாரம் ஒரு கருப்பு பேன்ட் எடுத்தோம். நேற்று போட்டுக்காண்பித்தான், என் குழந்தைக்கு கருப்பு கலர் பேன்ட் ரொம்பவே நன்றாக இருந்தது. அகம் மகிழ்ந்து அவனை சுற்றி சுற்றி வந்து நிறைய போட்டோ எடுத்தேன். கண்ணு வைக்கிறோமே என என் வீட்டுக்காரரிடம் "குழந்தைக்கு அம்மா கண்ணுப்படும் சுத்திப்போடுங்ன்னு சொன்னது தான். "நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு .........  ....................... " வேணாம் வலிக்குது !! இத்தோட நிறுத்திக்குவோம் !!

அணில்குட்டி : கவி= //நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பிசாசு கண்ணு, பன்னி கண்ணு, பரதேசி கண்ணு, ரவுடி கண்ணு, ராங்கி கண்ணு, பிடாரி கண்ணு// உங்களுக்குள்ள இவ்ளோ பேரா...?! சொல்லவே இல்ல.. சரி கடைசியா ..சுத்திப்போட்டுட்டு, உங்க முகத்தில தான் 3 தரம் தூ தூ தூ ன்னு துப்பினாங்கன்னு சொல்லவே இல்ல... மறந்துட்டீங்களாஆஆஆ?????????

பீட்டர் தாத்ஸ் : Sometimes, Your blog is your unedited version of yourself
.
Images :-