Showing posts with label அணில் குட்டி. Show all posts
Showing posts with label அணில் குட்டி. Show all posts

அப்பாடக்கர் ' ரின் டச்சோ டச்சூ....

இத்தனை நாள் வவாச வில் தனியாவே டீ ய ஆத்து ஆத்து ஆத்திக்கிட்டு இருந்தவரு, தீடீர்னு  பெரிய "அப்பாடக்கர்" ஆகிட்டாரு.  ..அதாவது....

இவரு...ஒரு குறும்படம் எடுக்கறேன் 'னு கிட்டத்தட்ட ஒரு வருச காலமாக சொல்லிக்கிட்டு இருந்தாரு...  சரி நிசமாத்தான் எடுக்கறாரு போலன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தா.. இந்தா இன்னைக்கு .. இந்தா நாளைக்கு , இந்தா மறுநாளைக்கு, இந்தா முந்தா நாளைக்கு ரீலிஸ் ’ன்னு சொல்லி சொல்லி,  ஒரு கட்டத்தில் இனி படம் வரும் ஆனா வராது ங்ற ரேஞ்சுக்கு நம்மளை எல்லாம் கொண்டுவந்துட்டாரு..... ஒரு நாள் பாருங்க.. தீடீர்னு, அவருக்கே அவருக்கு தெரியாம படத்தை ரிலீஸ் செய்துட்டாரூஉ....


இந்த வலையுலகம் எத்தனை படங்களை விமர்சித்திருக்கிறது ?  அசிங்க அசிங்கமாக திட்டி இருக்கிறது...?? கேவல கேவலமாக துப்பி இருக்கிறது ?!! ஆனால்...வவாச டீ கடை ஓனர்,  கடலை யின் மொத்த குத்தகைக்கார
விவசாயி என்கிற விவாஜி என்கிற இளா இயக்கிய ”அப்பாடக்கரை ” பற்றி யாருமே எழுதலையே னு இந்த பக்கம் , அதோ அந்த பக்கம், அன்னாந்து பாத்தா கூரை மேல, ஓடிப்போயி தண்ணிக்குள்ளார  எல்லாம் உக்காந்து, உங்க மேல சத்தியமா கவலை எல்லாம் படலைங்க.. ஆனால்ல்ல்ல்ல்ல்,  நாம ஏன் இதை சான்ஸ் ஆ எடுத்துக்கிட்டு, இந்த வலையுலக விமர்சன மகாஜனத்தோட  ஜனமா ஐக்கிய மாகக்கூடாதுன்னு ஒரு ஆஆஆர்ர்ர்ர்ர்வத்தில் அப்பாடக்கரை பார்க்க உக்காந்தேன்..............ரைட்டூஉ................   குறும்படம்னு இல்ல சொன்னாங்க.........?!!
டீடெயில் ஆப்ஃ தி அப்பாடக்கர் க்கு போவோமா ஊர்கோலம் ?!

முதல் டச் :
இந்த படத்தை பார்த்தவுடனே எனக்கு என்னா தோணிச்சின்னா... இயக்குனர்க்கு இன்ஸ்டென்ட் ஆக  ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி” னு பேரு வைக்கலாம். இதுல நடிச்ச அத்தனை பயப்புள்ளைக்கும் ஆள்காட்டி விரலை காட்டி மிரட்டி மிரட்டி சொல்லி கொடுத்து இருப்பாரு போல... அத்தனை பயப்புள்ளையும் நம்மக்கிட்ட மட்டு மரியாதை இல்லாம விரலை காட்டி காட்டி பேசுதுங்க... சரி அதுப்போட்டும்னு பார்த்தா, இயக்குனரும், அவரோட ஆள்காட்டி விரலை ஒரு சீன் ல காட்டிட்டு போக மறக்கல...  இப்படி ஒரு சீன் லையாச்சும் அவரோட படத்தில் அவரு இருக்கனும்னு நினைச்சதால இயக்குனர் ரவிக்குமார் ஐ நினைவுப்படுத்தி ..தனக்குள்ளும் ஒரு ரவிக்குமார் இருப்பதை வெளிப்படுத்தி நம்மை டச்'சிட்டாரு.

இரண்டாவது டச் :

அமெரிக்காவில் படம் புடிச்சாலும் நேட்டிவிட்டி போவவே க்கூடாதுன்னு ரொம்ப பாடுப்பட்டு இருக்காரு... அதுல ஒரு சீனுக்காக.... குளம் குட்டையின் தேடி கண்டுப்பிடிச்சி போயி நின்னு , நம்மூரு பாசையில ......(அதை ஆள்காட்டி விரல் அப்பாசாமி யே டப் பும் செய்து இருக்காரு)   கசங்காத  பொட்டிப்போட்ட டீ சர்ட் டும், லுங்கியும் கட்டிக்கிட்டு பேசறாங்க பாருங்க. .இங்கத்தான் நம்ம இயக்குனர் நிக்கறாரு.. ! எப்படி?????  இயக்குனர் இமயம் பாரதிராஜை வை அப்படியே நம் கண்ணுமுன்னாடி கொண்டாந்து நிக்க வைக்கறாரு... உக்காரவைக்கறாரு... ஏன்சிக்க வைக்கறாரு... ஆக இயக்குனர் பாரதிராஜா' வை டச்சிட்டாருங்கோவ்..

மூணாவது டச் :

கறுப்பு'னு ஒரு பயபுள்ள.. வேல தேடுது தேடுது தேடுது தேடுது.... ... ம்ம்..பாக்கும்போது,....எனக்கெ
ல்லாம் ரத்தக்கண்ணீர் வந்துடுத்து .. வெளியப்போற ரத்தத்ததை சரிக்கட்ட ஒரு கையில ப்ளெட் ஐ ஏத்திக்கிட்டே பாக்கிறேன்...அப்படி ஒரு தேடல்... அந்த தேடலை.. நம்ம இயக்குனர் எப்படி டச்சிங் டச்சிங் ஆ சொல்லி இருக்காரு தெரியுமா??!   கறுப்பு’ வோட மொத்த  ஃப்லீங்சையும் புடிச்சி இழுத்தாந்து அவரு கால்கிட்ட போடறாரு...  காலை மட்டும்... டைட்டிங் டைட்டிங் க்ளோஸபில் காட்டராரு... ..அப்ப நம்ம கண்ணுக்கு தெரியறது யாருன்னு டக்குன்னு சொல்லுங்க.. ஆங்..அவரே தான்.. இயக்குனர் மிஷ்கின்.. :) அடடா.. நம்ம அப்பாசாமிக்குள்ள எத்தனை டச்சிங் டிச்சிங் இயக்குனர்ங்க..இருக்காங்க ..அப்படியே .வாயப்பொளந்துக்கிட்டு...அடுத்த டச்சிங்..க்கு போவோம்......

நாலாவது டச் :

பேச்சிலர் ரூம் செட்டப்... ஆணியே அடிக்கமுடியாத ஒரு ரூமில், எலக்ட்ரிக் மெயின் பாக்ஸ் ஸில் கொடியை கட்டி,அதில கன்னாபின்னான்னு துணிகளை போட்டு வச்சி, ஒரு தலக்காணி கவர் போட்டு, இன்னொன்னு போடாம,  டபரா டம்ளர், டீ கடை நாயர், அவரிடம் வேல செய்யும் சின்னப்பையன் கையி, வாடிக்கா எண்ணெய் பாட்டில், தரையில் உக்காந்து தட்டற கம்பியூட்டர், மானிட்டரில் ஜோ ' னு யதார்தத்தை அங்க அங்க...இங்க இங்க நு அள்ளி தெளி தெளின்னு தெளிச்சி இருக்காரு... .....ம்ம்ம்ம்......இந்த தெளிப்பு எல்லாம் யாரை நமக்கு டச் பண்ணுது ????  ... ஆங் ...அவரே அவரே அவரே தான் இயக்குனர் மகேந்திரன்....... டச்சூஊ...

அஞ்சாவது டச் :
கேமராவும் லைட்டிங்கும் படம் முழுக்க நம்ம கூடவே விடாது கறுப்பாட்டுமே வருது... என்ன மா வளச்சி வளச்சி, மேல , கீழ , இந்தா அந்த சைட்ல, அந்தா இந்த சைட்ல, நடு நடுவுல என்னா ஜூமிங்கு.. அப்புறம்... லாங் ஷாட்டு.. . டைட்டு க்ளோசப்பூ... கைய தனியா,  காலத்தனியா.. மூக்கை தனியா.ன்னு,  .அட மீசைய ஒருத்தர் சீவுவாரு ...  பெல்ட்டு மாட்டறாரு.. . கிராமத்து சீன் ல ...  இந்த கோடியில நின்னு ஒரு ஷாட்...  டீக்கடை நாயரை கூப்பிடற காட்சியில சைட் ல வர லைட்டிங்கு..... ராத்திரி எஃபெக்ட் ப்ர்ஃவெக்ஷன் நு எங்க எல்லாம் கேமரா பேசனுமோ அங்க எல்லாம் கண்டிப்பா பேசல..ங்க ஆனா............ பாட்டா பாடி இருக்கு.....  இது யார் டச்சுன்னு கேட்டீங்க பிச்சிப்புடுவேன் பிச்சி.. .. பிசி ஸ்ரீராமையும் பாலுமகேந்திராவையும் கலந்துக்கட்டி சும்மா சூப்பரா டச்சி இருக்காரு......

ஆறாவது டச்
:
இது தாங்க இந்த படத்துலியே சூப்பர் டூப்பர் காட்சி.....  மாஸ்டர் சூர்யா னு ஒரு அப்பாடக்கர்...  இவரு . ஒரே ஷாட் ல இயக்குனர் சொன்னதை பேசி நடிச்சி இருக்காராம்.....அட நம்பவே முடியல...  இவரு தாங்க படத்தை ச்சும்மா கும்முனு தூக்கி நிறுத்தறாரு.... இவரையும் ஆள்காட்டி விரலை காட்டவச்சிட்டாரு நம்ம இயக்குனர்... இந்த பயப்புள்ள இப்பவே இம்புட்டு ஸ்டைலா இருக்கே.. வருங்காலத்துல எப்படி இருக்குமோஒ? (#லைட்டா பொறாமை.! சரி வுடுங்க தனியா கவனிச்சிக்கலாம்) ...நம்ம இயக்குனர்  இப்படி ஒரே ஒரு காட்சியில் மொத்த படத்தின் க்ளாப்ஸையும் வாங்கிக்கிட்டு போறதால...இயக்குனர் பாக்கியராஜ் ‘ஐ டக்குன்னு நினைவுக்கு கொண்டு வந்து டச்சு டச்சுன்னு டச்சராரு... . ..

ஏழாவது டச்.:

...  வவாச வின் போர்வாள்(ல்)... பவர் வாள்(ல்) எவர் கிரீன் கச்சேரி தேவ் தான் வசனகர்த்தா.. ..........னு...... டைட்டில் ல சொல்றாங்க.. ம்ம்ம்... ஸ்டெடியா, க்ளாசிக்கா .. தெரிஞ்சாலும் நடு நடுவில் ரேண்டி பேசற வசனங்கள் சிலதில் பஞ்ச்சிங் பஞ்சிங்...”தண்ணி அடிக்கும் போது பேசற வசனம்.... ..  குளக்கரையில் பேசும் வசனம் நு சிலது எல்லாம் டச்சிங் டச்சிங்.. . தேவ் அண்ணாச்சியின் மைக் பிடிச்சா நிறுத்தாத பேச்சு தெரிஞ்சதாலோ என்னமோ... வசனாகர்த்தாவின் கைகள் ரொம்பவும் இறுக்கமாக கட்டப்பட்டு விட்டதோ ????????? அப்படீங்கறா சந்தேகம் எழாமல் இல்லை. அப்பாடக்கர் இயக்குனர் "ஆள்காட்டி விரல் அப்பாசாமி" தான் விளக்கம் அளிக்கோனும்...

எட்டாவது டச் :

மியூஜிக்... ஆரம்பமே அசத்தல்... கொஞ்சம் நடுவிலே டவுனு... திரும்ப.. கொஞ்சம் ஏத்தம்.. திரும்ப கொஞ்சம் டவுனு.. மொத்தத்தில்... பல இடங்களில் ஏத்தம்.. சில இடங்களில் சரிவு.. நடு நடுவுல  ச்சிசுவேசன் சாங்கு.போட்டு இருக்காரே ஆகாகஹாக..அதுல தான்  டச்சிங் டச்சிங்கு.. மியூஜிக் க்கும் இயக்குனரே போல...  அதனால் அதுக்கும் ஒரு டச்சிங் சேர்த்து மொத்தம் 3 டச்சிங் கொடுக்கலாம்..... எக்கச்சக்க மியூஜிக் இயக்கனருங்க வந்துட்டாங்க..அதனால இவரை இப்பத்திக்கு தேவா வோட புள்ள ஒருத்தர் இருப்பாரே அவரோட டச்சலாம்... :))) ( அணிலு இதுக்காக மட்டுமே இயக்குனர் இந்தியா வரும்போது இருக்குடீஈஈ)

எட்டாவது டச் :

இது குறும்படம் நு சொல்ற நெடும் படமாக இருந்தாலும்... ஓவராத்தான் ஒரு வருசமா உழைச்சி இருக்காங்க..  ரேண்டி'னு ஒருத்தர் வராரு... அடடா... அடா அடா ஆ படம் முழுக்க இவரோட நடிப்பூ... ஃப்பூ னு ஊதி தள்ளி இருக்காரு..... குடுத்த காசுக்கு மேலாள "நான் இருக்கேன்" நான் இருக்கேன்னு" ...கூவி கூவி நடிச்சி இருக்காரு...அடுத்து 'எட்டாம் அறிவு' னு ஒரு படம் எடுத்தா இவரைத்தான் ஹூரோவா ப்போட நானு ரெக்கமண்டு செய்வேன்... (என்ன கொஞ்சம் கிட்டக்க வந்து கையை நீட்டி பேசறப்போ, யோவ் இனிமே நீ கைய நீட்டின... கடிச்சி துப்பிடுவேன்.. நு சொல்லனும் போல மனசுக்குள்ள தோணிச்சி.. இதையெல்லாம் வெளியில சொல்ல முடியுமா சொல்லுங்க..) அப்புறம் கறுப்பு.....  வவாச த்து சிங்கம் ஒன்னு மூஞ்சி அச்சு அசலா இதே மாதிரி இருக்கும்..அதுவும் இப்ப இதே மாதிரி தாடி மீசை வச்சிக்கிட்டு சுத்துது...அது யார்னு சங்கத்து சிங்கங்களே மூஞ்சிய பாத்து பாத்து கடிச்சிக்கட்டும்... இவரு.. = நேச்சுரல்  நல்லாவே நடிச்சி இருக்காரு.. அப்புறம் நம்ம லிட்டில் அப்பாடக்கர் சூர்யா..  .. சொல்லனுமா என்ன? டச்சோ டச்சூஊ....

ஒன்பதாவது டச் :

இதுல சில ப்ளஸ் சஸ், கொஞ்சம் மைனஸ் சஸ்ஸ டச்சலாம்...  . ஒரு காட்சி நடக்கும் போது..சைட்ல பொட்டிப்போட்டு பின்னாடி நடப்பதை காட்டியது.. ரெசியூம் திருத்துவது, கூகுல் சர்ச் பண்றது.... மொபைல் ரிங் ஆகும் சீனு, பெல்ட் போடும் சீனு, (அது யாரு சீனு நு கேட்டா தலை மேல நறுக் குன்னு கொட்டுவேன்...) தலையில புத்தகத்தை கவுத்துப்போட்டு கையை அசைக்கும் சீனு, சூர்யாவின் நேம் போர்ட்... என ....சில காட்சிகள் சபாஷ்.. போட்டு நம்மை நிசமாவே டச்சுகிறது

படிக்கட் சீன்.. அப்பாடக்கரு... அப்பாடக்கர் வேல பார்த்து இருப்பது தெரியது..... டப்பிங் சில இடங்களில் சோம்பேரியா பின்னாடி வருது... இன்ட்ரவியூ போகும் சீனில் பின்னால் அமெரிக்க வண்டிகள், ரூம்களில் அமெரிக்க வாசனை னு லைட்டா அமெரிக்க மைனஸ் டச்சிங்ஸ் இருக்கு.. அதிகமாக இல்லாமல் இருக்க முயற்சித்த இயக்கனரின் திறமை டச்சிங் டச்சிங் ..


10 ஆவது டச் :

வேற என்னவா இருக்கும்... சொந்த புராணம் தான்... ஒரு வழியா அப்பாடக்கர் விமர்சனத்தை எழுதியாச்சி...  இனி... நானும் ஒரு வலையுலக விமர்சகர்..னு பேர் வாங்கிடுவேன்.. எளக்கியவாதி, முற்போக்கு, பிற்போக்குவாதி முக்கியவியாதி, முனுகியவியாதி ன்னு ஏதோ ஒரு பட்டம் எனக்கு கொடுக்கப்படும்னு நினைச்சாவே.... டச் டச் டச் டச் சிங்கா தான் இருக்கு....... அதுக்காகவே படம் எடுத்த இயக்குனர் ”ஆள்காட்டி விரல் அப்பாசாமி அப்பாடக்கர் - க்கு ஒரு கும்பிடு போட்டுக்கிட்டு எஸ் ஆகறேன்.... .

இதே போல நீங்களும் வந்து அவரை டச்சிட்டு மட்டும் போவாதீங்க.... நல்லா கொட்டி, தட்டி , திட்டிட்டும் போங்க.. ஹி ஹி..அப்பத்தானே எனக்கு பொழுது ப்போகும்...


இப்படிக்கு வலையுலக விமர்சகர் வரிசையில் இடம்பிடிக்க தவியா தவிக்கும்  உங்களின் -
அணில் குட்டி ! அணில் குட்டி !.அணில் குட்டி ! (இது எக்கோ) )
.

NRI கொசுத்தொல்லைகள்

ஆன்சைட்’க்கு ஒரு மாசமோ,  இரண்டு மாசமோ  இல்ல ஒரு வருசம்னே வச்சிக்கோங்களேன், அமெரிக்கா போவாங்க. ஆனா வந்தப்பிறகு இவங்க பண்ற அலும்பு இருக்கே. இதுல அங்கவே செட்டில் ஆகிற நம்ம மக்கள் போடற சீன் இருக்கே ஸ்ஸ்யப்பா முடியாது.

* ஏதோ 3-4 வருஷத்துக்கு ஒரு தரம் வாராங்களே, நம்ம சொந்தமாச்சே, நமக்கு இருக்க வேலைகளுக்கு நடுவில்  இப்ப பார்க்காட்டா  இதுக்கு அப்புறம் எப்ப பார்க்க முடியுமோன்னு, இவங்களை அதுவும் சென்னை ட்ராஃபிக்ல அடி உதை குத்து எல்லாம் வாங்கி பார்க்கப்போனால்.. என்னமோ இவங்கக்கிட்ட நாம் ஒன்னுமே இல்லாம பிச்ச எடுக்க வந்த ரேஞ்சிக்கு பேச ஆரம்பிப்பாங்க... ”கவிதா , வரும் போது நிறைய க்கொண்டு வந்தேன்.. ஆனா பாரு நீ வரத்துக்குள்ள எல்லாம் காலியா போச்சி, அடுத்த முறை வரும் போது எடுத்துக்கிட்டு வரேன்”

இல்ல நாங்க கேட்டோமா? கேக்காமயே ஏன் இந்த பில்டப்பூ?   என்னமோ இவங்க கொண்டு வந்து கொடுக்கற 4 ரூ சோப்பும், 10 ரூ செண்டும் இல்லாம நம்ம வாழ்க்கையை ஓட்டவே முடியாதுப்பாரு...?!  தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்க எல்லாம் அமெரிக்கா போயிட்டா இந்தியாவே பிச்சை எடுக்குதுன்னு நினைச்சிக்குவீங்களா?

* அமெரிக்கா போயிட்டு வந்தாவே பீட்டரே தனி பீட்டர்த்தான்.. . இங்க இருக்கவரைக்கும் தெருவை ரோடு ந்னு சொல்றவங்க அங்கப்போயிட்டு வந்தா பார்க்கனுமே.. “லேன்” ந்னு சொல்லுவாங்க..இந்த ஊர்ல எங்க "லேன்" இருக்கு?  இது பரவாயில்லை,   வார்த்தைக்கு வார்த்த பிரிஃபிக்ஸ் ஆக "ஆசம்...ஆசம்" ன்னு சேர்த்துக்கிட்டு படம் காட்டுவாங்கு... பாருங்க..

அவங்க "ஆசம்" ன்னு சொல்லும் போது.. "ச்சீ.... நீங்க ரொம்ப "மோசம்" ன்னு   காது "சோசம்" ஆகிற அளவு விளாசனும் போல இருக்கும்......... 

* அடுத்து, பார்க்கும் எல்லாத்தையும் அமெரிக்காவோட ஒப்பிட்டு பேசுவாங்க.. பாருங்க. .அப்படியே கொமட்டுலேயே குத்தனும் போல இருக்கும். ! அங்க எல்லாம் இப்படி இல்ல.. ஏன் இந்தியா இன்னும் அப்படியே இருக்கு... .நான் போனப்ப இருந்ததை விட ரொம்ப மோசமா இருக்கு.. ஏன் இப்படி எச்சி த்துப்பறாங்க.. ஏன் இப்படி குப்பை கொட்டறாங்க.. ஹோ...... நோ பவர்.....அங்க எல்லாம் சான்ஸே இல்லத்தெரியுமா........ கொசு கடிச்சி ப்பாரு. முகமெல்லாம் எபப்டி இருக்குன்னு ?! யூநோ.. .அங்கெல்லாம் இன்ஸெக்ட்ஸே ஃப்ரீ... ந்னு கொடுக்கற பில்டப் இருக்கே..

ம்ம்ம் அப்புறம் ???!  உங்க பரம்பரையே அமெரிக்கா அதிபராவே இருந்தவங்களா... ? சொல்லவே இல்ல? !


* ஆண்களை விடுங்க..இந்த பொண்ணுங்க போனால், தலை அலங்காரம் முதல்ல மாறும். பின்னலோ, குதிரைவாலோ போயி எப்பவும் ஃப்ரி ஹேர் தான். அப்புறம் உடைகள் மேல கொஞ்சம் குறையும், கீழக்கொஞ்சம் ஏறும். கேட்டா எங்க பரம்பரையில் இப்படித்தான் நாங்க ட்ரஸ் செய்வோம்னு ரேஞ்சுக்கு சீன் போடுவாங்க.

இங்க முகத்தில் எண்ணெய் வடிய அருக்காணி சடைப்போட்டுக்கிட்டு மூக்கு ஒழிகினது எல்லாம் மறந்தே போச்சா அம்மணிங்களா?.

* அடுத்து கடன், ஒரு வேள வெளிநாட்டில் இருந்து வரவங்கள குறிவைத்தே எல்லோரும் பணம் கேட்பாங்களானு தெரியல..நாம சாதாரணமாக பேசிக்கிட்டு இருக்கும் போதே அவங்களோட சொத்துக்கணக்கு எல்லாம் சொல்லுவாங்க. அமெரிக்காவில் இருந்தாலும் நான் பிச்சைக்காரன் ரேஞ்சிக்கு சொல்லி, நாம அவங்கக்கிட்ட பணம் கேட்காத அளவு நம்மை மனதளவில் தயார்படுத்துவாங்க..  எல்லா பில்டப் பும் முடிஞ்சி, "உனக்கு எதாது ஹெல்ப் வேணும்னா என்னைய கேளூஊஊ கண்டிப்பா செய்வேன்னு "  சொல்லி முடிப்பாங்க.

அது எப்படிங்க? இதெல்லாம் அமெரிக்கா போனா தானா வருமா.?. இல்ல அங்க ஏதாச்சும் இதுக்குன்னு தனியா க்ளாஸ் நடத்தறாங்களா??


*அடுத்து புள்ளைங்கக்கிட்ட தமிழ்ல பேசவே மாட்டாங்க. நம்மக்கிட்ட தமிழ்ல பேசுவாங்க..நடுவுல புள்ளைங்க வந்தா அவங்கக்கிட்ட ஒரே பீட்டர் தான். ஏன்ப்பா தமிழ் சொல்லி த்தரலியான்னு கேட்டா.. கொன்ச் கொன்ச் த்ரியும்.. ஆனா இங்கிலீஷ் நா ஈசியா புரிஞ்சிக்குவாங்க..அதனால் இங்கிலீஷ்லியே பேசிடுவோம் நு சொல்லுவாங்க. புள்ளைங்க நம்ம என்னவோ வேற்று கிரகத்து ஆட்களை பார்ப்பது போல மேலும் கீழும் பார்க்கும். சரி நாமும் குழந்தைங்கக்கிட்ட பேசி வைப்போம்னு.. அதான் தமிழ் தெரியாதே... Hai I am your Chitthi / Athai.... means..your mom;s younger sister/ your dad's younger sister" னு சொன்னாப்போதும்.. ஒரு மாதிரி வினோதமாக ”ஹாய்...சித்தி../அத்த....  இட்ஸ் கிரேட்.. டு சி யூ.. ஹே.. யூ கேரியான்.. மீத் யூ லேத்தர்.. ” ந்னு நாலு வார்த்தைக்கு மேல பேசமுடியாமல் ஓடி போயிடுவாங்க.  

சொந்தக்காரங்க வருவாங்க. .எல்லாம் பக்கி பனாதிங்க.. .அதுங்க க்கிட்ட நின்னு பேசாத ன்னு சொல்லியே கூட்டுட்டு வருவாங்களோ?

* அடுத்து டைம் ஸோன் பிரச்சனை. வந்து ஒரு 1 வாரத்திலிருந்து 10 நாளாவது, இவங்க அர்த்த ராத்திரியில் எழுந்து நடமாடுவாங்க. டிவி ய வச்சிக்கிட்டு பார்க்கிறது... கண்ட நேரத்தில் சாப்பிடறதுன்னு ஒரு மார்க்கமாவே இருப்பாங்க... .தனியா இருக்காங்களேன்னு பாவம் பார்த்து நாமும் கூட சேர்ந்து முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருந்தா............ சரி செய்யறோமேன்னு இல்லாம.. அமெரிக்கா மொக்கைய ஆரம்பிச்சி ... ராத்திரி பொழுதையும் நிம்மதியா விட்டுவைக்க மாட்டாங்க..

இங்க இருக்க கொசுத்தொல்லை இல்லாம அமெரிக்காவிலிருந்த வந்த கொசு ..இங்க இருக்கறதையாச்சும். அடிச்சே கொல்லலாம்..ஆனா இதுங்கல... ?! 

* கடைசியா இந்த ஆசம் அமெரிக்க மாப்பிள்ளைகள். ஒரு வீட்டுல நாலு மாப்பிள்ளை இருந்தாலும், அதுல ஒரே ஒருத்தர் அமெரிக்காவில் இருந்துட்டா போதும்.. அடடடா டாஆ.... முடியாதுடா சாமி.. ! :) இவரு தான் அந்த குடும்பத்தையே அமெரிக்கா போயி உசத்திட்டத்தா நினைச்சிக்குவாரு.. அதிகம் பேசமாட்டாரு.... அடுத்தவங்க எது பேசினாலும். .ஒரு கிரேட் ஸ்மைல் பண்ணுவாரு.... என்ன சொன்னாலும் டவுன் டு எர்த் ஆ இருப்பாரு.....எல்லா இடத்திலும் முக்காப்பேண்ட்ஐ போட்டுக்கிட்டு சுத்துவாரு, . ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆ காமிச்சிக்குவாரு...  நம்ம மக்களோ இங்க இருக்க உள்நாட்டு மூணு மாப்பிள்ளைய மாட்டைவிட கேவலமா மதிப்பாங்க.. ஆனா இவரை விழுந்து விழுந்து கவனிப்பாங்க...

பேசாமயே ...கிரேட் ஸமைலியோடயே..வந்த வேலைய முடிச்சிட்டு அமெரிக்கா பேரைச்சொல்லி எவ்ளோ கறக்க முடியுமோ கறந்துட்டு  கிளம்பிடுவாரு.... :)) இவரு தான் இருக்கறதிலேயே ரெம்ப நல்லவரு...

===========

இளா எழுதிய  NRI கொசுத்தொல்லைகள் பதிவை அச்சு அசலாக காப்பி செய்து எழுதியது. :). அவரிடம் ப்ர்மிஷன் கேட்டு (ஒரு வருசம் முடிஞ்சி இருக்குமோ?) மெயில் அனுப்பிய போது.. .எவ்ளோ திட்டிக்கனுமோ திட்டிக்கோங்கன்னு பெரிய மனசோட பர்மிஷன் கொடுத்தாரு. நன்றி இளா.

அணில் குட்டி : எச்சூச்சுமி கவி.. உங்க புள்ள  ஜிஆர்ஈ..எழுதிட்டாரு.. ட்டோஃபல் எழுதப்போறாரு...  .... இதெல்லாம் எதுக்கு ?! ...ச்ச்சும்மா ஒரு இன்ஃபோ க்கு கேட்டேன்.. ...  அப்புறம் இன்னொரு மேட்டரு கேக்கனும்.. சத்தமா கேட்டா உங்கள எல்லாரும் கல்லால அடிப்பாங்க. .காதக்கொடுங்க. .ரகசியமா கேக்கறேன்.. "உங்க புள்ளைக்கு தமிழ் படிக்கத்தெரியுமா? "   (மக்கா நீங்களும் கவிதா காதை  இழுத்து இதே கேள்வி ய கேட்டுட்டு போவீங்களாம்)

பீட்டர் தாத்ஸ் :  Patience when teased is often transformed into rage

நிலா வந்தாச்சி.. அணில் குட்டி வந்தாச்சி... :)

ஈரமான ரோஜாவே
ராத்திரி மயபேஞ்சி இருக்கும்...

என்னை பார்த்து மூடாதே
.டேய் யானை மண்டையா...நான் என்ன டப்பாவா மூட?

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
அட சொன்னதையே சொல்லிக்கிட்டு...
 

 கண்ணில் என்ன சோகம் 
வேணாம்...வலிக்குது.. விட்ரு..

போதும் ஏங்காதே
அழுதுடுவேன்...

என் அன்பே ஏங்காதே (2)
டேய் பேசி தீத்துக்கலாம்... .அம்பு கொம்பு ன்னு கிட்ட வராத..

என்னை பார்த்து ஒரு மேகம்
உன்னையெல்லாம் பாக்கறதே தப்பு... இதுல...

ஜன்னல் சாத்தி விட்டு போகும்
மூச்சி முட்டி சாவவா?
. .. ..
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
டாய் நிறுத்திக்கோ முடியல...

உன் வாசலில் எனை கோலம் இடு
நீ வாங்கற 5க்கும் 10க்கும் இது தேவையா?

இல்லை என்றால் ஒரு சாபம் இடு
நாசமாஆஆஆஆஆ போக... !! கேட்டு வாங்கறான் பாரு ....

பொன்னாரமே...
அட அது ஆரூஊஊ?

தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
கண்டுப்பிடிச்சிட்டார்டா.. கண்ணதாசன்....

என்னோடு நீ பாடிவா சிந்து
நானே அதிகம்.. இதுல சிந்து வேறையா...

ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
.. .. சொல்ல சொல்ல.... டோண்ட் மேக் மீ ஆங்ரி..

நேரம் கூடி வந்த வேலை
பனக்கொட்ட தலையா... கூடி வந்து கொட்டினாங்களாடா?

நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
பார்ரா பார்ரா... இவரு பெரிய இமாலய வீரர்...

நேரம் கூடி வந்த வேலை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
 இந்தா... நிப்பாட்டு ! 
 

என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
சாவூஊஊ

கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
டாஸ்மாக் கை குத்தகைக்கு எடுத்திட்டியா?

என் காதலி...
ஹய்யோ அம்மே அது நானில்ல..

உன் போல என்னாசை தூங்காது ராணி
மாத்தரை ய போடறா வென்று...  தூக்கம் வரலியாம்.....

தண்ணீரில் தள்ளாடுதே தோனி
ஏண்டா... தோனி  ய ஏண்டா நடுவுல இழுக்கற .

ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
ஓ... இது அம்மணி......பாடு சாந்தா பாடு.. ..

கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ம்ம்ம்ம்  ...காதலிக்கறாங்களாமாம்ம்ம்ம்ம் !

Note : Copied from a Radio program.

இன்றைய....
அட ! : என்னைப்போலவே ஒரு பெண் என் கூட பஸ் ல வராங்க.. நான் பார்க்கதப்ப அவங்களும்,அவங்க பார்க்காதப்ப நானும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். 95% என்னைப்போலவே..  அட! :). இன்னைக்கும் அப்படியே.. அவங்க முகத்தை கம்பி மறைக்க, எட்டி பார்த்தேன்... அவங்களும்.. ! :) சட்டென்று இருவரும் பின்வாங்கினோம்... :) எனக்கென்னவோ என்னைவிட அவள் என்னை அதிகம் பார்ப்பதாக தோணுது..

அடச்சே ! : அரசம்ப்பட்டி ஆனந்த் முதல்.. அமெரிக்கா இளா’ வரை.. எளிதாக பயன்படுத்தும் வார்த்தை #$#%த்தா. !  # எங்கிருந்தாலும் தமிழன் டா !

மயிலு...ஆத்தா ஆடு வளத்தா...

என்னோட ரவுண்டு குட்டியோட டெஸ்க்டாப், பப்ளிக் ப்ரொஃபைல் படங்கள் எல்லாமே ஒரு மார்கமாக, டெரராக இருக்கும். அதாவது, பார்த்தாவே முகம் சுளிக்க வைக்கும் ஸ்கல், எலும்புக்கூடு, வாயை பிளந்து, நாக்கு தள்ளி, கண்கள் பிதுங்கி இருக்கும் விகாரமான அனிமேடட் படங்கள், அசிங்கமான ஆங்கில வாசகங்கள் கொண்ட படங்கள், விதவிதமான வானரங்கள் அல்லது எல்லாவற்றையும் மிஞ்சும் அவனுடைய புகைப்படம் என்று பார்த்தவே பயங்கரமாக இருக்கும்.

நேற்று அதிசயமாக, ஒரு மயில் தோகை விரித்து ஆடும் படம் வைத்திருந்தான். நம்ம புத்தி என்னைக்கு நல்லா இருந்து இருக்கு, உடனே என் மண்டை குடைய ஆரம்பித்தது. என் புள்ளைக்குள் ஏதாவது மாற்றம் வந்துடுத்தோன்னு, பக்கத்தில் போயி உட்கார்ந்து நைய நையான்னு புடுங்க ஆரம்பித்தேன்.

"என்னடா அதிசயம் மயில் படம் போட்டு இருக்க... என்ன மேட்டர்?"

"உனக்கு புரியாது மதர்... "

"புரியும் சொல்லு.".

"இல்ல மதர்.. அது பீட்டர் ல சொல்லனும், சொன்னா உனக்கு புரியாது.."

"நீ முதல்ல சொல்லு. .புரியுதா புரியாம இருக்கான்னு பார்க்கலாம்.."

"இல்ல மதர். விடு, .உனக்கு புரியாது.. அதை பீட்டர் ல தான் சொல்ல முடியும்.. பீட்டர் உனக்கு புரியாது.."

"அட..சொல்லுடா. .ஒரு வேள உனக்கே தெரியாதோ. .தெரியாதத பீட்டர் பீட்டர் னு சொல்றியோ. .சொல்லித்தொலடா"

"உனக்கு ஏன் இப்படி மண்டை கொடையுது.? ".

"இல்ல நீ சொல்லாம நான் விட மாட்டேன். .நீ இந்த மாதிரி படம் எல்லாம் வச்சிக்க மாட்ட, எனக்கு காரணம் சொல்லு..."

"ஏன்ன்ன்ன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க. .போய் தொல"

"மாட்டேன். .சொல்லு போறேன்.."

"சரி உன் அறிவுக்கு எட்டுதான்னு பாரு. .இது ஒரு 3 டைமன்ஷன் ...  உனக்கு என்ன  தெரியுது ன்னு பார்த்து சொல்லு..."

"..........................(ரொம்பவும் கூர்ந்து கவனித்து -தேவையா????? )   எனக்கு ஒரு லேடி கோல்ட் கலர் துப்பட்டாவை கழுத்தில் மாட்டி நிற்கற மாதிரி இருக்கு... ம்ம்ம்ம்ம்.......சரியா.."

"ஹி ஹி......... இல்ல.."

"............. இல்லையா..?  (திருப்பி ஒரு கூர்ந்து) இண்டியானா ஜோன்ஸ் ல ஒரு கிரிஸ்டல் ஸ்கல் வருமே.. அது மாதிரி இருக்கு....'

"ஹா ஹா ஹா. .இல்லவே இல்ல.."

"......... கிர்ர்ர்ர்ர்ர்... ((திருப்பி திருப்பி...கூர்ந்து) ஒரு ரவுண்டு.. அதை உற்று பார்த்துக்கிட்டே வந்தா ஒரு புள்ளியா போயிக்கிட்டே இருக்கு உள்ள... "

"ஹா ஹா ஹா ஹா. .அம்மா ஆனாலும் நீ இருக்க.. பாரு. .நானு என்ன சொன்னேன் 3 டைமன்ஷன் தானே சொன்னேன்.. 3 இமேஜ் தெரியுதுன்னா சொன்னேன்.. . :)))) , அப்பவே சொன்னேன் கேட்டியா உனக்கு பீட்டர் புரியாதுன்னு 3 டைமன்ஷன்னு சொன்னதே உனக்கு புரியல.. :)) கிளம்பு..."

"..............?????? அப்ப நீயே சொல்லு உனக்கு என்ன தெரியுது.."

"ரூம் ல "tron ledacy" படம் பார்க்க போனப்ப ஒரு 3D கண்ணாடி கொடுத்தான் அதை போட்டு பார்த்து சொல்லு.."

அவன் ரூமுக்கு போயி அதை தேடி கண்டுப்பிடிச்சி கொண்டுவந்து போட்டு பார்த்தால்..................................... (ஒரு மண்ணும் தெரியல... :(()

"டேய்.. ஒன்னுமே தெரியலடா.. எனக்கு மயில் தாண்டா தெரியுது.."


"ஹா ஹா ஹா. .ஆமா மயில பார்த்தா மயில் தான் தெரியும்.. பின்ன வேற என்ன தெரியுமாம்..??"

" :(( அப்ப 3 டைம்னஷன் அது இதுன்னு சொன்ன??? "

"ச்ச்சும்மா..டைம் பாஸ்... :))))))) ரொம்ப சின்சியரா... கண்ணாடி எல்லாம் போட்டுட்டு வந்து பாக்கற..."

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........7 1/2 ....புள்ளையாடா நீனு..???"

"ஒழுங்கா ஒன்னும் இல்லன்னு சொன்னா நீ போகமாட்ட.. அதான்..கொஞ்சம் அலைய விட்டேன். .இப்ப ஓடி போன்னு சொன்னா..ஓடிப் போவதானே.. ??? :))))))))))

" :((((( ம்ம்ம்ம்ம்.....போறேன்.......... "

***********

இன்னைக்கு பார்க்கிறேன்.. ஒரு டைகர்..படம் இருக்க.. ... "

"ஹை.. என் இம்சை தாங்காம மாத்திட்டியா.. ???"

தலையில் அடித்துக்கொள்கிறான்.. "ஏன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க... ?? அது ஆட்டோமேடிக் ம்மா...தினம் மாறிக்கிட்டே இருக்கும்.. !!"

*****************

அணில் குட்டி அனிதா : ஹி ஹி..இதெல்லாம் ஒரு மேட்டரா அம்மணிக்கு????? எப்பவும் போல தொடச்சி விட்டுக்குவாங்க..!! விடுங்க விடுங்க..  !!

அப்பாளிக்கா மயில பத்தி சொல்லி.. நம்ம ப்ளாக் மயில் சொந்தக்காரங்களை  மறக்கலாமா ???? மயிலு ஆன்ட்டி வூட்டுக்காரு ராம் அங்கிள் & பொண்ணு பப்பு  பாப்பாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள்... அவங்களுக்கு ஹாப்பி ஹாப்பி பர்த் டே....சொல்லிக்கிறேன்...!

பீட்டர் தாத்ஸ் : “It requires a very unusual mind to undertake the analysis of the obvious.”

படங்கள் நன்றி கூகுல்.
.

ஏன்ன்ன்ன்ன் இப்படி?

கவி : GM

சிபி :  AC

கவி : AC ன்னா?

சிபி: நீங்க General Manager ன்னு சொன்னீங்க.. இல்ல, நானு Associate Consultant ன்னு சொன்னேன்.. 

கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

****************
கவி : காலை வணக்கம்

சந்தோஷ் : யார் காலை தொட்டு வணக்கம் சொல்றீங்க..

கவி: ஞே.....!.
***************
 ஸ்டேடஸ் மெஸேஜ் - "அகம் பிரம்மாஸ்மி"

குசும்பர் : "அகம் பிரம்மாஸ்மி " ன்னா என்னங்க அர்த்தம்

கவி : நானே கடவுள் ன்னு அர்த்தம் ..........

குசும்பர் : கருமம் !!

கவி : ஹல்ல்லோஒ நானா வந்து கேக்க சொன்னேன்.. கேட்டுட்டு என்ன கருமம் ன்னு சொல்றீங்க?!

குசும்பர் : அதே தான் !! வந்து கேட்டேன் பாருங்க.. என்னை சொல்லிக்கிட்டேன் "கருமம்" ன்னு ...

*********************
எஸ்.எம்.எஸ்

சிபி : உங்க கதை சூப்பர் ! அந்த ஹூரோ கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு பிடிச்சிது, நெக்ஸ்ட் எப்ப தொடரும்?

கவி : இந்த மெசேஜ் யாருக்கு?

சிபி : அட உங்களுக்கு தாங்க. .உங்க கதை புக் ல வந்து இருக்கு இல்ல, அதுக்கு கமெண்டு ங்க..

கவி : கமெண்டு...??? அதுவும் எஸ் எம் எஸ் ல..????! கதைய படிச்சீங்களா? அதுல ஹூரோவே இல்ல

சிபி : ஹோ ஹீரோ இல்லையா ...ஏங்க கதைன்ன ஒரு கரு இருக்கனுமே .. அது தாங்க ஹூரோ.. அதை சொன்னேன்..

கவி :   :((((( சிபி வேணாம்.....

********************
கவி : தாலாட்டு பாட்டு பாடி வச்சி இருக்கேன். இனியன் தூங்கலன்னு சொன்னீங்க இல்ல, அனுப்பறேன்.

குசும்பர் : அவ்வ்வ்... நோ மர்டர் வெறி பாவம் சின்ன குழந்தை...

கவி : ஹல்லோ, என் புள்ள என் பாட்டை கேட்டுத்தான் தூங்குவான்

குசும்பர் : ரைட்டு! இப்ப புரியுது ஏன் இப்படி கருப்பா ஆனான் தம்பின்னு !

கவி:  ...இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், பாட்டு பாடறத்துக்கும் கருப்புக்கும் என்ன சம்பந்தம்??

குசும்பர் : வாங்க வாங்க..இதுக்காகத்தான் வெயிட்டிங், உங்க பாட்டு கேட்பது கரண்டு ஒயரை புடிப்பதுக்கு சமம். அப்படி கரண்டு ஒயர புடிச்சா என்ன ஆவோம்??

கவி : அய்ய அய்ய அய்ய.ன்ஏ...

குசும்பர் : ஏங்க தினம் தேடி வந்து பல்பு வாங்கிட்டு போறீங்க...?!!

*******************

கவி : எதிர்ல வந்த பொண்ணை பாத்தியாடா?

நவீன் : ம்ம் ம்ம் பாத்தேன்..

கவி : அதானே...!! அந்த மாதிரி பொண்ணை பாத்துத்தான் உனக்கு கல்யாணம் செய்ய போறேன்..

நவீன் : அய்யோஓஒ...யம்மாஆஆஆ ஏன்ம்மா...சரியான கன்ட்ரி ஃபிகர், நான் வீட்டை விட்டு ஓடிடுவேன்....

கவி : ஹை நிஜம்மாவா? .சரி நீ ஒடு, நான் உன்னை துரத்தி பிடிக்கிறேன்.. .. ஓடிப்பிடிச்சி விளையாடி ரொம்ப வருஷம் ஆச்சிடா..

நவீன் : அம்மாஆஆஆ. .ஐம் சிரீயஸ்..

கவி : அட நான் கூட சீரியஸ் தாண்டா. .நிஜம்மாவே ரொம்ப வருஷமா ஓடிப்பிடிச்சி விளையாடலடா... :((

நவீன் : கிர்ர்ர்ர்ர்... :(
 *****************

சந்தோஷ் : கார் வாங்கினா நேனோ வாங்குங்க.. நல்ல மூவிங் ல இருக்கு..

கவி : நவீனா சந்தோஷ் நம்மளை நேனோ வாங்க சொல்றாங்கடா...

நவீன் : நீ மட்டும் நேனோ வாங்கின.. நம்மவீட்டு ரேஷன் கார்டல என் பேர் இருக்காது சொல்லிட்டேன் !!!.

கவி :  ஹை ஜாலி.... இது தெரிஞ்சி தான் சந்தோஷ் சொல்லி இருக்காங்க போல  .:))  இரு தாங்ஸ் சொல்லிட்டு வரேன்..!!

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. !!
***********

நவீன் : யம்மா உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன், என் ரூமுக்கு வந்து நோண்டாதன்னு.. இங்க என்ன பண்ற நீ.. போ வெளிய.....ம்ம்ம்.. போ....

கவி : .......................

நவீன் : உன்னைத்தாம்மா.. .காது கேக்கல. .வெளியில போ....

கவி: .........................

நவீன்:.. எஸ்கியூஸ்மீ... கேன் யூ ஹியர் மீ, நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்....வெளியில போ...

கவி : எனக்கு தமிழ், இங்லீஷ் எதுவும் தெரியாது.. I know only French.!!

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!



பொங்கலு பொங்கலு வைக்க.....கட்டைய கட்டைய எடு...

வாங்கோ... வாங்கோ..முதல் பதிவு அதுவுமா..கவி பொங்கல் வச்சி போடப்போறாங்கன்னு யாராச்சும் ஓடியாந்து இருந்தா.. ஹி ஹி ஹி.. உங்களுக்கு எல்லாம் அல்வா தான்......

தமிழ்மணத்துல ஸ்டார் ஆன குஷியில.. அம்மணி சில உண்மைகளை மறைச்சி, ஓவரா சீன் போட்டு அவங்கள பெரிய ஆளா காட்டிக்க ஆசைப்பட்டாங்க..அது தெரிஞ்சும் நானு விடலாமா? ம்ம்ம் அதே...! விடப்பிடாது..ன்னு அவங்க வாயை பெரிய துணியால அடச்சி, கைய, கால கட்டிப்போட்டுட்டு... அந்த உண்மைய உங்கக்கிட்ட சொல்லிட்டு, முதல் பதிவையும் நானே எழுதிடலாம்னு அவசர அவசரமா ஓடியாந்தேன்......

ஆமா மக்கா.. ஆமா.. !!. இந்த ஸ்டார் பதிவ ஆரம்பிச்சி வைக்கப்போறது... "உங்களின் அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய பாரதிராஜா.." ச்சே.ச்சே.....ஒரு ஃப்ளோல வந்துடுத்து..,,அப்படியே குடு குடுன்னு பின்னாடி ஓடி போயி.. பாரதிராஜா வை அழிச்சிட்டு... "அணில் குட்டி அனிதா.. " ன்னு மாத்திக்கோங்க...ரெடி ஆல் ?!! நவ் ஸ்டார் தி மீயூஜிக்......

இப்ப நாம.. மேல தலைப்பிலிருந்து ஆரம்பிக்கலாம்... ஏன் பொங்கலு...? .இது கூட நான் சொல்லனுமா.. இம்புட்டு வருஷமா பார்வைகள் பதிவை படிக்கறீங்க, அம்மணிய பத்தி உங்களுக்கு தெரியாத மேட்டரா..???. ஆன்ன்னா.. ஊன்னா. கொஞ்சம் கூட கூச்சப்படாம ஓவரா சவுண்டு விட்டு, பொங்கி பொங்கலாகி சீன் போடறதை தன் முழு நேர தொழிலா வச்சி இந்த ப்ளாக்'ஐ நடத்தறதால, இந்த தலைப்பு அவங்களுக்கு ரெம்ப ரெம்ப சூட் ஆகும்னு வச்சேன்... கூடவே...கட்டை எதுக்குன்னா..அவங்க முதல் முதல்ல பொங்கனப்பவே .. யாராச்சும் ஒருத்தர், கட்டையால அவங்க தல மேல ஒன்னு போட்டு.. ஓடிப் போன்னு சொல்லி இருந்தீங்கன்னா.. இந்த நிலைம எனக்கும் உங்களுக்கும் வந்து இருக்குமா??? ம்ம்ம் விதி யார விட்டுச்சி...

இத நினைச்சி நினைச்சி..... இன்னொரு தரம் ..இத நினைச்சி நினைச்சி.. அப்பாளிக்கா  நாம எல்லாருமா சேர்ந்து ஒக்காந்து கோரஸ்ஸா ஒப்பாரி வைக்கலாம்.. .ok.. டீல்....! ஆனாலும் நீங்க எல்லாம் ரெம்ப பாவம் இல்லையா... ஒப்பாரி முடிஞ்சவுடனே.. போனா போகுதுன்னு.. சுந்தர்ஜி வூட்டுக்காரம்மா ஆடின "பொங்கலு" பாட்டை இலவசமா போட்டு காட்டறேன், பாத்துட்டு போங்க... சரியா...

இப்ப மேட்டருக்கு வரலாம்.. . 2006 ல ஒரு வெட்டி ஆபிசர் ப்ளாக் எழுதறதை பாத்து, அம்மணி பொறாமையில் எப்பவும் போல பொங்கி, உடனே அவசர அவசரமா எழுத ஆரம்பிச்சாங்க.... அப்பத்தான் கதையில் ஒரு டுவிஸ்டு.. அந்த டுவிஸ்டுக்கு பேரு பாலபாரதி.. இவரும் அப்ப செம வெட்டி, யார் ப்ளாக் எழுத வந்தாலும் ஓடியாந்து உதவி பண்றது தான் அண்ணனுக்கு முழு நேர வேல, அம்மணிய தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டதும் அண்ணன் பாலபாரதியின் கைங்கரியம் தான். (நல்லா கவனிங்க....யாராவது அம்மணி மேல கான்டா இருந்தா டார்கட் செய்ய வேண்டிய முதல் ஆள் அவரு தான்.. ), சரி சேர்த்துவிட்டதோட அவரு வேல முடிஞ்சி போச்சி..ஆனா அம்மணி விட்டாங்களா? விடலையே.....

என்னமோ தன்னை ஒரு எழுத்தாளர் திலகம் னு அவங்களே நினைச்சிக்கிட்டு எழுத ஆரம்பிச்சாங்க.. நடுவுல நிறைய பேர் தமிழ்மண ஸ்டார் ஆனாங்க. அப்ப எல்லாம் சும்மா இருந்த இவங்க... சூடான்ல இருக்க நம்ம புலி, ஸ்டார் ஆனதும்...பொறுக்கல.... அம்மணிக்கு வயிறு பகபகன்னு எரிய ஆரம்பிச்சது. ... "எப்படி நீங்க ஸ்டார் ஆனிங்க.."ன்னு நைய நைய ன்னு அவரை புடுங்க ஆரம்பிச்சாங்க.. .அவரு எவ்ளோ சொல்லி பாத்தாரு..முடியல...ஒரு ஸ்டேஜ்ல "என்னங்க உங்களுக்கு பிரச்சனை...??. நான் வேணும்னா யார் கிட்டவாவது சொல்லி உங்களை ஸ்டார் ஆக்கறேன், என்னை வுட்ருங்கோன்னு" ஓட ஆரம்பிச்சவரு தான் .... இன்னும் நிக்கல....

இந்த தமிழ்மணக்காரங்களுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னவோ.. தெரியல... வேற யாரோன்னு நினைச்சி இவிங்கள கூப்பிட்டுட்டாங்க போல இருக்கு. மெயில பாத்தவுடனே அம்மணி எப்பவும் போல ஓவரா குதிச்சாங்க..!! ஆனா பாருங்க.. சூடான் புலியோட ஞாபகம் வந்துடுத்து.. ஆஹா.. அந்த மனுஷனை உண்டு இல்லைன்னு ஆக்கினோமே, எங்க நாம ஸ்டார் ஆனா..அவரு இதே கேள்விய திருப்பி கேக்கபோறார்ன்னு... பயந்து போயி, நேரா தமிழ்மணத்துக்கு பெரிய _________ ஆட்டுமா மெயில் அனுப்பினாங்க... "என்னை நீங்கள் ஸ்டார் ஆக தேர்ந்தெடுக்க காரணம் என்னவோ? " அப்படின்னு.. .

அவங்க..உடனே... " ஹாங்....உன்னை எல்லாம் மதிச்சி கூப்பிட்டதே பெரிய விஷயம் ரீசன் வேணுமா ரீசன்.. ..நிக்காத, ஓடிப்போயிடு'ன்னு " ரிப்ளை போட்டுட்டாங்க..

இதை எதிர்பாக்காத அம்மணி...'ஷாக்' ஆகிட்டாங்க.. கையும் ஓடல காலும் ஓடல.. .ஒரு வேள கேள்வி கேட்டு இருக்கப்பிடாதோன்னு ரொம்ப லேட்டா...ஃபீல் பண்ண ஆரம்பிச்சி...யாருக்கும் தெரியாம ஓடி போய் டமால் ன்னு அவங்க கால்'ல விழுந்து.. 'டாடீஈஈ......, மம்மீஈஈஈ........ தெரியாம கேள்வி கேட்டுட்டேன்... தயவுசெய்து மன்னிச்சி , என்னை எழுத வுடுங்க.. இனிமே இப்படி எல்லாம் நடு நடுவுல கேள்வி கேக்கவே மாட்டேன் ன்னு ஒரே அழுவாச்சி.... "

அப்புறம் அவங்களும் பாவம் பாத்து, அந்த கரடி ஞாபகம் இருக்கா..ம்ம்ம்.. ம்ம்ம் அதே தான்!! அது எப்படி புலிக்கேசி மூஞ்சி மேலேயே துப்பிச்சோ..அது மாதிரி துப்பிட்டு... "எழுதித்தொல" ன்னு அம்மணி கையில இந்த ஒரு வாரத்தை கொடுத்து இருக்காங்க... ..இதான் நடந்த மேட்டரு..........

"ஹய்யோ.....யம்மா.... யப்பா....... திமிரிக்கிட்டு அம்மணி என்னை பாத்து பாய வராங்க... மக்காஆஆ....இதுக்கு மேல..இங்க நின்னா.. அவங்க பொங்கறதுல வெந்துபோற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்.. சோஒ........ மேல இருக்கற விஷயத்தை மனசுல வச்சி. மறக்காம. இனிமே நீங்க தான் அம்மணிய நல்லா வாழ்த்திட்டு போவனும் சரியா...!!! . .. நானு வரேன்... சீயூ... சீயூ சீயூ.....பாட்டு பாக்க மறந்துடாதீங்க.... அம்மணி வாயில இருக்கிற துணிய யாராச்சும் எடுத்துவுடுங்க..செத்து கித்து...தொலைக்க போறாங்க.....



பீட்டர் தாத்ஸ் : “To be a star, you must shine your own light, follow your own path, and don't worry about the darkness, for that is when the stars shine brightest”

அணிலு : பீட்டரு .. ஏன் இப்புடி??..முடியல ராசா முடியல... அவ்வ்வ்வ்..!! 
.

தரிக்கிடதாம்..தக்கதிம்... தாம் ததிக்.. தக்க தீம் ததிக்.. தக்க ஜம் ததிக்....

ரொம்ப ஃபீல் பண்ணாத மச்சி. .எல்லாம் சரி ஆகிடும்.. :)



நீ கலக்கு மச்சி.. இன்னொரு சான்ஸ் கிடைக்காது... :)



டான்ஸ் மச்சி டான்ஸ்... தேகோ தேகோ.....



உனக்கு ஏன் மச்சி இந்த வேல...பேசாம அமைதியா உக்காச்சி வேடிக்கை பாக்கலாமே..




அணில் குட்டி அனிதா : அம்மணி காலையிலிருந்து ..தாம் ததிக்... தக்க தீம் ததிக்.. தக்க ஜம் ததிக்.... தக்க தீம் த தீம் தா...ன்னு தவில், மிருந்தங்கம், நாதஸ்வரத்தோட முதல் பாட்டை போட்டுட்டு "நலந்தானா.. ஹேஹே....நலந்தானா" ன்னு ஒரே ஆட்டம் ........ ஸ்ஸ்ஸ்யப்பா முடியல... கீழ் வீட்டுக்காரங்க எப்ப வருவாங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... அவங்க வந்து அம்மணியோட கால ஒடச்சாத்தான் உண்டு...... ஹய்..ஜாலி.. :))))

மக்கா வெயிட்டீஸ்......முதல் பாட்டை முழுசா பாத்துட்டு போங்க... உசுரே போகும் உங்களுக்கு... :))) நாட்டிய பேரொளி......இடுப்பை என்னம்மா வளைக்கறாங்க.....சான்ஸே இல்ல.. இன்னொருத்தர் பிறந்து தான் வரனும்.. !!

பீட்டரு இந்த மொக்கை பதிவை பாத்துக்கூட டென்ஷன் ஆகிற சிலபேரை ரிலாக்ஸ் பண்ணு பாக்கலாம்....

பீட்டர் தாத்ஸ் :“Try to relax and enjoy the crisis.”

செல்லமாவின் கடிதம்

நேற்று நவீனும் நானும் கடைக்கு செல்லலாம் என கிளம்பினோம். தபால் பெட்டியில் ஒரு போஸ்ட் கார்ட், அதுவும் என் கணவரின் பெயருக்கு.. ..போஸ்ட் கார்டில் லெட்டர் போடும் அளவுக்கு அவருக்கு யார் இருக்கா? வென்ற கேள்வியோடு படிக்க ஆரம்பித்தேன்.

செல்லம்மா என்ற பெண், "தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு, எனக்கு கை ஊனம், இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க, ரொம்பவும் வறுமை, அதனால் தீபாவளிக்கு பணமும், துணியும் அனுப்பி வையுங்கள்" என்று எழுதி இருந்தார்கள். சரி விலாசம் இருக்காவென திருப்பி பார்த்தேன். இருந்தது. இப்படிப்பட்ட கடிதம் எல்லாம் என் பெயரில் வந்திருந்தால், வியப்பில்லை, எப்படி அவர் பெயரில் வந்துள்ளது?

நவீனிடம், "குட்டி அப்பாக்கு செல்லம்மா ன்னு ஒருத்தர் லெட்டர் போட்டு இருக்காங்க தீபாவளிக்கு பணம் வேணுமாம். "

நவீன் ":)))))))))) ஓ உன் புருஷனோட செட் அப் ஆ? சொல்லவே இல்ல.? :))) எனக்கு ஒரு 100 ரூ கொடுங்கன்னா கொடுக்க மாட்டறாரு.. யாரோ லெட்டர் எல்லாம் அனுப்பி பணம் கேக்கறாங்க?"

"குடும்பத்துல ஒரு நிரந்தர உறுப்பினரா இருந்துக்கிட்டு, நீயே குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணலாமா? வேணாம்..., திரும்பி வந்து அப்பாக்கு போன் செய்து கேப்போம், ஆனா கேட்டா, என் மேல் ப்ளேட் ஐ அப்படியே திருப்பி போட்டு பதில் சொல்லுவாரு, என்னால தான் உலகத்துக்கே நாம உயிர் வாழறோம்னு தெரியும், ஊர் பூரா நம்ம வீட்டு அட்ரஸை பிரிண்டு போட்டு நான் தான் கொடுத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லுவாரு "..

":)))) அனுபவி தாயே..."

***********
வீட்டுக்கு வந்து, இரவு ஃபோன்..

டிரிங் டிரிங் ட்ரிங்... ஃபோன் ஐ எடுத்துட்டாரு... "ப்பா ..நான் தான் உங்க பொண்டாட்டி சென்னையிலிருந்து பேசறேன்... என்னை தெரியுதா.."

"கிர்ர்ர்ர் தூஊ.. வீட்டு நம்பர் ல இருந்து என் மொபைல் க்கு தானேடி பண்ற.... இதுல என்ன சென்னையிலிருந்து பொண்டாட்ட்ட்ட்ட்ட்ட்டி.. ன்னு,...என்ன சொல்லு.. "

ஹோ மொபைல் ல நம்பர் வருமே.. தேவையில்லாம டயலாக் டெலிவரி பண்றோமோ.. சரி ஜாக்கறதையா பேசனும் இனிமே..

"உங்களுக்கு செல்லம்மா " னு ஒருத்தங்க கிட்ட இருந்து லெட்டர் வந்து இருக்கு"

"................"

"ஹல்லோஓஓ"

"சொல்லித்தொலையேன் கேட்டுக்கிட்டு தானே இருக்கேன். .நடுவுல என்ன ஹல்லோஓ? "

ஒரு படப்படப்பு, பயம் எதுவும் தெரியலியே ....சரி கன்ட்டினியூ பண்ணுவோம் "அவங்க நோயாளியாம், கை இல்லையாம், 2 பெண் குழந்தை இருக்காம், தீபாவளிக்கு துணியும் பணமும் வேணுமாம்"

சொல்லிமுடிக்கல... "இந்த மாதிரி லெட்டர் எல்லாம் உனக்கு தானே வரனும் எனக்கு ஏன் வருது, கர்ணாமகாபிரபு வின் தங்கச்சி யாச்சே நீனு (ஸ்ஸ்ஸ்ப்பா..யாராச்சும் இப்ப உதாரணம் கேட்டாங்களா என்ன?), யார் கிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுத்தடீ ? கண்டவங்க கிட்ட எல்லாம் நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்கறது இல்லாம, என் பேரையும் ஏண்டி சேத்து சொல்ற, உனக்கு எப்பத்தாண்டி அறிவு வளரும்... ஏன்ன்ன்ன்ன்ன் இப்படி இருக்க.. வளரவே மாட்டியா ????

"ப்பா..பொறுமை பொறுமை..இப்ப உங்களுக்கு உடம்பு சரியில்லை...நீங்க இப்படி சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்ஷன் ஆகப்பிடாது........"

"தெரியுதில்ல.. அப்புறம்.. என்ன டேஷ்க்கு இந்த மாதிரி விஷயத்த்க்கு எல்லாம் ஃபோன் பண்ற நீ....

"நோ நோ பேட் வேர்ட்ஸ்... நிஜமாவே யாராச்சும்....."

"லூசே முதல்ல பேசறதை நிறுத்து..........இந்த லெட்டர் பாத்தவுடனே அதை கிழிச்சி குப்பைத்தொட்டியில போடாம, மெனக்கெட்டு எப்படிடீ எனக்கு போன் செய்த?

"நம்ம் வீட்டு ஃபோன் லேர்ந்து தான் ப்பா ஃபோன் செஞ்சேன்..."

"ம்ம்ம்.ஜோக் க்கு.??!! ...... இதுக்கு நாங்க சிரிக்கனும்??!! . ஹி ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன், ஆமா ...புத்திசாலித்தனமா பதில் சொல்றதா உனக்கு நெனப்பாஆ... இத ஒரு விஷயம் னு விசாரிக்கிற...... உனக்கு எத்தனதரம் சொன்னாலும் புரியாதா.................... ........................ ...........................

(சரி இது வேலைக்கு ஆவறது இல்ல..வூட்டுக்காரு க்கு ஓவரா அன்பு பொங்கி வழியுது...... As usual...இதுவும் முட்டு சந்து ஃபோன் கால், நடுவிலும் பேச முடியாது, எப்படியும் 10-15 நிமிஷம் ஆகும் let him continue...............அதுக்குள்ள நான் போயி செல்லம்மா க்கு பதில் கடிதம் எழுதிட்டு வரேன்... சரியா)
***********

அன்புள்ள செல்லமாவிற்கு

உங்கள் கடிதம் கண்டபிறகு , எங்களுக்கும் நிதி உதவி செய்ய ஆள் இருக்கிறார்கள் என்று சந்தோஷமாக இருக்கிறோம். உங்களுக்கு முதலில் எங்களின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

எனக்கு 6 மாதமாக கழுத்து கோனிப்போய் ரொம்ப வேதனையில் அவதிப்படுகிறேன், உங்களை போன்று இரண்டு மகள் இல்லை, அம்மாவின் ஓவர் வாயையும், அப்பாவின் ஓவர் ஓவர் வாயையும் சேர்த்து 3 ஓவர் வாயை கொண்ட ஒரே ஒரு மகன் இருக்கிறான். உங்களுக்காவது தீபாவளி மட்டும் தான். ஆனால் எங்களுக்கு எங்களின் ஓவர் வாயி பையனின் பிறந்தநாளும் வருகிறது. அதனால் உங்களை போன்று ஒரு துணியோடு வேலை முடியாது, 2 துணி அவனுக்கு வாங்கி தரனும், பிறந்தநாள் பரிசு ஒன்னு கொடுக்கனும், இதற்கு எல்லாம் என்ன செய்வது என்று முழி பிதுங்கி இருக்கும் வேலையில் உங்களின் விலாசம் எங்களுக்கு கிடைத்தது. உங்களால் முடிந்த உதவியை இந்த கடிதம் கண்ட மறுவினாடி எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.

இப்படிக்கு
உங்களின் போஸ்ட் கார்ட் நண்பர்
பழம்நீ

ஹைய் இது நல்லா இருக்கே... இப்படி ஒரு 10 பேருக்கு லெட்டர் போட்டா கூட, 2000 ரூபாயாவது மினிமம் கிடைக்கும். முதல்ல போய் போஸ்ட் கார்ட் வாங்கிட்டு வரனும்......ஹய்யோ.. வூட்டுக்காரு ஃபோன் ல இருக்காறே மறந்துட்டேனே........ ..ஓடி போய் ரீசிவரை எடுத்து........

"ஹல்லோஓஒ..."

"என்னடி நடுவுல ஹல்லோ.. குல்லோ ன்னு கிட்டு......"

மனசுக்குள்ள........"ஓ இன்னும் முடிக்கலையா.????...அப்ப சரி..... "


அணில் குட்டி அனிதா: அடப்பாவிகளா.. என்ன குடும்பம்யா இது..? உங்க குடும்பத்தையும் ஒரு குடும்பம்மா மதிச்சி ஒரு பெண் லெட்டர் போட்டா....? அவங்களுக்கு முடிஞ்சா ஹெல்ப் பண்ணனும் இல்லாட்டி விடனும்... இப்படியா அந்த லெட்டரை வச்சி கும்மி அடிப்பீங்க...??? யம்மா செல்லம்மா.... ஊர்ல உனக்கு வேற நல்ல குடும்பம் கிடைக்கலையாம்மா? லெட்டர் போடும் போது குடும்பத்தோட ஹிஸ்டரி ஜியாகரஃபி எல்லாம் கேட்டுட்டு போடும்மா.. பிரச்சனையாக போகுது. விட்டா இவிங்க மூனு பேரும் உன் வீட்டுல வந்து உக்காந்து தீபாவளி கொண்டாடினாலும் ஆச்சரியபடறதுக்கு இல்ல.....

பீட்டர் தாத்ஸ் : “No one told me anything. I don't know what I did. I have to figure it out. It sounds pretty bogus to me.”

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமீஈஈஈஈஈ......

புரட்சி கல்யாணம் என்று எதை சொல்ல வேண்டும்.. ?!

1. வேறு வேறு சாதியினர் திருமணம் செய்துக்கொள்வதா?

2. வேறு வேறு மதத்தினர் திருமணம் செய்துக்கொள்வதா?

3. கணவனை/மனைவியை இழந்தவரை திருமணம் செய்துக்கொள்வதா?

4. விவாகரத்து ஆனா ஆண்/பெண் ஐ திருமணம் செய்துக்கொள்வதா?

5. நோயாளி/உடல் நலம் (ஏதோ ஒரு விதத்தில்) இல்லாத ஆண்/பெண் ஐ திருமணம் செய்து கொள்வதா?

வெயிட்.... நடுவுல ஒரு சின்ன ப்ரேக் * "செய்துக்கொல்வதா" ன்னு கூட படிக்கலாம். உங்க இஷ்டம். இப்ப கன்டிநியூ... பண்ணிக்கோங்க...

6. உடல் ஊனமுற்ற ஆண் /பெண் ஐ திருமணம் செய்துக்கொள்வதா?

7. வயது வித்தியாசம் பார்க்காமல், வயதில் மிகவும் மூத்தவர் அல்லது இளையவரை திருமணம் செய்துக்கொள்வதா?

8. வேற்று நாட்டுக்காரர்களை திருமணம் செய்துக்கொள்வதா?

9. திருநங்கைகளை திருமணம் செய்துக்கொள்வதா?

10. ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்துக்கொள்வதா?

11. குழந்தையோடு இருக்கும் ஆண்/பெண் ணிற்கு நாம சிங்கிளாக இருந்து திருமணம் செய்துக்கொள்வதா?

12. ஆண்/பெண் இரண்டு பேருக்கும் குழந்தை இருந்து, திருமணம் செய்து க்கொள்வதா?

13. கடைசியாக படத்தில் இருக்கிற மாதிரி நாயை திருமணம் செய்துக்கொள்வதா?

இவை எல்லாவற்றையும் தவிர்த்து,

பூ, தாலி, மஞ்சள், குங்குமம், இசை அல்லது கேவலமான சத்தம் (புதுசா இதை இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன் அதான்..), செருப்பு, துடைப்பம், பூங்கொத்து, வரிசை, பாத்திரம், பண்டம், இனிப்பு, வாழை இலை, வாழை மரம், தோரணம், பந்தல், மேடை, ஐயர், நெருப்பு, சொந்தம், நண்பர்கள், பல்லு போன அந்த கால கிழடுகள், மந்திரம், புகை, பூ மாலை, நகை, காலில் மெட்டி, நெத்தில் சுட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், வேஷ்டி, சட்டை, புடவை, உள்ளாடைகள், தலைமுடி, கார், பஸ், சைக்கிள், ரயில், வேன், மாட்டுவண்டி, டூவிலர், (இதுல எல்லாம் கல்யாணத்துக்கு வர பயன்படுத்துவாங்க) இன்னும் எல்லாம்..... ஏன் நடந்து கூட கல்யாணத்துக்கு போகலாம், பெருமாள், சிவன், கணேஷன் (இவங்க எல்லாம் சாமிங்க), லைட், பல்பு, ஃபேன், வடை, பாயசம், அப்பளம், ஐஸ்க்ரீம் (அட நடுவுல இது எல்லாம் ஞாபகம் வந்து போச்சிங்க), மூஞ்சி பாக்கற கண்ணாடி, சீப்பு, பவுடர், வீடு, கல்யாண மண்டபம், கோயில், சினிமா தியேட்டர், சாராயக்கடை, (கல்யாணத்துக்கு வரவங்க நைட் ல சில சமயம் சினிமா போவாங்க, தண்ணி பார்ட்டி கண்டிப்பா இருக்கும் அதுக்காக), தாம்பூலம், பன்னீர், சந்தனம், கல்கண்டு, பேரீச்சம் பழம், அரசமரம், மண்பானை, சட்டிகள், விளக்கு, திரி, எண்ணெய், கோலம், சாணி, கோமியம், தயிர், பால், பிரியாணி, கத்திரிக்காய் குழம்பு, (இஸ்லாமியர் திருமணம் ஒன்றிக்கு போன போது சாப்பிட்டது நினைவுக்கு வந்து போச்சி)..இன்னும் என்னென்னவோ.....

14. இப்படி மேல சொல்லியிருக்க எதுவும் இல்லாம... கல்யாணம் செய்தால் அது புரட்சி கல்யாணம் மா?

மனசாட்சியை வெளியில எடுத்து ஹேங்கர் ல மாட்டிட்டு பதில் சொல்லப்பிடாது, மேல இருக்கறதுல உங்களுக்கு தேவையான ஒரு சிலவற்றை மட்டும் சுயநலமா எடுத்துக்கிட்டு மிச்சத்தை தூக்கி போட்டுட்டு, முடியும் னு சொன்னால் அது நியாயமா தர்மமா நீதியா நேர்மையா? ன்னு நானு குரல் எழுப்புவேன்.

இன்னொன்னு கவனிச்சீங்கன்னா.. ஒரு கல்யாணத்துல எத்தன பேருக்கு வேலை கிடைக்குது? குறிப்பா விழுப்புரம் பக்கத்தில் கோலியனூர் ஒரு இடம் இருக்கு, அங்க தான் குயவர்கள் இருப்பாங்க. கல்யாணத்துக்குன்னு சொல்லிட்டா போதும், அதுக்கு தேவையான செட் அழகா செய்து கொடுப்பாங்க.. அவங்க வயிற்று பிழைப்பே இது தான் :) அதுவும் கல்யாண சீசன்ல தான் நிறைய..

அப்புறம் மியூசிக் ட்ரூப்... இவங்களுக்கு கல்யாணத்துல தான் 90% வருமானம்.

சமையல்காரர்கள்

பந்தல் - இதுல நிறைய மேட்டர் இருக்கு..... அப்புறம் கல்யாணவீட்டு சமையல் செய்ய பாத்திரங்கள், நாற்காலி, பெஞ்ச், லைட் ன்னு தனியா பிஸினஸ் செய்து தன் குடும்பத்தை, புள்ள க்குட்டிகளை காப்பத்தறவங்க இருக்காங்க..

சொல்லிக்கிட்டே போகலாம்... உடனே நீங்க தலைப்பை விட்டுட்டு எதை எதை எல்லாம் நான் விட்டுட்டேன் னு யோசிக்காம..

மேல சொன்ன லிஸ்ட் ல எது "புரட்சி கல்யாணம்" ன்னு தெளிவா சொல்லி என்னோட டவுட் டை க்ளியர் பண்ணிட்டு கிளம்புங்க... அப்புறம் ஒரே ஒரு மெஸேஜ்...

எல்லாத்துக்கும் மேல எந்த கல்யாணமா இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சாலும் புரியாட்டியும் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் செத்தாலும் உயிரோட இருந்தாலும்.... "விட்டுக்கொடுத்து" வாழாட்டி... எப்பேர் பட்ட கல்யாண உறவும் புட்டுக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !! - அப்படின்னு சொல்லி முடிச்சிக்கிறேன்.

அணில் குட்டி அனிதா : இது வேலைக்கு ஆவறது இல்ல.. நான் முதல்ல இடத்தை விட்டு கிளம்பறேன். ...

பீட்டர் தாத்ஸ் : Many people marry for the wrong reasons, among them 1) to overcome loneliness, 2) to escape an unhappy parental home, 3) because they think that everyone is expected to marry, 4) because only "losers" who can't find someone to marry stay single, 5) out of a need to parent, or be parented by another person, 6) because they got pregnant, 7) because "we fell in love," ... and on goes the list.

எனக்கு நீதி வேண்டும்..!!

ஆண்களின் பிடியில் சிக்கி தவிக்கின்ற என்னை போன்ற பெண்களுக்கு, வலையுலக நண்பர்கள் தவிர (ஓசியில் மங்களம்) யார் உதவி செய்வார்கள்? யார் நீதி கொடுப்பார்கள்? அதனால் உங்களிடம் என் பிரச்சனையை மனம் விட்டு சொல்லி, என் வாழ்க்கையை எத்தனை மன உளைச்சளோடு நான் வாழ்ந்து கொண்டு வருகிறேன் என்பதை உங்களுக்கு புரிய வைக்கிறேன். ஒரு பாவப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்!!

வலையுலக பிரச்சனைகள் தவிர்த்து குடும்ப பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு கிடைக்குமா என்று தெரியாவிட்டாலும் , கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்காக என் சார்ந்த முக்கிய தகுதிகள் :

தகுதி 1 : நான் ஒரு பெண் பதிவர்
தகுதி 2 : பிரச்சனை கொடுப்பவர் என்னுடைய ஆண் குழந்தை

பிரச்சனைகள் :

1. நல்லபடியாக பிறக்க எல்லாவிதமான சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும், (அதற்காக மாதமாக இருந்த போது காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடுவே படுத்து ஓய்வு எடுக்காமல் வேலை செய்து இருக்கிறேன்), 9 மாதங்கங்களில் பிறக்காமல், 11 மாதம் வரை வயிற்றின் உள்ளே உட்கார்ந்து கொண்டு, வெளியில் வராமல் இருந்ததால், என் வயிற்றை கத்தி க்கொண்டு வெட்டி/கிழித்து அவனை வெளி கொண்டு வர வேண்டியாகிவிட்டது. இதனால் நான் பட்ட கஷ்டத்திற்கு அளவில்லை, இவன் பிறக்க வேண்டி முதுகு தண்டில் போட்ட ஊசியால், வெகு நேரம் தொடர்ந்து நிற்க முடியாமல், வலியில் இன்று வரை அவதிப்பட்டு வருகிறேன்.

2. சாப்பாடு ஒழுங்காக சாப்பிடாமல் , மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் ஒவ்வொரு முறை உணவு ஊட்டும் போதும் நான் செலவிட வேண்டியதாகி இருந்தது. என் நேரமும், அவனை தூக்கி வைத்துக்கொண்டு ஊட்டியதால், என் உடல் வலியை அவனால் சரிக்கட்ட முடியுமா?

3. எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு வளர்ந்தாலும், வேலைக்கு சென்ற போது, ஆண் பிள்ளையாக அவனின் சேட்டை மிக அதிகமாக இருந்த காரணத்தால், எந்த நேரத்தில் வீட்டில் என்ன செய்து வைப்பானோ, அவனுக்கு என்ன ஆகிவிடுமோ என்று வேலை நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாமல், எந்த நேரமும் இவனை பற்றிய கவலையிலேயே இருந்தேனே! என்னை நிம்மதியில்லாமல், பல வருடங்கள் வைத்துக்கொண்டது இல்லாமல், இப்போதும் அதை தொடர்கிறானே? என் வாழ்க்கையில் ஏன் நான் இவனால் நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும்?

4. எவ்வளவு நன்றாக சமைத்தாலும், ஏதோ பரவாயில்லை என்று சொல்வதோடு இல்லாமல், இத்தனை வருடம் சமைக்கிறாயே, எனக்கு பிடித்த சிக்கன் ரோல், பர்கர், கேக், சிக்கன் பஃப், நாந், இவையெல்லாம் செய்ய தெரியவில்லை என்று என்னை மட்டமாக பேசுவது மட்டும் இல்லாமல், அவற்றை எல்லாம் கற்றுக்கொண்டு, விடியற் காலையில் நான் எழுந்து அவனுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்துகிறானே.. நான் என்ன இவனுக்கு சமையல்க்காரியா? இவனுக்காக என் தூக்கத்தை நான் தியாகம் செய்ய வேண்டுமா?

5. என்னை முடி வெட்ட கூடாது என்றும், அப்படியே மீறி வெட்டினால் வீட்டினுள் சேர்க்க மாட்டேன் என்று மிரட்டுவதும், ஜாக்கெட் பின்புறம் நெக், ரொம்ப டீப் நெக் போடக்கூடாது, அப்படியே போட்டால் தைத்துக்கொடுத்த டெயிலரை (அவங்களும் பெண்) வந்து திட்டுவேன் என்றும், ஜீன்ஸ் பேன்ட் போடக்கூடாது, அப்படி போடவேண்டும் என்றால், 50 கிலோ ஐஸ்வர்யா ராய் மாதிரி ஆனப்பிறகு போடு என்று பீப்பா மாதிரி இருக்கும் என்னை குட்டி பாப்பாவாக மாற சொல்லி என்னால் செய்யவே முடியாத விஷயத்தை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தும் இந்த கொடுமைக்காரனிடமிருந்து எனக்கு விடுதலை கிடைக்காதா?

6. எல்லாவற்றையும் விட கொடுமை, அவன் சாப்பிடும் அளவிற்கு என்னையும் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவதோடு அல்லாமல், என்னால் முடியவில்லை என்று சொன்னால், திட்டி துன்புறுத்தி சாப்பாட்டை திணிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறானே... நான் என்ன அவனுக்கு அடிமையா?

7. உலக நடப்புகளை பார்த்து, இப்போதிலிருந்தே புரட்சி பெண்களிடம் தள்ளி இரு, உனக்கு நம்ம ஊர் பக்கமாக படிக்காத இரட்டை சடை போட்ட அருக்காணியாக பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன், அப்போது தான் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று சொன்னால் கேட்காமல், சட்டை செய்யாமல், வூட்டுக்காரோடு போய் செட்டில் ஆகிற வழியை பார், என் விருப்படிப்படி தான் திருமணம் செய்து க்கொள்வேன், ஃபியூச்சரில், என் பொண்டாட்டி சமைத்து போடாவிட்டால், உன்னை அழைத்துக்கொண்டு போய் என்னுடன் வைத்துக்கொள்வேன், மரியாதையாக சமைத்து போடு என்கிறான். இவனுக்கு சமைத்து போடுவதே தண்டம் என்று நினைக்கும் வேலையில், எதிர்காலத்தில் இவன் மனைவிக்கும் சேர்த்து என்னை வேலை வாங்க இப்போதே திட்டம் தீட்டி வருகிறான் என்பதை இந்த சபையினருக்கு தெரிவித்து கொள்கிறேன். காலம் பூராவும் இவனுக்கும் இவன் குடும்பத்திற்கும் சமைத்துப்போட நான் என்ன இவன் வீட்டு வேலைக்காரியா? இல்லை எனக்கு ஆயுள் தண்டைனையா?

8. இத்தோடு நிற்காமல், என்னுடைய ப்ரசனல் விஷயத்திலும் அத்து மீறுகிறான், என் கணவருடன் நான் தனியாக சினிமா,பீச், ஷாப்பிங் என்று எங்கேயும் போகக்கூடாது என்று தடைவிதிக்கிறான். கேரளாவிற்கு டூர் சென்ற போது ஃபோன் செய்து "அவரோட(என் சொந்த வூட்டுக்காரோட) நீ தனியாக ஊர் சுத்தின என்று தெரிந்தது, உன்னை என்ன செய்வேன் என்றே எனக்கு தெரியாது" என்று மிரட்டுகிறான். என் தனிப்பட்ட சுதந்திரத்தில் இவன் எப்படி தலையிடலாம்.? எப்படி மிரட்டலாம்?

9. இதை எல்லாவற்றையும் விட நான் சொல்கின்ற பேச்சை கேட்காமல், உடை அணிந்து என் மானத்தை வாங்குகிறான். அதாவது, உள் ஆடைக்கு (ஜட்டி) கீழ் பேன்ட் போடுகிறான், ஏண்டா இப்படி? அசிங்கமா இருக்குடா ? ன்னு சொன்னால், "இது நியூ ஸ்டைல், நீ ஒரு கன்ட்ரி உனக்கு தெரியாது, வாயை மூடு" என்கிறான், இப்படி அவன் உடுத்தினால், எத்தனை இளம் பெண்களின் கவனம் சிதறும்?! ஒரு பெண்ணாக என்னால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தினம் இதனால் இவனோடு பெரிய சண்டையாக இருக்கிறது. சண்டை போட்டு கத்தும் போது, தொண்டை மிகவும் வலிக்கிறது என்பது கூடுதல் தகவல். !

10. இதை தவிர்த்து தினமும் இவன் பிறந்தது முதல் இவன் துணியை நானே துவைத்து போட வேண்டியுள்ளது. (எப்போதுமெ எங்கள் வீட்டில் வேலையாள் எதற்கும் இல்லை), அவன் சாப்பிட்ட பாத்திரங்கள், அவன் சாப்பிட நான் சமைத்த பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் நானே கழுவி வைக்க வேண்டியாக உள்ளது, தன் வேலையை அவனாக செய்ய வேண்டும் என்று பழக்கப்படுத்த அழைத்தால், இது எல்லாம் உன் வேலை, வீட்டில் சும்மாக படுத்து தூங்கிக்கொண்டு தானே இருக்கிறாய்? என்று கேட்டு, என்னை ஒரு டிப்பிக்கல் பெண் ஐ போல் நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படி இன்னும் பல பல கொடுமைகள் அவன் செய்து வருவதால், எனக்கு நீதி கேட்கிறேன். இப்படி ஒருவனிடம் சிக்கி என் வாழ்க்கையில் நான் இழந்த நிம்மதியை மீட்டு தர கேட்கிறேன். முதலில் நார்மலாக பிறக்காமல் சிசேரியன் செய்ய வைத்ததன் உள்நோக்கம் என்ன என்பதை கேட்டு சொல்ல கேட்கிறேன். ஒரு அம்மா என்றால் எல்லாவற்றையும் பொறுத்து போக வேண்டுமா என்ன? நான் என்ன இவனின் அடிமையா? இன்னமும் நான் அடிமையாக த்தான் என் வாழ்க்கையை தொடர வேண்டுமா? எனக்கு நியாயம் வேண்டும். எனக்கு நீதி வேண்டும்.. எனக்கு அது வேண்டும்.... இது வேண்டும்.. ..... எல்லாமே வேண்டும் !! ஏன்னா நான் ஒரு பெண்.. !!

ஆன் ரிக்வுஸ்டில் கொடுக்கப்படும் விபரங்கள் : அவன் பிறந்தது பாண்டிசேரி (தமிழ்நாடு இல்லை என்பதை கவனிக்க, இதை வைத்து அவனின் குணம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கணித்து அவனை திட்டலாம்), ஜாதி, அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா.. போன்றோரின் வேலை விபரங்கள், என்னுடைய வயது, படிப்பு, அதர் அன்லிமிடட் குவாலிபிகேஷன் போன்றவையும் தரப்படும், அப்போது தான் என்னை எப்படி அவன் கொடுமைப்படுத்தலாம் என்பதை கேட்க உதவும்.

தயவு செய்து எனக்கு நீதி வழங்க யாராச்சும் ஏற்பாடு செய்யுங்கள் ! நான் ஒரு பெண்ணாக இருப்பதால், நான் என்னவெல்லாம் அவனையும், அவன் அப்பாவையும் கொடுமை செய்கிறேன், செய்தேன், செய்வேன் என்பதை மட்டும் நீங்கள் எல்லாம் கேட்க மாட்டீர்கள் என்பது தெரியும் இருந்தாலும் கேட்க க்கூடாது என்பதை மிக அழுத்தமாக சொல்லிக்கொள்கிறேன்.

அணில் குட்டி அனிதா : ஹா ஹா ஹா ஹா......... இந்த அம்மணி சொல்றதை கேட்டு புள்ளக்கிட்ட மட்டும் யாரும் வந்து எதுவும் கேட்டுடாதீங்க.. துப்பறது மட்டும் இல்ல.... அடிச்சி க்கூட விரட்டுவான்.. .அம்புட்டு கடுப்பல இருக்கான் அம்மணி மேல.. .அப்புறம் உங்க இஷ்டம்..

அப்பாளிக்கா இன்னொரு மேட்டர், அம்மணி சொல்றாங்கனு நம்பி வாயத்தொறந்தீங்க. .உங்க வாயி உங்க முகத்துல இருக்காது.. ஏன்னா... புள்ளையோட அம்மா ஒரு ரவுடி.. ங்கோஓஓஓஒ !! புள்ளைய ஒரு தரம் கீழ் வீட்டில இருக்கிறவரு திட்டினாரு ன்னு போலிஸ் கம்பளென்ட் கொடுத்து உள்ள தள்ளுவேன் மிரட்டினாங்க. .அந்த அளவுக்கு புள்ளன்னா தெருவில் இறங்கி போராடுவாங்க. .அடுத்து ஒரு முறை, ஸ்கூல் ல சைன்ஸ் மிஸ் அடிச்சாங்கன்னு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் க்கிட்ட நேராக போயி கம்பளைட் கொடுத்து மிஸ் க்கு வார்னிங் கொடுத்து வேலை விட்டு தூக்கற அளவு செய்த நல்லவங்க... !! சோ பாத்து நீதி வழங்குங்க... உங்க நன்மைக்கு தான் சொல்றேன்

பீட்டர் தாத்ஸ் : A mother is not a person to lean on, but a person to make leaning unnecessary

Our children are our only hope for the future, but we are their only hope for their present and their future

A family is a little world created by LOVE

அணிலும் மயிலும் - ஒரு பரப்பரப்பு பேட்டி

கேப்பங்கஞ்சி குடிக்க கூப்பிட்ட கவிதா, விஜி அக்கா காம்ப்ளான் வேணும் னு கேக்க, உனக்கு கேப்பங்கஞ்சி யே அதிகம், காம்ளான் வேறயான்னு தொறத்திவிட,

வந்த விஜி அக்காவை விடாம பிடிச்சி, ஒரு ஓரமா கூட்டியாந்து உக்காரவச்சி கேள்வி கேட்டு அவங்க திறமை எல்லாத்தியும் எப்படி நானு வெளியில கொண்டாந்து இருக்கேன் னு பாருங்க மக்கா... இன்னும் அது முடிஞ்ச பாடில்ல..

அணில் : யக்கா மயில்' ங்கறது யாரு க்கா?

எங்க ஆத்தா ஆடு வளர்த்தல, மாடு வளர்த்தலை, மயிலும் வளர்த்தலை, ஆனா மயிலு மாதிரி பொன்னு வளர்த்தலாம்னு ...........( எப்படி முடிக்கறது)
எழுத்தாளர்ன்னா ஒரு பூனைப்பெயர் இருக்கனும்னு வெச்சேன்.. (இது போதும் இந்த அணிலுக்கு..)

அணில் : சுமல்ஜா - தயவு செய்து திருந்துங்கள் ! அப்படின்னு ஒரு பதிவு எழுதி இருக்கீங்களே... ! அவங்களோட எண்ணங்களை அவங்க பதிந்து இருக்கும் போது அதை நீங்க தவறுன்னு சொல்லி திருந்த சொல்லி இருப்பது நியாயமா? இந்த மாதிரி எத்தனை பதிவர்களை நீங்க திருத்தி இருக்கீங்க..?

ம்ம்ம் சகோதரி சுமஜ்லா அவர்கள் சொல்லியதில் எனக்கு உடன்பாடு இல்லாததால் என் வலையில் அதை பதித்தேன். ( அரசியல்வியாதி வாசம் வருதா?? குட்) எனக்கு டீச்சர் வேலை பிடிக்காததால் திருத்த தெரியலை.

அணில்: மிக சமீபத்தில் நீங்க எடுத்த பேட்டியால வலையுலகமே சின்னாபின்னமாகி இருந்திச்சே.. அத பத்தீதீதீதீ உங்களின் கருத்து என்னவோ?

யூ சி அக்சுவலி வாட் ஹேப்பண்ட்..சரி சரி. அது காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதைதான். இப்பத்தான் மீ பேக்குனு எல்லாம் சரியாயிடுச்சே. நெக்ஸ்ட் :))

அணில் : நீங்க எப்ப பாத்தாலும் வலைபதிவர்கள் எழுத்தில் குத்தம் குறை கண்டுபிடிச்சீ சீ சீ... அதை டிரேக்டா கேக்காம.. , இன் டிரேக்டா தாக்கறீங்க (கல்ல்லு சோடா பாட்டில், அழுகின தக்காளி எல்லாம் வீசறதா கேள்விப்பட்டோம்) அதைபத்தி விலாவாரியா சொல்லுங்க?!

இதெல்லாம் உனக்கு மண்டப்பத்தில் யாராச்சும் எழுதி கொடுத்தாங்களா??

அணில் : யக்கா யாரையாச்சும் திட்டனும்னா.. உங்கக்கிட்ட சொன்னா போதுமாமே நீங்க உடனே வினவு அங்கிள் கிட்ட புடுச்சி குடுத்துடுவீங்களாமே. .? உண்மையாக்கா?

பே பே பேப்பே பே .....:))

அணில் : உங்கள கோவை யின் அண்ணபூரணி ன்னு மனசாட்சியே இல்லாம கூப்பிடறாங்களே, நீங்க ஏதாச்சும் ஹோட்டல் நடத்துகிறீர்களா?

ஒரு பத்து லட்சம் தா, நடத்தி காட்டறேன்.


அணில் : யக்கா உங்க ஹோட்டல் வந்து சாப்பிட்டு கை கால் விழுந்து போனவங்க, வாந்தி பேதியில வாரிக்கிட்டு போனவங்கள பத்தி சொல்லுங்க..

அனிலு செல்லம் நீ வாடா கண்ணு முதல் வாய் உனக்குதான்.. ( ரொம்ப ஆடறே).

அணில் : யக்காவ் இது ஒரு ஐசியூ கேள்வி.. நீங்க சென்னை வந்தப்ப, உங்அக் சாப்பாட்டுல விஷம் வச்சி கொல்ல ஏற்பாடு செய்து, அதில் மயிர் இழையில் தப்பிச்சி கோவை க்கு ஓடினீங்க்ளாமே உண்மையாக்கா?

வெளிநாட்டு சதியா இருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா அதற்கு முதல் நாள் நாங்கள் சென்ற சுற்றுலாவில் நடந்த விசயம் எனக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்

அணில்: யாரையாவது தாக்கி எழுதனும்னா, உங்க தலைமையில் ஒரு பெரிய மீட்டிங் அரேஞ் செஞ்சி, பதிவர்களுக்கு , சோறு, தண்ணி எல்லாம் ஊத்திக்கொடுத்து, உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கெஞ்சி கதறுவீங்களாமே அப்படியா?

இதெல்லாம் அரசியல்ல சகஜம் :))

அணில் : யக்க்கோவ்.. நீங்க பேட்டி' ங்கற வார்த்தைய சொன்னாவே எல்லாரும் துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடறாங்களே ஏன்க்கா?

அது பொறாமை அனிலு, :)


அணில் : இத கேக்க எனக்கு வெக்க வெக்கமா இருக்கு... பெண்களின் கவர்ச்சி படம் போட்டு ..ஹி ஹி ஹி... யாரும் பதிவிட்டா, உடனே பொங்கி பொங்கலாகி படத்தை எடுத்தால் தான் பொங்கல் செய்வதை நிறுத்துவேன் னு சொல்றீங்களே.. ஏன்க்கா உங்ககுக்கு இம்புட்டு பொறாமை?

யாரு அப்படி சொன்னாங்க, இந்த மாதிரி புரளி கெளப்பி விடரதே வேலையாப்போச்சு.. ( யாரு போட்டிருக்கா)

அணில் : இதுக்கு மூக்குல டியூப் விட்டு சீரியஸா பதில் சொல்லனும் ஒகே.. பெண்ணியம் - என்றால் என்ன பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்.

அது இந்த அலுமனியம் மாதிரி எதுனா வஸ்துவா இருக்கும். பென்னீயத்தில் குக்கர் அவய்லபிலான்னு பார்க்கனும்)

அணில்: யக்கா நீங்க எழுதற பல போஸ்ட் மண்டபத்தில யாரோ எழுதி கொடுத்து தான் போடறீங்கன்னு பேசிக்கறாங்களே உண்மையாக்கா? நீங்க. உண்மைய சொல்லலன்ன்னா... ரத்தம் கக்கி சாவீங்கன்னு அந்த சிகப்பு சட்டைக்காரன் சொல்ரான் க்கா...

ம்ம் அனிலு நீயாவது கேளு, நான் மட்டமதியானம் வண்டிக்கு பெட்ரோல் போட்டு ரெண்டு கிலோமீட்டர் போயி லைட் எரியாத லைப்ரரியில் வாயில நுழையாத பேரில் தலைப்பு இருக்கும் பொஸ்தக்கமா பார்த்து எடுத்துட்டு வந்து மதியான தூக்கத்தை தியாகம் பண்ணி படிச்சு எழுதி வச்சா, இதுங்க பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க. நம்மள எளக்கியவாதி ஆக ஒரு பய விடமாட்டாங்க போல :)

அணில் : யக்கா நீங்க எழிதினல பிடிச்சது, பிடிக்காதது..

நெசமாத்தான் கேக்கிறையா?? அது இனிமேல் தான் எழுதனும் ( எப்படி ஒரு கவிஞர் மாதிரியே பதில் இருக்குல்ல )

அணில்: யக்கா நீங்க பதிவர்களுக்கு நிக் நேம் வச்சி கூப்பிடறீங்களாமே.. எங்க ஓனர் கவிதா க்கு ஏதாவது பேரு வச்சி இருக்கீங்களா?

அனிலு அது தனியா சொல்றேன்.

அணில்: எப்ப பாத்தாலும், யாரை பாத்தாலும் துப்பறீங்களே... யாராச்சும் டென்ஷன் ஆகி உங்க நாக்கை நறுக்கிட்டா என்ன செய்வீங்க?

இந்த துப்பு சொல்லிக்கொடுத்த குரு அட்ரஸ் கொடுத்து அனுப்புவேன்.


அணில் : ஹி ஹி...நீங்கள் பதிவுலகத்தில் பிரபலமாகத்தான் அடிக்கடி ஓடி ஓடி பேட்டி எடுப்பதும், எல்லோரிட பதிவுகளிலும் ஓடி ஓடி பின்னூட்டம் இட்டும் வருகிறீர்கள் என்று செய்திகள் வந்தவன்னம் உள்ளதே. .இதைப்பத்தி

பிரபலம் என்ற வார்த்தையில் வந்த வினைதான் பேட்டி என்னும் விடை :))) ( சமாளிச்சுட்டேன்) பின்னூட்டம் ஒரு சிலருக்கு மட்டும் இடுவேன், படிக்க நேரம் இருந்து பிடித்திருந்தால் மட்டும்.


அணில்: அடுத்தவங்க உயிரை பத்தி எந்த கவலையுமே இல்லாம சில சமயம் கவிதை ன்னு பேரு வச்சி ஏதோ எழுதி பஸ் ல ஏத்தறீங்களே.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

ஹெஹெஹ் மனிதர் உணர்ந்து கொள்ள அது மனிதக்கவிதை அல்ல. அதையும் தாண்டி சுட்டது.


அணில்: யார் உங்களை எவ்வளோ திட்டினாலும், துடைச்சி விட்டுக்கிட்டு திரும்பி எப்பவும் போல சிரிக்கறீங்களே உங்களுக்கு இந்த சூடு, சுரணை எதுவும் இல்லையா?

வேற வழி, உன் ஓனரோட எல்லாம் ஒரு வருசமா பழகினா அப்படித்தான்

அணில்: கடைசியா ஒரே ஒரு கேள்வி - உங்க வூட்டுக்கார் பத்தி 10 வரிகள் மிகாமல் சிறு குறிப்பு வரஞ்சிட்டு இடத்தை காலிப்பண்ணுங்க. .நாங்க கழுவி விடனும்.. .

கம்ப்யூட்டரில் இங்க் தீர்ந்து போச்சு :)))

.

அணில் குட்டி'யின் - "இந்தியன் கைஸ்" (Indian Guys)

You want this Indian guy

வேண்டாம் உன்

சிகிரெட்டில் கறுத்த உதடுகள்

I¢ll not be our Indian guy,

நீ தானே

கவிதை கன்றாவிகள்

You want this Indian guy,

நீ தானே

நான் தேடும் Indian guy

I¢ll not be our Indian guy, சாக்கடை தமிழில்


All over the world bring it down,
bring it down guy, guy, bring it
down, bring it down guy, guy, bring
it down bring it down guy, guy
All over the world I loved to beat my
Indian guys

சாக்கடை தமிழில், முறுக்கிய மீசை குரங்கா
black Indian curls

So stinky in the jeans pants country
Indian guys
Rockin¢ product

பான்பாரக் போட்டு கறைபிடித்த பல்லா !

my city Indian guys
Would u love me when I am too ugly?

சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?

Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)

[Anil kutty]


உன்னோட தண்ணீ நாத்தத்தில் எனக்கு குமட்டுதே.

still I
love them Indian guy

உன் கெட்ட மூச்சி வாசத்தில் தலையில் வச்ச பூ வாடிவதங்கி போச்சே

ஆணுக்கு என்ன பஞ்சம் மண்ணுமேல என்றாலும் உன்

போல எருமை இல்லையே சொல்லுடா,

கருப்புக்கு பாடம் சொல்லி கொடுத்தவனே

கையிலே பாட்டாலோடு உன் கண்றாவி போஸ்,

வர வர உனக்கு வால் முளைக்குது..!!

please don’t touch me

காலேஜ் ரவுடி காக்காத காக்கி யூனிஃபார்ம்
பாத்தாலே பயம்தரும் பக்கி பனாதி
அந்த ஒருவன் அவன் யாரோ
இந்த ஊரில் எங்கும் இருக்கானே..


இந்த மனசில் தோன்றத சொன்னா

கவி வீட்டுக்கு ஆட்டோ வருமே..


[Anilkutty]


All over the world I loved to beat my
Indian guy

நாத்தன் பிடிச்ச ஜீன்ஸ் பேண்டு அழகா

with
black Indian curls

So stinky in the jeans pants country
Indian guys

Rockin’ product குரங்கு புத்தி காரா
my city Indian guys

Would u love me when I look too ugly?

சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?


Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)

[Anilkutty]


கைய கட்டி கொஞ்ச நேரம்

நில்லு, Burn ஆகி உன்னை அடிக்க நினைக்கும் காரணத்தை கேளு

காரணத்தை கேளு

கொஞ்சம் காரணத்தை கேளு


காரணம் கேட்காவிட்டால் உன் தலை மட்டும் மிஞ்சும்

மத்தவை எல்லாம் பிய்யும்..

ஆடாம நில்லு அடி வாங்கும் போது

ஓடாதே நில்லு, உதவ யாரும் இல்ல லூசே

முன்ன ஒழங்கா வந்துடு, உதைக்கறதை இன்னும் வாங்கிக்கோ என் எருமையே, என்னை என்றும் இன்றும் மனதால் தீண்ட நினைக்காதே

சோம்பேறி, நா…தமிழா, எனபசலம் இன்னும் ஒரு தடவை
என் எதிரில் நடந்து கடந்து செல்

தாங்கமுடியாது என் அடி தொல்லை தான்

என்ன செய்யறது உன் முகம் பூராவும்

அடிச்ச அடியில் வீங்கி, புடைத்து இருந்தாலும்

அடிக்க பிடிக்கும் உன் கண்ணை நோண்ட பிடிக்கும்

அடிவாங்கிய உன் உடம்பு நடுங்குவதை பார்க்க

கரஞ்சுபோகுது like ice-cream புத்தி


மறுத்தும், பல மடங்கு மனசு சுகமாய்
தேடுதே ஒரு கட்டைய என் கை

சீக்கிரம் வா இன்று உன் மூக்கு மேல் மூன்னூரு

தையில் போட வைக்கிறேன்..


[Guy]

அடி ஆத்தாடீஈஈஈஈ... என் இளவயசுக்கு இதுக்குமேல முடியல

என்ன வுட்டுடும்ம்மாஆஆஆ,,,,,,,,,,,,

அடி அம்மாடிஈஈஈஈ... இந்த அல்லக்கை மனசுல

நீ சத்தியமா் இல்லம்மாஆஆஆஆ..
உயிரோடு விளையாடாதே..

விட்டுடும்மாஆஆஆ......

சில நேரங்களில் சில மனிதர்கள் - 2

கவிதா : தாத்தா ச்சும்மாஆ கும்முன்னு வாசனை வருது..சிக்கன் குழம்ப்பா? சாப்பிட வரவா.. ?

வாட்ச்மேன் தாத்தா : ஆமாம் ...சிக்கன் குழம்பு தான்...

கவிதா : சிக்கன் குழம்பு வைக்கும் போதெல்லாம் கேக்கறேனே... சாப்பிட கூப்பிடவே மாட்டறீங்க..டேஸ்ட் பண்ண க்கூட கொடுக்க மாட்டேங்கறீங்க..

வாட்ச்மேன் தாத்தா: ஆமா.. கொடுக்க மாட்டேன். .உனக்கு கொடுத்துட்டு நான் என்னத்த சாப்பிட. .ஒத்த ஆளு, வாரத்திற்கு ஒரு நாள், கால் கிலோ வாங்கியாந்து சமைக்கிறேன்.. 4-5 துண்டு த்தான் போடறான். .மதியம் ராத்திரி 2 வேளைக்கு வச்சிக்குவேன்... அத்த உனக்கு கொடுக்க சொல்றியா... போம்மா...

கவிதா : ம்ம்ம்... அப்ப கொடுக்க மாட்டீங்க..

வாட்ச்மேன் தாத்தா: மாட்டேன்... அதான் சொல்லிட்டேன் இல்ல...

*****************
கவிதா : உங்க பேரு என்ன..?

குப்பம்மா : என் பேராம்மா முனியம்மா ...

கவிதா : அவங்க குப்பம்மான்னு சொன்னாங்களே...

குப்பம்மான்னு சொன்னவங்க : என்னம்மா நீனு. என் மாமியாரு பேரு முனியம்மா.. எப்படி மாமியாரை பேரை சொல்லி கூப்பிடறது (நாங்க எல்லாம் ஆதி அந்தம் னு பேரு வச்சி கூப்பிட்டவங்க. .எங்கக்கிட்ட இப்படி ஒரு டயலாக் கா? நாடு ரொம்பவே முன்னேறனும்..!!) அதான் நான் குப்பம்மா ன்னு வச்சிட்டேன்..

கவிதா : அம்மா நீங்க சொல்லுங்க உங்க பேரு முனி' யா? குப்பு' வா?

முனியம்மா : ........ (வெட்கம் வெட்கம் வெட்கம்.. ஆஹா அந்த 60 வயதை நெருங்கும் பாட்டியை நேரில் பார்த்து இருந்தால் மட்டுமே ரசித்து இருக்க முடியும்..)..என் பேரு.. .என் பேரு.. முனியம்மா கிருஷ்ணன்... ஹி ஹி ஹி... :)))) :) )

கவிதா : அட இந்த வயசிலும் வெக்கத்த பாரு. !!! .அது யாரு.. கிருஷ்ணன்..?

முனியம்மா : ஹி ஹி.. என்னோட ஹஸ்ஸு...பண்டு.... !!

கவிதா : ஆஹா பீட்டரூ......?!! ம்ம்ம்ம் ம்ம்.....ம்ம்!! :))))))

முனியம்மா : தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க.ம்மா.... எனக்கு இங்லீச்சு தெரியாது..

கவிதா : இல்ல முனி...நீங்க சரியா தான் சொன்னீங்க... ரொம்பவே சரியா சொன்னீங்க.. தப்பே இல்ல.. :)))

*******************************
ஜிம் மில் வியர்வை வடிய பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... (வியர்வையின் மேலேயே) ஜிம் தோழி நான் எதிர்பார்க்காத போது தீடிரென்று வந்து கன்னத்தில் முத்தமிடுகிறார்.

கவிதா : அவ்வ்வ்வ்வ்வ்.. whaaatttt happen yaar ?!! ..

தோழி : I love you kavitha ..............

கவிதா : :)))))))))))))))))) Thanks... Thanks for the kiss... :))))))))))) I didnt expect this... !!! Thanks !!

************************************
லேடிஸ் மீட்டிங்..சிட் சேட்.. :)

லேடி 1 : உங்கள எப்படி உங்க வீட்டுல கூப்பிடிடறாரு...

லெடி 2 : "வாசு..." (வா...சூ ....சூ.. சூ.!!.... இது நானு...)

லேடி 2 : பவன் வீட்டில....

லேடி 1 : " மஞ்சு......(ம ஞ்....சூ சூ சூ...!!. இது நானு...)

லேடி 2 : ஜாய்ஸி வீட்டுல.

லேடி 3 : ஜாய்....(ஜா..ய் அய்ய அய்ய அய்ய..அய்ய.!!........ இது நானு)

லேடி 1 , 2 & 3: உங்கள என்னான்னு கூப்பிடுவாரு..சொல்லுங்க. .நாங்களும் ஓட்டனும் இல்ல... :(

கவிதா : அதானே எங்க வீட்டில என்னை எப்படி கூப்பிடுவாங்க.. ?..........அவ்வ்வ்்...... !! (ரொம்ப நேரம் யோசித்தும் தெரியவில்லை...:((((((( ) இத்தனை வருஷத்தில் என்னை எங்க வூட்டுக்காரு பேரு சொல்லி கூப்பிட்டதே இல்லை...!! :(((((((((((((((

லேடி 2 : நிஜம்மாவா... பேரு சொல்லி கூப்பிட்டது இல்லையா...

கவிதா : :((( ஆம்ம்மா ..நீங்க கேட்டவுடனே தான் தெரியுது... என்னை அவரு ஒரு தரம் கூட பேரு சொல்லி கூப்பிட்டதே இல்ல... :((((

லேடி 2 : அப்ப எப்படித்தான் கூப்பிடறாரு...

கவிதா : .....ம்மா. ...ஏம்மா வாம்மா போம்மா... ன்னு தான்........... :(( :))
(ஒரு வேளை ஓவர் மரியாதையா இருக்குமோ..????. ஹி ஹி.. மனசாட்சியே இல்லையா உனக்கு... ன்னு நானே என்னை கேட்டுட்டேன்..அதனால நீங்க யாரும் டென்ஜன் ஆகாதீங்க... . !! )

**************************

தோழி 1 - தோழி 2 விடம் -(அட்வைஸ் ஸாம்) எதையாவது நினைச்சிக்கிட்டு குழப்பிக்காதீங்க. .ஒன்னும் நடக்காது.. கவலப்படாம ஜாலி யா என்ஜாய்... பண்ணுங்க.. உம் முன்னு இருக்காதீங்க..

தோழி 2 : சே சே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல..நான் உம் னு எல்லாம் இருக்கவே முடியாது... அதான் கவிதா வந்தாச்சே.. அவங்கள பாத்தாவே ஜாலி மூட் வந்துடும்....

கவிதா : .............(ஞே... !!) :))))))))))))))

தோழி 1 : ஓ பிசாசு வந்தாச்சா.ஆ..... ?!!

கவிதா : அடிங்... பொறாம பிடிச்சவளே. ..ஓடி போயிடு. .உன் மூஞ்சிய பாத்து யாராச்சும் இப்படி உன் வாழ்க்கையில சொல்லி இருக்காங்களா?.. அதுக்கெல்லாம் முகராசி ன்னு ஒன்னு வேணும்டீ..ஈஈ.!!

தோழி 1 : :))))) ஆரம்பிச்சிட்டியா.. முடியல..போ..போற வரைக்கும் பேச்சை நிறுத்த மாட்ட.. பேசு பேசு....தலை எழுத்து கேக்கறேன்... ... !!

தோழி 2 : :))))))))))))))

*******************************************
கவிதா : நீங்க ரொம்ப நல்லா ஏரொபிக் செய்யறீங்க ப்பா... செம சூப்பர் !! ஆமா உங்க பேரு என்ன?

மீனாகுமாரி : ஓ ரியலி. தாங்ஸ் !!!! மீனாகுமாரி.

வரலா : அய்யோ..அய்யோ... அவங்க உங்களை ஓட்டறாங்க மீனாகுமாரி.. புரியலையா உங்களுக்கு ?!!

மீனாகுமாரி.. : ஓ.. :(((( .... .அப்ப நான் சரியா செய்யலையா..?!! :((((

கவிதா : சே சே... யாரு சொன்னா? நீங்க சூப்பரா செய்யறீங்க. .இவங்க ஒன்னு சொல்லி கொடுக்கறாங்க. .நீங்க அதை வேற மாதிரி செய்யறப்ப.. .நாங்க தினமும் நீயூ நீயூ ஸ்டெப் கத்துக்கறோம் இல்லையா. .சோ யூ ஆர் டீச்சிங் அஸ் நீயூ ஸ்டெப்ஸ் ..... யூ ஆர் ரியலி டூயிங் வெல் . !! :)

மீனாகுமாரி.. : அட ஆமாம் .. ஐம் டீச்சிங் நியூ ஸ்டெப்ஸ்.. எஸ் ஐயம் சூப்பர்..!!

வரலா : (என்னைப்பாத்து)....தூஊஊஊஊ !!

மீனாகுமாரி கிளம்பும் போது கவிதா எங்க எங்க ன்னு தேடுகிறார்......."ஹே கவி.. ஐம் லீவிங்.. பை பை.... "

கவிதா : ...யா..பை பை... நாளைக்கும் சூப்பரா செய்யங்கப்பா... ..!! :))) வீ லேர்ன் நியூ ஸ்டெப்ஸ்..!! ஒகே.. !!

ஜிம் மேனேஜர் : கவிதா..!! மீனாகுமாரி சேர்ந்து 2 டேஸ் தான் ஆச்சி அதுக்குள்ள உங்களை தேடறாங்க....அவங்களையும் விட்டு வைக்கலையா? ..

வரலா : (திரும்பவும்..என்னைப்பார்த்து). தூஊஊஊஊஊஊஊ !!!

கவிதா : துப்பிட்ட இல்ல... போ ..வேலைய பாரு....!! துப்பி துப்பி உனக்கே போர் அடிக்கல..!! :)))

வரலா : (திரும்பவும்) தூஊஊஊ... !! நீ திருந்தவே மாட்டே... !!

********************
அணில் குட்டி அனிதா : நானும் இப்படி துப்பி துப்பி.... . வாயில எச்சி இல்லாம போனதுதான் மிச்சம் அம்மணி திருந்தின பாடு இல்ல... ம்ஹூம். இன்னும் எத்தன பெரு துப்பப்போறாங்களோ... .ஆனா ஒன்னு. .எத்தன பேரு வந்து எவ்வளவு துப்பினாலும் தொடச்சீஈஈஈஈஈஈ விட்டுட்டுவாங்க........... ...

பீட்டர் தாத்ஸ் : “Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the the universe.”