டிஸ்னி பார்க் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #3

நவீன் அறையிலிருந்து "Noicy Champs " ன் ரயில் நிலையம் 5 நிமிடம் தான். நவீன் சொல்லியபடி டிக்கெட் வாங்கினோம், இங்கு டெல்லி மற்றும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததால், பாரிஸ்ஸின் மெட்ரோ ரயில் ஒன்றும் பெரிய விசயமாக தெரியவில்லை. பாரிஸ் ரயில்களை விடவும் டெல்லி , கொல்கத்தா ரயில்கள் சுத்தமாக இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

நவீன் இருந்த இடத்திலிருந்து பாரிஸின் டிஸ்னி பார்க் , ரயிலில் 16-19 நிமிடங்களில் சென்று விடலாம்.  டிஸ்னி இருக்குமிடம் "Marne-la-Vallee Chessy" அதுவே கடைசி நிறுத்தம்,  நடுவில் இருந்தாலுமே, ரயிலின் உள் உள்ள மானிட்டரிலோ, கதவின் மேல்புறத்திலோ தெரிகின்றன. அதை கவனித்து வந்தாலே சரியான இடத்தில் இறங்கிவிடலாம். 

ரயிலிலிருந்து இறங்கியவுடனே நேர் எதிரில் டிஸ்னி பார்க் தெரிந்தது, அருகில், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களும் இருந்தன. நவீனும் அவன் நண்பர்களும் இங்கு தான் சினிமா பார்க்க வருவார்களாம்.

சுற்றிப்பார்க்க நிறையவே இருந்தன. நேரம் போதவில்லை, பற்றாக்குறைக்கு கால் வலியும் கூடவே. .அத்தோடு,  இந்த Jet-Lag அப்படீன்னு ஒன்னு சொல்றாங்களே.. அதெல்லாம் எங்கப்போச்சின்னே தெரியல.. உடம்பை மிஷின் தனமாக ஓய்வின்றி வேலை செய்யவைக்கும் நிர்பந்தம் இருந்தது. தவிர,  ஏகப்பட்ட பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியாச்சி, உள்ள வந்தாச்சின்னு,  எங்கும் உட்காராமல் சுற்றிப்பார்த்துக்கொண்டே இருந்தோம். சின்னக்குழந்தை போல என் கணவர் எல்லாவற்றையும் ரசித்து, மகிழ்ந்தார்.

என்னால் தான் எதையுமே சந்தோஷத்தோடு பார்த்து ரசிக்கமுடியவில்லை. நவீன் நிலையை பார்த்தப்பிறகு, மன அழுத்தமும் இரத்த அழுத்தமும் அதிகமாகி, என் முகம், என் மனம் போலவே ஒருவித இறுக்கத்தில் இருந்தது. பாரிஸிலிருந்து திரும்பும் வரை என் முகம் அப்படியே தான் இருந்தது, அதற்காக அவ்வப்போது கணவரிடம் திட்டும் வாங்கிட்டே தான் இருந்தேன்...

டிஸ்னியில் ஒரு விசயம் புரிந்தது, அதாது, எனக்கேற்ற சாப்பாடு பாரிஸ்ஸில் எங்கும் கிடைக்காது. ரொட்டிக்கு நடிவில் பன்றி, மாடு, கோழின்னு வைத்து வெவ்வேறு பெயர்களில், flavour களில் விற்கப்படுகின்றன. தவிர நம்மூர் கோதுமை தோசை க்ரீப்' என்ற பெயரில், பல  flavour களில் விற்கப்படுகின்றன. முதல் நாள் என்பதால் எதுமே சாப்பிடப்பிடிக்காமல், ஜூஸ், காஃபி என குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்து சேர்ந்தேன். அவர் ஏதோ சாப்பிட்டார். பாரிஸ் உணவு குறித்து தனிப்பதிவு எழுதவேண்டும்.

ஒருவழியாக சுற்றிப்பார்த்து , அறை வந்து சேர்ந்தோம். செய்துவைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எங்களுக்காக காத்திருந்தான். சென்றுவந்த கதையை சொல்லி முடித்து, ரயில் நம்மூரை விட சுமாராக தான் இருக்குன்னு சொல்லி பாரீஸை முடிந்தளவு அவனிடம் கழுவி ஊத்திவிட்டு, நாங்களும் சாப்பிட்டு டகால்னு படுக்கையை விரித்து படுத்துட்டேன்.

அதிகாலை, 3 மணி மேல் இருக்கும், தூக்கத்தில் விழித்தபோது நவீன் இன்னமும் கணினியில் வேலை செய்துக்கொண்டிருந்தான். "ஏண்டி குட்டி..தூங்காம இன்னும் என்ன செய்யற?

 " ப்ராஜக்ட் சப்மிஷன், நாளைக்கு ப்ரசென்டேஷன் இருக்கு ப்ரிப்பேர் செய்துட்டு இருக்கேன்,"

"ஓ ..சரி சரி... முடிச்சிட்டு படு.."

திரும்பி படுத்து தூங்கிப்போனேன்.

***********
6 மணிக்கு எழுந்துவிட்டேன். இருவருக்கும் க்ரீன் டீ போட்டு வைத்துவிட்டு, எனக்கு சாதா டீ கலந்துக்கொண்டு, நவீனுக்கு பூரி செய்ய ஆயத்தமானேன். அவன் நல்லாத்தூங்கிட்டு இருந்தான். இவரும் எழுந்துவிட்டார். நவீனை எழுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு அவரை கேட்டேன்.

எங்கள் பேச்சை கேட்டு, "அமைதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன்.. .... நீங்க வந்ததிலிருந்து இந்த ரூம்ல ஒரே சத்தம்... இதுல தனியா வேற என்னை நீங்க எழுப்பி விடனுமா? எழுந்து தொலைக்கறேன்.. சீக்கிரம் போகனும்.. ப்ராஜக்ட் சப்மிஷன்" ன்னு சிடு சிடுன்னு எழுந்தான்.  துவைத்த உள்ளாடைகளை அவர் அவனுக்கு எடுத்துக்கொடுத்தார். அதை கையில் வாங்கிக்கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்தான்.

"திருந்தவே மாட்டியாமா நீ?! எதையாது செய்யாதன்னு சொல்லிட்டு போனா செய்யக்கூடாது.. இது என்ன உன் ஊருன்னு நினைச்சியா? துணி துவைக்க தனியா வாஷிங் மிஷின் இருக்கு, அங்க தான் போய் துவைக்கனும்..ஏன் சொன்னப்பிறகும் துவைச்சிப்போட்டு இருக்க?"

"வாஷிங்மிஷின்ல துவைக்க நிறைய துணி இருக்கு..கொஞ்சம் தான் துவைச்சி இருக்கேன். சத்தம் போடாம போய் பல் வெளக்கிட்டு வா...டீ குடிச்சிட்டு, சாப்பிட்டுட்டு கிளம்புடா.. நாத்தம் புடிச்ச பயலே....."

"அப்பா...செய்ய வேணாம்னு சொல்ல சொல்ல  உங்க பொண்டாட்டி சும்மா இருக்க மாட்டறாங்க.., இம்சை தாங்கமுடியாட்டி,  ரூமை விட்டு அவங்கள வெளியில் தொறத்திடுவேன் சொல்லிட்டேன்.. "

"அவ அப்படித்தான்னு உனக்கு தெரியாதாடா...விடறா..போய் கிளம்பு..போ...."



தொடரும்...

படங்கள் : நன்றி கூகுள்

குயில் பாட்டு ஓ வந்ததென்ன ...


இது தான் செம்போத்து = செண்பகப்பறவை (Greater Coucal)  -> இத்தன வருச காலமாக இதைத்தான் குயில்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இது எப்படி சத்தம் எழுப்புதுன்னா...ஒரு மாதிரி.... வாயத்தொறக்காம  "ம்ம் ம்ம் ம்ம்க்கும்.. ம்ம் ம்ம் ம்ம் க்கும்" னு சத்தம் எழுப்புது. வாயத்தொறக்கவும் மாட்டேங்குது. அமுக்கியாட்டும் சத்தம் போடுது. தனியா வேற வீட்டில் இருக்கேனா..இந்த சத்தம் ஒருவித பயம்மா இருக்கும். 

கேரளாவில் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும். குயில் காக்கா மாதிரி இருக்கும்னு சொல்லிக்கேட்டதால் இதை குயில் னு நானே கெஸ் பண்ணிக்கிட்டேன்.  இங்கவந்தும்.. தொடர்ந்துச்சி.. ஆனா இது தான் வாயத்தொறக்காம 'ம்ம் ம்ம் ம்ம் ம்க்கும்' னு சத்தம் எழுப்புதா? எனக்கு ஒரே கன்ஃபூஷன்..

முதலில் அது ஏதோ உடல்நிலை சரியில்லாம அப்படி செய்யுதுன்னு நினைச்சேன். வூட்டுக்கார கூப்பிட்டு.. அதுக்கு நான் தான் டாக்டர் மாதிரி.. "பாருங்க அந்த குயிலுக்கு உடம்பு சரியில்ல எப்படி வாயத்தொறக்க முடியாம  கஷ்டப்படுதுன்னு" பில்டப் வேற... :))
அவரும் நம்பி ஃபோட்டோவெல்லாம் எடுத்தாரு. :)

அப்பவும் இது குயில் இல்லன்னு என் அறிவுக்கு எட்டல... பெண் குயில் போலன்னு ஜஸ்ட்டிஃபை செய்துக்கிட்டேன்.  (என் ஜெனரல் நாலேஜ்ஜில் மண்ணெண்ணெய ஊத்தித்தான் கொளுத்தனும்).

சரி...அப்புறம் எப்படிதான் குயில கண்டுப்பிடிச்சேன்னா..?! ஒரு நாளில் 14 மணி நேரமாவது இங்க வீட்டை சுத்தி குயில் கூவிக்கிட்டே இருக்கு.. அடர்ந்த மரங்கள் என்பதால், கண்ணில் மட்டும் படாது. இதையே குயில்னு நினைத்ததில் கூகுள் ஆண்டவர் பக்கமே நான் போகல.  சென்ற வாரம் இலையுதிர் காலம் ஆரம்பம் ஆகி..2-3 நாள்ல பூரா மர இலையும் கொட்டிப்போச்சி...

இப்ப என்ன செய்யும் அந்த குயில்?! ஒழுங்கா மரியாதையா வெத்து கிளையில் உட்கார்ந்து கூவிக்கிட்டு இருந்துச்சி...  அட்லாஸ்ட்,  குயில் எப்படியிருக்கும்னு எனக்கு தெரிஞ்சிப்போச்சி... :)
இப்ப குயில் கதைக்கு வருவோம். எந்த குயிலுமே தனியா சும்மா கூவுவதேயில்லை. இங்க ஒரு குயில் கூவினால், எசப்பாட்டு தொலைவில் எங்கிருந்தோ கேட்கும். அதுக்கு உடனே இவரு எசப்பாட்டு இங்கிருந்து பாடுவாரு.. உடனே அங்க.. இப்படி மாறி மாறி பாடிக்கிட்டே இருக்காங்க. இவங்க பறந்து வேற இடத்துக்கு போறவரை இந்த எசப்பாட்டுகள் தொடரும்.

அணில் குட்டி : இந்த அம்மணிக்கு 7 கழுத வயசாச்சி.. குயில் எப்படியிருக்கும்னு இபப்த்தான் தெரிஞ்சிருக்கு... ஒரு புள்ளைய பெத்து, வளத்து... அதுக்கு எந்த லட்சணத்தில் படிப்பு சொல்லி தந்திருப்பாங்கன்னு இப்ப கிரஸ்ட்டல் கிளையரா தெரிஞ்சிப்போச்சி.....

பீட்டர் தாத்ஸ் : They are my Morning alarm. With a cup of coffee I started my day with them. They dont bother me, They speak, fight n play with one other,fly fast, ask me food,  I talk with them, give them food. Cukoo sings I listen n sing back. 

விடுதி அறை - பாரிஸ் பயணக்குறிப்புகள் #2

நவீன் அறையில், ஒருவர் மட்டுமே தங்கமுடியுமென்பதால், இருவருக்கு வேண்டி அனுமதி கடிதம் விடுதியின் வாயிலாக நவீனால் பெற்றுத்தர இயலவில்லை. அதனால், ஒர் இரவுக்கு விடுதிக்கு அருகில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்திருந்தோம்.  மூவரும் அங்கு சென்று தங்கிவிட்டு, விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, ரயில் வழிப்பயணமாக நவீன் அறையை அடைந்தோம்.

பாரீஸ் சென்றதிலிருந்தே நவீனிடம் கவனித்த முதல் மாற்றம், "அதிவேக நடை". இங்கிருந்தவரை அவசரமோ, அவசரமில்லையோ வேகமாக நடப்பேன். இருவரும்.. "ம்ம் ம்ம்ம்..ஓடு ஓடு.. நாங்க மெதுவாகத்தான் வருவோம்" னு ஆடி அசைந்துதான் வருவாங்க. ஆனால், இங்கு?!! நவீன் நடைக்கு என்னால் ஈடுக்கொடுக்கவே முடியல..அத்தனை வேகம். எப்போதும் போல, நிதானமாக என் கணவர் எங்களைப் பின் தொடர்ந்தார்.

ஹட்ச் நாய்' குட்டிப்போல நவீன் பின்னால் நான் ஓடிக்கொண்டிருந்தேன். விடுதி முகப்பின், வாசற்கதவின் சாவி ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. தவிர, சாவி மறந்தோர், அதற்கான ரகசிய எண்ணை அழுத்தி கதவை திறக்க செய்யலாம். அறைக்கு இரண்டு சாவிகள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு சாவியை எங்கோ தொலைத்துவிட்டு, தேடாமலேயே இருந்தான் நம்ம ஆள்.

வேக வேகமாக விடுதிக்குள் சென்றவன், இடதுப்பக்கம் இருந்த அறைக்கு சென்று அதே வேகத்தில் திரும்பி வந்து வேறு வழியில் நடக்க ஆரம்பித்தான். நான் விடுவேனா?  வேக வேகமாக அவன் சென்ற வழியே சென்றேன். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக தபால் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன, தனக்கு கடிதம் இருக்கிறதா என்று பார்த்திருப்பான் போல, First Name , Last Name குழப்பம்.  எங்களின் பெயரிட்டு ஒரு பெட்டி இருந்தது.

விடுதி முகப்பு வாயிலிருந்தே "Motion sensor lights" பொறுத்தப்பட்டிருந்தன. இருளோவென்று இருந்த இடம், நவீன் முன்னே செல்ல ஒளி பரவி எங்களுக்கு வழியை தெளிவாக க்காட்டிக்கொடுத்தது. ஒரு corridor தாண்டி, படி இறங்கி கீழ் தளத்தில் ஒரு corridor நடந்தான், அவன் அறை வாசலில், பெயர் பலகையில் "நவீன்" என்று அவனே எழுதிய சீட்டு வைக்கப்பட்டிருந்தது.  

*********
அறையில் காலடி வைத்ததிலிருந்து -

காலணிகள் கழட்டி விடும் இடத்திலிருந்து, கழுவாத பாத்திரக்குவியல், அழுக்கான சமையல் மேடை, மடிக்காத போர்வையோடு கலைந்து கிடந்த படுக்கை, அங்கங்கே கிடந்த அழுக்குத்துணிகள், கால் வைக்க முடியாதளவு குப்பை, தலைமுடி ......  எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுற்றியது. அவரும் நானும் மெளனமாக  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எங்களின் வருகைக்காக துளியும் அவன் எதையும் சரிசெய்து வைக்க மெனக்கெடவில்லை. சமைக்க காய்கறி  கூட ஏதுமில்லை.  வெங்காயம் நாலும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தது. என் குழந்தையை எப்படி நான் வளர்த்திருக்கிறேன் என்ற கேள்வி என்னைத்துளைக்க ஆரம்பித்தது... அவன் அவனாக எங்களுக்காக எதும் வேஷம் போடாமல் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை, தன் இருப்பிடம் இதை (ஓரளவு) சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதை நினைத்து கஷ்டப்படுவதா?  கேள்விகள் என்னுள்ளே...

எதை முதலில் சுத்தம் செய்வது என்று தெரியாமல் விழித்தேன். எதைத்தொட்டாலும் அழுக்கு, ஒன்றிலிருந்து ஓன்றாக தொடர்ந்தவாரே இருந்தது.
விடியற்காலை 6.45 க்கு கிளம்பவேண்டும் என்று புறப்பட ஆரம்பித்தான். "என்னடா எதுமே வீட்ல இல்ல..என்ன சாப்பிட்டு போகப்போற?" ன்னு ஃபிரிட்ஜை திறந்துப்பார்த்தேன்.  ஒரு கிண்ணத்தில் ஏதோ செய்து வைத்திருந்தான்.. எடுத்து முகர்ந்தேன்.. துர்நாற்றம்!!... ... என் இரத்த அழுத்தம் அதிவேகமாக ஏறத்தொடங்கியது. கொஞ்சம் சுதாரித்து, ஃபிரிட்ஜில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து தேதிப்பார்த்தேன். எல்லாமே காலாவதி ஆகிருந்தது.

"எப்படி வளத்த குழந்த... இப்படி கெட்டுப்போனதை எல்லாம் வச்சி சாப்பிடுதா? " ன்னு நினைக்க நினைக்க என் மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் குப்பையில் போட எடுத்துவைத்தேன்.

நவீனுக்கு ப்ராஜக்ட் முடியவில்லை.  எங்கள் மூச்சுக்காற்று சற்று சத்தமாக வந்தால் கூட, "ப்ராஜக்ட் முடிஞ்சவுடனே வந்திருக்கலாமில்ல.. நீங்க இரண்டுப்பேரும் எனக்கு ரொம்ப தொந்தரவா இருக்கீங்கன்னு" எரிந்துவிழுந்துக் கொண்டே இருந்தான்.  படிப்பின் கடுப்புஸ்.. ப்ராஜக்ட்  முடிச்சிக்கொடுக்கனும், எக்கச்சக்க வேலை இருந்தது. இடையில் நாங்கள்... ?! 

சாப்பிடாமலேயே கிளம்பினான்.. கேட்டதற்கு "காலையில் எனக்கு சமைக்க நேரமில்லை..நான் எதுவும் சாப்பிடுவதில்லை, பழகிவிட்டது" என்றான். காலையில் ஒருநாள் கூட அவனை பட்டினியாக நான் அனுப்பியதேயில்லை. அவன் குளித்துவிட்டு உடை மாற்றி, ஷூ மாற்றுவதற்குள் அவனோடு அங்குமிங்குமாக ஓடி ஓடி சாப்பாட்டை ஊட்டி விட்டுவிடுவேன்...

எப்படி அவனை வெறுமன அனுப்புவது.?  இங்கிருந்து அரிசி முதற்கொண்டு ஓரளவு மளிகைப்பொருட்கள் கொண்டு சென்றிருந்தேன்.  சம்பா கோதுமையை கஞ்சி காய்த்து, இருந்த பால் கேன்'களில் எது காலாவதி ஆகாமல் இருக்கிறது எனப்பார்த்து,  பால் + சர்க்கரை சேர்த்து கொடுத்தேன். "காலையில் சாப்பிட்டு வருசம் ஆச்சிம்மா..தீடீர்னு சாப்பிட சொன்னா ? பசிக்கலமா எனக்கு" ன்னு சாப்பிட அட்டகாசம்.  கெஞ்சி கூத்தாடி 2.5 டம்ளர் குடிக்க வைச்சாச்சு..
கிளம்புகிற அவசரத்திலும்,

"ஹாட் ப்ளேட்" எப்படி பயன்படுத்தனும், கழிவறையில் தண்ணீர் வெளியில் சிந்தாமல் எப்படி உபயோகிக்கனும், எங்கு நின்னு குளிக்கனும், தண்ணீர் சிந்தினால் எதைக்கொண்டு துடைக்கனும், சமைக்கும் போது பாத்திரம் கழுவும் போது சுவற்றில் அழுக்கு பட்டுவிட்டால் அதை உடனேயே எதைக்கொண்டு சுத்தம் செய்யனும், எந்த குழாயில் குளிர்ந்த தண்ணீர் &  சுடத்தண்ணீர் வரும், ஃபயர் அலார்ம் அடித்தால் எப்படி நிறுத்தனும்... ரூமை எதைக்கொண்டு பெருக்கனும், துடைக்கனும், சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் எங்கு இருக்கு, அக்கம் பக்கத்தில் உள்ள (இலங்கை) தமிழர்கள் கடை விபரங்கள் சொல்லி, "அங்க விலை அதிகம்.. ஃப்ரன்ச் தெரியாததால். இப்பத்திக்கு ரொம்ப அவசியமா எதாச்சும் தேவைன்னா வாங்கிக்கோங்க.. மிச்சம் நான் ஃபிரியா ஆனவுடனே கூட்டிட்டு போய் வாங்கித்தரேன்" என்றான். 

அதேப்போல வெளியில் சுற்றிப்பார்க்க,  அப்பாவிடம் தேவையான தகவல், எந்த ரயில் கட்டனம் குறைவு,  எந்த ரயிலில் போகனும், அவன் பயன்படுத்தாமல் அதிகமாக இருந்த சில ரயில் டிக்கெட்டுகள், ரயில் நிலையத்தில் எப்படி டிக்கெட் கேட்டு வாங்குவது போன்றவற்றை வேக வேக சொல்லி கொடுத்துவிட்டு கிளம்பினான்.

சமையல் மேடை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவி,அழுக்கு துணிகளை மடித்து ஓரம் கட்டி, ரூமை பெருக்கி, துடைத்து, நவீன் உள்ளாடைகளை அவன் துவைக்கக்கூடாது என சொல்லியும், நின்றவாறே தண்ணீர் வெளியில் சிந்தாமல் துவைத்து,  அவற்றை எடுத்துச்சென்ற கயிற்றை இடம் தேடிப்பிடிச்சி கட்டி காயவைத்து...சமையல் செய்து... .........இதற்குள் 1 மணிக்கு மேலாகியிருந்தது.  வூட்டுக்கார் இம்சை ஆரம்பமானது.. "இப்படியே உன் புள்ளைக்கு சேவகம் செய்துக்கிட்டு இருந்தால்....எங்கையும் வெளியில் சுற்றிப்பார்க்க முடியாது... கிளம்பு போகலாம்".

வெளியில் செல்லும் எண்ணமே எனக்கில்லை. என் குழந்தையோடு என்னை விட்டுடுங்கன்னு கத்தனும் போல இருந்தது,  மனசு ஒரு நிலையில் இல்லை. வெளியிலும் என் மன அழுத்தத்தை சொல்ல முடியாது.. சொன்னால்.. "ஒரு தாய் இவற்றையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்" என்ற தலைப்பில் லெக்சர் கொடுக்க ஒருவர் தயார் நிலையில் இருக்கிறார்....
நான் வரல சொல்லித்தொலைக்கவும் முடியல... நான் கூட இருக்கும் போதே வந்த வழியை மறந்துவிட்டு நேர் எதிரான வழியில் செல்லுவார். இவரை எங்க தனியாக அனுப்ப..?! தனியாக ஊர் சுற்ற போகவும் மாட்டார்... சரி......

10 நிமிடங்களில் குளித்து கிளம்பி.சாப்பிட்டு விட்டு, நவீனுக்கு குறிப்பு எழுதிவைத்துவிட்டு, ரயில் நிலையம் சென்றோம்....
தொடரும்..

பாரிஸ் பயணம் # 1 

*படங்களில் அறை பெரியதாக தெரிந்தாலும், மொத்தமாக 200 சதுரடி தான் இருக்கும். 
படங்கள் : நன்றி கூகுள்

இந்தியாவின் மகள்' ஆவணப்படம் - புரிந்தவை

 => கோலி , பம்பரம் விளையாட்டு, பட்டம் பறக்க விடறது, தண்ணி அடிக்கறது , புகைப்பிடிக்கறது மாதிரி இதுவும் மிக மிக மிக சாதாரணமான ஒரு விசயம்..  விளையாட்டு, பொழுதுப்போக்கு & சந்தோஷம்.

=> இதையெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிக்கிட்டு??! என்னாச்சி இவங்களுக்கு எல்லாம்?!  இதை ஏன் இவ்ளோ பெருசாக்கி பேசறாங்கன்னு சத்தியமா எனக்கு புரியல.

=> 200 பேர்..இல்ல சரியான கணக்கில்ல, அதுக்கும் மேல இருக்கலாம்..அதனால நீங்க 200 ன்னு ரவுண்டு செய்துக்கோங்க. இதுல 12-13 ரேப் கேஸ் தான் ரெஜிஸ்ட்டர் ஆகியிருக்கு. மிச்சம் இருக்க 187 பொண்ணுங்க ...?!! வேறென்ன சைலன்ட் மோட் ல இருக்காங்க.

=> மேல சொன்ன 200 சொச்சம் பேரை ரேப் செய்துட்டு, ரொம்ப சாதாரணமா கணக்கு சொல்ற ஒருத்தன்  மாதிரிதான்.. நிர்பயா ரேப் லிஸ்ட்ல இருக்க 4 பேரும்.



யார் கூட இப்படி ரேப் செய்து விளையாடுவாங்க?!

=> இரவு நேரங்களில் வெளியில் "சுற்றும்" பெண்கள், தனியாகவோ, யாருடனோவோ.  இப்படி சுற்றும் பெண்கள் எல்லாருமே ஒழுக்கமற்றவர்கள், இவர்களை ரேப் செய்வதால் ஒரு பிரச்சனையும் இல்லை, இவங்கள கண்டிப்பா ரேப் செய்யனும். அதில் எந்த தப்புமில்லை. முக்கியமாக அவங்க இந்த ரேப் விசயத்தை வெளியில் சொல்லவே மாட்டாங்க.

=> சரி, ரேப் செய்தீங்க..அது ஏண்டா அந்தப்பொண்ணை அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்கீங்க?  ...வாய்!! என்னா வாய் அந்த பொண்ணுக்கு?! ரொம்ப ஓவர் பேச்சு..முடியல.. அதுவாச்சும் பேசுச்சி.. கூடவந்தவன்.. கைவேற நீட்டிட்டான். ராத்திரியில் இப்படி சுத்தறதே தப்பு..இதுல..எதிர்த்து பேசலாமா?!

வக்கீல் வண்டுமுருகன்கள் :

=> பெண்கள் எப்படி வளர்க்கப்படனும்? யார் கூட வெளியில் போகனும். பூ, வாசம், வெங்காயம் . etc

 # ண்ணா.... எங்கூர்ல சொந்த தாத்தா, 4 வயசு பேத்திய ரேப் செய்து, கிணத்தில் தூக்கிப்போட்டு சாகடிச்சிட்டாருங்கண்ணா.. இதுக்கு உங்க கருத்து என்னங்கண்ணா?!!

=> என் வீட்டு பொண்ணு இப்படியிருந்தா..பண்ணை வீட்டில் வச்சி கொளுத்திடுவேன். !!

# ஸ்ஸ்ஸ்ஸ்.....இஞ்சி பூண்டு நசுக்கறாப்ல இந்த ஆளை நசுக்கினா என்ன? !!

மருத்துவர் :

=> இந்த குற்றவாளிகள் எல்லோருமே "நார்மல்" ஆனவர்கள். அதாது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படாத சாதாரண மனிதர்கள்.

அப்பாவிகள் :

=> தன் புருஷன் இப்படியான செயலை செய்யவே மாட்டான் என நம்பும், அப்பாவி மனைவி. திருதிருன்னு முழுச்சிட்டு அப்பெண்ணை சுற்றிவரும் குட்டிக்குழந்தை. "கணவனை சார்ந்து தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை.. தனியா எப்படி வாழமுடியும்? அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம்?! நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?! " # நிர்பயாவா? இந்த பெண்ணா?!

=> ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படற மக்கள் நாங்க.... எங்க வயிறை நிறைக்க தான் வெளியில் வேலைக்கு போறான்.. எங்க புள்ள இப்படி செய்துட்டானா..... என்ன சொல்றது தெரியலன்னு அழுகின்ற தாய் தகப்பன்..

காவல்துறை :

டெல்லி : எந்த நாட்டு தலைநகரோடு ஒப்பிட்டாலும், டெல்லி ஒரு தலைசிறந்த பாதுகாப்பான தலைநகரம். அதில் மாற்று கருத்தேயில்லை !

India' daughter : (Click it to watch the Video)
1. குற்றவாளி : எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான். சரியாத்தான் பேசறான்.
2. குற்றவாளியின் மனைவி : நியாயமான கேள்வி கேக்கறாங்க. .
3. குற்றவாளியின் பெற்றோர் : அப்பாவிகள்
4. காவல்துறை:  கடமையை செய்துக்கொண்டேதான் இருக்காங்க.

பொதுமக்கள் : நீங்கதான் பிரச்சனை செய்யறீங்க. கொடி தூக்காம, பொங்காம, உங்க வீட்டு பொண்ணை ஒழுக்கமா வளக்கற வழியப்பாருங்க. !