செய்வினை, பில்லி சூனியம்……..???? உண்மையா???

இது மிகவும் புதியதகவல், சினிமாவிலும், செய்திகளிலும் மட்டுமே பார்த்தும் படித்தும் வந்த எனக்கு, நேரடியாக செய்வினை’யால் பாதிக்கபடுகின்றேன் ?? என்று சொன்ன ஒரு பெண்ணெய் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. மூடநம்பிக்கைக்கு அளவில்லாமல் போய் விட்டதாகவே கருதுகிறேன். அவள் இப்படி சொல்லும் போது எல்லாம் அவளின் தன்னம்பிக்கையை மட்டுமே எண்ணிப்பார்க்க முடிந்தது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் எல்லோருமே பிரச்சனைக்கு காரணமாக மற்றவர்களை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பெண், நன்கு படித்தவள், வேலைக்கும் செல்கிறாள், அவளுடைய குடும்பத்திலும் எல்லோரும் படித்து இருக்கிறார்கள். அவளுக்கும் மாமியாருக்கும் எப்போதும் ஓயாத பிரச்சனை, புலம்பிக்கொண்டே இருப்பாள். ஆனால் அதிகபட்சமாக “என் மாமியார் எனக்கு செய்வினை வைத்து விட்டார்கள்,என் இரண்டு கையையும் தூக்கமுடியாத அளவு வலி, வீங்கி வேறு போய் விடுகிறது, எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் எனக்கு அடிக்கடி இப்படி ஆகிறது” என்று ஓரே அழுகை, அதற்கு காரணம் மாமியாரின் செய்வினையே என்று ஆணித்தரமாக நம்புகிறாள்

எனக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை, செய்வினையில் நம்பிக்கை சுத்தமாக இல்லாததால், அவளிடம் டாக்டரிடம் சென்றாயா? என்றேன். அவளோ இல்லை சாமியாரிடம் சென்றேன் அவர் என்ன சொல்கிறாரோ அப்படி நடந்து க்கொள்கிறேன் என்றாள். படித்தவர்களே இப்படி மூடநம்பிக்கையுடன், செய்வினை சாமியார், செய்வினை எடுக்கும் நல்ல சாமியார் என்று நம்பி நேரத்தையும், நிம்மதியையும், பொருளையும் இழக்கிறார்கள். மிச்சமாவது என்னவொ மன உளைச்சல் மட்டுமே.

அவளின் செய்வினையை சரி என்று இன்னொரு நண்பரும் உதாரணம் சொன்னார். ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் அந்த பையனின் வீட்டில் , அந்த பெண்ணுக்கு செய்வினை வைத்ததால் அவள் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டும், பின்பு மனநிலை பாதிக்கப்பட்டும் போனாள், அந்த பெண்ணின் கணவர் எல்லா நல்ல ஆஸ்பித்திரிகளிலும் மனைவியை அழைத்துசென்றும், நோயை குணப்படுத்தமுடியவில்லை என்றும், அதற்கு காரணமும் செய்வினையே என்றார்.

சரி செய்வினை என்றால் என்ன ? என்று அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது. செய்வினை செய்யும் சாமியார்கள் கொடுக்கும் மருந்தை நமக்கு பிடிக்காதவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அது எந்த மருத்துவரிடம் சென்றாலும் குணமாகாது???? அதை வெளி எடுக்க நாம் மற்றொரு செய்வினையை எடுக்கும் நல்ல சாமியாரின் உதவியை நாடவேண்டும்.

கதை என்னவோ நன்றாக தான் இருக்கிறது. நான் அந்த பெண்ணிடம் கேட்ட சில கேள்விகள்.

1. மாமியார் ஏதோ சாப்பாட்டில் கலந்து கொடுக்கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் சமைத்து கொடுக்கும் உணவை சாப்பிடுகிறாய்?
2. மாமியார் இல்லாமல் தனிவீட்டில் உன் வாழ்க்கையை துவக்கலாமே.
3. உன்னுடைய நல்ல சாமியார் அவ்வளவு நல்லவராக, நடப்பதை சொல்பவராக இருந்தால், அவரே மாமியார் செய்வினை வைக்கபோகிறார்கள் இல்லை இனிமேலும் வைப்பார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை. அல்லது.. தெரிந்தும் ஏன் அதை அவரால் தடுக்க முடியவில்லை.
4. அந்த நல்ல சாமியாருக்கு நீ அடிமையாகிவிட்டாய் என்பதை ஏன் உணராமல் இருக்கிறாய்?
5. அவரால் தான் உனக்கு வாழ்க்கையில் நிம்மதி என்றால், உனக்கு வேறு யாருமே வேண்டாமே?
6. உனக்கு என்று சுயபுத்தி இல்லையா? சுயமாக எது உண்மை எது பொய் என்று யோசிக்க மாட்டாயா.. ஏன் இப்படி நடக்கிறது, அதற்கு நீ என்ன செய்யவேண்டும் யோசித்து செயல் படமாட்டாயா?.. அதைவிட்டு ஏன் இப்படி செய்வினை, சாமியார் என்று அலைந்து கொண்டு இருக்கிறாய்?

எதற்குமே அவளிடம் சரியான பதில் இல்லை என்றாலும், சாமியாரிடம் செல்வதை மட்டும் குறைத்துக்கொள்ளவில்லை. அதில் அதிகபட்சமாக, சாமியார் என்னிடம் எப்படி பேச வேண்டும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூட சொல்லிக்கொடுத்து உள்ளார்.

இப்படி படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட இப்படி சாமியார்களிடம், செய்வினை செயல்பாட்டுவினை, பில்லி சூனியம் என்று பழிகிடந்தால்… என்னவாவது…???

அணில் குட்டி அனிதா:- ஆஹா… கவி..நீங்களே ஒரு சூனியக்காரி ரேஞ்சுக்கு எல்லாம் செய்வீங்கன்னு அந்த அக்காவுக்கு தெரியாம இல்ல போச்சி… உங்க கிட்டேயே..எப்படி பேசனும்னு சாமியார் சொன்னாராமா…? முடியலப்பா !! உங்கள பத்தி தெரியாம அவரு சொல்லிட்டாரு…....சரி வுடுங்க..…நீங்க ஒரு ஹாஃ ஹவர் அந்த சாமியாரை பாத்து பேசுங்க..போதும் !! சாமியார் துண்ட காணோம் துணியக்கானோம்னு ஓடிடுவாரு……. ம்ஹீம்….!! எல்லாரும் என்னைய மாதிரியே இருந்துருவாங்களா,,…கவீஈஈஈஈ…………….


பீட்டர் தாத்ஸ் :- In the middle of the every difficulty lies an opportunity

ஏரிக்குள்ளேயே வாய்க்கால் வெட்டி……..

வேளிச்சேரி்..!!! மிக குறுகிய காலத்தில், மிக வேகமான வளர்ச்சியை எல்லாவிதங்களிலும் பெற்றுவிட்ட ஒரு இடமாகிவிட்டது.. நாங்கள் கடந்த 1991 ஆம் ஆண்டில் வேளச்சேரியில் குடியேறியபோது அக்கம் பக்கம் இருக்கும் காலி இடங்களில் எப்போதும், (ஆண்டு முழுதும்) தண்ணீர் தேங்கி இருக்கும், மதிய நேரங்களில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது அந்த ஒளியில், தண்ணீரில் நீந்தும் பெரிய பெரிய மீன்’களையும், பாம்பு களையும் எங்கள் வீட்டு சன்னல் வழியாக நின்று கவனிப்பேன். தினம் எனக்கு இது தான் பொழுதுபோக்காக இருந்தது.

ஆனால் இப்போது, வேளச்சேரியில் காலி இடங்கள் கிடைப்பதே அறிதாகிவிட்டது, கிடைத்தாலும், விலையைப்பற்றி பேசி நம் இரத்த அழுத்ததை அதிகபடுத்திக்கொள்ள வேண்டாமே.

இப்படி, ஏரிக்குள்ளேயே நாம் குடியேறி எல்லா இடங்களையும் ஆக்கரமித்து விட்டோம். அதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேளச்சேரி தான் தண்ணீரில் மூழ்கும் இடங்களில் முதல் இடத்தில் இருக்கும். தண்ணீர் இனிமேல் தேங்காமல் இருக்க., போன வருடத்தில் இருந்து அரசாங்கம் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி செயற்படுத்தியும் வருகிறது. அதாவது, வேளச்சேரி தண்ணீர் அதிகம் நிற்கும் இடங்களிலில் , தெருக்கலின் ஒரு ஓரமாக வாய்க்கால் வெட்டி, அதனை தெற்கு வேளச்சேரியில் உள்ள ஒரு ஏரிக்கு கொண்டு செல்கிறார்கள். 5 x 5 ஆழமும் அகலமும் இருக்கும் இந்த வாய்க்கால் எனக்கு தெரிந்து வேளச்சேரி பைப்பாஸ் ரோட்டில் உள்ள ஏரி இருக்கும் இடத்தில் இருந்து ஆரம்பித்து தெற்கு நோக்கி வருகிறது.

பிரச்சனை என்ன?.. முன்னேமே நாம் இருப்பது ஏரி பள்ளத்தில், இதில் எப்படி இந்த வாய்க்கால் நமக்கு தண்ணீரை தேக்காமல் ஏரிக்கு எடுத்துச்செல்லும், அதற்காக சரியான முறையில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை தண்ணிர் தேங்காதவாறு வாய்க்கால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. காண்ட்ராக்டில் விடப்பட்ட இந்த வேலை, வாய்க்காலை முடிக்கும் தீவிரத்தில் செயல் படுகின்றனவே தவிர, சரியான முறையில் சரிவான மட்டத்தை கடைப்பிடிக்கப்படவில்லை.

அதனால் தெருவில் தேங்கும் தண்ணீரை தவிர இனி, இந்த வாய்க்கால்களிலும் தண்ணீர் தேங்கும். தெருவில் தேங்கும் தண்ணீராவது 2, 3 நாளிலில் இரங்கிவிடும்..ஆனால் இந்த வாய்க்கால்களில் தேங்கும் தண்ணீரால், கொசு அண்ணன்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. நன்றாக இருந்த எங்களில் ஏரியாவெல்லாம் இப்போது கொசுக்கள் சொகுசாக வளரும் இடமாக ஆகிவிட்டது.

2, 3 நாள் தண்ணீர் நிற்பதே பரவாயில்லை, இந்த வாய்க்கால்களால் ஆண்டுமுழுதும் தொல்லை. அதுமட்டுமல்ல, நம்முடைய நகராட்சி தெருக்கள் எல்லாம் அகலமான தெருக்கள் இல்லை, இதில் இந்த வாய்க்கால்கள் ஒரு பகுதியில் கட்டிவிடுகின்றனர். அதன் வடிவமைப்பு அதன் மேல் வண்டிகள்,பாதச்சாரிகள் செல்ல இயலாதவாறு மேடும் பள்ளமுமாக கட்டப்படுகின்றன. அதனால் வாய்க்கால் இல்லாத மீதமுள்ள குறுகிய ரோட்டை தான் பாதச்சாரிகள், வண்டிகள் உபயோகிக்க வேண்டியுள்ளது.

இதில் கொசுவின் தொல்லை தாங்காமல், நிறைய வீட்டுக்காரர்கள் தெருவிற்கும், வாய்க்காலுக்கும் இடையே தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் வழிகளை மண்ணைக்கொண்டு மூடிவிடுகின்றனர். நிச்சயம் அவர்கள் மேல் எந்த தப்புமும் இல்லை, இந்த கொசுக்களால் அவர்களுக்கு வரும் பிரச்சனையை விட இது ஒன்றும் பெரிய தவறாகவும் தெரியவில்லை. இப்போதே மழை இல்லாத இத்தனை வெயிலிலும் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கிகிடப்பது… வாய்க்கால் வடிவமைப்பின் லட்சனத்தை எடுத்துறைக்கிறது….!!

அணில் குட்டி அனிதா:- கவி..நீங்க அந்த காண்ட்ராக்டரை நொய் நொய் ன்னு கேள்வி க்கேக்கும் போதே நெனச்சேன்.. பிளாக்ல எழுதப்போறீகன்னு.. எழுதிட்டீங்களா.. ப்பாத்து… காண்ட்ராக்டருக்கு கோவம் வந்து வாய்க்கல்குள்ள போட்டு மூடிட போறாங்க… ஒரே நாள்ல காலியாய்டுவீங்க…...!

பீட்டர் தாத்ஸ் :- Rather fail with honour than succeed by fraud.

இது இவங்களுக்கு தேவையா.... ஹா...ஹா..ஹா... !!

அணில் குட்டி அனிதா :- பொதுவா யாராவது ஜோக் அடிச்சா நாம சிரிப்பா சிரிப்போம்..ஆனா..நம்ம கவிதா இருக்காங்க பாருங்க..யார் கிட்டையாவது வாய கொடுத்து …அவங்க திருப்பி கவிதா’வ சுத்தி சுத்தி பேசவிடாம ஓட்டுவாங்க பாருங்க.. அப்ப…கவிதா “ஞே’ ன்னு முழிக்கறத “பாத்தா… அட போங்க… சொல்ல எல்லாம் முடியாது… உருண்டு உருண்டு சிரிக்கறமாதிரி இருக்கும்.. உங்களுக்காக சில சேம்பல்ஸ்… நீங்களும் உருளுங்க.. என்னோட சேர்ந்து…..

கவி அவங்க பிரண்டுக்கு மாட்டு பொங்கலுக்கு வாழ்த்து சொன்ன கதைய கேளுங்க..

கவி :- ஹேப்பி மாட்டு பொங்கல் ..பா….!! (சொல்லிட்டு இவங்களே ஹிஹி ஹிஹி ஹிஹி ன்னு சிரிச்சிக்காறாங்க…)

கவி பிரண்டு :- போதும் பொதும் இளிச்சது…அத “பன்னி பொங்கல்” கொண்டாடறவங்க சொல்லக்கூடாது….

கவி : (“ஞே” ன்னு முழுச்சிக்கிட்டு ) சைலன்ட்’ டா எஸ் ‘ ஆயிட்டாங்க..

ஆனா இவங்களுக்கு ஒரு டவுட்.. “பன்னி பொங்கல்” ன்னு ஒன்னு இருக்கா?.. இன்னமும் டவுட் ல தான் இருக்காங்க… யாராவது இந்த அறிவு ஜீவி க்கு விளக்கமா சொல்லுங்கப்பா…

========================================================
கவிதா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்ச பிறகு அடிக்கடி சில்லறை பொறுக்கறாங்க…….அதுல ஒரு வாட்டி மவுண்ட் ரோடு ல சில்லறை பொறுக்கி, செம உள்காயம் பாவம்..வெளியில சொல்ல முடியாத அளவு உள்ளடி…15 -20 நாள் அம்மணிக்கு ஒழுங்கா நடக்க முடியல… அப்ப முதல் மாடியில இருக்க ஆபிஸ்க்கு லிஃட் ல போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க.. ஒருநாள்..ஆபிஸ் விட்டு வரும் போது லிஃட் ‘ட தொறந்து உள்ளே போய் கீழ போறத்துக்கு பட்டனை அமுத்த போக…. அம்மணி’ யோட ஒரு பிரண்டு வெளியில நின்னுக்கிட்டு,

“கவிதா…ஏன்… சிரமபடறீங்க.. நீங்க லிஃட்’ குள்ள ஏறி நின்னா போதும், அது தானா கீழ போகும்..எதுக்கு ஸ்விட்ச் எல்லாம் அமுத்துக்கிட்டு….!! “

கவி :………………………..


=============================================================
ரெம்ப டிராஃபிக் இருந்ததுன்னு எல்லாரும் புட்பாத் மேல வண்டிய ஓட்டிக்கிட்டு போக அம்மணியும்… (தேவையா???? ) அவங்க பின்னாடியே போக… புட்பாத் முடியும் போது ஒரு 2 அடி க்கு கீழ ரோடு இருக்கு… போனவங்க எல்லாம் தட்டு தடுமாறி வண்டிய எப்படியோ இரக்கி கொண்டுபோக .. .அம்மணிக்கு தெரியல.. அப்படியே நின்னுக்கிட்டு இருந்தாங்க. .போற வரவங்க யாருமே கண்டுக்கல.. எல்லாருமே.. ஏம்மா நாங்களே அவரசத்துல இருக்கோம் நீ..வேற நடுவுல நின்னுக்கிட்டு ன்னு திட்டிட்டு வேற போனங்க… யாரும் ஹெல்ப் பண்ணாத கடுப்பை ஆபிஸ்’ல வந்து அம்மணி கோவத்தோட புலம்ப…...வழக்கம் போல..

கவி பிரண்டு :- ஏதோ டீன் ஏஜ் பொண்ணுங்க நின்னுக்கிட்டு இருந்தா நாங்க எல்லாம் ஓடி போய் உதவி செய்வோம்……

ஆபிஸ்’ல எல்லாரும் கவிதா;வை பார்த்து சிரிக்க……..

கவி : வழக்கம் போல “ஞே” த்தான்………..


==============================================================
அம்மணிக்கு தான் பொய் சொன்னா பிடிக்காதே… அவிங்க பிரண்டு ஒருத்தர் பொய் சொல்றது பிடிக்காம… செம டென்ஷனா…..

கவி :- உங்க வாயில புழு தள்ள போது பாருங்க….

கவி பிரண்டு :- (செம கூல்’லா) ஹோ.. ரொம்ப தேக்ஸ் கவிதா… நான் அப்படியே சைனா போய் ஒரு பாஸ்ட் புட் கடை ஆரம்பிச்சிடுவேன்….!!

கவி :- “ஞே” த்தான்…..
அதே பிரண்டுக்கிட்ட திரும்பவும் :-

கவி:- நீங்க பொய் சொல்லாம இருக்கணும்னு, நாக்குல வேல் குத்தி போடறேன்னு சாமிக்கு வேண்டிக்கிட்டேன்……

கவி பிரண்டு :- ….. நான் கூட உங்க இம்சை தாங்க முடியலன்னு… முதுகுல டின்’ கட்றேன் ன்னு வேண்டிக்கிட்டேன்…. இரண்டு பேருமா வேண்டுதல நிவர்த்தி செய்யலாமா????

கவி:- டின்’ ஆஆஆஆஆஅ???? (வழக்கம் போல “ஞே” த்தான்…..)


==============================================================
அம்மணி எப்பவும் இவிங்கள பாத்து ஊரே பயப்படுதுன்னு நினெப்புல இருப்பபாங்க. .இவிங்க பிரண்ட்ஸ் யாருமே.. இவிங்கள மதிக்கறது இல்ல… அது தெரியாம… சில சமயம் … இவங்களுக்கு பிடிக்காம ஏதாவது செய்துட்டா மணி கணக்கா திட்டி தீப்ப்பாங்க.. ஓவர் அட்வைஸ் வேற……

ஒருவாட்டி அப்படித்தான் ரொம்ப ஆவேசமா வசனம் எல்லாம் பேசி அவிங்க பிரண்டை திட்ட.. ..

கவி:- இவ்வோ நேரம் திட்டறனே அட்லீஸ்ட் கவனிக்கறீங்களா நீங்க?? கொஞ்சமாது உங்களுக்கு பயம் இருக்கா… ?

கவி பிரண்டு :- அய்யோ…கவி….. நீங்க பேசினத தவிர வேற எதையுமே நான் கவனிக்கல… பாருங்க..பயத்துல… உடம்பு நடுங்குது….. ஹிஹிஹி….…டவுசர் கூட நனஞ்சு போச்சி……..…

கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)


=======================================================
கவி அவங்க பிரண்டு வீட்டுக்கு போனாங்க. .இவிங்க வராங்கன்னு அவங்க பிரண்டோட அம்மா விதம்விதமா சாப்பாடு செய்து வச்சி இருந்தாங்க… அம்மணி க்கு அவங்க அம்மா படற சிரமத்தை பாக்கமுடியாம….

கவி:- ஆன்ட்டி !! நான் ரொம்ப சிரமம் கொடுக்கிறேனா…?!! (அம்மணி என்னவோ… திருப்பி அவங்க…. "இல்லமா. .நல்லா சாப்பிட்டு ரெஸ்டு எடு உன் ஒரு ஆளால எனக்கு என்னமா சிரமம் ன்னு" கேப்பாங்க ன்னு நினச்சாங்க…ஆனா…)

ஆன்ட்டி :- “ஆமா கவிதா… ரொம்ப சிரமமா இருக்கு..பேசமா.. சாப்பிடறத அப்படியே வச்சிட்டு வீட்டுக்கு கெளும்பும்மா…. “ மிச்சமீதியாவது எங்களுக்கு இருக்கட்டும் ன்னு செம சீரியஸா சொல்ல…. “

கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)


=============================================================
அம்மணி ஆபிஸ் ல ஏதோ பிரச்சனை…. இவிங்கள யாரோ செமத்தியா திட்டிட்டாங்க… (அது எப்பவும் நடக்கறது தானே…) கவலையும் கம்பலையுமா.. .வூட்டூக்காரர் ஏதாவது உதவி செய்வாறுன்னு சொன்னாங்க..

கவி:- ப்பா…. நான் ஒன்னுமே தப்பு பண்ணாம என்னோட கிளையன்ட் என்னை “இடியட்” ன்னு திட்டிட்டான்…. . ……

கவி வூட்டுக்காரர் :- ஓ….அவனுக்கும் தெரிஞ்சிப்போச்சா……….

கவி:- …………………….

===============================================================

பீட்டர் தாத்ஸ் :- Imagination is your power house where you can shape your plans and make them a reality.