அடையார் புற்றுநோய் மருத்துவமனை - சில குறிப்புகள்

அடையார் கேன்சர் மருத்துவமனை கேன்சரை குணப்படுத்தமட்டுமே நடத்தப்படுகிறது. வேறு வியாதிக்காரர்களுக்கு இங்கு வேலையில்லை.
நோயாளிகள் முதல் நிலை தகவல்/சந்தேகம்/உதவிக்கு மருத்துவமனையில் பகவான் ஆதிநாத் ஜெயின் காம்ப்ளெக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் PRO வை அணுகி விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நாளைப்போல நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருவதால், இங்கு காத்திருப்பு என்பது ரொம்ப சாதாரணம். காலையில் 7 மணிக்கு போனால் இரவு 7 மணி வரையில் கூட காத்திருக்க வேண்டி வரும். அனைவருமே வரிசைப்படிதான் அழைக்கப்படுவர்.  Recommendation, References என்று எதும் இங்கு செல்லுபடி ஆகாது, சில தினங்கள் சென்றாலே அங்கிருக்கும் நோயாளிகளைப்பார்த்து, நாமும் இதையெல்லாம் நாடாமல் காத்திருக்க ஆரம்பிப்போம்.

இங்கு 10 ல் 8 பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. Operation என்று முடிவானப்பிறகு, அந்த நோயாளிகளுக்கென ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு கூட்டம் நடத்தி, அதில் பணம் கட்ட இயலாதவர்களின் நிலையை அறிந்து,அவர்களுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை நடத்தப்படுகிறது. இதனை அறுவை சிகிச்சை செய்யப்போகும் நோயாளிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுகின்றனர். நமக்கு தேவைப்பட்டால், கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் இல்லையேல் பணம் கட்டுகிறோம் என்று சொல்லிவிடலாம். இலவச சிகிச்சைக்கு Income Certificate கொடுத்தால் போதுமானது.

அறுவை சிகிச்சைக்கு முன்பான செலவுகளும், வருமானம் குறித்த சரியான தகவல்கள் கொடுப்பதன் பேரில் ஆரம்பத்திலிருந்தே சிலருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு,  முந்தைய  பரிசோதனைகளுக்கு 20-25 ஆயிரம் ரூபாய் தேவைப்படலாம்.

ஒருவேளை வெளியில் வேறு மருத்துமனையில் புற்றுநோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தாலும், இங்கு வந்தால், முதலிலிருந்து எல்லா பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். வெளியில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

சென்னையில் அல்லாது தமிழகத்தின் பல பிரபல மருத்துமனைகளில், கைவிடப்பட்டு, இங்கு வருபவர்கள் ஏராளம்.

அறிகுறிகள் : உடலில் எந்த இடத்திலாவது சிகிச்சை அளித்தும் சரியாகாத கட்டி வகையறாக்கள், ரத்தகசிவோடு இருக்கும் கட்டிகள், ரத்தம் கலந்த சிறுநீர், பேதி போன்றவையை புறந்தள்ளாமல், நேரடியாக இங்கு வந்து பரிசோதனை செய்துக்கொள்ளுதல் சிறந்தது. வேறு மருத்துமனைகளுக்கு சென்று, பின்பு இங்கு வருவதால், காலதாமதம் மட்டுமல்லாமல், பண விரயம் அதிகமாகி,  நோயாளிகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதிக மன உளைச்சலை தந்துவிடும்.
*******
இங்கு பார்க்கும் அத்தனை நோயாளிகளுக்கும் ஏதோ ஒரு கேன்சர்.  :-

8 மாத குழந்தைக்கும், அவங்க அம்மாக்கும் கேன்சர், என்ன ஏதுன்னு விசாரிக்க மனசு வரல.. :(

வயிறு சம்பந்தப்பட்ட (குடல்) கேன்சர் அதிகம் -  அறிகுறி : வலியில்லாத தொடர்ந்து ரத்தப்போக்கோடு வெளிக்கி/பேதி ஆகுதல்.

இந்த நோயாளிகளின் உறவினர்கள் சொன்னதிலிருந்து காரணங்களை ஊகித்தது :- உணவே  முதல் காரணம் - அதிக அசைவம் தொடர்ந்து சாப்பிட்டவர்கள், அதிக காரம், பழம் & காய்கறியே தொடாமல் இருந்தவர்கள்.  பலவருடங்களாக ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தை கொண்டவர்கள்

குடி , சிகிரெட் , வெற்றிலைப்பாக்கு புகையிலை பழக்கம். இதனால் கேன்சர் வந்தவர்கள் எத்தனை வசதிக்குறைந்தவர்களாக இருந்தாலும் , இலவச சிகிச்சை அளிப்பதில்லை. முழுப்பணமும் கட்டினால் தான் சிகிச்சை.

அடுத்து, வாய் சார்ந்த புற்றுநோய். இதும் அதிகளவில் இருக்கிறது. வாய் சார்ந்த புற்றுநோய்க்கு, காதருகில் உள்ள க்ளேன்ட்ஸ் ஸை, அதில் கேன்சர் செல்கள் இல்லாவிட்டாலும் பரவும் என்று அவர்களாகவே எடுத்துவிடுகிறார்கள்.

சிறுநீரக கேன்சர் - சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல் அறிகுறி.

மார்பு & கருப்பை புற்றுநோய். இ்வை பொதுவாக நாம் அறிந்தவை.

இவைத்தவிர நெற்றி, கண், இமை, தலை , தோல் 'ன்னு சொல்றவங்களும் உண்டு.
******

குழந்தைகளுக்கென்றே தனிப்பிரிவு / தனிக்கட்டிடம் இருக்கிறது.

அதிகமானோர் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உணவு பழக்கம் காரணமாக இருக்கலாம். கேன்சர் இன்ஸ்ட்டியூட் உருவாக்கியவர்களில் யாராவது ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். 

இலவச சிகிச்சை செய்துக்கொள்பவர்களுக்கு, ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் தங்க இலவசமாக உணவோடு மருத்துவனமையில் வசதி செய்யப்பட்டுள்ளது.  தவிர பணம் கட்டுபவருக்கு தனியாக தங்க வசதியான அறைகளும் உள்ளன.

இலவசம் /பணம் வித்தியாசமின்றி அனைவருக்கும் எந்த பாரபட்சமுமின்றி ஒரேமாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.

பணம் கட்டுபவர்களில் A,B,C என்ற மூன்று பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். அடிப்படை வித்தியாசம் என்னவென்று தெரியவில்லை.

Insurance & மற்ற Claim வசதிகள் நேரடியாக இவர்கள் செய்வதில்லை. ரசீதுகளை வைத்து நாமாக தான் claim செய்துக்கொள்ள வேண்டும்.

ஆயா வேலைப்பார்ப்போர் அனைவருமே வயதானோர். இவர்கள் சோர்வில்லாமல் வேலை செய்தது, என் கவனத்தை ஈர்த்தது. பணம் கேட்டு வாங்குகின்றனர்.. (கொடுப்பதில் தப்பேயில்லை.) எல்லோரிடமும் கேட்பார்கள் என தோணவில்லை, தேர்வு செய்தே கேட்கின்றனர்.

நோயால் அவதிப்பட்டு, குணமாகிய பலர் இங்கேயே வேலைப்பார்க்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. வியாதியின் தன்மையை அறிந்ததாலோ என்னவோ,  கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல், முகம் சுளிக்காமல், சோர்ந்து உட்காராமல் உழைக்கிறார்கள்.

தவிர , தன்னார்வளர்கள் பலரை பார்க்க முடிந்தது. சாப்பாடு நேரத்தில், நோயாளிகளை காக்க வைக்காமல் இருக்க, இவர்கள் அந்த நேரத்தில் வேலை செய்கிறார்கள்.

குறைகள் : மருத்துமனை வசதிகள் தனியார் மருத்துவமனைகளை போல இருக்காது. சுத்தமாக வைத்திருந்தாலும், நாம் எதிர்ப்பார்க்கும் hygienic  இருக்க வாய்ப்பில்லை. கேன்டீன் உணவுகள் சுமாராகவே இருக்கும், அங்கும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்க முடியாது. தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருத்துமனையின் வசதிகள் நிச்சயம் திருப்தி அளிக்காது. !

மருத்துவமனை இணையத்தளத்திலிருந்து->புற்றுநோய் வராமல் தவிர்க்க:

Abstinence from tobacco
Balanced diet
Personal hygiene
Vaccines
# Adyar Cancer Institute

எனக்கு 20 உனக்கு 18

எனக்கு எல்லாந்தெரியும்... வாயமூடும்மா....

ஆமா நவீன் உனக்கு எல்லாந்தெரியும்!!! தெரியாததுன்னு ஒன்னுமேயில்ல..  ஒன்னு செய்யி, நல்லா யோசிச்சி எதாது ஒன்னு உனக்கு  ''தெரியல' னு சொல்லுப்பாக்கலாம்...

(அடுத்த செகண்ட் ) 20 வருசமா சமைக்கற, இருந்தாலும் ஒழுங்கா சமைக்கமாட்ற, அதான் ஏன்னு எனக்கு "தெரியல"

:))))))))))))) ஏன்டா ஏன்ன்ன்?

*****************

அம்மாக்கு அடிக்கடி தலவலி வருதுடா... நேத்திக்கு பூரா தலவலி.. அங்கக்கூட இப்படி வரும்.. இங்க தொடர்ந்து வருது... இன்னைக்கு காலையிலேயே ஆரம்பிச்சிடுச்சி...(தலைவலியில் முகமெல்லாம் வாடி, ஒரே அழுவாச்சி டயலாக் டெலிவரி செய்யறேன்)

இல்லாத மூளைய ஓவரா ஓடவிட்டா இப்படிதான் தலவலி வரும்...

.. :))))))))))))))))))


  *************
காலையிலேயே வூட்டுக்கார்க்கிட்ட இருந்து ஃபோன்.. (அவரா அழைக்கல....மிஸ் கால் கொடுத்து கூப்பிட்டவச்சேன்.)

........ஹல்லோ.. நவீன் கிட்ட கொடுக்கட்டா?

குடு குடு..

இந்தப்பா... அப்பா லைன்ல....

............................

தாங்கஸ்....

..............................
....

எனக்கென்ன வேணும்??!! அதான் அம்மாவை அனுப்பி வச்சிட்டீங்களே.......

..............................
.........

ம்ம்ம்

.......................

ம்ம்ம்ம்

இந்தா... (என்னிடம் ஃபோன் வந்தாச்சி..)

பாத்தியாடி... உன் புள்ளைய..?? அவன் பொறந்தநாளைக்கு உன்னையே கிஃப்ட்டா நினைக்கிறான்...!! (வயித்தெறிச்சல்)

:)))..சரி சரி.. வைக்கிறேன் எனக்கு வேல இருக்கு.. !!

# ஐப்பசி 1 # நவீன் பிறந்தநாள் # ப்ரவுடு மம்மி !!

**************
ஏதோ சீரியல் பாக்கும் போது,  அந்தம்மாக்கு மருமகள் சாப்பாடு கொடுப்பாங்க..

அந்தம்மா - "அரை உசுரு தான் இங்க இருக்கு.அதுக்கு எதுக்கு சாப்பாடு...??" (ஏன்னா வூட்டுக்கார் வீட்டை விட்டு ஓடிட்டார், இவங்க சோகத்தில் இருக்காங்க)

நான் உடனே என் வூட்டுக்காரைப்பாத்து..

"ஏன்ப்பா..நான் சென்னை போயிட்டா,  உங்க அரை உசுரும் போயிடுமே என்னப்பா செய்வீங்க? " ன்னு முகத்தை சீரியல் ஃபீலிங் எஃபெக்டோட வச்சிக்கிட்டு ரொம்ப சோகமா கேட்டேன்..

டகால் னு என் பக்கம் திரும்பி..

"மிச்சமிருக்க அரை உசுரோட நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி நல்லா சுத்திக்கிட்டு நிம்மதியா இருப்பேன்.."

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர் *************

 ஒரு வேலையாக மாம்ஸ் ஆபிஸ் போயிருந்தேன். அவர் ரூமில் அவரை ஃபோட்டோ எடுத்து புள்ளைக்கு வாட்சப்பில் அனுப்பினேன்.

"ஏன் அவரு நெக் பேல்ட் போடல?

"அவரு ரொம்ப நாளா போட்டுக்கறது இல்லையே"

"டாக்டர் சொன்னாரா?"

"இல்ல, அவரே தான் போட்டுக்கறது  இல்ல"

"ஏன் நீ அவரை உன்ன மாதிரி மாத்தின"

"ம்க்கும் .... போட்டுக்கோங்கன்னு சொன்னா சிடு சிடுன்னு திட்றாரு... "

"டாக்டர் சொல்ற வர கழட்டக்கூடாது, வலி இல்லன்னா சரி ஆகிடுத்துன்னு அர்த்தம் இல்ல"

"அடேய்..இதெல்லாம் நீ அவர் கிட்ட நேரா சொல்லு..ஏன் என் உயிர வாங்கற? "

"அவரு என்னை திருத்த உன்னை அனுப்பறாரு இல்ல..for the same reason am sending you to him , no direct dealing...."

"அடப்பாவி..?!!! "

**************

தங்கும் விடுதியின் முகப்பு அறை, வூட்டுக்கார் அறை வாடகையை கொடுத்துட்டு இருந்தார்.

முகப்பு அறையில் ஒரு பக்கம் சுவர் ஓரமாக, ஒரு மிஷின் இருந்தது. கிட்டக்க போய்  பார்த்தேன். மிஷினின் மேல் பக்கம் Brown, Cream, Black என்று சரியான இடைவெளியில் எழுதியிருந்ந்தது. கீழே ஒரு உருளை, உருளையிலிருந்து காஃபி மிஷினில் இருப்பது போல சின்ன குழாய் போல் தெரிந்தது. சரி காஃபி மிஷின் போல, ரிப்பேர்னு இங்க வச்சியிருக்காங்க..ன்னு நானே நினைச்சிக்கிட்டு, அங்கு நின்றிருந்த, விடுதியில் வேலை செய்யும் ஒருவரிடம்..

ஹே க்யா? காஃபி மிஷின் ஹே?!!

"நஹி மேடம், ஓ ஷூ பாலிஷிங் மிஷின்.."

அவ்வ்... ஷூ பாலிஷ் மிஷினா...? இதையா காஃபி மிஷின் னு நினைச்சேன்.. ஆஹா எம்புட்டு அறிவுன்னு, அதை திரும்ப  நோட்டம் விட்டேன்,, ஷூ பாலிஷ் செய்ய பிரஷ் போன்ற அமைப்பும் இருந்தன.

நாம தான் ஓட்டவாயாச்சே.. வெக்கம் மானம் எல்லாம் பாக்காம வூட்டுக்கார்கிட்ட வந்து விசயத்தை சொன்னேன்.

அடிப்பாவி.. அது ஷூ பாலிஷ் மிஷின்னு தெரியாதா? ன்னு குபுக் குன்னு சிரிப்பு..

அவர் சிரிக்கும் போதே, பின்னாடி லைட்டா திரும்பி பாத்தேன். எனக்கு பதில் சொல்லும் போது சிரிக்காத அந்த வேலையாள் இப்போது சிரிப்பை மறைக்க முடியாமல் சிரிச்சிட்டு இருந்தாரூ..

....வூட்டுக்காரிடம் , பாருங்க உங்களால தான் அவரும் சிரிக்கறாரு...

"யாரா இருந்தாலும் சிரிப்பாங்க. உனக்கு ஓன்னு தெரியலைன்னா நேரா ..அது என்னன்னு கேட்டிருக்கலாம் இல்ல.... ஏன் காஃபி மிஷினா ன்னு கேட்டு அசிங்கப்பட்ட?"

ஆமா கேட்டிருக்கலாம். ஷூ வ மிஷின் ல பாலிஷ் பண்ணுவாங்கன்னு சத்தியமா எனக்குத்தெரியாது, இப்ப தான் முதல் முறையா பாக்கறேன். அதும் க்ரீம் னு எழுதியிருந்ததால் தான் காஃபின்னு நினைச்சிட்டேன்.. :((

# வெறி big பல்பு :((

***********
"இவருக்கு (விக்ரம்) ரொம்ப வயசாகிடுச்சிப்பா, இன்னும் என்ன ஹீரோ? இனிமே அப்பாவா தாத்தாவா நடிக்கலாம், பாக்க சகிக்கல.."

ஒரு மாதிரியா என்னை திரும்பி பாத்தாரூ.... (அப்பவே உசாரா ஆகியிருக்கனும்)

"அட... ஏன்ப்பா அப்படி பாக்கறீங்க.. (சன் டிவியில் சைமா நிகழ்ச்சி பாத்துட்டே இருக்கோம்) நீங்களேப்பாருங்க.. தாடையெல்லாம் கீழ இறங்கிப்போச்சி.. ரொம்ப வயசு தெரியுது... (இன்னொ்ரு சேனலில் அர்ஜுன் படம்) அந்த அர்ஜூன் கூட.. ரொம்ப வயசு தெரியுது. பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்துக்கொடுத்து பேரக்கொழந்த எடுத்தது எல்லாம்  ஏன் இன்னும் ஹீரோவா நடிச்சி தொலைக்கறாங்க.....

நிதானமா திரும்பிப்பாத்து.. "ஏண்டி உனக்கு மனசாட்சியே இல்லையா? உங்க தலைவருக்கு என்ன 16 வயசா?  அவரு நடிச்சா மட்டும் விசில் அடிச்சி பாக்கற? அவருக்கு வயசே தெரியலையா..? இதெல்லாம் முதல்ல அவருக்கு சொல்லு.."

ஆஆஆவ்வ்வ்வ்... (இதுக்கு தான் முதல்லேயே லுக்கு விட்டாரோ..??...) அவரு வேற இவங்கெல்லாம் வேற... எங்க தலைவர் ஸ்டைல் அழகு எல்லாம் இவங்களுக்கு வருமா?....இந்த வயசில் அவரு.....

வாயில் கையை வச்சி மூடி காமிச்சார்...

நானும் கப் சிப்........

**************
பீட்டர் தாத்ஸ் ;  You dont choose your family. They are God's Gift to you, as you are to them. -Desmond Tutu
u don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html