உங்கள கடிச்சது பாம்பா?

கல்யாணி நகரம் (மேற்குவங்கம்), கேரளாவைப்போல இருக்குமென்று 
எழுதியிருந்தேன். ஊர் முழுக்க பச்சை பசேரென்று தான் இருக்கும், வானுயர்ந்த மரங்கள், விதவிதமான வண்ண வண்ண பூச்செடிகள், கொடிகள், செடிகள் என வீடுகள் முழுக்க பாக்கு, தேக்கு, தென்னை, பலா, வாழை, மா என மரங்களும் பூச்செடிகளும் கொடிகளுமாகவே இருக்கும்.
குளிர் காலங்களில் ஆரஞ்சு நிறத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கும் ஒரு கொடி வீட்டு முகப்பிலும் , அதே கொடி இரண்டாவது மாடி வரையிலும் வரவழைத்து விட்டாச்சி..

தினமும் மாலையில், பக்கத்திலிருக்கும் மைதானத்திற்கு நடக்க செல்வேன். அப்படி செல்கையில் ஒருநாள், தெரு முக்கை தாண்டுவதற்குள் இடது கையில் வளையல் போடும் இடத்தில் அரித்தது. லேசாக சொறிந்தபடி, நவீனிடம் .."திடீர்னு அரிக்குதுடா'னு சொன்னேன். எப்பவும் போல.." கொசு கடிச்சி இருக்கும்.. என்னைக்கூட தான் கடிக்குது.. உன்ன மாதிரி சொல்லிட்டா இருக்கேன்.. சும்மா வாம்மா" என்றான்.

"கொசுக்கடிக்கறது எல்லாம் நமக்கு புதுசா? கொசுக்கடிச்சா இப்படி அரிக்காதுடா... சரி வா.." ன்னு நானும் பெருசா ஒன்னும் கண்டுக்கல... ஆனால்.. நேரம் ஆக ஆக கை..மற்றொரு கை, கழுத்து, காது..இடுப்பு , தொடைன்னு, முதுகுனு அரிப்பு பரவிக்கொண்டே வந்தது. முகத்தில் மட்டும் நானே கை வைக்கல..மற்றபடி எல்லா இடத்திலும் தாங்கமுடியாமல் சொறிந்து கொண்டிருந்தேன்.. இருட்டு ஒன்றும் தெரியவில்லை.

வீட்டிற்கு வந்தப்பிறகு தான் கவனித்தேன்., அல்மோஸ்ட் 40% ஐ படம் விக்ரம் போல ஆகியிருந்தேன். பெருசு பெருசா தண்டு தண்டாக வீங்கி கை, கால் முகம்னு பாரமட்சமின்றி வீங்கி இருந்தது. நவீனும் அவரும் பார்த்து பயந்துட்டாங்க..
நான் கம்பளி பூச்சியாக இருக்குமென்று நினைத்து, உடனே சுடுதண்ணீர் வைத்து குளித்தேன். 10 நிமிடம் அரிப்பு இல்லை,, ஆனால் திரும்பவும் ஆரம்பித்தது. சுடுதண்ணீரில் குளித்தவுடன் வீக்கம் லேசாக குறைந்து சிகப்பு திட்டு திட்டுகளாக உடல் முழுக்கத்தெரிய ஆரம்பித்தது. ஆனால் அதன் மேல் வீக்கமும் ஆரம்பித்தது. 

நமக்கு தான் உணவே மருந்தாச்சே? ஆயா சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வர, 15 மிளகை எடுத்து வாயில் போட்டு, அடிநாக்கில் பட்டுவிடாமல் மென்று,  காரம் நாக்கை தொடுவதற்குள் தண்ணீர் குடித்து விழுங்கினேன்..
நேரம் சென்றதே ஒழிய அரிப்பும், வீக்கமும் குறையவேயில்லை. சரி இரவானால் டாக்டர் கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது, என மருத்துமனை சென்று விடலாம்னு கிளம்பினோம். மருத்துவமனையில் மருத்துவர், தைரியம் சொல்லி ஊசிப்போட்டுக்கொள்ள பரிந்துரைத்தார். நர்சம்மா வந்து ஒரே சமயத்தில் இரண்டு இடுப்பிலும் இரண்டு ஊசிப்போட்டாங்க.

பெரிய லிஸ்ட் டாக மருந்து சீட்டு கொடுக்கப்பட்டது. ஏன் இப்படி? ன்னு கேட்டால், விஷப்பூச்சி ஏதோ கடிச்சியிருக்கு, விஷம் இரத்தத்தில் பரவி, உடல் முழுக்க இப்படி ஆகிவிட்டது, இரத்தத்தில் கலந்த விஷத்தை முற்றிலும் எடுக்கனும். அதற்கு குறைந்தது 15 நாளாவது 3 வேலை மாத்திரை சாப்பிடனும்னு சொல்லிட்டார்.

என்ன கொடுமை இது.. மாத்திரை மருந்துன்னாவே தெறிச்சி ஓடுவேன்.. எனக்கு 15 நாள், ஒரு பிடி மாத்திரை அதும் 3 வேலையும்.... நினைக்கும் போதே கண்ணைக்கட்டியது. ஆனால்.. வீக்கத்தையும், சிகப்பு திட்டுகளையும் பார்க்கும் போது.. மாத்திரை எவ்ளோ பரவாயில்லை என்றே தோன்றியது.

தூக்கத்திற்கு மிக வீரிய தூக்கமாத்திரை எழுதித்தரப்பட்டது. அதும் ஒன்றல்ல..இரண்டு. மருந்துக்கடைக்காரர், என் மேல் பரிதாபப்பட்டு, "அந்தம்மா தூங்காட்டியும் பரவாயில்ல.. இந்த மாத்திரை உடலுக்கு நல்லதல்ல...நீங்க இதை அவங்களுக்கு கொடுக்க வேணாம்,, அதனால் வாங்கிக்கவும் வேணாம்னு" சொல்லி கொடுக்கவேயில்லை. கெட்டதிலும் ஒரு நல்லது.

விடியற்காலை பெங்களூர் பயணம். கையும் காலும் இப்படி வீங்கி இருந்தால் நிச்சயம் விமானத்தில் அனுமதிக்க மாட்டாங்க, இது இரவுக்குள் சரியாகனும்னு படுத்தேன். ஊசி , மாத்திரைகள் மயக்கத்தை த்தாண்டி ஏதோ உடல் உபாதை சரியாக தூங்கல.. 3 மணிக்கு எழுந்தாச்சி. குளிக்கும் போது கையில் ஓரிடத்தில் எரிந்தது.  லேசாக கறுத்து, பெரிய கடுகு அளவில், பூச்சிக்கடித்த வடு ரணம் மாறாமல் தெரிந்தது. 
நவீனிடமும் அவரிடமும் காட்டினேன். "இவ்ளாம் பெருசா ஏதோ கடிச்சியிருக்கு, இப்பவரைக்கும் அது என்ன ஏதுன்னு உனக்கு தெரியலன்னு" திட்டு விழுந்தது.  இத்தனை மாத்திரை மருந்துன்னு சாப்பிட்டும் அந்த பூச்சிக்கடித்த இடத்தில் ரணம் போக மூன்று நாட்கள் ஆகின. நச்சு  அதிகமுள்ள பூச்சின்னு புரிந்தது.

மாத்திரையை 15 நாளும் சாப்பிட்டு தொலைக்க வேண்டியிருந்தது. வீட்டு ஓனரிடம் 2 நாள் முந்திதான் இதைப்பற்றி சொன்னேன். அதிர்ச்சியாகி,, நம்மையும் கடித்துவிட்டால் என்னா செய்வதுன்னு, தோட்டக்காரனிடம் சொல்லி, கொடியை எடுக்க சொல்றேன்னு சொன்னாங்க. நான் மறுத்து, "குளிர் காலம் இப்பதானே ஆரம்பிக்குது, அது பூத்து முடித்தவுடன் எடுத்துக்கலாம், மருந்து மட்டும் அடிக்க சொல்லுங்கன்னு""  சொன்னேன். மெதுவா...கேக்கறாங்க..."உங்கள கடிச்சது பாம்பா??"

"ஞே" 

அடப்பாவிகளா,,,பாம்பா??? ..பாம்புக்கூட கடிக்குமா இங்க? ன்னு மனசுல நினைச்சிக்கிட்டு, "பாம்பு கடிச்சா கடிச்ச இடத்தில் இரண்டு மார்க் இருக்கும் (அறிவு?? இந்த அறிவுக்கு காரணம் ..நம்மோட தமிழ் சினிமாக்கள்) ஆனா எனக்கு ஓரு மார்க் தான் இருந்துச்சி.. பாம்பு மாதிரி ஏதோ ஒன்னு தான் கடிச்சியி்ருக்கு...ஆனா அது பாம்பு இல்லைன்னு" சொன்னேன்.

இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு.. கேரளாவில் வேறு விதமான அனுபவங்கள் கிடைத்தது.. இங்கே இப்படி....

மொத்தத்தில்.. நம் உடலில் விஷப்பூச்சி கடிச்சாலும் சாகாமல் இருக்குமளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று ஒரு நிம்மதி.

இன்று தோட்டக்காரர் வந்து என்னை பெங்காலியில் விசாரித்துவிட்டு, "இதுல அந்தமாதிரி பூச்சியெல்லாம் இருக்காதும்மா"ன்னு ,முக வாட்டத்தோடு, கொடி, செடின்னு எல்லாவற்றிலும் பூச்சி மருந்து அடிச்சிட்டு போனார்.

பீட்டர் தாத்ஸ்: Everyone can identify with a fragrant garden, with beauty of sunset, with the quiet of nature, with a warm and cozy cottage.

கேத்தகோம்ப் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #5

Catacombs of Paris :  கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட மனிதர்களின் ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகளும், எலும்புகளும் பூமிக்கு அடியில் பாதாளாத்தில் மிக அழகாக கொலு பொம்மைகள் போன்று அடுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  ஒரே இடத்தில்
அமைக்கப்பட்ட 200 வளைவு படிக்கட்டுகளில் ல் இறங்கி உள்ளேப்போனால், நீண்ட இருண்ட குகை... நடக்க நடக்க சில கிமி வளைந்து வளைந்து செல்லும் நடைப்பயணம். கடைசியில் இந்த எலும்புக்கூடுகள் பகுதிக்கு செல்கிறது. இதுவும் சில கிமி இருக்கும்.. இத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டனரா?  என்ற ஆதங்கம் வருகிறது.  ஆனால் இவற்றைப்பார்த்து பயமே வரவில்லை. குழந்தைகள், இதயம் பலகீனமானவர்கள் அனுமதியில்லை. ஏதோ ஒரு இடத்தில் நுழைந்தோம்.. வெளியில் வர அதே 200 வளைவு படிக்கட்டுகள், வெளியில் வந்தால்.. நுழைந்த இடத்திலிருந்து 1 கிமி தூரம் தள்ளி வெளிவாசல் இருந்தது.

கூகுளில் தேடியதில், இவங்க தெளிவாக இதைப்பற்றி எழுதி இருந்தாங்க.. காப்பி செய்தாச்சி..

Content courtesy Cakes Altrincham, United Kingdom : Thank you!

//“Walls of Skulls & Bones!”
Reviewed 8 November 2006
We visited the Catacombs on a Saturday morning at about 11am. They had opened at 10am and there was already a queue as they only allow 200 visitors in the catacombs at any one time. You'll need to be fairly fit to visit as there are over 100 steps down into the tunnels and around 80 deep spiraled steps to get back to the surface - and no resting point! Once in the tunnels there are a few rooms featuring boards telling the history of the catacombs and then a very very long walk through a narrow tunnel with a low ceiling until you reach the bones. I wasn't sure what to expect, maybe a few skeletons arranged into body shapes. What I found were literally millions of peoples bones lining metre after metre of walls both sides of the tunnels, neatly stacked and arranged in patterns with femur ends and skulls making up most of the walls. The number of bones were amazing, stretching as far as the eye could see.


The catacombs are one of the strangest places I have ever visited. Certainly not suitable for children! It was a very spooky place with low lighting but I didn't find it as emotional as I thought I might. There is no tragic story to the bones, some came from a mass grave of people killed by an epidemic of some sorts, but most were just taken there from other graveyards. I think if they were all from the war or some other disaster I might have been able to empathize a little more. Nevertheless, its a very interesting place to visit. I certainly don't envy the people who had to arrange all the bones, it must have taken years.

Other things to mention are; wear sensible shoes. The ground is potholed and its a little wet and muddy in some places, plus there are a lot of tunnels to walk through. It wasn't particularly cold down there but the temperature difference may be noticed in the summer heat, so take a jumper. Don't take luggage -
they can't store it, and the entrance is streets away from the exit. Also, they will check any handbags for bones when you exit. Yes, people really do try to take them. There was a skull sitting on top of the counter that they had found in someone's bag the day before. Unbelievable.//
மேல் தரப்பட்டுள்ள தகவல்கள் , இவ்விடம் செல்ல போதுமானதாக இருக்குமென நினைக்கிறேன். நவீனோடு வெக சில இடங்களே செல்ல நேரம் இருந்தது, அதில் இதுவும் ஒன்று. இதற்கான வரிசையில் நிற்கும் போதே நவீனுக்கும் எனக்கும் ஏகப்பட்ட வாக்குவாதங்கள். அநேகமாக அது உணவைப்பற்றியும், ஃப்ரான்ஸ் நகரின் சுத்தம் மற்றும் மக்களின் பழக்கவழக்கங்கள், பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியதுமாக இருந்தது.

எப்போதும் இந்தியாவை விட்டுக்கொடுக்காமல் பேசிய நானும், ப்ளடி இந்தியன் என என் பழக்க வழக்கங்களை திட்டியபடியே அவனும் இருந்தான். அதாது, பொது இடத்தில் சத்தமில்லாமல் பேசவும், கேமராவை வைத்துக்கொண்டு ஃபோட்டோ எடுத்தபடியே இருந்ததால், எதை எடுக்கனும் யாரை எடுக்கக்கூடாது, எடுத்தால் குற்றம் என்றும், ரயில் நிலைய படிக்கட்டுகளில் எந்தப்பக்கம் நிற்கவேண்டும், ரயிலில் எப்படி நிற்க வேண்டும், உட்காரவேண்டும் என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தான். வேகமாக நடக்கவேண்டுமென நான் கத்த கத்த சின்னப்புள்ளையை இழுத்துக்கிட்டு போறாப்ல என்னை இழுத்துக்கொண்டும் ஓடினான்.

உணவு'ன்னு வரும் போது, கோவத்தின் உச்சிக்கு போனான். ஆம், வெளியில் சென்றால்,அந்த நாட்டு உணவு எனக்குப்பிடிக்கவில்லை என வெறும் பன் ' ஐ சாப்பிட்டும் , திரவ உணவுகளை சாப்பிட்டும் காலம் கடத்திவந்தேன். நவீனோடு சென்ற போதும், அவர்கள் உணவை சாப்பிடமாட்டேன் என அடம் பிடிக்க, விடாமல் ஏதோ உணவை வாங்கிவந்து ," எனக்கு ஃபிரன்ச் தெரியும், இது சிக்கன், சாப்பிடு" என்று கட்டாயப்படுத்தி கொடுத்தான். பாதி சாப்பிட்டு முடித்தவுடன்,அது 'பன்றிக்கறி' எனக்கூற.... குமட்டிக்கொண்டு வந்தது. பாதியை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டு, கோவமும் அழுகையுமாய்.."என்னை பன்னி சாப்பிட வச்சிட்ட இல்ல நீனு"ன்னு நவீனோடு சண்டையிட... அவனோ.. "இவ்ளோநேரம் நல்லா ருசிச்சி ருசிச்சி சாப்பிட்ட இல்ல..அது பன்னியா கோழியான்னு கூட உனக்கு வித்தியாசம் தெரியல இல்ல..?..அப்புறம் என்ன ?. சாப்பிட்டு பழகு" னு திரும்ப பதில் சொல்ல.. .. இருவருக்கும் லடாய் அதிகமாகி, "இனிமே கொலப்பட்னி இருந்தாலும் இருப்பேன், நீங்க இரண்டுப்பேரும் எது வாங்கிக்கொடுத்தாலும் நான் சாப்பிடமாட்டேன்" என சவால் விட..

வூட்டுக்கார் நடுவில் வந்து... அவனை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு, என்னிடம் "நீ சாப்பிட்டது சிக்கன் தான்.. அவன் உன்னை சும்மா கிண்டல் செய்து வெறுப்பேத்தறான்... அதையும் நீ நம்பி.. வம்பு பண்ற?.. இந்தா சாப்பிடு இது சிக்கன் தான்".னு கொடுத்தார்..

சிக்கனா இருந்தாலும் எனக்கு வேணாம்னு தண்ணிய குடிச்சிட்டு ..அதன் பிறகு அவர்கள் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிடாமல், வீட்டுக்கு வந்து நான் சமைத்ததை மட்டுமே சாப்பிட்டேன்..

இத்தனையும் இந்த காத்தேகோம்ப்ஸ் பார்க்க வரிசையில் நிற்கும் போது நடந்தவை.. மிக மிக மெதுவாக நகர்ந்த வரிசையில், டிக்கெட் வாங்கவே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வேண்டியிருந்தது.

பயணக்குறிப்பு - 4

தொடரும்....

Images courtesy Google : Thx

ஐஃபில் டவரில் புளிசாதம் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #4

முந்தைய பதிவுகள் :
1. பாரிஸ் பயணத்துவக்கம்
2. நவீன் விடுதி அறை
3. டிஸ்னி பார்க் - பாரிஸ்

நவீனுக்கு பிடித்த காய்கறிகளை, பக்கத்திலிருந்த இலங்கை தமிழர் கடையில் முந்தின இரவே வாங்கி வைத்திருந்தேன். காலை சிற்றூண்டியோடு, சமையலும் முடித்து, முந்தின நாள் வெளியில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டத்தில், கொஞ்சம் புளிக்காய்ச்சல் செய்து எங்களுக்கு சாப்பாடும் கட்டிக்கொண்டேன்.  புளிசாதம் தொட்டுக்கொள்ள உருளை வறுவல். !!

இன்று, நாங்கள் போக திட்டமிட்ட இடம் "Eiffel Tower"  

நவீன் இருக்குமிடத்திலிருந்து ரயிலில், இரண்டு இடங்கள் இறங்கி , ரயில் மாற வேண்டும். இதெல்லாம் தெரியாது தான், ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் போதே, எங்களுக்கு ஒரு Metro & RER Map ஐ கொடுத்து, மொழி தெரியாததால், செய்கையாலேயே எங்கு இறங்கி ரயில் மாறனும்னு பொறுமையாக விளக்கம் சொல்லி டிக்கெட் கொடுத்தார் அந்த ஃப்ரான்ஸ் பெண்.

பொதுவாக லைன்' கள் 
A, B,C,D, E என இருக்கின்றன, அவைக்கு தனித்தனியான வண்ணங்கள். இப்ப A லிருந்து D க்கு போகவேண்டுமென்றால், எந்த ரயில் நிலையிலிருந்து D க்கு கனெக்ஷன் ரயில்கள் இருக்கின்றன என்பதை புரிந்துக்கொண்டால் போதும். திரும்ப வரும்போது அபப்டியே வந்துவிடலாம்.
இதில் இன்னொன்று, மாறவேண்டிய ரயில்
நிலையில் இறங்கினாலும், அந்த ரயில் நிலையத்தில் D போக ரயில் எங்கு நிற்கும் என்பதை தேடிக்கண்டுபிடித்து, அந்த ரயில் நிலையத்திற்கு போகவேண்டி இருக்கும். இப்படி மாறவேண்டிய ரயில் நிலையங்கள் எல்லாமே கீழ்,மேல் என பல தளங்களை கொண்டும், பல்வேறு திசைகளிலும் மிக பெரிய நிலையங்களாக இருந்தன.
இதில் திசைமாறி சென்றால்..வேற என்ன குழப்பம் தான்.
  
மேப்'ஐயும், ரயிலின் உள்ளே எங்கே இறங்கவேண்டும் என்பதையும் இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டு, ஒருவழியாக டவர் இருக்கும் நிலையத்தை
அடைந்தோம். அங்கிருந்து 1-5 கிமி மேல் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், ரயில் நிலைத்திலிருந்தே டவர் தெரிந்ததாலும், மக்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களையும் பார்த்தவாறு போய் சேர்ந்தோம்.
ஐஃபில் டவர் -பிரம்மாண்டம். அதே சமயம் தாஜ்மகால் பார்க்கும் போது "ஒரு அதிசயத்தை பார்க்கின்ற" உணர்வு எனக்கு இதைப்பார்க்கும் போது வரவில்லை. இரும்பு, அதன் நிறம் போன்றவை காரணமாக இருக்கலாம். இரவில் வண்ணவிளக்குகளின் அலங்காரத்தில் ஐஃபில் டவர் மிக அற்புதமாக இருக்குமென்று ஊகிக்கிறேன், இரவில் போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

டவரின் அடித்தளத்தில், நான்கு புறத்தில் ஒன்றை தவிர்த்து மிச்சம் மூன்று இடத்திலும் மக்கள் வரிசைகள் தென்பட்டன. எதில் கூட்டம் குறைவாக இருந்ததோ அதில் சென்று நின்றுக்கொண்டோம். டிக்கெட் " லிஃப்ட்"" என்று தான் கேட்டு வாங்கினார். ஆனால் எங்க, அவங்க பாஷை நமக்கு புரியல..டிக்கெட்டில் எழுதி இருப்பதும் நமக்கு புரியல.. உள்ளே போனால் படிக்கட்டுகள்..

சரி.. இதோ வந்துடும் லிஃப்ட்'னு.. முதல் தளம் 57 மீ உயரம், மொத்தம் 328 படிக்கட்டுகள் ஏறியாச்சி. ஒன்னும் முடியல எனக்கு.. யப்பா போதும்டா சாமின்னு மேலேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டேன்.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுத்த என் வீட்டுக்காரர், "வா.. மேல போகலாம்னு கூப்பிட்டாரு.. "

"என்னாது மேலேயா? முடியவே முடியாது.. எனக்கு கால் வலிக்குதுன்னு " சொல்லிட்டேன்..

முதல் தளத்தில் ரெஸ்ட்டாரன்ட் முதற்கொண்டு எல்லா வசதிகளும் இருந்தன. எல்லாப்பக்கங்களும் சுற்றி பார்த்தோம். திரும்பவும், "வா..இவ்ளோ தூரம் வந்துட்டோம், இரண்டாவது தளம் வரைக்கும் போயிடலாம்.. அப்புறம் லிஃப்ட் தான்.. மெதுவா ஏறலாம் வா" ன்னு விடல என்னை..அவர் என்னை விட்டுட்டு தனியாக போகமாட்டார்.. சரி மெதுவாக போகலாம்னு இரண்டாவது தளம்  ஏற ஆரம்பித்தோம். 115 மீ, 340 படிக்கட்டுகள்.. ஒருவழியாக ஏறிட்டோம்.

எப்பவுமே முடியலன்னு சொல்வேனே ஒழிய ,  ஆரம்பிச்சிட்டா நடுவில்
நிற்கும் பழக்கம் எனக்கில்ல. மூச்சு வாங்கினாலும், முட்டி வலித்தாலும் ..ம்ஹும்..நிற்கவோ உட்காரவோ மாட்டேன். இங்கவே திருப்பதி மலைஏறும் போது அப்படிதான். அங்கவும் அப்படியே நிற்காமல் ஏறி முடிச்சாச்சி.

இரண்டாவது தளத்தில் குழப்பம் ஆரம்பித்தது. அதாது எங்களின் டிக்கெட்டிற்கு மேல் தளத்திற்கு போக முடியுமா என்பது தான். காரணம் , மக்கள் வரிசைகளில் மேல் தளம் போக டிக்கெட் வாங்க நின்றிருந்தனர்.  டிக்கெட் வாங்கி போகனும்னா "வரவே மாட்டேன்" நானுன்னு பிடிவாதமாக சொல்லிட்டேன். ஆனா, இவரோ.. லிஃப்ட் 'னு கேட்டேன், மேல் தளம் வரைன்னு கேட்டு தான் வாங்கினேன்.. னு விசாரிக்க சென்றார். ஏறி வந்ததில் உடல் சோர்ந்து போனது ஒரு பக்கம், பசி ஒரு பக்கம்.

எடறா அந்த புளி சாத மூட்டைன்னு... ஐஃபில் டவர் இரண்டாவது தளத்தில் புளி சாதத்தை பிரிச்சாச்சி..
இந்தியர்களால் மட்டுமே இப்படியான வேலையை செய்யமுடியும் என்று நிச்சயம் சொல்லமுடியும். அங்கு வந்த வேறு எந்த அயல் நாட்டவரும் சாப்பாடு மூட்டை கட்டிட்டு வரல. அதுவும் சாதம் எடுத்துட்டு வர சான்ஸே இல்லை ..
இருவரும் புளிசாதம் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வுவெடுத்துவிட்டு, அதே டிக்கெட்டில் , மேல் தளம் போகலாம் என்று தெரிந்தவுடன், அதற்கான வரிசையில் சென்று நின்றோம். 

இந்த முறை ஏமாற்றமில்லாமல் லிஃப்ட் தான். மேல் தளத்திற்கு மொத்தம் 4 லிஃப்ட்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஒன்று அடித்தளத்திலிருந்து நேரடியாக மேல் தளம் வருகிறது என்று புரிந்தது. அதற்கான கட்டனம் அதிகம். மிச்சம் இருக்கும் 3 லிஃப்ட்களும் இரண்டாவது தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
பொதுவாக, பாரிஸிலிருந்து திரும்பும் வரை, எந்த செக்யூரிட்டி செக்கிங்கிலும் நானோ அவரோ தீவரமாக கண்காணிக்க படல.. ஐஃப்பில் டவர் உட்பட, பல இடங்களில் எங்களின் பையை கூட அவங்க பரிசோதனை செய்யல. அதே சமயம்..  எங்களுடன் வந்த அதே நாட்டவர், மற்ற நாட்டுக்காரர்களை அக்கு வேறு ஆணி வேறாக பரிசோதித்தே அனுப்பினர். 
இருவரின் முகமும் அம்புட்டு அழகாவும், பால் வடியும் குழந்தை தனத்தோடும், மிக மிக நல்லவங்களாகவும் காட்டியிருக்குன்னு இதை படிக்கறவங்க புரிஞ்சிக்கனும் !

லிஃப்ட்டில் மேல் தளம் சென்றாகிவிட்டது.  உலக அதிசயம் ஒன்றின் உச்சியில் நிற்கிறோம் என்ற எண்ணம் அங்கிருந்து வரும் வரை இருந்தது, மேலிருந்து கீழே இருப்பவற்றை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. மேல் நிமிர்ந்து ஐஃபில் டவரின் அந்த உச்சியை பார்த்தேன்.... மட்டற்ற மகிழ்ச்சி, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்வு அங்கு நிற்கும் வரை இருந்துக்கொண்டே இருந்தது..

மேல் தளத்திலும் லிக்கர் ஷாப் இருந்தது.. காதலர்களும், தம்பதிகளும் மெல்லிய கோப்பைகளில் தங்களுக்கு பிடித்த மது வகைகளை ஆர்வமாக வாங்கி அருந்தி, ஐஃப்பில் டவரின் மேல் தளத்திற்கு வந்ததை கொண்டாடினர். நமக்கு அந்த பழக்கம் இல்லாததால் அவர்களை எல்லாம் வேடிக்கைப்பார்த்தவாறு சுற்றிவந்தோம்.

திரும்ப, இறங்கும் போது..சோய்ய்ய்ய்ன்னு..நேராக கீழ் தளத்திற்கே கொண்டுவந்து விட்டதும் எதிர்ப்பார்க்காதது. அப்போது தான் யோசித்தேன்.. ஏறி வரும் போது எங்குமே எதிராக யாரும் இறங்கிவரவில்லை. மேல் தளத்திற்கு செல்லும் அனைவரும் நேரடியாக கீழ் தளத்திற்கு தான் வரமுடியும், அப்படியான வசதியை தான் செய்திருக்கிறார். திரும்பவும் படிகளில் இறங்கி வரவேண்டியதில்லை.

கீழே, பல்வேறு நாட்டுக்காரர்களையும் அவர்கள் மொழி, உடைகள், குழந்தைகள் , பெண்கள் என வேடிக்கைப்பார்த்தவாரே.. ஒரு கோன் ஐஸ்க்ரீம் 3 ஈரோன்னு கொடுத்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டே டவரின் கீழே ஒரு இடத்தில் இருந்த கூட்டத்திற்கு சென்று எட்டிப்பார்த்தோம். 4 இளைஞர்கள் விதவிதமான நடனம் ஆடி, பார்வையாளர்களை அசத்திக்கொண்டிருந்தனர். அதை சிறிது நேரம் வேடிக்கைப்பார்த்தோம்.

கறுப்பின இளைஞர்கள் ஐஃப்பில் டவர் மாடல் பொம்மைகளை கற்றையாக கைகளில் மாட்டிக்கொண்ட்டு விற்றுக்கொண்டிருந்தனர். திடீரென சத்தம் எழுப்பி தெறித்து தப்பித்து இங்கும் அங்குமாக ஓடினர்.. ஏன் இப்படின்னு பார்த்தால்,  அனுமதியில்லாமல் அவர்கள் அதை விற்பதால் போலிஸ் துரத்தி பிடிக்க..அவர்களிடமி்ருந்தே தப்பித்தனர்.

ஐஃபில் டவர் பார்த்தாச்சி... :) திரும்பி வரும் வழியெல்லாம் இந்த கறுப்பின இளைஞர்கள் நம்மூர் ரோடுகடையில் நின்று விற்போர் போன்று ஐஃபில் டவர் மாடல்களை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வாங்குவோர் மிகவும் குறைவாகவே இருந்தனர்.. விரல் விட்டு எண்ணும் அளவில்..  அரசு கடைகளில் வாங்குவோரே அதிகமாக இருந்தனர்.

தொடரும் ..

படங்கள் : கூகுளுக்கு நன்றி