அப்பா வருவாரா?

பாப் வைத்த தலைமுடி, முட்டிக்கால் தெரிய போட்டு இருந்த ஃப்ராக், அந்த சின்ன முகத்தில் கண்கள் முழுக்க சோகம், உள்ளுக்குள் ஒரு வித படப்படப்பு, பயம் எல்லாவற்றையும் அவளின் அம்மாவிற்கு தெரியாமல் மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் 8 வயது குட்டி பெண் அனுஷா. பொழுது விடிந்து பொழுது போனால் படிக்கட்டில் நின்று தெருவின் முக்கை வெறித்து பார்த்தவாரே இருந்தாள்.

"அப்பா வரமாட்டீங்களா? ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டீங்க? இங்கேயே விட்டு விடுவீங்களா? எனக்கு இங்க பிடிக்கல.. பயம்மா இருக்கு... இங்க யாரையுமே பிடிக்கல... அப்பா வந்துடுங்கப்பா..ப்ளீஸ். .வந்து என்னை கூட்டிட்டு போயிடுங்கப்பா.... " மனதுக்குள் அந்த சின்ன குழந்தையின் தொடர்ந்த புலம்பல் இதுவாகத்தான் இருந்தது.

சாப்பிட கூப்பிடும் போது உள்ளே செல்வதும் மற்ற நேரங்களில் படிகளே பழியாய் கிடப்பதும், தெரு முக்கையே அப்பாவின் வரவுக்காக பார்ப்பதுமாக காலம் கடத்தினாள்.

------------------------------


அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலையில் தலைக்கு குளித்துவிட்டு, மதியம் அப்பா சொன்னதற்காக படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள் அனுஷா. பலத்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அனுஷா, அப்பா அம்மா சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்தாள். வீட்டில் உள்ள சில பொருட்களை அவளின் அப்பா தூக்கி எரிந்து அம்மாவின் மேல் கோபத்தை காட்டிக்கொண்டு இருந்தார். அனுஷாவிற்கு அவர்களின் சண்டையை பார்த்து நெஞ்சு நடுங்கியது. பயத்தில் ஓரமாக போய் நின்று அவர்களின் சண்டையும் எதற்கு என்று புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு கட்டத்தில் அப்பா வேகமாக வெளியில் சென்றுவிட.. அம்மாவும்.. வேக வேகமாக பெட்டியை எடுத்து துணிமணிகளை நிரப்ப ஆரம்பித்தார்கள். கிளம்பும் போது "அனு வா போலாம்..:" என்றார்கள்.

"எங்கம்மா? "

"மெட்ராஸ்."

"எனக்கு ஸ்கூல் இருக்கும்மா.. நான் வரலை..."

"நீ வந்து தாண்டி ஆகனும்.. சீக்கிரம் கிளம்பு"

"ம்ம்மா.. .நான் வரலை அப்பாவை விட்டுட்டு வர மாட்டேன்... அப்பா கூடவே நான் இருக்கேன் நீங்க போங்க..."

அதற்கு மேல் அம்மா பேசவில்லை... கோபத்துடன் வந்து தொடையில் நறுக்கென்று ஒரு திருகு திருகினார்கள். வலியில் துடித்தாள் அனுஷா.....

"ம்ம்ம்.. பேசாமல் ...கிளம்பு சீக்கிரம்" அதட்டினார்கள்.

அம்மா கையை எடுத்தவுடன் குனிந்து தொடையை பார்த்தாள். அம்மா நகத்தோடு சேர்த்து கிள்ளியதால் ரத்தம் லேசாக வர ஆரம்பித்து எரிச்சலும் வலியும் இருந்தது. அதற்கு மேல் அனுஷாவிற்கு அம்மாவை எதிர்த்து பேச பயம்... வேண்டா வெறுப்பாக அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். வழியில் எல்லாம் அம்மா கோபமாக இருக்கிறார்கள் என்று வாயை திறக்காமல் இருந்தாள். மதுரையில் இருந்து சென்னை.,வெகு நேர பஸ் பிரயாணம். தூங்கி எழுந்திருக்கும் போது எல்லாம் வயிறு காலியாக இருந்தது, அவளுக்கு ரொம்பவும் பசித்தது. நடுவில் அம்மா மட்டும் இறங்கி என்னவோ சாப்பிட்டுவிட்டு, வரும் போது வேற்கடலை பர்பி வாங்கி வந்தார்கள். அம்மாவிடம் வேறு எதுவும் கேட்கவும் பயப்பட்டு, அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தவாறு வந்தாள் அனுஷா.

ஆயிற்று. அவளும் வந்து 18 நாட்கள் ஆயிற்று. அவளின் அப்பா இன்னும் வரவில்லை. அவளும் காத்திருப்பை நிறுத்தவில்லை. அனுஷாவிற்கு அப்பா வரவில்லை என்ற கவலையுடன் பள்ளியை பற்றிய நினைவு வேறு. இங்கு மாமா, பெரியம்மா வீடுகளில் எல்லாம் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றன. ஏன் அம்மா தன்னை மட்டும் இப்படி இங்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்?. அனுஷாவை பார்க்கும் போது எல்லாம் அவளின் அப்பாவை திட்டிக்கொண்டே இருக்கும் அம்மும்மா வேறு ஒரு பக்கம். அனுஷாவிற்கு அதனாலேயே அம்மும்மாவை கண்டாலே பிடிக்காமல் போனது. அந்த வீடும் பிடிக்கவில்லை. தனியாக இருந்தாள், யாரிடமும் பேசவோ, பழகவோ அவளுக்கு பிடிக்கவில்லை. அம்மா சில சமயம் படிக்கட்டில் உட்கார விடாமல் உள்ளே தள்ளி கதவை சாத்தி விடுகிறார்கள். பெரிய மாமா ரூமில் உள்ள ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரு முக்கு தெரியும்... அதனால் அந்த ஜன்னலில் ஏறி நின்று திரும்பவும் அப்பா வருகிறாரா என்று பார்க்க ஆரம்பித்தாள் அனுஷா.

-------------------------------------

திடீரென்று ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும். பெரியம்மா வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. கணேஷ் வந்து இருக்கிறார், அனுஷாவையும், சுமதியையும் அழைத்துக்கொண்டு நீங்களும் வாருங்கள் என்று தகவல் வர... அம்மா கிளம்பும் முன்... கதவை திறந்துக்கொண்டு பெரியம்மா வீடு நோக்கி ஓட ஆரம்பித்தாள் அனுஷா. மாமா வீட்டிலிருந்து ஒரு தெருக்கு அப்பால் பெரியம்மாவின் வீடு.

அப்பா மரநாற்காலியில் அமர்ந்து இருந்தார். அனுஷா ஓடி சென்று அப்பாவின் மேல் ஏறி கழுத்தைக்கட்டி க்கொண்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக..."அப்பா...என்னை கூட்டிட்டு போயிடுங்க. .எனக்கு இங்க பிடிக்கலை , பயம்மா இருக்கு... ஸ்கூல் போகனும்.." என்றாள்.

அப்பா பதில் ஏதும் சொல்லாமல் அனுஷாவை இறக்கிவிட்டார்.

பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அப்பா மட்டும் தனியே... அம்மாவிற்காக பேச நிறைய பேர் இருந்தார்கள். அம்மும்மா, பெரியம்மா, பெரியப்பா, நடு மாமா, பெரியமாமா, சின்ன மாமா, பெரியம்மாவின் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமாக இருந்தது.

அப்பா பேச ஆரம்பித்தார். "அனுஷாவை கூட்டிட்டு போக வந்தேன், வந்து 23 நாள் ஆச்சி, குழந்தையின் படிப்பு வீணா போகுது.. திரும்பி வருவாங்கன்னு எதிர் பார்த்தேன் வரலை.. .இதுக்கு மேல் குழந்தையின் படிப்பை வீணாக்க முடியாது, அவளை என்னுடன் அனுப்புங்கள்.."

அம்மா சத்தம் போட ஆரம்பித்தார்கள். அனுஷாவை இழுத்து சென்று ஒரு ரூமில் பூட்டி வைத்து விட்டு வந்தார்கள்.

அனுஷாவிற்கு திரும்பவும் பயம் கவ்வ ஆரம்பித்தது. உள்ளுக்குள் பரிட்சை எழுத போகும் போது வருவது போல வயிற்றை பிசைந்தது. அப்பா விட்டுவிட்டு சென்று விடுவாரோ..?!! வெளியில் வாக்குவாதம் நடந்தது. அப்பா கேள்வி கேட்பவகள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லியவாறே இருந்தார். ஆனால் அனுஷாவை அழைத்து செல்வதில் உறுதியாக இருந்தார். அவர் பேச பேச ஒரு கட்டத்தில் மற்றவர்கள் அமைதி ஆனார்கள். சுமதியை அவர்கள் வீட்டில் இருப்பவர்களே அமைதிப்படுத்தினர்.

கதவு திறக்கப்பட்டது. அனுஷா..மடை திறந்த வெள்ளம் போல..... வேகமாக வெளியில் ஓடி வந்து அப்பாவிடம் போய் நின்றாள். சுமதி அழுதுக்கொண்டு இருந்தாள். அனுஷா அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அம்மும்மாவை ஒரு முறை திரும்பி பார்த்து முறைத்தாள். வேறு யாருடனும் பேசவில்லை.

வெளியில் வந்தவுடன் அப்பா கேட்ட கேள்வி.. " சாப்பிட்டியாம்மா??? "

"...ஏன்ப்பா என்னை இத்தனை நாளா கூட்டுப்போக வரலை...?"

"....உங்க அம்மாவே திரும்பி வருவாங்கன்னு நினைச்சேன்....."

"...எனக்கு இங்க பிடிக்கலைப்பா.. நான் உங்க கூடத்தான் இருப்பேன்.. அம்மா வேணாம்ப்பா....கிள்ளறாங்க..அடிக்காறாங்க.. வலிக்குதுப்பா... " அவளின் அம்மா கிள்ளி காயம் ஆன இடங்களை அப்பாவிடம் காட்டுகிறாள்.

குனிந்து பார்த்து... தடவிவிட்டபடி... "...ம்ம்..அப்படி சொல்லக்கூடாது....அம்மா பாவம் இல்லையா... உன்னை அனுப்பலன்னா என்ன செய்யறதுன்னு டிசி க்கூட வாங்கிட்டு தான் வந்தேன்....."

அதிர்ந்தவளாக...."...ப்பா... அப்படின்னா அம்மாக்கிட்ட என்னை விட்டுட்டு போகவா வந்தீங்க...."

"...இல்லம்மா... அம்மா ரொம்ப பிடிவாதமா இருந்தா என்ன செய்யறது உன் படிப்பு முக்கியம் இல்லையா..."

".....ம்ம்ம்ம்..என்னை எப்பவும் அம்மாக்கிட்ட விடாதீங்கப்பா....சரி.. இப்ப எந்த ஸ்கூல்..ப்பா....??? "

" .....பாப்போம்... போய் த்தான்...பார்க்கனும்.. சரி முதல்ல வா...நீ சாப்பிடு..... " என்று அனுஷாவை அழைத்துக்கொண்டு ஹோட்டலை தேடி சென்றார் கனேஷ்.

அனுஷாவிற்கு 23 நாட்கள் கழித்து உள்ளுக்குள் இருந்த படப்படப்பு, பயம் எல்லாம் மறைந்து நிம்மதியாக இருப்பதை உணர்ந்தாள்... இப்போது தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது அவளால், சந்தோஷமாக அப்பாவின் கைகளை பிடித்து நடக்க ஆரம்பித்தாள். அப்பா இனி அவளுக்கு தாயுமானார்.....

குறிப்பு - போட்டிக்காக எழுதிய கதை.

I LOVE YOU & I MISS YOU :( :(





"Heal The World"

There's A Place In
Your Heart
And I Know That It Is Love
And This Place Could
Be Much
Brighter Than Tomorrow
And If You Really Try
You'll Find There's No Need
To Cry
In This Place You'll Feel
There's No Hurt Or Sorrow

There Are Ways
To Get There
If You Care Enough
For The Living
Make A Little Space
Make A Better Place...

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

If You Want To Know Why
There's A Love That
Cannot Lie
Love Is Strong
It Only Cares For
Joyful Giving
If We Try
We Shall See
In This Bliss
We Cannot Feel
Fear Or Dread
We Stop Existing And
Start Living

Then It Feels That Always
Love's Enough For
Us Growing
So Make A Better World
Make A Better World...

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

And The Dream We Were
Conceived In
Will Reveal A Joyful Face
And The World We
Once Believed In
Will Shine Again In Grace
Then Why Do We Keep
Strangling Life
Wound This Earth
Crucify Its Soul
Though It's Plain To See
This World Is Heavenly
Be God's Glow

We Could Fly So High
Let Our Spirits Never Die
In My Heart
I Feel You Are All
My Brothers
Create A World With
No Fear
Together We'll Cry
Happy Tears
See The Nations Turn
Their Swords
Into Plowshares

We Could Really Get There
If You Cared Enough
For The Living
Make A Little Space
To Make A Better Place...

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me

.

ஒன்றுமில்லை.......


நேற்றைய
மனநிலை
இன்று
இல்லை

இன்று
இருப்பது
நாளை
இருக்க
போவதுமில்லை

கண்விழிக்கும்
ஒவ்வொரு
விடியலிலும்-

புது
உலகம்
பார்க்கிறேன்..

புரிதல்
இல்லாத
உள்ளங்கள்
பார்க்கிறேன்.......

புண்படுத்தும்
மனிதர்கள்

பார்க்கிறேன்...


இது தான்
வழி
இது தான்
பயணம்
இது தான்
வாழ்க்கை

என்ற
எளிமை
சிந்தனையோடு
உள்ளத்தால்
இருக்க
முடிவதில்லை...

முடியாத
தருணங்களில்
முடிவு
சலனமற்ற
உடலும்
மனமும்..!!

சலனமற்றதை
பிணம்
என்று
கூட
சொல்லலாம்..


.

வானிலை அறிக்கை...

குறிப்புகள்
இல்லா
வானம்..


வெற்று
வானத்தை
வெறித்து..
வாழ்க்கையை
உள்ளிருந்தே
ஓட்டலாமா?



மழை
வருமென
நனைந்து
மகிழ...
வெளியுலகம்
வரலாமா?

நீ.....
அறிவிலி
அதனாலோ....
அறிக்கை
புரிதலில்
எப்போதும்
ஒரு
தடுமாற்றம்....



.

மனிதர்களின் குணம் மாறுவதில்லை

மனிதவளத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன் என்பதை விடவும் என்னுடைய தனிப்பட்ட ஆர்வமே முதல் காரணம். என் தனிப்பட்ட ஆர்வத்தால் மனிதவளத்தை என் வேலையாக தேர்ந்தெடுத்தேனே தவிர்த்து, மனிதவளத்தில் இருப்பதால், என்னுடைய ஆர்வம், பேச்சு, எழுத்து & நடவடிக்கை மாறிவிடவில்லை அல்லது மாற்றிக்கொள்ளவில்லை. மனிதவளத்தில் இருப்பதால் இப்படி இருக்கிறேன் என்பதைவிடவும், மனிதவளத்தில் ஆர்வமுள்ள ஒருவராக என்னை பார்க்கவே விரும்புகிறேன்.

மனிதர்களின் குணம் இரண்டு.

1. இயற்கை குணம்,
2. சுற்றுச்சூழுலை பொறுத்து/கவனித்து நம்மை பாசிட்டிவாகவோ, நெகடிவாகவோ மெருகேற்றிக்கொள்வது அல்லது உள்வாங்கி அதை நம் குணமாக மாற்றிக்கொள்வது.

இயற்கை குணம் என்பது மாறாது. அப்படி ஒன்று மனிதனுக்கு இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில், நம் ரத்தத்தில் ஊறி இருக்கும் ஒரு குணம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. அது என்ன? நம் தாய் தந்தை, தாய்மாமன், அத்தை, சித்தப்பா போன்றவர்களை கூர்ந்து கவனித்தால், அவர்களை போன்று நிறைய விஷயங்கள் அவர்கள் சொல்லித்தராமாலேயே நாம் செய்வோம், நடப்போம். அது தவிர்த்து குடும்ப சூழ்நிலை, வளர்ப்பு முறையில் அந்த அடிப்படை குணங்கள் இன்னமும் மெருகேற்றப்பட்டு இருக்கும்.

அடிப்படை குணங்களில் முதலில் வருவது -

1. அறிவும் அது சம்பந்தப்பட்டவையும்
2. பண்பு, பழக்கவழக்கங்கள், பேச்சு
3. கோபம்
4. ஈகை

இதில் நாமாக நம்மை சுற்றியுள்ளவற்றை பார்த்து கவனித்து அதை நம்முடைய குணமாக மாற்றிக்கொண்டு - இது பலருக்கு தெரியாது.. அதாவது நாம் மற்றவரை பின்பற்றி சிலவிஷயங்களை செய்கிறோம் என்பது. தன்னைப்பற்றி சுயமாக ஆராய்ந்து பார்ப்பவர்கள் மட்டுமே இதை உணர்வார்கள்.

இதற்கு சிறந்த உதாரணம் கணவன் மனைவி. இவர்களின் தனிப்பட்ட அடிப்படை குணங்கள் மாறுவதில்லை..ஆனால் திருமணத்திற்கு பிறகு மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அல்லது அவருக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்ய வேண்டி தன்னை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் அடிப்படையில் மாறவில்லை, சூழலை பொறுத்து தன் அடிப்படை குணத்தோடு கூடி, வேறு ஒன்றையும் மனைவி/கணவனுக்காக சேர்த்துக்கொள்கிறார்கள்.

இப்போது இருவருக்குமே அடிப்படை குணத்தோடு சேர்ந்து + கூடுதலாக ஒரு குணம் (இது நெகடிவாகவும் இருக்கலாம்) சேர்ந்துவிடுகிறது.

இன்னுமொரு உதாரணம். பொது இடங்களில் நாம் இருக்கும் போது குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணமோ பழக்கமோ இல்லாதது நம் இயற்கை குணம். ஆனால் அதே பொது இடத்தில் , ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போடுவதை பார்த்து அதை நாம் நமக்கு தேவையான ஒன்று என்று கருதி, அதை நம்முடைய பழக்கதில் ஒன்றாக எப்போதும் மாற்றிக்கொள்வது என்பது சுற்றுச்சூழலை பொறுத்து நாம் நம் குணத்தை மெருகேற்றிக்கொள்வது, கூடுதல் குணம்.

சரி, இந்த கூடுதல் குணம் நெகடிவ்/பாசிடிவ் ஆக இருப்பது யார் கையில்??? கண்டிப்பாக அது தனிப்பட்ட மனிதனை பொறுத்து தான் இருக்கிறது, நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து இது நமக்கு தேவை என்று சேர்த்துக்கொண்டு ஒருவன் தன்னை மென்மேலும் உயர்த்திக்கொண்டே போகலாம். அல்லது நெகடிவாக கொண்டு தாழ்த்திக்கொண்டும் போகலாம். நெகடிவ்/பாஸிடிவ் என்பதை முடிவு செய்வது யார்? அதுவும் அதே நபர் தான். இது தான் நமக்கு சரி என்று படுவது பலருக்கு தவறு என்று படும். :)

அதனால், அடிப்படை குணத்தை கூட நாம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளும் குணம் மாற்றிவிடும் வாய்ப்பும் இருக்கதான் செய்கிறது.. அதற்கு மிகுந்த முதிர்ச்சியும், ஞானமும் தேவை. ஆனால் ஒரு சாமான்ய மனிதனுக்கு சூழ்நிலை என்று வரும் போது எத்தனை தடுத்தாலும் உள்ளுக்குள் இருக்கும் அடிப்படை குணமே வெளியில் வரும்.

இதற்கு சிறந்த பழமொழி "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலை ஆட்டிக்கிட்டி தேவையை தின்ன வெளியில் தான் போகுமாம்" - இது தான் அடிப்படை குணம் என்பது. ஏன் அது நல்லவிதமாக வளர்க்கப்படும் போது? என்ற கேள்வி கண்டிப்பாக வரும், ஆனால் அந்த நாய்க்கான சூழ்நிலை, அதற்கு சரியாக அமையும் போது அதன் இயற்கை குணம் கண்டிப்பாக வெளிப்பட்டே தீரும். ஆனால் இப்படிப்பட்ட வெளிவரும் குணத்தையும் , குறிப்பாக அது நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில் , அதை கட்டுப்படுத்தும் திறமையையும் கூடுதல் விஷயமாக நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் சூழ்நிலை கைதியாக ஆகாமல் இருக்க வாழ்க்கையின் அனுபவமும், முதிர்ச்சியும் கண்டிப்பாக தேவை.

ஆக, இயற்கை குணத்துடன் , நாம் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்காகவும், நம்மை சார்ந்தவர்களுக்காகவும் (சொந்தங்கள், நண்பர்கள், நம்மை சுற்றியுள்ள அத்தனை மனிதர்களும்...) நம் தேவைகளுக்காகவும் ஓரளவிற்கு மாற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பது சரியில்லை, நம்மின் குணத்தை அதிகப்படியாக வளர்த்துக்கொண்டே வருகிறோம். இது நிதர்சனமான உண்மை.

இதில் எது நம் இயற்கை குணம், எது நாம் சேர்த்துக்கொண்டது.. இனியும் நல்லவிதமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது எது என்பதை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, அதை நல்லவிதமாக சேர்த்தும், பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது.

மனிதர்களின் குணம் மாறுவதில்லை கூடுதலாக நாம் சேர்த்துக்கொண்டவை நம்மில் பல மாற்றைங்களை உண்டாக்குகின்றன.. அதனால் அடிப்படையில் நம் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நல்லமுறையில் கவனித்து அதை சேர்த்தும் செயற்படுத்தியும் நன்மை பெறுவோம்.

நாமே நம் கையில் ஒரு களிமண் தான் அதை எப்படி ஷேப் செய்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.

அணில் குட்டி அனிதா :- ம்ம்......மக்கா உங்களுக்கு ஏதாச்சும் பிரியுதா எனக்கு ஒன்னியும் பிரியல. .அதுவும் அர்த்த ராத்திரியில பிசாசாட்டுமா உக்காந்துக்கிட்டு டைப்பறாங்க.......வெயில் காலம் போயிம் எனக்கு இன்னும் அம்மணிக்கிட்ட இருந்து விடுவுகாலம் வரலை.... நாந்தான் எழுதுனும் அடுத்தது....... விடியலை நோக்கி ன்னு... ................... முடியல..ooooopppssss !!

பீட்டர் தாத்ஸ் : There will be little rubs and disappointments everywhere, and we are all apt to expect too much; but then, if one scheme of happiness fails, human nature turns to another; if the first calculation is wrong, we make a second better: we find comfort somewhere . . .

ஓ நண்பனே.....நண்பனே...!!

பன்றி 'களோடு
ஒரு
கன்றுக்குட்டி
சேற்றிலும்
சகதியிலும்

முகத்தை சுருக்கும்...
துர்நாற்றம்
வீசுகிறது...

பன்றி'களுக்கு
துர்நாற்றம்
பழக்கமே....
கன்றுக்குமா?

எப்போது
புரியும்
இந்த
கன்றுக்கு
அது
துர்நாற்றத்தில்
இருக்கிறது
என்பது....??????

பன்றிகளோடு
கன்றினை
பார்க்க..........
சகிக்கவில்லை...

.
கன்று
வெளியில்
வரும்
நாளை
நோக்கி........


அணில் குட்டி அனிதா : ஹி ஹி.. கவி..கவிதைய படிக்கறவங்க எல்லாரும் இந்த பாட்டை எனக்காக பாத்து ஒரு குத்து டான்ஸ் ஆடிட்டு போங்க. . நான் ஆடிட்டு இருக்கேன்.. என்னோட சேந்து ஆடுங்கோஓஓஓஓஓ.....!!



தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!

தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!

ஏ போட்டு தாக்கு ....
வரா ஒரு புறா போட்டு தாக்கு
வங்க கடல் எறா போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு
ஏ சக்கபோடு நீதான் போட்டு தாக்கு

ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு ஹிட் சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு.....


பீட்டர் தாத்ஸ் :- @#$%^&*!@##$#$%

(கெட்டவார்த்தையால அணில திட்டுது பீட்டரு........ஹி ஹி.......)

.

யாருக்காகவோ.....

எனக்காக எழுதிய
நாட்கள் சென்று

யாருக்காகவோ
எழுத வந்தேன்

யாருக்காகவோ
எழுதுவதை
நிறுத்தினேன்..

எனக்காக
எப்போதாவது
எழுதிய
பொழுதுகள்

விடியல்
இல்லாத
இரவுகளாயின...

இருப்பினும்
விடியலில்
வரும்
அன்பான
மின் அஞ்சல்கள்

"உனக்காக நீ எழுதாதே"

இதை
இன்னார்
என்று
சொல்ல

எனக்கு
யாரும்
இருந்ததில்லை

சொல்லுபவர்
அத்தனை
பேரும்
இன்சொலார் !!

எழுதியது
அழிந்துபோகும்
மறைந்து போகும்
மறந்தும் போவேன்..

மீண்டும்
ஆரம்பிப்பேன்..

மீண்டும்
முடிப்பேன்...

யாருக்காகவோ....
.
.
,
.
எனக்காக நான்
இல்லை
என்பதில்
மட்டும்
ஏகத்துக்கும்
தெளிவு....

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

.
.

ஓ நண்பனே.....நண்பனே...!!


உன்
உள்ளங்கையில்
உலகமே
இருக்கிறது !!

உடன்
பூக்கள்
பலவும்
இருக்கிறது !!
பூக்களில்
முட்களும்
உண்டென்பதை
அறிவாயா?
உள்ளங்கைகளை
அழுத்தி
மூடிவிடாதே....
பூக்கள்
நசுங்கிவிடும்...
முட்களும்
குத்திவிடும்

மூடாமலும்
இருக்காதே
முட்கள்
இருப்பதை
உணரமாட்டாய்...

பூக்கள்
நிறைந்த
உன்
உள்ளங்கைகள்
அழகு !!

கெளரி ஏன் கோபப்படலை?!!

எப்போதும் நடக்கும் சண்டை, சரிக்கு சரியாக சண்டை போடும் பழக்கம்.. (இதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லைதான்:) ) கவுண்ட்டர் ரிப்ளை கொடுக்கலைன்னா தூக்கம் போய்விடும்.. சண்டைப்போடத நண்பரகள் மிக குறைவு...

கெளரிசங்கர் .... விழுப்புரத்தில் எங்கள் பக்கத்து வீட்டுப் பையன். என்னிடம் சண்டையே போடாமல் நண்பனாக இருந்தவன். . என்னை விட கலராக, என்னைவிட குள்ளமாக இருப்பான். அவனும் என்னுடைய வயதே, ஆனால் அவனுடன் ஒரே வகுப்பில் நான் படித்ததில்லை. நான் காந்தி பள்ளியில் படிக்கும் போது அவனில்லை, அவன் படிக்கும் போது நான் பெண்கள் பள்ளிக்கு மாறிவிட்டேன். ஆனால் இருவரும் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு ட்யூஷன் ஒன்றாக படித்தோம்.

இந்த கெளரி எப்பவும் என்னை தூர இருந்து கவனிப்பான், அண்ணனிடம் பேசும் அளவிற்கு என்னிடம் பேசியது இல்லை, பக்கத்து வீட்டு மாடிக்கு வந்தால் அங்கிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பான். சில சமயம் பேசுவான்..சிரிப்பான்...

ட்யூஷன் சென்றால், அங்கும் கவனிப்பதோடு சரி.. டியூஷன் சந்தேகங்கள், ஹோம் ஒர்க் பற்றி மட்டும் விசாரிப்பேன். அதிகம் அவனுடன் பேசியதில்லை எங்கள் வீட்டிற்கும் வரமாட்டான். அமைதியான ரொம்பவும் அடக்கமான பிள்ளை என்று என் ஆயா, அப்பா, அண்ணன்கள் சொல்லுவார்கள், அவனை பார்த்து, நானும் அப்படி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள்..

அதற்காக ட்யூஷன் போகும் போது வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பேன். ட்யூஷன் டீச்சர், பசங்க, பொண்ணுங்களை கிண்டல் கேலி செய்யக்கூடாது என்பதற்காக எங்களை முதலில் அனுப்பி விடுவார்கள்.. 10 நிமிடம் கழித்து பசங்க வருவாங்க.

நான் கெளரியிடம் பேச நினைக்கும் போது எல்லாம் கேட்டில் காத்திருப்பேன். அன்றைக்கும் அப்படியே அவனிடம் சண்டை போடவே காத்திருந்தேன்.

என்னை பார்த்ததும், அவனுக்காக நிற்கிறேன் என்று தெரிந்து .என்னை நோக்கி வந்தான்.

"ஏண்டா ..ஓவர் அமைதியா இருந்து எங்கவீட்டுல எனக்கு திட்டு வாங்கி வைக்கிற... ஏன் வாய தொறந்து நீ பேசமாட்டியா... ரொம்ப நல்லவனா நீ.. ? " இன்னொரு வாட்டி என்னை எங்க வீட்டில திட்டினாங்க... அவ்வளவுதான் நீ..! " .

..... சிரித்தான் .... "வீட்டுக்கு கிளம்பு" என்றான் ..

"அட நான் என்ன காட்டுக்கா போகப்போறேன்... சொல்லு நீ எப்படி எப்பவும் அமைதியா இருக்கே? " எனக்கு எல்லாம் பேசலன்னா கன்னம் இரண்டும் வலிக்குதுடா.."

திரும்பவும் சிரித்தான்..."சரி கிளம்பு பசங்க எல்லாம் பார்க்கறானுங்க. .ஏதாச்சும் சொல்லுவாங்க.."

"பாத்தா..சொன்னா..?!! ஆமா............என்ன சொல்லுவாங்க..?? "

"கவிதா.. கிளம்பு.. வீட்டுக்கு போ....."

" ம்ம்....சரி.. வீட்டுக்கு வந்து சொல்றியா...?!"

"சொல்றேன்.. போ...."

...............................................................................................

வீட்டுப்பாடம் முடிக்காமல் ஒரு நாள் மதியம் அவன் வீட்டுக்கு போய் வெளியில் நின்று "கெளரி கெளரி" என்றேன். அவன் அப்பா முதலில் வந்தார்...

"வாம்மா. .உள்ள வா... .."

"இல்ல அங்கிள் பரவாயில்ல.. கெளரி........"

"அட வாம்மா உள்ள...."

"அங்கிள் கெளரிய கூப்பிடுங்களேன்...."

அதற்குள் கெளரி வந்துவிட.... "கெளரி.. .மேக்ஸ் ட்யூஷன் நோட்டு கொடுடா..நான் முடிக்கல.."

அவன் முடித்திருந்தான்.. (அதான் ரொம்ப நல்லவன் ஆச்சே...!! ) ... எடுத்து வந்து கொடுத்தான்..., வாங்கிக்கொண்டு,

"ட்யூஷன்ல வந்து தரேண்டா.."

"சரி..."

அன்று மாலை... மேல் மாடி.. வேகவேகமாக காப்பி அடித்து எழுதிக்கொண்டு இருந்தேன்.... ஆயா எதற்கோ அழைத்தார்கள்.. வந்தேன்... திரும்ப சென்று நோட்டுகளை எடுக்க மறக்கும் அளவிற்கு விருந்தாளிகள் வேலை இருந்துவிட்டேன். தீடிரென்று மழை வந்துவிட... நான் நோட்டுகள் நினைவு வந்து அவற்றை எடுப்பதற்குள் தொப்பையாக நனைந்து எழுத்துக்குள் எல்லாம் அழிந்தே விட்டது.

முழு நோட்டிலும் ஒரு எழுத்து கூட இல்லை.... என் நோட்டு பரவாயில்லை. முத்து முத்தாக எழுதி வைத்திருந்த கெளரியின் நோட்டு.... அவ்வ்வ்வ்வ்வ்.... எனக்கு அடிவயிற்றை பிசைந்தது.. எப்படி அவனை பார்த்து பேசுவது.. நோட்டை கொடுப்பது... சரி வேறு வாங்கி எழுதி க்கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு.. அடுத்த நாள் நனைந்த நோட்டை எடுத்துக்கொண்டு ட்யூஷன் சென்றுவிட்டேன்...

எப்போதும் நான் முன்னே வந்து காத்திருக்க கெளரி வந்தான்....

ரொம்பவும் மெதுவான குரலில்..".கெளரி............." என்று அழைத்தேன்.. என் முகத்தை நான் பார்க்க நேரிட்டிருந்தால் சொல்லி இருப்பேன் எவ்வளவு பாவமாக இருந்தது என்று......

"என்ன.....?"

"நோட்டு நேத்திக்கு மழையில மேல விட்டுட்டு வந்துட்டேண்டா... நனைஞ்சி போச்சி.... !... "

வாங்கிப்பார்த்தான்..

"நான் வேற நோட்டு வாங்கி எழுதிக்கொடுத்திடறேண்டா... ஒரு 4 நாள் டைம் கொடுடா..."

என்னை பார்த்தான்... எப்போதும் போலவே முகம் இருந்தது..மாறவே இல்லை.. கோபமே வரலை... கவலையும் இல்லை....

"வேணாம் நானே எழுதிக்கிறேன்..."

எனக்கு ஆச்சரியம்...

"இல்ல..நான் எழுதித்தரேன்.."

"நீ உனக்கு எழுதிக்கோ.... பசங்க யார் கிட்டயாவது நோட்டு வாங்கித்தரேன்..."

"புதுசா நோட்டாவது வாங்கிக்கோயின்..."

"வேண்டாம்... வீட்டுல புதுசு இருக்கு.... அது போதும்.."

"நிஜமாவா சொல்ற? "

எப்போதும் போல் சிரித்தான்...

அணில் குட்டி அனிதா : அதுக்கு மேல அங்க நின்னா உங்களுக்கும் சேர்த்து எழுதித்தர சொல்ல போறீங்கன்னு .... எஸ் ஆயிட்டாரு கெளரி அதுக்கூட தெரியலையா கவி.....?!! :))))))))


பீட்டர் தாத்ஸ்:- “There is a garden in every childhood, an enchanted place where colors are brighter, the air softer, and the morning more fragrant than ever again.”

முப்பத்தும் உடன் இரண்டும்

இந்த தொடர்பதிவுகள் விடாது போலவே.... எத்தனை முறையோ நம்மை பற்றி நாமே சொல்லி க்கொண்டே வந்தாலும் புதுப்புது கேள்விகளுடன் திரும்ப திரும்ப வருகிறார்கள்.. ... இப்படி தொடர்பதிவுக்கு" என்னை பற்றி சொல்லவும் முடியாமல் விடவும் முடியாமல்..." கூப்பிட்டு விட்டவர் டார்லிங் முல்ஸ் , அவருக்கு எனது நன்றி.. :)

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

கவிதா - இது எனது இயற்பெயர் இல்லை, என் அம்மா வைத்த செல்ல பெயர், காரணம் தெரியவில்லை.... ரொம்பவும் பிடிக்கும்.. .இது தவிர்த்து எனக்கு இன்னமும் நிறைய........................செல்ல பெயர்கள் உண்டு -

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

.....................

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்பவும் பிடிக்கும்! அப்பாவை பார்த்து அவரை போல எழுத பழகியது..அதனால் பிடிக்கும், சுற்றியுள்ள அனைவருமே கையெழுத்து அழகு என்று சொல்லுவதாலும் பிடிக்கும்..

4. பிடித்த மதிய உணவு என்ன?


ஏதாவது ஒரு கீரை எப்பவும் என்னோட சாய்ஸ், கீரையின் எந்த வகை டிஷ்னாலும் அதுனுடன் வாழைக்காய் வறுவல் ரொம்பவும் பிடிக்கும்,

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம்ம்ம்ம்ம்ம்ம்... நிச்சயமாக...வைத்துக்கொள்வேன்..

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி பிடிக்கும்.. ஆட்கள் இல்லாத தனிமை கிடைத்தால் குளிக்க விருப்பம்..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் , உடல் மொழி, பேச்சு....

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


பிடிச்ச விஷயம் : வேகம், கோபம்

பிடிக்காத விஷயம் : வேகம்..பிடிவாதம், அழுகை, எளிதில் எல்லோரையும் நம்பிவிடுவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : உழைப்பு, படிப்பு, என்னை போன்ற ஒரு பெண்ணை சமாளித்து வாழ்க்கை நடத்துவது.

பிடிக்காத விஷயம் : அப்படி ஒன்றும் இல்லை...

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ஆயா

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(....இந்த கேள்வி அவசியமா? ..போங்கப்பா......)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் குழந்தை பார்த்துக்கொண்டிருக்கும் கார்டூன், என் நண்பன் ஆன்லைனில் இருப்பதை...

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சை... (எனக்கு (என்னை இல்லை) பிடித்தவர்களின் கையில் இருக்க வேண்டி இருந்தால் மட்டுமே...மாறுவேன்...)

14. பிடித்த மணம்?

என்னுடைய Deodorant "Creation Lamis -black white "
நித்தியமல்லி, குண்டு மல்லி, சாதிமல்லி

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கோபிநாத் - இணையத்தில் இன்னுமொரு செல்லம்...

கோம்ஸ் - நிலாகுட்டியின் அம்மா, நல்ல தோழி... அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம்

புனித் : தாங்க முடியலங்க இவங்க அழுவாச்சி கவிதைகள், அதனால் இப்படி ஒரு பதிவெழுத அழைக்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன்?".... முல்ஸ் இந்த பதிவை எழுதிய விதம் எனக்கு ரொம்பவும் பிடித்தது.. . I dont get along with this post subject mmmmm....Yes !! I have got different opinion/mindset/idea on this.. but still.. it rocks .. !! Hats off Mulz..!! hugs and kisses da!

செம செம செம போஸ்ட் da !!!

17. பிடித்த விளையாட்டு?


நிறைய இருக்கு ... - செஸ் , ஆடு புலி ஆட்டம், இறகுபந்து, பல்லாங்குழி

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை ,க்ரைம், ஹாரார், திரிலர், யோசிக்க வைக்ககூடிய, தாக்கம் ஏற்படுத்தக் கூடிய படங்கள்

20. கடைசியாகப் பார்த்த படம்?

மணிசித்ரதாழு - (மலையாளம்) டிவியில் பார்த்தது

21. பிடித்த பருவ காலம் எது?

மழை, பனி , குளிர் காலம் ரொம்பவும் பிடிக்கும்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் - ஐந்தாம் பாகம், ஞானம் பிறந்த கதை, எப்பவும் படிப்பது விக்கரமாதித்தன் கதைகள் :)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ம்ம்... அடிக்கடி இல்லை.. எப்போதாவது மாற்றினாலும் அது என் குழந்தை..

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் :மெளனம், அடுத்து என் குழந்தையின் சிரிப்பு

பிடிக்காத சத்தம் : தூங்கும் போது என் தூக்கத்தை கெடுக்கும் எந்த சத்தமாக இருந்தாலும். எப்போதும் அமைதியான தொந்தரவு இல்லாத தூக்கத்தை விரும்புவேன். கிடைக்காத பட்சத்தில் தூக்கம் இருக்காது.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டார்ஜிலிங், சிம்லா

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

..................

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொய் சொல்லி ஏமாற்றுதல் , இன்னும் நிறைய இருக்கு... :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வெகுளித்தனமான அன்பு, எல்லோரையும் எனக்கு சொந்தம் என்று நினைத்துக்கொள்வது.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

ம்ம்ம்ம்ம்ம்ம்..... அமைதியான என் உடம்புக்கும் மனதுக்கும் கஷ்டமில்லாத மரணம் வேண்டும் என்ற ஆசை ஏனோ சிறுவயது முதல் உண்டு.......

என் கண்களை கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும்...

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

என் இழப்பு (அ) இறப்பு :)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

சுயநலமில்லாதவர்களுக்கு போராட்டம்....

---------------------------------------------------------------------------------------------

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்...ஆரம்பிச்சாச்சாஆஆ? கொஞ்ச நாள் ரெஸ்ட் ல இருந்தேன்.. .இதுக்கேல்லாம் காரணமான இரண்டு பேரை கவி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவங்க சமைச்ச சாப்பாட்டை சாப்பிட வச்சி பழிய நான் தீத்துக்க்ல என் பேரூ அணிலு அனிதா இல்ல..... சொல்லிட்டேன்.. !!!!

பீட்டர் தாத்ஸ் :- Seeing, hearing, feeling, are miracles, and each part and tag of me is a miracle??????

ஏதோ நினைக்கிறேன்....





பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்


தோழியின் அண்ணன் நேற்று இரவு, விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

சிகிச்சை அளித்துவருகின்றனர், ஐசியூ வில் இருக்கிறார். மனம் ஒரு நிலையில் இல்லை,

அவர் சீக்கிரம் குணம் அடைந்து வந்துவிட பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்...