வவாச - சிங்கங்களின் பதில்கள் - பகுதி
 

கவிதா: போன பதிவில் அணிலு கொடுத்த லிங்க் பார்த்த போட்டோ பத்தி சொல்லுங்க... 
 சிங்கங்கள்: பதிவுலக மாநாட்டுக்கு ...நாங்க எல்லாம் மாணவர்களா இருந்த நேரம் போனப்போ எடுத்த படங்கள் அவை...அந்த மாநாட்டுக்கு தருமி... ஆசிப்... பெனத்தலார் .லக்கி...செந்தழல்...போன்ற பேராசிரியர்கள் வந்திருந்து எங்களை வேடிக்கைப் பாத்து சென்றது தனிக் கதை.




கவிதா: கவனித்து பார்த்த போது - சில சிங்கங்கள் தன் வீட்டை மட்டும் சுத்தம் செய்ய வராங்க.. அதே சமயம் வவாச வை கண்டுக்காம இருக்காங்க.. ஏன் இப்படி? சிங்கங்கள் : தனிப்பட்ட பதிவுகளே ரொம்ப சொற்பமாகிவிட்ட போது, குழுப்பதிவா? அதுவுமில்லாம எங்களுக்கு கலாய்க்கிறதுதான் தெரிஞ்சிருக்கும் போல. யாருமே கலாய்க்க இல்லாத போது யாரை கலாய்க்க? ஆளில்லாத கடையில யாரு வந்து டீ ஆத்துவாங்கசொல்லுங்க?

 அணில் : அட கவி..என்னாதிது.??!! இப்ப நான் கேக்கறேன் பாருங்க.. - வவாச - தோற்றம் - மறைவு. , வவாச - சிங்கங்கள்கல்யாணத்திற்கு முன்-பின்வவாச - ஊத்தி மூடிய உண்மை காரணம்.. - குறிப்பு வரைக..
சிங்கங்கள்:- நல்லா கேக்குறாய்ங்கய்யா டீடெயிலு....அணிலு....நோட் பண்ணிக்கோ சங்கம்...பதிவு மெமெரி ஒரு நூறு கிகா பைட்....ரசிகர்கள் நூறு கோடி மெகா பைட்...இந்த பைட் சங்கத்துல்ல என்னிக்குமே பைட் இருந்தது இல்ல...என்னா எந்த ஸ்டண்ட் மாஸ்டரும் எங்க திறமைக்கு சரியான முறையில்ல சண்டைக் கத்து தர முடியாம கரண்ட் கம்பியிலே காக்கா சிக்குன மாதிரி பிலீங் ஆயிட்டாங்க..இது சங்க வரலாற்றுல்ல இருக்க உண்மை.. இதை மறைக்க மன்மோகன் சிங்கே முயற்சி பண்ணாலும் முடியாது...அது என்ன ஊத்தி மூடுறது.... கேள்வியிலே பிழை இருக்கு... மூடுனா ஊத்தவே முடியாது...மூடியைத் திறந்தால் ஊத்தவே முடியும்...இது ஒலக ஞானிகள் சர்பத் சங்க மாநாட்டில் மேடையேறி முழங்கிய மாபெரும் வாழ்க்கையின் உண்மை தத்துவம்...அதை புரிஞ்சுக்காமல் ஒரு கேள்வி அந்தக் கேள்விக்கு பதில் நோட்ஸ் எடுக்க ஒரு அணிலு...கேள்வியிலே கருத்து குழப்பம் இருப்பதால் ரிஜெக்ட் கேள்வி இது...  கல்யாணம்ங்கற ஒரு சொல்லை வைத்து சிங்கங்களை மிரட்ட நினைக்கும் இந்த் பெண்ணிய ஏகாத்தியபத்திய  கேள்விக் கணையை எதிர்த்து கல்யாணமாகாத கன்னி சிங்கம்...கட்டிளம் சிங்கம்.... மிச்சமிருக்கும் யூத் சிங்கம் தனிப்பதிவு போட்டு விளக்கம் அளிக்கும்... அதுவரைக்கும் இந்தக் கேள்விக்கான பதில் பாஸ் எனப் போட்டுக்கொள்ளவும் 

 
கவிதா: (அணில் சுப்.. சும்மா இரு...சும்மா இருன்னு சொன்னா கேட்டியா.. சிங்கங்க புடுங்கி வைக்குதுப்பாரு..! ) வவாச வை தொடர்ந்து நடத்த முடியாமல், பலமுறை விற்க முடிவெடுத்து, அதை யாருமே வாங்க முன்வராததால் - சங்கத்து சிங்கம் இளா 'வே திரும்ப திரும்ப வாங்கிக் கொண்டதாக செய்தி வந்தது - இதை பற்றி

இளா : ம்க்கும். இது வேறையா சங்கம் நல்லாப் போகும் போதே சுண்ணாம்புக்கு வழியில்லை  இதுல இதுவேற. வெந்த கத்திரிக்காயிலஆசிட்ட பாய்ச்சாதீங்க....
   

அணில் : ஹி ஹி..ஆமாம்மா அவரே வாங்கி...அவரே தனியா டீ ஆத்து ஆத்துன்னு ஆத்தறாரு.... மத்த சிங்கம் எல்லாம் அதைகுடிக்க கூட போகமாட்டேங்குது -ஒரு வேள  டீ அம்புட்டு கேவலமா இருக்குமோ????
சிங்கங்கள் : புலி பசித்தாலும் புல்லைத் திங்காது சிங்கம் திகைத்தாலும் டீயை குடிக்காது என்பது உங்களுக்குத் தெரியாதா..."அரிமா அரிமா ஆயிரம் அரிமாஓசியில் டீ போட்டு ஊருக்கு தருமா..??!" அந்தப் பாடல் வழியே நாட்டு மக்களுக்கு டீ போட்டு நற்பணி ஆத்தி வருகிறார் எங்கள் விவாஜி...(இளா)

 
கவிதா : சங்கத்துல சிங்கங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று அடித்து கொண்டதன் விளைவு, ஒரு சிங்கம் தனியாக வெளியில் வந்து புது சங்கம் ஆரம்பித்து, அதுவும் இப்போது காத்தாடி க்கொண்டு இருக்கிறதே - சிங்கங்கள் இதனை விளக்க முடியுமா?
சிங்கங்கள்: அது என்ன தனிசங்கம்? சொல்லவே இல்லே????
 

அணில்: (அய்யய்ய.. கவி நீங்க ரொம்ப டீசன்ண்டா கேள்வி கேக்கறீங்க ..இது எல்லாம் வேலைக்கு ஆகாது இதே கேள்விய நான் கேக்கறேன் பாருங்க..) - ஹாய் சிங்கம்ஸ்... வெளியில ஸ்மைல் பண்ணிக்கிட்டு சங்கத்துக்குள்ள ஈகோ வில் வெட்டு குத்து'ன்னு இருக்கீங்களாமே? மத்தவங்க வேட்டியெல்லாம் கூட கழட்டி விட்டு விளையாடறீங்களாமே? அதனால் தான் சங்கத்தை நடத்தவேமுடியாம போச்சின்னு பேசிக்கறாங்க.. ?
சிங்கங்கள்: போர்ட் பிகோ கார் தெரியும் அது என்ன ஈகோ...அப்படி ஒரு வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத அன்பு சிங்கங்களிடம் வம்பு எதற்கு? வேட்டி கிழிந்தக் கதைக்கு பின்னால் ஒரு காவிய கதை இருக்கிறது... நேரம் வரும் போது நாடு அதை அறியும்....அது வரை அது பற்றி மெளனம் காப்பதாய்  ஒரு தீர்மானம் போடப்பட்டு சிங்க மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது..

 
அணிலு: விழுந்துவிட்ட வவாச வை, தற்போது, வவாச விற்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் தூக்கி நிறுத்த படும் பாடுப்பட்டு வருவதாக கேள்விப்பட்டோமே அது உண்மையா?
சிங்கங்கள்: அணிலு ,வா. ஒரு நதி மாதிரி அதை யாரும் நிறுத்த முடியாது...அது ஓடிகிட்டே இருக்கும்......பை பை யார் அந்த ஒருத்தர் WHO IS THAT BLACK SHEEP..... ம்ம்ம்மேஹே.......மம்ம்மேஹே.....ஆல் சிங்கம்ஸ் ROTATE YOUR HEADS IN 360 DEGREES NOW..  இப்போ பதிவுலகத்துக்கே தலை சுத்தப் போவுது பாருங்க கவிதா ...:)))

அணில் : சிங்கம்ஸ்.. நீங்க எல்லாம் ரொம்ப மக்காமே?? ஹி ஹி.. உங்களை எல்லாம் ஓவரா புகழ்ந்தாங்களே கவி, அவங்களேதான் என்கிட்ட இப்படி சொன்னாங்க..:)) ..  ஒரு கான்சஃப்ட் சொல்லி... அதை டெவலப் செய்து எழுத சொன்னா....  ஆல் சிங்கம்ஸ் ஸும்.. "தெரியல" நீங்களே சொல்லுங்கன்னு திரு திரு ன்னு முழிச்சிக்கிட்டு வந்து நின்னீங்களாமே..  ?
 சிங்கங்கள்: சிங்கம்ஸ் எல்லாம் மக்குன்னு கவிதா சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. எங்க தல கைப்ஸ் வழியே தான் நாங்களும். அவர் மேல ஒரு அடி விழுந்தா பார்த்துட்டு  சும்மாவா இருப்போம். எல்லாரும் ஒன்னா சேர்ந்து பின்னி பெடலெடுத்துருவோம்,  கைப்புள்ளைய. வேற என்ன செய்ய முடியும் எங்களால?..


 
அணில். நீயூஸ் பேப்பரில் எல்லாம் உங்க பேர் போட்டு நியூஸ் வந்து இருக்கே... எதாச்சும் ஏடாகூடமா செய்துட்டீங்களா..என்ன மேட்டர் அது?
 
சிங்கங்கள்: அய்யோ அய்யோ....அடுத்த வருசம் மெடிக்கல் காலேஜ் பாடத்துல்ல எங்க பாடம் வர போவுது...இப்போ போய் என்னிக்கோ நியுஸ் பேப்பர்ல்ல வந்த நியுஸ் பத்தி எல்லாம் கேட்டுகிட்டு...அணிலு உனக்கு ஒரு வெர்சன் தானா???..அப்டேட் வெர்சன் இல்லையா.???..

கவிதா : வவாச - பழையபடி "ஆக்டிவ்" ஆக இருக்க செய்ய உங்கள் அனைவரின் சிங்கங்கள் : கூட்டு முயற்சி எப்படிப்பட்டதாகஇருக்கும்?  
சிங்கங்கள்: எல்லாரும் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம்னு  இருக்கோம். அவ்ளோதான் எங்க டக்கு

 
கவிதா : வவாச பதிவுகள் தவிர்த்து - வேறு எதாவது முயற்சியில் ஈடு பட்டு இருக்கிறீர்களாஅதாவது சமுதாயம் சார்ந்து குழுஉதவிகள், ப்ளாகர் இல்லாமல் வெளி உலக தொடர்பு ஏதாவது?!! 
சிங்கங்கள் : நகைச்சுவை போட்டிகள் மூலமா வந்த பணத்தை சிலஇடங்களில் உதவி செய்திருக்கோம். அதெல்லாம் சொல்லிக் காட்டிக்க நாங்க விருப்பப்படவில்லை. 

 
அணில் : ஆம்மா.. அது என்ன அட்லாஸ் வாலிபர்.. ?!!
சிங்கங்கள்: அட் லாஸ்ட் (at last) வாலிபர்ன்னு போட்டா மக்கள் பிலீங் ஆவாங்களேன்னு தான் கடைசியில "ட்" விட்டுட்டு போட்டோம்...இப்போ எல்லாம் ட்விட்டுகிட்டே இருக்காங்க..

. 
கவிதா : சங்கம் சார்ந்த உங்களின் மற்ற குழு பதிவுகள் பற்றி சொல்லுங்க.
சிங்கங்கள் : எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...இலைகளும் கிடையாது...ஒரே சங்கம்...நாங்க எல்லாம் அதில்ல சிங்கம்...அம்புட்டு தேன்... 

 
நன்றி நவில்தல் :
கத்தி, கதறி, கொஞ்சி, கெஞ்சி கூத்தாடி பதில் சொல்லியே ஆகனும் னு நின்ன போது, பாவம் இம்புட்டு இம்சை பண்றாங்களேன்னு மனமிறங்கி பதில் அளித்த சிங்கங்களுக்கும், அதை கண்கொட்டாமல் ப்ரூஃப் ரீட் செய்து, அப்ரூவ் செய்த மற்ற சிங்கங்களுக்கு நன்றியோ நன்றி.

வவாச'வை கேப்பங்கஞ்சியில் அழைத்து பேசி, முன்பு போல் அவர்களை எழுதவைக்க ஊக்குவிக்க வேண்டும் என்று சொன்ன, நம்ம முருகனுக்கு (.) என் சார்பிலும், சிங்கங்கள் சார்பாகவும் மிக பெரிய நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.
 

கடைசியாக, நானும் அணிலும் எங்களின் இஷ்டம் போல் கேட்ட கேள்விகள் ஒன்றை கூட மாற்றாமல், அதனை சீரியாஸாகவும் எடுத்துக்கொள்ளாமல், சிரித்து மகிழும்படியாக பதில் அளித்த சிங்கங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். எந்த ஆட்சேபனையும் செய்யாத மற்ற சிங்கங்களுக்கும் எங்களது நன்றிகள்
 

பீட்டர் தாத்ஸ் : Coming together is a beginning. Keeping together is progress. Working together is success.- Henry Ford
.