ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது, அதிக நீர்வரத்தோடு, அகலம் குறைவாகவே எனக்குப்பட்டது, நாங்கள் பார்த்த இடம் அப்படி இருந்ததோ என்னவோ.

சென்னையிலிருந்து தில்லிக்கு, தில்லியிலிருந்து  ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றோம். 24*7 ராணுவம் மற்றும் CRPF கண்காணிப்பில் ஸ்ரீநகர் இரண்டு கட்ட பாதுக்காப்பின் கீழ் இருப்பதாக விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. அதை அங்கிருந்த திரும்பும் வரையில் கவனித்தோம்.  கடைத்தெரு, சுற்றுலாப் பயணிகள் குவியும்  இடங்கள், அரசு அலுவலகங்கள் என எங்கும் பாதுகாப்பு தெரிந்தது.

ஸ்ரீநகர் செல்ல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் சிறந்த நேரம். . 

ஸ்ரீநகரில் பார்க்க வேண்டிய இடங்கள் -

மிக முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களில் "தால் ஏரி" முதலிடத்தை பிடிக்கிறது. ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு படகு வீடுகளில்


வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரைக்கு வந்து செல்ல சிகாரா எனப்படும் படகுகளை பயன்படுத்துகிறார்கள். நமக்கு இந்த படகுகள் ரூ.600/- லிருந்து கிடைக்கும். திறமையிருந்தால் இன்னும் குறைத்துக்கூட பேசலாம். டீ, காபி, காஷ்மீர் காவா எனும் டீ போன்றவை படகில் வந்து விற்பனை செய்கிறார்கள். எதுவாகினும் பேரம் பேசி விலை குறைத்து  வாங்குவது நல்லது. உதாரணத்திற்கு 100 ரூ மதிக்கத்தக்க பொருளை ரூ.500/- என்கிறார்கள்.

முகலாய தோட்டங்கள் -முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டவை. உள்ளே கட்டிடங்களின் வடிவமைப்புகள் இதனை உணர்த்துகின்றன. முக்கியமாக ஷாலிமார் கார்டன்ஸ், நிஷாத் பாக் தோட்டங்களுக்கு சென்றோம். 

தங்கியிருந்த விடுதியிலிருந்து 100 ரூ கொடுத்து தால் ஏரிக்கும், அங்கிருந்து ஷாலிமார் பார்க்கிற்கு 250 ரூ, திரும்ப அங்கிருந்து நிஹாத் பார்க்கிற்கு 100 ரூ யும் ஆட்டோவிற்கு கொடுத்தோம். 500 ரூ வரை கேட்டார்கள், பேரம் பேசி பிரயாணம் செய்தோம்.
 
Jamia Masjid - ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழுகை செய்யக்கூடியளவு பெரிய மஸ்ஜீத். உள்ளே அனுமதி உண்டு.சுற்றி கடைத்தெரு இருக்கிறது, தேவைப்படுபவை வாங்கலாம்.

காஷ்மீரில் இருந்து சால்வைகள் மற்றும் கம்பளிகளை வாங்கலாம். தவிர காஷ்மீர் டிசைன் சல்வார் வகைகள்  வாங்கலாம். காட்டன் என்று சொல்கிறார்கள், ஆனால் காட்டன் இல்லை. துணியும் அப்படி ஒன்றும் நன்றாகயில்லை.மரத்தால் ஆன கைவினை பொருட்கள் அதிகம், படகு ஒன்று நினைவுக்காக வாங்கிவந்தேன். 

நூடுல்ஸ் லிருந்து, தோசை, சப்பாத்தி,பூரி வகையறாக்கல், அசைவ உணவுகள், பிரியாணி என எல்லாம் கிடைக்கிறது. சாப்பாட்டுக்கு குறைவில்லை. 

குல்மார்க் ;

இது ஸ்ரீநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 2,690 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஒரு நாள் பயணமாக டாக்ஸி அமர்த்திக்கொண்டு கிளம்பினோம். போகிறவழி நெடும்பயணமாக மலைகளின் கிராமங்களின் ஊடே சென்றது.  குல்மார்க் கில் பனிமலைக்கு செல்ல முன்கூட்டியே இங்கிருந்தே


ஆன்லைன்லில் பதியவேண்டும், எங்களுக்கு தெரியவில்லை. அங்குபோய் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. குதிரை மூலம் மேலே சென்று வரலாம் என்றனர். அதிக பணம். கீழே மட்டும் சுற்றிவர ஒரு குதிரைக்கு 3000 ரூ என பேசினர். ரொம்பவும் பேசி ஒருவருக்கு 1000 ரூ என பேசி மலையேறாமல் கீழே இருந்த இடங்களை மட்டும் சுற்றினோம். ஒரு கட்டத்திற்கு மேல் என் எல்-5 எலும்பு வலி பிரச்சனையால் குதிரைமேல் உட்கார்முடியால இறங்கி 1 கிமி தொலைவு நடந்தே வந்தேன். இடுப்பு வலி இருப்பவர்களுக்கு வெகுதொலைவு, மலை ஏற்ற இறக்க குதிரை சவாரி சரிவராது.குதிரை சவாரிக்கு தனியாக ஒரு ஷூ வாடகைக்கு வாங்கவேண்டும். அதுவும் பேரம் தான். சாமர்த்தியமிருந்தால் அதிக நஷ்ட ப்படாமல் இருக்கலாம்.

மகாராஜா மாளிகை, சிறு குன்று என ஒரு சில இடங்களே காண்பிக்கப்பட்டது. குதிரை மேய்ப்பவர் அலேக்காக லாகவமாக என்னைத்தூக்கி ஒவ்வொரு முறையும் ஏற்றியது ஆச்சரியபடும்படி இருந்தது. ஆனால் இடுப்பு வலிதான்..இப்ப நினைத்தாலும் குதிரை சவாரி பயமாகவேயுள்ளது. மகாராஜா அரண்மனை இப்பவும் ஏதாது விழாக்களுக்களின் விருந்துக்கு பயன்படுத்த படுகிறது என தெரிந்தது. முகலாய அரசர்களின் கோடை வாசஸ்தலமாக இவ்விடம் அமைக்கப்பட்டுள்ளதாக அரண்மனை குறிப்புகள் சொல்கின்றன.

குதிரையில் 2-3 மணி நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். குதிரையிலிருந்து இறங்கியபிறகு ராணி கோயில் ஒரு குன்றின் மேல் இருக்கிறது. அதை நாமே சென்று பார்த்துவிட்டு வரலாம். 

குல்மார்க்கில் வேறொன்றுமில்லை. திரும்ப இரவுக்குள் ஶ்ரீநகர் திரும்ப வந்துவிட்டோம். 

சோனாமார்க்;

ஸ்ரீநகரின் வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிந்துநதி வழி நெடுக பார்க்கமுடிந்தது. குழாங்கற்கலில் வெள்ள வெளேரென தண்ணீர் உருண்டு 
ஒரு சலசலப்பு சத்தத்தோடு ஓடுகிறது. கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி.இங்கேயும்
குதிரை சவாரி. ஒரு வேன் பிடித்து சில சுற்றுளா இடங்களுக்கு சென்றோம். இங்கேயும் 
பேரம் பேசவில்லையெனில் நஷ்டம் தான். ஒருவருக்கு 100 ரூ அதிகமே. ஆனால் 5000 ரூ 
வரை கேட்கிறார்கள்.இருவருக்கும் சேர்த்து 800 ரூ கொடுத்தோம்.

இங்கேயும் எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். சின்னதாக ஒரு குளம், ஒரு ஆறு,  போய் 
வருகின்ற பாதையில் உள்ள மலைகள் என ஒன்றும் சுற்றிப்பார்க்க அதிகமில்லை. இரவுக்குள் ஶ்ரீநகர் வந்துவிட்டோம்.

பேரம் பேச தெரிந்தால், பாக்கெட் காலி ஆகாமல் வீடு திரும்பலாம் என்பதே இப்பயணத்தில் கற்றுக்கொண்டது.

 Picture courtesy : Thankyou Google.