நிகழ்வு 1 : சென்னை

சென்னையில் எல்லா வீடுகளுக்கும் புது மின்னளவி (Electric Meter) மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். இது சென்னை புயலுக்கு முன்னிருந்தே ஆரம்பித்த ஒரு வேளை. முதல் மழைக்குப்பிறகு சென்னை சென்ற போது (அந்த மழைக்கே சென்னை மூழ்கியிருந்தது), நண்பர் வீட்டில் புது மீட்டர் மாற்றியிருப்பதைப்பார்த்து, "மழையின் காரணமாக மாற்றினார்களா" என்றேன். "இல்லை, இது எல்லோருக்கும் மாற்றுகிறார்கள் "என்று சொன்னார்.

புயலுக்குப்பிறகு என் கவனம் முழுக்க எங்கள் வீட்டு மீட்டர் மேலேயே இருந்தது. ஏனென்றால், எங்கள் குடியிருப்பில் எங்களது மீட்டரே கீழ் வரிசையில் இருக்கும், கண்டிப்பாக மழைநீர் தேங்கியதில் மூழ்கியிருக்கும் என்ற எண்ணத்தில், குடியிருப்போரை அழைத்து குறிப்பாக இதைப்பற்றி விசாரித்தேன். ஒரு பிரச்சனையும் இல்லை நன்றாக இருக்கிறது, மின்சாரப்பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்கள். வெள்ளத்திற்கு பிறகு சென்னை சென்றபோது, மீட்டர் பாக்ஸ் இருக்குமிடத்தில் உட்கார்ந்து, மீட்டரின் நிலையை கவனித்துவிட்டே மேலே சென்றேன் (வீடு முதல் தளம்).

இப்படியிருக்க, ஒரு நாள், மின்சாரத்துறையிலிருந்து ஆள் வந்திருப்பதாகவும், மீட்டர் உடைந்துவிட்டதாகவும் எங்களுடன் பேச வேண்டுமென, வீட்டில் குடியிருப்போர் தொலைபேசியில் அழைத்தனர். கணவர் உடனேயே அவர்களின் நம்பர் வாங்கி பேசினார்.

சார் புது மீட்டர் எல்லாருக்கும் மாத்தறோம்...உங்க மீட்டர் உடைந்து இருக்கு... நீங்க 3500 ரூ கட்ட வேண்டி இருக்கும். அலுவலகத்துக்கு தெரியாமல் எங்களுக்கு 1700 ரு கொடுத்தீங்கன்னா.. நாங்களே மாத்தி கொடுத்திடறோம், ஆனா நாங்க இப்படி கேட்டதை ஆபிஸில் சொல்லிடாதீங்கன்னு" சொன்னாங்க.

சாதாரணமாக பணம் கேட்டாலே நமக்கு ஏறிடும்.. இதுல.. இப்படி கேட்டா..?? அதுவும்..குறிப்பாக மீட்டர் விசயத்தில் எனக்கு மண்டை குடைச்சல் இருந்து, தெளிவானதால், மீட்டர் உடைந்திருக்குன்னு சொன்ன தகவல் கோவத்தையே ஏற்படுத்தியது.

காசுப்பார்க்க, மீட்டர் மாற்றுவதற்கு முன், குறிப்பாக ஓனர் ஊரில் இல்லை என்ற விபரம் தெரிந்து வேண்டுமென்றே மீட்டரை அவர்களாகவே உடைத்துவிட்டு, பணம் கேட்கிறார்கள் என்று புரிய நேரம் ஆகவில்லை.

கணவரும், எடுத்தவுடனேயே.. "ஏ ஈ எனக்கு தெரிந்தவர் நான் நேரா பேசிக்கிறேன், ஆன்லைன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து 3500 ரூ கட்டிக்கிறேன், நீங்க செய்ய வேணாம்னு" சொல்லிட்டார்.

பணம் வாங்க, குடியிருப்போரிடமும் எங்களிடமும் தொடர்ந்து முயற்சி செய்து தொந்தரவு செய்தனர். ஆனால் மீட்டர் நல்லபடியாக இருந்தது தெரியும் என்பதால், பணம் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. குடியிருப்போரிடமும் பணம் தரவேண்டாம்னு சொல்லிட்டோம். ஒரு வாரம் இழுத்தடித்தனர் , ஒன்றும் நடக்கல. புது மீட்டர் தானாகவே மாற்றிவிட்டு சென்றுவிட்டனர். !! :)

நிகழ்வு 2 : கொல்கத்தா

முந்தின இரவு 9 மணி இருக்கும், திடீரென மின்சாரம் நின்றுபோனது. வெளியில் சென்றுப்பார்த்தேன், எதிர் வீடுகளில் மின்சாரம் இருந்தது. அதனால் சந்தேகப்பட்டு வீட்டு ஓனரிடம் சென்று கேட்டேன். அவர்கள் முதல் தளம், நாங்கள் இரண்டாவது தளம். அவர்கள் வீட்டிலும் பிரச்சனையில்லை, ஓனர் பையன் "இருங்க பார்க்கிறேன்"னு போய் பார்த்தான். ஃபியூஸ் எதும் போகல. இவர் வீட்டில் இல்லை, அவன் வேகமாக சென்று ஆள் அழைத்துவந்தான். அதற்குள் இவர் வந்துவிட்டார், வீட்டில் எதும் பிரச்சனையில்லை என தெரிந்தது. எங்கள் வீட்டிற்கு மட்டும் மெயின் லைனில் இருந்தே மின்சாரம் வரவில்லை. இதற்குள் இரவு மணி 10க்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் தொலைப்பேசியில் அழைத்து புகார் கொடுத்தோம். அடுத்த 10 நிமிடங்களில் மின்சாரம் வந்தது மட்டுமல்லாது, ஒரு ஆளும் வந்து, என் கணவரிடத்தில் கையெழுத்து வாங்கி சென்றார்.

அடுத்தநாள் காலை 9 மணிக்கு திரும்பவும் மின்சாரம் இல்லை. இவர் மீண்டும் புகார் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றுவிட்டார், கரண்ட்டு இல்லை என்ற விபரத்தை, இரவே தொந்தரவு செய்தோமேன்னு, வீட்டு ஓனரிடம் சொல்லவில்லை.

மதியம் 12.30 இருக்கும் மின்சாரம் இல்லை..ஒரு வேளையும் வீட்டில் ஆகவில்லை, கணவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அவரும் மற்றொரு முறை அழைத்து சொல்லியிருக்கிறார். மாலை வரை கரண்ட்டு வரவில்லை. எனக்கு வெளியில் போகும் வேலையிருந்ததால், 5.30 மணியிருக்கும், திரும்பவும் கணவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு சென்றுவிட்டேன். அவர் அலுவலகம் விட்டு வரும் வரை (இரவு 7 மணி) கரண்ட்டு வரவில்லை.

அலுவலகத்தில் வந்தவர் கடுப்பாகி, தொலைப்பேசியில் அழைத்து, கம்ப்ளைன்ட் நம்பர் சொல்லி, சத்தம் போட ஆரம்பித்தார். திரும்ப அவர்களும் சத்தம் போட ஆரம்பித்தனர். காரணம், மதியமே வந்திருக்கின்றனர். வீட்டு ஓனர் இரவு அழைத்ததற்கு தான் வந்திருக்கிறார்கள் என நினைத்து திரும்ப அனுப்பிவிட்டனர். மீண்டும் 5 மணிக்கு மேல் ஒரு தரம் வந்திருக்கின்றனர், அப்பவும் அதே கதை. பிறகு என் கணவர் வீட்டு ஓனர் வீடு வேறு , நாங்கள் இரண்டாம் தளம் என சொல்லி வரசொன்னார். 7 பேராக, வேணில் பெரிய ஏணியோடு வந்து சேரும் போது 9 மணிக்கு மேல் ஆகியது. ஏணி இறக்கிவைக்கவே 4 ஆட்கள் தேவைப்பட்டனர். பிரச்சனை என்னவென சோதித்து சரி செய்து கிளம்பும் போது இரவு 10 மணி இருக்கும்.

வீட்டு ஓனரிடம், என் கணவர், "எவ்வளவு பணம் கொடுக்கலாங்க" என கேட்க... நீங்க ஏன் தரணும்? காசெல்லாம் தரவேணாம், அவங்க வேலை அது, "ன்னு சொல்லவும் எனக்கும் அவருக்கும் வியப்பாக இருந்தது.

வந்தவர்களும் ஒரு டீ'க்கு கூட காசுக்கேட்கல. மொத்தம் 7 பேர்... அதன் பிறகு எதிரில் இருந்த கடையில் எல்லோருமாக அவர்கள் காசில் டீ குடித்துவிட்டு தான் கிளம்பினர். :)

நம்மூராக இருந்தால்.. இரவு நேரத்தில் வந்ததற்கும், பகலில் இரண்டுமுறை வந்து திரும்ப சென்றதற்குமாக சேர்த்து 1000 ரூ அல்லது குறைந்தபட்சம் ஆளுக்கு 100 என 700 ரூபாய் ஆவது வாங்கிட்டு தான் போயிருப்பாங்க..

பீட்டர் தாத்ஸ்: Dealing with the government does not mean you have to give a bribe
ng with the government does not mean you have to give a bribe
Read more at: http://www.brainyquote.com/quotes/keywords/bribe.html
Dealing with the government does not mean you have to give a bribe
Read more at: http://www.brainyquote.com/quotes/keywords/bribe.html