ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்..

கானாபிரபா நடத்தும் "நானும் பாடுவேன்" ரேடியோ நிகழ்ச்சிக்காக பாடியது. 





இந்த பாடல் தவிர, மற்ற நண்பர்களின் பாடல்களையும் கேட்க :-

றேடியோஸ்பதி வழங்கும் =>" நானும் பாடுவேன்" இதுவரை வந்த படைப்புகள்

மார்ச் 31 வரை நேரம் உள்ளது, உங்கள் பாடல்களையும் பதியலாம்.

நன்றி கானாபிரபா. :)

அணில் குட்டி : என்னடா ரொம்ப நாளா அக்கா குரல் வளத்தை காட்ட முயற்சி செய்யலையேன்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்... 

பீட்டர் தாத்ஸ் : Singing has always seemed to me the most perfect means of expression. It is so spontaneous.

வாத்தியார் மேல் தூங்கி விழுந்த மாணவி

டுடோரியல் நடத்தி வந்த வாத்தியார்,  பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்தவர், அவரின் மாணவர்கள், அவரைப்பற்றி கொடுத்த நற்சான்றிதழ்களை நம்பி, பாடம் சொல்லித்தர முடியுமான்னு கேட்டு, நானும் ஒரு நாள் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள உட்கார்ந்தேன். அவர், இது சொன்னப்பேச்சு கேக்காத ஆள் ஆச்சே, சரிவரும்மானு ரொம்ப யோசிச்சித்தான் பாடம் சொல்லித்தர ஒப்புக்கொண்டார்.

புத்தகம் கையுமாக அவர் அமர, அவர் பக்கத்தில் நான். ரொம்ப ஆர்வமாக பாடம் நடத்த ஆரம்பித்தார், மாணவி கவனிக்கிறாளா இல்லையான்னு பார்க்கும் சமர்த்து அவரிடம் இல்லை, பாடம் நடத்துவதிலேயே கவனமாக இருந்தார். கையை இரண்டையும் ஆட்டி ஆட்டி பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார், ஆனா பாருங்க, யாருக்குன்னு தான் தெரியல. எனக்கு  சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க  முடியவில்லை. போதும்னு சொன்னால், வாத்தியார் கோவப்படுவார்னு, ரொம்ப கஷ்டப்பட்டு வாயை மூடிட்டு பேசாமல் இருந்தேன். ஆனா நேரம் செல்ல செல்ல தூக்கம் கண்களை செருக........ தூங்கி..... நானும், அவரும் எதிர்ப்பார்க்காத ஒரு தருணத்தில், அவர் மடியில் தொப்பென்று விழுந்தேன்.

......................................... அவ்ளோ தான்..  நான் தூங்கி விழுந்த அவமானம் தாங்கமுடியாத வாத்தியார், புத்தகத்தையும் என்னையும் "நியெல்லாம் படிச்சீஈஈ.." ன்னு. தூக்கிப்போட்டவர் தான். இனி எனக்கு மட்டும் பாடம் சொல்லித்தருவதில்லை என முடிவெடுத்து, அதை கன்னாப்பின்னான்னு கடைப்பிடிக்கவும் செய்தார். நானும் அதற்கு பிறகு வாத்தியாரிடம் சத்தியமாக இனி தூங்க மாட்டேன், எப்படியும் முழுச்சிக்கிட்டு இருக்க முயற்சி பண்றேன், தயவு செய்து பாடம் சொல்லித்தாங்கன்னு கேட்டு பார்த்தேன், ம்ஹூம்..  ஒரு முறை பட்ட அவமானம் போதும். இனி அந்த தப்பை மட்டும் செய்யவே மாட்டேன்னு சொல்லிட்டார்.

பல வருடங்கள் கழித்து, எம்.பி.ஏ பரிட்சையின் போது, திரும்பவும் வாத்தியாரின் உதவி தேவைப்பட்டது. வாத்தியார் அக்கவுன்ட்ஸ்'ஸில் கில்லாடி. எனக்கு ஒரே ஒரு பேப்பர் அக்கவண்ட்ஸ், அப்படின்னா என்னான்னே தெரியாத, பூச்சியமாக இருந்தேன். இந்த ஒரு பரிட்சைக்கு மட்டும் வாத்தியார் சொல்லிக்கொடுத்தால் போதும் பாஸாகிவிடுவேன், வாத்தியாரிடம் சென்று கெஞ்ச ஆரம்பித்தேன்.  அக்கவுண்ட்ஸ் கணக்கு மாதிரி, தூங்கிவிழ சாத்தியமே இல்லை, நிச்சயம் தூங்கமாட்டேன், தயவு செய்து சொல்லித்தாங்க, என் எதிர்காலமே உங்க கையில் தான் இருக்கு, உங்களை விட்டால் எனக்கு யார் உதவி செய்வா? அப்படி இப்படின்னு ஓவர் பில்டப் கொடுத்து, நீலிக்கண்ணீர் வடித்தேன். அவர் என்னை  1% கூட நம்ப சான்ஸ் இல்லையென்றாலும், போனாப்போகுதுன்னு திரும்பவும் பாடம் சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனா நிறைய கண்டிஷன்.

1. அவர் பக்கத்தில் உட்காரக்கூடாது. (பார்ரா? என்னா புத்திசாலி,  தூங்கினாலும் அவர் மேல விழாமல் இருப்பேனாம்)
2. எதிர்த்து நடுநடுவில் பேசப்பிடாது, (யார் கிட்ட? )
3. முக்கியமாக மிரட்டக்கூடாது (அந்த பயம்..வேணுமில்ல)

நானும் என் பங்குக்கு கன்டிஷன் போட்டேன்.

1. தூங்கி விழந்து மண்டை உடையும் படி பாடம் நடத்தக்கூடாது
2. லக்சர் கொடுத்து சாக அடிக்கக்கூடாது
3. எருமை மாதிரி பொறுமையாக சொல்லித்தரக்கூடாது

ம்ம்.... அதே அதே தான்....என் கன்டிஷனையெல்லாம் கேட்டதும், சத்தியமாக உனக்கு பாடம் சொல்லித்தர முடியாது, நீ ஒரு மட்டு மரியாதை இல்லாதவள், வாத்தியார் ஆச்சேன்னு கூட மதிக்க மாட்ட, ஓவர் திமிர் பிடிச்சவ, உனக்கெல்லாம் பாடம் சொல்லியே தரமுடியாது, நீயே படிச்சிக்கோன்னு சொல்லிட்டாரு.

 அடடா, இத்தனை வருஷம் கழிச்சி, சம்மதிக்க வைத்துவிட்டு, கடைசி நேரம், தவளை தன் வாயால் கெட்டுப்போச்சேன்னு, திரும்பவும் நீலிக்கண்ணீர் வடிச்சி, கைல கால்ல விழுந்து, மன்னிச்சிடுங்க.. உங்களைவிட்டால் அக்கவுண்ட்ஸ் சொல்லித்தர வேற யாருமே இல்ல, நிச்சயமாக மரியாதையா நடந்துக்குவேன், எதிர்த்து பேசவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தேன்.

தேர்வுநாளைக்கு முன் நாள் தான் நமக்கு படிக்கும் வழக்கம். முழுப்புத்தகத்தையும் ஒரு இரவுக்குள்ளோ, பகலுக்குள்ளோ படிக்கும் நேரம் தான் இருக்கும்.  அக்கவுண்ட்ஸ்க்கு முதல் நாள், வாத்தியார் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். ஒரே நாளில் அ முதல் ஃ வரை அக்கவுண்ட்ஸ் படிக்க முடியாது என்பதால், ரொம்ப சுருக்கமாக முன்னுரை கொடுத்து, முக்கியமாக, இவை மட்டுமே பரிட்சைக்கு வரும் என்று அவர் தேர்வு செய்த கணக்குகளை மட்டும் சொல்லிக்கொடுத்தார்.

"முன்னுரை முடிக்குமுன்னே, கணக்குக்கு போலாம் " என்றேன்.  - "அதானே உன்னால பொறுமையா கவனிக்க முடியாதேன்னு முறைத்துவிட்டு  கணக்குக்கு" போனார்.

"கணக்கு சொல்லிக்கொடுக்கும் போது, போதும் புரிஞ்சிடுத்து நானே போட்டுக்கறேன். அடுத்த கணக்கு சொல்லிக்கொடுத்தால் போதும்னு"  சொன்னேன். - புத்தகத்தை மூடிவிட்டு கடுப்பாக சென்றுவிட்டார்.

"அடுத்த கணக்கையும் அவரை எதிர்பார்க்காமல் நானே போட ஆரம்பித்தேன், ஆர்வத்தில் வந்து பார்த்தார். - குட், போடு போடு... தப்பா வந்தால் கரெக்ட் பண்றேன் 'சொல்லிட்டு போயிட்டார்.

தவறுகள் சிலதை சரி செய்து விளக்கினார். திரும்பவும் கொஞ்சம் தியரி. சொல்லிக்கொடுக்கும் போதே நிறுத்தினேன். போதும் நானே படிச்சிக்கிறேன்.


"இந்த எழவுக்குத்தான் உனக்கு நான் பாடமே சொல்லித்தர மாட்டேன்னு சொன்னேன். ஏன் சொல்லித் தரச்சொல்லிட்டு இப்படி இம்சை கொடுக்கற.. எதையாவது முழுசா முடிக்க விடறியா, பாதியில் போதும் போதும்ங்கற.. உனக்கெல்லாம் எவன் பாடம் நடத்தறது?! "

அதான் புரிஞ்சி போச்சின்னு சொல்றேனே...  உங்களாட்டும் நான் ஒன்னும் மக்கு மந்தாரம் இல்லை.. ஒரு தரம் சொன்னா போதும் புரியும்.. அதை எல்லாத்துக்கும் அப்ளை செய்துக்குவேன். சும்மா நய் நய்ன்னு லக்சர் கொடுத்து சாவ அடிக்காதீங்க... இப்படி லக்சர் கொடுத்துதான், அன்னைக்கு தூங்கி விழுந்தேன்.. .

மனுசன் பேசுவானாடி உன்கூட...

பேசாதீங்க.. யார் உங்களை பேச சொன்னா..

படிச்சது போதுமா உனக்கு.. பாசாயிடுவியா...

பாசாகிடுவேன்.. ... மேக்ஸ்ஸோட அக்கவுண்ட்ஸ் ரொம்ப ஈசி,,... ஒன்னுமே இல்ல அதுல.. ஒன்னுமில்லாத ஒரு சப்ஜெக்ட்ஐ தெரிஞ்சி வச்சிக்கிட்டு என்னா பில்டப்பூஊஊ

..ச்சீஈஈ, உன்னைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டே உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் பாரு... என்னை சொல்லனும்.. எக்கேடாவது கெட்டு ஒழி.. என்னை விடு..

*****************
தேர்வு முடிந்து, 67% வாங்கி பாஸாகிட்டேன். அப்புறம் என்ன?!!  வாத்தியாருக்கு ஒரே சந்தோஷம், என் முதுகைத்தட்டி, என் பொண்டாட்டி மாதிரி வருமான்னு ஒரே பாராட்டு மழைதான்.

டிஸ்கி : அவர் சொல்லிக்கொடுத்த கணக்குகள் மட்டுமே தேர்வில் வந்தன (Hidden Truth) என்பது குறிப்பிடத்தக்கது.! Obviously, he is an Expert in Accounts ! 

அணில் குட்டி : ஹி ஹி... இதுக்கு அப்புறம்,  இப்ப வரைக்கும் எது சொல்லித்தரக் கேட்டாலும்... எனக்கு தெரியாதுன்னு சொல்லுவாரே தவிர, அம்மணிய அவரு மதிக்கறதே இல்லை.. ....அதை சொன்னாங்களா இவிங்க?

பீட்டர் தாத்ஸ் : “If a child can't learn the way we teach, maybe we should teach the way they learn.” - 

ஏதோ செய்கிறேன்...சொல்கிறேன்..


Left to Right -

=> முட்டையில் டிசைன்ஸ் வரைந்தது.. இது இணையத்தில் ஏதையோ தேடும் போது கிடைத்ததைப்பார்த்து செய்தது....

=> ஆபிஸ் வீடுன்னு பாரபட்சமில்லாமல், கரண்டு இல்லனாலும், வேல இல்லானாலும் செய்யற வேல வரையறது.. கற்பனையாகவும் வரைவதுண்டு,  இம்ரஸ் ஆகியும் எதையாவது பார்த்து வரைவேன். .ஆனா..ஒரு சில படங்களை தவிர.. அது அச்சு அசலா அப்படியே எப்போதுமே வந்ததில்லை.. . இதில் இருக்கும் பெண் "ஷர்மிளா டாகூர்" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா?!

=> பழைய டைரி பார்த்துக்கொண்டு இருக்கும் போது இந்த பேப்பர்  கிடைச்சது. அகமதாபாத் நகரில் இருக்கும் போது, அந்த நகரைப்பற்றி எழுதி வைத்தது..  அடிக்கடி எழுதியததால், கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கு.. .. இப்ப இப்படி எழுத வரலைங்கறது... எனக்கே வருத்தமா இருக்கு..

=>  பென்சில் ஸ்கெட்ச் மட்டுமே செய்ய வரும்.. கலரிங் செய்தால்.. ரொம்ப சொதப்பலாக போய் முடியும். ..வாட்டர் கலரிங்கில் முயற்சி செய்த பூத்தொட்டி படம்....

=> மண் பாண்டாங்களில் டிசைன் வரைய ரொம்ப பிடிக்கும்.. .நவீன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி சிலவற்றை உடைத்தப்பிறகு, செய்யறதை குறைச்சிட்டேன்..  செய்து வைப்பதைவிட, அதை பாதுகாப்பது தான் பெரிய விசயமாக இருக்கு.

=> பட்டு புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்தேன். ஆரணியில் இருக்கும் தோழி, சாதாரணா பட்டுப்புடவை விலையில், ஸ்டோன் ஒர்க் செய்து 3000 - 5000 ரூ வரை அதிகமாக வைத்து விற்கிறார்கள் என்று சொல்லவும், அப்படி என்னதான் இருக்கு இதில் என செய்து பார்த்தேன். ஒன்னும் கஷ்டமில்ல, ரொம்ப ஈசியாத்தான் இருந்தது. பார்க்க அழகாகவும், ஆடம்பரத் தோற்றமும் தருகிறது.
****************

=> எழுதும் போது பேப்பர் பறக்காமல் இருக்க, பேப்பரின் மேல் எப்பவும் இடது கையை இப்படி வைப்பது தான் என் பழக்கம். நவீனும் சின்ன வயதிலிருந்தே என்னைப்போலவே  செய்கிறான். சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம்..

A perfect Family - இவர்களின் உடை எப்பவுமே மாறாது போல. மூவருமே அவர்களை பார்த்ததும், அவசர அவசரமாக, கையில்  கேமராவை எடுப்பதை கவனித்து போஸ் கொடுத்தார்கள்... :) 

 => லைவ் நிகழ்ச்சிகள் போகும் போது, பிரபலங்களை பார்ப்பதில் ஒரு சந்தோஷம், அதே சமயம், அவர்கள் நடுநடுவே சொல்லும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. பாலுஜி, நடித்து, இசைஅமைத்து, சிகரம் படத்தில் பாடிய பாடல் சிலவற்றை சொல்லும் போது, எதுவுமே என் சுயமில்லை, அங்க இங்கன்னு எடுத்து த்தான் இசை அமைத்தேன்னு சொன்னாங்க. :). இதற்குமே ஒரு தைரியம் வேணும். இப்படி பல நிகழ்வுகளை சொன்னார். வாழ்க்கையில் முதன் முதலில் சென்ற லைவ் நிகழ்ச்சியும் இதுவே. (கடைசியும் கூடன்னு நினைக்கிறேன்.)


அணில் குட்டி : ஏதேதோ எழுதியிருக்காங்க, எல்லாம் சுயப்புராணமா இருக்கு... .. மீ ..தி ஃப்லீங்.. செம போர் யா.... ... சோ.. க்யுட் திஸ் பதிவு யா... !  பீட்டரூ... நீ தத்துவத்த எடுத்து வுடு...

பீட்டர் தாத்ஸ் :  “Reality is a prison, where one vegetates and always will. All the rest /thought, action /is just a pastime, mental or physical. What counts then, is to come to grips with reality. The rest can go.”
.

Killing Fields - ஐ.நா தீர்மானமும் அமெரிக்காவின் சொம்பும்!

பெண்ணின் நிர்வாணம் அழகு " என்ற பதிவை எழுதுவதற்கு காரணமான, அந்தக் காணொளியைப் பார்க்க நேர்ந்தது தான் முதல் தரம். அதிலிருந்து வெளிவர 3-4 நாட்கள் ஆகின. பின்னர் நண்பரிடம் பேசும் போது, பெண்கள்,குழந்தைகளை மட்டுமே பார்க்கிறீர்கள், வயதானவர்கள், நோயாளிகள் என எல்லோருமே போரிலிருந்து காக்கப்பட வேண்டியவர்கள் என்றார். பெண்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன்.  போர்க்காலத்தில் ரத்தமும், பிணங்களும் சகஜமே என்றாலும், கதை சொல்லி கேட்டும், சரித்திரத்தில் படித்தும் தான் தெரிந்துகொண்டு இருக்கிறேன். காணொளிகளைப் பார்த்து, நானே அங்கிருப்பது போல உணர்வது இணையத்தின் உதவியால்...

அடுத்து, உ.த கூகுள் பஸ்ஸில் ஒரு காணொளியைப் பகிர்ந்தார். கடவுளே, அதைவிட கொடுமையை இனி என் வாழ்நாளில் பார்க்க வாய்ப்பிருக்காது, இது தான் முற்று,  எல்லை என முடிவுக்கு வருமளவுக்கு இருந்தது. பெண் போராளிகள் துன்பறுத்தப்பட்டு, கொல்லப்பட்டு, பெண் பிணங்களை, "நல்ல வடிவு" என இழுத்துக்கொண்டு சென்ற காட்சியைப் பார்த்தே, மனம் பதறிப்போனது. உடனே  நிதானம் இழந்து உடல் நடுக்கத்தோடு தப்பும் தவறுமாக எழுதினேன். ஆனால் அதற்கு பின் பார்த்ததை எழுத வார்த்தைகள் இல்லை, இப்போது நினைத்துக்கொண்டாலும், சகலமும் ஒடுங்கிப்போகிறது.. அந்தக் காணொளியில் நான் கண்டது.. 

கர்ப்பமான ஒரு பெண் கொல்லப்பட்டு, அவள் வயிற்றில், கிழிந்த ஒரு துவாரத்தின் வழியாக, உள்ளே இறந்துபோன சிசுவின் ஒரு கை வெளியே வந்துத் தொங்கிக் கொண்டு இருந்தது.  கடவுளே, இந்தக் காட்சியைப் பார்த்தபின், இதற்கு மேலும், மோசமான ஒரு காட்சியே இனி பார்க்கவேண்டியதில்லை என நினைக்க வைத்தது. இதற்குப்பின், பெண்ணின் கற்பும், துன்புறுத்தல்களும், அவளின் உடல் பற்றிய பிரஞ்ஞையும் இல்லாமலே போனது." கில்லிங் ஃபீல்ட்ஸ்' வீடியோவில் குழந்தை கொல்லப்பட்ட காட்சி, புலிகளை மட்டுமல்ல, தமிழினத்தையே வேரோடு அறுத்து எரிய வேண்டுமென்ற வெறி அந்த அரக்கர்களிடம் இருப்பதை தெளிவாக்கியுள்ளது. .  

ஆமாம், அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரி என ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்தில் நாம்(இந்தியா) இருக்கிறோம். ஈராக்கோடு போர் தொடுத்து, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் அழித்து, அமெரிக்காக்காரன் செய்யாத குற்றங்களா? அங்கு, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்போடு தான் இருந்தார்களா? மனித சடலங்களே இல்லாத, எதையுமே அழிக்காத ஒரு போராகத்தான் அது இருந்ததா? சதாம் ஹூசைன் என்ற மாவீரன் ஏன் தூக்கிலிடப்பட்டார் ? ஈராக் போரில், அமெரிக்கா போர் குற்றமே செய்யவில்லையா? பின்லேடன் + குழு விசாரனையின்றி ஏன் கொல்லப்பட்டார்கள்? ஆக, அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரியே ! உலகத்தை அவன் கையில் கொண்டுவர வேண்டும் என்ற திமிரும், அவனை வீழ்த்த யாருமில்லை என்ற மதப்பும் இருப்பதில், எப்போதும் குரலையும், கையையும் ஓங்கிக்காட்டிக்கொண்டு  இருக்கிறான். இவனோ வேற்று நாட்டு போர்க்குற்றங்களைப் படம் பிடித்து க்காட்டி, அதை ஐ.நா வாக்கெடுப்பில் வெற்றிப்பெற செய்து இருப்பதை, நமக்கு சாதகமான ஒரு நிலைபாடாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ராஜதந்திரமாக எதற்கோ உள்நோக்கத்தோடு அடிப்போடுகிறான் என்றே நினைக்க முடிகிறது. 

நிற்க, ஐ.நா இலங்கை போர்குற்றத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள் அனைத்தும்,அநேகமாக அமெரிக்காவுக்கு எதிரானவை. இந்தியாவோ, தலையெழுத்தே என பத்தோடு பதினொன்னாக வாக்களித்திருக்கிறது என்பதற்கு மேலாக, எப்போதும் அமெரிக்காவுக்கு சொம்பு தூக்குவதால், இதை செய்ய வேண்டிய காட்டயத்தில் இருக்கிறது. அமெரிக்காகாரன் எதிர்காலத்தில் தரப்போகும் பிரச்சனைகள் என்னவென்றே தெரியாத ஒரு சூழலில், நாமோ உணர்ச்சிவசப்பட்டு நம் நாட்டுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறோம், அமெரிக்காக்காரனைப் பாராட்டுகிறோம். தமிழின மக்களுக்காகவோ, அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவோ, அமெரிக்காகாரன் இதை நிச்சயமாக செய்யவில்லை.  இந்த வாக்கெடுப்பைக் கணக்கில் கொண்டு நாம், ஏதேனும் நல்லது நடக்கும் என நம்பினால், தமிழனின் நெற்றியில் பெரிய நாமம்...இல்லையில்லை, மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா கூடவே சொம்பு தூக்கும் இந்தியா.   

Mr.Dynobuoy கூகுள் +ல இருந்து பகிர்கிறேன். நன்றி Mr.Dyno...

ஐ.நா தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்:

1. ஐநாவின் பங்களிப்பு இருப்பதால் கொஞ்சமேனும் பக்க சார்பு இல்லாத உண்மையான விசாரிப்புகள் வெளிவர'லாம்.

2. சேனல் 4ல் வெளியான விடியோவின் சாரம் பொதுமக்கள் இலங்கை அரச படைகளால் தாக்கப்பட்டனர். அதே சமயம் புலிகள் மக்களை கேடயமாக உபயோகித்தனர். இதை பற்றிய உண்மை தகவல்கள் வெளிவரலாம். போர் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் பல விடியோக்கள் போர்வீரர்கள் கையிலும் பொது மக்கள் கையிலும் சிக்கி உள்ளது. தற்போதைய லங்கா ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் / ஜர்னலிஸ்ட்டுகளிடம் இருக்கும் அந்த விடியோக்கள் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கலாம். மீதம் இருக்கும் புலிகளின் கிளைகள் வேர் அறுக்கப்படலாம். புலிகளின் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும் அதை அரசாங்கம் களவாண்டதா என்பதும் தெரியவரும்.

3. புலிகளுக்கு யார் ஆயுதங்களைக் கொடுத்தார்கள்/விற்றார்கள், லங்கா அரசுக்கு யார் ஆயுதங்கள் வழங்கினார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும். (இந்தியாவின் அண்டர் டாயர் அங்கு கிழிபடலாம்). சீனா புலிகளுக்கும், லங்கா அரசுக்கும் ஆயுதங்கள் விநியோகித்ததும் தெரிய வரலாம். லங்கா அரசுக்கு மத்தியகிழக்கு நாடுகளுடன் இருக்கும் தொடர்பு வெளிவரலாம்!

4. இதன் மூலம் லங்கா அரசப்படைகள் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தவறியதாக நிருபிக்கப்படலாம். அவ்வாறு நேரும் பட்சத்தில் தமிழர்களுக்குத் தங்களை சுயாட்சியாக ஆளும் அதிகாரம் வழங்கப்படலாம். சுயாட்சியான மாகாணம்/ஆட்சி அமையும் வரை ஐநா பாதுகாப்புப்படை அங்கேயே இருக்கலாம். தமிழர்களுக்கு பாதுகாப்பு, அதே வேளை சுயாட்சியாக ஒரு மாகாணமாவது கிடைக்க இதைத்தவிர வேறு அறவழிகள் இன்று இல்லை!


5. தனி மாகாணம் கிடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் இன ஒழிப்புகளிலும் அக்கிரமிப்பில் இருந்தாகிலும் எஞ்சி உள்ளோர் தப்பி புணர்வாழ்வு அமைக்க இதை தவிர வேறு வழிகள் இல்லை!

இதில் டைனோ, பயன் என்று சொல்லப்பட்டவை எல்லாமே "..லாம்" என்றே முடித்திருக்கிறார். இந்த லாம்.'.. நடக்க'லாம், நடக்காமலும் போகலாம்... எதுவுமே நடக்கும் என உறுதியாக சொல்லமுடியாது. இப்படி உறதியில்லாத ஒரு விசயத்தை நம்பி, அமெரிக்காவிற்கு ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சனம், இருப்பினும், ஒரு வேளை நல்லது நடந்தால்.........  காலம் மட்டுமே பதில் சொல்லும்..எதுவும் அதுவரை நிரந்தரமல்ல..

அணில் குட்டி : கவி, ஃப்ரம் ஹார்ட் சொல்றேன்... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை, இட்லி குஷ்பூவுக்கு பதிலா, ஐ.நாவில் பேச உங்களை அனுப்பி இருக்கலாம், அமெரிக்காக்காரன் துண்ட காணோம் துணியக்காணோம்னு ஓடியே போயி இருப்பான், இந்தியானாவே அவனுக்கு ஒரு இது...... ........ எது????? அட அதான் ஒரு இது....... ....வந்து இருக்கும்.... ம்ஹூஉம்ம்.....ஜஸ்ட்டு மிஸ்ஸூ.... 
என்ன மக்கா சொல்றீங்க? ! (ஏய் யாரும் சிரிக்க க்கூடாது இது சீரியஸ் குவஸ்டீனு:)))) ) (கிக்கி.. கிக்கி. கிக்கி...... இது கவி'க்கு தெரியாம பின்னாடி திரும்பி நின்னு சிரிச்சது.... :))))))))))) )

பீட்டர் தாத்ஸ் : Man has no right to kill his brother. It is no excuse that he does so in uniform: he only adds the infamy of servitude to the crime of murder.