அவசியம் தேவை - அறிவிப்பு

பார்வைகள் படித்துவரும் அனைவருக்கும் வணக்கம். கீழ் இருக்கும் பட்டியல் வருடம் தோரும் பார்வைகளில் இட்ட இடுகைகளின் எண்ணிக்கை.
2009 - 115+1
2008 - 48
2007 - 40
2006 - 48
ஆக...2009 ல் மட்டும் 115 +1 எழுதிவிட்டேன்.. இன்றைக்கு தான் கவனித்தேன்.. மற்ற வருடங்களை பார்த்தபோது இந்த வருடம் ரொம்பவே அதிகம் னு தோன்றியது...
எனக்கும் கொஞ்சம் எழுத்தில் இருந்து ஓய்வு தேவைன்னு படுது. கொஞ்ச நாட்கள் ப்ளாக் மறந்து, இண்டர்நெட், நண்பர்கள் எல்லாம் மறந்து அமைதியாக இருக்கனும்னு நினைக்கிறேன். அந்த அமைதி அவசியமானதும் கூட.
ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேர் முதல் அதிக பட்சமாக 1000 பேருக்கு மேல் பார்வைகள் பதிவுகளை படித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களும் நன்றிகளும். எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்தது போலவே திரும்ப வந்து எழுதும் போதும் கொடுங்கள் !!
தலைவர் பாணியில் வருவேன் ஆனா......எப்ப வருவேன்.. எப்படி வருவேன் னு மட்டும் சொல்ல மாட்டேன்.. வர்ட்டா.... ஹா ஹா..ஹா...!! :))))
அணில் குட்டி அனிதா : அட ப்ளாக் ஒரு 7 1/2 தொல்ல கொஞ்ச நாள் உங்களுக்கு இல்லையா.. ஹை..... எனக்கு ஜாலி.. அம்மணி எழுதற கொடுமைய எல்லாம் நான் தான் முதலில் படிக்கிறேன்... அதனால் எனக்கு தான் பர்ஸ்டு ரீலிப்பூ..
சரி மக்கா இம்புட்டு சொல்லியும் கீழ இருக்கறாப்பல யாராச்சும் அம்மணிக்கு மெயில் அனுப்பனீங்க நானு டெரரு ஆயிடுவேன்... ..
1. மேடம் இருக்கீங்களா செத்துட்டீங்களா?
2. யக்கா.. உடம்புக்கு ஏதும் பிரச்சனையா?
3. கவிதா யாராவது ஏதாவது பிரச்சனை செய்தாங்களா?
4. கவி வாட்ஸ் அப் ரே..?
5. யக்கா ப்ளாக் ஆ எவனா எதாச்சும் செய்தானா சொல்லு.. உலகத்துல நான் எந்த மூலையில் இருந்தாலும் வந்து அவனை கவனிக்கிறேன்..
6. கவிதா என்ன பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா தீர்த்து வைக்கலாம்..
7. கவிதா என்ன தீடீர்ன்னு?
8. அணிலு ஏதாச்சும் சொல்லிடிச்சா?
9. சரி கவிதா நல்லாயிருங்க.. கீப் இன் டச் சூ..
10. ஹல்லோ டொக் டொக் டொக்..மே ஐ கம் இன்.. எனி ஒன் அட் ஹோம்.. ஆர் யூ ஸ்டில் அலைவ்வ்வ்வ்வ் ?!!
பீட்டர் தாத்ஸ் :- “Sometimes the most urgent thing you can possibly do is take a complete rest”
.
Labels: கதம்பம் 11 Comments
திருட்டு பசங்க திருட்டு பசங்க தான்,,!!
சென்னையில் தனியாக நபர்கள் இருப்பதை கவனித்து, அந்த வீடுகளில் கொள்ளைகள் நடப்பது சகஜமாகிவிட்டது. நாங்கள் இருக்கும் இடத்தில் தனியாக பகல் 11 மணி அளவில் நடந்து சென்ற பெண்ணின் தங்க சங்கிலி'ஐ திருடன் அறுத்து சென்றுவிட்டது, எங்கள் நகர் பெண்களுக்கு் மனதில் கிலி'யை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்ந்து அடுத்த அடுத்த நாள் ஒரே இடத்தில் இரண்டு முறை நடக்கவே... எல்லோரும் பயந்து, போலிசார் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து ரோந்தில் இருந்து வருகிறார்கள்.
இந்த மாதிரி திருடர்களை பற்றியும், வீடு புகுந்து திருடும் ஆட்களை பற்றிய பேச்சு வரும் போது, என் கணவரிடம் "நீங்கள் கவலை படாதீர்கள், எப்படிப்பட்ட திருடன் வந்தாலும்.. நான் அவனை உட்காரவைத்து, அன்பாக பேசி, சாப்பாடு எல்லாம் போட்டு நல்லவானாக்கி அனுப்பி வைக்கிறேன்" என்றேன்.
அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி சிரிக்கிறார் என்று முறைத்தால்.."திருட்டு பசங்க திருட்டு பசங்க தான்.. மாறவே மாட்டாங்க. .நீ உட்கார்ந்து பேசி சாப்பாடு எல்லாம் போட்டாலும், எல்லாம் முடிந்த பிறகு உன் நடு மண்டையில் நச்'ன்னு (அது ஏன் நடுமண்டை என்ற கேள்வி எழுந்தது) போட்டுட்டு, அவன் வந்த வேலையை முடிக்காமல் போக மாட்டான் "என்றார்.
"அப்படியா? "என்று நானும் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினேன்.. ஹி ஹி..அப்படி என்ன இதுல சிந்திக்க இருக்குன்னு நீங்க நினைக்கறீங்களா.. வேற ஒன்றும் இல்லை.. நடு மண்டையில் நச்சுன்னு போட்டால், என்ன செய்வது என்று தான்.
இது வரையில் இரண்டு முறை நேரடியாக திருட்டை பார்த்து இருக்கிறேன். திருடும் போது இல்லை, திருடிக்கொண்டு சென்ற பிறகு. என்னுடைய ஆயா வெள்ளிக்கிழமை ஆனால் போதும் காலையில் 4 மணிக்கு எழுந்து, தலையில் எண்ணெய் வைத்து, வெளி அடுப்பில் சுடத்தண்ணீர் வைத்து, குளிப்பது வழக்கம். எப்போதும் 4 மணிக்கு எழுந்தாலும், வெள்ளியன்று தலைக்குளித்தல் என்பது திருடனுக்கு வசதியாக போயிற்று. ஏனென்றால் அன்று தான் அவர் கம்மல், மூக்குத்தி கழட்டி வைத்துவிட்டு குளிப்பார்.
அன்றும் அப்படித்தான், நாங்கள் எல்லாம் உறங்கிக்கொண்டு இருக்க, ஆயா கம்மல், மூக்குத்தியை கழட்டி வைத்துவிட்டு, எப்போதும் போலவே கதவையும் திறந்து வைத்துவிட்டு, அவர் வெளியில் சுடத்தண்ணீர் வைக்கும் இடத்தில் உள்ள பாத்ரூமில் குளித்துக்கொண்டு இருக்க, தொடர்ந்து கவனித்து வந்திருந்த திருடன், வீட்டில் நுழைந்து கம்மல் மூக்குத்தியை தேடத்தொடங்கி இருக்கிறான்.
படுத்திருந்த எங்கள் அனைவரையும் தாண்டி, இரண்டு பீரோக்களை திறந்து துணி எல்லாம் இழுத்து கீழே போட்டு, மற்ற அறைகளிலும் துளிக்கூட சத்தமே இல்லாமல் தேடிவிட்டு, கடைசியில் , அடுப்பங்கறையில் ஒரு டப்பாவின் மூடி மேல் சர்வ சாதாரணமாக கழட்டி வைத்திருந்த கம்மல், மூக்குத்தியை எளிதாகவே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
குளித்துமுடித்து வந்த ஆயா கண்ணில் பட்டது பீரோக்கள் !?? நான் தான் முதல் டார்கட்... பாப்பா எழுந்திரு... எவனோ உள்ள வந்துட்டு போயிருக்கான்...அதுக்கூட தெரியாம தூங்கறியா...?!!
".........................." (தூக்கம் கலையாமல் கடுப்பாக எழுந்த எனக்கு பீரோவை பார்த்ததும், பதட்டத்தோடு சட்டென்று எழுந்து நின்றுவிட்டேன்.)
"பாப்பா, உன்னைத்தாண்டி தானே போயிருக்கான்..காலடி சத்தம் கூட தெரியாமல் தூங்கனியா. .என்ன பொண்ணும்மா நீ.. பொண்ணு இப்படியா தூங்கறது... ?!!
ஆரம்பிச்சாட்டங்கய்யா காலையிலேயே.. பொண்ணு எப்படி இருக்கனும்னு... ம்ம்ம்.. இன்னைக்கு முழுக்க நிச்சயமாக வீட்டில் இருக்கும் அத்தனை வாயிலும் நான் தான் மாட்டுவேன். இருந்தாலும் ஆயா சொல்லுவதில் ஏதோ இருக்குமோ??? நாம் அப்படி தூங்கி இருக்கக்கூடாதோ?!! என்ற கேள்வி எழாமல் இல்லை...
எல்லாம் திறந்து இருந்தாலும் எதுவும் திருடு போகவில்லை என்று ஹாலையும், ரூம்; யையும் வைத்து முடிவு செய்த நாங்கள், ஆயாவின் கம்மலை மறந்து போனோம், ஆயாவும் தான். !!
அரைமணி நேரம் கழித்துத்தான் ஆயா சமையல் அறை சென்று பார்க்க, கம்மல் காணவில்லை என்று தெரிந்தது. அப்படியே முழங்கால் கட்டி உட்கார்ந்துவிட்டார்கள்.
*********************
இது முடிந்து பல மாதங்கள் கழித்து தாத்தா எங்களின் குடும்ப ஜாதக புத்தகத்தை எடுத்துவர சொன்னபோது, எடுத்து வந்து அவரின் பக்கத்தில் உட்கார்ந்து முதலில் ஆரம்பித்த தாத்தாவின் ஜாதகத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தேன். அடுத்து ஆயா ஜாதகம் வந்தது. திருடு விஷயமாக தாத்தா குறிப்பு ஏதோ எழுதி இருப்பதை பார்த்து படிக்க ஆரம்பித்தேன்.
அதாவது திருடு நடந்த பிறகு இரவும் பகலுமாக உட்கார்ந்து ஆயாவின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து, கணக்கிட்டு, "இந்த கிரகபலன்களினாலும், பார்வையினாலும் பத்மாவின் கம்மல் தொலைந்துபோனது - பொருள் நஷ்டம்" என்று எழுதி இருந்தார்.
அட.. தாத்தா இவ்வளவு நல்லா ஜாதகம் பார்க்கிறாரே? ஏன் இந்த கணக்கை எல்லாம் இந்த திருட்டு சம்பவம் நடக்கும் முன்னமே கணக்கிட்டு சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த திருட்டு நடக்காமல் ஆயா கவனமாக இருந்து இருக்கலாமே? நடந்து முடிந்த பிறகு கணக்கிட்டு பார்ப்பதில் என்ன பலன்? ஒரு வேளை இவரின் ஜாதகம் பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்கிறாரா?
ஏன் ஜோசியர்கள் நடந்து முடிந்த விஷயத்திற்கு இவ்வளவு துள்ளியமாக காரணம் கண்டு பிடிக்கிறார்கள்? இத்தனை துள்ளியமாக ஏன் அவர்களால் எதிர்காலத்தை கணிக்க முடிவதில்லை...? அப்படிமட்டும் முடிந்துவிட்டால், எத்தனை விஷயங்களில் நாம் கவனமாக இருக்க முடியும்.
தாத்தாவிடமும் கேட்டு விட்டேன் தான்... ஆனால் பதில் ஏதும் தாத்தா சொல்லாமல் "ம்ம்ம்ம்.....பத்தா..(பத்மா) உன் பேத்தியம்மா கேள்விய பாத்தியா..?!! அம்மாடி...நீ கேட்டுட்டே. .இனிமே அப்படி கணித்து வைக்க முடியுதான்னு பார்க்கிறேன்... " என்று அப்போது சொன்ன தாத்தா அடுத்து கணித்து வைத்து இருந்தது என் அப்பாவின் மரணம் குறித்தது....
அதை எழுதாமல் மனதில் வைத்திருந்து..... அப்பா இறந்தபின், அவரின் இழப்பு தாங்காமல் தனியாக அமர்ந்து அப்பாவை பற்றி பேசிக்கொண்டே இருப்பார், அப்படி பேசும் போது இந்த குறிப்பையும் சொன்னார், மார்ச் 18 ஐ தாண்ட மாட்டேன்னு தெரியும்டா.. உன்னை விட்டுட்டு ஊருக்கு போகாமல் இருந்து இருக்கலாம்.. உங்க அம்மா உன் பக்கத்தில் இருந்து இருந்தா..... உன் உயிரை எப்படியும் திருப்பி கொண்டு வந்து இருப்பா...." என்றார்.
கேட்டுக்கொண்டு இருந்த நான் அப்போது நினைத்தது...."உண்மைதான் ஆயா மட்டும் இருந்து இருந்தால், கண்டிப்பாக அப்பா இறந்து இருக்கமாட்டார்."
அணில் குட்டி அனிதா : சரி என்ன சொல்ல வரீங்க..திருட்டு பசங்கள திருத்த முடியாதுன்னா? இல்ல உங்க தாத்தா நல்ல ஜோசியரா? வேஸ்டா?
பீட்டர்தாத்ஸ் : Thief : - Set a thief to catch a thief ....... :
Horoscope : - “There are many methods for predicting the future. For example, you can read horoscopes, tea leaves, tarot cards, or crystal balls. Collectively, these methods are known as "nutty methods." Or you can put well-researched facts into sophisticated computer models, more commonly referred to as "a complete waste of time.”
.
Labels: சமூகம், பழம்-நீ 21 Comments
கட்டில் காட்சிகள்
அதிகமாக ஆங்கிலபடங்கள் பார்க்க 90 களில் ஆரம்பித்தது. ஆங்கில படங்களில் கடைசியாக பார்த்த Terminator Salvation 2009 வரை என்ன இல்லை? நம்மை விட அதிக அளவு சென்டிமென்ட்'ஸ், காதல், குடும்பம், குழந்தைகள், பாடல்கள், அழுகை, சிரிப்பு, பிரிவு, நடனம் என்று எல்லாமே இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றையும் விட வியக்கவைக்கும் டெக்னாலிஜி! பல வருடங்கள் முன்னோக்கி எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் அவர்களின் சிந்தனையும் செயலும் ஆச்சரியப்பட வைக்கிறது. நாம் இன்னும் பின்னோக்கி சென்று 70-80 கதைகளை தேடிபிடித்து எடுத்து அதை 100% வெற்றி பெறவும் செய்கிறோம். டெர்மினேடர் சீரியல் படங்களில் எல்லாம் இயந்திர மனிதனுக்கு க்கூட இதயம் இருக்கிறது போன்று அமைக்கப்பட்ட காட்சிகள் தமிழ் சினிமாக்களின் சென்ட்டிமெண்டுகளை எல்லாம் வீழ்த்திவிடுகின்றன.
தலைப்புக்கு வருவோம், காதல், முத்தம், அணைப்பு, கட்டில் காட்சிகளும் ஆங்கில படங்களில் மிகைப்படுத்தப்படாமல், அதாவது கதையோடு ஒன்றி தேவையான இடத்தில், அதுவும் நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. ஆனால் தமிழ் படங்களில்? அடடா... குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க முடியாதவாறு நம்மை நெளிய வைக்கின்றன. முத்தம் கொடுப்பதை நேராக காட்டமாட்டார்கள், (இதில் கமல்ஜி விதிவிலக்கு) முன்னே இரண்டு பூக்கள் கேமாராவிற்கு முன் வந்து நிற்கும், இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து நம்மவர்கள் தங்களின் கிரியேட்டிவிட்டியை காட்டுவார்கள். ஆனால் அத்தோடு விடுவதில்லை, அந்த பெண்ணின் கண்ணில் ஆரம்பித்து, உதடு, கழுத்து, மார்பு, இடுப்பு, தொப்புள் என்று கேமராவின் கண்கள் மட்டும் அல்ல அனைவரின் கண்களும் ஒன்றொன்றாக சென்றுக்கொண்டே இருக்கும். இது தேவையா? இத்தனை முக்கியத்துவம் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணின் உடலுக்கு கொடுத்து தமிழ் படங்களில் காட்டுவதை என்று நிறுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.
சின்ன வயதிலிருந்து, இந்த பெண்ணியம் பேசும் பேச்சாளிகளிடம் இதை பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்ததுண்டு, ஆ..ஊ வென்றால் பெண்களுக்கு எதிராக அது நடந்து விட்டது இது நடந்து விட்டது என்று கூப்பாடு போடும் பெண்கள், நடக்க தூண்டுதலாக நடை உடையுடனும், இப்படி கவர்ச்சியாகவும் உடம்பை காட்டி மிகவும் அசிங்கமாக நடிக்கும் பெண்களுக்கும் எதிராக என்றாவது குரல் கொடுத்தார்களா? ஒரு முறை குஷ்புவை எதிர்த்து குரல் கொடுத்தார்கள், அந்த அம்மா திருமணத்திற்கு முன்னும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள் என்று துடைப்பம் செருப்பு எல்லாம் காட்டினார்கள்.
பல வீடுகளில், குறிப்பாக பல இளைஞர்களின் அறைகளில் இப்படி அரை குறை ஆடையுடன் கூடிய நடிகையின் படங்கள் இல்லாமல் இருப்பதில்லை. அவர்களுக்கு தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட படங்கள் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களை பார்க்கும் போது இது இல்லாவிட்டால் இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்ததுண்டு.
மிகவும் விரசமான தாபத்தை ஆசைகளை தூண்டி விடக்கூடிய கட்டில் காட்சிகள் தமிழ் படங்களில் காட்டபடுகின்றன. உலக நாயகனின் பல படங்களை இதற்கு உதராணமாக சொல்லலாம். அவை தேவையில்லை, திணிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டியுள்ளது. தேவர்மகன், ரேவதி-கமல்ஜி, நாயகன் - சரண்யா- கமல்ஜி, ரோஜா - அரவிந்த்சாமி-மதுபாலா, பாம்பே - அரவிந்த்சாமி மனிஷா கொய்ராலா
பயணங்கள் முடிவதில்லை மோகன்- பூர்ணிமா ஜெயராம், வெள்ளை ரோஜா, சுரேஷ்-ராதா, அலைகள் ஓய்வதில்லை, கார்த்திக்-ராதா.. எம்.ஜி. ஆர் -லதா, மஞ்சுலா, etc இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இவை எல்லாமே அந்த இயக்குனரின் எண்ண ஓட்டத்தை, ஆர்வத்தை, விருப்பத்தை காட்டுகிறது என்றே வைத்துக்கொள்ளலாம். வேட்டையாடு விளையாடு படத்தில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வருவார்கள். நேராக மாடிக்கு போவார்கள் உடனே முதலிரவு.. அட அட அட..?!! தமிழ் சினிமாக்களில் என்ன ஒரு முக்கியத்துவம், அவசரம் அந்த முதலிரவு காட்சிகளுக்கு மட்டும்.? ஒரு திருமணத்தில் இது மட்டும் தான் ஹை லைட் செய்து காட்டவேண்டிய விஷயமா? இதை விடவும் எத்தனையோ முக்கியமான நமக்கு தேவையான சடங்குங்கள் இருக்கின்றனவே.. ஒரு வேளை நாம் அதை தான் இயக்குனர்களி்மிருந்து எதிர்பார்க்கிறோமா? அதனால் கொடுக்கிறோம் என்று அவர்கள் சொல்லுவார்களோ?
கதையின் ஓட்டத்தோடு வருகின்ற முத்தக்காட்சிகள், கட்டில் காட்சிகள் அவசியமே என்றாலும் அதை மிகவும் விரசமாக காட்டாமல், தேவை (படத்திற்கும், நமக்கும்) என்ற அளவில் காட்டினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. Sylvester Stallone - இவரின் ஒரு படத்தில் (பெயர் நினைவில்லை) இவரும் , படத்தின் கதாநாயகியும் நிர்வாணமாக இருக்கும் காட்சிகள் காட்டப்படும், அசிங்கமாகவோ, கவர்ச்சியாகவோ, விரசமாகவோ முகத்தை சுளிக்கும் படியாகவோ இருக்காது. காட்சிகள் எடுக்கப்பட்ட விதமும், கேமரா ஆங்கி்லும் அப்படி இருக்கும். ஏன் மிக சிறந்த படமான டைட்டானிக் படத்தில் வரும் முத்த காட்சிகளும், கட்டில் காட்சிகளும் நம்மை முகம் சுளிக்க வைத்தனவா? ரசிக்கமுடிந்ததல்லவா? அந்த படத்திலும் நிர்வாணமாக ஒரு பெண்ணை காட்டி இருக்கிறார்கள் தானே?
தமிழ் படங்களில் தவிர்க்க வேண்டிய கட்டில் காட்சிகளை வரவேற்றும், தேவையான மற்றவற்றில் கவனம் செலுத்தவும், உலக தரத்திற்கும் முன்னோக்கிய சிந்தனையோடும் படங்கள் எடுக்க மாட்டார்களா என்று எதிர்ப்பார்க்கும், கட்டில் காட்சிகளையும், படங்களில் சம்பந்தமே இல்லாமல் முதல் இரவு காட்சிகளின் அவசரத்தையும் வெறுக்கும் ஒரு ரசிகைன்னு வைத்துக்கொள்ளலாம்.
அணில் குட்டி அனிதா : ...............கவி ஆர் யூ..ஓகே?????? ஏதும் பிரச்சனையா? என்க்கிட்ட கூட சொல்லவே இல்ல?
பீட்டர் தாத்ஸ் : Life without sex might be safer but it would be unbearably dull. It is the sex instinct which makes women seem beautiful, which they are once in a blue moon, and men seem wise and brave, which they never are at all. Throttle it, denaturalize it, take it away, and human existence would be reduced to the prosaic, laborious, boresome, imbecile level of life in an anthill. ~Henry Louis Mencken
Labels: சமூகம் 45 Comments
பிரவாகம் காயத்' திரி 'க்கு.....

பிரவாகம் காயத்திரி குட் மார்னிங் மெயில் அனுப்புவாங்க. அதில் ஒரு முறை இந்த இயற்கை காட்சி வந்தது. வரைந்து பார்க்கலாமே என்று முயற்சி செய்தேன். இதை வரைந்த பிறகு ஒரிஜினல் படத்தை பார்க்க எனக்கே ரொம்ப பாவமாக போச்சி.. ஏன்னு எல்லாம் கேட்கப்பிடாது.... :))))))))
* படத்தை க்ளிக்'கி பெரிதாக்கி பார்க்கவும். :)
அணில் குட்டி அனிதா : ஆமாம்ம்மா...... ஏன்ன்னு எல்லாம் கேட்கப்பிடாது.. ஒரிஜினல் படத்தை காட்ட மட்டும் சொல்லுங்க... த்த்தூஊஊஊஊ... ன்னு துப்பிட்டு போயிடுவீங்க.. அதுக்கு தான் அம்மணி பில்டப் டு கொடுத்து இருக்காங்க.. (ஆனா மக்கா நான் சொல்றனேன்னு உணர்ச்சி வசப்பட்டு துப்பிடாதீங்க. .உங்க கம்பியூட்டர்க்கு தான் டோட்டல் டேமேஜ். .ஹி ஹி.. ... )
காயத்திரி யக்கோவ்வ்வ் ..! ஏண்டா இவிங்களுக்கு இப்படி எல்லாம் மெயில் அனுப்பினோம்னு.. !! இப்பவாச்சும் நீங்க ஒரு நிமிட் யோசிச்சி பாக்கனும்.. சொல்லிட்டேன்..!!
பீட்டர் தாத்ஸ் :- Drawing is the honesty of the art. There is no possibility of cheating. It is either good or bad.
அணில் குட்டி அனிதா : பீட்டரு....போதும் நிறுத்திக்கோ....!!! வர வர நீ டூ மச்சா கவி க்கு குவாட்(டர்) கொடுக்கற ....என்னால முடியல......நிறுத்திக்கோஒ.... :(( சொல்லிட்டேன்.. டென்ஜன் பண்ணாத என்னைய !! :(
Labels: ஓவியம்/புகைப்படம் 10 Comments
ஆடு - புலி ஆட்டம்
ஆடு புலி ஆட்டம் இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக சொல்லப்படுகிறது. திண்ணையில் அமர்ந்து விளையாடுவார்கள்.
எங்க வீட்டில் இந்த ஆடு - புலி ஆட்டம் அடிக்கடி விளையாடுவோம். (எங்க வீடு ன்னா.. ஆயா, தாத்தா வீடு) , திருமணத்திற்கு பிறகு ஒரு முறை கூட இந்த விளையாட்டை விளையாடவில்லை. எங்கள் வீட்டில் ஆயா வை இது வரையில் இந்த ஆட்டத்தில் யாரும் வெற்றி பெற்றது இல்லை.
அப்பாவும் ஆயாவும் இந்த விளையாட்டை விளையாடி பார்த்ததில்லை. அப்பா ஒரு வேளை ஆயாவை தோற்க்கடித்து இருக்கலாம் என்றாலும் ஆயாவை போன்ற சமயோஜிதமாக யோசிக்கும் திறன் அப்பாவிற்கு உண்டா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆயாவுடன் விபரம் தெரிந்து நான் விளையாடவில்லை என்றாலும், விளையாடிய வரை தோற்று த்தான் போயிருக்கிறேன். 16 ஆடுகளில் 12 ஐகொண்டே புலியை அடக்கிவிடுவார்கள். ஆச்சரியம்.. மீதமுள்ள 4 காய்களை எங்களின் கையில் திணித்துவிட்டு வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
ஆயா வை இதில் மட்டும் இல்லை, எதிலுமே வெல்வது அத்தனை சுலபமல்ல.. A great Courageous Woman !!. :) ..
இது ரொம்பவும் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கும். மேலுள்ள படம் தான் ஆடு - புலி ஆட்டத்தின் கட்டங்கள். தரையில் சுண்ணாம்பு கட்டி /சாக்பீஸ் கொண்டு வரைந்து கொள்ளலாம். தேர்வு எழுத பயன்படுத்தும் அட்டையின் பின்புறம் வரைந்தும் வைத்துக்கொள்ளலாம்.
இருவர் விளையாடகூடிய விளையாட்டு
புலிகள் - 3 - படத்தில் இருப்பது போன்று ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது வைத்துக்கொள்ள வேண்டும்
ஆடுகள் - 16 இதை புலிகள் நகராதவாறு ஆடுகளை வைத்து விளையாட வேண்டும்.
3 புலிகளையும் நகராதவாறு செய்துவிட்டால் ஆடுகள் புலிகளை அடக்கிவிட்டன. இல்லையேல் புலிகள் ஆடுகளை விழுங்கிவிட்டது. புலிகளுக்கு பக்கத்தில் ஆடுகளை வைத்தால் தாண்டி வெட்டிவிடும். அதனால் புலிகளை கட்டும் போது அது தாண்டாதவாறு பார்த்து ஆடுகளை வைக்கவேண்டும்.
சோழிகளை காய்களாக பயன்படுத்துவோம்.
புலிகளுக்கு தான் இதில் நிறைய வாய்ப்புகள் உண்டு. மிக எளிதாக ஆடுகளை விழுங்க முடியும். அதனால் ஆடுகளை தேர்ந்தெடுத்து விளையாடுபவர்களுக்கு தான் இந்த ஆட்டம் கஷ்டம். ஆடுகளாக விளையாடி பார்ப்பதில் தான் ஒரு திரில் இருக்கும்.
குறிப்பு- ஆடு-புலி ஆட்டத்தை பற்றி ஏதும் தகவல் இருக்கிறதா என்று கூகுலில் தேட, கிடைத்தது பதிவர் சிந்தாநிதி யின் இந்த இடுகை. நன்றி சிந்தாநதி.
அணில் குட்டி அனிதா : - ஓஓஓஓ்......அம்மணி .செம வெட்டியா ... ?!! அவனவன் கம்பூயூட்டர் ல உலகத்தையே சுத்திட்டு வரான்.. இப்பத்தான் இவங்க....ஆடு.. புலி ன்னு க்கிட்டு இருக்காங்க...... மக்கா பாத்து... அப்படியே கற்காலத்துக்கு போயி இது தான் கல்...இரண்டு கல்லை இப்படி தேச்சா....நெருப்பு வரும் னு சொல்லிக்கொடுக்காம பாத்துக்கோங்க............ ...... முடியலடா சாமி....!!!!
பீட்டர் தாத்ஸ் : It's not so important who starts the game but who finishes it.
.
Labels: சமூகம் 6 Comments
வீடு
பாலுமகேந்திரா அவர்களின் படம் ஒன்று வந்தது. நடிகை அர்ச்சனா மட்டும் நினைவு இருக்கிறது. ஒரு வீட்டை கட்டி முடிப்பதற்குள் எத்தனை பிரச்சனை சங்கடங்கள் என்று சொல்லும் படம். இல்லம் என்ற சிவகுமார்ஜி, அமலா நடித்த படமும் வீட்டை பற்றிய கதைதான். இரண்டும் பார்க்கும் போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம் வீட்டை பற்றிய கனவுகளும் கற்பனைகளும் இல்லாமல் இல்லை என்பது புரியும். வீட்டை கட்டிப்பார், கல்யாணம் செய்து பார் என்ற பழமொழி கூட உண்டு.
வீட்டை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது. கட்டிடம் சார்ந்த படிப்பை படிக்கவில்லை என்றாலும்,கட்டிடம் கட்டும் போது பார்த்து கவனித்து அதை சார்ந்த படிப்பு படித்தவர்களுடன் பேசி தெரிந்துக்கொண்ட விஷயங்களை எழுதி இருக்கிறேன். தவறுகள் இருக்கலாம், கவனிப்பவர்கள் சுட்டவும்.
வீட்டுமனை வாங்குவதில் இருந்து ஆரம்பிக்கலாம். பொதுவாக மனை வாங்கும் போது திசை பார்ப்பார்கள், இப்போது இருக்கும் சூழலில் எப்படியோ ஒன்று வாங்கிவிட்டாலும், கண்டிப்பாக அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
1. வாஸ்து :
எல்லோருமே பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு செய்துவிட்டால் பிற்காலத்தில் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனால் ஒரு பிரச்சனை என்று யாராவது சொல்லும் போது தேவையில்லாமல் நாம் கவலைப்பட்டு அந்த சமயத்தில் முடிந்தும் முடியாமல் எதையும் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. வாஸ்து என்ற கடவுள் அந்த நிலத்தில் எந்த நிலையில் சயனத்திருக்கிறார் என்பதை கடகால் தோண்டுவதற்கு முன்னே சொல்லிவிடுவார்கள். இதுவும் திசையை வைத்து தான் கணிக்கிறார்கள். அதைக்கொண்டு குறிப்பாக சமையல் அறை, கழிவறைகள், தண்ணீர் வரவு எந்தெந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று சரியாக வைத்துவிட்டால் போதும்.
2. காற்று சுழற்சி
இது ஒவ்வொரு காலக்கட்டதிற்கு தகுந்தார் போன்று மாறும். அதாவது உங்கள் வீடுகளிலேயே கவனித்து பார்த்தீர்கள் என்றால் வருடம் முழுதும் நமக்கு காற்று ஒரே திசையில் இருந்து வராது. மாறிக்கொண்டே இருக்கும். இந்த காற்றின் திசை சுழற்சியை கவனித்து, அதற்கு தகுந்தார் போன்று வீட்டின் கதவுகள், ஜன்னல் வைக்க நாம் கட்டிடத்தை வடிவமைக்க வேண்டும். அதை வெற்று நிலமாக இருக்கும் போது முடிவு செய்ய முடியும். காற்றின் சுழற்சி எந்த ஒரு காலகட்டத்திலும் வீட்டினுள் வாராமல் தடையாக எந்த சுவரையும் எழுப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.இயற்கை காற்றினால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.
3. தண்ணீர்
நிலத்தடி நீரோட்டத்தை மனை இருக்கும் இடத்திலோ, அதை சார்ந்தவர்களிடமோ தீர விசாரித்து, வாஸ்த்துவையும் மனதில் கொண்டு பிறகு தண்ணீர் எடுக்கும் இடத்தை குறிக்க வேண்டும். குத்துமதிப்பாக தோண்டினால், நிலத்தடி நீரோட்டம் இல்லாத இடமாக போனாலோ, பாறை இருந்துவிட்டாலோ பிரச்சனை.
4. முன் வாசல்
கவனித்து பார்த்தவரை தெற்கு வாசல் சிறந்தது என்று பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன். அப்படி இருக்கும் நிலமாக நாம் தேர்ந்தெடுத்து வாங்கலாம். இல்லாதபட்சத்தில் கிழக்கு (அ) மேற்காக முன் வாசல் இல்லாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. இதற்கு காரணம் சூரிய வெளிச்சம் நேரடியாக வீட்டின் முன் விழும். அதனால் வெப்பம் அதிகமாக வீட்டுக்குள் காலையும் மாலையும் பரவும். முன் வாசல் கதவுகளில் ஆண்டு முழுதும் தொடர்ந்து சூரிய வெப்பம் தாக்குவதால் மிக குறுகிய காலத்தில் கதவு அழகிழந்தும், வெளுத்தும் போய்விடும். தெற்கு வாசல் ஏனென்று ஒரு முறை யாரையோ விசாரித்தபோது மேற்கண்ட விளக்கம் எனக்கு கொடுக்கப்பட்டது. .
5. வெளிச்சம்
காற்றுக்கு அடுத்து முக்கியத்துவம் தரவேண்டிய விஷயம் வெளிச்சம். கண்களுக்கு மட்டும் அல்ல, நல்லமுறையில் தெளிவாக நம் மூளை வேலை செய்யவும், கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் போன்றவை அடிக்கடி நிகழாமல் இருக்க வெளிச்சம் நமக்கு உதவி செய்கிறது. இதற்கு நம் கட்ட விருக்கும் வீட்டை சுற்றி உள்ள வீடுகளின் அமைப்புகள் மிகவும் முக்கியம். வெளிச்சம் வராத அளவு மிக உயர்ந்த கட்டிடங்கள் நம் மனையை சுற்றி இருந்தால், சுற்றிலும் 5- 7 அடி அளவு இடம் விட்டு வீட்டை கட்டலாம். இது மழைபெய்யும் போது நம் வீட்டில் விழும் தண்ணீர் நிலத்திற்குள் செல்லவும் வழிவகுக்கும். சந்துகள் முழுசாக சிமெண்டு போட்டு மூடிவிடாமல், செடி, கொடி, மரங்கள் வைத்து பராமரித்தால் நல்லது. காரணம் நல்ல காற்றும், செடி, கொடி, பூக்களின் வாசமும் கிடைக்கும். மழைநீர் வீணாகாமால் நிலத்தடி நீராக மாறும்.
6. அஸ்திவாரம்
எந்த ஒரு விஷயத்திற்கும் அஸ்திவாரம் மிகவும் முக்கியம். எத்தனை செலவானாலும் அஸ்திவாரம் அந்த இடத்திற்கு தகுந்தார் போன்று, இன்றிலிருந்து அடுத்த 40 வருடங்களுக்கு அந்த இடம் எப்படிப்பட்ட வளர்ச்சிகளை பெரும் என்பதை கணக்கிட்டு ஆழம் மட்டும் இல்லை உயரத்தையும் அதிகப்படுத்தி போட்டு விட வேண்டும். அரசு செயற்படுத்தும் திட்டங்களின் மூலம் நம் குடியிருப்பில் இருக்கும் ரோடுகள் உயரப்படுத்தப்படும், இது 4 ஆண்டுக்கு ஒரு முறை என்று ஊகித்தாலும் 40 வருடங்களில் எத்தனை முறை ரோடு உயர்த்தப்படும் என்பதை கணக்கிடலாம். இப்படி கணக்கிடாமல் தெருவிலிருந்து ஓரளவு உயரமாக கட்டிடத்தை எழுப்பினால், நாளடைவில் வீடு உள்ளேயும் , தெரு மேலேயும் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. அதனால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே வர வாய்பிருக்கிறது. அதனால் வீட்டின் உயரத்தை எப்போதும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.
7. கவனிக்க வேண்டியவை
- மேல்தளம், வெப்பம் நேரடியாக வீட்டில் இறங்காமல் வெதர் ப்ரூஃப் கண்டிப்பாக போட்டுவிடவேண்டும்.
- நம் வீட்டு மழைநீர் சுற்றி உள்ள வீடுகளில் விழாதவாறு நம் வீட்டு ஜன்னல், கதவு வெளிப்புற லாஃப்டுகள் அமைக்க வேண்டும்.
- மேல் மாடி மழைநீர் வீணாகாமல் கிணற்றுக்குள் அல்லது ஆழ்துளைக்குக்குள் செல்லும் வசதியை செய்து விட வேண்டும்
- வாகனங்கள் நிறுத்த வசதியாக இடம் அமைத்து க்கொள்ள வேண்டும்
- கிட்சன் ஒர்க் ஸ்பேஸ் கண்டிப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் நல்லது
- வாஷிங்மிஷின், கேபிள், டிஷ் வைக்க தேவையான புரொவிஷன் வைத்துக்கொள்வதும் நல்லது.
- அரசாங்கத்தின் கழிவுநீர் குழாயின் மட்டத்தை விட, அதனை சென்று அடையும் நம் வீட்டு கழிவு நீர் குழாய் குறைந்தபட்சம் 3-4 அடி உயரம் இருந்தால் நல்லது
- எல்லாவற்றிக்கும் மேல் நாம் வீடு கட்டும் போது, ஜல்லி, செங்கல், மணல் போன்றவற்றை தெருவில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கொட்டாமல் பார்த்துக்கொள்வது ரொம்பவும் முக்கியம். தெருவில் கொட்டி வைத்தே நம் வேலையை முடிக்கிறோம். அது மற்றவர்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது என்பதை நாம் என்றும் சிந்தித்து பார்த்தே இல்லை.
- வரவேற்பு அறை மற்றும் உள்அறைகள் போன்றவற்றில் பர்னீச்சர் எப்படி போடுவோம், அல்லது எப்படிப்பட்ட பர்னீச்சர் நமக்கு போட விருப்பம் என்பதற்கு ஏற்றார் போன்று அவற்றின் அளவுகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். .
அணில் குட்டி அனிதா : அட... இம்புட்டு சொல்லி இருக்காங்க ஆனா அம்மணி இன்னும் சொந்தமா வூடு கட்டவே இல்லையே?!!! அட கடவுளே...... .கட்டாமேயே இப்படி ஒரு பதிவா? இவிங்க மட்டும் வூடு கட்டியிருந்தா.. இன்னும் செமத்தியா பதிவுல வூடு கட்டுயிருப்பாங்கப்பா .. ............ சொல்றதுக்கு இதுக்கு மேல என்ன இருக்கு??????
பீட்டர் தாத்ஸ் : - “A house is made of walls and beams; a home is built with love and dreams.”
“Home is not where you live, but where they understand you”
“Home, the spot of earth supremely blest, A dearer, sweeter spot than all the rest”
.
Labels: சமூகம் 17 Comments
தம்பிக்கு பிறந்தநாள்
ரொம்பவேஏஏஏஏ.... லேட்...ஆனாலும் தலைவர் ஸ்டைல்ல்ல்ல.... லேட் டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வருவோம்..!! னு சொல்லிக்கிட்டு....
அன்பு தம்பி Choco விற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறோம்..! அந்த கிறோம்.....ல இருக்கவங்க அணிலும் பீட்டரும்.. என்னைய விட அவங்க இரண்டு பேரையும் தம்பிக்கு பிடிக்கும் அதுவும் பீட்டரை ரொம்பவே பிடிக்கும் அதனால பீட்டர் தாத்ஸ் சார்பாக இன்னொரு தரம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி !!
இப்படிக்கு
அன்புடன், பாசத்ததுடன்... வேற எப்படி... சொல்லலாம் ம்ம்..நேசத்துடன் னும் கூட வச்சிக்கலாம். (கமல்ஜி மாதிரி படிச்சிக்கனும்! )
கவிதா
அணிலு
பீட்டர்தாத்ஸ்
Labels: கதம்பம் 8 Comments
இன்ட்டியூஷன் -(Intuition) இம்சைகள் !
Intuition - உள்ளுணர்வு - நடக்க போவதை அல்லது நடந்த விஷயத்தை பற்றிய ஊகம், இப்படி, இங்கே இது நடந்து இருக்கலாம்/நடக்கலாம் என்று நம் மனதும் அறிவும் ஒன்று சேர்ந்து நமக்கு அறிவுருத்துவது. எளிதான உதாரணம் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஜி "ராகவன்'ஸ் இன்ஸ்டின்ங்ட் " சொல்கிறது என்பார். அது படி நடந்துவிட்டால் நம்முடைய இன்ட்டியூஷன் சரி என்று நினைக்கலாம். அல்லது தவறாக நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது, எனக்கு இரண்டுமே நடந்து இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் சரியாக நடந்து இருப்பது எனக்கு என்னுடைய இன்ட்டியூஷன் மேல் ஒரு நம்பிக்கையும் உண்டு.
நேற்று இரவு என் கணவருடன் விஜயநகர் வரை வண்டியில் சென்ற போது மிக மோசமான அவரின் டிரைவிங் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவைத்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டாலும், இன்றைக்கு காலை ரவுண்டு குட்டியுடன் அவர் கிளம்பி போன சிறிது நேரத்திற்கு எல்லாம் என் மனதினுள் இருவருக்கும் விபத்து நடக்க போகிறது,அதற்கு இவரின் மோசமான டிரைவிங் ஒரு காரணமாக இருக்கும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் ஒரு பக்கம், யாரை பார்ப்பது, எப்படி இவர்களை கவனிப்பது போன்ற எண்ணங்கள் எழ அதற்கான விடைகளை தேடிக்கொண்டு இருந்தேன். எந்த நிலையில் வீடு வருவார்களோ..என்ற ஒரு வித பதட்டமும் பயமும் இருந்தது.
அவர்கள் சென்று 25 நிமிடங்களில் காலிங் பெல்.....சத்தம் கேட்டவுடன், நான் நினைத்தது நடந்துவிட்டதாகவே நினைத்து கதவை திறந்தேன். ஆமாம்...ரவுண்டுகுட்டி தான் ... வேளச்சேரி தாம்பரம் ரோடில், மடிப்பாக்கம் கூட்டு ரோடு தாண்டி சென்று கொண்டிருக்கும் போது ஒரு இரண்டு சக்கர வாகனம் இடையூறு செய்ய இருவரும் விழுந்து விபத்து ஏற்பட்டும் விட்டது. நல்ல அடி ரோடில் தேய்த்துக்கொண்டு விழுந்து இருக்கிறார்கள். சட்டை பேன்ட் இருவருக்குமே கிழிந்து, முட்டி கை, கால்களில் ரத்தக்காயத்தோடு தப்பித்து வந்து சேர்ந்து இருக்கிறார்கள். (மருத்தவமனைக்கு சென்று வந்தாகிவிட்டது, இருவரும் நலமே)
சில மாதங்களுக்கு முன் வெளி ஊரில் உள்ள நண்பர் ஒருவருக்காக பல மாதங்களாக வைத்திருந்த பரிசு பொருளை ஒரு நாள் தீடிரென்று எடுத்து கடையில் பேக் செய்ய கொடுத்தேன். அன்று காலையிலிருந்து எனக்கு என்னவோ அவர் சென்னையில் தான் இருப்பதாக என் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் ஒருவேளை வந்து நின்றால், அப்போது அவசரமாக போய் அதை செய்து க்கொண்டு இருக்க முடியாது என்று நினைத்து கடையில் கொடுத்தேன். அன்று மாலை ஒரு 7 மணிக்கு மேல் தொலைபேசி அழைப்பு வரும் போதே அது அவர் தான் என்று எடுத்தேன், அவரே தான், சென்னையில் இருப்பதாக தகவல் சொன்னார்.
இப்படி பல சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனித்து வரும் போது இப்படி ப்பட்ட இன்ட்டியூஷன் களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து, யோசிப்பது வழக்கமாகிவிட்டது. இது சிலமுறை நெகட்டிவாகவும் நடந்து இருக்கிறது. அதாவது எனக்கு ஒன்று தோன்ற ..நடந்தது வேறு விதமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதற்காக செய்ததை சரி செய்ய முயற்சி செய்ததும் உண்டு.
இதை pre defined assumption, perception என்று கூட சொல்லலாமா? அப்படித்தான் என்னை சுற்றி உள்ளவர்கள் சொல்லுவார்கள். முன் முடிவுகளோடு ஒரு காரியத்தை நெருங்குவது. அது தவறு என்று எனக்கு நெருங்கியவர்களால் பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருக்கிறேன். பலருக்கு பிடிப்பதில்லை அல்லது புரிவதில்லை. என்னை நன்கு புரிந்தவர்கள் நான் இப்படி செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.. இது லூசு இப்படித்தான் என்று ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
முன் முடிவுகளோடு நெருங்குகிறேன் என்பதை விடவும், நினைப்பவை நடப்பதால் ஏற்படும் ஒரு வித கலக்கம், நடந்த பிறகு யோசிக்கும் அளவு எனக்கு பொறுமையின்மை, என்னுடைய உடன் பிறந்த வேகம் எல்லாம் ஒன்று சேர்ந்து முன் யோசனை, திட்டமிடல் செய்ய ஆரம்பித்து விடுகிறது. அதை கட்டுப்படுத்தி அமைதியாக்க நான் கற்ற பாடம் தியானம். ஆனால் தொடர்ந்து இதை செய்ய முடிவதில்லை.
ம்ஹூம் அதனால் இப்படி இன்ட்டியூஷன் இம்சைகள் தொடரத்தான் செய்கின்றன...
அணில் குட்டி அனிதா :... ம்ம்ம்....... இந்த அம்மணிக்கிட்ட வேல செய்ய முடியாது..விட்டுட்டு போனத்தான் சரிவரும்..!! அட .சொல்ல மறந்துட்டேனே... வூட்டுல ரவுண்டும், ரவுண்டோட அப்பா வும் இன்னைக்கு செம சில்லறை...பொறுக்கிட்டு வந்தாங்க.. பாக்கனுமே..!! ஹி ஹி... .. :)) காலையில ரெம்பத்தான் டிப்பு டாப் ஆ போனாங்க... வரும் போது.. ஹி ஹி..... பேன்டு சட்டை எல்லாம் கிழிஞ்சி.... அவ்வ்வ்வ்வ் !! அதே ஏன் கேக்கறீங்க...பாத்து ரசிக்கனும்... இப்படி படிச்சிட்டு ரசிக்கக்கூடாது .. :))), இன்னுன்னு சொல்லிக்கிறேன்.. இனி ரவுண்டு அப்பாவிற்கு ரவுண்டு தான் ட்ரைவர்... நோ செல்ஃப் டிரைவிங் ன்ன உத்தரவு போட்டாச்சூ....... !! :))))))
பீட்டர் தாத்ஸ் : - Intuition comes very close to clairvoyance; it appears to be the extrasensory perception of reality
.
Labels: சமூகம், பழம்-நீ 19 Comments
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
பதிவர் *ஜீவ்ஸ்* ஸிடம் இந்த பாடலை பாடி பதிவிட போகிறேன் என்று சொன்னபோது, இதற்கு முன் சில பாடல்களில் நான் பாடிய வரிகள் தவறாக இருந்ததால், அப்படி பாடி விடாதீர்கள் என்று இந்த பாடல் வரிகளை எனக்கு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பி இருந்தார். இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் இந்த பாடலை பதிவிடுகிறேன். நன்றி ஜீவ்ஸ்... :)
பாடல் வரிகள் - கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி. Get this widget | Track details | eSnips Social DNA
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
***************************
அணில் குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....இவிங்க ச்சும்மா இருந்தாலும் அக்கம் பக்கத்துல இருக்கவங்க ச்சும்மா இருக்க மாட்டாங்க போல... . என்ன கொடுமை சார்..இது...!! :(
பீட்டர் தாத்ஸ் :- “Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head”
Labels: அப்பாவிற்காக 9 Comments




Recent Comments