உனக்கு 20 எனக்கு 18

கவி : நவீன் கால் நகத்தை எல்லாம் வெட்டு, எவ்ளோ அசிங்கமா இருக்குப்பாரு.. இந்தா நெயில் கட்டர்

நவீன் : ம்ம்மா.. நீயே வெட்டி விடேன் , 5 ரூ தரேன்...

கவி : யப்பாஆஆ.. பாருங்க உங்க பையன், நகத்தை வெட்ட சொன்னா, நீ வெட்டு 5 ரூ தரேங்கறான்.. .

பழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..

கவி : ஞே !

 ***************

கவி : நவீன் டோஃபல் படிச்சிட்டியா.. எந்த அளவில் இருக்கு .......

நவீன் :  டோஃபல் னு ஒரு வார்த்தைய தெரிஞ்சி வச்சிக்கிட்டு ஓவரா டார்ச்சர் பண்ணாத.. .. அப்ரிவியேஷன் தெரியுமா உனக்கு?

கவி : ஓ தெரியுமே...  டெஸ்ட் இன் இங்லீஷ் லேங்குவேஜ்..

நவீன் : கிர்ர்... அப்பா பாருங்கப்பா உங்க பொண்டாட்டியின் பொது அறிவை....

கவி : ம்க்கும்...ரைட்டா சொல்லிட்டா மட்டும் நீ என்ன எனக்கு பாராட்டு விழாவா நடத்தப்போற  போடா டேய்.. !

*********

நவீன்: குறுக்குசித்ரா (குருஷேத்ரா) நடக்குது அண்ணா யுனிவர்சிட்டி போறேன்

கவி: குறுக்குசித்ரா ஏன் அண்ணா யுனிவர்சிட்டிக்கு போய் நடக்கறா?

நவீன்: ஓஓஓ.... இது மொக்கையா? ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன் போதுமா? ஆமா உனக்கு யார் இப்படி எல்லாம் பேச கத்துக்கொடுக்கறா? அந்த வெட்டி ப்ளாகர்ஸா? எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு... தாங்கமுடியல உன் மொக்கை..

கவி: ஸ்ஸ்யப்பா கோ-ப்ளாகர்ஸ் இருக்கவரை நான் சேஃப்

**************

கவி: (ஏதோ ஆங்கிலப்படம் பார்த்துக்கிட்டு இருக்கான்:) இந்த ஹீரோ அக்ஷைகுமார் மாதிரியே இருக்காரு

நவீன்: ஓ நீ ஹிந்தி படமெல்லாம் கூட பார்ப்பியா?

கவி : ஆமா முன்னெல்லாம் ஹிந்தியும், மலையாளமும் தான் அதிகம் பார்ப்பேன், 

நவீன்.: ஆனா உனக்கு தான் இங்கிலீஷூம் சேர்ந்து எந்த லேங்குவெஜும் தெரியாதே மதர்,  எப்படி பார்ப்ப? ஹோ ..இதுக்கு பேர் தான்  "படம் பார்ப்பதா" ???? :))))))))

கவி : அடிங்....... ஓடிப்போயிடு.. பிச்சிடுவேன்.. ! :)))))))

**************

கவி : என்னோட எஸ்.எம்.எஸ் பார்த்து உங்கப்புள்ள பயந்து நடுங்கிட்டான் போல, பவ்யமா இனிமே செய்யமாட்டேனு பதில் வந்து இருக்கு ?

பழம்நீ : ஆமாண்டி, உன் புள்ளைக்கு மட்டுமா , உன்னை பார்த்தா எனக்குக்கூட பயம், பாரு பேசும் போதே நடுங்குது எனக்கு... 

கவி : :))))) சரி சரி.. ரொம்ப பயப்படாதீங்க நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. ! :)

பழம்நீ : உன் புள்ளைக்கு ஃபோன் செய்து அவன் உன் மெசேஜ் பார்த்து எப்படி நடுங்கினான்னு விளக்கச்சொல்லவா? 

கவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்ன்ன்ன் ?? எப்பவோ ஒரு தரம் மரியாதையா மெசேஜ் செய்து இருக்கான் , பொறுக்காதே உங்களுக்கு....எதுவும் கேக்க வேணாம்.

பழம்நீ : ம்ம்ம்..அது  !! அந்த பயம் இருக்கட்டும்.. ! 

கவி : அவ்வ்வ்... எகொகஇ ?!

*************

ஸ்டவ் க்ளீன் பண்ண கஷ்டப்படறேனு, மளிகை வாங்க சென்றபோது மிஸ்டர் மஸ்ஸில்ஸ் ஸ்ப்ரே லிக்விட் வாங்கிக்கொடுத்தான். வீட்டுக்கு வந்து, ஸ்டவ் துடைக்க யூஸ் பண்ணிட்டு, புள்ளக்கிட்டவும் காமிச்சிசாச்சி...

"அப்படியே உலகமே தெரிஞ்ச மாதிரி பேசத்தெரியும், ஆனா, ஈசியா இருக்க எதையும் வாங்கத்தெரியாது.. பத்தியா எவ்ளோ ஈசியா இருக்கு...  (கமெண்ட் அடிச்சிட்டு வெளியில் போயாச்சி..)

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன்....

யம்மாஆ......

என்னடா..?

அதை  Oven'க்கு யூஸ் பண்ணக்கூடாது, நீதான் அதிபுத்திசாலியாச்சே..  Oven ஆயிலா இருக்குன்னு அதுக்கு போட்டுட்டாத..

ஹி ஹி...  எப்பவோ இதைப்போட்டு க்ளீன் பண்ணிட்டேனே.. நீ ஏன் முதல்ல சொல்லல.. வா வந்து பாரு, ஜிகு ஜிகுன்னு இருக்கு... :)

கிர்ர்ர்ர் ஏன்ன்மா இப்படி இருக்க..?  ஃபேனை தண்ணிக்குள்ள விட்டு க்ளீன் பண்ண ஆள் ஆச்சே, எங்க செய்துடப்போறன்னு நினைச்சி வந்தா.?? Oven சாப்பாடு செய்யறதும்மா, இதெல்லாம் போடக்கூடாது, அதுல ஆசிட் கன்ட்டைன்ஸ் இருக்கும்..

ஃபேனை பத்தி மட்டும் பேசாத, ஃபேன் சூப்பரா சுத்தமாச்சா இல்லையா?  Oven' ல இதைப்போட்டு துடைச்சிட்டு, தண்ணிப்போட்டும் துடைச்சிட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லைடா...  எதா இருந்தாலும் நீ முன்னமே சொல்லிட்டு போயிருக்கனும்...

ம்க்கும் சொன்னா மட்டும் கேட்டுடுவியா... ஆனா.. இன்னும் ஒன்னே ஒன்னு தான் நீ இந்த வீட்டுல பண்ணல...

இன்னுமா பாக்கி இருக்கு? என்னடா அது சொல்லு சொல்லு சீக்கிரம், அதையும் பண்ணிடறேன்..

அப்பாவையும் என்னையும் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணல.. :((((

அட சூப்பர் ஐடியாவே இருக்கே.... ஒழுங்கா இரண்டு பேரும் குளிச்சி சுத்தமா இருங்க.. இல்லைன்னா மறந்து போயி குளிக்கிற தண்ணியில ஆசிட் ஐ கலந்தாலும் கலந்துடுவேன்...

அடப்பாவி அம்மா..?!

*********

அணில் குட்டி : ஒரு 15 அடி எப்பவும் தள்ளியெ  இருக்கனும், சுத்தம்னு சொல்லி, என்னையும் தண்ணிக்குள்ள போட்டு எடுத்து பிழிஞ்சி எடுத்தாலும் எடுத்துடுவாங்க..

பீட்டர் தாத்ஸ் : “A person might be an expert in any field of knowledge or a master of many material skills and accomplishments. But without inner cleanliness his brain is a desert waste.”


போவோமா ஊர்கோலம் ..

<=  கடலூர் - (மருதாடு கிராமம் செல்லும் சாலை) தானே' க்கு முன்
தானே' க்கு பின் அதே சாலை =>

தானே ' புயலின் தாக்கத்தை ரொம்ப லேட்டாகத்தான் பார்க்கமுடிந்தது. இருந்தாலும், மனிதர்களை பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால் மரங்கள், நிலங்கள் என, தானே' வின் ஆட்டம் ரொம்பவே அதிகம். 

குறிப்பாக தென்னை மரங்கள் இனி காய்கள் கொடுக்குமா என தெரியவில்லை. பண்ரூட்டி பக்கம் முக்கிய விவசாயம், வியாபாரம் முந்திரி மற்றும் பலாப்பழம். இந்த வருடம் மட்டுமில்லை, புயலில் அழிந்த முந்திரி தோப்புகள் திரும்ப அப்படியே கிடைக்க இன்னும் 10 வருடம் உழைக்க வேண்டி இருக்குமாம். 10 வருடத்திற்கு அதை நம்பியவர்களின் சாப்பாட்டுக்கு வழி?.

தானே வந்து போனது மொத்தமே 10 மணி நேரம். ஆனால் அதன் விளைவுகள் பல ஆண்டுகள் தொடரும்.. நிலை... :(
 
   





ஒரு நாளைக்கு பயிர் அறுவடை செய்ய 70ரூ கூலியாம், ஒரு பெண் 2 ஆள் வேலைய செய்வாங்களாம். ஒரு நாளைக்கு 4 ஏக்கரா முடிப்பாங்களாம் . 
ஒரு  ஏக்கரா = 43560 Sq Ft.  ஒரு நாளைக்கு ஒரு பெண் 4 ஏக்கராவிற்கு 140 ரூ சம்பளம் மட்டுமே வாங்கறாங்க. :(((         =>
விபரம் சொன்னது ரோஸ் கலர் புடவையம்மா.             

காற்றில் தென்னைமரம் அப்படி இருப்பதாக நினைக்கவேண்டாம். பாண்டிச்சேரி தொடக்கத்திலிருந்து, கடலூர் மாவட்டம் முழுக்க அத்தனை தென்னை மரங்களும், மேற்கு நோக்கி திரும்பி, தன் நிலைகுலைந்து, நிற்கின்றன.  இவற்றில் திரும்ப, காய்கள் வருமா என காத்திருந்து தான் பார்க்கவேண்டும் என சொல்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள்.  :( 



<=  இந்த (டேரியா) பூவை தலையில் வைத்து 25 வருடங்களுக்கு மேலாகவே இருக்கும், பள்ளிக்காலங்களில், கலர் கலராக தேடி தேடி எடுப்பேன்.  பிறகு விருப்பம் வாசனை பூக்கள் மட்டுமே வைப்பது என மாறிய ப்பிறகு இந்த பூவை வைப்பதே இல்லை, கிடைப்பதும் இல்லை. திருமண வீட்டில் மாமியார் வீட்டு மக்கள் கொடுத்ததால், எதுவும் சொல்லாமல் வைத்துக்கொண்டேன். :))

   இனி வருங்காலம் இப்படித்தான்  இருக்கும். இதுவே நிரந்தரம். =>


மரங்கொத்தி ????  மிக அருகில் சென்று போட்டோ எடுத்தும் பறக்கவேயில்ல.. .


<=   இந்த அம்மாவுக்கும் ஒரு நாளைக்கு அதே ரூ.70 கூலி.  நாள் பூராவும் வெயில்ல வேல செய்யனும். 

யமுனா சித்தியின் கைவைத்தியம்

சென்னை மாநகர், தண்ணீர் பிரச்சனையில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த சமயம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, லாரிகளில் தண்ணீர் வந்து, தெருக்களில் வைக்கப்பட்டிருந்த, கறுப்பு நிற தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு செல்லும். குடங்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று/நிற்காமல் முட்டி மோதி தண்ணீர் பிடித்து வந்துவிட்டால், இமாலய சாதனைதான். இரண்டு நாளைக்கு ஒரு முறை இந்த சாதனையை செய்ய வேண்டிய நிர்பந்தம் சென்னை மாநகரில் அத்தனை குடும்பத்தினருக்கும் இருந்தது.

அப்படி ஒரு காலக்கட்டத்தில் தான் , யமுனா சித்திக்கு முதுகு வலி வர ஆரம்பித்தது. தண்ணீர் தூக்கி தூக்கியே முதுகு வலி வந்து விட்டதாக நினைத்த சித்தி, வலியை குறைக்க கை வைத்தியத்தில் இறங்க ஆரம்பித்தார். முதலில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து பார்த்தார்.  இது ஒரு 15 -20 நாட்களுக்கு தொடர்ந்தது, முதுகு வலியும் விடுவேனா என தொடர்ந்தது. சித்திக்கு, வலியின் மேல் சந்தேகம் வர ஆராய்ச்சியில் இறங்கினார். எப்படி வலிக்கிறது, எங்கே வலிக்கிறது, எப்படி உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால் வலிக்கிறது என ஒரு பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி வைக்கும் அளவுக்கு முதுகு வலியின் தன்மையைப்பற்றி தெரிந்துக்கொண்டு, கட்டுரை முடிவையும் வெளியிட்டார். அது தான் முதுகு சுளுக்கு.

அடுத்து, கைவைத்தியம் முதுகு சுளுக்குக்கு மாறியது. ஒரு தட்டில் தண்ணீர் நிரப்பி வைத்து , சுளுக்குக்கு எண்ணெய் விட்டு நீவி விட்டு, தட்டில் குறைகிறதா என பார்த்துக்கொண்டே வந்தார். சுளுக்கு விலக விலக, தண்ணீர் குறைய ஆரம்பிக்குமாம். அட.. தண்ணீர் குறையவில்லை, சித்தியின் சுளுக்கும் விலகவில்லை.

வீட்டில் சித்தப்பாவும் , பிள்ளைகளும் டாக்டரிடம் வர சொல்லி எத்தனை முறை அழைத்தும், கைவைத்தியத்தில் கில்லாடியான சித்தி வர மறுத்துவிட்டு, சிரித்துக்கொண்டே சொன்னார், "தண்ணீ தூக்கறதுல வர முதுகு வலிக்கு, யாராச்சும் செலவு செய்து டாக்டர்கிட்ட போவாங்களா?" போங்க போங்க. .இதோ இன்னும் கொஞ்ச நாள்ல, என் கை வைத்தியத்தாலேயே குணப்படுத்தி காட்டறேன்னு " சவால் விட்டார்.

நாட்கள், மாதங்களாகி கடந்தது, முதுகு வலியுடன். நடு நடுவே குடும்ப மருத்துவரிடம் சென்று, வலிக்கு மருந்தும் வாங்கி சாப்பிட்டார். ஆனால் வலி அவரை விடுவில்லை. ஆமாம், வலியோடு சித்தி கடந்த மாதங்கள் மொத்தம் எட்டு.  எட்டாம் மாதத்தில் ஒரு நாள், வலி தாள முடியாமல் துடிக்க, குண்டுக்கட்டாக சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள்.  அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மருத்துவர்கள் முதுகு வலிக்குக்காரணம் மார்பகப்புற்று நோய் என்றார்கள். .

ஆனால், சித்தி அசரவில்லை." எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பேயில்லை.என் மூன்று குழந்தைகளுக்கும், 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். எனக்கெப்படி புற்றுநோய் வரும். இதை நான் நம்பத்தயாராக இல்லை, வேறு எதாவது காரணம் இருக்கலாம் " என மருத்துவரிடம் வாதிட்டார். மருத்துவர்கள் அடுத்து, பயாப்சி டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்று சொல்லவும், வீட்டில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தவும், டெஸ்ட் எடுக்கப்பட்டது.

முடிவு, புற்றுநோய் முற்றிய நிலை கண்டறியப்பட்டது. மார்பங்களை அகற்ற முடியாத நிலையில் புற்று நோய் பரவிவிட்டு இருந்தது. வேறென்ன செய்யமுடியும் இனி, ஒரளவு குணப்படுத்த மருத்துவர்கள் சொன்ன கிமோத்தெரஃபி(Chemotherapy) மற்றும் ரேடியஷன் தெரஃபி(Radiation Therapy) சிகிச்சை முறைகளை சித்தி தொடர்ந்து செய்ய வேண்டி வந்தது.

சென்னை, அடையாரில் உள்ள, புற்றுநோய் மருத்துமனைக்கு சென்று, தகுந்த சிகிச்சை மேற்கொண்டார்கள். முதுகு வலி ஆரம்பித்தது அவரது 50 ஆவது வயதில்.  எட்டு மாதங்கள் கழித்த நிலையில், நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டு , தொடர்ந்து இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். இரண்டாவது வருட முடிவில் பரவியிருந்த மார்பக புற்றுநோய் , விரைந்து குறைய ஆரம்பித்த நிலையில், சித்திக்கு திடீரென்று சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஏனிந்த பிரச்சனை என , திரும்பவும் மருத்துவர்களை நாடியதில், மார்பகத்தில் குறைந்த புற்றுநோய், நுரையீரலை ப்பற்றி பரவ ஆரம்பித்தது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மருத்துவமனை சென்று, கீமோத்தெரஃபி மற்றும் ரேடியஷன் சிகிச்சைகளை பெற்று வந்த சித்தி, ஒரு கட்டத்தில், முடியாமையில், மருத்துவமனையில், நிரந்தர நோயாளியாக சேர்க்கப்பட்ட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது 53 ஆவது வயதில் எங்கள் அனைவரையும் விட்டு மறைந்தார்.

இப்பவும் சித்தியின் மன தைரியத்தை அனைவரும் பாராட்டினாலும், கைவைத்தியம் பார்க்காமல், வலி வந்தவுடனேயே மருத்துவரை சென்று பார்த்து, அனைத்து பரிசோதனைகளையும் செய்திருந்தால், இன்றும் அவர் எங்களுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.

படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் செய்யும் ஒரே தவறு... நமக்கு நாமே டாக்டர் ஆவது தான்.

*** **** ***

மார்பகப்புற்று நோய் பற்றி மேலும் விபரங்கள் அறிய :


1. மார்பகப்புற்று நோயின் அறிகுறிகள் :


http://en.wikipedia.org/wiki/Breast_cancer
http://health.msn.com/health-topics/breast-cancer/5-surprising-signs-of-breast-cancer
http://www.medicinenet.com/breast_cancer/article.htm
http://www.webmd.com/breast-cancer/guide/breast-cancer-symptoms-and-types



2. மார்பகப்புற்று நோய் விளக்கப்புகைப்படங்கள் :


http://breastcancerpictures.blogspot.in/2010/08/sign-of-breast-cancer.html
http://beauty-healthcare.blogspot.in/2010/12/breast-cancer-treatment-breast-cancer.html



3. மார்பகப்புற்று நோய் காணொளிகள் : 

What Is Breast Cancer?  http://www.youtube.com/watch?v=YNUBnX9JHQs 

How to Recognize Breast Cancer Symptoms  http://www.youtube.com/watch?v=yTHyMNBkbOY

Breast Cancer Progression and Staging  http://www.youtube.com/watch?v=l2lRZuEK4Y0&feature=related

 


இது நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை க்காக எழுதப்பட்டது. 

 

எங்க வீட்டு சமையல் - மக்ரோனி மட்டர் மசாலா

தேவையானவை :

மக்ரோனி - ஒரு பாக்கெட் (200 (அ) 250 கிராம்)
பச்சை பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - பெரியது ஒன்று
தக்காளி - பெரியது ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1.5 டீஸ்பூன் (இத்துடன், சோம்பு 1/4 ஸ்பூன், லவங்கம் 2 சேர்த்துக்கொண்டேன்)
தாளிக்க : சோம்பு, லவங்கம், பட்டை, பட்டைஇலை
மிளகாய் தூள் : 3/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் : ஒன்று (நீட்டில் வெட்டவும்)
முட்டை - இரண்டு
கொத்தமல்லி : சிறிது
எண்ணெய் , உப்பு : தேவையான அளவு

செய்முறை : மக்ரோனியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு வேகவைத்து , வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.  ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் வேகவைக்கனும். அவனில் 9 நிமிடங்கள் வைத்து எடுத்தேன்.

வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, லவங்கம், சோம்பு, பட்டை, பட்டைஇலை போட்டு தாளிக்கவும், பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கி, கடைசியாக பட்டாணி , தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் முட்டை உடைத்து ஊற்றி கிளரி, கடைசியாக வேகவைத்துள்ள மக்ரோனி சேர்த்து உப்பு த்தேவைப்பட்டால் சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

மக்ரோனி எப்படி செய்தாலும் சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். 

நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகள் எதுவுமே எங்க வீட்டு சமையல் இல்லைதான். ஒரே ஒரு முறை கூட எங்க வீட்டில் இவையெல்லாம் செய்ததில்லை. காலத்திற்கு தகுந்தார் போன்றும், குழந்தைக்காகவும் சமைக்க கற்றுக்கொண்டவை. நிச்சயமாக எங்க வீட்டு பாரம்பரிய சமையல் இல்லை.

அணில் குட்டி : ஹி ஹி.. உங்க வீட்டு ஸ்பெஷல் இதுன்னு எதாது ஒன்னு உங்களுக்கு செய்யத்தெரியுமா.. எப்பவும் சும்மாவே ஓவர் பில்டப்பூஊ......

பீட்டர் தாத்ஸ் : A good cook is a certain slow poisoner, if you are not temperate”

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்...2



* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் 

வரைந்தது பெயின்ட் பிரஷ். அதிகமாக ரெடிமேட் ஷேப்ஸ் வைத்தே வரைந்தேன். அதே ஓல்ட் ஸ்டோரி தான், கை பழகல, பேப்பர்லியோ, தெருவிலோ கோலம் போட்டு அதை ஸ்கேன்/ ஃபோட்டோ எடுத்தோ பதியனும், அது ரியலா இருக்கும்னு நினைக்கிறேன். இது முடிந்தவரை முயற்சி.  தொடர்ந்து செய்யாமல் இருப்பதால், முன்ன மாதிரிக்கூட ஃப்ரி டிசைன்ஸ் வரைய முடியல.

அதிகமாக/ பொதுவாக ஆண்டு முழுதும்,தேடி பார்க்கப்படும் பதிவு "ரங்கோலி கோலங்கள்" அப்படின்னு ப்ளாகர் ஸ்டேடஸ் சொல்லுது. .


அணில் குட்டி : ம்ம் அப்புறம்???? !  தொடர்ந்து வரைஞ்சிட்டா மட்டும்... ?  என்னா பில்டப்பூஊஊ ...

பீட்டர் தாத்ஸ் : Usually I begin with a small line, so a lot of lines are coming out in the Kolam. But even then, I still allow for and want to make changes.

க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

 பெசென்ட் நகர் பீச் , சாலையோர மரம்

 நல்லா உத்து பாருங்க.... பெசென்ட் நகர் பீச்..

 பின்னாடி வீட்டு தேங்காய் , மழையில் நனைந்த போது எடுத்தது..

 குன்றத்தூர் கோயில், உட்கார்ந்து பிரசாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பிரசாதம் தருவேனான்னு பார்த்துச்சி.. :(.

பஸ்ஸில் முன் சீட்டு குழந்தை, குட்டி குட்டி முடி, அதுல எப்படியோ இறுக்கி இரண்டு பக்கம் இரண்டு குடுமி,  குடுமியில் பூ, நீட்டு கறுப்பு பொட்டு, கீழ சந்தனம். அப்பாக்கூட தனியா வந்திருந்த குழந்தை. என் பயணத்தை அழகாக்கிய குழந்தை. :)

கீச்சுகளின் கதம்பம்

=> TPKD / TBCD : அடி மாடா இருந்தால் பசுவையும் கொல்லலாம் என்று சொல்லிருக்காம் ! RT @kavi_rt: Beef eating in ancient india http://www.jstor.org/pss/3516533

=> senthazalravi புல்லட் மணி Verified  :  ட்விட்டரில் ஆணாதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஒருத்தன் / தி வருவானா / ளா ? 

=> vivaji  :  பில்லா-2 TITLE TRACK யார் நடனம் அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது # Dance Master தேவையோ? #Walking Master போதாதா?

=> sowmya : ஆக்குதல் வெகு சுலபம்! அழித்தல் (முடித்தல்) வெகு சிரமம்!! #உப்புமா

=> விஜி  :  நண்பன்ல இலியானாவுக்கு எதுக்கு ஒரு கோடி?

=> பேயோன் :   பத்து வார்த்தைகள் பொடி வைத்து எழுதினால் அதில் நான்கிற்குத்தான் தும்முகிறார்கள். #புள்ளிவிவரம்

=> sowmya பட்டாடை அணிந்து சைவம் பற்றி சிலாகிப்பது ஜீவகாருண்யமாகாது

=> சுட்டி விகடன் ஆசிரியர்: ‘‘வேடந்தாங்கலுக்கு வர்ற பறவைங்க எங்கிருந்து வருது?’’ மாணவன்: ‘‘முட்டையில் இருந்துதான் சார்!’’

=> GiRa :  பத்தினியைச் சந்தேகப்பட்டது ஒரு காவியம். பரத்தையைப் பத்தினியாக்கி, பத்தினியைப் பகவதியாக்கியது சிலப்பதிகாரம். சிலம்பு சிறப்பு.

=> Guru :  ரெண்டு 10வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போறாங்க..என்னன்னு கேட்டா மாறுவேஷ போட்டியாம்!!
 
=> TPKD / TBCD :  RT @ayyanar: @Sowmi_ இன்று the so called குடும்ப பெண்களுக்கு சமூகத்தால் அதிக துன்பம் நேராமைக்கு பாலியல் பெண்கள்தாம் உண்மையான காரணம்     

=> புதுகை.அப்துல்லா :  நக்கீரரே... நீர் பெரிய ஆளுய்யா... அதிமுக காரங்க கையாலேயே ஜெயலலிதா படத்தை எரிக்க வெச்சிட்டியேய்யா?...

=> Kavitha Gajananan  :பணக்கார பெண்களுக்கு சமூக சேவை என்பது ஒரு பொழுதுப்போக்கு.
 
=> அதிஷா @ LawyerSundar : பத்திரிகை சுதந்திரம் என்பது கலைஞரை என்னவேண்டுமானாலும் அவதூறாக பேசுவது.. ஜெவைப்பற்றி பேசாமல் இருப்பது ;-) 
 
=> vivaji  : ஆண்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் ஒருத்தருக்கும் கல்யாணம் நிலைத்திருக்காது

=> shruti haasan   : say it to my face say it behing my back only if words have truth and meaning do they have an effect.#byebyenegativety
 
=> Kavitha Gajananan : //ஆன்மிக ஆர்வலர்களுக்காக ஃபேஸ்புக்கில் விடிய விடிய 'வைகுண்ட ஏகாதசி' - சக்தி விகடனின் சிறப்பு கவரேஜ்! //இதெல்லாம் ரொம்ப ஓவர் ! :)

=> வைரமுத்து  : “மனதின் உயரமே மனிதன் உயரம்” இது என் கையொப்ப வாசகம்(ஆட்டோகிராஃப்) நீங்கள் எழுதினால்...?

=>Ma Sivakumar  : RT 1330 குறளையும் டுவீட்டுகளாக இங்கே பாருங்கள் @THIRUKURAL1330

=> Rohan Joshi  : Lok Sabha = School. Rajya Sabha = Alumni Group. Lokpal = New statue on campus. Very shiny, but does nothing to improve quality of education
 
=> கார்க்கி :  இதாண்டா செல்ஃப் சூசைட். நான் தேடும் செவ்வந்தி பூவிது, ராஜாஆஆஆஆஆ #rajaconcert

=> vivaji :  என் வாரிசுகளை நான் கொஞ்சும்போது தெரிகிறது என் தந்தைக்கும் எனக்குமான பாசமும்.

=> ihatequotes™  : Cry as hard as you want to. But make sure, when you stop crying, you'll never cry for the same reason again. #ihatequotes
 
=>shruti haasan  :  Its always sad saying goodbye to a character you've enjoyed becoming being and loving:( but they're out there forever
   
=> என். சொக்கன் :  மனைவியாருக்கும் அவரது அண்ணியாருக்கும் இடையே நிகழும் ஃபோன் உரையாடல்களில்தான் மாறி மாறி எத்தனை உள்குத்துகள்! #அப்ஸர்வேஸன்

=> Dev  : பேர் தெரியாத போதும் பூ குழந்தை இரண்டுமே நம்மில் புன்னகையை வரவழைக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன
 
=> Vel Ravimohan  @BalaramanL: : சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமலும படிககலாம. உஙகளால இதைப படிகக முடிநதால இதை மீளகீசசவும்.”

=> Dev  : எதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளம் கொண்டு தான் வாழ்க்கையின் சந்தோஷங்கள் நிர்மாணிக்கப்படுகினறன

=> வைரமுத்து  : எனக்குப் படித்த பொன்மொழி:- ஒரு பறவை தலையில் எச்சமிடுவதைத் தடுக்கமுடியாது; ஆனால் தலையில் அது கூடுகட்டாமல் தடுக்கமுடியும்.

    Note : Sorry  I didnt get permission from the authors to post their twits. I really dont know how to get it from all :(. People whom I follow are not following me was also a reason.