கொல்கத்தாவில், லேக் மார்கெட் பகுதியில் நம்மூர் கடைகள் இருக்கும், நல்லெண்ணெய், புளி, சம்பா கோதுமை, கேழ்வரகு மாவு, நம்ம ஊர் சிப்ஸ் எல்லாம் இங்க'தான் கிடைக்கும். இதுக்காக இவ்விடத்தை தேடி போவது வழக்கம், தமிழர்கள் அல்லது தென்னிந்திய மக்கள் அதிகம் வரும் இடம் என்பதாலோ என்னவோ 'பனானா லீஃவ்', னு ஒரு தென்னிந்திய உணவகமும் அங்க இருக்கு. உள்ளே போய் உட்கார்ந்தவுடன் கவனித்தேன் சரியாக பத்து பெண்கள் 45-50, 50-60+ வயது இருக்கலாம், அநேகமாக எல்லோர் பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து பேரக்குழந்தைகளும் இருக்கலாம், அவர்களும் அம்பிரிக்கா ஆப்ரிக்கானு என்ஆர்ஐ 'கள் என்று இவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. பிள்ளைகளுடன் தங்கிவிட்டு வந்த கதைகளும் காதில் விழுந்தது. அலுவலக கதைகளும் ஓடின.

வயதிற்கு மீறிய உடைகள், தலையலங்காரம். அனைவரும் வட இந்தியப்பெண்கள், கையில்லாத டாப்ஸ், ரவிக்கை,சல்வார், பளீச்ச்ச்ச் லிப்ஸ்டிக், லூஸ் ஹேர், காதில் லோலாக்குகள்..என.....

ஒரு வயதிற்கு மேல் மேக்கப் க்கு கொடுக்கும் முன்னுரிமையை உடல் பயிற்சிக்கும் இப்பெண்கள் கொடுக்கலாம்னு தோணிச்சி. ஸ்லீவ்லஸ் ரவிக்கை & சல்வாரில் சதை தொங்கும் கைகள், சாதாரணமாக எழுந்து நடக்க முடியாத மூட்டு, இடுப்பு வலிகள், , நரைத்த முடிக்கு ஒன்றும் பாதியுமாக கலர் செய்து ஆங்காங்கே வெளியில் தெரியும் வெள்ளைகள் என கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.

தனிமை, கடமைகள் முடிந்துவிட்டன, வீட்டில் அதிகம் பொறுப்புகள் இல்லை, நேரத்தை எப்படித்தான் கடத்துவார்கள். எல்லோரும் திட்டமிட்டு தன்னை அழகாக்கிக்கொண்டு ????? ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.
யாரோ ஒருவர் பேச, மற்றவர்கள் அதை கவனித்து சிரித்து பதிலளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையே திடீரென சத்தம் அதிகமானது.

என்னடா மேட்டர் என்று திரும்பிப்பார்த்தேன். ஓஓஓஓஓஒ பில் வந்துவிட்டதால் வந்த சலசலப்பு அது!. சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. பெண்களின் இயற்கை குணத்தை எந்த வகையிலும் மாற்ற இயலாது. இணையத்தில் பெண்களை நக்கல் அடித்து வரும் ஜோக்குகள் படங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து எனக்கு தன்னால் சிரிப்பு வர ஆரம்பித்தது.
ஒன்னுமில்ல.. மொத்த பில் தொகை 3400 ரூ. ஒருத்தருக்கு 340 ரூ. யாரோ ஒருவர் பில்தொகையை கட்டிட்டார்.  அதன் பிறகு அந்த 340 ஐ ஒவ்வொருவரும் கொடுக்கும் போது தான் அம்புட்டு சத்தம்.

=>ஒருவருக்கொருவர் சில்லறை மாற்றுதல்,  
=> எல்லோரும் கைப்பை திறந்து வைத்து, கையில் 100, 500 ரூ நோட்டுகள்
=>கணக்கை அங்கேயே முடித்துவிடும் அவசரம் மற்றும்
=>தன் கணக்கில் 5 பைசா அதிகம் போயிடக்கூடாது

போன்ற உள்ளுணர்வுகளால், அவர்களுக்குள் ஏற்படும் பதட்டமே அத்தனை சத்ததிற்கும் காரணம். அத்தனைப்பேரும் அதை முடித்தப்பிறகே வெளியில் சென்றனர். அதற்குள் அந்த இடத்தில் அவர்கள் ஏற்படுத்திய சத்தம் ஏழு ஊரை கூட்டியதை அவர்கள் அறியவில்லை.

இதே இடத்தில் ஆண்கள் இருந்திருந்தால்.......  :)

இப்பவும் எப்பவும் எனக்குத்தோன்றுவது -  பெண்கள் எதை ஆண்களோடு ஓப்பீடு செய்யனுமோ அதை மட்டும் செய்து தங்களை மேம்படுத்த முயற்சி செய்யலாம். மேற்சொன்ன பெண்கள் வேலைப்ப்பார்த்தவர்கள், பார்ப்பவர்கள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதாவது அதன் முதிர்ச்சியும் அவர்களிடம் தெரியவில்லை.

அணில் குட்டி : "ஏண்டி நாகரீகம் இல்லாமல் அங்கவே வேடிக்கைப்பார்த்துட்டு இருக்கன்னு வூட்டுக்கார்கிட்ட திட்டு வாங்கினதை அம்மணி சொன்னாங்களா பாத்தீங்களா?  இப்படி வேடிக்கை பாக்கறதும் பெண்ணின் பழக்கம் தானே அம்மணீஈஈஈ ?!!  அட்வைஸ் எல்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும்.. ..:)

பீட்டர் தாத்ஸ் : The beauty myth is always actually prescribing behaviour and not appearance.” ― Naomi Wolf