நமக்கு நாமே திட்டமிடல் - எல்லா பிஸி நண்பர்களுக்கும்.!!

நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை "நான் ரொம்ப பிஸி.." அதனால் சில வேலைகளை செய்ய முடியவில்லை, அல்லது நம்மை தொடர்பு கொள்ள முடியவில்லை, நாம் தொடர்பு கொண்டாலும் பேச முடியவில்லை, ஏன் நாம் அனுப்பும் மெயிலுக்கு கூட பதில் போட நேரம் இல்லை என்று சொல்லுவார்கள். ஒரு மெயிலுக்கு பதில் போட 2-3 நிமிடங்கள் ஆகுமா? முழுமையாக ஒருவருக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றாலும், உங்களின் மெயிலுக்கு / அழைப்புக்கு கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க முடியும் தான். இதற்கு நம்முடைய சோம்பேறி தனம், மெத்தனம் காரணமே ஒழிய நேரமின்மையை காரணமாக கொள்ளமுடியாது. மெயில் வாசிக்கும் போதே அதற்கு பதில் அனுப்பிவிட முடியும். (முடியும் என்றால் முடியும் தானே?!! ). இங்கு இன்னொரு விஷயமும் உள்ளது. வேண்டாம் - வேண்டாம் என்று நினைக்கும் போது, அந்த வேலையை செய்யவே வேண்டாம் தான். வேண்டாம் என்று நாம் நினைக்கும் விஷயத்திற்காக நிச்சயமாக நம் நேரத்தை கொஞ்சமும் வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. முடியும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. :)

வாழ்க்கையில், தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமும், வெற்றியும் பெற்ற எல்லோருக்குமே இதே 24 மணி நேரம் தான் இருந்து இருக்கிறது. அதே நேரத்தை கொண்டு தான் அவர்கள் சாதித்தும் இருக்கிறார்கள். அவர்களால் முடிந்தது நம்மாலும் முடியும் அல்லவா?

இவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம், அவர்களின் தினப்படி நாட்கள்,நாளையதினம், எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மட்டுமெ முன் நிற்கும். காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரையிலான நம் நேரத்தை எப்படி நாம் பயன்படுத்த போகிறோம் என்பதை திட்டமிட வேண்டும்.

திட்டமிடல் என்பது நம்முடைய எல்லா வேலைகளுக்கும் பொருந்தும். திட்டமிடல் ஒரு வட்டமாக சுற்றி சுற்றி வரக்கூடியது, ஒரே இடத்தில் நின்றுவிடுவது அல்ல. இன்று திட்டமிட்டால் நாளை திட்டமிட வேண்டியது இல்லை என்று அர்த்தமில்லை. தினமும் திட்டமிடல் அவசியம் ஆகிறது.

காலையில் எழுந்தவுடன், டைரியை எடுத்து அன்றைய தினம் செய்ய வேண்டியவேலைகளை பட்டியல் இட்டுக்கொள்ளவேண்டும். (மொபைலில் கூட ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்ளலாம்) முந்தைய தினபட்டியலை சரிபார்த்து, செய்து முடிக்கமுடியாத வேலைகளை இன்றைய பட்டியலோடு இணைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் -

1. இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் நம் புத்தி பதிவு செய்து கொள்ளும், அதன்படி அதை எப்படி செயற்படுத்தவேண்டும் என்று கண்டிப்பாக திட்டமிட்டு செய்துவிடுவோம்.
2.செய்ய நினைத்த ஒரு வேலையை செய்து, மற்றொன்றை அடடா மறந்துவிட்டோமே என்று நினைக்கவேண்டியது இல்லை.
3. வேலையின் பளுவின் காரணமாக நம்மை அறியாமல், சில வேலைகளை செய்ய மறந்து, அதனால் பல பிரச்சனைகள் வந்து சேரும், அதை தவிர்க்க முடியும்
4. ஒரு வேலைக்கு எவ்வளவு நேரம், அல்லது எவ்வளவு நாட்கள் எடுத்துகொள்கிறோம் என்று தெரிந்து போகும். நம்மை பற்றி, நம் வேலை திறனை பற்றி நமக்கே ஒரு சுயமதிப்பீடு கிடைக்கும்
5. இதை தொடர்ந்து செய்து வந்தால், நம் அன்றாட வேலைகள் ஒழுங்குப்படுத்தபடும்,
6. நம்மை அறியாமலேயே நாம், நம் வேலைகளில் முழுகவனம் செலுத்த உந்தப்படுவோம்.
7. அப்படி வேலையில் கவனம் செல்லும் போது, தேவையற்ற பேச்சு, கூட்டம் கூடி வெட்டி அரட்டை போன்றவை தானாக நின்று போகும், நல்ல முறையில் நம்முடைய நேரத்தையும் நாட்களை கழிக்க உதவும்.

திட்டமிடல் மட்டும் முக்கியமன்று அதை விடாப்பிடியாக செயற்படுத்துதல், தினமும் 10 வேலைகளை எழுதிவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தால் பயனில்லை. திட்டமுடும் போதே அதை செயற்படுத்த நம்மை தயார் படுத்திவிடவேண்டும். என்னுடைய இந்த மேனேஜர் vs டெமேஜர் பதிவில் சிலரை உதாரணங்கள் கொடுத்து இருப்பேன். அவர்கள் அத்தனை பேரும் வாழ்க்கையில் என் கண் எதிரில் சாதித்தவர்கள், அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. அதில் ஒன்று திட்டமிடல்.

சில அன்றாட வேலைகளின் திட்டமிடலும் அதற்கான நேரத்தையும் பார்க்கலாம்

1. அலுவலக நேரம் - 8 மணி நேரம் + அதிகப்படியாக - 1 மணி நேரம்
2. தூக்கம் - 8 மணி நேரம் (குறைந்தபட்சம் 7 மணி நேரம்) - 8 மணி நேரம்
3. பயண நேரங்கள் - 2 மணி நேரம் (இது எப்போதும் வெளியில் சுற்றி வேலை
பார்ப்பவர்களுக்கு பொருந்தாது.)
4. சாப்பாடு - 3 வேளையும் சேர்த்து - 45 நிமிடங்கள் (இதற்கு மேல் உட்கார்ந்து
சாப்பிட ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன், அலுவலக நாட்களில் 10 நிமிடங்களுக்கு மேல் உணவு அறையில் அமர்ந்தது இல்லை,ஆனால் நமக்கு கொடுக்கப்படும் இடைவேளை 1/2 மணி நேரமாக இருக்கும், அதில் 10-15 நிமிடங்கள் போதுமானது, மீதம் இருக்கும் 15 நிமிடங்களை க்கூட சரியான முறையில் பயன்படுத்த முடியும், உணவு அறையில் அரட்டை அடிப்பது ஒன்றும் மிக முக்கிய வேலையாகவோ அதனால் நம் மனம், உடல் ஓய்வு எடுக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. அப்படியே சிலருக்காக உட்காரவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவர்கள் பேசும் சாரத்தை கவனித்து வைத்துக்கொள்வேன்.)
5. குழந்தைகள், உறவுகள் நிச்சயம் நேரம் ஒதுக்கவேண்டும் குறைந்த பட்சம் 30 நிமிடங்களிலிருந்து அதிகபட்சம் 2 மணி நேரம் ஒரு நாளைக்கு.
6. நம் படிப்பு - 30 நிமிடங்கள். எந்த சந்தர்பத்திலும் ஏதாவது ஒன்றை நாம் படித்துக்கொண்டு இருப்பது நலம். இது நம் அறிவு ஒட்டடை பிடித்துவிடாமல் இருப்பதற்கு உதவும்.
7. கேலிக்கை, பொழுதுப்போக்கு - 6- 10 மணி நேரம்- வாரத்திற்கு ஒரு முறை திட்டமிட்டுக்கொண்டால் நம் மனம் ஆரோக்கியமாக இருக்குமென்று நம்புகிறேன்.

தனித்தனியாக நேரத்தை பிரித்து சொல்லியிருந்தாலும் சில வேலைகளை சேர்ந்தும் செய்யலாம். பொதுவாக காலையில் நான் சமைக்கும் போது, துணியை ஒரு பக்கம் துவைத்துவிடுவேன். (வாஷிங்மிஷின் ல தாங்க). அதற்காக தனியாக எப்போதுமே நேரத்தை செலவு செய்வதில்லை. டிவி பார்த்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, குழந்தைகளுடன் , உறவினர்களுடன் நேரம் செலவு செய்வது செய்யலாம்.

சாப்பாடு, தூக்கம், அலுவலகம், வீட்டு வேலை, நம் படிப்பு, குழந்தைகள், பெற்றோர்,மனைவி, கணவர் இவை/இவர்கள் மிக முக்கியமாக தினப்படி கவனம் செலுத்தக்கூடிய வேலைகள். இவற்றிற்கான நேரத்தை சரிவர பகுத்து திட்டமிட்டுக்கொண்டால் எதற்கும், எவருக்கும் நேரமில்லை என்றோ, நான் ரொம்ப பிஸி..என்றோ சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டியது இல்லை.

அணில் குட்டி அனிதா: ம்ம்...கொஞ்சம் அசந்த நேரமா பாத்து ஆரம்பிச்சிட்டாங்களா "அட்வைஸ் அம்புஜம் "(பேரு நல்லா இருக்கா.இப்பத்தான் இன்ஸ்டன்டா கவி' க்கு இந்த நாமத்தை சூட்டினேன்..) சரி மக்கா கொஞ்சம் கூட யோசிக்கமா எல்லாருமா சேந்து அம்புஜம் ஒரு நாளை எத்தனை மணி நேரம் தூங்கறாங்கன்னு கேட்டுஊஊ......... அதுக்கு மேல நீங்க பாத்துக்குவீங்க.. அடுத்து.. இவிங்க செய்யற சாப்பாட்டை 10 நிமிஷம் என்ன 3 நிமிஷத்திலியே சாப்பிட முடியும்.. ஏன்னா அவ்வளவு கேவலமா இருக்கும்...ருசி பாத்து சாப்பிட்டீங்க செத்து இல்ல போவீங்க...!! பவ்வ்வ்வ்.. அம்புஜம் முறச்சிஃபை..மி.... ஒரு வேள நைட் சாப்பாடு இன்னைக்கு எனக்கு கட் ஆயிடுமோஓஓஒ....................?!!! :(

பீட்டர் தாத்ஸ் : “When planning for a year, plant corn. When planning for a decade, plant trees. When planning for life, train and educate people.”

அணில் குட்டி'யின் - "இந்தியன் கைஸ்" (Indian Guys)

You want this Indian guy

வேண்டாம் உன்

சிகிரெட்டில் கறுத்த உதடுகள்

I¢ll not be our Indian guy,

நீ தானே

கவிதை கன்றாவிகள்

You want this Indian guy,

நீ தானே

நான் தேடும் Indian guy

I¢ll not be our Indian guy, சாக்கடை தமிழில்


All over the world bring it down,
bring it down guy, guy, bring it
down, bring it down guy, guy, bring
it down bring it down guy, guy
All over the world I loved to beat my
Indian guys

சாக்கடை தமிழில், முறுக்கிய மீசை குரங்கா
black Indian curls

So stinky in the jeans pants country
Indian guys
Rockin¢ product

பான்பாரக் போட்டு கறைபிடித்த பல்லா !

my city Indian guys
Would u love me when I am too ugly?

சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?

Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)

[Anil kutty]


உன்னோட தண்ணீ நாத்தத்தில் எனக்கு குமட்டுதே.

still I
love them Indian guy

உன் கெட்ட மூச்சி வாசத்தில் தலையில் வச்ச பூ வாடிவதங்கி போச்சே

ஆணுக்கு என்ன பஞ்சம் மண்ணுமேல என்றாலும் உன்

போல எருமை இல்லையே சொல்லுடா,

கருப்புக்கு பாடம் சொல்லி கொடுத்தவனே

கையிலே பாட்டாலோடு உன் கண்றாவி போஸ்,

வர வர உனக்கு வால் முளைக்குது..!!

please don’t touch me

காலேஜ் ரவுடி காக்காத காக்கி யூனிஃபார்ம்
பாத்தாலே பயம்தரும் பக்கி பனாதி
அந்த ஒருவன் அவன் யாரோ
இந்த ஊரில் எங்கும் இருக்கானே..


இந்த மனசில் தோன்றத சொன்னா

கவி வீட்டுக்கு ஆட்டோ வருமே..


[Anilkutty]


All over the world I loved to beat my
Indian guy

நாத்தன் பிடிச்ச ஜீன்ஸ் பேண்டு அழகா

with
black Indian curls

So stinky in the jeans pants country
Indian guys

Rockin’ product குரங்கு புத்தி காரா
my city Indian guys

Would u love me when I look too ugly?

சம்மதமா உனக்கு மூனு முடிச்சி
சுத்தி வளச்சி அடி வாங்கிக்க தெரியுமா?


Givin¢ givin¢ it when you lovin¢
lovin¢ I¢ll like a true லூசா (infinite)

[Anilkutty]


கைய கட்டி கொஞ்ச நேரம்

நில்லு, Burn ஆகி உன்னை அடிக்க நினைக்கும் காரணத்தை கேளு

காரணத்தை கேளு

கொஞ்சம் காரணத்தை கேளு


காரணம் கேட்காவிட்டால் உன் தலை மட்டும் மிஞ்சும்

மத்தவை எல்லாம் பிய்யும்..

ஆடாம நில்லு அடி வாங்கும் போது

ஓடாதே நில்லு, உதவ யாரும் இல்ல லூசே

முன்ன ஒழங்கா வந்துடு, உதைக்கறதை இன்னும் வாங்கிக்கோ என் எருமையே, என்னை என்றும் இன்றும் மனதால் தீண்ட நினைக்காதே

சோம்பேறி, நா…தமிழா, எனபசலம் இன்னும் ஒரு தடவை
என் எதிரில் நடந்து கடந்து செல்

தாங்கமுடியாது என் அடி தொல்லை தான்

என்ன செய்யறது உன் முகம் பூராவும்

அடிச்ச அடியில் வீங்கி, புடைத்து இருந்தாலும்

அடிக்க பிடிக்கும் உன் கண்ணை நோண்ட பிடிக்கும்

அடிவாங்கிய உன் உடம்பு நடுங்குவதை பார்க்க

கரஞ்சுபோகுது like ice-cream புத்தி


மறுத்தும், பல மடங்கு மனசு சுகமாய்
தேடுதே ஒரு கட்டைய என் கை

சீக்கிரம் வா இன்று உன் மூக்கு மேல் மூன்னூரு

தையில் போட வைக்கிறேன்..


[Guy]

அடி ஆத்தாடீஈஈஈஈ... என் இளவயசுக்கு இதுக்குமேல முடியல

என்ன வுட்டுடும்ம்மாஆஆஆ,,,,,,,,,,,,

அடி அம்மாடிஈஈஈஈ... இந்த அல்லக்கை மனசுல

நீ சத்தியமா் இல்லம்மாஆஆஆஆ..
உயிரோடு விளையாடாதே..

விட்டுடும்மாஆஆஆ......

இதயத்தின் மொழி


பேசாத
பல மொழிகள்
பேசுகிறது...

கிடைக்காத
பல சுகம்
கிடைக்கிறது..

பார்க்காத
பொழுதுகளும்
பார்த்தவை
ஆகிறது...

புரியாத
பல
வார்த்தைகள்
புரிகிறது...


பேசுகின்ற
மொழி
மட்டுமே
மொழியாகுமா ?!!

உன்
பேசாத
மொழியும்
என்
இதயம்
பேசுகிறதே...

***************************************
அணில் குட்டி அனிதா : அம்மணி கவிதை எழுதிய ச்சிசூவேச்சன்.. னை எல்லாரும் கேளுங்க...... டிவி ல லைவ் ஷோ... டான்ஸ் கூத்து ஒரு பக்கம், ஆன்லைன் ல வெப்சைட் கிரியேட் செய்து கொடுத்த மகராசன் க்கிட்ட வெப்சைட் பத்தி டிஷ்ஷூம்ஸ் அண்ட் டிசைன், ஃபான்ட் கலர் மாத்த சொல்லி சண்டை ...., ஆதவன் சினிமா புள்ள டவுன்லோடு செய்து வச்சி இருக்கு, அத பாக்கனும்னு அடம் பிடிச்சி ஒரு பக்கம் வாட்சிங்.. இதுக்கு நடுவில்.... "இதயத்தின் மொழி".... .. எகொச..!! இது !!

பின்குறிப்பு : வெப்சைட் செய்து கொடுத்த மகராசன் கவிதை எழுதும் போது விட்ட சாபம் " உன் கவிதை நாசமாபோக.. அது கேவலமாத்தான் வரும்.. !! "

பீட்டர் தாத்ஸ் : It is a mistake to look too far ahead. Only one link in the chain of destiny can be handled at a time.”

.

சில நேரங்களில் சில மனிதர்கள் - 2

கவிதா : தாத்தா ச்சும்மாஆ கும்முன்னு வாசனை வருது..சிக்கன் குழம்ப்பா? சாப்பிட வரவா.. ?

வாட்ச்மேன் தாத்தா : ஆமாம் ...சிக்கன் குழம்பு தான்...

கவிதா : சிக்கன் குழம்பு வைக்கும் போதெல்லாம் கேக்கறேனே... சாப்பிட கூப்பிடவே மாட்டறீங்க..டேஸ்ட் பண்ண க்கூட கொடுக்க மாட்டேங்கறீங்க..

வாட்ச்மேன் தாத்தா: ஆமா.. கொடுக்க மாட்டேன். .உனக்கு கொடுத்துட்டு நான் என்னத்த சாப்பிட. .ஒத்த ஆளு, வாரத்திற்கு ஒரு நாள், கால் கிலோ வாங்கியாந்து சமைக்கிறேன்.. 4-5 துண்டு த்தான் போடறான். .மதியம் ராத்திரி 2 வேளைக்கு வச்சிக்குவேன்... அத்த உனக்கு கொடுக்க சொல்றியா... போம்மா...

கவிதா : ம்ம்ம்... அப்ப கொடுக்க மாட்டீங்க..

வாட்ச்மேன் தாத்தா: மாட்டேன்... அதான் சொல்லிட்டேன் இல்ல...

*****************
கவிதா : உங்க பேரு என்ன..?

குப்பம்மா : என் பேராம்மா முனியம்மா ...

கவிதா : அவங்க குப்பம்மான்னு சொன்னாங்களே...

குப்பம்மான்னு சொன்னவங்க : என்னம்மா நீனு. என் மாமியாரு பேரு முனியம்மா.. எப்படி மாமியாரை பேரை சொல்லி கூப்பிடறது (நாங்க எல்லாம் ஆதி அந்தம் னு பேரு வச்சி கூப்பிட்டவங்க. .எங்கக்கிட்ட இப்படி ஒரு டயலாக் கா? நாடு ரொம்பவே முன்னேறனும்..!!) அதான் நான் குப்பம்மா ன்னு வச்சிட்டேன்..

கவிதா : அம்மா நீங்க சொல்லுங்க உங்க பேரு முனி' யா? குப்பு' வா?

முனியம்மா : ........ (வெட்கம் வெட்கம் வெட்கம்.. ஆஹா அந்த 60 வயதை நெருங்கும் பாட்டியை நேரில் பார்த்து இருந்தால் மட்டுமே ரசித்து இருக்க முடியும்..)..என் பேரு.. .என் பேரு.. முனியம்மா கிருஷ்ணன்... ஹி ஹி ஹி... :)))) :) )

கவிதா : அட இந்த வயசிலும் வெக்கத்த பாரு. !!! .அது யாரு.. கிருஷ்ணன்..?

முனியம்மா : ஹி ஹி.. என்னோட ஹஸ்ஸு...பண்டு.... !!

கவிதா : ஆஹா பீட்டரூ......?!! ம்ம்ம்ம் ம்ம்.....ம்ம்!! :))))))

முனியம்மா : தப்பா இருந்தா மன்னிச்சிக்கோங்க.ம்மா.... எனக்கு இங்லீச்சு தெரியாது..

கவிதா : இல்ல முனி...நீங்க சரியா தான் சொன்னீங்க... ரொம்பவே சரியா சொன்னீங்க.. தப்பே இல்ல.. :)))

*******************************
ஜிம் மில் வியர்வை வடிய பயிற்சி செய்து கொண்டு இருக்கிறேன்... (வியர்வையின் மேலேயே) ஜிம் தோழி நான் எதிர்பார்க்காத போது தீடிரென்று வந்து கன்னத்தில் முத்தமிடுகிறார்.

கவிதா : அவ்வ்வ்வ்வ்வ்.. whaaatttt happen yaar ?!! ..

தோழி : I love you kavitha ..............

கவிதா : :)))))))))))))))))) Thanks... Thanks for the kiss... :))))))))))) I didnt expect this... !!! Thanks !!

************************************
லேடிஸ் மீட்டிங்..சிட் சேட்.. :)

லேடி 1 : உங்கள எப்படி உங்க வீட்டுல கூப்பிடிடறாரு...

லெடி 2 : "வாசு..." (வா...சூ ....சூ.. சூ.!!.... இது நானு...)

லேடி 2 : பவன் வீட்டில....

லேடி 1 : " மஞ்சு......(ம ஞ்....சூ சூ சூ...!!. இது நானு...)

லேடி 2 : ஜாய்ஸி வீட்டுல.

லேடி 3 : ஜாய்....(ஜா..ய் அய்ய அய்ய அய்ய..அய்ய.!!........ இது நானு)

லேடி 1 , 2 & 3: உங்கள என்னான்னு கூப்பிடுவாரு..சொல்லுங்க. .நாங்களும் ஓட்டனும் இல்ல... :(

கவிதா : அதானே எங்க வீட்டில என்னை எப்படி கூப்பிடுவாங்க.. ?..........அவ்வ்வ்்...... !! (ரொம்ப நேரம் யோசித்தும் தெரியவில்லை...:((((((( ) இத்தனை வருஷத்தில் என்னை எங்க வூட்டுக்காரு பேரு சொல்லி கூப்பிட்டதே இல்லை...!! :(((((((((((((((

லேடி 2 : நிஜம்மாவா... பேரு சொல்லி கூப்பிட்டது இல்லையா...

கவிதா : :((( ஆம்ம்மா ..நீங்க கேட்டவுடனே தான் தெரியுது... என்னை அவரு ஒரு தரம் கூட பேரு சொல்லி கூப்பிட்டதே இல்ல... :((((

லேடி 2 : அப்ப எப்படித்தான் கூப்பிடறாரு...

கவிதா : .....ம்மா. ...ஏம்மா வாம்மா போம்மா... ன்னு தான்........... :(( :))
(ஒரு வேளை ஓவர் மரியாதையா இருக்குமோ..????. ஹி ஹி.. மனசாட்சியே இல்லையா உனக்கு... ன்னு நானே என்னை கேட்டுட்டேன்..அதனால நீங்க யாரும் டென்ஜன் ஆகாதீங்க... . !! )

**************************

தோழி 1 - தோழி 2 விடம் -(அட்வைஸ் ஸாம்) எதையாவது நினைச்சிக்கிட்டு குழப்பிக்காதீங்க. .ஒன்னும் நடக்காது.. கவலப்படாம ஜாலி யா என்ஜாய்... பண்ணுங்க.. உம் முன்னு இருக்காதீங்க..

தோழி 2 : சே சே.. அதெல்லாம் ஒன்னும் இல்ல..நான் உம் னு எல்லாம் இருக்கவே முடியாது... அதான் கவிதா வந்தாச்சே.. அவங்கள பாத்தாவே ஜாலி மூட் வந்துடும்....

கவிதா : .............(ஞே... !!) :))))))))))))))

தோழி 1 : ஓ பிசாசு வந்தாச்சா.ஆ..... ?!!

கவிதா : அடிங்... பொறாம பிடிச்சவளே. ..ஓடி போயிடு. .உன் மூஞ்சிய பாத்து யாராச்சும் இப்படி உன் வாழ்க்கையில சொல்லி இருக்காங்களா?.. அதுக்கெல்லாம் முகராசி ன்னு ஒன்னு வேணும்டீ..ஈஈ.!!

தோழி 1 : :))))) ஆரம்பிச்சிட்டியா.. முடியல..போ..போற வரைக்கும் பேச்சை நிறுத்த மாட்ட.. பேசு பேசு....தலை எழுத்து கேக்கறேன்... ... !!

தோழி 2 : :))))))))))))))

*******************************************
கவிதா : நீங்க ரொம்ப நல்லா ஏரொபிக் செய்யறீங்க ப்பா... செம சூப்பர் !! ஆமா உங்க பேரு என்ன?

மீனாகுமாரி : ஓ ரியலி. தாங்ஸ் !!!! மீனாகுமாரி.

வரலா : அய்யோ..அய்யோ... அவங்க உங்களை ஓட்டறாங்க மீனாகுமாரி.. புரியலையா உங்களுக்கு ?!!

மீனாகுமாரி.. : ஓ.. :(((( .... .அப்ப நான் சரியா செய்யலையா..?!! :((((

கவிதா : சே சே... யாரு சொன்னா? நீங்க சூப்பரா செய்யறீங்க. .இவங்க ஒன்னு சொல்லி கொடுக்கறாங்க. .நீங்க அதை வேற மாதிரி செய்யறப்ப.. .நாங்க தினமும் நீயூ நீயூ ஸ்டெப் கத்துக்கறோம் இல்லையா. .சோ யூ ஆர் டீச்சிங் அஸ் நீயூ ஸ்டெப்ஸ் ..... யூ ஆர் ரியலி டூயிங் வெல் . !! :)

மீனாகுமாரி.. : அட ஆமாம் .. ஐம் டீச்சிங் நியூ ஸ்டெப்ஸ்.. எஸ் ஐயம் சூப்பர்..!!

வரலா : (என்னைப்பாத்து)....தூஊஊஊஊ !!

மீனாகுமாரி கிளம்பும் போது கவிதா எங்க எங்க ன்னு தேடுகிறார்......."ஹே கவி.. ஐம் லீவிங்.. பை பை.... "

கவிதா : ...யா..பை பை... நாளைக்கும் சூப்பரா செய்யங்கப்பா... ..!! :))) வீ லேர்ன் நியூ ஸ்டெப்ஸ்..!! ஒகே.. !!

ஜிம் மேனேஜர் : கவிதா..!! மீனாகுமாரி சேர்ந்து 2 டேஸ் தான் ஆச்சி அதுக்குள்ள உங்களை தேடறாங்க....அவங்களையும் விட்டு வைக்கலையா? ..

வரலா : (திரும்பவும்..என்னைப்பார்த்து). தூஊஊஊஊஊஊஊ !!!

கவிதா : துப்பிட்ட இல்ல... போ ..வேலைய பாரு....!! துப்பி துப்பி உனக்கே போர் அடிக்கல..!! :)))

வரலா : (திரும்பவும்) தூஊஊஊ... !! நீ திருந்தவே மாட்டே... !!

********************
அணில் குட்டி அனிதா : நானும் இப்படி துப்பி துப்பி.... . வாயில எச்சி இல்லாம போனதுதான் மிச்சம் அம்மணி திருந்தின பாடு இல்ல... ம்ஹூம். இன்னும் எத்தன பெரு துப்பப்போறாங்களோ... .ஆனா ஒன்னு. .எத்தன பேரு வந்து எவ்வளவு துப்பினாலும் தொடச்சீஈஈஈஈஈஈ விட்டுட்டுவாங்க........... ...

பீட்டர் தாத்ஸ் : “Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the the universe.”

சில நேரங்களில் சில மனிதர்கள்..

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், மின் துறை ஊழியர். மின்சாரம் இல்லாத ஒரு நாளில் இவர் வந்தபிறகு தான் மின்சாரமும் வந்தது :)

கொட்டிவாக்கம் கடற்கரையில் தனியாக அமர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தை... :)

மழை நிற்க காத்திருக்கும் பெண்.. :)

மழையில் நடந்துவரும் போது எதிரில் வந்த பெண்....

அவ்வப்போது ஜன்னலின் வழியே மழை நின்றுவிட்டதா என பார்க்கும் போது எல்லாம், மழையை ரசித்தவாறு இவர்கள் வெகுநேரம்(கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல்..) இதேபோல் (குனிந்தபடியே) அமர்ந்திருந்ததால், அட...!!.... என எடுத்தது.....

சென்னை சின்னமலை பகுதியில் தெருவோருத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் துணி துவைக்கும் பெண்.. பஸ் ஸிலிருந்து எடுத்தது..

சென்னை சைதை கூவம், இந்த தண்ணீரில் தான் துணி சலவைக்கு துவைக்கப்பட்டு வருகிறது.. நம்பமுடியாமல் எடுத்தது .... (சலவைக்கு போடுபவர்கள் இதை அறிவார்களா ? )

கொட்டிவாக்கம் கடற்கரை செல்லும் வழியில், தெருக்களில் உலாவந்த குழந்தைகள். இந்த குட்டி அந்த குட்டி கையை பிடித்து கூட்டிக்கிட்டு வருது.. ம்ம்..!!

அணில் குட்டி அனிதா : கவி.. உங்களையும் இதே மாதிரி யாராச்சும் போட்டோ எடுத்து போட போறாங்க. . என்ன.. இதை எல்லாம் பாக்கறாப்பல இருக்கு.. உங்களை.... :(.... பாவம்.. இவ்வளவு நேரமே உயிரோட இருக்காங்களோ என்னவோ?!!

பீட்டர் தாத்ஸ் : - :) I am working every day. But I needed only some proof. So the proof was photos. :)


* படங்கள் மொபைலில் எடுத்தது.

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்

ஓம் ஓம் ஓம்


- பாரதியார்

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?


- பாரதியார்

உதவமுடியுமா?

பார்வையற்ற மாணவர்கள், Visually Challenged Students தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. தேர்வின் போது அவர்களுக்கு படித்துக்காட்ட ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவ முயற்சி செய்யுங்கள் ..


நன்றி பரிசல்காரர் .ரின் இந்த பதிவை படியுங்கள்..

ஏதோ நினைவுகள்... இது நான் இல்லை !! :(

(துபாய்) ராஜா வின் இந்த கவிதையை படித்தவுடன் என்னவோ எதிர்கவிதை எழுதவேண்டும் என்று தோன்றியது.

மண்டப்பத்தில் யாரும் எழுதி கொடுக்காட்டியும், எப்போதும் எழுதும் கவிதை போல் இது இல்லாததால்,

"இது நானே தான் எழுதினேன் ஆனால் இது நான் இல்லை " ன்னு சத்தம் போட்டு கத்தனும் போல இருக்கு... :((((

(துபாய்) ராஜா..... இனிமே இப்படி எல்லாம் கவிதை எழுதுவதை நிறுத்திடுவார் என்ற நம்பிக்கையில்........ ....



அடர்மழை நாளொன்றில்
குளிரோடும்
சிறுது சிலிர்போடும்
ஒரு பயணம்

மழை நீர் துளிகள்
போல் துள்ளும்
என் உள்ளத்தில் உன்முகம்
கண்டு மகிழ்கிறேன்

இருட்டும் மழைமேகம்
போல இடையறாது
உன்னையே துறத்தும்
என் நினைவுகள்

கார்மேகம் கலைந்தாலும்
நான் கண்ட
கனவுகள் கலையாது....

அடாது பெய்யும்
மழைபோல் விடாது
தொடரும் உன்
நினைவுகள்....

மழைநீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
வடியாது...

வெள்ளநீர்
விலகினாலும்
உன்னை விலகாது
என் நினைவுகள்...

அணில் குட்டி அனிதா : .........அய்யய்யோஒ.ஓஓ.. என்னால முடியலயேஏஏஏஏஏஏஏஏ!! ... கவி..ய யாராச்ச்சும் மிரட்டி .. அதட்டி... ஏதாச்சும் செய்து எழுதவிடாம செய்ங்களேன்... ... :(((((

பீட்டர் தாத்ஸ் :- None but blockheads copy each other.

கொஞ்சம் புலம்பல், கொஞ்சம் அழுவாச்சி கொஞ்சம் டெஸ்ட் !!

இதற்கு முன் உள்ள பதிவுகள் எல்லாவற்றிக்கும் சேர்த்து.. இதில் பின்னூட்டம் போடுவீங்களாம்.. என்னவோ அடிக்கடி என்னோட ப்ளாக் பிரச்சனை கொடுக்குது, இல்ல.. பிரச்சனைய சரி செய்யும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லன்னு சொல்லிக்கலாம்.. சரி நமக்கு தான் இல்லையே வேற யாரிடமும் கேட்டு சரி செய்யலாம் ன்னா நேரம் இல்லைன்னு சொல்லி நான் ரொம்ப பிஸி ன்னு சொல்லி எஸ் ஆக விரும்பல.. இருக்கிற நேரத்தை சரிவர திட்டமிட்டு பயன்படுத்திக்க மாட்டேங்கறேன்.. கிடைக்கிற நேரத்தில் தூங்கறேன்....

இன்னும் என்னையும் என் நேரத்தையும் சரிவர திட்டமிட வேண்டும். அதுவரை மக்கா கொஞ்சம் பொறுத்துக்கோங்க...

எனக்கு நானே திட்டமிடல் பற்றி ஒரு பதிவு போடனும்னு நினைக்கிறேன்...

இது பின்னூட்டம் வருதான்னு பார்க்க டெஸ்ட் போஸ்ட்டூஊஊஊஊ !! :(

எங்க வீட்டு சமையல் : மீன்/கோழி/நண்டு/முட்டை குழம்பு

ஒவ்வொரு ஊருக்கு ஒரு சமையல் அல்லது ருசி தனிபெயர் பெற்றதாக இருக்கும். காரைக்குடி ஆச்சி சமையல், குழிஅப்பம், அசைவ உணவுகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவை. முல்ஸ்ஊர் பிரியாணி (அட அதாங்க ஆம்பூர் பிரியாணி), கன்யாகுமரி, நாகர்கோயில் பக்கம் சாம்பாரில் கூட தேங்காய் அரைத்துவிடுவார்கள், சேலம் பக்கம் சாம்பார், குழம்பு எதுவாக இருந்தாலும் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிது சேர்பார்கள்.

இப்படி எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் பிரசத்தி பெறாத ஊர் விழுப்புரம். சுற்றபுரங்களில் நிறைய கிராமங்கள் இருப்பதால், காய்கரி, கீரை வகைகள், தயிர் போன்றவை நன்றாக கிடைக்கும். அதனால் எங்கள் வீட்டு சமையலில் என்ன தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் என்று சொல்ல தெரியவில்லை, இதுவரையில் சாப்பிட்ட அசல் ஊர் நண்பர்கள் சமையல் ருசி நன்றாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய ஆயா தான் சமையல் எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அம்மா வீட்டில் சுத்த சைவம் (கவி -சைவம் அசைவம் இரண்டுக்கும் பிறந்த கிராஸ்), அப்படி சுத்தமான சைவ அம்மாவை அசைவமாக்கிய பெருமை ஆயாவை சேரும் என்பதை விடவும் அவர்களின் சமையல் ருசி, யாரையுமே எதையும் விட்டுவைக்காமல் சாப்பிட செய்துவிடும். :). ஆயா சொல்லிக்கொடுத்த சமையலிலிருந்து சில அசைவ உணவுகள் செய்முறையை எழுதிவைக்க நினைக்கிறேன்.

மீன் குழம்பு :

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கிலோ (குழம்பு மீன்)
புளி - 1 1/2 எலுமிச்சை பழம் அளவு (மீடியம் சைஸ் எலுமிச்சை)
தக்காளி - 2 (மீடியம் சைஸ், நாட்டு தக்காளி )
வெங்காயம் - சின்ன வெங்காயம் ஒரு பெரிய கைப்பிடி (அ) பெரியவெங்காயம் பெரியது ஒன்று
பூண்டு - 10
மிளகு - 10 (எண்ணெய்யில் லேசாக வருத்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும், பச்சையாகவும் அரைத்துக்கொள்ளலாம்)
மஞ்சல் பொடி - சிறிது
மிளகாய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் (இது தனியா +மிளகாய் சேர்ந்த தூள்) தேவைக்கேற்ப நீங்கள் காரத்தை குறைத்தும் கூட்டியும் கொள்ளலாம்
எண்ணெய் - தாளிக்க
உப்பு
வடகம் - 3/4 ஸ்பூன் (இது கடுகு, சீரகம்,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், இடிந்த சின்ன வெங்காயம் & பூண்டு + விளக்கெண்ணெய் சேர்த்து வருடத்திற்கு தாளிக்க தயார் செய்து வைத்துக்கொள்ளுவோம், இதற்கு தனியாக ஒரு செய்முறை உள்ளது, இது இல்லாதவர்கள் வெறும் கடுகு, சீரகம், வெந்தயம், உளந்து சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்)

செய்முறை : வெங்காயம் , பூண்டை தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி வடகம் போடவும், இது இல்லாதவர்கள் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் (வெந்தயம் மட்டும் கொஞ்சம் அதிகமாக) போட்டு தாளிக்கவும். சிவக்கும் போது, நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். பூண்டு வாசனை வர சிவந்தவுடன், நசுக்கிய வெங்காயத்தை போடவும். நன்றாக வதங்கி லேசாக சிவக்கும் போது, பொடியாக நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை இலை சேர்த்து நன்கு வதங்கியவுடன், கரைத்து வடிக்கட்டிய புளித்தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து மூடிவிடவும்.

குழம்பை இப்படி கூட்டி அடுப்பில் வைத்துவிட்டு, மீனை சுத்தம் செய்ய செல்லலாம். மீனை கழுவி சுத்தம் செய்வதற்குள் குழம்பு கொதித்துவிடும். குழம்பு மிளகாய் தூள் வெடுப்பு (வாசம்) போகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும். நன்கு கொதித்தவுடன், கழுவிய மீன்களை போட்டு, 3-4 நிமிடங்களுக்குள் இறக்கிவிடவேண்டும். மீன் சட்டென்று வெந்துவிடும், அதிக நேரம் வைத்தால் மீன் குழைந்துவிடும். இறக்கியவுடன் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.

மீன் குழம்பு ரெடி. :). மீன் குழம்பை சட்டியில் செய்தால் தனி ருசி.
***************************
நண்டு குழம்பு :

நண்டு சளிக்கு ரொம்பவே நல்லது. மார் சளி விடாது இருந்தால், ஆயா நண்டு குழம்பு வைத்துக்கொடுப்பார்கள். அதுவும் வயல் நண்டு. இது கருப்பு & சாம்பல் சேர்ந்த நிறத்தில் குட்டி குட்டியாக இருக்கும். இதை வயலில் வேலை செய்யும் பெண்களிடம் சொல்லி வாங்குவார்கள். உயிருடன் பிடித்து வந்து தருவார்கள், உயிருடன் இருப்பதால் சள சள வென அந்த பையில் சத்தம் கேட்கும் :). நண்டை சுத்தம் செய்து, அம்மியில் வைத்து ஒரு நசுக்கு நசுக்கி சமைக்க தயார் செய்து க்கொள்வார்கள். கடல் நண்டை நசுக்க மாட்டார்கள். இரண்டுக்கும் இது தான் சமைக்கும் போது உள்ள வித்தியாசம்.

தேவையான பொருட்கள்.:-

நண்டு - 4 (கடல் நண்டாக இருந்தால், வயல் நண்டு 7-10)
வெங்காயம் - சின்ன வெங்காயம் கை அளவு
பூண்டு - 10
தேங்காய் - அரை மூடியில் பாதி
தக்காளி- 2 (நாட்டு)
மிளகு - 20
வடகம் - 3/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி - சிறிது
உப்பு

செய்முறை : வெங்காயம், பூண்டு தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மிளகை வறுத்து விழுதாக்கிக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, வடகம் வாசனை வர தாளித்து, முதலில் பூண்டு, பின் வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து நன்கு மிளகாய் வெடுப்பு (வாசனை) போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும் கொதித்தவுடன் சுத்தம் செய்த நண்டை போட்டு கொதிக்கவிடவும். நண்டு வெந்தவுடன், தேங்காயை அரைத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.

நண்டு குழம்பு ரெடி. !
********************************
கோழி குழம்பு

தேவையான பொருட்கள் :

கோழி - 1/2 கிலோ
பூண்டு - 8
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
வெங்காயம் - பெரியது ஒன்று அல்லது சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி
தக்காளி - 2 (நாட்டு)
பச்சை மிளகாய் - 1 (அ) 2
மிளகாய் பொடி - 3 ஸ்பூன்
மிளகு - 6 (தேவைப்பட்டால், யாருக்காவது வீட்டில் சளி பிடித்திருந்தால் மட்டுமே இதை நான் சேர்ப்பது வழக்கம்)
மஞ்சள் பொடி - சிறிது
உருளை கிழங்கு - 3 (மீடியம் சைஸ்)
சோம்பு - 1 ஸ்பூன்
லவங்கம் - 3
பட்டை - சிறிது
பட்டை இலை - சிறிது
எண்ணெய்,
உப்பு

செய்முறை : இஞ்சி, பூண்டு, சோம்பு, லவங்கம் 2, மிளகு சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் நசுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். வாணல் வைத்து, லவங்கம் 1, பட்டை, பட்டை இலை போட்டு சிவந்தவுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், நசுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் தக்காளி, நீட்டில் நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி, உருளைக்கிழங்கை தோல் நீக்கி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி , மஞ்சள் பொடி சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும்.

இது வதங்கும் சமயம் கோழியை சுத்தம் செய்து விடலாம். சுத்தம் செய்த கோழியை இதனுடன் சேர்த்து வதக்கவும். கோழி வதங்கியவுடன் குக்கரில் கொட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிவிடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, அதிலுள்ள 4-5 துண்டுகள் உருளைக்கிழங்கை மட்டும் கரண்டியால் மசித்துவிடவும். இப்படி செய்வதால் குழம்பு கெட்டியாக இருக்கும். தேங்காய் அரைத்து விட வேண்டியது இல்லை.

கொத்திமல்லி தழை தூவி இறக்கிவிடவும். கோழி குழம்பு ரெடி.
************************************
முட்டை குழம்பு :

இதற்கு மீன் குழம்புக்கு சொன்ன அத்தனை பொருட்களும் தேவை. மிளகு கிடையாது, தேங்காய் அரை மூடியில் பாதி தேவை, முட்டை - 4.

மிளகை தவிர்த்து மீன் குழம்பிற்கு சொன்னதை போன்று செய்து குழம்பு நன்கு கொதித்தவுடன், தேங்காய் அரைத்து ஊற்றிவிடவும். ஒரு கொதி வந்தவுடன், முட்டையை உடைத்து (வாணலில் வேறு வேறு இடத்தில்) ஊற்றி 2-3 நிமிடங்கள் கொதித்தவுடன் கரண்டியால் கிண்டாமல் இறக்கிவிடவும்.

கொத்தமல்லி தழை தூவிவிடவும்.

முட்டை குழம்பு ரெடி!
*******************************
அணில் குட்டி அனிதா:
என்ன அம்மணி தீடீர்னு சமையல் பக்கம் இறங்கிட்ட்டாங்க...?!!... அவங்க ஆயா நல்லாத்தான் சமைப்பாங்க. .இவிங்க சமையலை பத்தி.. இவிங்க புள்ளக்கிட்டயும் இவிங்க ஹப்பி கிட்டயும் கேட்டாத்தான் தெரியும்... !!

பீட்டர் தாத்ஸ் :-
Cooking is like love. It should be entered into with abandon or not at all.





அப்பன் என்றும் அம்மை என்றும்..

Get this widget | Track details | eSnips Social DNA

ஓ…………ஓ…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு,

அது புத்தன் என்றும் சித்தன் என்றும்

பித்தன் என்றும் ஆவெதென்ன

சக்கையாக போகும் கரும்பு

ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்

எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா

சுத்தம் என்று யாருமில்லை பாவமூட்டை தானடா

சிவனை கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா

புத்திக்கெட்ட மூடர்கென்றும் ஞான பார்வை ஏதடா

ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் என் பந்தம் நீ உள்ளவரை தான்

வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஒர் சந்தைகடை தான்

இதில் நீ என்ன நான் என்ன வந்தாலும் சென்றாலும் என்னாச்சி விட்டுதள்ளு

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்

ஆடி தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரணும்

ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா

ஆட நானும் மாட்டேன் என்று ஓடி போன தாரடா

தட்டி கெட்டு ஓடும் தள்ளாடும் என்னாளும் உன் உள்ள குரங்கு

கட்டுபட கூடும் எப்போதும் நீ போடு மெய் ஞானவிலங்கு

மனம் வாடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக

அஞ்ஞானம் அற்று விழும்..

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு

அது புத்தன் என்றும் சித்தன் என்றும்

பித்தன் என்றும் ஆவெதென்ன

சக்கையாக போகும் கரும்பு

ஞானபெண்ணே சக்கையாக போகும் கரும்பு

பந்த பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்

எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்

அப்பன்….என்றும்…

அப்பன் என்றும் அம்மை என்றும் ஆணும் பெண்ணும்

கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு,

ஞானபெண்ணே குப்பையாக வந்த உடம்பு


எழுத வந்தாலும் வந்தேன்.....

பதிவெழுத வந்த கதையை எழுத சொல்லி.. தம்பி கோபிநாத் அழைத்து இருக்கிறார். பெரிய கதை ஒன்றும் இல்லை. எப்போதும் எல்லாவற்றிலும் வேகம் போலவே இதுவும் நடந்தது.

எனக்கு ப்ளாக் என்ற ஒன்று இருப்பது தெரிந்ததே என்னுடைய ஆன்(ண்)லைன் நண்பரால், அவர் அப்போது (2006) அமெரிக்காவில் இருந்தார், இப்போது இங்கத்தான் இருக்கிறார். (ரொம்ப முக்கியம் மா? ன்னு கேப்பாரு.. அதை எல்லாம் நாம கண்டுக்கக்கூடாது, சொல்லனும்னு நினைக்கறதை சொல்லிடனும் :) ) என்னைப்பற்றி தெரியாமல், தெரியாத்தனமாக அவருடைய ப்ளாக் யூஆர்எல் எனக்கு அனுப்பி வைத்து இருந்தார், இது அவரைப்பற்றி நான் தெரிந்துக்கொள்ள.

அவரை பற்றி தெரிந்துக்கொண்டேனோ இல்லையோ.......கொஞ்ச நாளில் நாமும் ஏன் இப்படி எழுதி தள்ளக்கூடாது என்று முடிவு செய்து நானே ப்ளாக் எல்லாம் கிரியேட் செய்துவிட்டு, அவரிடம் எனக்கு கூட எழுத ஆசை என்றேன். அவரும், "நீங்களும் எழுதுங்க, ஒரு ப்ளாக் கிரியேட் செய்துக்கோங்க" ன்னு சொன்னார், சொல்லி முடிக்கும் முன், "கிரியேட் செய்துட்டேனே.. இன்ட்ரோ க்கு உங்க பேரை போட பர்மிஷன் வேணும் னு" கேட்டேன். நிச்சயமாக நான் ப்ளாக் கிரியேட் செய்திருப்பேன் என்று அவர் எதிர் பார்த்திருக்கவில்லை தான். ஆனாலும், "என் பெயரை போடவேண்டாம்" என்று கண்டிஷன் போடவே.. அவருடைய பெயரை குறிப்பிடாமல் எழுதத்தொடங்கினேன்.

இன்னமும், இந்த பதிவு எழுதும் வரையிலும் எனக்கு பர்மிஷன் கிடைக்கவில்லை :(, அதே கண்டிஷனில் தான் வண்டி ஓடி க்கொண்டு இருக்கிறது. இப்பவும் அவரு யார் ன்னு சொல்ல முடியல, சொன்னால் எனக்கு இருக்கும் ஆபத்தை விடவும் அவருக்கு ஆபத்து அதிகம். அவருக்கு ஆபத்து அதிகமானால் அது அப்படியே இந்த பக்கம் திரும்பும் அபாயம் இருப்பதால்.. போனாபோகிறது என்று அவரை யாருன்னு தெரியாமையே விட்டுடுவோம். இதையும் தாண்டி யாருக்காவது கண்டுபிடுக்கனும் னு நினைத்தால், கண்டுபிடிங்க.. ஆட்டோ அனுப்புங்க.. ஹி ஹி..எனக்கு இல்ல அவருக்கு.. :))

முதன் முதலாக .. எங்கிருந்தோ சொய்ய்ய்யினூ நடுவில் வந்து குதித்தார் நம்ம பாலா (பாரதி), என்னுடைய பளாக் டெம்லேட் சரி செய்தது, அழகாக்கி கொடுத்தது, தமிழ்மணத்தில் என்னை சேர்த்துவிட்டது, தமிழில் திருத்தங்கள் என்று ஏகப்பட்ட உதவி செய்து இருக்கிறார். அப்பவெல்லாம் இதை அவர் முழு நேர வேலையாக வைத்திருந்தார் என்றே நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, நிறைய புது வரவுகளுக்கு உதவியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். ரொம்பவே நல்லவர்.

சுவாரசியமான விபரம் வேற என்ன இருக்கு பதிவெழுதவந்துன்னு பார்த்தால், ம்ம்ம்ம்.. பிரச்சனைகள் நிறையவே பார்த்துவிட்டேன். பொதுவாக என்னை நேரில் பார்த்து பேசி பழகும் நண்பர்களிடம் சந்தித்திராத புதுவிதமான ஒரு பிரச்சனையை ப்ளாகர் நண்பர்களிடம் சந்தித்தேன்.

அதற்கு காரணம் என் எழுத்தின் தாக்கம், அதனால் மட்டுமே நான் வேறு விதமாக இங்கே பார்க்கப்படுகிறேன் என்பதை சமீபத்தில் மிக தெளிவாக நண்பர் ஒருவரால் புரிந்துக்கொண்டேன். இப்படி எல்லாம் பேசுவார்கள், என்னைப்பற்றிய அப்படி ஒரு எண்ணம் அவர்களிடம் இருக்கிறது என்பதை கூட என் எழுத்து எனக்கு காட்டிக்கொடுத்து இருக்கிறது எனலாம். அது அவர்கள் தவறு அல்ல என் எழுத்தின் தவறு.

நானும் என் எண்ணங்களும் மட்டுமே எழுத்தாகிறோம் என்றால் ஏன் ப்ளாகர் அல்லாத நண்பர்களிடம் எந்த பிரச்சனையும் இதுவரையில் நான் சந்தித்தது இல்லை என்று கேட்டுக்கொள்கிறேன். சண்டைக்கோழி என்ற பெயர் வைத்திருப்பதாகவும் கேள்விபட்டேன் :). வைத்தவர்களுக்கு நன்றி. என் செல்லப்பெயர்கள் லிஸ்ட் டில் (ம்ம்ம்..லிஸ்ட் போடும் அளவிற்கு எனக்கு செல்ல பெயர்கள் உண்டு) இதையும் சேர்த்துவிட்டேன்.

பல நேரங்களில் எழுதவே பிடிக்காத வெறுமையை கூட ஏற்படுத்தி இருக்கிறது, 3 முறை வெளியில் சென்று திரும்ப வந்து இருக்கிறேன். எல்லாம் தனிநபர் (கவிதா என்ற தனிநபர்) சம்பந்தப்பட்டது என்று வைத்துக்கொள்ளலாம். வேறு யாரையும் குற்றம் சொல்வதற்கு முன், என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஏன் நீ எழுதவந்தாய்? கேட்டுக்கொண்டு நானே அதற்கு விடையும் சொல்லிக்கொண்டு, திரும்பவும் இது போல் என்னால் முடிந்த அளவு எழுதி தள்ளிக்கொண்டு தான் இருக்கிறேன்.. .என் அறிவுக்கும், மனதுக்கும் முடிவு இது தான் என்று தெரிந்திருந்தும் முடிவுகள் இல்லாது தொடருகிறது....

நிற்க, எல்லாவற்றையும் மறக்கசெய்யும் பல நல்ல விஷயங்களும் நடந்திருக்கிறது. எப்போது உதவி என்று கேட்டாலும் எப்படியும் யாராவது செய்துவிடுவார்கள், முகம் தெரியாதவர்களுக்காக கேட்ட போதும் என்னை நம்பி நம் மக்கள் உதவியிருக்கிறார்கள். அதை எப்போதும் மறப்பதற்கு இல்லை. மறந்துவிட்டால் நான் மனுஷியும் இல்லை.

தவிர்த்து, எனக்காக கேட்ட போதும், (அ) ஏதோ ஒரு விதத்தில் ப்ளாக் சம்பந்தமாக உதவி செய்து கொடுத்த நல்லவர்கள் இருக்கிறார்கள். முதலில் *பாலா(பாரதி), பொன்ஸ், சிவகுமார்ஜி, சிந்தாநதி, சீனு, (நாகை)சிவா, ஜொள்ஸ், கொத்ஸ், கைப்ஸ், தேவ், சந்தோஷ், ஹே ராம், ஜியா,அருள், உஷா, மைஃபிரண்டு, முல்ஸ், காயத்'திரி, ஜம்ஸ், ரவி, லக்கி, துர்கா, சிபி, ரங்கன், கோபி, சென்ஷி, கல்வெட்டு, புருனோ,மங்கை,டுபுக்கு, முத்து,செல்லா, தெகா, ஆயில்யன், வெயிலான், மதுரா(தமிழச்சி), சிங்கு & கடைசியாக ராஜா.* ப்ளாக் விஷயமாக அதிகமாக நான் உயிரை வாங்கியது சீனு தான். :). He is an intellectual, weird & highly stupid guy.

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு


என்று வள்ளுவர் சொன்னதை நினைவில் எப்போதும் நிறுத்தி, யார் எந்த உதவி செய்திருந்தாலும் அதை எளிதில் மறக்காமல் இருக்க என்னை தயார் படுத்தி இருக்கிறேன். இப்பவும் இனியும் அப்படியே இருக்க எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக்கொண்டும், உதவிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றிக்கும் அப்பார்ப்பட்டு, என்ன கொடுமையை நான் எழுதினாலும் அதை படிக்க வரும் மக்கள் தான் நிஜமான நல்லவர்கள், பொறுமை சாலிகள் அதிலும் பாராட்டி விட்டு வேறு செல்வார்கள். :) அப்படி செய்யும் போது எல்ல்லாம்.. எவ்வளவு நல்லவங்களா இருக்காங்கப்பா என்று நினைப்பதுண்டு.

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... !!! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. !! அம்மணி மாதிரி நானும் இன்னைக்கு மூட் அவுட் ல இருக்கேன்.. சோ அப்புறம் வச்சிக்கலாம் கச்சேரிய..... !!

பீட்டர் தாத்ஸ் :“Memories are the treasures that we keep locked deep within the storehouse of our souls, to keep our hearts warm when we are lonely.”

* யாருடைய பெயரையாவது விட்டு இருந்தால், தயவு செய்து தவறாக எடுக்க வேண்டாம் , என்னவோ இந்த பதிவு எழுதும் போது நினைவுகள் ஒன்றும் சரியாக இல்லை, அதனால... மன்னிச்சி விட்டுடுங்க.ப்பா....

பப்பு vs கவிதா


















பப்பு : போதும்..

கவி : என்ன போதும்...

பப்பு : எல்லாமே போதும்..

கவி: என்ன எல்லாமே போதும்..

பப்பு: ப்ப்ப்போதூஊஊஊம் !! (கோவமாக)

கவி: என்ன போதும்.. ஓ சிப்ஸ் சாப்பிடறேனே அது போதுமா?

பப்பு: ஆமா..!! (செம கடுப்பாக)

கவி: அப்ப நான் வீட்டுக்கு போறேன்.. (நானும் செம கடுப்பாக)

பப்பு: (இது வரை பேசியது எதுவுமே குரல் மட்டும் தான் வந்தது என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை, விளையாடிக்கொண்டு இருந்தாள், இப்போது வேகமாக என்னை பார்த்து..) ஏன்ன்ன்ன்?

கவி: நீந்தான் எல்லாமே போதும் னு சொன்னியே. .அதான் வீட்டுக்கு போறேன்.

பப்பு : வேணாம் வேணாம். .நீ சாப்பிட்டுக்கோ .... நாம விளையாடலாம்...

கவி: ம்ம்ம்..அப்ப சரி நான் எல்லாத்தையும் சாப்பிட்டுக்கவா?

பப்பு: (கொஞ்சம் யோசனை, பின் இரண்டு கையையும் குவித்து காட்டி) இவ்வளவு ஆச்சிக்கு வச்சிட்டு மிச்சம் எல்லாம் சாப்புடு..

ஆச்சி : ஹி ஹி ஹி ஹி.. (ஒரே சந்தோஷமாம்ம்ம்ம்!! )

************************


பப்பு : நீ வரத்துக்கு முன்ன அந்த புலி உன்னை கடிச்சிருச்சி...

















கவி: டேய், நான் வராதப்ப புலி என்னை எப்படி கடிக்கும்?

பப்பு: ஆமா கடிச்சிச்சீஈஈஈஈஈஈ..!! (I shd agree with her...it seems..)

கவி : ஆமா..நான் இருந்தாலும் இல்லாட்டியும் புலி எப்பவுமே என்னை கடிச்சிக் கொதறிக்கிட்டே இருக்கு.. !! :(((((

பப்பு : :)))))))))))))))))

அணில் குட்டி அனிதா : ம்ம்.. நல்ல வேளை, இரண்டு பேரும் சேர்ந்து கேரட் காயகொழம்பு வச்சாங்க அத சொல்லலியே.. ஆயா கேட்டுட்டு, இவிங்க இரண்டு பேரையும் டிவி க்கு சமையல் செய்யற ப்ரோக்ராம் கு அனுப்பலாம் னு சொல்லி... .................ஹி ஹி.. :))))))) உங்களுக்கு இதுக்கு மேல புரிஞ்சிடும்..

பீட்டர் தாத்ஸ் :The world is as many times new as there are children in our lives.



இவர்களும் மனிதர்கள்.......

மனநிலை சரியில்லாமல் வாழ்கையை இழந்தவர்களா? இல்லை வாழ்கையை இழந்ததால் மனநிலை சரியில்லாமல் இருக்கிறார்களா? என்பது விடைதெரியாத கேள்வி. தெருவோருத்தில், கிழிந்த ஆடைகளுடன், சிலருக்கு ஆடைகள் கூட இருக்காது, தான் என்ன செய்கிறோம், எங்கிருக்கிறோம், எப்படி இருக்கிறோம், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மனம் போன போக்கில், கால் போன போக்கில் அல்லது ஏதோ ஒரு இடத்தில் தன்னை இழந்து கிடக்கும் இந்த தெருவோருத்து மனிதர்களும் நம்மில் ஒருவர் தானே.

சக மனிதனை இப்படி தெருவோரங்களில் பார்க்கும் போது நெஞ்சம் சோர்ந்து போகாமல் இருப்பதில்லை. ஹால்டா சிக்னலை (ஒரு வழி பாதையாக்கி விட்டார்கள்), வலதுபுறமாக கடக்கும் போது, அந்த நடைபாதையில் ஒரு மனிதர், தன்னை முழுவதுமாக உணராத நிலையில் கிடந்தார். நல்ல வெயில், ஆடை இல்லை.. ஏதோ ஒன்று ஆடை என்று எங்கோ ஓர் இடத்தில் கிழிசலாக கிடந்தது, ஆனால் அது அவரின் மானத்தை மறைக்கவில்லை என்பதை உணராத நிலையில் கிடந்தார். அவரால் எழுந்து நடக்கமுடியவில்லையா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் படுத்தநிலையில் அவர் கழித்திருந்த சிறுநீர்,மலத்தின் மேலேயே கிடந்தார். தன்னால் தனக்கு எதுவும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. குடிகாரரும் இல்லை. மனநிலை பாதிக்கப்பட்டு, தன்னை இழந்த ஒருவர் என்று புரிந்தது. பக்கத்தில் எதையோ தன் சொத்தாக நினைத்து கட்டி வைத்திருக்கும் ஒரு சின்ன அழுக்கு மூட்டை அதற்கு சாட்சியம்.

இவரை தொலைவில் இருந்தே பார்த்துவிட்ட எனக்கு, அவரை அந்த கோலத்தில் வேடிக்கை பார்த்துவிட்டு சென்றுவிட முடியவில்லை நின்று உதவி செய்யும் அளவிலும் அவர் கிடக்கவில்லை. வேளச்சேரியில் இருந்து இடது புறம் திரும்பி சிறிது நேரத்தில் கவனித்தேன், அந்த போக்குவரத்து நெரிசலில் மேற்சொன்னவற்றை சிந்தித்தவாறு அவரையும் தாண்டிதான் விட்டேன். வெயிலுக்கு ஒரு மேல் சட்டை, தலையை சுற்றி ஹெல்மெட்டிற்காக போட்டுக்கொள்ளும் துப்பட்டா என்று நல்ல பாதுகாப்போடு சென்றுக்கொண்டு இருந்தேன். அவரை கடந்துவிட்டாலும், அப்படியே விட்டுவிட்டு அதற்கு மேல் செல்ல முடியவில்லை. வண்டியை நிறுத்தி, சட்டையை கழட்டிக்கொண்டு அவரை நோக்கி நடந்தேன், அதற்குள் அங்கு கடக்கும் வாகனங்களில் வந்தோர் அத்தனை பேரும் என்னை கவனிக்க ஆரம்பித்தனர், ஆண்கள் சிலர் மெனக்கெட்டு வண்டியை நிறுத்தி,"கிட்ட போகாதீங்க மேடம் ஏதாவது செய்துவிட போறான், கார்ப்பரேஷன் வாரிட்டு போயிடுவான்," "He is not a normal person, leave it, No use of helping him" , அனைவருமே எதற்கு இந்த பெண்ணிற்கு இந்த வேலை என்பதை போன்று பார்த்தார்கள், அவர்கள் அப்படி சொல்ல காரணமாக நான் நினைத்தது, அந்த மனிதர் முழு நிர்வாணமாக இருந்ததே.

பொது இடத்தில், நடைபாதையில், நடுத்தர வயதுடைய ஒரு ஆண் நிர்வாணமாக தன்னை உணராதவராக, மனநிலை பாதிக்கப்பட்டு, மலம் சிறுநீர் தான் கழித்திருக்கிறோம் என்றும் தெரியாமல் அதன் மேலேயே கிடக்கும் போது, அவரிடம் செல்ல யாருமே தயங்குவார்கள், பயப்படுவார்கள் தான். ஒரு பெண்ணாக எனக்கு ரொம்பவே அதிகமாகவே அந்த மனநிலை இருந்தாலும், அவரை அப்படியே விட்டு செல்ல முடியவில்லை. எத்தனை பேர் அந்த இடத்தை கடக்கிறார்கள், எத்தனை பேர் இப்படி அவரை வேடிக்கை பார்ப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு வந்தது. அவரிடம் நெருங்க ரொம்பவே தயக்கம் என்று சொல்வதை விடவும், நிறைய கண்கள் அப்படி ஒரு ஆணை நான் நெருங்குவதை பார்ப்பது வேறு ஒரு விதமான சொல்ல தெரியாத ஒரு மனநிலையை எனக்கு தந்தது, ஆனாலும் என் கால்கள் அவரை நோக்கி நடக்கின்றன. வேறு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் நினைக்காமல் அவருக்கு அந்த சட்டையை போர்த்திவிட்டு வந்துவிட வேண்டும், அவர் இப்படி கிடக்க க்கூடாது, பிறகு தன்னார்வ நிறுவனத்தை தொடர்பு கொண்டு, அவருக்கு உதவி செய்துவிடலாம் என்று நினைத்தேன்.

சிலர் வண்டியை நிறுத்திவிட்டு கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் (இதை எல்லாம் நம் மக்கள் சரியாக செய்துவிடுவார்கள்). அவரிடம் நெருங்கிய நிலையில், அப்போது இடதுபுறத்தில் பெரிய கட்டிடம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள், அதில் இருந்த வாட்ச்மென், என்னை கவனித்து ஓடி வந்து, "கொடும்மா நான் போடறேன், எப்படி கிடக்கிறான் பாரு, நீ கிட்ட போகவேண்டாம்" என்றார். எதுவும் பேசாமல் சட்டையை அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் போர்த்துவார் என்ற நம்பிக்கையில் எல்லோரும் நின்று என்னையே கவனிப்பது பிடிக்காமல் வேகமாக வந்துவிட்டேன். அடுத்தடுத்த நாட்களில் அந்த மனிதர் அங்கு இல்லை என்பது மனதுக்கு இதமாக இருந்தது.

அடையார் டெர்மெனஸ் எதிரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை உள்ளது அதன் அருகில் ஒரு பெண் இப்படித்தான் அமர்ந்திருப்பார், அவரின் கைகளில் எப்போதும் அவரின் சொத்து குவியல் மூட்டை ஒன்று இருக்கும். கிழந்த ஆடை, அழுக்கு, தெருவே கதி. எங்கு சாப்பிடுகிறார், எங்கு தூங்குகிறார் என்று தெரியாது. அலுவலகத்தில் இருக்கும் போது, மழை பெய்தால் என் அருகில் இருக்கும் ஜன்னலை திருந்து வைத்து ரசிக்க முற்படும் நேரங்களில் எல்லாம், இந்த அம்மா எங்கே இருப்பார்கள் என்றே யோசிப்பேன். சில நாட்கள் கவனித்து, Banyan க்கு போன் செய்து அவரை பற்றி சொல்லி அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும் வந்து அழைத்து சென்று விட்டார்கள். அவர்கள் வரும் போது நான் அங்கு இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள், ஆனால் அவர்கள் வரும் போது என்னை அழைக்கவில்லை. எப்படியோ அந்த அம்மாவை பிறகு நான் அங்கு பார்க்கவில்லை. அடுத்து டி.டி.கே சாலையில் ஒருவர். இவருக்காக ஆண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திற்கு போன் செய்து அழைத்தபோது, அவர்கள் அலுவலகத்தில் "ஏம்மா நீயே ஒரு ஆட்டோ வைத்து கொண்டு வந்து விட்டுடேன் " என்றார்கள். தனியாக அதுவும் மனநிலை சரியில்லாத ஒரு ஆணை எப்படி பேசி, தூக்கி, எடுத்து ஆட்டோவில் உட்காரவைத்து அழைத்து செல்வது. என்னால் முடியுமா? என்ற கேள்வி எழும்பி, அவர்களிடம் என் நிலைமையை எடுத்து சொன்னேன். சரி அட்ரஸ் கொடுங்கள், முயற்சி செய்யறோம், ஆனால் அழைத்து செல்வோம் என்று உத்திரவாதம் எல்லாம் தரமுடியாது என்றார்கள். அவர்கள் வெகு நாட்கள் அழைத்து செல்லவில்லை தான். அவர் அந்த இடத்திலேயே தான் இருந்தார்.

சில விஷயங்கள் முயன்றும் சரியாக உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வு எழாமல் இல்லை.

மேற்கண்டது போன்ற சக மனிதனை நீங்களும் கண்டிப்பாக நம் தெருக்களில் பார்க்கத்தான் செய்வீர்கள், அவர்களை ஒதுக்கி செல்லாமல், தயவுசெய்து அவர்களை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொலைபேசியில் அழைத்து சொல்லுங்கள். சில வருடங்கள் முன்பே மெயிலின் மூலம் எல்லோருக்கும் இதற்கான தொடர்பு தொலைபேசி நம்பர்கள் அனுப்பி இருந்தேன். உங்களின் ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி அழைப்புகள் ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும். தயவு செய்யுங்கள்....

For Men

Anbagam
Ph : 044-2501 5165
http://www.anbaham.org/

Scarf
44 - 2615 3971
44 - 2615 1
073
http://www.scarfindia.org

For Women

18/55, Nelson Manickam Rd
Chennai, Chennai, Tamil Nadu 600094
044 42233666
www.thebanyan.org

இரு தினங்களுக்கு முன் ஒருவரை பார்க்க நேர்ந்தது. இப்படிப்பட்டவர்களை பார்க்காமல் இருக்க போவதும் இல்லை... :((((((((

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்ம்..... மக்கா அம்மணி ய என்ன செய்யறது சென்னை யில் மட்டும் தான் இப்படி மக்கள் இருக்காங்கன்னு அவங்க கூப்பிடற 2 நம்பரை மட்டும் கொடுத்துட்டுட்டாங்க.. நம்ம கவி க்கு அவ்வளவு தான் அறிவு விடுங்க விடுங்க..!!

நீங்க என்ன செய்வீங்களாம், கூகுல் ல "Rehabitation Centre, Chennai" அப்படின்னு டைப் செய்து சென்னை க்கு பதிலா நீங்க எங்க இருக்கீங்களோ அந்த ஊர் பேரை போட்டு தேடுங்க. .உங்க ஊர்ல இருக்க சென்டர் நம்பர் எல்லாம் கிடைக்கும்.. அதுக்கு போனை போடுங்க... சரியா...

பீட்டர்தாத்ஸ் : “Never give succor to the mentally ill; it is a bottomless pit.” - Is it True?

ஏன் என்ற கேள்வி ?

சிறு வயதிலிருந்து மட்டும் இல்லை இப்பவும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது...... நானே அவற்றிற்கு விடை தேடி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டாலும் இன்னமும் சில கேள்விகள் தொங்கலில் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் பதில் சொல்லுங்களேன்..

1. * இரவில் நிலவு காயும் நேரங்களில், நாம் வானத்தை பார்த்து நடக்கும் போது, நிலவும் நம்முடனேயே வருவது போன்று இருக்கும் அது ஏன்? இது கண் பார்வை சம்பந்தப்பட்டதா? இல்லை நாம் அப்படி நம்முடன் வருவதாக நினைத்துக்கொள்கிறோமா ?

* அப்பாவிடம் சின்ன பிள்ளையாக இருக்கும் போது கேட்டது அப்பாவும் பதில் சொன்னார் தான் , ஆனால் அப்போது புரிந்த மாதிரி இருந்தது..இப்போது புரியவில்லை.

2. எல்லோர் வீடுகளிலும் அப்பா வின் ' அம்மா அப்பா புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள், ஆனால் அம்மாவின் ,அம்மா அப்பா போட்டோவை அவர்களின் நினைவாக ஏன் வைப்பது இல்லை.? ***

3. எல்லா உயிரினங்களும் தண்ணீரில் போட்டவுடன் நீச்சல் (கற்றுக்கொள்ளாமல் அப்படியே நீந்து கின்றன) அடிக்கின்றன. ஏன் மனிதனால் மட்டும் முடியவில்லை. ? **
** என்னுடைய அப்பா இதற்கு ஒரு பிறந்த கோழியை தண்ணீரில் தூக்கி போட்டு அது நீச்சல் அடிப்பதை காண்பித்தார். மனிதன் மட்டுமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே தவிர்த்து ஏன் என்று சொல்லவில்லை? ! ஒருவேளை அப்போது நான் ஏன் என்ற கேள்வியை அப்பாவிடம் கேட்க மறந்து கோழி நீச்சல் அடிப்பதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன் எனலாம். :) )

4. பாலூட்டும் உயிரினங்கள் எல்லாமே குட்டி போட்டவுடன், தானே சென்று யாரும் சொல்லி த்தராமல் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் சொல்லி தரவேண்டியுள்ளது, ஏன் பிறந்த குழந்தை தானாக இதை செய்வதில்லை?

5. காட்டுக்கு ராஜா வான சிங்கம், நிஜத்தில் ஒரு காட்டெருமையோ, யானையோ அதனருகில் வந்து மூச்சு விட்டால் கூட ஏன் பயந்து ஓடுகிறது? இப்படி ஒரு கோழையான சிங்கத்தை நாம் ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்.? (இதற்கு 'ஹே ராம்' பதில் சொல்வதாக சொல்லி சொல்லவேயில்லை :( )

6. புலிக்கு மரம் ஏற தெரியும்.. ஆனால் ஏன் மரம் ஏறுவதில்லை?

7. பெற்றோர் எல்லோரும் ஏன் பிள்ளை வீட்டில் இருப்பதை/இறப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.? பெண் வீட்டில் அதாவது மாப்பிள்ளை வீட்டில் இருப்பதை ஏன் கெளரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்? ***

8. பெண்ணை விட ஆணுக்கு தசைகள் அதிகம் இருப்பதால் தான் அவன் பெண்ணை விட உடல் வலிமை அதிகமானவனாக இருக்கிறான். சரியா?

9. தென் இந்திய கோயில்களின் கருவறை மிகவும் குறுகிய, உயரம் குறைந்த வாயில் கொண்ட வெளிச்சம் இல்லாத இருட்டறைகளாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?

10. மருத்துவம் படிப்பவர்கள், (ஆண்/பெண்) பாலியல் உறவை எளிதாக வைத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு பெரிய பொருட்டாக நினைப்பதில்லை. அதற்கு அவர்களின் படிப்பு சார்ந்த அறிவும், பாதுகாப்பு முறைகளும் தெரிந்திருப்பது காரணம். உண்மையா? *** (தனிநபர் சம்பந்தப்பட்டது என்றாலும் இந்த கேள்வி எங்கோ எதையோ கேட்டு எழுந்தது)

11. முகம் பார்க்கும் கண்ணாடியில் சிலரின் முகம் கோணலாக ஏன் தெரிகிறது. அதாவது அவருக்கு அவர் முகம் நேராக அழகாக தான் தெரியும், பக்கத்திலிருந்து பார்க்கும் எனக்கு கோணலாக தெரியும். அவரிடம் என் முகத்தை அவர் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேட்டால் சரியாக த்தான் தெரிகிறது என்பார். இதில் கண்ணாடியில் பிரச்சனையா இல்லை... என் கண்களில் பிரச்சனையா.? இல்லை அவர் முகமே கோணல் முகம் தானா?

12. காண்டாமிருகம் ஒரு சைவ விலங்கு. ஆனால் இறந்து கிடக்கும் மிருகங்களின் மாமிசங்களை தின்ன முயற்சி செய்கிறது ஏன் என்பது விளங்கவில்லை. அதனுடைய பற்கள் அவற்றிற்க்கு உகந்தது அல்ல என்றே நினைக்கிறேன். ஒரு வேளை பற்கள் உகந்ததாக இருந்தால், அசைவமாக ஆக இருந்து இருக்குமோ?

13. நம் மக்கள் முடிவே இல்லாத/இல்லாமல் செய்கிற மெகா சீரியல் எடுப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

14. தேங்காய்-கொழுப்பு என்று உணவில் கட்டுப்படுத்த சொல்லும் போது, எப்படி கேரளாவில் தேங்காய் எண்ணெய் யில் சமைத்த உணவும், தேங்காய் எல்லாவற்றலும் சேர்த்த உணவை வாழ்க்கை முழுதும் சாப்பிடுகிறார்கள், அவர்கள் ஆரோக்கியமாக இல்லையா?

15. மீன் தண்ணீருக்குள் எப்பவும் நீந்திக்கொண்டே இருக்கிறதே அதன் Fins வலிக்காதா?

அணில் குட்டி அனிதா : கவி நீங்க கூட எப்படி எப்போதும் பேசிக்கிட்டே இருக்கீங்கன்னு உங்க வீட்டில இருக்கவங்க கேட்டுக்கிட்டே இருக்காங்களே அதுக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

பீட்டர் தாத்ஸ் : The question isn't who is going to let me; it's who is going to stop me.

*** இந்த கேள்விகளை தனிப்பட்ட முறையில் யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம், பொதுவாக எனக்கு தோன்றிய கேள்விகள்.


ஏதோ சொல்ல நினைக்கிறேன்...

மெளனம்

உன்
பெயரே
தலைப்பானால்...


சிகிரெட்

என்
முகத்தை
எட்டு கோணலாக்கும்
எளிய
சாதனம் !!

உழைப்பு

வியர்வையும்
மணக்கும்..!!

அழுகை

அழுகையும்
சுகம்
உன் மார்பில்
முகம் புதைக்கும் போது ..........

பட்டம்


சுதந்திரமாக
பறக்கிறாய் தான் !!
எப்போதும்
உன்
சுதந்திரம்
யாரோ ஒருவரின் கையில்.........

கீ போர்டு

உனையன்றி
யாரறிவார்
எனை :)

காதல்

முட்டாள்களின் மூச்சு !
அறிவாளிகளின் யதார்த்தம் !
அனைவரும் கடந்து போகும் பாதை !
கானல் நீர் !
கிடைத்துவிட்டால் பைத்தியம் !
கவிதைகள் என்ற கிறுக்கல்கள் !
கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போகும் !!

திருமணம்

வாழ்க்கையை
போல
ஒருமுறை வருவது....

கடவுள்

நம்முள்
அன்பிருப்பதால்
நாமும் கடவுள் !!


நட்பு

என்
உயிரை குடிக்கும்
மருந்து!!


சொந்தம்

தனி மரம்
தோப்பாகாது ...!!
பழமொழிக்காக
தேவை...!!

சுதந்திரம்

தேவைக்கு
தேவை
எப்போதும்
தேவையில்லை


அழகு

உன்
நினைவுகளில்
எப்போதும்
நான்
அழகு !! :)

பூக்கள்

கவிதா'க்கள் !!
பூக்களை பறிக்காதீர்கள்!!

கனவு

துரத்த துரத்த
ஓடுவேன்

ஓடி ஓடி
கலைப்பேன்

உயரத்திலிருந்து
பாதாலத்திற்கு
குதிப்பேன்

தண்ணீரில்
மூழ்கி
மூச்சி முட்டி
தவிப்பேன்...

கனவு
பயம்..

இதுவும் காதலாம்......

நல்வாழ்த்துக்குள்
பல சொல்லி
நலம் வாழ

வாழ்த்த இயலாத
வயிற்றெரிச்சலை
வார்த்தைகளால் வாரி
இறைத்து ........

தன் நலம்
மட்டுமே
கண்ட/ கொண்ட
சுயநல பிதற்றல்களோடு....

புனித பிம்பங்களாக
காட்டிக்கொள்ளும்
சிலருக்கு
அது தான்-
"காதல்" என்ற "கருமாந்திரமோ?????

திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு,

உன்னை போல் ஒருவன்... Excellent !! படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் நினைத்தது "இந்த கலைஞனின் வயது எப்படியாவது இன்னும் சில வருடங்கள் பின்னோக்கி சென்று விடக்கூடாதா? இன்னமும் எத்தனை தரமான படங்கள் கிடைக்கும்"

இந்த கடிதம் படத்தினை பற்றிய விமர்சனம் இல்லை, நிறையவே குறைகள் உள்ளன, சில விஷயங்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் உணராதவராக நீங்கள் இருக்க முடியாது என்பதில் ஏனோ எனக்கு நம்பிக்கை, அதனால் விமர்சனமாக இதை எழுதவில்லை, விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் புத்திசாலியும் இல்லை.

உங்களின் படங்கள் சில பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியில் வரும் போது படத்தில் சொல்லப்பட்ட கருத்து, படம் எடுக்கப்பட்ட விதம், உங்களின் ஆழ்ந்த நடிப்பு, சின்ன சின்ன விஷயங்களில் உங்களின் கவனம்,ஈடுபாடு, சிந்திக்க வைக்கும் வசனங்கள், கதாநாயகிகளுக்கு நீங்கள் கொடுக்கும் முத்தம், அவர்களை பின்புறமாக வளைத்து எப்படி எளிதாக தூக்குகிறீர்கள், ரொம்பவும் நுட்பமாக கவனித்து செய்திருக்கும் உங்களின் உடல் மொழியும், முக பாவனைகள் என்று எல்லாவற்றையும் அசைப்போட்டு வருவதால் தலை பாரமாக ஆகுவதை தடுக்க முடியாது,... அப்படி அதிகமாக பாதித்த படம் மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், இப்போது உன்னை போல் ஒருவன்.

ஒரு(இரண்டு) கேள்வி உங்களிடம்....

மகாநதி - அடிப்பவனை திருப்பி அடி

ஹே ராம் - இன்னுமொரு "அன்பே சிவம்" என்று வைத்துக்கொள்ளலாமா?


அன்பே சிவம்... - அன்பே சிவம் :)

உன்னை போல் ஒருவன் - தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியும்.


புரியவில்லை.... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

அன்பே சிவமா?
தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியுமா?

உங்களின் intelligence, patriotic thought, society consciousness & responsiveness ஆகியவற்றை கவனத்துடனும், ஆர்வத்துடனும் பார்க்கும் ஒரு ரசிகை. இந்த படத்தை உங்களின் மற்ற சில படங்களோடு ஏனோ ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இன்னமும் சிறந்த படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும்

A Common Woman & ஒரு (தீவிரமில்லாத) ரசிகை :)

நாதம் என் ஜீவனே....

One of my favorite. .from the date it introduced… பள்ளி, கல்லூரி, அலுவலகம் எல்லா இடங்களிலும் அதிகமாக ஜானகி அம்மா பாடல்கள் தான் பாடியிருக்கிறேன்.

படம் : காதல் ஓவியம்
இசை : இசைஞானி

Get this widget | Track details | eSnips Social DNA


தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ... பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ...பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

.

சிபி, உண்மைத்தமிழன், கவிதா - யாரு லூசு?

கவிதா : சிபி... உண்மைத்தமிழன் "நான் ஒரு லூசு" ன்னு உங்க கிட்ட சொன்னாறா?

சிபி : சொல்லியிருக்கலாம் நினைவில்லை..

கவிதா : ஆமா அவரு என்னை லூசு ன்னு சொல்லி இருக்காரு அதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல? :(

சிபி : எல்லாருமே சொல்றத தானே இவரும் சொல்றாருன்னு நான் கேர் பண்ணாம விட்டு இருக்கலாம்...

கவிதா : :((

சிபி : ஆனா அது ஒரு பெரிய லூசு...

கவிதா : ஹை.. அப்ப உங்கள மாதிரியா?

சிபி : வேல வெட்டிய பாக்காம .. அவங்க எல்லாரும் எழுதற பதிவ படிக்கற நாம எல்லாருமே லூசு தான்..

கவிதா : அட ஆமா இல்ல????

சிபி : ஆமாவா இல்லையா?

கவிதா : ஆமா.. ..எல்லாருமே லூசுங்க தான்.. !!! :(((((((((((((


அணில் குட்டி அனிதா : வந்த வேலை முடிஞ்சிது.. .... நமக்கு இன்னைக்கு பூரா பொழுது போகும்.. :))))))))) அப்ப அப்படி ஓரமா ஒக்காந்து படம் பாக்காலாம் வாங்க...

மாலை நேரம் மழை தூறும் காலம்....


இந்த பாடல் கேட்டவுடன் பிடித்து போனது.. காரணம் பின்னனி இசையின் கிட்டார்.. அப்பா நன்றாக கிட்டார் வாசிப்பார். ஒரு சிகப்பு கலர் எலக்ட்ரிக் கிட்டார் வைத்து இருந்தார்,என்னவோ இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் அப்பாவே வாசிப்பதாக கற்பனை செய்து க்கொள்வேன் :)

என் குரலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பேஸ். ரொம்பவும் பிடித்ததால் பாடியிருக்கிறேன்.

Malai neram.mp3


மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே

ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..

உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என

ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..

ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)

.

அடமும் அழுகையும்...எளிதான விஷயமா என்ன?

பொதுவாக யாராவது அழுதாலோ, அடம் பிடித்தாலோ நமக்கு பார்க்க பரிதாபமாக இருக்கும். ஆனால் என் விஷயத்தில் எதிராளி டெர்ரராக மாறி ஒன்று என்னை தூக்கி போட்டு மிதிப்பார்கள் இல்லையென்றால் காமெடி பீஸ் ன்னு தூரமா இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு போயிக்கிட்டே இருப்பார்கள். இந்த இரண்டு ரிசல்ட் 'ஐ எதிராளியிடம் இருந்து வரவைப்பது அப்படி ஒன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை என்பதை நீங்கள் எல்லாம் இந்த பதிவை படித்து முடிக்கும் போது புரிந்துக்கொள்வீர்கள்.

அடம் பிடிப்பதற்கென்று சில அடிப்படை தகுதிகள் இருக்கு, அது எல்லாருக்கும் இருப்பதில்லை.. அது என்ன அப்படி தகுதின்னு நீங்க ரொம்ப ஆர்வத்தோட கேட்கறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது தான்.. உங்க ஆர்வத்தை மதித்து, நானும் நீங்க எங்க இருந்தாலும் அது வரைக்கும் சவுண்டு விட்டு சொல்றேன் கேட்டுக்கோங்க......

முதல் ரவுண்டு தகுதி :- இங்கே..ரவுண்டு என்ற வார்த்தையை யாரும் தவறாக அர்த்தம் செய்துக்கப்பிடாது, ரவுண்டு என்றால் சுற்று.

1. சூடு சுரணை போன்றவை பற்றிய கவலை


ஹி ஹி.. இதுக்கு எல்லாம் கவலை படறவங்க எல்லாம் அடம் பிடிக்கறதை பத்தி நினைச்சி கூட பார்க்கக்கூடாது, அவங்க எல்ல்லாம் முதல் சுற்றுல வெளியில போயிடுங்க.. இவை எல்லாம் இல்லாதவங்க மட்டும் மேற்க்கொண்டு படிக்கலாம்.

குறிப்பாக இதை எதற்கு சொல்றேனா... நாம அடம் பிடிக்கறதை பாத்து எதிராளி ரொம்பவே கோவப்பட்டு கேவலமான* ஆயுதங்களால் உங்களை தாக்கக்கூடம், ஆனால் நீங்கள் மானம் மரியாதை சூடு சுரணை எதுவும் இல்லாதவராக இருந்தால் மட்டுமே அவற்றை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியும். அப்புறம் நாலு பேரு நம்மை வேடிக்கை பாக்கறங்களே ன்னு கூச்சம் நாச்சம் எதுவும் எல்லாம் எப்பவும் இருக்கப்பிடாது. பெருமையா நினைக்கனும்.

2. அடுத்து, அடம் பிடிக்க நல்லா ப்ளான் பண்ணனும். எப்படிப்பட்ட எதிர்வினைகள் உங்கள் மேல் தொடுக்கப்பட்டாலும் அதை தாங்கக்கூடிய உடல் வலிமையும் மனவலிமையும் உங்க க்கிட்ட கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னா நீங்க அடம் பிடிப்பதை பார்த்து,எதிராளிக்கு கோவம் வந்து அவர்கள் டெர்ராக மாறி....... ஓஒடீஈஈஈ வந்து உங்களை.........

=>ஒரே மிதி மிதிக்கலாம்,
=>திடீரென்று தூக்கி போட்டு கூட மிதிக்கலாம்,
=>பெரிய பிரம்பு எடுத்துவந்து எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு முடியுமோ அவ்வளவு அடிக்கலாம்.
=>துடைப்பம், செருப்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்த நேரிடலாம்
=>ஏன் ரொம்பவே டெரர்ராகி உலக்கை, கத்தி, அறிவாள்மனை, சுத்தி, மன்வெட்டி, பாண்டு, செங்கல் போன்ற ஆயுதங்களை எடுத்து வன்முறையில் கூட ஈடுபடலாம்

ஆனால் எப்படிப்பட்ட வன்முறை உங்கள் மேல் அவிழ்த்து விடப்பட்டாலும், உங்களின் மனமும் உடலும் சோர்ந்து போகக்கூடாது. போருக்கு செல்லும் வீரம் உங்களிடம் இருக்க வேண்டும். அடம் பிடிப்பதில் இருந்து எள் அளவும் பின்வாங்கவே கூடாது.

அடுத்து, எவ்வளவு அடித்தாலும், வலிக்கிறதோ வலிக்கலையோ அடிவாங்கிட்டே அழதுக்கிட்டே இருக்கனும்.. அழறதும் சும்மா எல்லாம் அழக்கூடாது கண்டிப்பாக உங்க வீட்டை சுத்தி ஒரு, ஒரு கிலோ மீட்டர் அளவு சத்தம் ரீச் ஆகற அளவு கத்தி அழனும்,. இப்படி சத்தம் போட்டு கத்தி அழறதால *தொண்டை கொஞ்சம் கிழியற ஸ்டேஜ் க்கு போகும்..ஆனா முன்ன சொன்ன மாதிரி எந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் முன் வைத்த காலை மட்டும் பின் வைக்கவே கூடாது... நல்லா இன்னும் சத்தம் போட்டு கத்தி கத்தி அழனும்.. *தொண்டை புண் ஆறுவதற்கு தேவையான டிப்ஸ் கடைசியில் கொடுக்கப்படும்.

அப்படி சத்தமாக அழறதோட பலன் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு தெரியும் பாருங்க....! இந்த அழுகை சத்தம் கேட்டு உங்க வீட்டில் மூளை முடுக்கில் இருக்கும் பெருசு, சிறுசு, மீடியம் பர்சனாலிட்டிங்க எல்லாம் வருவாங்க. அது மட்டும் இல்லை அக்கம் பக்கம் வீட்டில் இருக்கவங்க, பக்கத்து தெரு வரைக்கும் சத்தம் ரீச் ஆச்சின்னா அங்க இருக்கவங்க எல்லாரும் என்னவோ ஏதோ ன்னு பதறி அடிச்சிகிட்டு ஓடி வருவாங்க.. சரி சரி... உங்க கவனம் இங்கத்தான் இருக்கனும், கூட்டம் எல்லாம் நல்லா கூடிடுத்தான்னு அழுதுக்கிட்டே நைஸ் ஸா சுத்தி பாத்துக்கோங்க.. இப்பத்தான் பர்ஃபாமன்ஸ் ஸை நல்லா ஆரம்பிக்கனும். "

"அய்ய்யாயோ அய்யோ...யம்மாம்ம்மாஆ.ஆஅ யம்மா யம்மாஆஅ....என்னை இப்படி அடிச்சி அடிச்சி இந்த வீட்டில கொல்றாங்களே இதை யாருமே கேக்கவே மாட்டீங்களா? ? அதுவும் ஒரு பொண்ணு குழந்தை ன்னு கூட பாக்காம அடிக்கறாங்களே....இதை இவ்ளோ பேரு பாக்கறீங்களே கேக்கவே மாட்டீங்களா? எவ்வ்வ்வ்ளோஓஓஓஓஓஒ வலிக்குது தெரியுமா... ம்ம்ம்..:( .தாங்கவே முடியல தெரியும்மா....:( ம்ம்ம்ம்..ஆமா பாருங்க;ன்னு " ன்னு அடிச்ச இடம் ஏதாச்சும் சிவந்து பழுத்து போயி இருந்தா காட்டி ஒரு பரிதாப அலைய உருவாக்கனும். (இந்த லோகேஷன் எல்லாம் நீங்க எல்லார் எதிரேவும் தேடி எடுக்கக்கூடாது, அடிவிழும் போதே எங்க எங்க பன்னு மாதிரி உப்பி இருக்குன்னு நோட் செய்து வச்சிக்கிட்டு இன்ஸ்டன்ட் டா காட்டனும்) ..

பெருசுங்க தான் முதல்ல ஆரம்பிக்கும்.. "ஏன் சின்ன புள்ளைய போட்டு இப்படி அடிக்கறீங்க... பாவங்க எப்படி கன்னி போய் இருக்கு பாருங்கன்னு" நம்மளை அடிச்சி துவைக்கற நல்லவங்களுக்கு அட்வைஸ் செய்வாங்க.. .இந்த சந்தர்ப்பத்தை விடவே கூடாது..

ஆனா நீங்க என்ன பேசினாலும்.. அழுகையை மட்டும் சைட் ல மெயின்டெயின் செய்துக்கிட்டே இருக்கனும், கூட்டத்துல யாரும் பேசறதை பராக்கு பார்த்து பர்ஃபாமென்ஸை கோட்டை விட்டுடக்கூடாது. அழுதுக்கிட்டே பேசறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்ங்க, செய்ய செய்ய பழகிடும். இப்ப உடனே.. " நல்லா கேளுங்க தாத்தா.. இப்படித்தான் இந்த வீட்டுல அநியாயம் நடக்குது, எது கேட்டாலும் என்ன செய்தாலும் அடிச்சே என்னை கொல்றாங்க....". ன்னு சொல்லும் போதே..நம்மை அடிக்கறவங்க இன்னும் டெரரா ஆகி, இன்னும் இரண்டு உதை கண்டிப்பா கொடுப்பாங்க.. (it is human nature u know) ... ஆனாலும் நாம் பரிதாபம் சம்பாதிக்கறதை விடவேப்பிடாது, அடிக்கறவங்களையும் அழுதுக்கிட்டே திட்டனும்..

"நீ நல்லா இருப்பியா.. சின்ன புள்ளய இவ்வளாம் பெரிய பிரம்பு வச்சி அடிக்கறயே.. உனக்கு மனசாட்சியே இல்லையா... நீ அடிக்கறதை கேக்க யாரும் இல்லைன்னு நினைச்சியா. .பாரு பாரு எவ்வளவு பேரு இருக்காங்க.." ன்னு அழுதுக்கிட்டே பரிதாபமாக கூட்டத்தை பாத்து ஒரு லுக் விடனும்.. ."உன் கிட்ட அடிவாங்கி வாங்கியே நான் ஒரு நாள் செத்து போயிடுவேன் போல இருக்கே.." ன்னு டயலாக் டெலிவரி செய்யனும்....

3. இதுல முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம் பொஷிஷன்..

அடம் பிடிக்க ஆரம்பிக்க முன்ன, வீட்டில் எந்த இடத்தில் உட்காரனும்னு இடத்தை முதலில் சூஸ் செய்துக்கனும். கை, காலை நல்லா உதச்சி , உருண்டு பிரண்டு அழறமாதிரி இடம் தாராளமாக இருக்கனும், அடுத்து நாம் போடற சத்தம் , வீடு முழுக்க கேட்கறது இல்லாமல் அக்கம் பக்கம் வீடு, தெரு வெல்லாம் ரீச் ஆகனும். .எல்லாத்தைவிடவும் ரொம்பவும் முக்கியம், நம்ம பர்ஃபாமன்ஸ் ஓவர் ஆகி, ஒரு டெரர் க்கு பதிலா வீட்டில் இருக்க எல்லாருமே டெரரா மாறி ஒன்றாக சேர்ந்து கும்ம வந்துவிட்டால்....???!! .அப்படி நடக்கும் பட்சத்தில்....... எழுந்து வேகமாக வீட்டை விட்டு ஓட வசதியாக இருக்கனும். இது தான் ரொம்ப முக்கியம். எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்கு இல்ல.. இவங்க பாட்டுக்கும் மானவாரிக்கு நம்மை அடிச்சிக்கிட்டே இருந்தா, நம்ம உடம்பும் தாங்கனும் இல்லையா... அதுவும் கூட்டமா சேர்ந்து கும்மனும்னு முடிவு செய்த பிறகு நாம அங்க இருக்கலாமா.. கூடவே கூடாது..... அதனால் ஒரு ஸ்டேஜுக்கு மேல .. ஒரேஏஏ ஓட்டம் .. யார் துரத்தினாலும் பிடிக்கமுடியாத ஸ்பீட் ல ஓடிடனும். இந்த ஓட்ட பயற்சி எல்லாம் நீங்க முன்னமே கத்துக்கிட்டு இருக்கனும்.

4. வீட்டை விட்டு ஓடி விட்டால் வருவது எப்படி : இதுவும் ஒரு தனி கலை. ஓட்டாமா ஓடி நான் எப்பவும் போய் தஞ்சம் புகும் இடம் என் அத்தை வீடு தான். அங்க உள்ளே போனவுடன், அத்தைக்கு இங்க என்ன நடந்தது தெரியாதவாறு (தெரிந்தால் அவங்க தனியா அடிக்க ஆரம்பிப்பாங்க), சிரித்த முகத்தோடு அத்தை பிள்ளைகளுடன் நன்றாக விளையாடிவிட்டு, அங்கேயே நல்லா கொட்டிக்கிட்டு, உடம்பு வலி போக அங்கேயே படுத்து நல்லா தூங்கிட்டு, பொறுமையாக வருவேன். வரும்போது, மெதுவாக வீட்டில் யார் யார் எந்த பொஷிஷனில் இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு சத்தமே இல்லாமல் நைஸ் ஸாக பெருசுகள் எங்க இருக்குன்னு பாத்து செட்டில் ஆயிடுவேன். அவங்க தான் நம்மை மேற்க்கொண்டு காப்பாத்துவார்கள்.

விழு புண்களை சரி செய்ய டிப்ஸ் :- எப்படியோ இப்படியே கண்டிநீயூ செய்து , நினைத்ததை சாதித்த பிறகு - வீட்டுல நம் மேல ஓவரா பாசத்தோட இருக்க ஒரு பெருசா பாத்து செட்டில் ஆகிடனும். தாத்தா/ஆயா ஈஸ் பெஸ்டு. அவங்க கிட்ட வீங்கிய இடங்கள், தொண்டை புண் இவற்றை விக்கி விக்கி...விக்கி அழுதுக்கிட்டே காட்டனும். அவங்களும் பரிதாபப்பட்டு தேங்காய் மரக்கொடி எண்ணெய், அய்யோடக்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தேய்த்து நம் விழுபுண் களை ஆற்றி அடுத்த போருக்கு நம்மை தயார் படுத்துவார்கள். தொண்டை புண் னுக்கு பால் குடிக்கனும் பிறகு மனத்தக்காளி பழத்தை சாப்பிடனும், மனத்தக்காளி இளை சாறு, அதில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

இது வரை இப்படி அடம் பிடித்து என்ன சாதித்தேன் னு கேட்கறீங்களா? நல்ல கேள்வி.நிறையவே இருக்கு.. உங்களுக்காக சில.. :)

1.ஒரு முறை சினிமா வுக்கு அழைத்து போக சொல்லி கேட்டு.. ஆயா முடியாது என்ற சொன்னவுடன், செருப்பு விடும் இடத்தில் அழ ஆரம்பித்தது தான், தொடர்ந்து ஒரு 4.5 மணி நேரம் உருண்டு பிரண்டு, கை கால் எல்லாம் உதைத்து அழுதேன்..(அதை எல்லாம் சரியா செய்துவிடுவேன்) நான் அழுவதை பார்த்து தாத்தாவிற்கு நெஞ்சு வலி வந்துவிட, "அம்மா அழாதம்மா நீ அழுதா தாத்தாவால தாங்க முடியலம்மா.."ன்னு சொல்ல...அதை சாதகமாக பயன்படுத்தி அவரிடமே 4 ரூ வசூல் செய்துவிட்டு போனா போகுது என்று அடங்கினேன். ஆனா சினிமா அழைத்து செல்ல யாரும் இல்லாததால் பணம் மட்டும் கொடுத்துவிட்டார்கள். அடியா? இல்ல கிடைக்கல.. அடிவாங்கினது எல்லாம் தனியா பதிவாக போட்டு இருக்கோம் இல்ல...

2. மற்றொரு நாள், மதியம் 12 மணிக்கெல்லாம் எனக்கு பசி எடுத்துவிட்டது. ஆயா அப்போது தான் உலை கொதித்து அரிசி போட்டார்கள், அதை நானும் பார்த்தேன். பசியை அடக்க முடியவில்லை, 10 நிமிடம் இரும்மா வெந்துடும் னு சொல்லியும் நான் கேட்கவில்லை. உடனே உட்கார்ந்து கை காலை உதைத்து அழ ஆரம்பித்தேன்.. "அய்யோ வயறு எல்லாம்...பசிக்குதே. .இந்த வீட்டில் பசிக்கு க்கூட சாப்பாடு போட மாட்டேங்கறாங்களே, இப்படி அழுது அழுது கேக்க வேண்டியதா இருக்கே..என்னால பசிய தாங்கவே முடியலையேன்னு....இதை யாருமே கேக்க மாட்டீங்களா... "ன்னு அழ ஆரம்பிச்சது தான்.. .ஆயாவுக்கு நிஜமா என்ன செய்யறதுன்னு தெரியாமல், கொதிக்கற உலையில் இருந்து வேகாத அரிசியை அப்படியே ஒரு தட்டில் போட்டு உப்பு சேர்த்து, "திண்ணு தொல ஆன உன் வாய மட்டும் மூடு ன்னு கொடுத்துட்டு போயிட்டாங்க.. " நானும் சரி போனபோகுதுன்னு அந்த வேகாத (அவ்வ்வ்வ்வ் .. ) அரிசியை உட்கார்ந்து சாப்பிட்ட்டேன்.... :(

3. லேட்டஸ்ட் : பாத்ரூம் கதவை மூட போகும் போது என்னுடைய இடது கை கட்டை விரல் கதவிடுக்கில் இருப்பதை கவனிக்காமல் வலது கையால் கதவை நன்றாக இழுத்து சாத்திவிட்டேன். கட்டைவிரல் சூப்ப்ராக நசுங்கி....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா என்னா வலி.. வலி தாங்க முடியாமல் ஓஓஒ வென்று அழகை மட்டும் இல்லை.. நிஜமாக கால் பூமியில் நிற்காமல் குதித்து குதித்து அழுகை. அவ்வளவு வலி. கத்தின கத்தில் கூட்டம் சேர்ந்துவிட்து தான். என் மகனுக்கு மட்டும் ஒரே சிரிப்பு... "ஐ..கைய நசுக்கிகிட்டயா?... எங்க காட்டு ...ஐ..உன் கட்டை விரல் இப்பத்தாம்மா ரொம்ப அழகா இருக்கு்.!! ஆமா நீயே தானே நசுக்கிகிட்டே எதுக்கு இப்படி ஊரையே தூக்கற மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற. . வாயை மூடி சத்தம் இல்லாமல் அழு" என்றான். அவன் சொன்னதற்காகவே.."எனக்கு எவ்வளவு வலிக்குது, நீ எப்படி என்னை சத்தம் போடாமல் அழ சொல்ற" ன்னு இன்னும் கத்தி அழ ஆரம்பித்தேன்" புள்ள பயந்து போய்.. "அய்யோ யம்மா தெரியாம சொல்லிட்டேன்.. நீ கத்தாத... " ன்னு என் வாயை அடைக்க. வர... "என் வாயை அடைச்சா இன்னும் கத்துவேன்" னு இன்னும் சத்தம் போட்டு கத்த.... அவ்வ்வ்வ்வ்.. கடைசியில என் புள்ள ..சரி எப்படியோ அழுது தொலச்சிக்கோஒ.... ன்னு விட்டுட்டு போயிட்டான்.....ம்ம்ம் அது!!

அணில் குட்டி அனிதா : தூஊஊஊஊ..!!!

பீட்டர் தாத்ஸ் : “I have done that," says my memory. "I cannot have done that" -- says my pride, and remains adamant. At last -- memory yields.”