க்ளிக்..க்ளிக்..க்ளிக்..

 கட்டாக் முட்டாக்னு ஒரே சத்தம், என்னானு திரும்பி பார்த்தால், இரண்டு எருமைமாடுகள் கொம்புகள் உரச சண்டைப்போட்டுக்கிட்டு இருந்துச்சி ..

 என் கணவரின் அலுவலகத்தில் முன் அறையில் வைக்கப்பட்டிருந்தது.
 சாக்லெட் பேப்பர் பொம்மை.

 ரயிலில் வேற்கடலை விற்று வந்த சிறுவன் வைத்திருந்தது.  இது 5 ரூ.
 இது 2 ரூ.
 பூச்சிமருந்து தெளித்திருக்கும் கத்திரிக்காய் செடி , பின்னால் இருப்பது மரவள்ளிக்கிழங்கு.
 கிராமத்து சச்சின் 'கள்.
 'பாட் குல்ஃபி' வாங்கி, குல்ஃபியை முழுங்கிட்டு, சட்டியில் டிசைன் செய்தது.
 ரயில் சக்கரத்திற்கு இப்படி முட்டுக்கொடுப்பதை முதல் முறையாக பார்க்கிறேன். இதன் பெயர் தெரியல. ரயிலுக்கு இதன் தேவை அவசியம் தானா என்றும் புரியல. படத்தை க்ளிக்கி பார்க்கவும்..

அணில்குட்டி : கையில ஒரு ஆதி காலத்து மொக்க மொபைல்  ஃபோனும், ஒரு டிஜி கேமும் வச்சிக்கிட்டு அம்மணி போடற சீன் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல..

பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes.  But when you photograph people in B&W, you photograph their souls!  ~Ted Grant

வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #2

முந்தைய பதிவு => வெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாதம் #1 சென்ற பதிவின் தொடர்ச்சி :

கவிதா :    +Dyno Buoy  அமெரிக்க பெற்றோர், அமெரிக்க கலாசாரத்திற்கு சற்று லேட்டாத்தான் வராங்கங்கறதுக்கு என்ன காரணம் ?

Dyno Buoy  :  நான் ஒரு மாதத்திற்கு முன் கனடா சென்றிருந்தபோது என் கனேடிய நண்பர்களுடன் அதிக நேரம் இதைப்பற்றி விவாதித்தோம். பல விசயங்களை அலசினாலும் நாங்கள் பெரிய காரணம் என்று நினைத்து இதுதான்.

அமெரிக்கா வரும் இந்தியர்கள் இங்கே அசிமிலேட் ஆக அதிக நாள் ஆவதற்கு காரணம் இங்கே உள்ள விசா முறைதான். 90களுக்கு முன்னால் அமெரிக்கா வந்தவர்கள் சீக்கிரமே அசிமிலேட் ஆகிவிட்டிருப்பர், ஏனெனில் அவர்களுக்கு க்ரீன் கார்ட் வெகு விரைவில் கிட்டி இருக்கும். நாம் இங்கேதான் குப்பைக்கொட்டப்போகிறோம் என்று முடிவை சீக்கிரம் எடுத்துவிடுகிறார்கள். அதற்க்கான தயாரிப்புகளை விரைவில் செய்யத்துவங்கிவிடுகிறார்கள். ஆனால் ஹெச்1 விசாவில் வரும் ஒருவர் க்ரீன் கார்ட் என்று யோசிக்கவே 5 வருடம் ஓடி விடுக்கிறது. அதன் பின் 5 வருடம் சிட்டிசன்சிப்பிற்கு. ஹெச்1 பி விசாவில் இந்தியர்கள் மிகவும் அன்-செக்யூர்டாக உணர்கிறார்கள். ஒரு பர்னிச்சர், ஏன் படுக்கை வாங்கக்கூட மாசக்கணக்கில் யோசிப்பார்கள் (even if they could afford a $1000 bed), தரை விரிப்புகளில் தூங்கும் நிலையில் இருப்பார்கள். லான் பர்னிச்சர் (நம்மூர் மடக்கு பெஞ்ச்.சேர்)தான் வாங்குவார்கள். எப்போது வீடு காலி பண்ணிடணும்னே இருப்பாங்க. அந்த இன்-செக்யூரிட்டியில் அசிமிலேஷன் நடப்பதே இல்லை.

எங்களுக்கு தெரிந்த ஒரு நண்பர் எப்போதும் "உங்களுக்கென்ன எல்லாம் செட்டில்டு, நாங்க அப்படியா ஹெச் 1 சிங்கி அடிக்கிறோம்"னு ஒவ்வொரு தடவை மீட் செய்யும் போதும் சொல்வாய்ங்க. Its a matter of mindset னு சொன்னாலும் அவங்க ஆதங்கத்தை புரிஞ்சிக்கிடமுடியுது. ;)))

இன்னொரு கொடுமை (என் அளவில் மிக பெரும் கொடுமை) குழந்தை பெத்துக்கிடக்கூட விசா பாத்து முடிவு செய்யலாம் பாஸ்னு சொல்வாய்ங்க. அடப்பாவிகளே ஊர்ல என்ன பிச்சையா எடுக்கறீங்க... குழந்தை பிறந்தா சமாளிக்க முடியாத அளவா வறுமை. என்ன அதிக பட்சம் 2-3 லட்சம் அதிகமாகும், அதுக்காக குழந்த பெத்துக்கறதே தள்ளி வைக்கறதெல்லாம் எனக்கு டூ மச்சாகப்படும்! வீடு வாங்கறதும் அப்படிதான். சிட்டிசன்சிப் வாங்கீட்டு (குறைந்தபட்சம் க்ரீன் கார்ட்)தான் வீடே பார்க்கத்துவங்குவாய்ங்க. இப்படி ஒரு இன் செக்யூர்ட் லைஃப்.

ஆனா அதே பக்கத்து நாடான கனடாவில் பெரும்பான்மையோர் க்ரீன் கார்ட்டுடன்தான் போகிறார்கள். சட்டென்று அந்த நாட்டு குடிமகன்களைப்போல வாழ்கிறார்கள். நானும் நீயும் ஒன்னு என்று கனேடிய குடிமகனுடன் தோள்கொடுக்க முடிகிறது. இங்கே இந்த ஜாப் பேஸ்டு விசாவினால் கொஞ்சம் அடிமையைப்போல உணருகிறார்கள்!

கவிதா : ம்ம்ம்.. சம்மரியாக - அமெரிக்க பெற்றோருக்கு=> இன்செக்கியூரிட்டி மத்த நாட்டில் இருக்கவங்கள விட அதிகமா இருக்கு...
********
Sriram Narayanan :  பெண் குழந்தை வளர்ப்பு : 13-18 வயசு பொண்ணுங்க, ஜட்டியை விட ஒரு இன்ச் மட்டுமே அதிகமுள்ள சார்ட்ஸ் போட்டுக்கிட்டு போவதை பாக்கும் போது பயம் வரத்தான் செய்யும் - நாளை நம் பெண்ணும் இப்படித்தான் இருக்குமோன்னு...  ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில் இப்பயம் எங்கிருந்தாலும் வரத்தான் செய்யும். அட்லீஸ்ட் அமெரிக்காவில் - பஸ்ஸில் தடவுவது, பீச்சில் வைத்து அசிங்கம் பண்ணுவது மிக மிகக் குறைவு

வெண்பூ வெங்கட் : இங்ககுழந்தை பொறந்து ஒரு ருசம் இருந்தோம், யாரும் க்கத்துலஇல்ல‌. ரொம்பநல்லாவே ர்க்கமுடிஞ்சது, இந்தியாவுலபெரியங்கஇல்லாமஷ்டமா இருந்திருக்கும்.

Sriram Narayanan : ஒரே ஒரு நிகழ்வில் வெறுப்பு வரும் - குழந்தைக்கு ஜுரம் அடிக்குதுன்னு டாக்டருக்கு போன் பண்ணா, மூணு நாளைக்க்கு மேல தொடர்ந்து 100டிகிரிக்கு மேல இருந்தா கூட்டிக் கிட்டு வாங்க, அதுவரை பொருத்திருங்கன்னு பதில் வரும். இதுதான் சரின்னு மூளைக்கு புரிந்தாலும், தொட்டதுக்கெல்லாம் Anti Biotic சாப்பிட்ட மனசு கேக்காது

கவிதா : //ஆண் தொடர்பு, pre marital sex இவை இந்தியாவிலும் சகஜமாகிப் போன நிலையில்// ஸ்ரீ... சகஜமா?? ஏங்க ஏன்ன்... செய்திகளை படிச்சிட்டு, சகஜம்னு சொல்லலாமா?

Sriram Narayanan : கவிதா : சென்னை, டில்லி போன்ற பெரு நகரங்களில் சகஜம்தான். உலா வரும் MMS கள் அப்படித்தான் சொல்லுகின்றன.. இது பத்தி உங்க கிட்ட இனியும் பேச முடியாது (pre marital sex) மத்த விசயங்களில் கவனம் செலுத்துகிறேன்.

சாப்பாடு ஒரு மேட்டரே இல்லை - நம்ம புள்ளைங்க இந்திய ஸ்நாக்ஸுக்கு ஈஸியா அடிமையாகிடுதுங்க, வீட்டில் பெரும்பாலும் தென்னிந்திய சமையல்தான், அதைத்தான் சாப்பிட்டு வளருதுங்க

*******
சுசி குணா:   1. இல்லாம போகும்னு நினைச்சதில்ல. ஏன்னா நாங்க இதையெல்லாம் பாதுகாக்கணும் வளர்க்கணும்னு வெளிநாட்டில இருந்திட்டு நினைக்கற அளவுக்கு தாய்நாட்ல இருக்கவங்க நினைக்கலையோன்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு. அதோட இந்த நாட்டவர்கள் எங்களோட கலாச்சாரம், பண்பாடுகளுக்கு மதிப்பும் மரியாதையும் குடுக்கறதோட அவங்க கலாச்சாரம், பண்பாட்டில இருக்கற நல்ல விஷயங்களை நாங்க பின்பற்றுறத விரும்பறாங்க, வரவேற்கிறாங்க.

2.
திட்டம், நடவடிக்கைன்னு எதும் இல்லை.. ஆனா பிள்ளைகள் இப்டித்தான் நான் வளர்ந்தேன் அப்டின்னு அறிந்துகொள்ளும்படியா சொல்லி இருக்கேன். கடைப்பிடிக்கணும்னு கட்டாயப்படுத்தல.

3.
என்னைப் பொறுத்தவரைக்கும் பிள்ளையின் மன நிறைவான வாழ்க்கைக்கு பின்னர்தான் மீதி எல்லாம். எங்கள் தலைமுறையை விட இப்ப இருக்கற, இனி வரப் போற தலைமுறை நோர்வேஜியருக்கு எம்மவர் கலாச்சாரம், பண்பாடு பற்றிய தெளிவு அதிகம் இருக்கறதால எங்க பசங்களுக்கு குழப்பங்கள், பிரச்னைகள் கம்மியா இருக்கும்னு தோணுது.

4.
என் பிள்ளைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். நல்லா பேசுவாங்க. இந்த ஒரு விஷயத்துக்குத்தான் அவங்கள கட்டாயப்படுத்த வேண்டி இருக்கு. மத்தபடி பல விஷயங்களை அவங்க எங்களைப் பாத்து கத்துக்கறாங்க. உதாரணத்துக்கு சாமி கும்பிடுறது குழந்தைப்பருவத்தில சொல்லிக்குடுத்தேன். அப்பறம் விட்டிட்டாங்க. இப்ப கொஞ்ச நாளா அவங்களா ஒரு சக்தி இருக்குன்னு நினைச்சு கும்பிடறாங்க. சங்கீதம் நடனம்னு கத்துக்க வச்சேன். முடியாதுன்னாங்க. விட்டாச்சு. இதே போலத்தான் எல்லாமும். இப்படி ஒண்ணு இருக்குன்னு தெரிய வைத்தால் அது அவங்க மனசில பதிஞ்சிடும். மீதி அவங்க இஷ்டம். பிடிக்குதா தொடரட்டும். இல்லையா விட்டிடட்டும்.

5.
என்னைப் பொறுத்த வரைக்கும் வெளிநாட்டில பெண்குழந்தை ஆண்குழந்தைன்ற வேறுபாடு இல்லை. என் ஃப்ரெண்டோட அம்மா சொன்னது தான் எப்போதும் நினைவு வரும். 2 பொண்ணுங்கள எப்டி வளர்த்து கரை சேர்க்கன்னு நினைச்சாங்களாம். ஆனா 4 பசங்க இருந்தும் யாரும் அவங்க நினைச்சது போல இல்லையாம். தாய்நாட்ல இல்லையா தெருவுல சுத்தற பசங்க?? தாய்நாட்ல இல்லையா பழக்கம் சரி இல்லாத பொண்ணுங்க?? என்ன வெளிநாடுன்னதுமே ஒட்டு மொத்தமாவோ இல்லை அதிகளவிலயோ ஒழுக்கம் பண்பாடுன்னு எதிர்பார்க்கறாங்க. இந்த வகையில பாத்தா தாய்நாட்ல இருக்கற பிள்ளைகள் போல எந்த வகையிலவும் குறைவில்லாம தான் எங்க பிள்ளைகள் வளர்ராங்க. என்னதான் இந்த நாட்டு கலாச்சாரம் கலந்து வளர்ந்தாலும் அவங்களுக்குள்ள தெளிவான கட்டுப்பாடுகள் இருக்கு. கல்யாணம்னு வந்ததும்தான் குறிப்பா பெண் பிள்ளைகள தனியா பாக்கறாங்க. இதனாலயே எனக்குத் தெரிஞ்ச வரை பலர் தாய்நாட்ல இருக்கற பசங்கள கல்யாணம் செய்ய பயப்படறாங்க. எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்க பிள்ளைகள் நோர்வேஜியரை கல்யாணம் பண்ணினா கூட பறவால்ல. ஏன்னா இவங்க தாய்நாட்டுக்கு போய் இருக்கப் போறதில்ல. யாரா இருந்தாலும் அவங்க வாழ்க்கைய நல்லபடியா கொண்டு போகக்கூடிய ஒரு துணை கிடைத்தால் போதும்.

                                                                                   **********
முகிலன் தினேஷ்:  // பிள்ளைகள் இந்தியா பக்கம் வருவதையே விரும்புவதில்லை. இந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர்களின் உடல் வளர்ச்சியும் வித்தியாசமாகவே உள்ளது. அதிக உயரம், அகன்ற உடல்வாகு. (Girl or a Boy heavy built),  அதே குடும்பத்தில் இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் அப்படியில்லை.//

80
களின் இங்கு வந்தவர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் உடல்நலம் பற்றிய பெரிய பயம் என்பது இல்லை. அதனால் ஜங்க் ஃபுட் என்றழைக்கப்படும் துரித உணவுகள் அதிக உண்டதால் அந்த கூடுதல் எடை. இப்போது அந்த பயம் வந்துவிட்டது. எனக்குத் தெரிந்து பெரும்பாலான பெற்றோர் ஜங்க் ஃபுட் கொடுப்பதைத் தவிர்க்கிறார்கள்.

ஆனால், அதே சமயம் இந்தியாவில் ஜங்க் ஃபுட் சாப்பிடும் - கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ் - பழக்கம் வந்திருக்கிறது. அதனால் இனி இந்தியாவில் வளரும் குழந்தைகள் ஹெவி பில்ட்டாகவும், அமெரிக்காவில் வளரும் குழந்தைகள் லைட் வெயிட்டாகவும் தெரியும் வாய்ப்புகள் அதிகம்.

சுசி குணா உடற்பருமன் அதிகம் என்ற பிரச்சனை பொதுவாவே இருக்குதுதான். எம்மவர் மட்டும்னு இல்லை. ஆனால் டீனேஜ் பருவம் வந்ததுமே 90% பிள்ளைகள் உடற்பருமனில் கவனம் எடுத்துடறாங்க. அதனால அடையாளம் அழியாதுன்னு நினைக்கறேன்.. 
  
Dyno Buoy  : அதாவது நாமாக, இந்தியர்களாக/தமிழர்களாக  பார்வைக்கு கூட நம் வருங்கால சந்ததியினர் இருப்பார்களா?

டிபென்ட்ஸ் ஆன் 2 திங்க்ஸ்!

1. வருங்காலம் என்பது எத்தனை நாள்
2. எத்தனை க்ராஸ் போலினேஷன்ஸுக்கு பிறகு.

இதற்கு பதிலாக இப்போதைய சென்வ்விந்தியர்களை உதாரணமா எடுத்துக்கலாம். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் சிலருக்கு அந்த ஃபீச்சர்ஸ் இருக்கு. ஜெனிட்டிக்கலி 1/16, 1/32 ன்ட் நேடிவ் அமேரிக்கன்ஸ்னு கூட இருக்கு. (அதை வச்சி அவர்களுக்கு நில உரிமை உட்பட்ட சில சலுகளும் அமெரிக்காவில் இருக்கு).  இந்தியர்களிலேயே ரெண்டு தலைமுறைக்கி மும்பய்ல செட்டிலானவிங்க முகத்தோற்றம் வெகுவாய் மாறியதை பார்த்திருக்கேன்.
 *******
O.R.B Rajaகவிதா, இந்த ப்ளஸ்ஸுக்கு நான் இன்னும் 10-15 வருடங்கள் சென்று வரேனே? :))
இப்போதைக்கு:
1.
கண்களை விற்றும் நிறைய அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.
2.
ஒரு கண்ணை விற்றும் சில அருமையான சித்திரங்கள் வாங்கலாம்.
3.
எனக்கு கண்கள்தான் முக்கியம்.
4.
எனக்குச் சித்திரங்கள்தான் முக்கியம்.

அவங்கவங்களுக்குப் பிடித்ததை, முக்கியத்துவம் கொடுப்பதை ஃபாலோ செய்யலாம். மேலே இருப்பதில், சித்திரங்கள் எவை என்பதில் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட கருத்துகள் உண்டு :))
                                                   ===========================
விவாதத்தைப்பற்றிய என் கருத்து : பொதுவாக, நம் (இந்திய) கலாசாரம் என்பது => சங்கீதம், நடனம் கற்றுக்கொடுப்பது என்ற ஒரேமாதிரியான தகவலை நண்பர்கள் பகிர்ந்தது..... கொஞ்சம் ஆயாசத்தை தருகிறது.  இந்தியாவிலேயே வடமாநிலங்களில் இருந்துவிட்டு, பிடிக்கவில்லை என்று சென்னைக்கு ஓடிவந்துவிட்ட நண்பர்கள் சிலரை எனக்கு தெரியும். கேரளாவை, மலையாள திரைபடங்களின் மூலம் பார்த்து, லயித்து, அந்த பச்சை பசேலுக்கு ஆசைப்பட்டு அங்கு சென்றப்பிறகு தான் தெரிந்தது, சினிமா பச்சை வேறு, நேரில் காணும் பச்சை வேறென. எனக்கு மட்டுமல்ல என் பிள்ளைக்கும் அங்கு பிடிக்காமல் போக சென்னைக்கு ஓடிவந்தோம். இந்தியாவிற்குள்ளேயே இப்படி என்றால், வெளிநாடுகளில் சொல்லவே வேண்டியதில்லை. ஓ.ஆர்.பி.ராஜா சொன்னதைப்போன்று, இது தனிநபர் சம்பந்தப்பட்ட விசயமாகவே பார்க்கவேண்டியுள்ளது. அவரவரின் தேவை, எதிர்பார்ப்புகள், சூழ்நிலைகளுமே வெளிநாட்டில் நாம் வாழ்வதும் நம் குழந்தைகளை வளர்க்க முடிவு செய்வதும் நிர்ணயிக்கப்படுகின்றன.  
                                                                                                                                                                                                    .............. 2/2
                                                                      ==================================

அணில் குட்டி : அம்மணி பேச ஆரம்பிச்சாவே, அடிச்சி வாயமுட வைக்கனும். அவங்க பிரண்டுங்க எல்லாமும் அப்படித்தான் போல. .யப்பா எம்புட்டு பேசி இருக்காங்க. .படிக்கறதுக்குள்ள. .கண்ணக்கட்டுதே....  ஒரு ஜோடா ப்ளீஸ்...

பீட்டர் தாத்ஸ்: “Having a good discussion is like having riches”

பின் குறிப்பு: இந்த விவாதத்தை என்னுடைய வலைத்தளத்தில் பதிவு செய்ததில், எனக்கு கிடைக்கவிருக்கும் பணம், பதவி, விரைவில் எதிர்பார்க்கப்படும் வலைத்தளத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற  'பட்டம்',  பாராட்டுகள், அதற்கான விழாக்கள் இன்னும் இத்தியாதி இத்தியாதிகள் அனைத்தையும் முழுமையாக   "இளா" விற்கு சமர்பிக்கிறேன்.