சென்னை மாநகரிலே.....நல்ல பழக்கங்கள் சில..

சென்னைக்கு நாங்கள் வந்து சரியாக 15 வருடங்கள் ஆகின்றன.. சென்னை பழக்கவழக்கங்களை, நாகரீகத்தை நன்றாக பழகிக்கொண்ட நல்ல குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று. அது என்ன நல்ல பழக்கவழக்கங்கள் என கேட்கிறீர்களா?.. இதோ...:-

1. பூட்டிய கதவை உயிரே போனாலும் திறந்து வைப்பது இல்லை

2. வீட்டில் உயிருடன் யாராவது இருக்கிறார்களா இல்லையா என்று அடுத்த வீட்டுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுதல்.

3. பக்கத்து வீட்டுக்காரர்களை வழியில் பார்த்தால் ஒரே ஒரு “புன்னகை” மட்டுமே அதற்கு மேல் பேசுவது நாகரீகம் இல்லை என்பதைவிட..அவர்கள் நம்மிடம் உதவி கேட்டுவிட போகிறார்களோ என்று ஒருவித உஷாருடன் எப்போதும் இருக்கவேண்டும்.

4. அந்நியர் யாரையாவது பார்த்தால்..-அவர் யார்?, எந்த வீட்டுக்கு சொந்தக்காரர், விற்பனையாளரா? கொரியர்க்காரா? இல்லை திருட வந்தவரா? எதற்கு வீண் பிரச்சனை? என்று கண்டும் காணாமல் சென்றுவிடுவது

5. தெருவில் குப்பை எடுத்து செல்ல ஒருவர் வந்தாலும், அதை அவரிடம் சரியாக கொடுக்காமல், தெருவில் தூக்கிப்போட்டு அடுத்தவர்களை முகம் சுளிக்க வைக்க வைக்க வேண்டும்..

6. பக்கத்துவீட்டில் போட்ட பால் பாக்கெட் உடைந்து பால் வெளியில் கொட்டி கிடந்தாலும், நமக்கென்ன என்று நம் வீட்டு பால் பாக்கெட்டை மட்டும் எடுத்து வந்து விடுவது.

7. பக்கத்து வீட்டில் இடியே விழுகின்ற சத்தம் கேட்டாலும் என்னவென்று கேட்க்காமல் காதை மூடிக்கொண்டு பேசாமல் நம் வீட்டு டிவியை பார்த்து கொண்டு இருப்பது. ஆனால் 2 மாதம் கழித்து கண்டிப்பாக, அவர்களை வழியில் பார்க்கும் போதும், “அன்றைக்கு உங்களது வீட்டில் இடி விழுகின்ற சத்தம் கேட்டதே..அது எனக்கும் கேட்டது, நான் தான் எதற்கு உங்கள் வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டும் என்று கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்று சொல்லவேண்டும்.

8. அடுத்த வீட்டு குழந்தைகளை நம் வீட்டினுள் சேர்த்து வைத்து விளையாடாமல் இருக்க நம் குழந்தைக்கு உபதேசம் செய்து, வெளியில் போய் விளையாட சொல்லவேண்டும், அதே போல் வேற்று குழந்தைகள் எதிரில் நம் குழந்தை fridge ல் நம் குழந்தைக்காக வைத்துள்ள சாக்லெட், பிஸ்கட் எடுத்து சாப்பிடாமல் இருக்க கற்றுக்கொடுக்கவேண்டும். (காசு கொடுத்து நம் குழந்தைக்கு வாங்கி வைத்தது அல்லவா)

9. அப்படியே நம் குழந்தையோடு மற்ற வீட்டு குழந்தைகள் விளையாடினாலும், நம் வீட்டு சோபா, கட்டில், விளையாட்டு பொருட்களை தொடாமல் பார்த்துக்கொள்ள நம் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டும். (பொருட்கள் வீணாகி விடுமல்லவா)

10. எந்தவித பிரச்சனை வந்தாலும், நமக்கு மட்டும் பிரச்சனை வராதவாறு எப்போதும் பார்த்துகொள்ளவேண்டும். அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன?

அணில் குட்டி அனிதா:- ம்ம்.. ஆமா..கவிதா இதுல கொழந்த கொழந்த ன்னு சொல்றீங்களே அது யாரை?? நீங்க ஒன்னு பெத்து போட்டு வச்சி இருக்கீங்களே அதையா?.. அது கொழந்தையே இல்லையே?!! ம்ம்..சரி சரி.. கண்ணை உருட்டாதீங்க….காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.. என்ன செய்றது.. என் தல எழுத்து இதை எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு.....


பீட்டர் தாத்ஸ் :- Faith makes all things possible. Hope makes all things bright.

இனிமையான சில நேரங்கள்...........

இரவின் இருட்டில்
நிலவின் ஒளியில்
பனியின் சாரலில்
நெஞ்சோடு இருக்கக்
கட்டிய என்
கைகளின் நடுவில்
நீயும்
உன்
நினைவுகளில்
உலவிய நேரங்களும்...

பேருந்தில்-
பயணிக்கும்
சில மணி நேரங்களில்
இறுக்க மூடிய
கண்களுக்குள்
உனை அடக்கி
உலகம் மறந்து
மெளனமாய்
பேசிய நேரங்கள்.....

கோயிலில்
தரிசன வரிசையில்
பல மணிநேரம்
நிற்கும் நேரங்களின்
கடவுளின் பெயருக்கு
பதிலாய்
உன் பெயரை
உச்சரித்த நேரங்கள்..........

Photobucket - Video and Image Hosting

கடற்கரையில்-
அலையின்
ஆவேசமும்
மனிதர்களின்
இரைச்சல்களுக்கும்
நடுவே
எனக்கு மட்டும்
எல்லாமே
நிசப்தமாய்
என்
நினைவுகளை நீ மட்டுமே
நிரப்பிய நேரங்களில்..

காதலனும் காதலியும்
காதல் பாட்டு பாட
திரை அரங்கினுள்
கண்கள் மட்டும்
திரையை
பார்க்க
மனம் என்னவோ
உன் நினைவுகளில்..
களித்திருக்கும்
நேரங்களில்......

என்னின்
எத்தனை நேரங்களை
இனிமை ஆக்குகிறாய்
நீ.....
என்னுடன் எப்போதும்
நீ
இருந்தால்
எத்தனையும் அத்தனை
ஆகுமே
என்னவனே.....!!!

அணில் குட்டி அனிதா: அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க...!! கவித எழுதிட்டாங்கலாம் கவிதா.. என்னவோ போங்க நாட்டுல இந்த கொடுமைய எல்லாம் நாங்க பார்க்க வேண்டியதா இருக்கு... !!! பீட்டர் தாஸ் நீங்க உங்க பீட்டர் கவிதைய எடுத்து விடுங்க..

பீட்ட்ர் தாஸ் : In the moment that you carry this conviction, in that moment your dream will become a reality.

வலைபதிவர் மீட்டிங்- இதுவரை வெளிவராத தகவல்

வாங்க.....வாங்க... 19ந்தேதி பதிவர் மீட்டிங் நடந்தாலும் நடந்தது.. தாங்கலடா சாமி.. ஆளுக்கு ஆளு பதிவு ப்போட்டு தாக்கறாங்க.. கவிதா மீட்டிங்ல கலந்துக்கலன்னு எல்லார்க்கும் தெரியும்.. ஆனா.. நான் கலந்துக்கிட்டேன்..அது யாருக்குமே தெரியாது.. யாரோட கேமராவிலும் சிக்காம நாங்க அங்கன இல்ல இருந்தோம்.... இட்லி வடை கிட்ட இருந்து க்கூட எஸ்கேப் ஆயிட்டோம் இல்ல..

சரி ..மேட்டருக்கு வரேன்..... இந்த கூட்டத்துல.. 2 பேருங்க.. ஒருத்தர் எல்லாருக்கும் அருள வழங்குவாரு....... இன்னொருத்தர்.. இந்த டீ.. காப்பியில எல்லாம் கலக்குவாங்களே.. அந்த சீனி..சக்கர...ங்க.. இந்த 2 பேரும் மீட்டிங்குக்கு போறோம்.. கான்டிரிபியூட் வேற பண்றோம்னு ப்ளான் போட்டு.. மதியம் சாப்பிடாம வெறும் வயத்தோட வந்திருந்தாங்க..... சின்ன புள்ள தனமா ஏன்னு மட்டும் யாரும் கேட்கப்படாது.....ஆமா சொல்லிட்டேன்..!! அவங்களுக்கு என்னான்னா.. ஒரு போண்டா..ஒரு வடை..இப்படி ஏதாவது கெடைக்கும் ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தாங்க.. ஆனா கெடச்சது என்னவோ........ டீ..யும்.. மேரி ‘யும்..சாரி.......சாரி.......மாரி பிஸ்கட்டும் தான்..

எல்லாரும் டீ 2 ரவுண்டு குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்கற சமயமா ப்பார்த்து, யாருக்கும் தெரியாம இவங்க 2 பேரும் உள்ள போய் 15-20 பேர் குடிக்க இருந்த மிச்சமான டீ ய (முன்ன பின்ன டீ யே பார்க்காத ரேஞ்சுக்கு) மொடக்கு மொடக்கு ன்னு குடுச்சி காலி பண்ணிட்டாங்க.. உஸ்... அப்பாடா............ மதியம் சாப்பாடு கட், அண்ட் நைட் டின்னரும் சாப்பிட முடியாத ரேஞ்சுக்கும் 2 பேரும் ஒரு கட்டு கட்டிட்டு போய்ட்டாங்கப்பா.. ஹி ஹி,,

ஹி ஹி,,..இது எப்படி எனக்கு தெரியும்னு பார்க்கறீங்களா?.. ஹி...ஹி.. இப்படியெல்லாம் நீங்க கேட்டா எனக்கு வெக்கமா இருக்கு இல்ல.... இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் அப்படி தூக்கி ஓரமா கெடாசிட்டு..சொல்றேன்.. “நானும் அவங்களுக்கு கம்பனி கொடுத்தேன் இல்ல....”

Well, I can show those nice snaps to you all.. but.. you know they will catch me and odachify my hand again.. so.. better..escapeeeeeeee............


குறிப்பு:- அண்ணன் பாலா..அவர்களே...... நற நற வென பல்லை கடிக்காதீங்க.. நீங்க மைலாப்பூர் ல கடிக்கறது மாம்பலத்துல கேட்குது.. அக்கா பொன்'ஸ் அவர்களே.. கோவப்பட்டு பொங்காதீங்க.. பொங்கி யானைய என் மேல உருட்டிடாதீங்க.... நான் ரொம்ப பாவமுங்க........ உங்களுக்கு தெரியாம நடந்த ஒரு விஷயங்கோ இது.. .. தெரிஞ்சிக்கிட்டும்னு சொல்லிடேங்க..சின்ன ஜீவன் என்னை எதுவும் செஞ்சிடாதீங்க.. நான்னா உங்க எல்லாருக்கும் செல்லம் தானே.. :) :) ஹிஹி.... ரொம்ப பிடிக்கும் தானே.. அதுவும் பொன்ஸ் அக்கா' க்கு நான்னா.. உசுரு எனக்கு அப்பவே தெரியும்..........!! :)

(அணித்து போதும் பிள்டப்பு அடங்கு)....

டீ எத்தனை என்ற தகவல் சொன்ன டீ சப்பளையர் வாழ்க....!! வாழ்க..!! வாழ்க !!

கணிதமேதாவியுன் நிலைமை உங்களுக்கும் வரவேண்டுமா?

கவிதாவோட பதிவுகளை தொடர்ந்து படிக்கறவங்களோட கதி இப்படி தான் ஆகப்போகுது.. ஹி..ஹி... இத எத்தனை பேர் மனசுல நெனச்சீங்களோ.. சொல்லமுடியாம கஷ்ட பட்டீங்களோ..?! ம்ம்..உங்க எல்லார்க்காகவும் சேர்ந்து இதோ..நான் சொல்லிட்டேன்.. சோ.. எல்லாரும்..ஜோரா என்கூட சேர்ந்து விசில் அடிங்க பார்க்காலாம்..... உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... உய்ய்ய்............ உய்ய்ய்ய்ய்............... !!!!
Photobucket - Video and Image Hosting

அதுவும் வர வர என்னை அதிகமா எல்லாரும் விசாரிக்க ஆரம்பிச்சவுடனே.. அவங்களுக்கு பொறாம தாங்கமுடியல.. என்ன செய்ய?!! வீட்டுல எப்பவும் என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க. என் காதுல ஒரே ரத்தமா வழியுது.. முடியல.. சொல்லிட்டேன்..

என்னால அவங்க எழுதற மேட்டர் பெரிசா வெளிவர மாட்டேங்குதாம். நான் எப்பவும் அவங்கள் மட்டந்தட்டி பேசறதால அவங்க இமேஜ் (அப்படின்னு ஒன்னு இருக்கறதே அவங்க சொல்லிதான் எனக்கு தெரியும்) பாதிக்க படுதாம். அதனால நானும் அவங்களும் சேர்ந்து உக்காந்து பேசி ஒரு முடிவு பண்ணி இருக்கோம். என்னன்னா.. பதிவுக்கு நான் வேணுமா வேண்டாமான்னு என் ரசிக பெருமக்கள் முடிவு பண்ணட்டும் என்று, கீழ இருக்கும் 3 நம்பர்ல எது உங்களுக்கு சரின்னு படுதோ அதை அம்மணிக்கு சொல்லுங்க.. அவங்க அதையே செய்வாங்க.. கடைசியில என் கால வாரிடாதீங்க.. எனக்கு ஓட்டு போடறவங்கள தனியா கவனிப்பேன்.
உங்களின் பொண்ணான வாக்கு எதற்கு..

1. கவிதாவும், அணில் குட்டியும்’ மா?
2. அணில் குட்டி மட்டும்’ மா?
3. கவிதா மட்டும்’ மா?

உங்கள் ஆதரவை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் உங்களின் அன்பு அனித்து குட்டி..

பிரமோஷனுக்காக பெருசுகள் செய்யும் அநியாயங்கள்

இங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம். MBA வகுப்புகளுக்கு இந்த வயதுக்காரர்கள் அதிகம் வருகிறார்கள். நிச்சயமாக அவர்கள் வயதிற்கு அலுவலகத்தில் மேனேஜர் அல்லது உதவி மேனேஜர் பதவியில் இருப்பார்கள், அதற்கான அனுபவம் இருக்கும் என்றும் நம்பலாம். இவர்கள் அனைவருமே தங்களின் வேலை அனுபவங்களை கொண்டே தேர்வுகள் எழுதமுடியும், அப்படி ஒன்றும் மிக சிரமமான படிப்பும் அல்ல. அப்படி அனுபவ படிப்பு உதவவில்லை என்றால், சரியான அனுபவம் அவர்களுக்கு இல்லை மேலும், அலுவலகத்தில் “ஈ” ஓட்டுகிறார்கள் அல்லது அடுத்தவரின் உழைப்பில் சம்பாதித்து உடம்பையும் வளர்க்கிறார்கள் என்று தெளிவாக முடிவு செய்யலாம்..

பார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி அடிப்பதை பார்த்தால் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. அவர்கள் வயதுக்கும் வகிக்கும் பதவிக்கும் மிக கேவலமான விஷயம் மட்டும் அல்ல அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள், வளர்த்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படியே அவர்கள் நல்ல பிள்ளைகளை வளர்த்து இருந்தாலும், பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா?

பிட் அடித்து அப்படி பாசாகி என்ன பயன்?? “பிரமோஷன்’ அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். அப்படி கிடைக்கும் பதவி உயர்வால் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதாவது Finance, HR, Systems, Marketing மேனேஜராக ஆகிறார் என வைத்து கொள்வோம். அவருடைய வேலை தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலை தரத்தினால் அந்த அலுவலகமும், அவர் சார்ந்த வேலை மற்றும் அவரின் கீழ் வேலை செய்பவர்களுன் தரமும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதில் இளைஞர்களையும் இந்த பெருசுகள் முன்னுக்கு வர விடுவதில்லல. அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

பிட் அடிப்பது மட்டும் இல்லை, assignment , project போன்றவைகளும் காசு கொடுத்து முடித்து விடுகிறார்கள். இதனை பார்த்து சிறுசுகளும், நாமும் காசு கொடுத்து முடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்ல வழிக்காட்டிகள் இவர்கள். இந்த வயதில் இவர்கள் படிக்கவில்லை என்று யார் அழுதார்கள், இப்படிப்பட்டவர்களால், அந்த படிப்பிற்கே தரமில்லாமல் போகிறது. விழுந்து விழுந்து படித்து சென்று எழுதியவர்களை விட, பிட் அடித்து அதிக மதிப்பெண் எடுக்கும் இப்படி பட்டவர்கள் அதிகமே. உழைப்பை விட குறுக்கு வழிதான் சிறந்தது என உழைப்பவர்களும் நினைத்துவிட்டால்.....?? படிப்பிற்கும், திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பில்லாமால் போகிறது என்பது மட்டும் உண்மை.

அணில் குட்டி அனிதா:- அம்மணி பொறாமை பட வேண்டியது தான் அதுக்குன்னு இப்படியா.. ஒன்னும் இல்லீங்க.. அம்மணி கூட exam எழுதினவரு நிறைய மார்க் எடுத்துடாருங்க.. அதான் இந்த புலம்பல்ஸ்..அம்மணிக்கு எப்பவுமே அவங்க தான் அறிவாளி மத்தவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லைன்னு ஒரு நெனப்பு அதுல எழுதறது தான் எல்லாம்.. exam க்கு போனோமா.. நம்ம பேப்பர பாத்து எழுதினோமான்னு இல்லாம எதுக்கு இப்படி அடுத்தவங்கல பாத்து காதுல போக விடனும்.. நாட்டுல ஏதோ நாலு பேரு நல்லா இருக்கட்டும், நாலு காசு சம்பாதிக்கட்டும் ன்னு ஒரு நல்ல மனசு இருக்கா பாருங்க...... பொறாமை ..விடுங்க.. அம்மணி..நீதி, நேர்மை, நியாயம் ன்னு பேசி நம்ம பொழப்புல மண்ண தூவுவாங்க........... நாட்டுல இப்படி சிலதுங்க இருக்கறதனால தான் நாடு உருப்பட மாட்டேங்குது.. என்னத்த சொல்ல.. தாத்ஸ் நீங்க சொல்லுங்க..... கவிதா புலம்பல்ஸ்க்கு உங்க பீட்டர் எவ்ளோ தேவலாம்............

பீட்டர் தாத்ஸ் : Courage is a special kind of knowledge; the knowledge of how to fear what ought to be feared, and how not to fear what ought not to be feared..