Blog & தமிழ்மணம் விட்டு போகிறோம் - கவிதா & அணில்குட்டி

சொந்த காரணமாக நானும் அணில் குட்டியும் எழுதுவதை நிறுத்திவிட முடிவெடுத்துள்ளோம்.

இது வரை எங்களின் எழுத்தை மிக பொருமையுடன் பார்வையிட்டவர்கள் அனைவருக்கும் எங்களுது இதயபூர்வமான நன்றி.யை தெரிவித்துகொள்கிறோம்.

எங்களின் எழுத்து மூலமாக யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மறந்தும் மன்னித்து விடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

நன்றி..

அணில் குட்டி அனிதா :- இங்க பாருடா.. இந்த அம்மணி பண்ற அநியாயத்த......... இவங்க யார் கூடையோ சண்ட போட்டது வேணுமான சொந்த பிரச்சனையா இருக்கலாம்.. இவங்க எழுதறத நிறுத்தறத விட்டுப்புட்டு என்னைய ஒரு வார்த்தக்கூட கேட்காம..என்னையும் கூட சேர்த்துக்கிட்டாங்க..இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?.. ஆரம்பத்திலிருந்தே..என் மேல ஒரு பொறாம இவங்களுக்கு, எங்க இவங்கள விட பெரிய எழுத்தாளரா ஆயிடுவேன்னு பயந்து.. என்னையும் எழுத விடாம பண்றாங்க.. ம்ம்.. நம்ம தல வேற என்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டு போறேன்னு சொன்னாங்களே.. அப்பவே அவங்க கிட்ட போய் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம்.. இப்ப பாருங்க சோத்துக்கு சிங்கி அடிக்கற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க.. ம்ம்..இப்படி நம்மல புலம்ப விட்டுடாங்களே..சே..சே.. நிறுத்தறவங்க பேசாம நிறுத்த வேண்டியது தானே.. பெருசா மெஸேஜ் வேற.. என்னத்த சொல்ல.. ம்ம்.. இந்த அம்மணி எல்லாத்திலேயும் கொஞ்சம் ஓவர் தான்...

என்னவோங்க.. அம்மணி எப்படியிருந்தாலும் ரொம்ப பாசமா அவங்க சாக அடிச்ச அணிலா நினைச்சு நம்மல பார்த்துக்கிட்டாங்க...அதனால கொஞ்சநாள் சோத்துக்கு சிங்கி அடிச்சாலும், அவங்கள கொஞ்சம் கூல் பண்ணி திருப்பி வேற வேல ஏதாவது குடுப்பாங்களான்னு பார்க்கலாம்.....

இது வரைக்கும், நீங்களும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்துட்டோம்..பிரியத்தான் கஷ்டமா இருக்கு... என்ன செய்ய ம்ம்..ஒரு ஓரமா உக்காந்து கொஞ்சம் அழுதுக்கறேங்க..................சரி.. வரேங்க.. எனக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ.............அழுதுக்கிட்டே நம்ம பீட்டர் தாத்தா கடைசியா என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..

பீட்டர் தாத்தா :- Be so strong that nothing can disturb your peace of mind.

2. Blog நண்பர்கள் நட்பு பற்றி..

Blog நண்பர்கள் - பீட்டர் தாத்தா இனிமே தத்துவத்துக்கு எங்கேயும் போகவேண்டாம் போலிருக்கிறது.. பாருங்க..நம்ம நண்பர்கள் அத்தனை பேரும் எப்படி அற்புதமா நட்பை பற்றி சொல்லியிருக்காங்க......நண்பர்கள் அத்தனை பேரின் எழுதும் திறமையை பார்த்து பெருமை அடைகிறேன்.. என் வார்த்தைக்கு மதிப்பளித்து எழுதி கொடுத்த கார்த்திக், சந்தோஷ், ரவி, பிரியன், சிவகுமார்ஜி, கைப்புள்ள மற்றும் சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றி.......

கார்த்திக்ஜெயந்த்:-

"A friend is a beautiful gift you give your self"

It is by chance we met, by choice we became friends... Friendship is a strange thing....we find ourselves telling each other the deepest details of our lives....But what is a friend?
A confidant?
A lover?
A fellow email junkie?
A shoulder to cry on?
an ear to listen?
a heart to feel?...

A friend is all these things...and more. No matter where we met, I call you friend. A word so small...yet so large in feeling...a word filled with deep emotion.

சந்தோஷ்

விதை இல்லை
செடி இல்லை
காய் இல்லை
பழம் இல்லை

ஆனாலும் பூக்குது
இந்தப்பூ!
அட அதுதாங்க நட்பு

செந்தழல் ரவி

எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...

ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று..

பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்..

பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்...

ஆனால்..

எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...

பிரியன்


பாய்மரக்கப்பல் வாழ்க்கையில் நம்மை அன்பால் செலுத்தும் துடுப்பு தாய் , சரியான திசையினில் செலுத்துவது தந்தை உறவு.நம்மை தாங்கி நிற்கும் மரம் இறைவன்.இவர்கள் கூட கைவிட்டுவிடும் ஒரு நிலையில் , கடலில் தத்தளிக்கும் நிலையில் கையில் கிடைக்குமே ஒரு மரக்கட்டை அது நட்பு.

பெண் நட்பை பொறுத்தவரை: எந்த நண்பி கடைசி வரை காதலியாகாமல் இருக்கிறாளோ அவள் நண்பி.

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
வந்து நீயே
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
பறித்து நான்
தரும் வரை காத்திருந்தால்
நீ காதலி!

மா.சிவகுமார்


நட்பு என்பது என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், உண்மையான நட்பு ஒன்றை பல கட்டங்களில் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன.

பள்ளியில் கிடைத்த நண்பன், அவன் வேறு பள்ளிக்குப் போய் விட்ட பிறகு ஏற்பட்ட வெறுமை, பல ஆண்டுகளாக நட்புகள் தவிர்த்து வாழ்ந்த பாலைவன நாட்கள், கல்லூரியில் கிடைத்த ஒரு நட்பு, அப்புறம் வேலையில் சேர்ந்த பிறகு மீண்டும் வெறுமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறந்த நண்பனைக் கண்டு கொண்டு இன்று வரை, தொலைவாகப் போய் விட்டாலும், இளைப்பாறும் நிழலாக இருக்கும் சுகம்.

ஆமாம், என்னைப் பொறுத்த வரை நட்பு என்பது இளைப்பாறும் இடம். பாசாங்குகளை எல்லாம் துடைத்துப் போட்டு விட்டு முகமூடிகளை எல்லாம் கழற்றி விட்டு நாம் நாமாக இருக்கும் இடம் நட்பு. எந்த விதக் கேள்விகளும் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பு நட்பில் ஒன்றுதான் கிடைக்கிறது. இன்றைக்கும் என்னுடைய நண்பனுக்குத் தொலை பேசி என்ன வேண்டுமானாலும் பேசி மனதைக் கொட்டி விடும் சுவாதீனம் இருக்கிறது. அதுதான் நட்பின் கொடை. பல மாதங்கள் கழிந்து சந்தித்த பிறகு பிரியவே இல்லாதது போல பேச்சு தொடர்வது இந்த உறவில் மட்டும் நடக்கும் அற்புதம்.

இதை(நட்பை) விரிவு படுத்தி உலகெங்கும் இத்தகைய உறவாக மாற்றுவது சாத்தியம் என்று தோன்றுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத நண்பர்

எல்லா எல்லைகளையும் கடந்தது நட்பு என்கிற காலம் போய்..
நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற காலத்தில் வாழ்கிறோம...கடன் நட்பை முறிக்கும் என்கிற வாசகம் சொல்லும் நட்பின் எல்லையை...நட்பு என்பது முள் செடியில் இருக்கும் ரோஜா, கண்னில் இருக்கும் கருவிழி என்பதெல்லாம--நம்முள் இருக்கும் யாதர்த்தத்திற்கு நாம் போட்டுக்கொள்ளும் முகமூடிகளே...

Friendship = Friendship

சந்தோஷத்தை தரும் பொய்யை விட உண்மை தரும் வலி மிகவும் இன்பமானது யாதர்த்தமானது....எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்குமான பதில்கள்தான் வெற்றிகளும் தோல்விகளும்........இதுதான் வாழ்க்கை என்று எடுத்துக்கொள்வதை விட இதுவும் வாழ்க்கை என்பது யாதர்த்தம்...

இங்கு காதலியின் தோல்வியை காதலின் தோல்வியாக சொல்லும் இளைஞர்கள் ஏராளம்....

தன் இயலாமையை சமுதாயத்தின் இயலாமையாக பார்க்கும் மக்கள் ஏராளம்..
ஏன் இந்த முரண்பாடு??? யதார்த்த வாழ்க்கைக்கு முரணாக வளர்க்கப்பட்டதன்
விளைவு....நடப்பதை யார் அறிவார் என்று உளறிக்கொண்டிருப்பதை விட நடந்ததையாவது அறியும் குணம் வளரவேண்டும். குடித்தால் மட்டும்தான் போதையா... படித்தாலும் போதைதான் கவிதைகளை..

கைப்புள்ள

நட்பைப் பற்றி எனை எழுதத் தூண்டினீர்! நான் கவிஞனும் அல்லன் எழுத்தாளனும் அல்லன். ஆயின் இரு கைகள் இல்லாத ஒருவன் தான் இடுப்பில் அணிந்துள்ள உடை விலகி கீழே விழ இருக்கும் அக்கண நேரம், அவனுடைய மானத்தினைக் காக்க தக்க நேரத்தில் (கவனத்தில் கொள்க: தக்க நேரத்தில்) உதவ ஓடோடி வரும் அவ்வுறவே நட்பு என்பதனை குறள் வழி நானறிந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"


நாகை சிவா

தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது. நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை) நேற்றயே பொழுது நல்ல நினைவுகளோடு நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு
நட்பு: நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.

"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்"

இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள். ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம். ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.

நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள். ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி..... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்..... இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை... காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன். என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.

அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்


குறிப்பு:- அணில் குட்டிக்கு மனசி சரியில்லையாம், அதனால பேச வராம் "உம்னு" இருக்கு..சமாதானம் செய்து நாளைக்கு கூட்டிட்டு வரேன், இன்னைக்கு பீட்டர் தாத்தா வரலை..நம்ம நண்பர்களே தத்துவத்தை உதிர்த்துவிட்டார்களே....

Blog நண்பர்கள் நட்பு பற்றி..

Blog நண்பர்கள் - இவர்களை பற்றியும், இவர்களின் பேச்சு திறமை, எழுத்து திறமை என சொல்லி மாளாது.. எனக்கு இவ்வளவு திறமையானவர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக கூட இருக்கும். அதிர்ஷ்டம் என்று சொல்லுவவர்களே, அது இருப்பதால் தான் இப்படி ப்பட்ட திறமை வாய்ந்த நண்பர்கள் எனக்கு தினந்தோரும் கிடைத்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். நட்பு பற்றி அவர்களிடம் கேட்டறியும் ஆர்வத்தில், அவர்களை நச்சரித்து எழுதி கொடுக்க சொல்லியிருந்தேன். என் நச்சரிப்பு தாங்க முடியாமல், இதோ நட்பை பற்றி நம் நண்பர்கள் சொல்லியதாவது.....

எஸ்.பாலபாரதி

அம்மா- தொப்புள்கொடி கொடுக்கும் உறவு.
அப்பா- உயிர் கொடுத்த உறவு.
உடன் பிறப்புகள்- ஒரே ரத்தம் என்பதால் வரும் உறவு.
மனைவி- காமத்தின் அடித்தளம் அமைந்த உறவு.
நட்பு--- எங்கோ பிறந்து, எங்கோவளர்ந்து, எந்த ரத்த உறவுமில்லாமல்.. அன்பு செலுத்துகிற உறவு.
சுருக்கமாகச் சொன்னால்....
எங்கொல்லாம் ஒரு மனம் காயப்படும் போது..
அதற்கு ஆதரவாய் இன்னொரு மனம் குரலெழுப்புகிறதோ..
அங்கே இருக்கிறது நட்பு.


பொன்ஸ்

நண்பர்கள் என்பவர்கள் ஆற்றின் கரை மாதிரி. நம் கருத்துகளில், செயல்களில், அதிகம் ஊடுறுவக் கூடாது. அந்தக் கருத்துகளைச் செதுக்குவதற்கு உதவலாம் ஆனால், கட்டாயப் படுத்தும் அன்போ, நட்போ நிச்சயம் போகப் போகக் கசப்பைத் தரும்.

ஜொள்ஸ்

நட்பு
எனக்கு மிகவும் பிடித்த பூ !
---------------------------------------
உன்னை என்
நண்பர்களுக்கும்
என்னை உன்
நண்பர்களுக்கும்
பிடிக்காவிட்டாலும்
நம்மை பிடித்துவிட்டது
நட்புக்கு!

------------------------------------------
உன்னைக் கொடுத்தால்தான்
என்னைக் கொடுப்பேன்
என்ற பேராசையெல்லாம்
காதலைப்போல்
நட்பிற்கு இல்லை !


சீனு

இந்த உலகில் உள்ள எந்த ஒரு உறவும், ஏதோ ஒரு எதிர்ப்பார்புடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உண்டாவது.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருப்பது திருமணம்
தாய் பிள்ளையை நேசிப்பது, தன் பிள்ளை என்பதால்
தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் இருப்பது கட்சி என்னும் பந்தம்.

ஆனால், எதையும் எதிர்ப்பார்க்காமல் வெறும் நேசத்தை மட்டுமே கொண்டுள்ளது நட்பு மட்டுமே. காரணம், நண்பர்கள் பெரும்பாலும் ஒரே வயது உள்ளவர்கள். அதனால் ஒரே wavelength இருக்கும். இதுவே,மிக முக்கியமான காரணம், அங்கே எதிர்காலத்தினைப் பற்றின பயம் சுத்தமாக இருக்காது. அதனால், கவலைகள் இல்லை. Hostel Life வாழ்ந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

தேவ்

Friendship is something which nurtures no expectations...It allows you to be yourself... Its the most comfortable feeling mankind has been ever blessed with. Friends are reflections of oneself...Friendship is nothing but just taking a look at yourself in a mirror

தேவ் பதிவிலிருந்து எடுத்த அவரின் சில வரிகள்:-

மேடைப்போட்டு அறிவிக்கத் தேவையில்லை
கடமையென்னும் கயிற்றில் கட்டிவைக்க அவசியம் இல்லை
இதயத்தின் ஒரு ஒரம் போதும் நினைத்தவுடன் பூப்பதற்குஅதற்கு நட்பு என்று பெயர்..

அணில் குட்டி அனிதா :-

பாலா அண்ணே சும்மா கலக்கிட்டீங்க போங்க.., எப்படீண்ணே உங்களுக்கு இப்படியெல்லாம் எழுத வருது..அம்மணிய பாருங்க..எதுக்கும் லாயிக்கில்ல..

பொன்ஸ் அக்கா, என்னக்கா இவ்வளவு அற்புதமா friends நொய் நொய் பண்ணக்கூடாதுன்னு சொல்லீட்டீங்க.. முதல்ல இந்த அம்மணி’க்கு சொல்லுங்க.. எப்படி எல்லாரையும் டார்ச்சர் பண்ணி எழுதி வாங்கி இருக்காங்க பாருங்க.. திருத்தமுடியாது இவங்கள.. ,ம்ம்..

ஜொள்ஸ் அண்ணே, ஜொள்ளுமட்டுந்தேன் தெரியும்னு நெனச்சேன்..கவிதையில நட்பை ஸ்பூன் போட்டு கலக்கியிருக்கீங்க... சூப்பரண்ணே..

சீனு அண்ணே வாங்க..ஏதோ கத/லெக்சர் சொல்ல ஆரம்பிச்சி, ஒருவழியா.. எதிர்பார்ப்பு இல்லாதது நட்பு’ ஒரு மேட்டர ஸ்டாராங்கா சொல்லிடீங்க.. உங்களுக்கு எதிர்பார்க்காம ஒரு நாள் கவிதா ஒரு நல்ல அதிர்ச்சிய குடுக்கப்போறதா சொன்னாங்க..(பெரிசா ஒன்னுமில்ல, அவங்க உங்கள பாக்க போறாங்களாம்.. அவங்கள பாத்துட்டு ஜன்னி, கின்னி வந்துர போது பாத்து..உஷாரா இருங்க)

தேவ் அண்ணாச்சி நீங்க எப்பவும் நம்ம கட்சி, அம்மணிய அலக்கழிச்சி எழுதி குடுத்தீங்க போல இருக்கு, உங்கள மாதிரி 2 பேரு இருந்தா போதுமே..கவிதா ஆட்டம் எல்லாம் தானா அடங்கிபோய்டும் அடங்கி.. ம்ம்..அலய விட்டு சொன்னாலும் ‘நட்பு உன்னின் reflection” சொல்லி அசத்திட்டீங்க..

சரி மத்தவங்க எல்லாம் அடுத்த பதிவுல... so......you are in queue...please wait ..(இத எல்லாரும் தேஞ்சிப்போன ரெக்கார்டர் மாதிரி திருப்பி திருப்பி சொல்லுங்க பார்ப்போம் .. அதுக்குள்ள அம்மணி அடுத்த பதிவு போட்டுருவாங்க)


பீட்டர் தாத்ஸ்:

A friend is one who knows who you are, understands where you have been, accepts what you become, and still gently invites you to grow.
A friend is someone who thinks you're a good egg even though you're slightly cracked.
A friend is someone who knows the song in your heart, and can sing it back to you when you have forgotten the words.