ஏன் என்ற கேள்வி ?

சிறு வயதிலிருந்து மட்டும் இல்லை இப்பவும் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது...... நானே அவற்றிற்கு விடை தேடி சந்தேகத்தை தீர்த்துக்கொண்டாலும் இன்னமும் சில கேள்விகள் தொங்கலில் இருக்கத்தான் செய்கின்றன. நீங்கள் பதில் சொல்லுங்களேன்..

1. * இரவில் நிலவு காயும் நேரங்களில், நாம் வானத்தை பார்த்து நடக்கும் போது, நிலவும் நம்முடனேயே வருவது போன்று இருக்கும் அது ஏன்? இது கண் பார்வை சம்பந்தப்பட்டதா? இல்லை நாம் அப்படி நம்முடன் வருவதாக நினைத்துக்கொள்கிறோமா ?

* அப்பாவிடம் சின்ன பிள்ளையாக இருக்கும் போது கேட்டது அப்பாவும் பதில் சொன்னார் தான் , ஆனால் அப்போது புரிந்த மாதிரி இருந்தது..இப்போது புரியவில்லை.

2. எல்லோர் வீடுகளிலும் அப்பா வின் ' அம்மா அப்பா புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள், ஆனால் அம்மாவின் ,அம்மா அப்பா போட்டோவை அவர்களின் நினைவாக ஏன் வைப்பது இல்லை.? ***

3. எல்லா உயிரினங்களும் தண்ணீரில் போட்டவுடன் நீச்சல் (கற்றுக்கொள்ளாமல் அப்படியே நீந்து கின்றன) அடிக்கின்றன. ஏன் மனிதனால் மட்டும் முடியவில்லை. ? **
** என்னுடைய அப்பா இதற்கு ஒரு பிறந்த கோழியை தண்ணீரில் தூக்கி போட்டு அது நீச்சல் அடிப்பதை காண்பித்தார். மனிதன் மட்டுமே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரே தவிர்த்து ஏன் என்று சொல்லவில்லை? ! ஒருவேளை அப்போது நான் ஏன் என்ற கேள்வியை அப்பாவிடம் கேட்க மறந்து கோழி நீச்சல் அடிப்பதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன் எனலாம். :) )

4. பாலூட்டும் உயிரினங்கள் எல்லாமே குட்டி போட்டவுடன், தானே சென்று யாரும் சொல்லி த்தராமல் தாயிடம் பால் குடிக்கின்றன. ஆனால் மனிதனுக்கு மட்டும் சொல்லி தரவேண்டியுள்ளது, ஏன் பிறந்த குழந்தை தானாக இதை செய்வதில்லை?

5. காட்டுக்கு ராஜா வான சிங்கம், நிஜத்தில் ஒரு காட்டெருமையோ, யானையோ அதனருகில் வந்து மூச்சு விட்டால் கூட ஏன் பயந்து ஓடுகிறது? இப்படி ஒரு கோழையான சிங்கத்தை நாம் ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்.? (இதற்கு 'ஹே ராம்' பதில் சொல்வதாக சொல்லி சொல்லவேயில்லை :( )

6. புலிக்கு மரம் ஏற தெரியும்.. ஆனால் ஏன் மரம் ஏறுவதில்லை?

7. பெற்றோர் எல்லோரும் ஏன் பிள்ளை வீட்டில் இருப்பதை/இறப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.? பெண் வீட்டில் அதாவது மாப்பிள்ளை வீட்டில் இருப்பதை ஏன் கெளரவ குறைச்சலாக நினைக்கிறார்கள்? ***

8. பெண்ணை விட ஆணுக்கு தசைகள் அதிகம் இருப்பதால் தான் அவன் பெண்ணை விட உடல் வலிமை அதிகமானவனாக இருக்கிறான். சரியா?

9. தென் இந்திய கோயில்களின் கருவறை மிகவும் குறுகிய, உயரம் குறைந்த வாயில் கொண்ட வெளிச்சம் இல்லாத இருட்டறைகளாக அமைக்கப்பட்டதன் காரணம் என்ன?

10. மருத்துவம் படிப்பவர்கள், (ஆண்/பெண்) பாலியல் உறவை எளிதாக வைத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு பெரிய பொருட்டாக நினைப்பதில்லை. அதற்கு அவர்களின் படிப்பு சார்ந்த அறிவும், பாதுகாப்பு முறைகளும் தெரிந்திருப்பது காரணம். உண்மையா? *** (தனிநபர் சம்பந்தப்பட்டது என்றாலும் இந்த கேள்வி எங்கோ எதையோ கேட்டு எழுந்தது)

11. முகம் பார்க்கும் கண்ணாடியில் சிலரின் முகம் கோணலாக ஏன் தெரிகிறது. அதாவது அவருக்கு அவர் முகம் நேராக அழகாக தான் தெரியும், பக்கத்திலிருந்து பார்க்கும் எனக்கு கோணலாக தெரியும். அவரிடம் என் முகத்தை அவர் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேட்டால் சரியாக த்தான் தெரிகிறது என்பார். இதில் கண்ணாடியில் பிரச்சனையா இல்லை... என் கண்களில் பிரச்சனையா.? இல்லை அவர் முகமே கோணல் முகம் தானா?

12. காண்டாமிருகம் ஒரு சைவ விலங்கு. ஆனால் இறந்து கிடக்கும் மிருகங்களின் மாமிசங்களை தின்ன முயற்சி செய்கிறது ஏன் என்பது விளங்கவில்லை. அதனுடைய பற்கள் அவற்றிற்க்கு உகந்தது அல்ல என்றே நினைக்கிறேன். ஒரு வேளை பற்கள் உகந்ததாக இருந்தால், அசைவமாக ஆக இருந்து இருக்குமோ?

13. நம் மக்கள் முடிவே இல்லாத/இல்லாமல் செய்கிற மெகா சீரியல் எடுப்பதை எப்போது நிறுத்துவார்கள்?

14. தேங்காய்-கொழுப்பு என்று உணவில் கட்டுப்படுத்த சொல்லும் போது, எப்படி கேரளாவில் தேங்காய் எண்ணெய் யில் சமைத்த உணவும், தேங்காய் எல்லாவற்றலும் சேர்த்த உணவை வாழ்க்கை முழுதும் சாப்பிடுகிறார்கள், அவர்கள் ஆரோக்கியமாக இல்லையா?

15. மீன் தண்ணீருக்குள் எப்பவும் நீந்திக்கொண்டே இருக்கிறதே அதன் Fins வலிக்காதா?

அணில் குட்டி அனிதா : கவி நீங்க கூட எப்படி எப்போதும் பேசிக்கிட்டே இருக்கீங்கன்னு உங்க வீட்டில இருக்கவங்க கேட்டுக்கிட்டே இருக்காங்களே அதுக்கு பதில் தெரியுமா உங்களுக்கு?

பீட்டர் தாத்ஸ் : The question isn't who is going to let me; it's who is going to stop me.

*** இந்த கேள்விகளை தனிப்பட்ட முறையில் யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம், பொதுவாக எனக்கு தோன்றிய கேள்விகள்.


ஏதோ சொல்ல நினைக்கிறேன்...

மெளனம்

உன்
பெயரே
தலைப்பானால்...


சிகிரெட்

என்
முகத்தை
எட்டு கோணலாக்கும்
எளிய
சாதனம் !!

உழைப்பு

வியர்வையும்
மணக்கும்..!!

அழுகை

அழுகையும்
சுகம்
உன் மார்பில்
முகம் புதைக்கும் போது ..........

பட்டம்


சுதந்திரமாக
பறக்கிறாய் தான் !!
எப்போதும்
உன்
சுதந்திரம்
யாரோ ஒருவரின் கையில்.........

கீ போர்டு

உனையன்றி
யாரறிவார்
எனை :)

காதல்

முட்டாள்களின் மூச்சு !
அறிவாளிகளின் யதார்த்தம் !
அனைவரும் கடந்து போகும் பாதை !
கானல் நீர் !
கிடைத்துவிட்டால் பைத்தியம் !
கவிதைகள் என்ற கிறுக்கல்கள் !
கல்யாணத்திற்கு பிறகு காணாமல் போகும் !!

திருமணம்

வாழ்க்கையை
போல
ஒருமுறை வருவது....

கடவுள்

நம்முள்
அன்பிருப்பதால்
நாமும் கடவுள் !!


நட்பு

என்
உயிரை குடிக்கும்
மருந்து!!


சொந்தம்

தனி மரம்
தோப்பாகாது ...!!
பழமொழிக்காக
தேவை...!!

சுதந்திரம்

தேவைக்கு
தேவை
எப்போதும்
தேவையில்லை


அழகு

உன்
நினைவுகளில்
எப்போதும்
நான்
அழகு !! :)

பூக்கள்

கவிதா'க்கள் !!
பூக்களை பறிக்காதீர்கள்!!

கனவு

துரத்த துரத்த
ஓடுவேன்

ஓடி ஓடி
கலைப்பேன்

உயரத்திலிருந்து
பாதாலத்திற்கு
குதிப்பேன்

தண்ணீரில்
மூழ்கி
மூச்சி முட்டி
தவிப்பேன்...

கனவு
பயம்..

இதுவும் காதலாம்......

நல்வாழ்த்துக்குள்
பல சொல்லி
நலம் வாழ

வாழ்த்த இயலாத
வயிற்றெரிச்சலை
வார்த்தைகளால் வாரி
இறைத்து ........

தன் நலம்
மட்டுமே
கண்ட/ கொண்ட
சுயநல பிதற்றல்களோடு....

புனித பிம்பங்களாக
காட்டிக்கொள்ளும்
சிலருக்கு
அது தான்-
"காதல்" என்ற "கருமாந்திரமோ?????

திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு,

உன்னை போல் ஒருவன்... Excellent !! படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் நினைத்தது "இந்த கலைஞனின் வயது எப்படியாவது இன்னும் சில வருடங்கள் பின்னோக்கி சென்று விடக்கூடாதா? இன்னமும் எத்தனை தரமான படங்கள் கிடைக்கும்"

இந்த கடிதம் படத்தினை பற்றிய விமர்சனம் இல்லை, நிறையவே குறைகள் உள்ளன, சில விஷயங்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு இருக்கின்றன. அதையெல்லாம் உணராதவராக நீங்கள் இருக்க முடியாது என்பதில் ஏனோ எனக்கு நம்பிக்கை, அதனால் விமர்சனமாக இதை எழுதவில்லை, விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் புத்திசாலியும் இல்லை.

உங்களின் படங்கள் சில பார்த்துவிட்டு திரை அரங்கை விட்டு வெளியில் வரும் போது படத்தில் சொல்லப்பட்ட கருத்து, படம் எடுக்கப்பட்ட விதம், உங்களின் ஆழ்ந்த நடிப்பு, சின்ன சின்ன விஷயங்களில் உங்களின் கவனம்,ஈடுபாடு, சிந்திக்க வைக்கும் வசனங்கள், கதாநாயகிகளுக்கு நீங்கள் கொடுக்கும் முத்தம், அவர்களை பின்புறமாக வளைத்து எப்படி எளிதாக தூக்குகிறீர்கள், ரொம்பவும் நுட்பமாக கவனித்து செய்திருக்கும் உங்களின் உடல் மொழியும், முக பாவனைகள் என்று எல்லாவற்றையும் அசைப்போட்டு வருவதால் தலை பாரமாக ஆகுவதை தடுக்க முடியாது,... அப்படி அதிகமாக பாதித்த படம் மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், இப்போது உன்னை போல் ஒருவன்.

ஒரு(இரண்டு) கேள்வி உங்களிடம்....

மகாநதி - அடிப்பவனை திருப்பி அடி

ஹே ராம் - இன்னுமொரு "அன்பே சிவம்" என்று வைத்துக்கொள்ளலாமா?


அன்பே சிவம்... - அன்பே சிவம் :)

உன்னை போல் ஒருவன் - தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியும்.


புரியவில்லை.... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்

அன்பே சிவமா?
தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் மட்டுமே ஒழிக்க முடியுமா?

உங்களின் intelligence, patriotic thought, society consciousness & responsiveness ஆகியவற்றை கவனத்துடனும், ஆர்வத்துடனும் பார்க்கும் ஒரு ரசிகை. இந்த படத்தை உங்களின் மற்ற சில படங்களோடு ஏனோ ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இன்னமும் சிறந்த படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும்

A Common Woman & ஒரு (தீவிரமில்லாத) ரசிகை :)

நாதம் என் ஜீவனே....

One of my favorite. .from the date it introduced… பள்ளி, கல்லூரி, அலுவலகம் எல்லா இடங்களிலும் அதிகமாக ஜானகி அம்மா பாடல்கள் தான் பாடியிருக்கிறேன்.

படம் : காதல் ஓவியம்
இசை : இசைஞானி

Get this widget | Track details | eSnips Social DNA


தானம் தம்த தானம் தம்தா
தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்
ஒலையில் வேறேன்ன செய்தி?
தேவனே நான் உந்தன்பாதி..
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன்
சந்தம் தந்த சொந்தம்..

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ... பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

அமுதகானம் நீதரும் நேரம்.நதிகள்
ஜதிகள் பாடுமே...
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகி போகுமே
கண்களில் மெளனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடிவா பன்னீர் மேகமே
மார்மீது பூவாகி வீழவா...
விழியாகி விடவா..?

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே ஓ...பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல
நானும் வாழ்கிறேன்..
உறக்கமில்லை எனினும் கண்ணீல் கனவு
சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்..
விலகாது விரகம்

நாதம் என் ஜீவனே...வா வா என் தேவனே...
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே!
நாதம் என் ஜீவனே...

.

சிபி, உண்மைத்தமிழன், கவிதா - யாரு லூசு?

கவிதா : சிபி... உண்மைத்தமிழன் "நான் ஒரு லூசு" ன்னு உங்க கிட்ட சொன்னாறா?

சிபி : சொல்லியிருக்கலாம் நினைவில்லை..

கவிதா : ஆமா அவரு என்னை லூசு ன்னு சொல்லி இருக்காரு அதை ஏன் நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல? :(

சிபி : எல்லாருமே சொல்றத தானே இவரும் சொல்றாருன்னு நான் கேர் பண்ணாம விட்டு இருக்கலாம்...

கவிதா : :((

சிபி : ஆனா அது ஒரு பெரிய லூசு...

கவிதா : ஹை.. அப்ப உங்கள மாதிரியா?

சிபி : வேல வெட்டிய பாக்காம .. அவங்க எல்லாரும் எழுதற பதிவ படிக்கற நாம எல்லாருமே லூசு தான்..

கவிதா : அட ஆமா இல்ல????

சிபி : ஆமாவா இல்லையா?

கவிதா : ஆமா.. ..எல்லாருமே லூசுங்க தான்.. !!! :(((((((((((((


அணில் குட்டி அனிதா : வந்த வேலை முடிஞ்சிது.. .... நமக்கு இன்னைக்கு பூரா பொழுது போகும்.. :))))))))) அப்ப அப்படி ஓரமா ஒக்காந்து படம் பாக்காலாம் வாங்க...

மாலை நேரம் மழை தூறும் காலம்....


இந்த பாடல் கேட்டவுடன் பிடித்து போனது.. காரணம் பின்னனி இசையின் கிட்டார்.. அப்பா நன்றாக கிட்டார் வாசிப்பார். ஒரு சிகப்பு கலர் எலக்ட்ரிக் கிட்டார் வைத்து இருந்தார்,என்னவோ இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் அப்பாவே வாசிப்பதாக கற்பனை செய்து க்கொள்வேன் :)

என் குரலுக்கு சம்பந்தமில்லாத ஒரு பேஸ். ரொம்பவும் பிடித்ததால் பாடியிருக்கிறேன்.

Malai neram.mp3


மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே

ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..

உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என

ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது - அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம் - அன்பே
இதம் தருமே..

ஒரு முறை
வாசலில்
நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன?

(மாலை நேரம் மழைத்தூறும் )
(ஒ ஹோ காதல் இங்கே ஓய்ந்தது)

.

அடமும் அழுகையும்...எளிதான விஷயமா என்ன?

பொதுவாக யாராவது அழுதாலோ, அடம் பிடித்தாலோ நமக்கு பார்க்க பரிதாபமாக இருக்கும். ஆனால் என் விஷயத்தில் எதிராளி டெர்ரராக மாறி ஒன்று என்னை தூக்கி போட்டு மிதிப்பார்கள் இல்லையென்றால் காமெடி பீஸ் ன்னு தூரமா இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு சிரித்துவிட்டு போயிக்கிட்டே இருப்பார்கள். இந்த இரண்டு ரிசல்ட் 'ஐ எதிராளியிடம் இருந்து வரவைப்பது அப்படி ஒன்றும் லேசுப்பட்ட காரியம் இல்லை என்பதை நீங்கள் எல்லாம் இந்த பதிவை படித்து முடிக்கும் போது புரிந்துக்கொள்வீர்கள்.

அடம் பிடிப்பதற்கென்று சில அடிப்படை தகுதிகள் இருக்கு, அது எல்லாருக்கும் இருப்பதில்லை.. அது என்ன அப்படி தகுதின்னு நீங்க ரொம்ப ஆர்வத்தோட கேட்கறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது தான்.. உங்க ஆர்வத்தை மதித்து, நானும் நீங்க எங்க இருந்தாலும் அது வரைக்கும் சவுண்டு விட்டு சொல்றேன் கேட்டுக்கோங்க......

முதல் ரவுண்டு தகுதி :- இங்கே..ரவுண்டு என்ற வார்த்தையை யாரும் தவறாக அர்த்தம் செய்துக்கப்பிடாது, ரவுண்டு என்றால் சுற்று.

1. சூடு சுரணை போன்றவை பற்றிய கவலை


ஹி ஹி.. இதுக்கு எல்லாம் கவலை படறவங்க எல்லாம் அடம் பிடிக்கறதை பத்தி நினைச்சி கூட பார்க்கக்கூடாது, அவங்க எல்ல்லாம் முதல் சுற்றுல வெளியில போயிடுங்க.. இவை எல்லாம் இல்லாதவங்க மட்டும் மேற்க்கொண்டு படிக்கலாம்.

குறிப்பாக இதை எதற்கு சொல்றேனா... நாம அடம் பிடிக்கறதை பாத்து எதிராளி ரொம்பவே கோவப்பட்டு கேவலமான* ஆயுதங்களால் உங்களை தாக்கக்கூடம், ஆனால் நீங்கள் மானம் மரியாதை சூடு சுரணை எதுவும் இல்லாதவராக இருந்தால் மட்டுமே அவற்றை எல்லாம் வாங்கிக்கொள்ள முடியும். அப்புறம் நாலு பேரு நம்மை வேடிக்கை பாக்கறங்களே ன்னு கூச்சம் நாச்சம் எதுவும் எல்லாம் எப்பவும் இருக்கப்பிடாது. பெருமையா நினைக்கனும்.

2. அடுத்து, அடம் பிடிக்க நல்லா ப்ளான் பண்ணனும். எப்படிப்பட்ட எதிர்வினைகள் உங்கள் மேல் தொடுக்கப்பட்டாலும் அதை தாங்கக்கூடிய உடல் வலிமையும் மனவலிமையும் உங்க க்கிட்ட கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏன்னா நீங்க அடம் பிடிப்பதை பார்த்து,எதிராளிக்கு கோவம் வந்து அவர்கள் டெர்ராக மாறி....... ஓஒடீஈஈஈ வந்து உங்களை.........

=>ஒரே மிதி மிதிக்கலாம்,
=>திடீரென்று தூக்கி போட்டு கூட மிதிக்கலாம்,
=>பெரிய பிரம்பு எடுத்துவந்து எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு முடியுமோ அவ்வளவு அடிக்கலாம்.
=>துடைப்பம், செருப்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்த நேரிடலாம்
=>ஏன் ரொம்பவே டெரர்ராகி உலக்கை, கத்தி, அறிவாள்மனை, சுத்தி, மன்வெட்டி, பாண்டு, செங்கல் போன்ற ஆயுதங்களை எடுத்து வன்முறையில் கூட ஈடுபடலாம்

ஆனால் எப்படிப்பட்ட வன்முறை உங்கள் மேல் அவிழ்த்து விடப்பட்டாலும், உங்களின் மனமும் உடலும் சோர்ந்து போகக்கூடாது. போருக்கு செல்லும் வீரம் உங்களிடம் இருக்க வேண்டும். அடம் பிடிப்பதில் இருந்து எள் அளவும் பின்வாங்கவே கூடாது.

அடுத்து, எவ்வளவு அடித்தாலும், வலிக்கிறதோ வலிக்கலையோ அடிவாங்கிட்டே அழதுக்கிட்டே இருக்கனும்.. அழறதும் சும்மா எல்லாம் அழக்கூடாது கண்டிப்பாக உங்க வீட்டை சுத்தி ஒரு, ஒரு கிலோ மீட்டர் அளவு சத்தம் ரீச் ஆகற அளவு கத்தி அழனும்,. இப்படி சத்தம் போட்டு கத்தி அழறதால *தொண்டை கொஞ்சம் கிழியற ஸ்டேஜ் க்கு போகும்..ஆனா முன்ன சொன்ன மாதிரி எந்த மாதிரி பிரச்சனை வந்தாலும் முன் வைத்த காலை மட்டும் பின் வைக்கவே கூடாது... நல்லா இன்னும் சத்தம் போட்டு கத்தி கத்தி அழனும்.. *தொண்டை புண் ஆறுவதற்கு தேவையான டிப்ஸ் கடைசியில் கொடுக்கப்படும்.

அப்படி சத்தமாக அழறதோட பலன் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு தெரியும் பாருங்க....! இந்த அழுகை சத்தம் கேட்டு உங்க வீட்டில் மூளை முடுக்கில் இருக்கும் பெருசு, சிறுசு, மீடியம் பர்சனாலிட்டிங்க எல்லாம் வருவாங்க. அது மட்டும் இல்லை அக்கம் பக்கம் வீட்டில் இருக்கவங்க, பக்கத்து தெரு வரைக்கும் சத்தம் ரீச் ஆச்சின்னா அங்க இருக்கவங்க எல்லாரும் என்னவோ ஏதோ ன்னு பதறி அடிச்சிகிட்டு ஓடி வருவாங்க.. சரி சரி... உங்க கவனம் இங்கத்தான் இருக்கனும், கூட்டம் எல்லாம் நல்லா கூடிடுத்தான்னு அழுதுக்கிட்டே நைஸ் ஸா சுத்தி பாத்துக்கோங்க.. இப்பத்தான் பர்ஃபாமன்ஸ் ஸை நல்லா ஆரம்பிக்கனும். "

"அய்ய்யாயோ அய்யோ...யம்மாம்ம்மாஆ.ஆஅ யம்மா யம்மாஆஅ....என்னை இப்படி அடிச்சி அடிச்சி இந்த வீட்டில கொல்றாங்களே இதை யாருமே கேக்கவே மாட்டீங்களா? ? அதுவும் ஒரு பொண்ணு குழந்தை ன்னு கூட பாக்காம அடிக்கறாங்களே....இதை இவ்ளோ பேரு பாக்கறீங்களே கேக்கவே மாட்டீங்களா? எவ்வ்வ்வ்ளோஓஓஓஓஓஒ வலிக்குது தெரியுமா... ம்ம்ம்..:( .தாங்கவே முடியல தெரியும்மா....:( ம்ம்ம்ம்..ஆமா பாருங்க;ன்னு " ன்னு அடிச்ச இடம் ஏதாச்சும் சிவந்து பழுத்து போயி இருந்தா காட்டி ஒரு பரிதாப அலைய உருவாக்கனும். (இந்த லோகேஷன் எல்லாம் நீங்க எல்லார் எதிரேவும் தேடி எடுக்கக்கூடாது, அடிவிழும் போதே எங்க எங்க பன்னு மாதிரி உப்பி இருக்குன்னு நோட் செய்து வச்சிக்கிட்டு இன்ஸ்டன்ட் டா காட்டனும்) ..

பெருசுங்க தான் முதல்ல ஆரம்பிக்கும்.. "ஏன் சின்ன புள்ளைய போட்டு இப்படி அடிக்கறீங்க... பாவங்க எப்படி கன்னி போய் இருக்கு பாருங்கன்னு" நம்மளை அடிச்சி துவைக்கற நல்லவங்களுக்கு அட்வைஸ் செய்வாங்க.. .இந்த சந்தர்ப்பத்தை விடவே கூடாது..

ஆனா நீங்க என்ன பேசினாலும்.. அழுகையை மட்டும் சைட் ல மெயின்டெயின் செய்துக்கிட்டே இருக்கனும், கூட்டத்துல யாரும் பேசறதை பராக்கு பார்த்து பர்ஃபாமென்ஸை கோட்டை விட்டுடக்கூடாது. அழுதுக்கிட்டே பேசறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்ங்க, செய்ய செய்ய பழகிடும். இப்ப உடனே.. " நல்லா கேளுங்க தாத்தா.. இப்படித்தான் இந்த வீட்டுல அநியாயம் நடக்குது, எது கேட்டாலும் என்ன செய்தாலும் அடிச்சே என்னை கொல்றாங்க....". ன்னு சொல்லும் போதே..நம்மை அடிக்கறவங்க இன்னும் டெரரா ஆகி, இன்னும் இரண்டு உதை கண்டிப்பா கொடுப்பாங்க.. (it is human nature u know) ... ஆனாலும் நாம் பரிதாபம் சம்பாதிக்கறதை விடவேப்பிடாது, அடிக்கறவங்களையும் அழுதுக்கிட்டே திட்டனும்..

"நீ நல்லா இருப்பியா.. சின்ன புள்ளய இவ்வளாம் பெரிய பிரம்பு வச்சி அடிக்கறயே.. உனக்கு மனசாட்சியே இல்லையா... நீ அடிக்கறதை கேக்க யாரும் இல்லைன்னு நினைச்சியா. .பாரு பாரு எவ்வளவு பேரு இருக்காங்க.." ன்னு அழுதுக்கிட்டே பரிதாபமாக கூட்டத்தை பாத்து ஒரு லுக் விடனும்.. ."உன் கிட்ட அடிவாங்கி வாங்கியே நான் ஒரு நாள் செத்து போயிடுவேன் போல இருக்கே.." ன்னு டயலாக் டெலிவரி செய்யனும்....

3. இதுல முக்கியமாக சொல்லவேண்டிய விஷயம் பொஷிஷன்..

அடம் பிடிக்க ஆரம்பிக்க முன்ன, வீட்டில் எந்த இடத்தில் உட்காரனும்னு இடத்தை முதலில் சூஸ் செய்துக்கனும். கை, காலை நல்லா உதச்சி , உருண்டு பிரண்டு அழறமாதிரி இடம் தாராளமாக இருக்கனும், அடுத்து நாம் போடற சத்தம் , வீடு முழுக்க கேட்கறது இல்லாமல் அக்கம் பக்கம் வீடு, தெரு வெல்லாம் ரீச் ஆகனும். .எல்லாத்தைவிடவும் ரொம்பவும் முக்கியம், நம்ம பர்ஃபாமன்ஸ் ஓவர் ஆகி, ஒரு டெரர் க்கு பதிலா வீட்டில் இருக்க எல்லாருமே டெரரா மாறி ஒன்றாக சேர்ந்து கும்ம வந்துவிட்டால்....???!! .அப்படி நடக்கும் பட்சத்தில்....... எழுந்து வேகமாக வீட்டை விட்டு ஓட வசதியாக இருக்கனும். இது தான் ரொம்ப முக்கியம். எல்லாத்துக்குமே ஒரு முடிவு இருக்கு இல்ல.. இவங்க பாட்டுக்கும் மானவாரிக்கு நம்மை அடிச்சிக்கிட்டே இருந்தா, நம்ம உடம்பும் தாங்கனும் இல்லையா... அதுவும் கூட்டமா சேர்ந்து கும்மனும்னு முடிவு செய்த பிறகு நாம அங்க இருக்கலாமா.. கூடவே கூடாது..... அதனால் ஒரு ஸ்டேஜுக்கு மேல .. ஒரேஏஏ ஓட்டம் .. யார் துரத்தினாலும் பிடிக்கமுடியாத ஸ்பீட் ல ஓடிடனும். இந்த ஓட்ட பயற்சி எல்லாம் நீங்க முன்னமே கத்துக்கிட்டு இருக்கனும்.

4. வீட்டை விட்டு ஓடி விட்டால் வருவது எப்படி : இதுவும் ஒரு தனி கலை. ஓட்டாமா ஓடி நான் எப்பவும் போய் தஞ்சம் புகும் இடம் என் அத்தை வீடு தான். அங்க உள்ளே போனவுடன், அத்தைக்கு இங்க என்ன நடந்தது தெரியாதவாறு (தெரிந்தால் அவங்க தனியா அடிக்க ஆரம்பிப்பாங்க), சிரித்த முகத்தோடு அத்தை பிள்ளைகளுடன் நன்றாக விளையாடிவிட்டு, அங்கேயே நல்லா கொட்டிக்கிட்டு, உடம்பு வலி போக அங்கேயே படுத்து நல்லா தூங்கிட்டு, பொறுமையாக வருவேன். வரும்போது, மெதுவாக வீட்டில் யார் யார் எந்த பொஷிஷனில் இருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு சத்தமே இல்லாமல் நைஸ் ஸாக பெருசுகள் எங்க இருக்குன்னு பாத்து செட்டில் ஆயிடுவேன். அவங்க தான் நம்மை மேற்க்கொண்டு காப்பாத்துவார்கள்.

விழு புண்களை சரி செய்ய டிப்ஸ் :- எப்படியோ இப்படியே கண்டிநீயூ செய்து , நினைத்ததை சாதித்த பிறகு - வீட்டுல நம் மேல ஓவரா பாசத்தோட இருக்க ஒரு பெருசா பாத்து செட்டில் ஆகிடனும். தாத்தா/ஆயா ஈஸ் பெஸ்டு. அவங்க கிட்ட வீங்கிய இடங்கள், தொண்டை புண் இவற்றை விக்கி விக்கி...விக்கி அழுதுக்கிட்டே காட்டனும். அவங்களும் பரிதாபப்பட்டு தேங்காய் மரக்கொடி எண்ணெய், அய்யோடக்ஸ், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தேய்த்து நம் விழுபுண் களை ஆற்றி அடுத்த போருக்கு நம்மை தயார் படுத்துவார்கள். தொண்டை புண் னுக்கு பால் குடிக்கனும் பிறகு மனத்தக்காளி பழத்தை சாப்பிடனும், மனத்தக்காளி இளை சாறு, அதில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

இது வரை இப்படி அடம் பிடித்து என்ன சாதித்தேன் னு கேட்கறீங்களா? நல்ல கேள்வி.நிறையவே இருக்கு.. உங்களுக்காக சில.. :)

1.ஒரு முறை சினிமா வுக்கு அழைத்து போக சொல்லி கேட்டு.. ஆயா முடியாது என்ற சொன்னவுடன், செருப்பு விடும் இடத்தில் அழ ஆரம்பித்தது தான், தொடர்ந்து ஒரு 4.5 மணி நேரம் உருண்டு பிரண்டு, கை கால் எல்லாம் உதைத்து அழுதேன்..(அதை எல்லாம் சரியா செய்துவிடுவேன்) நான் அழுவதை பார்த்து தாத்தாவிற்கு நெஞ்சு வலி வந்துவிட, "அம்மா அழாதம்மா நீ அழுதா தாத்தாவால தாங்க முடியலம்மா.."ன்னு சொல்ல...அதை சாதகமாக பயன்படுத்தி அவரிடமே 4 ரூ வசூல் செய்துவிட்டு போனா போகுது என்று அடங்கினேன். ஆனா சினிமா அழைத்து செல்ல யாரும் இல்லாததால் பணம் மட்டும் கொடுத்துவிட்டார்கள். அடியா? இல்ல கிடைக்கல.. அடிவாங்கினது எல்லாம் தனியா பதிவாக போட்டு இருக்கோம் இல்ல...

2. மற்றொரு நாள், மதியம் 12 மணிக்கெல்லாம் எனக்கு பசி எடுத்துவிட்டது. ஆயா அப்போது தான் உலை கொதித்து அரிசி போட்டார்கள், அதை நானும் பார்த்தேன். பசியை அடக்க முடியவில்லை, 10 நிமிடம் இரும்மா வெந்துடும் னு சொல்லியும் நான் கேட்கவில்லை. உடனே உட்கார்ந்து கை காலை உதைத்து அழ ஆரம்பித்தேன்.. "அய்யோ வயறு எல்லாம்...பசிக்குதே. .இந்த வீட்டில் பசிக்கு க்கூட சாப்பாடு போட மாட்டேங்கறாங்களே, இப்படி அழுது அழுது கேக்க வேண்டியதா இருக்கே..என்னால பசிய தாங்கவே முடியலையேன்னு....இதை யாருமே கேக்க மாட்டீங்களா... "ன்னு அழ ஆரம்பிச்சது தான்.. .ஆயாவுக்கு நிஜமா என்ன செய்யறதுன்னு தெரியாமல், கொதிக்கற உலையில் இருந்து வேகாத அரிசியை அப்படியே ஒரு தட்டில் போட்டு உப்பு சேர்த்து, "திண்ணு தொல ஆன உன் வாய மட்டும் மூடு ன்னு கொடுத்துட்டு போயிட்டாங்க.. " நானும் சரி போனபோகுதுன்னு அந்த வேகாத (அவ்வ்வ்வ்வ் .. ) அரிசியை உட்கார்ந்து சாப்பிட்ட்டேன்.... :(

3. லேட்டஸ்ட் : பாத்ரூம் கதவை மூட போகும் போது என்னுடைய இடது கை கட்டை விரல் கதவிடுக்கில் இருப்பதை கவனிக்காமல் வலது கையால் கதவை நன்றாக இழுத்து சாத்திவிட்டேன். கட்டைவிரல் சூப்ப்ராக நசுங்கி....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா என்னா வலி.. வலி தாங்க முடியாமல் ஓஓஒ வென்று அழகை மட்டும் இல்லை.. நிஜமாக கால் பூமியில் நிற்காமல் குதித்து குதித்து அழுகை. அவ்வளவு வலி. கத்தின கத்தில் கூட்டம் சேர்ந்துவிட்து தான். என் மகனுக்கு மட்டும் ஒரே சிரிப்பு... "ஐ..கைய நசுக்கிகிட்டயா?... எங்க காட்டு ...ஐ..உன் கட்டை விரல் இப்பத்தாம்மா ரொம்ப அழகா இருக்கு்.!! ஆமா நீயே தானே நசுக்கிகிட்டே எதுக்கு இப்படி ஊரையே தூக்கற மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற. . வாயை மூடி சத்தம் இல்லாமல் அழு" என்றான். அவன் சொன்னதற்காகவே.."எனக்கு எவ்வளவு வலிக்குது, நீ எப்படி என்னை சத்தம் போடாமல் அழ சொல்ற" ன்னு இன்னும் கத்தி அழ ஆரம்பித்தேன்" புள்ள பயந்து போய்.. "அய்யோ யம்மா தெரியாம சொல்லிட்டேன்.. நீ கத்தாத... " ன்னு என் வாயை அடைக்க. வர... "என் வாயை அடைச்சா இன்னும் கத்துவேன்" னு இன்னும் சத்தம் போட்டு கத்த.... அவ்வ்வ்வ்வ்.. கடைசியில என் புள்ள ..சரி எப்படியோ அழுது தொலச்சிக்கோஒ.... ன்னு விட்டுட்டு போயிட்டான்.....ம்ம்ம் அது!!

அணில் குட்டி அனிதா : தூஊஊஊஊ..!!!

பீட்டர் தாத்ஸ் : “I have done that," says my memory. "I cannot have done that" -- says my pride, and remains adamant. At last -- memory yields.”

மாமியாரிடம் யாராவது இப்படி திட்டு வாங்கி இருக்கீங்களா?

திருமணம் ஆன 15 நாட்களுக்குள் என் மாமியாரிடம் திட்டு வாங்கினேன். என்னவோ அவங்களுக்கு நல்ல நேரம் தப்பிச்சிட்டாங்க'ன்னு நினைச்சுக்கலாமா? அப்படித்தான் நினைத்து போனா போகுது நானும் விட்டுட்டேன்.

நான் திருமணம் முடித்து என் கணவருடைய வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு நாள் என் மாமியார் மீன் குழம்பு வைத்திருந்தார். எனக்கு எப்பவும் ஆயா மீன் ஆய்ந்து கொடுத்து சாப்பிட்டு தான் பழக்கம், அதனால் இப்பவும் எனக்கு ஆய்ந்து சாப்பிட சோம்பேறி த்தனமும் சரியாக ஆயவும் தெரியாதது என்பது ஒரு கேவலமான விஷயம் தான். என்ன செய்வது மீனுக்கும் எனக்கும் அவ்வளவு ராசி, எப்படி ஆய்ந்து சாப்பிட்டாலும் தொண்டையில் எப்படியும் ஒரு முள் குத்தி, என்னை அழவைக்காமல் விடுவதில்லை. அதனால், மீன் மட்டும் யாராவது ஆய்ந்து கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையை வளர்த்துக்கொண்டேன். ஆய்ந்து கொடுக்க யாரும் இல்லாத பட்சத்தில் " நீ யாரோ நான் யாரோ" ன்னு மீனை பார்த்து சொல்லிவிட்டு மீன் குழம்பு மட்டும் போட்டு சாப்பிடுவேன்.

அன்று என் மாமியார், என் கணவருக்கும் எனக்கும் பரிமாறிவிட்டு உட்கார்ந்து நாங்கள் சாப்பிடுவதை ரசித்துக்கொண்டு இருந்தார், நான் மீன் ஆயத்தெரியாமல் ஆய்வதை பார்த்து "என்ன பொண்ணு மீன்'ஐ ஆய சொன்னா பூச்சி பிடிக்குது?" என்று கிண்டல் அடித்துவிட்டு, நான் ஆய்வதை பார்த்து சிரித்தவாறே இருந்தார்கள். (but no help from anyone!! )

புது மனிதர்கள், யாரிடம் போய் மீன் ஆய்ந்து கொடுன்னு கேட்பது, சரி நாமே முயற்சி செய்வோம் னு ரொம்ப தீவரமாக நான் மீன் ஆய்வதில் கவனமாக இருந்ததில் என் கணவர் சாப்பிடுவதை கவனிக்கவில்லை. என் மாமியார் திருப்பி இரண்டு முன்று முறை அவருக்கு பரிமாறியவுடன், என்னடா இது ஒரு மீனை நாம இன்னும் ஆய்ந்தே முடிக்கல அதுக்குள்ள அவர் 2,3 ரவுண்டு சாப்பிட்டுடாறா? என்று அவர் சாப்பிடுவதை அதற்கு பிறகு தான் தலையை உயர்த்தி பார்க்க ஆரம்பித்தேன்.....ஆனா திரும்பி என் இலைக்கு நான் வரவே இல்லை.


அத்தனை அழகாக மீனை இது வரை யாரும் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை :) ஒரு மீனை வாலை பிடித்து எடுக்கிறார், வாய்க்குள் அப்படியே போட்டு ஒரே இழூ....... வெளியில் வருவது வெறும் முள் தான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..எப்படி இப்படி..??? உள்ளே மீனா போகுது வெளியில வரும் போது வெறும் முள்ளு மட்டும் தான் வருது?? இது ஒரு கலை போலவே. ? முதல் மரியாதை சினிமாவில் நடிகர் திலகம் சூப்பரா சாப்பிடுவாரு.. அந்த அம்மா ராதாவும் சாப்பிடுவாங்க. .இப்படி சினிமாவில் பார்த்தது ...இப்ப நேரா பார்ர்க்கும் போது வாயில் எச்சில் ஊறாமல் இருக்குமா சொல்லுங்க?

எச்சில் ஊற ஊற அவர் சாப்பிடுவதை நான் கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் சாப்பாட்டில் என் கவனம் செல்லவே இல்லை. .. எப்படி முள் வாய்குள்ள குத்தாமல் வெளில வருது ன்னு ஒரே ஆச்சரியம். ! புது பெண்ணாச்சே, புது வீடு , புது மனுஷங்களாச்சேன்னு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்து இருக்கலாம். நமக்கு தான் அந்த பழக்கம் எந்த காலத்திலியும் இருந்தது இல்லையே..! ரொம்ப ஆர்வத்தில்.....

:))) அய்ய்ய்..!! எப்படிங்க நீங்க மட்டும் இப்படி சாப்படறீங்க? " எங்க வீட்டுல எல்லாம் இப்படி நாங்க சாப்பிட மாட்டோம் னு.." ன்னு சொல்ல ொல்ல...

என் மாமியாருக்கு வந்ததே பாருங்க கோவம்...... "இந்தா..! உனக்கு வேணும்னா இன்னும் நாலு எடுத்து வச்சி சாப்பிடு..! ஏன் அவனை இப்படி வாய் வெறிக்க பார்க்கற...உன்னைமாதிரி என்ன பூச்சி பிடிக்க சொல்றியா?. யாரும் சாப்பிடாததைய என் புள்ள சாப்பிட்டுடான். ஒரு மீன் ஆய' க்கூட தெரியாம பொண்ணை வளத்து வச்சி இருக்காங்க பாரு.. அவன் சாப்பிடறதை எப்படி பாக்குது பாரு.. ? " ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க...

அவ்வ்வ்வ்வ்வ்.......கல்யாணம் ஆகி ஒரு 15 நாள் கூடவும் ஆகி இருக்காது. ... எனக்கு நிஜமா ஏன் அவங்க என்னை அப்படி திட்டினாங்கன்னு தெரியல. .எனக்கு கோவமும் வரலை, பயமும் வரலை... என் நினைவு எல்லாம் என் வீட்டுக்காரர் வாயில் முழுசாக சென்ற மீனும், வெளியில் வந்த முள்ளும்.... தான்...

ஆனால் திருப்பி அவரை பார்க்கவில்லை தான். என் மாமியார் என்னை அப்படி திட்டியதற்கு என் வீட்டிக்காராரிடம் இருந்தும் எந்த ரியாக்ஷனும் இல்லை. நான் வெறிப்பதை மட்டும் ஒரு தரம் திரும்பி பார்த்துவிட்டு, அவர் பாட்டில் அவருடைய வேலையில் மும்மரமாக இருந்தார். அதாங்க மீன் சாப்பிடுவதில். :)

"சரி நோ சப்போர்ட்டு....சோ.. ஐ அம் த ஹெல்ப்லெஸ்ஸு" ன்னு நினைச்சுக்கிட்டு என் மீனை ஆய திரும்ப சென்றுவிட்டேன்.

**************

ஆனா எங்க வீட்டுக்கு வந்து, ஆயாவிடம்.."ஆயா ஏன் நம்ம வீட்டில் மீனை அப்படி யாரும் சாப்பிடல..நீ ஏன் எனக்கு சொல்லித்தரல.."ன்னு கேட்டுவிட்டு மாமியார் திட்டியதையும் சொன்னேன். ஆயாவும் சிரித்துவிட்டு "இனிமே பாக்காத....அவங்க புள்ளைக்கு கண்ணு படும்னு நினைச்சு இருப்பாங்க.." ன்னு சொல்லிட்டு "எல்லா மீனையும் அப்படி சாப்பிட முடியாது பாப்பா . நாம அந்த மீன் எல்லாம் நம்ம வீட்டுல வாங்கறது இல்ல .". என்றார். "அது அயில மீனா இருக்கும்.. நாம் எப்பவுமே அது வாங்கறது இல்லையே? "என்றார்.

என்னவோ.. என் கணவர் , இப்பவும் அவங்க வீட்டுக்கு (இப்பவும் இங்கே நாங்கள் அயில மீன் வாங்குவதில்லை) அப்படித்தான் சாப்பிடுகிறார். நானும் இன்னும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். :) திட்டத்தான் யாரும் இல்லை.... :))))))))).

அணில் குட்டி அனிதா : திட்ட யாரும் இல்லையா ?வூட்டுக்காரு திட்டறது எல்லாம் கணக்கே இல்லையா? இன்னும் மீன் சாப்பிட தெரியலன்னு மீன் குழம்பு வைக்கும் போது எல்லாம் அம்மணி க்கு பெரைடு நடக்கும் ..அம்மணி யும் ஹி ஹி.. ன்னு சிரிச்சிட்டு வெறும் குழம்போட கதைய முடிச்சிடுவாங்க...

பீட்டர்தாத்ஸ் : Give me a fish and I eat for a day. Teach me to fish and I eat for a lifetime

புலி' யை கூட்டுக்குள்ள அடச்சிப்பிட்டாங்களே.... . !! :)

எப்பவும் அமைதியா உறுமிகிட்டு அங்கயும் இங்கயுமா ஜாலியா சூடான் காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த நம்ம புலி, தீடீர்னு பம்முதூஊஊஊ............. பதுங்குதூஊஊஊ. .............???!! அடடா.. புலிக்கு என்னா ஆச்சின்னு பயந்துபோயி........ புள்ளைய விசாரிச்சா... ... கல்யாணமாம்..!!! ..:))))))))

எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸூ !!



அட.....கர்ர்ர்ர்ர்ர்ர்ர் முர்ர்ர்ர்ர்ர் ன்னு சவுண்ட விட்ட புலி இனி சவுண்டு விட நேரம் பாக்குது... ஹிம் ஸ்டார்ட் தி மியூசிக்கு..............

சிவா weds தர்சினி...



சிவா வை.. கும்மறவங்க சே..சே.. வாழ்த்தறவங்க எல்லாரும் அப்படியே என்னோட அணில் மாதிரி தாவி.. தாவி இங்க போய்.. சிவா விற்கு வாழ்த்து சொல்லிட்டு போவீங்களாம்..

அணில் குட்டி அனிதா :- ஆமாம்மா.... வாழ்த்து சொல்றவங்க அத்தனை பேருக்கும் சூடான் புலி... இந்தியா வந்தவுடன்.. புலிப்பால் விருந்து வைப்பாரு..ன்னு அவரோட கம்பெனி சார்பாக சொல்லிக்கிறேன்... :))))))) (தல என்னை தனியா கவனிக்கனும்..சரியா.. :) )


பீட்டர் தாத்ஸ் :- To keep your marriage brimming, With love in the wedding cup, Whenever you're wrong, admit it; Whenever you're right, shut up