அப்பா வருவாரா?

பாப் வைத்த தலைமுடி, முட்டிக்கால் தெரிய போட்டு இருந்த ஃப்ராக், அந்த சின்ன முகத்தில் கண்கள் முழுக்க சோகம், உள்ளுக்குள் ஒரு வித படப்படப்பு, பயம் எல்லாவற்றையும் அவளின் அம்மாவிற்கு தெரியாமல் மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் 8 வயது குட்டி பெண் அனுஷா. பொழுது விடிந்து பொழுது போனால் படிக்கட்டில் நின்று தெருவின் முக்கை வெறித்து பார்த்தவாரே இருந்தாள்.

"அப்பா வரமாட்டீங்களா? ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டீங்க? இங்கேயே விட்டு விடுவீங்களா? எனக்கு இங்க பிடிக்கல.. பயம்மா இருக்கு... இங்க யாரையுமே பிடிக்கல... அப்பா வந்துடுங்கப்பா..ப்ளீஸ். .வந்து என்னை கூட்டிட்டு போயிடுங்கப்பா.... " மனதுக்குள் அந்த சின்ன குழந்தையின் தொடர்ந்த புலம்பல் இதுவாகத்தான் இருந்தது.

சாப்பிட கூப்பிடும் போது உள்ளே செல்வதும் மற்ற நேரங்களில் படிகளே பழியாய் கிடப்பதும், தெரு முக்கையே அப்பாவின் வரவுக்காக பார்ப்பதுமாக காலம் கடத்தினாள்.

------------------------------


அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலையில் தலைக்கு குளித்துவிட்டு, மதியம் அப்பா சொன்னதற்காக படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள் அனுஷா. பலத்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அனுஷா, அப்பா அம்மா சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்தாள். வீட்டில் உள்ள சில பொருட்களை அவளின் அப்பா தூக்கி எரிந்து அம்மாவின் மேல் கோபத்தை காட்டிக்கொண்டு இருந்தார். அனுஷாவிற்கு அவர்களின் சண்டையை பார்த்து நெஞ்சு நடுங்கியது. பயத்தில் ஓரமாக போய் நின்று அவர்களின் சண்டையும் எதற்கு என்று புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள்.

ஒரு கட்டத்தில் அப்பா வேகமாக வெளியில் சென்றுவிட.. அம்மாவும்.. வேக வேகமாக பெட்டியை எடுத்து துணிமணிகளை நிரப்ப ஆரம்பித்தார்கள். கிளம்பும் போது "அனு வா போலாம்..:" என்றார்கள்.

"எங்கம்மா? "

"மெட்ராஸ்."

"எனக்கு ஸ்கூல் இருக்கும்மா.. நான் வரலை..."

"நீ வந்து தாண்டி ஆகனும்.. சீக்கிரம் கிளம்பு"

"ம்ம்மா.. .நான் வரலை அப்பாவை விட்டுட்டு வர மாட்டேன்... அப்பா கூடவே நான் இருக்கேன் நீங்க போங்க..."

அதற்கு மேல் அம்மா பேசவில்லை... கோபத்துடன் வந்து தொடையில் நறுக்கென்று ஒரு திருகு திருகினார்கள். வலியில் துடித்தாள் அனுஷா.....

"ம்ம்ம்.. பேசாமல் ...கிளம்பு சீக்கிரம்" அதட்டினார்கள்.

அம்மா கையை எடுத்தவுடன் குனிந்து தொடையை பார்த்தாள். அம்மா நகத்தோடு சேர்த்து கிள்ளியதால் ரத்தம் லேசாக வர ஆரம்பித்து எரிச்சலும் வலியும் இருந்தது. அதற்கு மேல் அனுஷாவிற்கு அம்மாவை எதிர்த்து பேச பயம்... வேண்டா வெறுப்பாக அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். வழியில் எல்லாம் அம்மா கோபமாக இருக்கிறார்கள் என்று வாயை திறக்காமல் இருந்தாள். மதுரையில் இருந்து சென்னை.,வெகு நேர பஸ் பிரயாணம். தூங்கி எழுந்திருக்கும் போது எல்லாம் வயிறு காலியாக இருந்தது, அவளுக்கு ரொம்பவும் பசித்தது. நடுவில் அம்மா மட்டும் இறங்கி என்னவோ சாப்பிட்டுவிட்டு, வரும் போது வேற்கடலை பர்பி வாங்கி வந்தார்கள். அம்மாவிடம் வேறு எதுவும் கேட்கவும் பயப்பட்டு, அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தவாறு வந்தாள் அனுஷா.

ஆயிற்று. அவளும் வந்து 18 நாட்கள் ஆயிற்று. அவளின் அப்பா இன்னும் வரவில்லை. அவளும் காத்திருப்பை நிறுத்தவில்லை. அனுஷாவிற்கு அப்பா வரவில்லை என்ற கவலையுடன் பள்ளியை பற்றிய நினைவு வேறு. இங்கு மாமா, பெரியம்மா வீடுகளில் எல்லாம் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றன. ஏன் அம்மா தன்னை மட்டும் இப்படி இங்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்?. அனுஷாவை பார்க்கும் போது எல்லாம் அவளின் அப்பாவை திட்டிக்கொண்டே இருக்கும் அம்மும்மா வேறு ஒரு பக்கம். அனுஷாவிற்கு அதனாலேயே அம்மும்மாவை கண்டாலே பிடிக்காமல் போனது. அந்த வீடும் பிடிக்கவில்லை. தனியாக இருந்தாள், யாரிடமும் பேசவோ, பழகவோ அவளுக்கு பிடிக்கவில்லை. அம்மா சில சமயம் படிக்கட்டில் உட்கார விடாமல் உள்ளே தள்ளி கதவை சாத்தி விடுகிறார்கள். பெரிய மாமா ரூமில் உள்ள ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரு முக்கு தெரியும்... அதனால் அந்த ஜன்னலில் ஏறி நின்று திரும்பவும் அப்பா வருகிறாரா என்று பார்க்க ஆரம்பித்தாள் அனுஷா.

-------------------------------------

திடீரென்று ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும். பெரியம்மா வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. கணேஷ் வந்து இருக்கிறார், அனுஷாவையும், சுமதியையும் அழைத்துக்கொண்டு நீங்களும் வாருங்கள் என்று தகவல் வர... அம்மா கிளம்பும் முன்... கதவை திறந்துக்கொண்டு பெரியம்மா வீடு நோக்கி ஓட ஆரம்பித்தாள் அனுஷா. மாமா வீட்டிலிருந்து ஒரு தெருக்கு அப்பால் பெரியம்மாவின் வீடு.

அப்பா மரநாற்காலியில் அமர்ந்து இருந்தார். அனுஷா ஓடி சென்று அப்பாவின் மேல் ஏறி கழுத்தைக்கட்டி க்கொண்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக..."அப்பா...என்னை கூட்டிட்டு போயிடுங்க. .எனக்கு இங்க பிடிக்கலை , பயம்மா இருக்கு... ஸ்கூல் போகனும்.." என்றாள்.

அப்பா பதில் ஏதும் சொல்லாமல் அனுஷாவை இறக்கிவிட்டார்.

பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அப்பா மட்டும் தனியே... அம்மாவிற்காக பேச நிறைய பேர் இருந்தார்கள். அம்மும்மா, பெரியம்மா, பெரியப்பா, நடு மாமா, பெரியமாமா, சின்ன மாமா, பெரியம்மாவின் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமாக இருந்தது.

அப்பா பேச ஆரம்பித்தார். "அனுஷாவை கூட்டிட்டு போக வந்தேன், வந்து 23 நாள் ஆச்சி, குழந்தையின் படிப்பு வீணா போகுது.. திரும்பி வருவாங்கன்னு எதிர் பார்த்தேன் வரலை.. .இதுக்கு மேல் குழந்தையின் படிப்பை வீணாக்க முடியாது, அவளை என்னுடன் அனுப்புங்கள்.."

அம்மா சத்தம் போட ஆரம்பித்தார்கள். அனுஷாவை இழுத்து சென்று ஒரு ரூமில் பூட்டி வைத்து விட்டு வந்தார்கள்.

அனுஷாவிற்கு திரும்பவும் பயம் கவ்வ ஆரம்பித்தது. உள்ளுக்குள் பரிட்சை எழுத போகும் போது வருவது போல வயிற்றை பிசைந்தது. அப்பா விட்டுவிட்டு சென்று விடுவாரோ..?!! வெளியில் வாக்குவாதம் நடந்தது. அப்பா கேள்வி கேட்பவகள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லியவாறே இருந்தார். ஆனால் அனுஷாவை அழைத்து செல்வதில் உறுதியாக இருந்தார். அவர் பேச பேச ஒரு கட்டத்தில் மற்றவர்கள் அமைதி ஆனார்கள். சுமதியை அவர்கள் வீட்டில் இருப்பவர்களே அமைதிப்படுத்தினர்.

கதவு திறக்கப்பட்டது. அனுஷா..மடை திறந்த வெள்ளம் போல..... வேகமாக வெளியில் ஓடி வந்து அப்பாவிடம் போய் நின்றாள். சுமதி அழுதுக்கொண்டு இருந்தாள். அனுஷா அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அம்மும்மாவை ஒரு முறை திரும்பி பார்த்து முறைத்தாள். வேறு யாருடனும் பேசவில்லை.

வெளியில் வந்தவுடன் அப்பா கேட்ட கேள்வி.. " சாப்பிட்டியாம்மா??? "

"...ஏன்ப்பா என்னை இத்தனை நாளா கூட்டுப்போக வரலை...?"

"....உங்க அம்மாவே திரும்பி வருவாங்கன்னு நினைச்சேன்....."

"...எனக்கு இங்க பிடிக்கலைப்பா.. நான் உங்க கூடத்தான் இருப்பேன்.. அம்மா வேணாம்ப்பா....கிள்ளறாங்க..அடிக்காறாங்க.. வலிக்குதுப்பா... " அவளின் அம்மா கிள்ளி காயம் ஆன இடங்களை அப்பாவிடம் காட்டுகிறாள்.

குனிந்து பார்த்து... தடவிவிட்டபடி... "...ம்ம்..அப்படி சொல்லக்கூடாது....அம்மா பாவம் இல்லையா... உன்னை அனுப்பலன்னா என்ன செய்யறதுன்னு டிசி க்கூட வாங்கிட்டு தான் வந்தேன்....."

அதிர்ந்தவளாக...."...ப்பா... அப்படின்னா அம்மாக்கிட்ட என்னை விட்டுட்டு போகவா வந்தீங்க...."

"...இல்லம்மா... அம்மா ரொம்ப பிடிவாதமா இருந்தா என்ன செய்யறது உன் படிப்பு முக்கியம் இல்லையா..."

".....ம்ம்ம்ம்..என்னை எப்பவும் அம்மாக்கிட்ட விடாதீங்கப்பா....சரி.. இப்ப எந்த ஸ்கூல்..ப்பா....??? "

" .....பாப்போம்... போய் த்தான்...பார்க்கனும்.. சரி முதல்ல வா...நீ சாப்பிடு..... " என்று அனுஷாவை அழைத்துக்கொண்டு ஹோட்டலை தேடி சென்றார் கனேஷ்.

அனுஷாவிற்கு 23 நாட்கள் கழித்து உள்ளுக்குள் இருந்த படப்படப்பு, பயம் எல்லாம் மறைந்து நிம்மதியாக இருப்பதை உணர்ந்தாள்... இப்போது தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது அவளால், சந்தோஷமாக அப்பாவின் கைகளை பிடித்து நடக்க ஆரம்பித்தாள். அப்பா இனி அவளுக்கு தாயுமானார்.....

குறிப்பு - போட்டிக்காக எழுதிய கதை.

I LOVE YOU & I MISS YOU :( :(





"Heal The World"

There's A Place In
Your Heart
And I Know That It Is Love
And This Place Could
Be Much
Brighter Than Tomorrow
And If You Really Try
You'll Find There's No Need
To Cry
In This Place You'll Feel
There's No Hurt Or Sorrow

There Are Ways
To Get There
If You Care Enough
For The Living
Make A Little Space
Make A Better Place...

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

If You Want To Know Why
There's A Love That
Cannot Lie
Love Is Strong
It Only Cares For
Joyful Giving
If We Try
We Shall See
In This Bliss
We Cannot Feel
Fear Or Dread
We Stop Existing And
Start Living

Then It Feels That Always
Love's Enough For
Us Growing
So Make A Better World
Make A Better World...

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

And The Dream We Were
Conceived In
Will Reveal A Joyful Face
And The World We
Once Believed In
Will Shine Again In Grace
Then Why Do We Keep
Strangling Life
Wound This Earth
Crucify Its Soul
Though It's Plain To See
This World Is Heavenly
Be God's Glow

We Could Fly So High
Let Our Spirits Never Die
In My Heart
I Feel You Are All
My Brothers
Create A World With
No Fear
Together We'll Cry
Happy Tears
See The Nations Turn
Their Swords
Into Plowshares

We Could Really Get There
If You Cared Enough
For The Living
Make A Little Space
To Make A Better Place...

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

Heal The World
Make It A Better Place
For You And For Me
And The Entire Human Race
There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

There Are People Dying
If You Care Enough
For The Living
Make A Better Place
For You And For Me

You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me
You And For Me

.

ஒன்றுமில்லை.......


நேற்றைய
மனநிலை
இன்று
இல்லை

இன்று
இருப்பது
நாளை
இருக்க
போவதுமில்லை

கண்விழிக்கும்
ஒவ்வொரு
விடியலிலும்-

புது
உலகம்
பார்க்கிறேன்..

புரிதல்
இல்லாத
உள்ளங்கள்
பார்க்கிறேன்.......

புண்படுத்தும்
மனிதர்கள்

பார்க்கிறேன்...


இது தான்
வழி
இது தான்
பயணம்
இது தான்
வாழ்க்கை

என்ற
எளிமை
சிந்தனையோடு
உள்ளத்தால்
இருக்க
முடிவதில்லை...

முடியாத
தருணங்களில்
முடிவு
சலனமற்ற
உடலும்
மனமும்..!!

சலனமற்றதை
பிணம்
என்று
கூட
சொல்லலாம்..


.

வானிலை அறிக்கை...

குறிப்புகள்
இல்லா
வானம்..


வெற்று
வானத்தை
வெறித்து..
வாழ்க்கையை
உள்ளிருந்தே
ஓட்டலாமா?



மழை
வருமென
நனைந்து
மகிழ...
வெளியுலகம்
வரலாமா?

நீ.....
அறிவிலி
அதனாலோ....
அறிக்கை
புரிதலில்
எப்போதும்
ஒரு
தடுமாற்றம்....



.

மனிதர்களின் குணம் மாறுவதில்லை

மனிதவளத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன் என்பதை விடவும் என்னுடைய தனிப்பட்ட ஆர்வமே முதல் காரணம். என் தனிப்பட்ட ஆர்வத்தால் மனிதவளத்தை என் வேலையாக தேர்ந்தெடுத்தேனே தவிர்த்து, மனிதவளத்தில் இருப்பதால், என்னுடைய ஆர்வம், பேச்சு, எழுத்து & நடவடிக்கை மாறிவிடவில்லை அல்லது மாற்றிக்கொள்ளவில்லை. மனிதவளத்தில் இருப்பதால் இப்படி இருக்கிறேன் என்பதைவிடவும், மனிதவளத்தில் ஆர்வமுள்ள ஒருவராக என்னை பார்க்கவே விரும்புகிறேன்.

மனிதர்களின் குணம் இரண்டு.

1. இயற்கை குணம்,
2. சுற்றுச்சூழுலை பொறுத்து/கவனித்து நம்மை பாசிட்டிவாகவோ, நெகடிவாகவோ மெருகேற்றிக்கொள்வது அல்லது உள்வாங்கி அதை நம் குணமாக மாற்றிக்கொள்வது.

இயற்கை குணம் என்பது மாறாது. அப்படி ஒன்று மனிதனுக்கு இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில், நம் ரத்தத்தில் ஊறி இருக்கும் ஒரு குணம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. அது என்ன? நம் தாய் தந்தை, தாய்மாமன், அத்தை, சித்தப்பா போன்றவர்களை கூர்ந்து கவனித்தால், அவர்களை போன்று நிறைய விஷயங்கள் அவர்கள் சொல்லித்தராமாலேயே நாம் செய்வோம், நடப்போம். அது தவிர்த்து குடும்ப சூழ்நிலை, வளர்ப்பு முறையில் அந்த அடிப்படை குணங்கள் இன்னமும் மெருகேற்றப்பட்டு இருக்கும்.

அடிப்படை குணங்களில் முதலில் வருவது -

1. அறிவும் அது சம்பந்தப்பட்டவையும்
2. பண்பு, பழக்கவழக்கங்கள், பேச்சு
3. கோபம்
4. ஈகை

இதில் நாமாக நம்மை சுற்றியுள்ளவற்றை பார்த்து கவனித்து அதை நம்முடைய குணமாக மாற்றிக்கொண்டு - இது பலருக்கு தெரியாது.. அதாவது நாம் மற்றவரை பின்பற்றி சிலவிஷயங்களை செய்கிறோம் என்பது. தன்னைப்பற்றி சுயமாக ஆராய்ந்து பார்ப்பவர்கள் மட்டுமே இதை உணர்வார்கள்.

இதற்கு சிறந்த உதாரணம் கணவன் மனைவி. இவர்களின் தனிப்பட்ட அடிப்படை குணங்கள் மாறுவதில்லை..ஆனால் திருமணத்திற்கு பிறகு மற்றவருக்காக விட்டுக்கொடுத்து அல்லது அவருக்கு பிடித்தமான சில விஷயங்களை செய்ய வேண்டி தன்னை மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் அடிப்படையில் மாறவில்லை, சூழலை பொறுத்து தன் அடிப்படை குணத்தோடு கூடி, வேறு ஒன்றையும் மனைவி/கணவனுக்காக சேர்த்துக்கொள்கிறார்கள்.

இப்போது இருவருக்குமே அடிப்படை குணத்தோடு சேர்ந்து + கூடுதலாக ஒரு குணம் (இது நெகடிவாகவும் இருக்கலாம்) சேர்ந்துவிடுகிறது.

இன்னுமொரு உதாரணம். பொது இடங்களில் நாம் இருக்கும் போது குப்பையை குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணமோ பழக்கமோ இல்லாதது நம் இயற்கை குணம். ஆனால் அதே பொது இடத்தில் , ஒருவர் குப்பையை குப்பைத்தொட்டியில் போடுவதை பார்த்து அதை நாம் நமக்கு தேவையான ஒன்று என்று கருதி, அதை நம்முடைய பழக்கதில் ஒன்றாக எப்போதும் மாற்றிக்கொள்வது என்பது சுற்றுச்சூழலை பொறுத்து நாம் நம் குணத்தை மெருகேற்றிக்கொள்வது, கூடுதல் குணம்.

சரி, இந்த கூடுதல் குணம் நெகடிவ்/பாசிடிவ் ஆக இருப்பது யார் கையில்??? கண்டிப்பாக அது தனிப்பட்ட மனிதனை பொறுத்து தான் இருக்கிறது, நல்ல விஷயங்களை மட்டும் கவனித்து இது நமக்கு தேவை என்று சேர்த்துக்கொண்டு ஒருவன் தன்னை மென்மேலும் உயர்த்திக்கொண்டே போகலாம். அல்லது நெகடிவாக கொண்டு தாழ்த்திக்கொண்டும் போகலாம். நெகடிவ்/பாஸிடிவ் என்பதை முடிவு செய்வது யார்? அதுவும் அதே நபர் தான். இது தான் நமக்கு சரி என்று படுவது பலருக்கு தவறு என்று படும். :)

அதனால், அடிப்படை குணத்தை கூட நாம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளும் குணம் மாற்றிவிடும் வாய்ப்பும் இருக்கதான் செய்கிறது.. அதற்கு மிகுந்த முதிர்ச்சியும், ஞானமும் தேவை. ஆனால் ஒரு சாமான்ய மனிதனுக்கு சூழ்நிலை என்று வரும் போது எத்தனை தடுத்தாலும் உள்ளுக்குள் இருக்கும் அடிப்படை குணமே வெளியில் வரும்.

இதற்கு சிறந்த பழமொழி "நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலை ஆட்டிக்கிட்டி தேவையை தின்ன வெளியில் தான் போகுமாம்" - இது தான் அடிப்படை குணம் என்பது. ஏன் அது நல்லவிதமாக வளர்க்கப்படும் போது? என்ற கேள்வி கண்டிப்பாக வரும், ஆனால் அந்த நாய்க்கான சூழ்நிலை, அதற்கு சரியாக அமையும் போது அதன் இயற்கை குணம் கண்டிப்பாக வெளிப்பட்டே தீரும். ஆனால் இப்படிப்பட்ட வெளிவரும் குணத்தையும் , குறிப்பாக அது நெகட்டிவாக இருக்கும் பட்சத்தில் , அதை கட்டுப்படுத்தும் திறமையையும் கூடுதல் விஷயமாக நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் சூழ்நிலை கைதியாக ஆகாமல் இருக்க வாழ்க்கையின் அனுபவமும், முதிர்ச்சியும் கண்டிப்பாக தேவை.

ஆக, இயற்கை குணத்துடன் , நாம் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளுக்காகவும், நம்மை சார்ந்தவர்களுக்காகவும் (சொந்தங்கள், நண்பர்கள், நம்மை சுற்றியுள்ள அத்தனை மனிதர்களும்...) நம் தேவைகளுக்காகவும் ஓரளவிற்கு மாற்றிக்கொண்டே இருக்கிறோம் என்பது சரியில்லை, நம்மின் குணத்தை அதிகப்படியாக வளர்த்துக்கொண்டே வருகிறோம். இது நிதர்சனமான உண்மை.

இதில் எது நம் இயற்கை குணம், எது நாம் சேர்த்துக்கொண்டது.. இனியும் நல்லவிதமாக சேர்த்துக்கொள்ள வேண்டியது எது என்பதை தனிப்பட்ட முறையில் ஆராய்ந்து, அதை நல்லவிதமாக சேர்த்தும், பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது.

மனிதர்களின் குணம் மாறுவதில்லை கூடுதலாக நாம் சேர்த்துக்கொண்டவை நம்மில் பல மாற்றைங்களை உண்டாக்குகின்றன.. அதனால் அடிப்படையில் நம் வளர்ச்சிக்கு தேவையானவற்றை நல்லமுறையில் கவனித்து அதை சேர்த்தும் செயற்படுத்தியும் நன்மை பெறுவோம்.

நாமே நம் கையில் ஒரு களிமண் தான் அதை எப்படி ஷேப் செய்கிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது.

அணில் குட்டி அனிதா :- ம்ம்......மக்கா உங்களுக்கு ஏதாச்சும் பிரியுதா எனக்கு ஒன்னியும் பிரியல. .அதுவும் அர்த்த ராத்திரியில பிசாசாட்டுமா உக்காந்துக்கிட்டு டைப்பறாங்க.......வெயில் காலம் போயிம் எனக்கு இன்னும் அம்மணிக்கிட்ட இருந்து விடுவுகாலம் வரலை.... நாந்தான் எழுதுனும் அடுத்தது....... விடியலை நோக்கி ன்னு... ................... முடியல..ooooopppssss !!

பீட்டர் தாத்ஸ் : There will be little rubs and disappointments everywhere, and we are all apt to expect too much; but then, if one scheme of happiness fails, human nature turns to another; if the first calculation is wrong, we make a second better: we find comfort somewhere . . .

ஓ நண்பனே.....நண்பனே...!!

பன்றி 'களோடு
ஒரு
கன்றுக்குட்டி
சேற்றிலும்
சகதியிலும்

முகத்தை சுருக்கும்...
துர்நாற்றம்
வீசுகிறது...

பன்றி'களுக்கு
துர்நாற்றம்
பழக்கமே....
கன்றுக்குமா?

எப்போது
புரியும்
இந்த
கன்றுக்கு
அது
துர்நாற்றத்தில்
இருக்கிறது
என்பது....??????

பன்றிகளோடு
கன்றினை
பார்க்க..........
சகிக்கவில்லை...

.
கன்று
வெளியில்
வரும்
நாளை
நோக்கி........


அணில் குட்டி அனிதா : ஹி ஹி.. கவி..கவிதைய படிக்கறவங்க எல்லாரும் இந்த பாட்டை எனக்காக பாத்து ஒரு குத்து டான்ஸ் ஆடிட்டு போங்க. . நான் ஆடிட்டு இருக்கேன்.. என்னோட சேந்து ஆடுங்கோஓஓஓஓஓ.....!!



தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!

தக தக தக தக தக வென ஆடவா !!
இவள் சக்தி சக்தி யோடு ஆடவா !!

ஏ போட்டு தாக்கு ....
வரா ஒரு புறா போட்டு தாக்கு
வங்க கடல் எறா போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு
ஏ சக்கபோடு நீதான் போட்டு தாக்கு

ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு ஹிட் சாங்கு ஒன்னு போட்டு தாக்கு

ஏ போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஏ போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு.....


பீட்டர் தாத்ஸ் :- @#$%^&*!@##$#$%

(கெட்டவார்த்தையால அணில திட்டுது பீட்டரு........ஹி ஹி.......)

.

யாருக்காகவோ.....

எனக்காக எழுதிய
நாட்கள் சென்று

யாருக்காகவோ
எழுத வந்தேன்

யாருக்காகவோ
எழுதுவதை
நிறுத்தினேன்..

எனக்காக
எப்போதாவது
எழுதிய
பொழுதுகள்

விடியல்
இல்லாத
இரவுகளாயின...

இருப்பினும்
விடியலில்
வரும்
அன்பான
மின் அஞ்சல்கள்

"உனக்காக நீ எழுதாதே"

இதை
இன்னார்
என்று
சொல்ல

எனக்கு
யாரும்
இருந்ததில்லை

சொல்லுபவர்
அத்தனை
பேரும்
இன்சொலார் !!

எழுதியது
அழிந்துபோகும்
மறைந்து போகும்
மறந்தும் போவேன்..

மீண்டும்
ஆரம்பிப்பேன்..

மீண்டும்
முடிப்பேன்...

யாருக்காகவோ....
.
.
,
.
எனக்காக நான்
இல்லை
என்பதில்
மட்டும்
ஏகத்துக்கும்
தெளிவு....

:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

.
.

ஓ நண்பனே.....நண்பனே...!!


உன்
உள்ளங்கையில்
உலகமே
இருக்கிறது !!

உடன்
பூக்கள்
பலவும்
இருக்கிறது !!
பூக்களில்
முட்களும்
உண்டென்பதை
அறிவாயா?
உள்ளங்கைகளை
அழுத்தி
மூடிவிடாதே....
பூக்கள்
நசுங்கிவிடும்...
முட்களும்
குத்திவிடும்

மூடாமலும்
இருக்காதே
முட்கள்
இருப்பதை
உணரமாட்டாய்...

பூக்கள்
நிறைந்த
உன்
உள்ளங்கைகள்
அழகு !!

கெளரி ஏன் கோபப்படலை?!!

எப்போதும் நடக்கும் சண்டை, சரிக்கு சரியாக சண்டை போடும் பழக்கம்.. (இதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லைதான்:) ) கவுண்ட்டர் ரிப்ளை கொடுக்கலைன்னா தூக்கம் போய்விடும்.. சண்டைப்போடத நண்பரகள் மிக குறைவு...

கெளரிசங்கர் .... விழுப்புரத்தில் எங்கள் பக்கத்து வீட்டுப் பையன். என்னிடம் சண்டையே போடாமல் நண்பனாக இருந்தவன். . என்னை விட கலராக, என்னைவிட குள்ளமாக இருப்பான். அவனும் என்னுடைய வயதே, ஆனால் அவனுடன் ஒரே வகுப்பில் நான் படித்ததில்லை. நான் காந்தி பள்ளியில் படிக்கும் போது அவனில்லை, அவன் படிக்கும் போது நான் பெண்கள் பள்ளிக்கு மாறிவிட்டேன். ஆனால் இருவரும் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு ட்யூஷன் ஒன்றாக படித்தோம்.

இந்த கெளரி எப்பவும் என்னை தூர இருந்து கவனிப்பான், அண்ணனிடம் பேசும் அளவிற்கு என்னிடம் பேசியது இல்லை, பக்கத்து வீட்டு மாடிக்கு வந்தால் அங்கிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பான். சில சமயம் பேசுவான்..சிரிப்பான்...

ட்யூஷன் சென்றால், அங்கும் கவனிப்பதோடு சரி.. டியூஷன் சந்தேகங்கள், ஹோம் ஒர்க் பற்றி மட்டும் விசாரிப்பேன். அதிகம் அவனுடன் பேசியதில்லை எங்கள் வீட்டிற்கும் வரமாட்டான். அமைதியான ரொம்பவும் அடக்கமான பிள்ளை என்று என் ஆயா, அப்பா, அண்ணன்கள் சொல்லுவார்கள், அவனை பார்த்து, நானும் அப்படி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள்..

அதற்காக ட்யூஷன் போகும் போது வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பேன். ட்யூஷன் டீச்சர், பசங்க, பொண்ணுங்களை கிண்டல் கேலி செய்யக்கூடாது என்பதற்காக எங்களை முதலில் அனுப்பி விடுவார்கள்.. 10 நிமிடம் கழித்து பசங்க வருவாங்க.

நான் கெளரியிடம் பேச நினைக்கும் போது எல்லாம் கேட்டில் காத்திருப்பேன். அன்றைக்கும் அப்படியே அவனிடம் சண்டை போடவே காத்திருந்தேன்.

என்னை பார்த்ததும், அவனுக்காக நிற்கிறேன் என்று தெரிந்து .என்னை நோக்கி வந்தான்.

"ஏண்டா ..ஓவர் அமைதியா இருந்து எங்கவீட்டுல எனக்கு திட்டு வாங்கி வைக்கிற... ஏன் வாய தொறந்து நீ பேசமாட்டியா... ரொம்ப நல்லவனா நீ.. ? " இன்னொரு வாட்டி என்னை எங்க வீட்டில திட்டினாங்க... அவ்வளவுதான் நீ..! " .

..... சிரித்தான் .... "வீட்டுக்கு கிளம்பு" என்றான் ..

"அட நான் என்ன காட்டுக்கா போகப்போறேன்... சொல்லு நீ எப்படி எப்பவும் அமைதியா இருக்கே? " எனக்கு எல்லாம் பேசலன்னா கன்னம் இரண்டும் வலிக்குதுடா.."

திரும்பவும் சிரித்தான்..."சரி கிளம்பு பசங்க எல்லாம் பார்க்கறானுங்க. .ஏதாச்சும் சொல்லுவாங்க.."

"பாத்தா..சொன்னா..?!! ஆமா............என்ன சொல்லுவாங்க..?? "

"கவிதா.. கிளம்பு.. வீட்டுக்கு போ....."

" ம்ம்....சரி.. வீட்டுக்கு வந்து சொல்றியா...?!"

"சொல்றேன்.. போ...."

...............................................................................................

வீட்டுப்பாடம் முடிக்காமல் ஒரு நாள் மதியம் அவன் வீட்டுக்கு போய் வெளியில் நின்று "கெளரி கெளரி" என்றேன். அவன் அப்பா முதலில் வந்தார்...

"வாம்மா. .உள்ள வா... .."

"இல்ல அங்கிள் பரவாயில்ல.. கெளரி........"

"அட வாம்மா உள்ள...."

"அங்கிள் கெளரிய கூப்பிடுங்களேன்...."

அதற்குள் கெளரி வந்துவிட.... "கெளரி.. .மேக்ஸ் ட்யூஷன் நோட்டு கொடுடா..நான் முடிக்கல.."

அவன் முடித்திருந்தான்.. (அதான் ரொம்ப நல்லவன் ஆச்சே...!! ) ... எடுத்து வந்து கொடுத்தான்..., வாங்கிக்கொண்டு,

"ட்யூஷன்ல வந்து தரேண்டா.."

"சரி..."

அன்று மாலை... மேல் மாடி.. வேகவேகமாக காப்பி அடித்து எழுதிக்கொண்டு இருந்தேன்.... ஆயா எதற்கோ அழைத்தார்கள்.. வந்தேன்... திரும்ப சென்று நோட்டுகளை எடுக்க மறக்கும் அளவிற்கு விருந்தாளிகள் வேலை இருந்துவிட்டேன். தீடிரென்று மழை வந்துவிட... நான் நோட்டுகள் நினைவு வந்து அவற்றை எடுப்பதற்குள் தொப்பையாக நனைந்து எழுத்துக்குள் எல்லாம் அழிந்தே விட்டது.

முழு நோட்டிலும் ஒரு எழுத்து கூட இல்லை.... என் நோட்டு பரவாயில்லை. முத்து முத்தாக எழுதி வைத்திருந்த கெளரியின் நோட்டு.... அவ்வ்வ்வ்வ்வ்.... எனக்கு அடிவயிற்றை பிசைந்தது.. எப்படி அவனை பார்த்து பேசுவது.. நோட்டை கொடுப்பது... சரி வேறு வாங்கி எழுதி க்கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு.. அடுத்த நாள் நனைந்த நோட்டை எடுத்துக்கொண்டு ட்யூஷன் சென்றுவிட்டேன்...

எப்போதும் நான் முன்னே வந்து காத்திருக்க கெளரி வந்தான்....

ரொம்பவும் மெதுவான குரலில்..".கெளரி............." என்று அழைத்தேன்.. என் முகத்தை நான் பார்க்க நேரிட்டிருந்தால் சொல்லி இருப்பேன் எவ்வளவு பாவமாக இருந்தது என்று......

"என்ன.....?"

"நோட்டு நேத்திக்கு மழையில மேல விட்டுட்டு வந்துட்டேண்டா... நனைஞ்சி போச்சி.... !... "

வாங்கிப்பார்த்தான்..

"நான் வேற நோட்டு வாங்கி எழுதிக்கொடுத்திடறேண்டா... ஒரு 4 நாள் டைம் கொடுடா..."

என்னை பார்த்தான்... எப்போதும் போலவே முகம் இருந்தது..மாறவே இல்லை.. கோபமே வரலை... கவலையும் இல்லை....

"வேணாம் நானே எழுதிக்கிறேன்..."

எனக்கு ஆச்சரியம்...

"இல்ல..நான் எழுதித்தரேன்.."

"நீ உனக்கு எழுதிக்கோ.... பசங்க யார் கிட்டயாவது நோட்டு வாங்கித்தரேன்..."

"புதுசா நோட்டாவது வாங்கிக்கோயின்..."

"வேண்டாம்... வீட்டுல புதுசு இருக்கு.... அது போதும்.."

"நிஜமாவா சொல்ற? "

எப்போதும் போல் சிரித்தான்...

அணில் குட்டி அனிதா : அதுக்கு மேல அங்க நின்னா உங்களுக்கும் சேர்த்து எழுதித்தர சொல்ல போறீங்கன்னு .... எஸ் ஆயிட்டாரு கெளரி அதுக்கூட தெரியலையா கவி.....?!! :))))))))


பீட்டர் தாத்ஸ்:- “There is a garden in every childhood, an enchanted place where colors are brighter, the air softer, and the morning more fragrant than ever again.”

முப்பத்தும் உடன் இரண்டும்

இந்த தொடர்பதிவுகள் விடாது போலவே.... எத்தனை முறையோ நம்மை பற்றி நாமே சொல்லி க்கொண்டே வந்தாலும் புதுப்புது கேள்விகளுடன் திரும்ப திரும்ப வருகிறார்கள்.. ... இப்படி தொடர்பதிவுக்கு" என்னை பற்றி சொல்லவும் முடியாமல் விடவும் முடியாமல்..." கூப்பிட்டு விட்டவர் டார்லிங் முல்ஸ் , அவருக்கு எனது நன்றி.. :)

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

கவிதா - இது எனது இயற்பெயர் இல்லை, என் அம்மா வைத்த செல்ல பெயர், காரணம் தெரியவில்லை.... ரொம்பவும் பிடிக்கும்.. .இது தவிர்த்து எனக்கு இன்னமும் நிறைய........................செல்ல பெயர்கள் உண்டு -

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

.....................

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்பவும் பிடிக்கும்! அப்பாவை பார்த்து அவரை போல எழுத பழகியது..அதனால் பிடிக்கும், சுற்றியுள்ள அனைவருமே கையெழுத்து அழகு என்று சொல்லுவதாலும் பிடிக்கும்..

4. பிடித்த மதிய உணவு என்ன?


ஏதாவது ஒரு கீரை எப்பவும் என்னோட சாய்ஸ், கீரையின் எந்த வகை டிஷ்னாலும் அதுனுடன் வாழைக்காய் வறுவல் ரொம்பவும் பிடிக்கும்,

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ம்ம்ம்ம்ம்ம்ம்... நிச்சயமாக...வைத்துக்கொள்வேன்..

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி பிடிக்கும்.. ஆட்கள் இல்லாத தனிமை கிடைத்தால் குளிக்க விருப்பம்..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் , உடல் மொழி, பேச்சு....

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?


பிடிச்ச விஷயம் : வேகம், கோபம்

பிடிக்காத விஷயம் : வேகம்..பிடிவாதம், அழுகை, எளிதில் எல்லோரையும் நம்பிவிடுவது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : உழைப்பு, படிப்பு, என்னை போன்ற ஒரு பெண்ணை சமாளித்து வாழ்க்கை நடத்துவது.

பிடிக்காத விஷயம் : அப்படி ஒன்றும் இல்லை...

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

ஆயா

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

(....இந்த கேள்வி அவசியமா? ..போங்கப்பா......)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் குழந்தை பார்த்துக்கொண்டிருக்கும் கார்டூன், என் நண்பன் ஆன்லைனில் இருப்பதை...

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சை... (எனக்கு (என்னை இல்லை) பிடித்தவர்களின் கையில் இருக்க வேண்டி இருந்தால் மட்டுமே...மாறுவேன்...)

14. பிடித்த மணம்?

என்னுடைய Deodorant "Creation Lamis -black white "
நித்தியமல்லி, குண்டு மல்லி, சாதிமல்லி

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

கோபிநாத் - இணையத்தில் இன்னுமொரு செல்லம்...

கோம்ஸ் - நிலாகுட்டியின் அம்மா, நல்ல தோழி... அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம்

புனித் : தாங்க முடியலங்க இவங்க அழுவாச்சி கவிதைகள், அதனால் இப்படி ஒரு பதிவெழுத அழைக்கிறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன்?".... முல்ஸ் இந்த பதிவை எழுதிய விதம் எனக்கு ரொம்பவும் பிடித்தது.. . I dont get along with this post subject mmmmm....Yes !! I have got different opinion/mindset/idea on this.. but still.. it rocks .. !! Hats off Mulz..!! hugs and kisses da!

செம செம செம போஸ்ட் da !!!

17. பிடித்த விளையாட்டு?


நிறைய இருக்கு ... - செஸ் , ஆடு புலி ஆட்டம், இறகுபந்து, பல்லாங்குழி

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை ,க்ரைம், ஹாரார், திரிலர், யோசிக்க வைக்ககூடிய, தாக்கம் ஏற்படுத்தக் கூடிய படங்கள்

20. கடைசியாகப் பார்த்த படம்?

மணிசித்ரதாழு - (மலையாளம்) டிவியில் பார்த்தது

21. பிடித்த பருவ காலம் எது?

மழை, பனி , குளிர் காலம் ரொம்பவும் பிடிக்கும்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் - ஐந்தாம் பாகம், ஞானம் பிறந்த கதை, எப்பவும் படிப்பது விக்கரமாதித்தன் கதைகள் :)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ம்ம்... அடிக்கடி இல்லை.. எப்போதாவது மாற்றினாலும் அது என் குழந்தை..

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் :மெளனம், அடுத்து என் குழந்தையின் சிரிப்பு

பிடிக்காத சத்தம் : தூங்கும் போது என் தூக்கத்தை கெடுக்கும் எந்த சத்தமாக இருந்தாலும். எப்போதும் அமைதியான தொந்தரவு இல்லாத தூக்கத்தை விரும்புவேன். கிடைக்காத பட்சத்தில் தூக்கம் இருக்காது.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டார்ஜிலிங், சிம்லா

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

..................

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொய் சொல்லி ஏமாற்றுதல் , இன்னும் நிறைய இருக்கு... :)

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

வெகுளித்தனமான அன்பு, எல்லோரையும் எனக்கு சொந்தம் என்று நினைத்துக்கொள்வது.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

ம்ம்ம்ம்ம்ம்ம்..... அமைதியான என் உடம்புக்கும் மனதுக்கும் கஷ்டமில்லாத மரணம் வேண்டும் என்ற ஆசை ஏனோ சிறுவயது முதல் உண்டு.......

என் கண்களை கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும்...

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

என் இழப்பு (அ) இறப்பு :)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

சுயநலமில்லாதவர்களுக்கு போராட்டம்....

---------------------------------------------------------------------------------------------

அணில் குட்டி அனிதா : ம்ம்ம்...ஆரம்பிச்சாச்சாஆஆ? கொஞ்ச நாள் ரெஸ்ட் ல இருந்தேன்.. .இதுக்கேல்லாம் காரணமான இரண்டு பேரை கவி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவங்க சமைச்ச சாப்பாட்டை சாப்பிட வச்சி பழிய நான் தீத்துக்க்ல என் பேரூ அணிலு அனிதா இல்ல..... சொல்லிட்டேன்.. !!!!

பீட்டர் தாத்ஸ் :- Seeing, hearing, feeling, are miracles, and each part and tag of me is a miracle??????

ஏதோ நினைக்கிறேன்....





பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்


தோழியின் அண்ணன் நேற்று இரவு, விபத்தில் அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்.

சிகிச்சை அளித்துவருகின்றனர், ஐசியூ வில் இருக்கிறார். மனம் ஒரு நிலையில் இல்லை,

அவர் சீக்கிரம் குணம் அடைந்து வந்துவிட பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்...

மனதின் ஆவேசங்கள்...மெளனப்புலம்பல்களாக…-2

முன்னரே இரண்டு பதிவுகளில் மனதின் மெளனப் போராட்டாங்களை பற்றி எழுதியாயிற்று..
மனதும் அறிவும் அசைபோடும் நேரங்கள்-
மனசின்ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…

ஆனால் இப்படிப்பட்ட போராட்டங்களுக்கு முடிவு இல்லை என்றே படுகிறது.. அப்படி ஒரு முடிவு தேவை என்று நான் நினைக்கும் பட்சத்தில் எல்லாம், கெளதம புத்தர் என்னவோ எனக்கு நினைவுக்கு வருகிறார். அவரை போலவே ஒரு ராத்தியில் ஓடி போய் ஒரு மரத்திற்கு கீழ் அமர்ந்து கொள்ளலாமா? ஆனால் அடுத்த வினாடி எழும் கேள்வி - எப்படி அவரால் தன் மனைவி யசோதராவையும், குழந்தை ராகுலா' வையும் விட்டு விட்டு துறவு போக முடிந்தது ..?!! எத்தனை சுயநலம் அவருக்கு என்றே தோன்றுகிறது. அவரின் பக்க நியாயங்கள் ஆயிரம் இருக்கட்டுமே... ஏன் அவரின் மனைவி மற்றும் குழந்தையை பற்றி அவர் யோசிக்கவே இல்லை? என்ன மனிதர் இவர்?

துறவு என்பது எத்தனை எளிதானதாக வேண்டுமானால் அவருக்கு இருந்துவிட்டு போகட்டும் அதற்கான காரணம் ஒரே ஒரு முறை அவர் ஏழ்மையை கண்ணால் பார்த்தது என்று தானே அவரின் கதைகள் சொல்லுகின்றன. எத்தனையோ துயருக்கு நடுவில், நம் வாழ்க்கையை நாம் நடத்திச்சென்றுக்கொண்டு தான் இருக்கிறோம். இவரின் சொந்த முடிவுகளுக்காக தன் குடும்பத்தினரை துயரத்தில் விட்டது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை. இவரை போல் எல்லோரும் ஒரு முடிவு எடுக்க ஆரம்பித்து இருந்தால் நம்மிடையே எத்தனை கோடி புதிய மதங்கள் உருவாகி இருக்கும்?!

மனதில் இருக்கும் இப்படிப்பட்ட முடிவில்லாத கேள்விகளுக்கு நாமே விடைத்தேடி அலையும் போது மனதும் அறிவும் போடும் சண்டையினை கூர்ந்து கவனிக்கும் போது அத்தனையும் மெளனத்தில் நடக்கும் பெரிய யுத்தமாகவே இருக்கிறது. தலை பாராமாகி போகிறது.....

"இன்னைக்கு செத்தால் நாளைக்கு பால்" இது தான் மனித வாழ்க்கையின் நிச்சயம் என்ற போதிலும் அதற்குள் நம்மிடையே எத்தனை எத்தனை

மன வேறுபாடுகள்
சண்டைகள்
நீயா, நானா என்ற போட்டி
நீ அறிவாளியா நான் அறிவாளியா
நீ ஜெயிப்பதா நான் ஜெயிப்பதா என்ற கேள்வி
உன்னை விடவும் நான் சிறந்தவன்/ள் என்று காட்டிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் தேவையற்ற முயற்சிகள்
ஒருவரை ஒருவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புண்படுத்திக்கொள்ளுதல்
ஆத்திரம்
தான் என்ற அகங்காரம்
விட்டுக்கொடுத்தல் என்பதே மறந்து போகும் கோபங்கள்
ஆழ்ந்த மெளனங்கள்
அதனால் எழும் கோபங்களும், புலம்பல்களும்
பணமும் அதற்கான முக்கியத்துவமும்
சுயநலமான முடிவுகள்

என்று நம்மின் எல்லா எதிர்மறையும் வெளியில் வரவைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துக்கொள்கிறோம்.

வாழ்க்கை என்ற இந்த சின்ன வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம், நில் என்றால் வாழ்க்கை நின்றுவிடுவதில்லை. போ என்றாலும் சென்று விடுவதில்லை. கடிவாளம் இல்லாத குதிரை என்று சொல்லலாமா? .... இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கோடிட்டு வரைந்து அதன் வழியே நடக்க முடியுமா? முடியும் என்றாலும் அது அத்தனை எளிதானதா? போகிற போக்கில் போகட்டும், நாமும் உடன் செல்வோம் என்று செல்லலாமா? அப்படி சென்றால் நம் எதிர்ப்பார்ப்புகள், சந்தோஷங்களை அடைய முடியுமா? எதிர்ப்பார்ப்புகளுக்கும், சந்தோஷத்திற்கும் எல்லைகள் உண்டா? அந்த எல்லைகளை நிர்ணயிப்பது யார்? நாமா? எதிராளியா? நாமாக இருந்தால் கட்டும் படுத்தலாம், அதிகவும் படுத்தலாம், ஆனால் எதிராளியின் எதிர்ப்பார்ப்பாக இருந்துவிட்டால்...?!! மிஞ்சி நிற்கும் கேள்வி இது.. விடை தெரியா கேள்வி இது.. அதை அவர் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடலாமா? விட்டுவிட்டு வந்துவிட்டால்...... .எதிராளியின் நினைவுகளையும் விட்டுவிட வேண்டுமல்லவா?

ஓ மனமே!! ஏன் அதை செய்ய மறுக்கிறாய்? கொஞ்சமாக சுயநலமாக இருந்துதான் பாரேன் என்று உன்னை எத்தனை கெஞ்சினாலும் இன்னமும் உன்னைத்தவிர மற்றவை கவனிக்கிறாயே .... எங்கே செல்கிறது உன் பாதை.. கோடிடாத... குறிக்கோள் இல்லாத..... ஏதோ நினைவலைகளின் பின்னால்... கட்டுப்பாடு இல்லாது ஓடும் உன் பாதங்களை நீயே இழுத்து நிறுத்திவிடு, நிறுத்திவிடாதே மண்ணுக்குள் புதைத்து விடு. புதைத்தால் மட்டுமே நகர்ந்து போகாமல் அங்கேயே இருக்கும்..

இப்படித்தான் யுத்தங்கள் மண்ணில் புதையும் வரை தொடர்கிறது.
மனிதனின் சந்தோஷம் எதில் இருக்கிறது? ஒருவருக்கு பிடித்த விஷயத்தை அவர் மனம் நினைக்கின்ற விஷயத்தை அறிவின் துணையுடன் முடித்துவிடும் போது கிடைக்கிறது. கிடைக்காத பட்சத்தில், நிறைவேறாத நேரங்களில் தான் கேள்வியும் பதிலும் மாறி மாறி வருகிறது.

எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு, தூங்கினோமா, எழுந்தோமா, சாப்பிட்டோமா, வேலைக்கு சென்றோமா, சம்பாதித்தோமா, அரட்டை அடித்தோமா, ஊரை சுற்றினோமா, சினிமா பார்த்தோமா, சண்டை போட்டோம்மா, இன்று நாம் சந்திக்கும் புதிய மனிதரிடம் உதட்டோர புன்னகையோடு பேசினோமா... கிரிக்கெட் பார்த்தோமா....கிண்டல் அடித்தோம்மா... என்று..இதற்கு மேல் என்ன இருக்கிறது வாழ்க்கையில்.. சரிதானே?

தினமும் நம்மை நம் வாழ்க்கையின் கையில் ஒப்படைத்து விட்டு, இப்படி ஓய்வாக இருந்தால்............

இருக்கமுடியாமல் போகும் போது தான்....... திரும்பவும் இந்த பதிவின் ஆரம்பமே இதன் தொடர்ச்சி............

அணில் குட்டி அனிதா :..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வெயக்காலம் அதுவுமா.. இவிங்களுக்கு தான் கழண்டு போச்சி சரி. .அதுக்குன்னு... அதை அப்படியே வெளியில காட்டிக்கனும்ம்மாஆஅ???? முடியல தாயீஈஈஈஈ... தயவுசெய்து.. .இந்த மாதிரி போஸ்ட் இனிமே எழுத மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் போடுங்க கவி. .அப்பத்தான் நான் இங்கே இருப்பேன்.. இல்லன்னா. .நான் பப்பு கூட ஜாயின்ண்டு...

பீட்டர் தாத்ஸ் : Whatever you hold in your mind will tend to occur in your life. If you continue to believe as you have always believed, you will continue to act as you have always acted. If you continue to act as you have always acted, you will continue to get what you have always gotten. If you want different results in your life or your work, all you have to do is change your mind.

சிக்ஸ் பேக் - (Six Pack) வில்லிகளாக மாறிட்டாங்களோ!!

அணில் குட்டி அனிதா : அண்ணனுங்க, அக்காங்க யாரும் யாரும் டென்ஜன் ஆகப்பிடாது, நாட்டுல நடக்கறத அப்படியே புட்டு புட்டு வைக்கிறேன் .... ஏதோ என்னால முடிஞ்சது..

ஒரு வருஷம் முன்ன வரைக்கும் நம்ம அக்காஸ் எல்லாரும் அவிங்க கல்யாணம் பண்ணிக்க போறவரு எப்படி இருக்கனும்னு நினைச்சாங்கன்னா...

* ஐடி கம்பெனி யில் ஒரு நல்ல வேலை,
* குறைந்தபட்சம் 50 -70 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம்,
* சொந்த வீடு, மாமியார் , நாத்தனார் உடன் இருக்கக்கூடாது,
* பிக்கல் பிடுங்கல் இல்லாத தனிக்குடித்தனம்,
* ஆடம்பரமான வாழ்க்கை -

ஆனா இப்ப இம்புட்டும் சேர்த்து.... "சிக்ஸு பேக்" கும் வேணுமாம்.. அதுக்கு பாவம் நம்ம அண்ணனுங்க எங்க போறது......?!!

முதல்ல அண்ணன்களுக்கு "சிக்ஸ் பேக்" னா என்னான்னு தெரியுமான்னு தெரியல.. சரி அதுக்காக தான் இந்த போட்டோ...



ஹி ஹி ஹி....ஆனா நம்ம அண்ணனுங்க கிட்ட வேற ஒரு சிக்ஸ் பேக் எப்பவும் கைவசம் ... இது இருக்க வரை அண்ணங்களை யாரும் அசச்சிக்க முடியாதில்ல..! ஆனா என்ன கல்யாணம் யாருக்கும் இந்த ஜென்மத்தில ஆக போறத்தில்லை ன்னு மட்டும் தெளிவா எனக்கு தெரிஞ்சி போச்சி.. :)


ஆனாலும் அக்காங்கங்க எல்லாம் திடீர்னு வில்லிகளாக மாறிட்ட மாதிரியே தெரியுது எனக்கு..

இந்த வில்லிகளை சமாளிக்க அண்ணன்களுக்கு ஒரு எக்ஸ்ர்ஸைசு விடியோ... அண்ணங்களா ஜிம்'முக்கு போக வேண்டாம், வூட்டுலேயே செய்ங்க... ஏன் ஆபிஸ்ல மேனேஜர் ரூம் ல போய் செய்ங்க.. சீக்கிரம் பிரோமோஷன் கிடைக்கும்..




பீட்டர் தாத்ஸ் :- A few beers short of a six-pack


ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமா?

ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமா? அதுவும் நம் குழந்தை ஒன்று இருக்கும் போது? ஆகாயநதி அம்மாக்கள் பதிவில் என்னுடைய கன்னத்தில் முத்தமிட்டால் என்ற பதிவை படித்தபின் குழம்பி போய் கேட்டு இருக்கிறார்.

என்ன சொல்லுவது? சரி அவருக்கு அங்கு பதில் சொல்லுவதை விடவும், தனியாக பதிவு போடுவது சரியென்று பட்டது. பொதுவாக குழந்தை இல்லாதவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் போது எந்த பிரச்சனைகளும் வருவதற்கு வாய்பில்லை என்றே நினைக்கிறேன். ஒரே குழந்தையாக இருக்கும், அந்த குழந்தையின் மேல் தனி கவனம் செலுத்தி வளர்ப்பார்கள்.

நம்மில் பலருக்கு உடனே தோன்றக்கூடிய சந்தேகம், இப்படி எடுத்து வளர்க்கும் போது சொந்தங்கள் ஏதும் சொல்வார்களா? அந்த குழந்தையை தனியாக பிரித்து பார்ப்பார்களோ, அதனால் அந்த குழந்தை மனதளவில் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் வரும். உண்மையாக இருந்தாலும், குழந்தைகள் இல்லாதவர்கள், அப்படி ஒரு குழந்தையை தத்து எடுக்கும் வளர்க்கும் போது முதுகுக்கு பின்னால் என்ன வேண்டுமானாலும் பேசினாலும் நேரில் கண்டிப்பாக அப்படி எதுவும் யாரும் சட்டென்று சொல்லிவிடவும், நடந்து க்கொள்ளவும் மாட்டார்கள். ஒன்று குழந்தைகள் இல்லாதவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதும், இரண்டாவது, அந்த குழந்தையால் அவர்களுக்கு கிடைத்திருக்கும் சந்தோஷமும் காரணங்களாக இருக்கும்.

அடுத்து சொந்த பிரச்சனைக்கு வரலாம், நமக்கு முன்னமே ஒரு குழந்தை இருந்து, இரண்டாவதாக ஆதரவற்ற குழந்தையை எடுத்து வளர்க்க முற்படும்போது நாம் யோசிக்க வேண்டியவை

1. சரி சமமாக அந்த குழந்தையை நடத்தும் அளவிற்கு நமக்கும், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்ல எண்ணங்களும், முதிர்ச்சியும் இருக்க வேண்டும். குறிப்பாக நம் பெற்றோருக்கு இருக்க வேண்டும்.

நான் எந்த வீட்டிற்கும் தத்து குழந்தையாக சென்றது இல்லை, ஆனால் அப்பாவும் தாத்தாவும் இறந்த பிறகு என்னை சொந்தங்கள் வீட்டிற்கு அனுப்பி தங்க வைத்தார்கள். அண்ணன் மகளாக, தங்கை மகளாக சென்று தங்கியிருக்கிறேன். குழந்தையாக அங்கே நான் எப்படி நடத்தப்பட்டேன் என்பது இன்னும் பசுமரத்து ஆணி போல் என் நெஞ்சில் இருக்கிறது. அவர்களின் சொந்த குழந்தைகளை போன்று என்னை அவர்கள் நடத்தியது இல்லை.

சில உதாரணங்கள். சாப்பிட ஏதாவது பலகாரம் வாங்கி வந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு போக த்தான் எனக்கு கொடுப்பார்கள். சில நேரங்களில் அவற்றை மறைத்து வைத்து கொடுப்பதை கூட பார்த்து இருக்கிறேன். சாப்பாடும் அப்படித்தான், தன் குழந்தைகள் விருப்பத்திற்கு செய்வார்கள், என்னை அப்படி கேட்டு செய்ததும் இல்லை, சமமான உணவை கொடுத்ததும் இல்லை. அதை பார்த்து பார்த்து நான் என் எதிர்பார்ப்புகளை அந்த வயதிலேயே குறைத்துக்கொண்டேன். அடுத்து உடைகள், அதுவும் எனக்கென்று ஒரு பட்ஜெட் வைத்து இருப்பார்கள். :) அவர்கள் குழந்தைகளுக்கு அப்படி எதுவும் பட்ஜெட் இருக்காது. என்ன பணம் சொல்லுகிறார்களோ அந்த அளவில் உடைகளை செலக்ட் செய்ய பழக்கிக்கொண்டேன். சில சமயம் உனக்கு இப்போது செய்ய முடியவில்லை என்றும் சொல்லுவார்கள், நானும் சரி பரவாயில்லை என்று சொல்லுவேன். வீட்டு வேலைகளும் எனக்கென்று கொடுத்துவிடுவார்கள். அவர்கள் குழந்தைகளை குழந்தையாக பார்ப்பார்கள், ஆனால் என்னை அப்படி பார்க்க மறந்துவிடுவார்கள். எல்லாவற்றிக்கும் மேல் என்னை ஒரு பாரமாக நினைத்தார்கள், அதற்கு காரணமாக நான் நினைப்பது , அவர்களின் வருமானத்திற்கு நான் அவர்களுக்கு அதிகபடியாக ஒரு ஆள். ஒரு ஆள் வீட்டில் அதிகமானால், சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே பட்ஜெட் டில் அதிகமாகும், அதனால் ஏற்படும் கஷ்டம், கோபம் அப்படியே என் மேல் வெறுப்பாகவும், கோபமாகவும் திரும்பும். அதனால் என்னுடைய தேவைகள் என்று எதையுமே கேட்காமல் என்னை நானே கட்டுப்படுத்திக்கொள்ளவும், இருப்பதை வைத்தே என் தினப்படி வாழ்க்கையை ஓட்டவும் கற்றுக்கொண்டேன். என் ஆயாவிடம் கூட அப்படித்தான் இருப்பேன்,. நமக்கு அவர்கள் செய்வது பெரிய விஷயம், இதில் என்னுடைய விருப்பம் என்று எதையும் கேட்கக்கூடாது என்று அவர்கள் செய்வதை சரி என்று சொல்ல பழக்கிக்கொண்டேன்.

இப்படி என் இயல்புக்கு அப்பால், மற்றவர்களை கவனித்து என்னை மாற்றிக்கொண்டதால், என்னுடைய விருப்பங்கள் எல்லாமே பின்னுக்கு தள்ளப்பட்டது, அதனால் கிடைக்கும் வெறுமையும், பாதிப்பும் இன்றும் எனக்கு இருக்கிறது என்பதற்கு யார் காரணம் என்று நீங்களே முடிவு செய்து க்கொள்ளலாம்.

குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தான், அவர்களை ஒரே மாதிரியாக நம்மால் நடத்தமுடியவில்லை என்றால், அது கண்டிப்பாக அந்த குழந்தையை மனதளவில் பாதிக்கும். அந்த பாதிப்பு பாஸிட்டிவாகவும் மாறலாம், நெகடிவ்வாகவும் மாறலாம்.

2. பெண் குழந்தை என்னும் போது அந்த குழந்தைக்கு படிப்பை தவிர, கல்யாணம், அதற்கு பின் அந்த குழந்தைக்கு செய்ய வேண்டிய எல்லாமே நாம் தான் செய்ய வேண்டும், அதனால், அதன் கணக்கு வழக்குகளை போட்டு பார்த்து , அந்த குழந்தையின் மனநிறைவுக்கு நம்மால் அவற்றை வாழ்நாள் முழுதும் செய்ய முடியுமா என்று யோசித்துக்கொள்ளவேண்டும்.

3. அடுத்து சொத்து, நாம் சேர்த்து வைக்கும் நம்முடைய சொத்தை நம் குழந்தைக்கும், வளர்ப்பு குழந்தைக்கும் சரி சமமாக கொடுக்க நம் மனம் இடம் கொடுக்குமா என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. நம் குழந்தைக்கு, இன்னொரு குழந்தை வளர்ப்பு குழந்தை என்று தெரிய வந்தால், வரும் விளைவுகளை சந்திக்க தயாராகவும், அதனால் வளர்ப்பு குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகளை யோசித்து ப்பார்க்கவேண்டும்

5. சொந்த பந்தங்களை பற்றி இந்த விஷயத்தில் கவலைப்படவேண்டியது இல்லை. நாம் எல்லாவற்றிலும் சரியாக இருக்கும் பட்சத்தில், எப்படி அவர்கள் பிரச்சனை செய்தாலும், அவற்றை சரி செய்துவிட நம்மால் முடியும்.

6. நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏற்ற தாழ்வுகளை நாமும், நம் குழந்தையும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் மற்றொரு குழந்தையை அழைத்து வந்து அந்த குழந்தையை கஷ்டப்பட வைக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை.

இது நேரில் நான் பார்த்த ஒரு விஷயம், நன்றாக போய் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் அந்த குடும்ப தலைவரின் தவறான சகவாசத்தினால், சொத்து சுகம் இழந்து நடுவீதியில் நிற்க நேரிட்டது, அப்போது அந்த குடும்பத்தலைவி எங்களிடம் சொன்னது, இந்த வளர்ப்பு குழந்தை மட்டும் இல்லை என்றால், எப்படியோ ஒரு வேலை சாப்பிட்டு நான் பிழைத்துக்கொள்வேன். இப்போது இந்த குழந்தை எனக்கு பாரமாக உள்ளது என்றார்கள். இது அவர்கள் சொந்த குழந்தையாக இருந்தால் சொல்லி இருப்பார்களா என்றால் நிச்சயமாக இருக்காது.

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகள் அவர்களை போலவே சக குழந்தைகளுடன் வளரும் போது அவர்களுக்கு எந்த காம்ளக்ஸும் இருக்காது. ஆனால் இப்படி வெளியில் வரும் போது தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து கஷ்டப்பட்டு கொள்வார்கள், எனக்கு தெரிந்து வெளியிலும் சொல்லமாட்டார்கள். நான் ஒரு முறை தாம்பரத்தில் உள்ள ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு சென்றிருந்தேன். அங்கே வளரும் குழந்தைகள், நன்றாக படித்து மிக பெரிய அளவில், அதிகாரத்திலும், வேலையிலும் இருப்பதை பார்த்தேன். அதிலும் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல இடமாக பார்த்து திருமணம் கூட செய்து வைக்கிறார்கள், எனக்கு அங்கு சென்று அவர்களுடன் நேரம் செலவிட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது, அவர்களுக்கு என்ற வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள்.

ஆதரவற்ற இல்லங்களில் வளரும் குழந்தைகளை எடுத்து வந்து வளர்த்து, அவர்களும் கஷ்டப்பட்டு நாமும் கஷ்டப்பட்டு, ஒரு நாள் இல்லை ஒரு நாள், சே இந்த குழந்தையை ஏன் தான் தத்து எடுத்தோமோ என்று நாமும், ஏன் தான் இங்கு வந்தோமோ என்று அந்த குழந்தையும் நினைக்கும் படி இல்லாமல் இருந்தால் நலம். எடுத்து வளர்ப்பதை விடவும், தனியாக ஒன்று என்ன நிறைய குழந்தைகளுக்கு பணம் கொடுத்து அவர்களுக்கு உதவலாம், பிறந்தநாள், பண்டிகை நாட்களில் அவர்களுடன் சென்று நேரத்தை செலவிடலாம், செலவிட்டு பாருங்கள் எத்தனை சந்தோஷப்படுகிறார்கள் என்று உங்கள் மனதளவில் உணர்வீர்கள்.

அணில் குட்டி அனிதா : ம்ம்.. என்ன சொல்றீங்க.... வேண்டாம் னு சொல்றீங்களா.. ஏன் கவி.. ஏதோ ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா ..உங்களுக்கு பொறுக்கலையா? ..

பீட்டர் தாத்ஸ் : “Poetry is an orphan of silence. The words never quite equal the experience behind them.”

இதயத்தின் துடிப்பு.....

முன் குறிப்பு : அவ்வ்வ்வ்!! என்ன கொடுமைங்க இது..!! நான் என்னவோ இதயத்துடிப்பின் வலியை எழுதினால் எல்லாரும் காதல் கவிதை ன்னு நினைச்சிக்கிறாங்க... ஏங்க இப்படி தப்பு தப்பா புரிஞ்சிக்கிறீங்க. .தலை வலித்தால் தலை பிச்சி எடுத்துடுலாம் போல இருக்கும் .அப்படித்தான்.. இதயமும்.. ஒரு உறுப்பாக கருதி எழுதப்பட்டது..

எழுத்தை வைத்து தவறாக நினைப்பது என்பது இதுதானோஓஓஓஓஓஓஓஒ !!




.. ..
.. ..
.. ..
.. ..
.. ..


கடிகாரமுள்ளாக
என் கையில்
நீ
கிடைத்தால்
எளிதாக
நிறுத்திவிடுவேன்.

உன்
ஒவ்வொரு
துடிப்பும்
எனக்கு
வலிக்கிறது
நீயாக
நிறுத்திவிடு

என்
உடலிலிருந்து
உன்னை
தனியே
பிய்த்து
எடுத்து

நான்
இல்லாமல்

நீ
துடித்து
நிற்பதை
பார்க்க
ஆசை...


அணில் குட்டி அனிதா :- ஹய்யோ யம்மாஆஆ....இது என்னா ரத்த காட்டேறியா இருக்குமோ... ..ஹார்ட்டை அப்படியே புடுங்கி வெளியில எடுத்து காட்டறாங்க.. அவ்வ்வ்வ்வ்! இனிமே நான் இங்க இருக்கமாட்டேன்.. எனக்கு பேய் பிசாசு ரத்த காட்டேறி கூட இருக்காப்பலேயே இருக்கே... யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்க..

பீட்டர் தாத்ஸ் : “Life is one of those precious fleeting gifts, and everything can change in a heartbeat.”

ஒரு வேண்டுகோள்... .

என் பெயரை பயன்படுத்தி, ப்ளாக் நண்பர்களிடம் உதவி கேட்டு பணம் வாங்குவதாக எனக்கு ஈமெயில் வந்து இருந்தது, இது இரண்டாவது முறை. கொடுத்தவரும், என் பெயரை பயன்படுத்தியதால், யோசிக்காமல் கொடுத்தும் இருக்கிறார். இது எனக்கு தெரியாமல் நடந்து இருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.

இப்படி திரும்பவும் எதுவும் நடக்காமல் இருக்கவே இந்த வேண்டுகோள். என் பெயரை பயன்படுத்தி, யாராவது உதவி கேட்டு வந்தால், என்னிடம் கேட்டுவிட்டு பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ஈமெயில் முகவரி அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். தயவுசெய்து, என்னை ஒரு முறை கேட்டு விட்டு கொடுங்கள். ஏனென்றால் பண உதவி என்பது சரியான இடத்திற்கு, சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படவேண்டும். யாரும் தவறாக என் பெயரை உபயோகிக்க கூடாது என்பதால் இந்த வேண்டுகோள். இரண்டு முறையும் தவறாக தன் சுயநலத்திற்காக கஷ்டம் என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள்.

தயவுசெய்து யாரும் என் பெயரை சொல்லி கேட்பதால் ஏமாந்து பண உதவி அல்லது பிற உதவிகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரின் புரிதலுக்கும் மிக்க நன்றி

எவனோ ஒருவன்....

என்னை சுற்றி உள்ள நண்பர்கள் அனைவரும் எனக்கு ஒரு வரப்பிரசாதம். விலகி விலகி தவிர்த்து விட்டு போகும் என் இயல்பை பொருட்படுத்தாமல் என் மேல் அன்பு செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி எத்தனை பேருக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். ஒரு நாள் இரு நாள் இல்லை வருடங்களாக, அவர்களின் அக்கறையும், அன்பும் என்னை வியப்படையத்தான் செய்கிறது, அப்படி இருப்பவர்களிடம் கூட இன்னமும் நான் தொடர்ந்து அவர்கள் சொல்லுவதை கேட்டு, நல்ல முறையில் நடந்துக்கொள்வதில்லை என்பது வருத்தமாக த்தான் இருக்கிறது. என்ன செய்வது, யாரிடமும் ஒட்டாத தள்ளி தள்ளி போகும் என் இயல்பை என்னால் பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்ள முடியவில்லை.இந்த நண்பர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை.

இப்படி வருடங்களாக என் மீது அன்பும், அக்கறையும் உள்ள ஒரு நண்பர் செயகுமார். அவரின் பெயரை குறிப்பிட்டு எழுதுவதை அவர் விரும்புவாரா என்று தெரியவில்லை, ஆனால் குறிப்பிட விரும்புகிறேன். என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறார், பின்னூட்டம் இடுவதில்லை. ஏனென்று எனக்கு தெரியவில்லை, நானும் கேட்கவில்லை. எனக்கு தேவையான மாரல் சப்போர்ட்’ஐ எப்போதும் நான் கேட்காமலேயே ஈமெயிலில் அனுப்பிக்கொண்டே இருப்பவர், நான் அவற்றை படிக்கிறேனா இல்லையா என்று கூட அவருக்கு தெரியாது. இவை எல்லாம் பலனை எதிர்பார்க்காத அன்பு. [சிங்கு……இப்ப சொல்லிக்கிறேன்... நீங்க அனுப்புகிற எல்லா ஈமெயிலையும் படிச்சிடுவேன் :)]

தொடர்ந்து முதல் ஆளாக என் பதிவுகளை படிப்பது இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் என் பாடல் பதிவுகளையும் பார்த்து பாடல்களையும் கேட்டு, எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார். "செய்கின்ற வேலையை சரியாக செய்ய வேண்டும், குரல் நன்றாக இருக்கிறது, நல்ல பாடல்களை நன்றாக பயின்று பாடலாமே ஏன் ஏனோ தானோ என்று பதிவிடுகிறீர்கள்? " என்று சொல்லி, அலைபாயுதே படத்தில் வந்த இந்த பாடலையும் (ஆடியோ), மற்றும் பாடல் வரிகளையும் ஈமெயிலில் அனுப்பி இருந்தார்.

ஆனால் அந்த ஈமெயில் கத்திமுனையில் மிரட்டி அனுப்பப்பட்டிருந்தது. ஒழுங்காக, நன்று பயின்று , தரமாக, சரியாக ரிக்கார்ட் செய்து பதிவிட விருப்பமிருந்தால் மட்டுமே இந்த பாடலை நீங்கள் பாடவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார், எனோ தானோ என்று பாடி நல்ல பாடலை கெடுத்து விடாதீர்கள் என்றும் சொல்லி இருந்தார்.

முதல் முறை கேட்டவுடனேயே அவருக்கு நான் அனுப்பிய பதில், ரொம்ப கஷ்டம் பாஸ், நிறைய பிராக்டீஸ் செய்யனும், ரெக்கார்ட் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன் நீங்கள் சரி என்றால் பதிவிடுகிறேன் என்று சொல்லி இருந்தேன். ரிக்கார்ட் செய்து அவருக்கு அனுப்பி, "அவர் தயவுசெய்து பதிவிடாதீர்கள்," என்று சொன்ன பிறகு வேண்டுமென்றே பதிவிடுகிறேன்.. சிங்கு எஸ்கியூஸூமீ…. இதை பதிவிட்டே ஆகனும்னு முடிவு செய்துட்டேன்.. :) (எப்பவும் போலவே சொன்ன பேச்சு கேட்கற பழக்கம் இல்லல..)

இதோ பாடல்…

குரல்: சுவர்ணலதா
வரிகள்: வைரமுத்து
படம்: அலைபாயுதே
இசை: ஏ. ஆர். ரஹ்மான்


evno3.mp3


அணில் குட்டி அனிதா : சிங்கண்ணே உங்களுக்கு இது அவசியமா??? அம்மணி பாட்டுப்பாடி கொல்றது தாங்காம எத்தனையோ பேரு எழுதறதை விட்டுட்டு ஓடிட்டாங்க.. ..ம்ம் எனக்கேன்ன வரவங்க எல்லாம் உங்களைத்தான் கும்ம போறாங்க... வாங்கிக்கோங்க..

பீட்டர் தாத்ஸ் :“Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.

ஓம் சிவோ ஹம்...!!

Shivan destiny is our final destination




Lyrics - Vaali
Singer - Vijay Prakash

Hara hara hara hara hara hara hara hara Mahadev
Hara hara hara hara hara hara hara hara Mahadev

Om.
Bhairava Rudraya
Maha Rudraya
Kaala Rudraya
Kalpanta Rudraya
Veera Rudraya
Rudra Rudraya
Gora Rudraya
Aghora Rudraya
Maarthanda Rudraya
Anda Rudraya
Brahmanda Rudraya
Chanda Rudraya
Prachanda Rudraya
Thanda Rudraya
Soora Rudraya
Veera Rudraya
Bhava Rudraya
Bheema Rudraya
Athala Rudraya
Vithala Rudraya
Suthala Rudraya
Mahathala Rudraya
Rasathala Rudraya
Talatala Rudraya
Pathala Rudraya
Namo Namaha

Om Sivoham..
Om Sivoham..
Rudra naamam bajeham..

(
Chorus)Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

Veera badraya agni nethraya gora samhaaraka
Sakala lokaaya sarva boothaya Sathya saakshatkara
(chorus)Shambo Shambo Sankara

Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

(Chorus) Hara hara hara hara hara hara hara hara Mahadev

Sri Rudhra manthras..

Namah somaya cha Rudraya cha Namastamraya charunaya cha Nama shangaya cha pashupataye cha Nama ugraya cha bhimaya cha Namo Agrevadhaya cha dure vadhaya cha Namo hantre cha haniyase cha Namo vrukshebhyo harikeshebhyo Nama staraya Namash shambhave cha mayo bhave cha Namah shankaraya cha mayaskaraya cha Namah Shivaya cha shivataraya cha

Anda brammanda koti
Akhila paripaalana
Poorana jagat kaarana sathya deva deva Priya

Vedha vedhartha saara
yagna yagnomaya
Nishchala dushta nigragha
sapta loga samrakshana

Soma soorya agni lochana
Swetha rishaba vaaghana
Soola pani bujanga booshana
tripura naasha nardhana
Yoma kesa mahaasena janaka
pancha vaktra parasu hastha namaha

Om Sivoham
Om Sivoham
Rudra roopam bajeham

Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

Kaala trikaala nethra trinethra soola trisoola dhaatram
Sathya prabaava divya prakaasha manthra swaroopa mathram
Nishprapanchaadhi nishkalankoham nija poorna bodha ham ham
Gathya Gathmaagam Nithya Bramhogam Swapna Kasogam Hum Hum

Sachit Pramanam Om Om
Moola Pramegyam Om Om
Ayam Bramhasmi Om Om
Aham Bramhasmi Om Om

Gana Gana Gana Gana Gana Gana Gana Gana
Sahasra Kanta Sapta Viharaki

Dama Dama Dama Dama Duma Duma Duma Duma
Siva Damarugha Nadha Viharaki

Om Sivoham
Om Sivoham
Rudra naamam bajeham

Veera badraya agni nethraya gora samhaaraka
Sakala lokaaya sarva boothaya Sathya saakshatkara
(chorus)Shambo Shambo Sankara

உயர் சாதியில் பிறந்த திமிர்

யாருக்கு ??!! என்பது முதல் கேள்வி. FC , BC, MBC, SC, ST இப்படித்தான் நாம் வகைப்படுத்தி பிரிக்கப்பட்டு இருக்கிறோம். இதில் FC பிரிவினருக்கு, அவரை விடவும் மற்றவர்கள் குறைவு என்ற திமிர். அதே போல் BC, க்கு மற்றவர்கள் எல்லோரும் அவரைவிடவும் குறைவு என்ற திமிர், இப்படியே தான் மற்ற சாதி பிரிவினரும் தனக்கு கீழ் உள்ளவர்களை குறைவாக மதிப்பிடுகின்றனர்.

நாம் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தால், இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருக்கவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்.

கணினியில் காலம் கழித்துக்கொண்டு நாம் இருந்தாலும் இன்னமும் சந்தில், தெருவில், தோட்டத்தில், புழக்கடையில் உட்கார்ந்து சாப்பிடும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி அவர்களை சாப்பிட வைப்பது உயர் சாதியினர். அவர்களை வீட்டிற்குள் வர அனுமதிப்பதில்லை. என்னால் சகித்து க்கொள்ள முடியாத ஒரு பழக்கமாக இதை கருதுகிறேன். ஐயா, அவன் சக மனிதன். நம்மை போன்று ரத்தம், சதை, இதயம், கண்கள் கொண்ட ஒரு மனிதன். விலங்கு அல்ல. ஏன் எத்தனையோ வீடுகளில் நாய்களை கூட வீட்டிற்குள் விடுகிறார்கள், மடியில் வைத்து கொஞ்சுகிறார்கள். இவர்கள் வந்தால் என்ன, உட்கார்ந்து சாப்பிட்டால் என்ன.?

சரி எப்படி இந்த உயர் சாதித் திமிர் நம்மிடையே ஆரம்பிக்கிறது. ஆரம்பிக்கும் இடம் முதலில் வீடு தான். சாப்பாடு ஊட்டும் போதே குழந்தைக்கு இதுவும் சேர்த்து ஊட்டிவிடப்படுகிறது.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த FC பிரிவில் இருப்பவர்களுக்கு இருக்கிற திமிர் இருக்கிறதே. .என்னவோ கடவுளிடமிருந்து நேராக இறங்கி வந்தவர்கள் போன்று அவர்கள் நடந்து க்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமே கடவுள் அதிக அறிவையும், பண்பையும் படிப்பையும் கொடுத்தவிட்ட மாதிரி அவர்கள் நடந்து க்கொள்வது மட்டுமே அல்லாது அவரை விட கீழ் சாதியில் பிறந்தவர்களை கொட்டி கொட்டி நீ இதற்கு மேல் எழுந்துவிடக்கூடாது என்பதில் அதிகம் கவனம் வைப்பதும் சகிக்கமுடியாத ஒரு செயல்.

உயர் சாதியினரால் தனிப்பட்ட முறையில் மிக மிக மோசமாக நான் அடிக்கடி பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதுவும் இந்த அறிவு, படிப்பு, வேலை, திறமை, வாய்ப்புகள் என்று வரும்போது உழைப்பு, நேர்மை என்ற இந்த இரண்டும் இல்லாமல் வெறும் சாமர்த்தியத்தால் மட்டுமே முன்னுக்கு வர முயன்று அதற்காக என்னை முதுகில் குத்திய நிறைய கேடு கெட்ட உயர் சாதியினர் உள்ளனர். அவர்களின் அந்த பல் இளிக்கும் சாமர்த்தியம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது என்பது ஒரு தகுதியின்மையாகவே நினைக்கிறேன். அப்படிப்பட்ட தகுதியும் எனக்கு வேண்டாம் என்றும் நினைக்கிறேன்.

எப்போதும் நேர்மையற்ற முறையில் தன்னை முன்னிலை படுத்தும் இவர்களை பின்னுக்கு தள்ள நேர்மையாக போராடி அப்படிப்பட்டவர்களை கண்டாலே மனிதர்களாக எனக்கு மதிக்க தோன்றவில்லை. நிறைய உதாரணங்கள் என்னால் எடுத்துச்சொல்ல முடியும். அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது அலுவலங்களில். அவர்களை விட அடுத்தவர்கள் முந்தி செல்லுவதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை. அதற்காக அவர்கள் எடுக்கும் குறுக்குவழி நடவடிக்கைகள் அருவருப்பை தரக்கூடியவை. என்ன வேண்டுமானலும் சிரித்துக்கொண்டே செய்து முடிக்கும் கேவலமான குணத்தை உடைவர்கள் எனலாம். இந்த சிரிப்பு நம்மை குழித்தோண்டி புதைத்த பின்னும், அந்த குழிக்குள் மேல் நின்று அதற்கு காரணம் அவர்கள் இல்லை என்பது போன்று சிரித்து சிரித்து பேசுவார்கள் பாருங்கள்... தூ என்று முகத்தில் உமிழ தோன்றும்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் இவர்களின் அட்டூழியங்களுக்கு அளவில்லை எனலாம். அதற்கு முக்கியக்காரணம் அதே சாதிப்பிரிவை சேர்ந்த ஒட்டுமொத்த கூட்டமும் அங்கேயே இருக்கும். தங்கள் இனத்தை பார்த்தவுடன் அவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பது. அப்படிக்கொடுப்பது மட்டும் இல்லாது நமக்கு திறமை இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்புவார்கள். வாய்ப்பு கேட்பவனும் ஜால்ரா அடிப்பான், கொடுப்பவனும் ஜால்ரா அடிப்பான். அதை தாண்டி நாம் அங்கு நிற்க வேண்டுமென்றால் பல தியாகங்களை செய்ய வேண்டும். இல்லையேல் பின்னங்கால் வைத்து அப்படியே வந்துவிடவேண்டியதுதான். அதில் முக்கியமானது பல் இளிப்பது.. ... இந்த கருமத்தை எப்படித்தான் இவர்கள் செய்கிறார்கள் என்பது இன்றளவும் எவ்வளவு ஆராய்ச்சி செய்தும் என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

அடுத்து உணவு முறை, இதில் இன்னமும் பத்து பேருக்கும் முன்.. "அசைவ உணவை சாப்பிடும் போது, அய்யோ.. கடவுளே எப்படித்தான் இந்த கருமத்தை எல்லாம் சாப்பிடுகிறீர்களோ.. ?? ச்சேக்..!! வாந்தி வருது " என்று நாம் ஒரு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே சிரித்துக்கொண்டே சொல்லும் கேவலமான பிறவிகள். நானும் திருப்பி அவர்கள் நிலைக்கு இறங்கி, நீ திங்கும் கொழ கொழ... தயிருஞ்சாதத்தையும், ஊறுகாயை யும் பார்த்தால் எனக்கும் கூட தான் வாந்தி வருகிறது, எப்படித்தான் இதையே தினமும் தின்னு..சூடு சுருணை என்று எதுவுமே இல்லாமல் இருக்கியோ."ன்னு சிரிக்காமல் சொல்லிவிடுவது உண்டு. அப்படி சொல்லாமல் அமைதியாக அவர்களை பொருட்படுத்தாமல் சாப்பிடும் நம்மவர்களும் உண்டு. அல்லது மற்றவர்கள் எதிரில் இப்படி சொல்லும் போது உடம்பு கூசி, நா பேச எழாது அசிங்கப்படுபவர்களும் உண்டு. இப்படி இருக்க விரும்புவதில்லை..

கூழோ..கஞ்சியோ.. இல்லை நிஜமாகவே அது கருமமோ... ஒருவர் உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எதற்கு அப்படி சொல்லவேண்டும். ஒன்று சாப்பிட்டு முடித்தப்பிறகு அதன் நல்லது /கெட்டதை எடுத்து சொல்லி சொல்லலாம், இல்லை சாப்பிடுவதற்கு முன் சொல்லலாம். அதை செய்ய மாட்டார்கள். .ஏனென்றால் அவர்கள் அறிவுஜீவிகள், உயர் சாதியில் பிறந்த வென்றுகள். முட்டை கலந்த கேக், ஐஸ்கீரிம் சாப்பிடுவார்கள், தனியே அசைவ உணவகம் சென்று ஒரு கைப்பார்ப்பவர்களும் உண்டு, வீட்டிலேயே தனியே பாத்திரம் வைத்து சமைத்து சாப்பிடும் வேஷதாரிகளையும் நேரில் பார்த்து இருக்கிறேன்.

உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, கட்டியிருக்கும் வீடு, படுத்துறங்கும் பாய் முதற்கொண்டு ஒரு கீழ்சாதிக்காரன் செய்தது என்று அறியாதவர்களா? கீழ்சாதிக்காரன் உழைப்பில் , வியர்வையில் தானே அன்றாடம் நீங்கள் சுவாசித்து உயிர்வாழ்கிறீர்கள்? பிறகென்ன.. உங்களைவிடவும் கீழ்சாதிக்காரனுக்கு அறிவு உண்டு, திறமை உண்டு, பண்பு உண்டு, மனிதநேயம் நிறையவே உண்டு. அதை புரிந்து, அவர்களுடன் சேர்ந்து நடந்து பழகுங்கள், நடக்க பிடிக்கவில்லை என்றால், ஓரமாக நின்று ஒதுங்கி நின்று பழகுங்கள்.. இல்லையேல் இடித்து த்தள்ளிக்கொண்ட செல்ல எங்களுக்கும் உங்களை படைத்த அதே ஆண்டவன் நல்ல அறிவையும், ஆரோக்கியத்தையும், உடன் உங்களைவிடவும் நல்ல குணத்தையும் கொடுத்து இருக்கிறார்.

அணில் குட்டி அனிதா :- அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! ரம்பம்பம்ம்ம்ம்..ஆரம்பம்ம்ம்ம்... பம்பம்பம் பேரின்பம்.. 6 , 7 மாசமாச்சி.. அம்மணி நீங்க இப்படி எழுதி... ஆனா..லும் இது ஓவர் சூடு மச்சி...... !!

பீட்டர் தாத்ஸ் :- A community is democratic only when the humblest and weakest person can enjoy the highest civil, economic, and social rights that the biggest and most powerful possess.