மழையை எதிர்நோக்கா தினம்
உடல் தகிக்கும் வெம்மை
வியர்வையில் உடை ஒட்டிக்கொண்ட எரிச்சல்

எங்கிருந்தோ அடர்ந்த ஒரிருள்
அன்னாந்துப்பார்த்தன கண்கள்
மெது மெதுவாய் நெருங்கியது
ஜோடி கண்கள் பல கடந்து
என் கண்களையும் சந்திக்கையில்
கொட்ட ஆரம்பித்தது.;

அது அசாதாரணம் ;ஆவேசம்
சன்னல் வழியே வேகச்சாரல் ;வீட்டினுள் ஓடை
காது கிழியும் இடியோசை
ஆவேசத்தை எதிர்க்கொள்ள ஏனோ ஆசை
இடிப்பாயுமென மெல்லிய நடுக்கம்
பாயுட்டுமே அதுவே முடிவென்றால்..

அண்ணாந்து வானம் பார்த்தேன்.
கண்களில் நேரே விழுந்து வழிந்தது
ஒரு கண் விரித்து ஒரு கண் சிமிட்டி
கண்ணடித்து ரசித்து புன்னகித்தேன்
உணர்ச்சிவசப்பட்ட மழையோ
உதடுகள் நனைத்து அணைத்தது
நாவால் சுழட்டி ருசிப்பார்த்தேன்
பின்னல் அவிழ்த்து தலை உதரினேன்
வேகத்தில் துளிகள் கோடாகி தொடர்ந்ததில் 
விரைந்து நனைந்தேன்
இடியின் ஓசையில் பூமி நடங்கியது
சிந்தையில் பழமும் மொட்டும் வந்து மறைந்தினர்
சுவரோரம் சாய்ந்து மொத்தமாய் விழுந்த
தண்ணீரில் முகம் தூக்கி சிலிர்த்தேன்
மணித்துளிகள் கரைந்தன

அங்கே
மழையும் நானும் மட்டும்.. !! 



Related post  : http://kavithavinpaarvaiyil.blogspot.in/2010/07/blog-post_19.html


Photo Courtesy : Thx Google