1. நேற்று நல்ல மழையில் கடலூர் பயணம். மழையில் ரசித்தவை....



2. இரண்டு கரைத்தொட்டு ஓடும் ஆறு.. மடையில் வழிந்து புரண்டு ஓடும் அழகு :) இதன் சத்தம் இரவில் சுற்றுவட்டத்தில் 3 கிமி தூரத்திற்கும் மேல் கேட்குமாம்.


3. மழையில் மூழ்கிக்கிடக்கும் முக்கால் பகுதி விளைந்துவிட்ட பயிர்கள்.. :( நீர் வடிந்து விட்டால் இப்போதுக்கூட பயிர்களை காப்பாற்றமுடியும் என்றார்கள்....


4. மேகமும், இருட்டும், நடுவே கொஞ்சம் வெள்ளை வானமும்..


5. மும்பையில் மரத்தால் செய்யப்பட்ட கை மிஷனை க்கொண்டு கரும்பு சாறு பிழியும் பெண். இரண்டு பக்கமும் திருகு போன்ற அமைப்புடைய மரத்துண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் கரும்பை சாறு எடுக்க விடவேண்டும். ஒரு மரத்துண்டு அசையாது வைக்கப்பட்டுள்ளது, சுற்றக்கூடிய மற்றொரு திருகு மரத்துண்டோடு, மேற்புறமாக செருகப்பட்டுள்ள நீண்ட மரத்தால் ஆன கைப்பிடியை ஒருவர் சுற்றுகிறார். :) சூப்பர் ஜூஸ் & சூப்பர் மேனுவல் மிஷன்.. :)


6. அடையாரில் எங்களுக்கு முன்னால் வண்டியில் சென்றவர்கள். நித்தயமல்லியை மிக நேர்த்தியாக ஆரஞ்சு கலர் திடமான நூலால், பின்னல் (எப்போதும் கட்டும் முறையாக தெரியவில்லை) போன்று தொடுத்து இருந்தார்கள்.  அழகு... :)

படங்கள் மொபைலில் எடுத்தது.

அணில் குட்டி அனிதா : உம்ம்... ஒரு பிரபல ஸ்டார் பதிவரை கடலூர் ரில் சந்திச்சிங்களே ..அதைப்பத்தி..............

பீட்டர் தாத்ஸ் : “A person is neither whole nor healthy without the memories of photo albums. They are the storybook of our lives. They provide a nostalgic escape from the tormented days of the present.”
.