நம்மில் நிறைய பேர் ஹோட்டலுக்கு சென்றால் விரும்பி சாப்பிடுவது சன்னா பட்டூரா... அதை வீட்டிலேயே செய்து பார்க்கலாமே...

சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-

வெள்ளை கடலை - 1 கப்
வெங்காயம் : 2
தக்காளி - 3
பச்சைமிளகாய் : 1
மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்
மஞ்சள் பொடி: சிறுது
பூண்டு : 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
பட்டை, லவங்கம் : 2, 2
சோம்பு : சின்ன ஸ்பூன்
பட்டை இலை - சிறிய துண்டு
எண்ணெய் : தேவைக்கேற்ப

செய்முறை:- கடலையை முதல் நாளே ஊறவைத்து விடவேண்டும். மாலையில் செய்ய காலையில் ஊறவைத்துக்கொள்ளலாம். இஞ்சி,பூண்டு, பட்டை 1, லவங்கம் 1, சோம்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியையும் தனி தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை இலை, ஒரு பட்டை, ஒரு லவங்கம் போட்டு சிவந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு அடிப்பிடிக்காமல் வதக்கவும், நன்கு வதங்கியவுடன் வெங்காய விழுதை போட்டு வதக்கவும், நன்றாக வதங்கியவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.

இவை நன்கு வதங்கியவுடன் வேகவைத்த கடலையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி இந்த கலவையில் போட்டு மிளகாஉ, மல்லித்தூள், மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கிளரி சிறு தீயில் கொதிக்கவிடவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. தக்காளி வெங்காயத்தில் உள்ள தண்ணீரே போதுமானது. மிளகாய் தூள் வாசனை போகும் அளவிற்கு கொதித்தவுடன் நிறுத்திவிடவும்.
மேல் அலங்காரத்திற்கு கொத்தமல்லியை சின்ன சின்னதாக வெட்டி மேலே தூவி விடலாம்.

பூரிசெய்ய தேவையான பொருட்கள் :

மைதாமாவு : 3 கப்
நெய் : 3 ஸ்பூன்
ஆப்பசோடா : 1 ஸ்பூன்
எண்ணெய் :- தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை : தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிமாவு பதத்திற்கு பிசைந்து தேவையான சைஸ்'ல் உருண்டைகளாக்கி, பூரி'களை திரட்டி, எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு எடுத்துக்கொள்ளவும்.

அணில் குட்டி அனிதா:- பத்மா பாட்டி ஒருவழியா போய் சேந்துட்டாங்க.. இந்த அம்மணி அவங்க பேர்ல சமையல் சொல்லித்தரேன் னு நம்ம எல்லாரையும் சாக அடிக்க போறங்கன்னு நினைக்கிறேன்.. மக்கா எதுக்கும் உஷாரா இருங்க.. சமையல செய்து பாத்தாலும் உங்களுக்கு பிடிக்காதவங்க யார் கிட்டயாவது முதல்ல டேஸ்ட் பண்ண சொல்லி அப்புறம் நீங்க சாப்பிடுங்க..

பீட்டர் தாத்ஸ் :- A will finds a way