திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு செல்லும் வழக்கம், OMR வெறிச்சோடி கிடக்கும். சோழிங்கநல்லூர் தாண்டி சாலையின் இருபுறமும் மாந்தோப்புகள் இருக்கும். இரவில் பயணம் செய்ய பயமாக இருக்கும், சாலை விளக்குகள் எங்கோ ஒன்றிரண்டு இருக்கும். கடைகள் எதும் கண்ணில் படாது..

ஐடி கம்பெனிகளால்,வேளச்சேரி குடியிருப்பு & அதை ஒட்டிய தேவைகளுக்காக அசுர வளர்ச்சியை அதிவிரைவில் அடைந்ததோ, அதே காரணங்களுக்காக, கடந்த 10-15 ஆண்டுகளில் OMR உம், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள 70% மக்கள் இங்கே தான் வேலைக்கு வருகிறார்கள் போல, அலுவலகம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நெஞ்சை அடைக்கிறது.  வாகனங்கள் விடும் புகையில், தலைசுற்றல் மயக்கம், அதைவிட மணிக்கணக்கில் நிற்பது ஆயாசமாக இருக்கிறது. ஒவ்வொரு சிக்னலிலும் தப்பித்தோம் பிழைத்தோம்னு ஓட வேண்டியிருக்கு. தலையெழுத்து + தலைவேதனை.

கிட்டத்தட்ட 1.5 மாதம் இவ்வழியே தினம் காலையும் மாலையும் செல்ல வேண்டியக்கட்டாயத்தில் இருந்தேன்.  வழி நெடுக ஐடி மக்கள் அடிக்கும் கூத்தையும், கால் தடுக்கினால் ஒரு உணவு விடுதியின் வாசலில் நிற்குமளவிற்கு, குறிப்பாக அசைவ உணவு விடுதிகளும், நடைப்பாதை கையேந்தி பவன்களும்.... இரவில் 9-10 ஆனாலும் பெண்கள் கையேந்திபவன்களில் உணவருந்தும் காட்சி கண்கொள்ளவில்லை. இருந்துட்டுப்போட்டும், அவர்களின் பாதுகாப்பு அவர்களின் கையில். பெரிதாக இதைப்பற்றி எல்லாம் கவலைக்கொள்ள ஓன்றுமில்லை. இவர்கள் நிற்கும் தைரியத்தில், நானும் ஒருநாள் இரவு கைந்யேந்தி பவனில் நின்று சாப்பிட்டேன். கவனித்தது, வேலை முடிந்து வீட்டுக்கு/விடுதிக்கு போகும் இரவு நேரங்களில் கூட அந்த ஐடி கார்ட் ஐ கழுத்தில் நாய் செய்யின் போல மாட்டிக்கொண்டு இருப்பதில் இவர்களுக்கு என்ன பெருமையோ...???? யாமறியோம் பராபரமே !!!

இந்த பதிவை எழுதக்காரணமே சென்னை ஒன் சாலையில் தினம் நான் பார்த்த அந்தப்பெண் தான்.  பாலியல் தொழிலாளி, இரவு 8 மணிக்கு மேல், அற்புதமாக தன்னை அலகரித்துக்கொண்டு, தலைநிறைய பூ,  உதட்டு சாயம், தொப்புள் தெரிய புடவை, ஒருப்பக்கமாக ரவிக்கை த்தெரிய இழுத்து விட்ட புடவை, கோயில் சிலையைப்போல அன்றாடம் சாலையோரம் வாகனங்கள் வரும் திசைநோக்கி நிற்பது, எனக்கு கொல்கத்தாவில் 'சோனாகஞ்ச்'ல் பார்த்த பெண்கள் தான் நினைவுக்கு வந்தனர். இப்படி அப்பட்டமாக நிற்பது அதும்  சென்னையில்???  எதைக்குறிக்கிறது/???. ஐடி துறை வளர்ச்சியின் பலன்களாக எடுத்துக்கொள்ளலாமா.????

இவர் ஒருத்தர் தானா என்றால் இல்லை , தொடர்ந்து சிறு இடைவெளியில் மரத்துக்கு மரம் 3-4 பேர் நிற்கின்றனர். என் கவனத்தை ஈர்த்தவர் இவரே. காரணம் அழகு....கொள்ளை அழகு, தமிழ் பெண்ணாக இருக்க வாய்ப்புகள் குறைவு. நடிகை ரித்விக்கா , 'டார்ச்லைட்' படத்தில் பாலியல் தொழிலாளியாக, இரவில் இப்படிதான் சாலையோரம் ஆட்களை எதிர்நோக்கி நிற்பார். ஆனால், இதுவோ சென்னையின் முக்கியப்பகுதி, மக்கள் அதிகமுள்ள,  1000க்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இடம், இங்கே இரவு 8 மணிக்கே நிற்பது.......  காவல்துறை என்ன செய்கிறது ?. இதன் தேவையை உணர்ந்து, இங்கு வருமானமும் அதிகம் வருவதால் தான் பெண்கள் இவ்விடத்தை தேர்வு செய்திருக்கின்றனர் எனப்புரிகிறது.

கொல்கத்தா, மும்பை, டெல்லி போல சென்னையும் மாறி வருகிறதா... ?? கூட அழைத்து செல்ல முடியாதோர், அங்கேயே இருட்டில் வைத்து நடத்தும் கசா முசாக்களும் கண்ணில் பட்டது.  ஐடி யில் வேலை செய்பவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நினைத்துப்பார்த்தால்..... 

என்னமோ நல்லாயிருங்க.. உங்க சம்பாத்யமும், அதில் நீங்கள் ஆடும் ஆட்டமும்......