திருமணத்திற்கு பின், சென்னைக்கு வீடு தேடி வந்த போது, என் கணவர் காண்பித்த இடங்கள் ஐ.ஐ.டி' சுற்றியுள்ள கோட்டூர்புரம், கோட்டூர், தரமணி, மத்தியகைலாஷ்'க்கும் ஐஐடிக்கும் இடைப்பட்ட இடம், கடைசியாக வேளச்சேரி. ஈ-காக்கைக்கூட இல்லாமல், மிக அமைதியாக, ஏரித்தண்ணீர் அங்கங்கே தேங்கியிருக்க, வேளச்சேரி என் கண்களுக்கு மிகவும் குளர்ச்சியாகவும் அமைதியாகவும் தெரிந்ததால், இங்கு வந்துவிடலாமென வந்(தேன்)தோம்.
இங்கு, இரண்டு மில்லியன் சதுர அடி இடத்தில் மிக பெரிய வணிக வளாகம் வரப்போவது தெரிந்ததிலிருந்து எனக்கு பெருமையை விட, போக்குவரத்தை நினைத்து அதிக பயமே இருந்தது. காரணம், பல வருடங்களாகவே அலுவலக நேரங்களில் குருநானக் கல்லூரியிலிருந்து, செக்போஸ்ட் வரையில் போக்குவரத்து நெரிசலில் மண்டை காய்ந்து போயிருக்கிறேன். அந்த சாலை மிகவும் குறுகிய சாலை என்பது இன்னுமொரு மைனஸ். இரண்டு சக்கர வாகனம் கூட எப்படி வேண்டுமானலும் வளைந்து நெளிந்து புகுந்து சென்றுவிட முடியாது. அப்படியொரு சாலையில் இந்த வணிக வளாகம் வருவது எனக்கு அத்தனை எதிர்பார்ப்பை தரவில்லை. அது கட்ட ஆரம்பித்த நாளிலிருந்தே இதே புலம்பல் தான்.
இன்று ஃபீனிக்ஸ் மால் சென்றபோது, இதையே தான் உணர்ந்தேன். மும்பையை சேர்ந்த Phoenix Mills என்ற நிறுவனமே இந்த வணிக வளாகத்தை இங்கே கட்டியிருக்கிறது. உள்ளே நுழையும் போதே தலையை குனிந்தபடி வண்டியோட்டி செல்லவேண்டியிருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தின் மேல் கூரை அந்தளவு கீழிறங்கி இருந்தது. மேற்கூரை என்னவோ உயரத்தில் தான் இருக்கிறது. அதற்கு கீழே ஏகப்பட்ட தண்ணீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் செல்லக்கூடிய குழாய்கள் என மேற்கூரை நிறைக்கப்பட்டு கீழே இறங்கி வந்துவிட்டது. கண்டிப்பாக இதில் தலையிடித்து மண்டை உடையக்கூடிய அபாயம் அதிகமாகவே உள்ளது. அது யாருக்கு எப்போது நடக்குமென்பதே இப்போதைய கேள்வி.
இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டியவர்கள், எப்படி இவற்றை திட்டமிடாமல் செய்தனர் என்பது எனக்கு
அடுத்து போக்குவரத்திற்கு வருவோம். 40% முடிக்கப்பட்டிருக்கும் வணிகவளாகம் திறக்கப்பட்டு, எந்தவித போக்குவரத்து வசதியும் செய்யப்படாமல், அதே குறுகலான பாதையில் எல்லா வண்டிகளும் செல்ல அனுமதிப்பட்டு இருக்கின்றன. இது மொத்த வேளச்சேரியின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று. இவ்விடத்தை கடந்தால் மட்டுமே வேளச்சேரியை விட்டு வெளியேற முடியும் அல்லது உள்ளேயும் வரமுடியும். இச்சாலையில் காலையிலிருந்து நல்லிரவு வரை போக்குவரத்து நெரிசல் இப்போதே தாங்கமுடியவில்லை. இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டுபவர்கள் போக்குவரத்திற்கு என்னமாதிரியான திட்டமிட்டனர் என்பதும் புரியாத புதிரே. எதிர்காலத்தில், விஜயநகரில் கூட போக்குவரத்து வசதிக்காக மேம்பாலம் அமைக்க போதுமான இடவசதிகள் உள்ளன. இங்கு அதுவும் முடியாதக்காரியம்.
இப்பொழுதே இந்த நிலையென்றால், இன்னமும் சத்யம் சினிமாவின் திரையரங்குகள் திறக்கப்பட்டால்..?!! பல வருடங்களாக வசித்துவந்த, பழகிவிட்ட ஓரிடம் தீடீரென மாசுப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். இந்த வளாகத்தினால் ஏற்படும் போக்குவரத்தில் வேளச்சேரி ஸ்தம்பிக்க போவதென்னவோ உறுதி.
எது எப்படியோ, வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் ஒரு மிகப்பெரிய மால்..... வெயில் கொளுத்தும் நாட்களில், சில்லென்று நேரத்தைக் கழிக்க இங்கே சென்றுவிடத் திட்டமிட்டிருக்கேன்.
மிக சாதாரண கட்டிட அமைப்பு என்பதாலோ என்னவோ, மும்பை மால்'களை போன்று ஃபீனிக்ஸ் என்னை கவரவில்லை.
அணில் குட்டி : போனமா...வந்தமான்னு இல்லாம என்னா நோண்டு வேல..?! அய்யோ பாவம் ...வேற யாரு ?!! அம்மணியின் வூட்டுக்கார் தான்.. :(((((.
பீட்டர் தாத்ஸ் : Study lends a kind of enchantment to all our surroundings
12 - பார்வையிட்டவர்கள்:
பெருமை உங்களுக்கு...பிரச்சனை ஃபீனிக்ஸ்க்கு ;))
ஆபாயகரமான கட்டிட அமைப்பு - கவனமாக தான் இருக்க வேண்டும்... தகவல்களுக்கு நன்றி...
@கோபி : ஆவ்வ்வ்வ்வ்.. :)
@ தி.த : நன்றி.
பெரும்பாலான ஹோட்டல்களிலும் அண்டர் க்ரவுண்ட் பார்க்கிங்க்ல இந்த அறிவிப்பு இருக்கும்...
சென்னையில் இத்தனை மாலுக்கு என்ன அவசியம்.. மக்களை வெட்டி செலவு செய்ய தூண்டும் வழி :(
@ எல்.கே : நிறைய ஹோட்டல்களுக்கு சென்றதில்லை. சென்றவரை இத்தனை இறங்கிய மேல்கூரை எங்கும் பார்க்கல. ஹோட்டல்களை போல இங்க லிமிட்டடாக மக்கள் வரத்து இல்லையே... அதிகமாச்சே..
//மக்களை வெட்டி செலவு செய்ய தூண்டும் வழி :(//
உண்மை.
@ ராகவன் சார் : மிஸ்..யூ.. :(( பதிவெழுத ஆரம்பிக்கும் போதே உங்க நினைவு தான் வந்தது..
திடீர்னு காணாமல் போனமாதிரி இருக்கு.. :( :(
உண்மைதான்.முதல் நாள் நெரிசலில் நானும் மாட்டிகொண்டேன். நிச்சயம் இப்பகுதி மக்களுக்கு தொல்லைதான்
மக்களின் கவனம் மாறும்வரை கூட்டத்திர்ற்கு குறைவிருக்காது
கட்டிங் நிறைய போனதால உயரம் கட் ஆகிடிச்சின்னு நினைக்கிறேன்.
நாகு
www.tngovernmentjobs.in
மேற்கூரை என்னவோ உயரத்தில் தான் இருக்கிறது. அதற்கு கீழே ஏகப்பட்ட தண்ணீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் செல்லக்கூடிய குழாய்கள் என மேற்கூரை நிறைக்கப்பட்டு கீழே இறங்கி வந்துவிட்டது.
ஹா!ஹா! எங்கள் கட்டுமானத்துறையின் அற்புதம் இது.கொஞ்சம் கூட யோசிக்கமாட்டோம்.கட்டுவதற்கு முன்பு வரை படம் இருக்காது,கட்டும்போதே கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுப்பார்கள்.இப்படி இருந்தால் கட்டிடம் முடிந்த பிறகு மேலே சொன்ன மாதிரி தான் இருக்கும்.
@ டி.என்.முரளிதரன் : நன்றி. இனி சைதாப்பேட்டைக்கு ஆதம்பாக்கம் கிண்டி வழியாக செல்வதே நல்லதுன்னு நினைக்கிறேன்
@ கவியாழி : சினிமாவும் வந்துவிட்டால், கவனம் மாறாதுங்க..
@ நாகு : என்ன கட்டிங்கோ.. கருமமோ...கஷ்டப்படறது என்னவோ நாமதான்.. :(
@வடுவூர் குமார் : வாங்க எப்படியிருக்கீங்க.?!
நீங்க சொல்றது சரிதான், ஆனா இத்தனைப்பெரிய வணிக வளாகத்திற்கு இந்த ப்ளான் எல்லாம் முன்னமே அனுமதிப்பெற்று தானே கட்டனும். அவ்வப்பொழுது சரிசெய்ய இதென்ன, சின்ன கட்டிடமா?
Post a Comment