ஜவ்வரிசி பாயசம் னு தான் சொல்லனும்.. ஆனா இன்னைய  தேதிக்கு இதை கஞ்சிப்போல தான் சாப்பிடறேன். அதனால் இந்த பதிவுல ஜவ்வரசி கஞ்சி'னே சொல்லுவோம்.  சேமியா பாயசம், பயத்தம்பருப்பு பாயசம், அரிசி பாயசம் னு பல வகை பாயசத்தில், இந்த ஜவ்வரிசி பாயசம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்ளோ பிடிக்கும்னா... .... வத்தி சுத்தனும்.. அப்படிக்கா மேல பாருங்க..  

3-4 ஆவது படிச்சிட்டு இருக்கேன், பள்ளி விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு  போயிருந்தேன். அத்தைப் பொண்ணு என்னைவிட  2 மாசம் சின்னவ, பையன் ஒரு வருசம் என்னைவிட பெரியவன், அப்புறம் ஒருசில சொந்தக்காராங்க இருந்தாங்க.  அன்னைக்கு சமையலோட பாயசம் செய்யறதுன்னு முடிவாகுது. அத்தை சமையல் ரூம்ல இருக்காங்க, மெதுவா அப்ரோச் செய்து..'அத்த.. எனக்கு ஜவ்வரிசி பாய்சம் செய்யறீங்களா?..ன்னு அன்போட ஆசையோட கேட்டேன். அத்தையும் என்னை நாலு ஐந்து வார்த்தையில் கொஞ்சிட்டு.. 'சரிடீ ஜவ்வரிசி பாயசமே செய்துடலாம்' னு  ப்ராமிஸ் செய்து தொரத்தி விட்டாங்க.  

சாப்பாடு நேரம்... எல்லாரும் ரவுண்டா உட்காந்து இருக்கோம், நான் மட்டும் ஜவ்வர்சி பாயச கனவோட உக்காந்து நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு உட்காந்து இருக்கேன், சாப்பிட்டு முடிச்சிட்டு, அத்தை ஒரு பாத்திரத்தை எடுத்துட்டுவராங்க... எச்சில் ஊறுரது.. ஒரு டம்ளரை என்னிடம் கொடுத்துட்டு, அடுத்தடுத்தடுத்து எல்லாருக்கும் கொடுக்க...  ஒரு சிப் குடிச்சவுடனே டம்ளரை குனிஞ்சி பாக்கறேன்... 

அவ்வ்வ்.... அது ஜவ்வரசி பாயசமே இல்ல சேமியா பாயசம்.. அப்படியே டம்ளரை கைல வச்சிட்டு அழ ஆரம்பிச்சேன்.'.அத்த.. ஜவ்வரிசி பாயசம் தானே கேட்டேன்..நீங்க சேமியா பாயசம் செய்து இருக்கீங்க.. ' எனக்கு வேணாம்..  இது.ன்னு. .ஒரே அழுகை..  அத்தையுடன் சேர்த்து வீட்டில் இருந்த அத்தனைப்பேரும், சமாதானம் செய்யறாங்க ஒன்னும் வேலைக்கு ஆகல..

அழுகை நிக்கல...  என்னைத்தவிர ஜவ்வரிசி பாயசத்தை வேற யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்களாம். அதனால சேமியா பாயசம் செய்தாங்களாம்.  சரி, இருந்துட்டு போட்டும். அப்ப எதுக்கு என்கிட்ட செய்யறேன்னு சொல்லனும்..அப்பவே முடியாதுன்னு சொல்லியிருக்கலாம் தானே..  இதான் என்னுடைய கோவத்துக்கும் அழுகைக்கும் காரணம். அழுது ஓஞ்சி உக்காந்தேன்.. ஆனா யாரோடவும் பேசல.

எல்லாரும் வெளியில் கிளம்பி போனாங்க.. நான் போகல. அடம் புடிச்சி உக்காந்த இடத்தைவிட்டு ஏன்சிகல..  இவ்ளோ மோசமா அடம் பிடிக்கிறதைப்பாத்து எல்லாருமே அசந்துப்போயிட்டாங்க.  அடுத்தநாள் காலையில் ஒரு தூக்கு நிறைய ஜவ்வரசி பாயசம் செய்துக்கொடுத்து அவங்க செய்த தப்பை திருத்திக்கிட்டாங்க...   :)))))))))))). சரிரிரீரஈ...... வேற எப்படிதான் கதைய முடிக்கிறதாம்.??..   ஆனா அன்னைக்கு அழுதது, பலவருஷம் அந்த அத்தை விசயத்தில் எனக்கு பயன்பட்டது..எந்த விசயமானலும்.. எங்கே நான் அடம் பிடிப்பேனோ, அழுவேனோன்னு ஒருவித பயத்திலேயே இருப்பாங்க. நவீன் வயிற்றில் இருக்கும் போது.. வீட்டுக்கு வரும்போதெல்லாம்.. 'எங்கையாவது ஒதுக்குப்புறமா இருக்க hospital லா பாத்து சேருங்க.. பிடாரி கத்த ஆரம்பிச்சா..அக்கம் பக்கம் ஒருத்தரும் இருக்கமுடியாது.. ஊரையே கூட்டிடுவான்னு சொல்றளவு அவங்களுக்கு  திகில் இருந்துதுன்னா பாத்துக்கோங்க..  நம்ம அழுகை சவுண்டு அப்படி.... ஹி ஹி..

இப்ப வயிறு வாயி எல்லாம் வெந்து போய்.. இந்த கஞ்சிய குடிக்க சொல்லி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறேன்.. அத்தையை அன்னைக்கு தொல்ல பண்ணத்துக்கான தண்டனையா இருக்குமோன்னு திங்க்கிங்கு..  சும்மா இத குடிக்க பிடிக்கவேயில்ல.. ஒரே திகட்டுது.. ;(

அணில்குட்டி : தெய்வம் நின்று கொல்லும்..! யாருக்கு பொருந்துமோ இல்லையோ அம்மணிக்கு பொருந்தும்.. என்னா வேதனை என்னா வேதனை ..வாயத்தொருந்து சொல்ல முடியுமா இப்ப??  இந்த பாயசத்தை விடுங்க.. இனி இவங்க வாழ்க்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிடவே முடியாதாம்... ஹா ஹா ஹா...   இதுக்கு மேல இவங்க இருந்தா என்ன செத்தா என்ன ????  :)))))))))))

பீட்டர் தாத்ஸ் : When you cant eat something which you love the most,then it should be a punishment.