அம்மையார் ஜெயலலிதாவின் நினைவாக அவரது பாடல்களை பதிவு
செய்யனும்னு நினைத்திருந்தேன்,உடனேயே அதை செய்யமுடியல. செய்ய ஆரம்பித்தவுடன் கண்ணதாசனும், வாலியும் மாற்றி மாற்றி என்னை ஆக்கரமித்துக்கொண்டனர்.

என்னமாதிரியான பாடல்வரிகள்?? ஸ்ப்ப்பா..எப்படி இப்படியெல்லாம் எழுத முடிந்தது.... வியந்து வியந்து பலமுறை திரும்ப திரும்ப கேட்டு லயித்துப்போய்விட்டேன்.

குறிப்பிட்டு சொல்லனும்னா,  " சந்ரோதயம் ஒரு பெண் ஆனதோ..." இதை தொடர்ந்து 10-15 நாள் பாடிக்கிட்டே இருந்தேன். இது ஒன்றுமட்டுமா? ... "குங்குமப்பொட்டின் மங்களம்.."

"நல்லது கண்ணா...கனவு கனிந்தது நன்றி உனக்கு"

"எங்கே அவள் என்றே மனம்.".. அடடா.....இதுமட்டுமா......

"ஒரே முறை தான் உன்னோடு பேசிப்பார்த்தேன்......" ...

சரிதான்.......... இது இப்பத்திக்கு நிக்காது.. பாட்டைக்கேட்டுப்பாருங்க..

https://soundcloud.com/gkavith/jj7

இதில் 1-7 ஆக பிரித்து பாடியிருக்கேன். முடிந்தளவு எனக்கு பிடித்தப்பாடல்களை பாடியுள்ளேன். இங்க ஒன்னே ஒன்னு (7) தான் பதிவிட்டிருக்கேன்..  உங்களுக்கு பிடித்தால் மிச்சமிருக்கும் பாடல்களை இங்கப்போய் --> www.soundcloud/gkavith கேளுங்க.  நான் பாடியதற்காக இல்லாட்டியும், பாடல் வரிகளுக்காகவாச்சும் கேட்டுப்பாருங்க...



# ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்கள்