அடையார் கேன்சர் மருத்துவமனை கேன்சரை குணப்படுத்தமட்டுமே நடத்தப்படுகிறது. வேறு வியாதிக்காரர்களுக்கு இங்கு வேலையில்லை.
நோயாளிகள் முதல் நிலை தகவல்/சந்தேகம்/உதவிக்கு மருத்துவமனையில் பகவான் ஆதிநாத் ஜெயின் காம்ப்ளெக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் PRO வை அணுகி விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நாளைப்போல நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருவதால், இங்கு காத்திருப்பு என்பது ரொம்ப சாதாரணம். காலையில் 7 மணிக்கு போனால் இரவு 7 மணி வரையில் கூட காத்திருக்க வேண்டி வரும். அனைவருமே வரிசைப்படிதான் அழைக்கப்படுவர்.  Recommendation, References என்று எதும் இங்கு செல்லுபடி ஆகாது, சில தினங்கள் சென்றாலே அங்கிருக்கும் நோயாளிகளைப்பார்த்து, நாமும் இதையெல்லாம் நாடாமல் காத்திருக்க ஆரம்பிப்போம்.

இங்கு 10 ல் 8 பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. Operation என்று முடிவானப்பிறகு, அந்த நோயாளிகளுக்கென ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு கூட்டம் நடத்தி, அதில் பணம் கட்ட இயலாதவர்களின் நிலையை அறிந்து,அவர்களுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை நடத்தப்படுகிறது. இதனை அறுவை சிகிச்சை செய்யப்போகும் நோயாளிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுகின்றனர். நமக்கு தேவைப்பட்டால், கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் இல்லையேல் பணம் கட்டுகிறோம் என்று சொல்லிவிடலாம். இலவச சிகிச்சைக்கு Income Certificate கொடுத்தால் போதுமானது.

அறுவை சிகிச்சைக்கு முன்பான செலவுகளும், வருமானம் குறித்த சரியான தகவல்கள் கொடுப்பதன் பேரில் ஆரம்பத்திலிருந்தே சிலருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு,  முந்தைய  பரிசோதனைகளுக்கு 20-25 ஆயிரம் ரூபாய் தேவைப்படலாம்.

ஒருவேளை வெளியில் வேறு மருத்துமனையில் புற்றுநோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தாலும், இங்கு வந்தால், முதலிலிருந்து எல்லா பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். வெளியில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

சென்னையில் அல்லாது தமிழகத்தின் பல பிரபல மருத்துமனைகளில், கைவிடப்பட்டு, இங்கு வருபவர்கள் ஏராளம்.

அறிகுறிகள் : உடலில் எந்த இடத்திலாவது சிகிச்சை அளித்தும் சரியாகாத கட்டி வகையறாக்கள், ரத்தகசிவோடு இருக்கும் கட்டிகள், ரத்தம் கலந்த சிறுநீர், பேதி போன்றவையை புறந்தள்ளாமல், நேரடியாக இங்கு வந்து பரிசோதனை செய்துக்கொள்ளுதல் சிறந்தது. வேறு மருத்துமனைகளுக்கு சென்று, பின்பு இங்கு வருவதால், காலதாமதம் மட்டுமல்லாமல், பண விரயம் அதிகமாகி,  நோயாளிகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதிக மன உளைச்சலை தந்துவிடும்.
*******
இங்கு பார்க்கும் அத்தனை நோயாளிகளுக்கும் ஏதோ ஒரு கேன்சர்.  :-

8 மாத குழந்தைக்கும், அவங்க அம்மாக்கும் கேன்சர், என்ன ஏதுன்னு விசாரிக்க மனசு வரல.. :(

வயிறு சம்பந்தப்பட்ட (குடல்) கேன்சர் அதிகம் -  அறிகுறி : வலியில்லாத தொடர்ந்து ரத்தப்போக்கோடு வெளிக்கி/பேதி ஆகுதல்.

இந்த நோயாளிகளின் உறவினர்கள் சொன்னதிலிருந்து காரணங்களை ஊகித்தது :- உணவே  முதல் காரணம் - அதிக அசைவம் தொடர்ந்து சாப்பிட்டவர்கள், அதிக காரம், பழம் & காய்கறியே தொடாமல் இருந்தவர்கள்.  பலவருடங்களாக ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தை கொண்டவர்கள்

குடி , சிகிரெட் , வெற்றிலைப்பாக்கு புகையிலை பழக்கம். இதனால் கேன்சர் வந்தவர்கள் எத்தனை வசதிக்குறைந்தவர்களாக இருந்தாலும் , இலவச சிகிச்சை அளிப்பதில்லை. முழுப்பணமும் கட்டினால் தான் சிகிச்சை.

அடுத்து, வாய் சார்ந்த புற்றுநோய். இதும் அதிகளவில் இருக்கிறது. வாய் சார்ந்த புற்றுநோய்க்கு, காதருகில் உள்ள க்ளேன்ட்ஸ் ஸை, அதில் கேன்சர் செல்கள் இல்லாவிட்டாலும் பரவும் என்று அவர்களாகவே எடுத்துவிடுகிறார்கள்.

சிறுநீரக கேன்சர் - சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல் அறிகுறி.

மார்பு & கருப்பை புற்றுநோய். இ்வை பொதுவாக நாம் அறிந்தவை.

இவைத்தவிர நெற்றி, கண், இமை, தலை , தோல் 'ன்னு சொல்றவங்களும் உண்டு.
******

குழந்தைகளுக்கென்றே தனிப்பிரிவு / தனிக்கட்டிடம் இருக்கிறது.

அதிகமானோர் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உணவு பழக்கம் காரணமாக இருக்கலாம். கேன்சர் இன்ஸ்ட்டியூட் உருவாக்கியவர்களில் யாராவது ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். 

இலவச சிகிச்சை செய்துக்கொள்பவர்களுக்கு, ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் தங்க இலவசமாக உணவோடு மருத்துவனமையில் வசதி செய்யப்பட்டுள்ளது.  தவிர பணம் கட்டுபவருக்கு தனியாக தங்க வசதியான அறைகளும் உள்ளன.

இலவசம் /பணம் வித்தியாசமின்றி அனைவருக்கும் எந்த பாரபட்சமுமின்றி ஒரேமாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.

பணம் கட்டுபவர்களில் A,B,C என்ற மூன்று பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். அடிப்படை வித்தியாசம் என்னவென்று தெரியவில்லை.

Insurance & மற்ற Claim வசதிகள் நேரடியாக இவர்கள் செய்வதில்லை. ரசீதுகளை வைத்து நாமாக தான் claim செய்துக்கொள்ள வேண்டும்.

ஆயா வேலைப்பார்ப்போர் அனைவருமே வயதானோர். இவர்கள் சோர்வில்லாமல் வேலை செய்தது, என் கவனத்தை ஈர்த்தது. பணம் கேட்டு வாங்குகின்றனர்.. (கொடுப்பதில் தப்பேயில்லை.) எல்லோரிடமும் கேட்பார்கள் என தோணவில்லை, தேர்வு செய்தே கேட்கின்றனர்.

நோயால் அவதிப்பட்டு, குணமாகிய பலர் இங்கேயே வேலைப்பார்க்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. வியாதியின் தன்மையை அறிந்ததாலோ என்னவோ,  கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல், முகம் சுளிக்காமல், சோர்ந்து உட்காராமல் உழைக்கிறார்கள்.

தவிர , தன்னார்வளர்கள் பலரை பார்க்க முடிந்தது. சாப்பாடு நேரத்தில், நோயாளிகளை காக்க வைக்காமல் இருக்க, இவர்கள் அந்த நேரத்தில் வேலை செய்கிறார்கள்.

குறைகள் : மருத்துமனை வசதிகள் தனியார் மருத்துவமனைகளை போல இருக்காது. சுத்தமாக வைத்திருந்தாலும், நாம் எதிர்ப்பார்க்கும் hygienic  இருக்க வாய்ப்பில்லை. கேன்டீன் உணவுகள் சுமாராகவே இருக்கும், அங்கும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்க முடியாது. தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருத்துமனையின் வசதிகள் நிச்சயம் திருப்தி அளிக்காது. !

மருத்துவமனை இணையத்தளத்திலிருந்து->புற்றுநோய் வராமல் தவிர்க்க:

Abstinence from tobacco
Balanced diet
Personal hygiene
Vaccines
# Adyar Cancer Institute