வசீகரா..n அனல் மேலே பனித்துளி

 Sorry Appa, I just ignored u in my thought, here you go..... 

 1. வசீகரா


2. அனல் மேலே பனித்துளி


நகம்

பெண்களுக்கு இந்த நகம் வளர்ப்பதிலும், அதை பராமரிப்பதிலும் உள்ள ஆர்வம் அவர்களின் பொறுமையையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. இதையும் கூட ஒரு கலை' ன்னு சொல்லலாம். எளிதான விசயமல்ல, பெண்களால் மட்டுமே முடிந்ததும் கூட. பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்று கண்டுபிடித்துவிடலாமாம். (நன்றி சிறுமுயற்சி-முத்துலட்சுமி )

எனக்கு இது எட்டாத கனி :). 8 ஆம் வகுப்பில் என்னுடன் படித்த செல்வி, நீள நீளமான, மிக நேர்த்தியாக பராமரிக்கப்பட்ட நகங்கள் வைத்திருந்தாள். அவள் கைவிரல்களை பிடித்து, எப்படி நகம் வளர்க்கனும்னு கேட்டது இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது.  எனக்கு நகம் வளர்க்க தெரியவில்லை, முடியவில்லை, வளரவும் இல்லை. முக்கிய காரணம் கடிச்சி கடிச்சி துப்புவது. என்னை அறியாமல், நகங்கள் அத்தனையும் ஒட்டக் கடிச்சி துப்பிடுவேன். இது என் பழக்கமில்லை, அப்பாவிடமிருந்து இறக்குமதி ஆன பழக்கம். அப்பாவின் நகங்களும் ஒட்ட கடிச்சி கடிச்சி துப்பி, நகமே கண்ணுக்கு தெரியாமல், நுனி சதை மேலே இருக்கும். அந்த அளவு நான் மோசமில்லை என்றாலும், எனக்கும் நகம் வளர்ந்துவிடாதளவு கடிக்கும் பழக்கம் இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு வரை இருந்தது.
நகத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கடிக்கும் பழக்கத்தையாவது நிறுத்த வேண்டுமென, எனக்கு நானே சேலன்ஞ் செய்து எப்படியோ நிறுத்திவிட்டேன். கடிக்காமல் இருக்க, சில சமயம் விரல்களில் கைக்குட்டைக்கூட சுற்றி வைத்திருப்பேன். கடிக்கப்போகும் போது, கைக்குட்டை, நகத்தை கடிக்கக்கூடாது என நினைவுப்படுத்தும். கடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டாலும், நகம் வளர்க்க எனக்கு சரிப்பட்டு வரவில்லை.

நம் தோழிகளிடம் "நகம்" குறித்து ஒரு குட்டி சர்வே எடுத்ததில் :

விஜி ராம் : ம்ம்க்கும் இந்த கருமத்துக்கு காசு வேற செலவு பண்ணுவாங்களாக்கும். மெனிக்யுர் பண்ணினதே இல்லை. நெயில் பாலிஷ் அடிப்பதும் இல்லை. ஒன்லி மருதாணி. காலுக்கு வேணும்னா பெடிக்யுர் பண்ணுவேன். அப்பவும் நோ நெயில் பாலிஷ். ட்ரை ஸ்கின் என்பதால் 2 மாசத்துக்கு ஒரு முறை பெடிக்யுர் உண்டு.

முத்துலட்சுமி : நெயில் பாலீஷ் பூசுவதில்லை. எனக்கு வீட்டு வேலைகளில் உதவ ஆள் உண்டு.. அதனால் விரல் நகங்கள் மோசமடைவது குறைவு. நகம் வளர்த்திருக்கவங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதோடு சரி. நான் வளர்க்கிறதில்லை. குழந்தைகளோடு இருக்கும்போது தவறி அது கண்ணை குத்திடுமோன்னு நினைச்சாலே பயம்மா இருக்கு. கால் நகங்களுக்கு தான் அப்பப கவனம் எடுப்பது உண்டு.

தென்றல் : பொதுவா நெயில்பாலிஷ் பயன்படுத்துவதில்லைங்க.. மேனிக்யூரும் செய்து கொண்டதில்லை.. நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு

விதூஷ் :  க்ளோஸ் கட் பண்ணிதான் வச்சிருக்கேன். எனக்கு நகம் வளக்கிறது பிடிக்காது. நெயில் பாலிஷ் ரொம்ப ரொம்ப அரிதாக பயன்படுத்துவேன், கால் நகங்களுக்கு மட்டும்.  PEARL, dried lavender கலர் மட்டுமே பிடிக்கும். மூணு மாசத்துக்கு ஒரு தரம், பெடிக்யூர் மட்டும். நகம் பராமரிக்க ஒரு வாரத்துக்கு பதினைந்து நிமிஷங்கள், ஒரு சின்ன பிரஷால் தினமும் குளிக்கும் போது விரல் நகங்களை கிளீன் பண்ணிக்குவேன். வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம். குழந்தை (0-6 வயது) இருக்கிற அம்மா/அப்பாக்கள் நகம் வளக்கிரதை அறவே தவிர்க்கணும். ரொம்ப ஆழமா யோசிச்சு பார்த்தா கால்சியம் குறைபாடு இல்லாதவங்க, அதை ஒரு ஆயுதமாவும் பயன்படுத்தலாம்.

தாரணி பிரியா : நகம் வளர்த்தும் பழக்கமே இல்லை, வாரத்திற்கு ஒரு முறை (சண்டே) காலைல முதல் வேலையே நகம் வெட்டறதுதான் அதே போல நெயில் பாலீஷும் இது வரை வாங்கினதே இல்லை   எப்பவாது மருதாணி வைக்கிறது மட்டும்தான்.

சுசி குணா (இவங்க தான் இந்த பதிவின் மாடல் விரல் அழகி - நன்றி சுசி !) ஒரு குறிப்பிட்ட அளவு விட்டிட்டு அப்பப்ப வெட்டிடுவேன். இல்லேன்னா உடையும். எதாவது செய்யும்போது மடங்கி வலிக்கும். எனக்கு நானே கீறி வச்சிடுவேன். நெயில் பாலிஷ் கை நகத்தில எப்போதும் போட்டிருப்பேன்.
வாரத்துக்கு ஒரு தடவை கலர் மாற்றுவேன். மெனிக்கியூர் என் வாழ்க்கேல இது வரை ஒரு தடவை கூட செய்ததில்லை. நகம் பராமரிக்க, பழைய பாலிஷ் ரிமூவ் பண்ணி புதுசு போட ஒரு ரெண்டு நிமிஷம்?? மத்தபடி வளந்திட்டா அளவா கட் பண்ண ஒரு ரெண்டு நிமிஷம். கட் பண்ணும்போது கவனமா இருப்பேன். குளிச்சதும் இல்லேன்னா பத்து பாத்திரம் தேய்ச்சதும் வெட்டணும். அப்பதான் ஈஸியா இருக்கும். அதோட சிதிலமாகாம வெட்டும்.  நகம் வளர்க்க எனக்கு பிடிச்சிருக்கு. அழகாவும் இருக்கு.

Dr. Delphine victoria  

1. நகம் பராமரிப்பு : it  is absolutely essential that we have to take care  of our finger nails. Most infections are spread through finger nails and that is why we insist on good hand washing. i don't believe in growing the nails though it might add beauty to the fingers especially ladies who have long and thin fingers. To me, keeping the nails trimmed and clean is my priority rather than growing it for beauty.  I cut the nails as close as possible at least once in three days 

2. நெயில் பாலிஷ் பயன்படுத்துதல் : I don't use nail polish as my profession  & my working place does not permit it. 


3. மெனிக்கியூர் : Manicure is good because the dead skins are removed and the  unwanted cuticles are removed. Nails can be filed.
 

4. நகம் பராமரிப்பிற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் : may be 10 minutes/day This includes applying lotion for both legs and hands before going to bed
 

5. நகம் வளர்ப்பதின் பயன் : My finger nails should be clean. Doing a pedicure  is good . our feet work hard and they need to be pampered.  Your toes & legs should be clean and must give a neat appeal to others when they see you. It is advised to keep the nails unpainted & exposed to sunlight at least for seven days / month. I do a pedicure once a month. The most important thing here is that the pedicure technician should use clean instruments.

டாக்டர் மெனிக்கியூர் செய்துக்கொள்வது நல்லதுன்னு சொல்லியிருக்காங்க. நகத்தை சுத்தமாக வைத்திருப்பது தான் மிகவும் முக்கியம்னும் சொல்லியிருப்பதை கவனிக்க.

நிற்க, நகம் பற்றிய பொதுவான விசயத்திற்கு வருவோம். அழகு நிலையங்களில் மெனிக்யூர் http://www.hintsandthings.co.uk/bathroom/home-manicure.htm என்று தனியாக கை நகங்கலையும், கையையும் அழகுப்படுத்துகிறார்கள். (செய்துக்கொண்டதில்லை,கவனித்தவை)  கை விரல்களை, நகங்களை எதேதோ க்ரீம் கலந்த சுடத்தண்ணீரில் ஊறவைத்து, சுத்தம் செய்து, அழுக்கு எடுத்து, நகத்தின் பக்கவாட்டில் இருக்கும் குட்டி குட்டி சதைகளை பிய்த்து, நகங்களின் மேல் நெயில் கட்டரில் உள்ள கத்திப்போல ஒன்றால் சுரண்டி, நகங்களின் முன் புறம், நாம் விரும்பும் வகையில் ஷேப் செய்து, பிறகு கிரீம் போட்டு, விரல்களுக்கு தனியாக மசாஜ் செய்கிறார்கள்.

அதற்கு பிறகு, நாம் தேர்வு செய்கின்ற நெயில் பாலிஷ்ஷை  போட்டுவிட்டு, ட்ரேயில் உள்ள குளிர் தண்ணீரில் விரல்களை நனைத்து விடுகிறார்கள்.. அப்போது தான் பாலிஷ் கலையாமல் நன்றாக ஒட்டுமாம். நகம் வேலை முடிந்தவுடன், கையிற்கு க்ரீம் தடவி மசாஜ் செய்து விடுகிறார்கள். இது தேவைக்கு தகுந்த மாதிரி வாக்ஸ்ஸிங், கிளீனிங் என தொடரும். அந்த கதை நமக்கு வேணாம், நகத்தோடு நிறுத்திக்கொள்வோம். இதற்கு மொத்தமாக அந்த பெண் எடுத்துக்கொண்ட நேரம் 25- 30 நிமிடம். எனக்கு பெருமூச்சுத்தான் வந்தது.  30 நிமிஷம் நம்ம கைய அந்த பெண்ணிடம் விட்டுட்டு, வேடிக்கை பார்க்கனும். 30 நிமிஷம் என்னால ஒரு இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் உட்காரமுடிந்திருந்தால், கின்னஸில் இடம் பிடித்திருப்பேன்.

பெண்களுக்கு இருக்கும் பொறுமையும், தன்னை அழகு செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், இதையெல்லாம் செய்யவைக்கிறது. முக்கியமாக நகங்கள், பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு காரணியும் கூட. தற்காத்துக்கொள்ள நிச்சயம் உதவும். தேவைப்பட்டால், கத்தியைப்போன்றே நகங்களை பயன்படுத்த முடியும். அதற்காகவாவது பெண்களுக்கு நகம் தேவையென எனக்கு சின்ன வயசில் என் அத்தை மகள் போதித்தார்.

நகங்கள் குறித்து சில தகவல்களை பார்ப்போம்.

1. நகங்களை பாதுக்காப்பது மற்றும் அழகுப்படுத்திக்கொள்வதை பற்றிய தகவல்கள் இதில்  இருக்கின்றன.  http://www.ultimate-cosmetics.com/guides/nail-care/

2. இந்த லிங்கை க்ளிக்கி பாருங்கள், எத்தனை விதமான டிசைன்ஸ் :).. அழகோ அழகு  http://www.nailsmag.com/style/nail-art/demo/list

3. ஓ மை கடவுளே' ன்னு சொல்ல வைக்கும் டிசன்ஸ் கீழுளுள்ள லிங்கில் உள்ளது. குறிப்பாக ஸ்கல், நியூஸ் பேப்பர்  வரிக்குதிரை டிசைன்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. http://slodive.com/inspiration/nail-designs-pictures/

அணில் குட்டி : சுசி ஆன்ட்டி மாதிரி, என் விரல்களையும் கலர்ஃபுல்லா ஆக்கிக்க, ஆன்ட்டிக்கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கப்போறேன். (கவி காதில் பொக..) ஆன்ட்டி, நீங்க ரெடியா ?!!

பீட்டர் தாத்ஸ் : I suppose if you've never bitten your nails, there isn't any way to explain the habit. It's not enjoyable, really, but there is a certain satisfaction - pride in a job well done.
.

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்..

கானாபிரபா நடத்தும் "நானும் பாடுவேன்" ரேடியோ நிகழ்ச்சிக்காக பாடியது. 





இந்த பாடல் தவிர, மற்ற நண்பர்களின் பாடல்களையும் கேட்க :-

றேடியோஸ்பதி வழங்கும் =>" நானும் பாடுவேன்" இதுவரை வந்த படைப்புகள்

மார்ச் 31 வரை நேரம் உள்ளது, உங்கள் பாடல்களையும் பதியலாம்.

நன்றி கானாபிரபா. :)

அணில் குட்டி : என்னடா ரொம்ப நாளா அக்கா குரல் வளத்தை காட்ட முயற்சி செய்யலையேன்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்... 

பீட்டர் தாத்ஸ் : Singing has always seemed to me the most perfect means of expression. It is so spontaneous.

வாத்தியார் மேல் தூங்கி விழுந்த மாணவி

டுடோரியல் நடத்தி வந்த வாத்தியார்,  பல மாணவர்களின் வாழ்க்கையில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்தவர், அவரின் மாணவர்கள், அவரைப்பற்றி கொடுத்த நற்சான்றிதழ்களை நம்பி, பாடம் சொல்லித்தர முடியுமான்னு கேட்டு, நானும் ஒரு நாள் அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள உட்கார்ந்தேன். அவர், இது சொன்னப்பேச்சு கேக்காத ஆள் ஆச்சே, சரிவரும்மானு ரொம்ப யோசிச்சித்தான் பாடம் சொல்லித்தர ஒப்புக்கொண்டார்.

புத்தகம் கையுமாக அவர் அமர, அவர் பக்கத்தில் நான். ரொம்ப ஆர்வமாக பாடம் நடத்த ஆரம்பித்தார், மாணவி கவனிக்கிறாளா இல்லையான்னு பார்க்கும் சமர்த்து அவரிடம் இல்லை, பாடம் நடத்துவதிலேயே கவனமாக இருந்தார். கையை இரண்டையும் ஆட்டி ஆட்டி பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார், ஆனா பாருங்க, யாருக்குன்னு தான் தெரியல. எனக்கு  சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க  முடியவில்லை. போதும்னு சொன்னால், வாத்தியார் கோவப்படுவார்னு, ரொம்ப கஷ்டப்பட்டு வாயை மூடிட்டு பேசாமல் இருந்தேன். ஆனா நேரம் செல்ல செல்ல தூக்கம் கண்களை செருக........ தூங்கி..... நானும், அவரும் எதிர்ப்பார்க்காத ஒரு தருணத்தில், அவர் மடியில் தொப்பென்று விழுந்தேன்.

......................................... அவ்ளோ தான்..  நான் தூங்கி விழுந்த அவமானம் தாங்கமுடியாத வாத்தியார், புத்தகத்தையும் என்னையும் "நியெல்லாம் படிச்சீஈஈ.." ன்னு. தூக்கிப்போட்டவர் தான். இனி எனக்கு மட்டும் பாடம் சொல்லித்தருவதில்லை என முடிவெடுத்து, அதை கன்னாப்பின்னான்னு கடைப்பிடிக்கவும் செய்தார். நானும் அதற்கு பிறகு வாத்தியாரிடம் சத்தியமாக இனி தூங்க மாட்டேன், எப்படியும் முழுச்சிக்கிட்டு இருக்க முயற்சி பண்றேன், தயவு செய்து பாடம் சொல்லித்தாங்கன்னு கேட்டு பார்த்தேன், ம்ஹூம்..  ஒரு முறை பட்ட அவமானம் போதும். இனி அந்த தப்பை மட்டும் செய்யவே மாட்டேன்னு சொல்லிட்டார்.

பல வருடங்கள் கழித்து, எம்.பி.ஏ பரிட்சையின் போது, திரும்பவும் வாத்தியாரின் உதவி தேவைப்பட்டது. வாத்தியார் அக்கவுன்ட்ஸ்'ஸில் கில்லாடி. எனக்கு ஒரே ஒரு பேப்பர் அக்கவண்ட்ஸ், அப்படின்னா என்னான்னே தெரியாத, பூச்சியமாக இருந்தேன். இந்த ஒரு பரிட்சைக்கு மட்டும் வாத்தியார் சொல்லிக்கொடுத்தால் போதும் பாஸாகிவிடுவேன், வாத்தியாரிடம் சென்று கெஞ்ச ஆரம்பித்தேன்.  அக்கவுண்ட்ஸ் கணக்கு மாதிரி, தூங்கிவிழ சாத்தியமே இல்லை, நிச்சயம் தூங்கமாட்டேன், தயவு செய்து சொல்லித்தாங்க, என் எதிர்காலமே உங்க கையில் தான் இருக்கு, உங்களை விட்டால் எனக்கு யார் உதவி செய்வா? அப்படி இப்படின்னு ஓவர் பில்டப் கொடுத்து, நீலிக்கண்ணீர் வடித்தேன். அவர் என்னை  1% கூட நம்ப சான்ஸ் இல்லையென்றாலும், போனாப்போகுதுன்னு திரும்பவும் பாடம் சொல்லிக்கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனா நிறைய கண்டிஷன்.

1. அவர் பக்கத்தில் உட்காரக்கூடாது. (பார்ரா? என்னா புத்திசாலி,  தூங்கினாலும் அவர் மேல விழாமல் இருப்பேனாம்)
2. எதிர்த்து நடுநடுவில் பேசப்பிடாது, (யார் கிட்ட? )
3. முக்கியமாக மிரட்டக்கூடாது (அந்த பயம்..வேணுமில்ல)

நானும் என் பங்குக்கு கன்டிஷன் போட்டேன்.

1. தூங்கி விழந்து மண்டை உடையும் படி பாடம் நடத்தக்கூடாது
2. லக்சர் கொடுத்து சாக அடிக்கக்கூடாது
3. எருமை மாதிரி பொறுமையாக சொல்லித்தரக்கூடாது

ம்ம்.... அதே அதே தான்....என் கன்டிஷனையெல்லாம் கேட்டதும், சத்தியமாக உனக்கு பாடம் சொல்லித்தர முடியாது, நீ ஒரு மட்டு மரியாதை இல்லாதவள், வாத்தியார் ஆச்சேன்னு கூட மதிக்க மாட்ட, ஓவர் திமிர் பிடிச்சவ, உனக்கெல்லாம் பாடம் சொல்லியே தரமுடியாது, நீயே படிச்சிக்கோன்னு சொல்லிட்டாரு.

 அடடா, இத்தனை வருஷம் கழிச்சி, சம்மதிக்க வைத்துவிட்டு, கடைசி நேரம், தவளை தன் வாயால் கெட்டுப்போச்சேன்னு, திரும்பவும் நீலிக்கண்ணீர் வடிச்சி, கைல கால்ல விழுந்து, மன்னிச்சிடுங்க.. உங்களைவிட்டால் அக்கவுண்ட்ஸ் சொல்லித்தர வேற யாருமே இல்ல, நிச்சயமாக மரியாதையா நடந்துக்குவேன், எதிர்த்து பேசவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சி ஒரு வழியாக சம்மதிக்க வைத்தேன்.

தேர்வுநாளைக்கு முன் நாள் தான் நமக்கு படிக்கும் வழக்கம். முழுப்புத்தகத்தையும் ஒரு இரவுக்குள்ளோ, பகலுக்குள்ளோ படிக்கும் நேரம் தான் இருக்கும்.  அக்கவுண்ட்ஸ்க்கு முதல் நாள், வாத்தியார் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். ஒரே நாளில் அ முதல் ஃ வரை அக்கவுண்ட்ஸ் படிக்க முடியாது என்பதால், ரொம்ப சுருக்கமாக முன்னுரை கொடுத்து, முக்கியமாக, இவை மட்டுமே பரிட்சைக்கு வரும் என்று அவர் தேர்வு செய்த கணக்குகளை மட்டும் சொல்லிக்கொடுத்தார்.

"முன்னுரை முடிக்குமுன்னே, கணக்குக்கு போலாம் " என்றேன்.  - "அதானே உன்னால பொறுமையா கவனிக்க முடியாதேன்னு முறைத்துவிட்டு  கணக்குக்கு" போனார்.

"கணக்கு சொல்லிக்கொடுக்கும் போது, போதும் புரிஞ்சிடுத்து நானே போட்டுக்கறேன். அடுத்த கணக்கு சொல்லிக்கொடுத்தால் போதும்னு"  சொன்னேன். - புத்தகத்தை மூடிவிட்டு கடுப்பாக சென்றுவிட்டார்.

"அடுத்த கணக்கையும் அவரை எதிர்பார்க்காமல் நானே போட ஆரம்பித்தேன், ஆர்வத்தில் வந்து பார்த்தார். - குட், போடு போடு... தப்பா வந்தால் கரெக்ட் பண்றேன் 'சொல்லிட்டு போயிட்டார்.

தவறுகள் சிலதை சரி செய்து விளக்கினார். திரும்பவும் கொஞ்சம் தியரி. சொல்லிக்கொடுக்கும் போதே நிறுத்தினேன். போதும் நானே படிச்சிக்கிறேன்.


"இந்த எழவுக்குத்தான் உனக்கு நான் பாடமே சொல்லித்தர மாட்டேன்னு சொன்னேன். ஏன் சொல்லித் தரச்சொல்லிட்டு இப்படி இம்சை கொடுக்கற.. எதையாவது முழுசா முடிக்க விடறியா, பாதியில் போதும் போதும்ங்கற.. உனக்கெல்லாம் எவன் பாடம் நடத்தறது?! "

அதான் புரிஞ்சி போச்சின்னு சொல்றேனே...  உங்களாட்டும் நான் ஒன்னும் மக்கு மந்தாரம் இல்லை.. ஒரு தரம் சொன்னா போதும் புரியும்.. அதை எல்லாத்துக்கும் அப்ளை செய்துக்குவேன். சும்மா நய் நய்ன்னு லக்சர் கொடுத்து சாவ அடிக்காதீங்க... இப்படி லக்சர் கொடுத்துதான், அன்னைக்கு தூங்கி விழுந்தேன்.. .

மனுசன் பேசுவானாடி உன்கூட...

பேசாதீங்க.. யார் உங்களை பேச சொன்னா..

படிச்சது போதுமா உனக்கு.. பாசாயிடுவியா...

பாசாகிடுவேன்.. ... மேக்ஸ்ஸோட அக்கவுண்ட்ஸ் ரொம்ப ஈசி,,... ஒன்னுமே இல்ல அதுல.. ஒன்னுமில்லாத ஒரு சப்ஜெக்ட்ஐ தெரிஞ்சி வச்சிக்கிட்டு என்னா பில்டப்பூஊஊ

..ச்சீஈஈ, உன்னைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டே உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் பாரு... என்னை சொல்லனும்.. எக்கேடாவது கெட்டு ஒழி.. என்னை விடு..

*****************
தேர்வு முடிந்து, 67% வாங்கி பாஸாகிட்டேன். அப்புறம் என்ன?!!  வாத்தியாருக்கு ஒரே சந்தோஷம், என் முதுகைத்தட்டி, என் பொண்டாட்டி மாதிரி வருமான்னு ஒரே பாராட்டு மழைதான்.

டிஸ்கி : அவர் சொல்லிக்கொடுத்த கணக்குகள் மட்டுமே தேர்வில் வந்தன (Hidden Truth) என்பது குறிப்பிடத்தக்கது.! Obviously, he is an Expert in Accounts ! 

அணில் குட்டி : ஹி ஹி... இதுக்கு அப்புறம்,  இப்ப வரைக்கும் எது சொல்லித்தரக் கேட்டாலும்... எனக்கு தெரியாதுன்னு சொல்லுவாரே தவிர, அம்மணிய அவரு மதிக்கறதே இல்லை.. ....அதை சொன்னாங்களா இவிங்க?

பீட்டர் தாத்ஸ் : “If a child can't learn the way we teach, maybe we should teach the way they learn.” - 

ஏதோ செய்கிறேன்...சொல்கிறேன்..


Left to Right -

=> முட்டையில் டிசைன்ஸ் வரைந்தது.. இது இணையத்தில் ஏதையோ தேடும் போது கிடைத்ததைப்பார்த்து செய்தது....

=> ஆபிஸ் வீடுன்னு பாரபட்சமில்லாமல், கரண்டு இல்லனாலும், வேல இல்லானாலும் செய்யற வேல வரையறது.. கற்பனையாகவும் வரைவதுண்டு,  இம்ரஸ் ஆகியும் எதையாவது பார்த்து வரைவேன். .ஆனா..ஒரு சில படங்களை தவிர.. அது அச்சு அசலா அப்படியே எப்போதுமே வந்ததில்லை.. . இதில் இருக்கும் பெண் "ஷர்மிளா டாகூர்" என்று சொன்னால் அடிக்க வருவீங்களா?!

=> பழைய டைரி பார்த்துக்கொண்டு இருக்கும் போது இந்த பேப்பர்  கிடைச்சது. அகமதாபாத் நகரில் இருக்கும் போது, அந்த நகரைப்பற்றி எழுதி வைத்தது..  அடிக்கடி எழுதியததால், கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கு.. .. இப்ப இப்படி எழுத வரலைங்கறது... எனக்கே வருத்தமா இருக்கு..

=>  பென்சில் ஸ்கெட்ச் மட்டுமே செய்ய வரும்.. கலரிங் செய்தால்.. ரொம்ப சொதப்பலாக போய் முடியும். ..வாட்டர் கலரிங்கில் முயற்சி செய்த பூத்தொட்டி படம்....

=> மண் பாண்டாங்களில் டிசைன் வரைய ரொம்ப பிடிக்கும்.. .நவீன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி சிலவற்றை உடைத்தப்பிறகு, செய்யறதை குறைச்சிட்டேன்..  செய்து வைப்பதைவிட, அதை பாதுகாப்பது தான் பெரிய விசயமாக இருக்கு.

=> பட்டு புடவையில் ஸ்டோன் ஒர்க் செய்தேன். ஆரணியில் இருக்கும் தோழி, சாதாரணா பட்டுப்புடவை விலையில், ஸ்டோன் ஒர்க் செய்து 3000 - 5000 ரூ வரை அதிகமாக வைத்து விற்கிறார்கள் என்று சொல்லவும், அப்படி என்னதான் இருக்கு இதில் என செய்து பார்த்தேன். ஒன்னும் கஷ்டமில்ல, ரொம்ப ஈசியாத்தான் இருந்தது. பார்க்க அழகாகவும், ஆடம்பரத் தோற்றமும் தருகிறது.
****************

=> எழுதும் போது பேப்பர் பறக்காமல் இருக்க, பேப்பரின் மேல் எப்பவும் இடது கையை இப்படி வைப்பது தான் என் பழக்கம். நவீனும் சின்ன வயதிலிருந்தே என்னைப்போலவே  செய்கிறான். சொல்லித்தராமலேயே சில வித்தியாசமான பழக்கங்களை நம் குழந்தைகளும் செய்வது, பார்க்க சந்தோஷம்..

A perfect Family - இவர்களின் உடை எப்பவுமே மாறாது போல. மூவருமே அவர்களை பார்த்ததும், அவசர அவசரமாக, கையில்  கேமராவை எடுப்பதை கவனித்து போஸ் கொடுத்தார்கள்... :) 

 => லைவ் நிகழ்ச்சிகள் போகும் போது, பிரபலங்களை பார்ப்பதில் ஒரு சந்தோஷம், அதே சமயம், அவர்கள் நடுநடுவே சொல்லும் தகவல்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன. பாலுஜி, நடித்து, இசைஅமைத்து, சிகரம் படத்தில் பாடிய பாடல் சிலவற்றை சொல்லும் போது, எதுவுமே என் சுயமில்லை, அங்க இங்கன்னு எடுத்து த்தான் இசை அமைத்தேன்னு சொன்னாங்க. :). இதற்குமே ஒரு தைரியம் வேணும். இப்படி பல நிகழ்வுகளை சொன்னார். வாழ்க்கையில் முதன் முதலில் சென்ற லைவ் நிகழ்ச்சியும் இதுவே. (கடைசியும் கூடன்னு நினைக்கிறேன்.)


அணில் குட்டி : ஏதேதோ எழுதியிருக்காங்க, எல்லாம் சுயப்புராணமா இருக்கு... .. மீ ..தி ஃப்லீங்.. செம போர் யா.... ... சோ.. க்யுட் திஸ் பதிவு யா... !  பீட்டரூ... நீ தத்துவத்த எடுத்து வுடு...

பீட்டர் தாத்ஸ் :  “Reality is a prison, where one vegetates and always will. All the rest /thought, action /is just a pastime, mental or physical. What counts then, is to come to grips with reality. The rest can go.”
.

Killing Fields - ஐ.நா தீர்மானமும் அமெரிக்காவின் சொம்பும்!

பெண்ணின் நிர்வாணம் அழகு " என்ற பதிவை எழுதுவதற்கு காரணமான, அந்தக் காணொளியைப் பார்க்க நேர்ந்தது தான் முதல் தரம். அதிலிருந்து வெளிவர 3-4 நாட்கள் ஆகின. பின்னர் நண்பரிடம் பேசும் போது, பெண்கள்,குழந்தைகளை மட்டுமே பார்க்கிறீர்கள், வயதானவர்கள், நோயாளிகள் என எல்லோருமே போரிலிருந்து காக்கப்பட வேண்டியவர்கள் என்றார். பெண்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன்.  போர்க்காலத்தில் ரத்தமும், பிணங்களும் சகஜமே என்றாலும், கதை சொல்லி கேட்டும், சரித்திரத்தில் படித்தும் தான் தெரிந்துகொண்டு இருக்கிறேன். காணொளிகளைப் பார்த்து, நானே அங்கிருப்பது போல உணர்வது இணையத்தின் உதவியால்...

அடுத்து, உ.த கூகுள் பஸ்ஸில் ஒரு காணொளியைப் பகிர்ந்தார். கடவுளே, அதைவிட கொடுமையை இனி என் வாழ்நாளில் பார்க்க வாய்ப்பிருக்காது, இது தான் முற்று,  எல்லை என முடிவுக்கு வருமளவுக்கு இருந்தது. பெண் போராளிகள் துன்பறுத்தப்பட்டு, கொல்லப்பட்டு, பெண் பிணங்களை, "நல்ல வடிவு" என இழுத்துக்கொண்டு சென்ற காட்சியைப் பார்த்தே, மனம் பதறிப்போனது. உடனே  நிதானம் இழந்து உடல் நடுக்கத்தோடு தப்பும் தவறுமாக எழுதினேன். ஆனால் அதற்கு பின் பார்த்ததை எழுத வார்த்தைகள் இல்லை, இப்போது நினைத்துக்கொண்டாலும், சகலமும் ஒடுங்கிப்போகிறது.. அந்தக் காணொளியில் நான் கண்டது.. 

கர்ப்பமான ஒரு பெண் கொல்லப்பட்டு, அவள் வயிற்றில், கிழிந்த ஒரு துவாரத்தின் வழியாக, உள்ளே இறந்துபோன சிசுவின் ஒரு கை வெளியே வந்துத் தொங்கிக் கொண்டு இருந்தது.  கடவுளே, இந்தக் காட்சியைப் பார்த்தபின், இதற்கு மேலும், மோசமான ஒரு காட்சியே இனி பார்க்கவேண்டியதில்லை என நினைக்க வைத்தது. இதற்குப்பின், பெண்ணின் கற்பும், துன்புறுத்தல்களும், அவளின் உடல் பற்றிய பிரஞ்ஞையும் இல்லாமலே போனது." கில்லிங் ஃபீல்ட்ஸ்' வீடியோவில் குழந்தை கொல்லப்பட்ட காட்சி, புலிகளை மட்டுமல்ல, தமிழினத்தையே வேரோடு அறுத்து எரிய வேண்டுமென்ற வெறி அந்த அரக்கர்களிடம் இருப்பதை தெளிவாக்கியுள்ளது. .  

ஆமாம், அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரி என ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்தில் நாம்(இந்தியா) இருக்கிறோம். ஈராக்கோடு போர் தொடுத்து, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் அழித்து, அமெரிக்காக்காரன் செய்யாத குற்றங்களா? அங்கு, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்போடு தான் இருந்தார்களா? மனித சடலங்களே இல்லாத, எதையுமே அழிக்காத ஒரு போராகத்தான் அது இருந்ததா? சதாம் ஹூசைன் என்ற மாவீரன் ஏன் தூக்கிலிடப்பட்டார் ? ஈராக் போரில், அமெரிக்கா போர் குற்றமே செய்யவில்லையா? பின்லேடன் + குழு விசாரனையின்றி ஏன் கொல்லப்பட்டார்கள்? ஆக, அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரியே ! உலகத்தை அவன் கையில் கொண்டுவர வேண்டும் என்ற திமிரும், அவனை வீழ்த்த யாருமில்லை என்ற மதப்பும் இருப்பதில், எப்போதும் குரலையும், கையையும் ஓங்கிக்காட்டிக்கொண்டு  இருக்கிறான். இவனோ வேற்று நாட்டு போர்க்குற்றங்களைப் படம் பிடித்து க்காட்டி, அதை ஐ.நா வாக்கெடுப்பில் வெற்றிப்பெற செய்து இருப்பதை, நமக்கு சாதகமான ஒரு நிலைபாடாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ராஜதந்திரமாக எதற்கோ உள்நோக்கத்தோடு அடிப்போடுகிறான் என்றே நினைக்க முடிகிறது. 

நிற்க, ஐ.நா இலங்கை போர்குற்றத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள் அனைத்தும்,அநேகமாக அமெரிக்காவுக்கு எதிரானவை. இந்தியாவோ, தலையெழுத்தே என பத்தோடு பதினொன்னாக வாக்களித்திருக்கிறது என்பதற்கு மேலாக, எப்போதும் அமெரிக்காவுக்கு சொம்பு தூக்குவதால், இதை செய்ய வேண்டிய காட்டயத்தில் இருக்கிறது. அமெரிக்காகாரன் எதிர்காலத்தில் தரப்போகும் பிரச்சனைகள் என்னவென்றே தெரியாத ஒரு சூழலில், நாமோ உணர்ச்சிவசப்பட்டு நம் நாட்டுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறோம், அமெரிக்காக்காரனைப் பாராட்டுகிறோம். தமிழின மக்களுக்காகவோ, அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவோ, அமெரிக்காகாரன் இதை நிச்சயமாக செய்யவில்லை.  இந்த வாக்கெடுப்பைக் கணக்கில் கொண்டு நாம், ஏதேனும் நல்லது நடக்கும் என நம்பினால், தமிழனின் நெற்றியில் பெரிய நாமம்...இல்லையில்லை, மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா கூடவே சொம்பு தூக்கும் இந்தியா.   

Mr.Dynobuoy கூகுள் +ல இருந்து பகிர்கிறேன். நன்றி Mr.Dyno...

ஐ.நா தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்:

1. ஐநாவின் பங்களிப்பு இருப்பதால் கொஞ்சமேனும் பக்க சார்பு இல்லாத உண்மையான விசாரிப்புகள் வெளிவர'லாம்.

2. சேனல் 4ல் வெளியான விடியோவின் சாரம் பொதுமக்கள் இலங்கை அரச படைகளால் தாக்கப்பட்டனர். அதே சமயம் புலிகள் மக்களை கேடயமாக உபயோகித்தனர். இதை பற்றிய உண்மை தகவல்கள் வெளிவரலாம். போர் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் பல விடியோக்கள் போர்வீரர்கள் கையிலும் பொது மக்கள் கையிலும் சிக்கி உள்ளது. தற்போதைய லங்கா ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் / ஜர்னலிஸ்ட்டுகளிடம் இருக்கும் அந்த விடியோக்கள் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கலாம். மீதம் இருக்கும் புலிகளின் கிளைகள் வேர் அறுக்கப்படலாம். புலிகளின் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும் அதை அரசாங்கம் களவாண்டதா என்பதும் தெரியவரும்.

3. புலிகளுக்கு யார் ஆயுதங்களைக் கொடுத்தார்கள்/விற்றார்கள், லங்கா அரசுக்கு யார் ஆயுதங்கள் வழங்கினார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும். (இந்தியாவின் அண்டர் டாயர் அங்கு கிழிபடலாம்). சீனா புலிகளுக்கும், லங்கா அரசுக்கும் ஆயுதங்கள் விநியோகித்ததும் தெரிய வரலாம். லங்கா அரசுக்கு மத்தியகிழக்கு நாடுகளுடன் இருக்கும் தொடர்பு வெளிவரலாம்!

4. இதன் மூலம் லங்கா அரசப்படைகள் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தவறியதாக நிருபிக்கப்படலாம். அவ்வாறு நேரும் பட்சத்தில் தமிழர்களுக்குத் தங்களை சுயாட்சியாக ஆளும் அதிகாரம் வழங்கப்படலாம். சுயாட்சியான மாகாணம்/ஆட்சி அமையும் வரை ஐநா பாதுகாப்புப்படை அங்கேயே இருக்கலாம். தமிழர்களுக்கு பாதுகாப்பு, அதே வேளை சுயாட்சியாக ஒரு மாகாணமாவது கிடைக்க இதைத்தவிர வேறு அறவழிகள் இன்று இல்லை!


5. தனி மாகாணம் கிடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் இன ஒழிப்புகளிலும் அக்கிரமிப்பில் இருந்தாகிலும் எஞ்சி உள்ளோர் தப்பி புணர்வாழ்வு அமைக்க இதை தவிர வேறு வழிகள் இல்லை!

இதில் டைனோ, பயன் என்று சொல்லப்பட்டவை எல்லாமே "..லாம்" என்றே முடித்திருக்கிறார். இந்த லாம்.'.. நடக்க'லாம், நடக்காமலும் போகலாம்... எதுவுமே நடக்கும் என உறுதியாக சொல்லமுடியாது. இப்படி உறதியில்லாத ஒரு விசயத்தை நம்பி, அமெரிக்காவிற்கு ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சனம், இருப்பினும், ஒரு வேளை நல்லது நடந்தால்.........  காலம் மட்டுமே பதில் சொல்லும்..எதுவும் அதுவரை நிரந்தரமல்ல..

அணில் குட்டி : கவி, ஃப்ரம் ஹார்ட் சொல்றேன்... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை, இட்லி குஷ்பூவுக்கு பதிலா, ஐ.நாவில் பேச உங்களை அனுப்பி இருக்கலாம், அமெரிக்காக்காரன் துண்ட காணோம் துணியக்காணோம்னு ஓடியே போயி இருப்பான், இந்தியானாவே அவனுக்கு ஒரு இது...... ........ எது????? அட அதான் ஒரு இது....... ....வந்து இருக்கும்.... ம்ஹூஉம்ம்.....ஜஸ்ட்டு மிஸ்ஸூ.... 
என்ன மக்கா சொல்றீங்க? ! (ஏய் யாரும் சிரிக்க க்கூடாது இது சீரியஸ் குவஸ்டீனு:)))) ) (கிக்கி.. கிக்கி. கிக்கி...... இது கவி'க்கு தெரியாம பின்னாடி திரும்பி நின்னு சிரிச்சது.... :))))))))))) )

பீட்டர் தாத்ஸ் : Man has no right to kill his brother. It is no excuse that he does so in uniform: he only adds the infamy of servitude to the crime of murder.

உனக்கு 20 எனக்கு 18

கவி : நவீன் கால் நகத்தை எல்லாம் வெட்டு, எவ்ளோ அசிங்கமா இருக்குப்பாரு.. இந்தா நெயில் கட்டர்

நவீன் : ம்ம்மா.. நீயே வெட்டி விடேன் , 5 ரூ தரேன்...

கவி : யப்பாஆஆ.. பாருங்க உங்க பையன், நகத்தை வெட்ட சொன்னா, நீ வெட்டு 5 ரூ தரேங்கறான்.. .

பழம்நீ : சரி அதுக்கு ஏண்டி கத்தர, வேணும்னா இன்னும் 2 ரூ மேல கேட்டு வாங்கிக்கோ..

கவி : ஞே !

 ***************

கவி : நவீன் டோஃபல் படிச்சிட்டியா.. எந்த அளவில் இருக்கு .......

நவீன் :  டோஃபல் னு ஒரு வார்த்தைய தெரிஞ்சி வச்சிக்கிட்டு ஓவரா டார்ச்சர் பண்ணாத.. .. அப்ரிவியேஷன் தெரியுமா உனக்கு?

கவி : ஓ தெரியுமே...  டெஸ்ட் இன் இங்லீஷ் லேங்குவேஜ்..

நவீன் : கிர்ர்... அப்பா பாருங்கப்பா உங்க பொண்டாட்டியின் பொது அறிவை....

கவி : ம்க்கும்...ரைட்டா சொல்லிட்டா மட்டும் நீ என்ன எனக்கு பாராட்டு விழாவா நடத்தப்போற  போடா டேய்.. !

*********

நவீன்: குறுக்குசித்ரா (குருஷேத்ரா) நடக்குது அண்ணா யுனிவர்சிட்டி போறேன்

கவி: குறுக்குசித்ரா ஏன் அண்ணா யுனிவர்சிட்டிக்கு போய் நடக்கறா?

நவீன்: ஓஓஓ.... இது மொக்கையா? ஹி ஹி ஹி.. சிரிச்சிட்டேன் போதுமா? ஆமா உனக்கு யார் இப்படி எல்லாம் பேச கத்துக்கொடுக்கறா? அந்த வெட்டி ப்ளாகர்ஸா? எல்லாரையும் துப்பினேனு மட்டும் சொல்லு... தாங்கமுடியல உன் மொக்கை..

கவி: ஸ்ஸ்யப்பா கோ-ப்ளாகர்ஸ் இருக்கவரை நான் சேஃப்

**************

கவி: (ஏதோ ஆங்கிலப்படம் பார்த்துக்கிட்டு இருக்கான்:) இந்த ஹீரோ அக்ஷைகுமார் மாதிரியே இருக்காரு

நவீன்: ஓ நீ ஹிந்தி படமெல்லாம் கூட பார்ப்பியா?

கவி : ஆமா முன்னெல்லாம் ஹிந்தியும், மலையாளமும் தான் அதிகம் பார்ப்பேன், 

நவீன்.: ஆனா உனக்கு தான் இங்கிலீஷூம் சேர்ந்து எந்த லேங்குவெஜும் தெரியாதே மதர்,  எப்படி பார்ப்ப? ஹோ ..இதுக்கு பேர் தான்  "படம் பார்ப்பதா" ???? :))))))))

கவி : அடிங்....... ஓடிப்போயிடு.. பிச்சிடுவேன்.. ! :)))))))

**************

கவி : என்னோட எஸ்.எம்.எஸ் பார்த்து உங்கப்புள்ள பயந்து நடுங்கிட்டான் போல, பவ்யமா இனிமே செய்யமாட்டேனு பதில் வந்து இருக்கு ?

பழம்நீ : ஆமாண்டி, உன் புள்ளைக்கு மட்டுமா , உன்னை பார்த்தா எனக்குக்கூட பயம், பாரு பேசும் போதே நடுங்குது எனக்கு... 

கவி : :))))) சரி சரி.. ரொம்ப பயப்படாதீங்க நான் ஒன்னும் செய்ய மாட்டேன்.. ! :)

பழம்நீ : உன் புள்ளைக்கு ஃபோன் செய்து அவன் உன் மெசேஜ் பார்த்து எப்படி நடுங்கினான்னு விளக்கச்சொல்லவா? 

கவி : அவ்வ்வ்வ்வ்வ்வ்.... ஏன்ன்ன்ன் ?? எப்பவோ ஒரு தரம் மரியாதையா மெசேஜ் செய்து இருக்கான் , பொறுக்காதே உங்களுக்கு....எதுவும் கேக்க வேணாம்.

பழம்நீ : ம்ம்ம்..அது  !! அந்த பயம் இருக்கட்டும்.. ! 

கவி : அவ்வ்வ்... எகொகஇ ?!

*************

ஸ்டவ் க்ளீன் பண்ண கஷ்டப்படறேனு, மளிகை வாங்க சென்றபோது மிஸ்டர் மஸ்ஸில்ஸ் ஸ்ப்ரே லிக்விட் வாங்கிக்கொடுத்தான். வீட்டுக்கு வந்து, ஸ்டவ் துடைக்க யூஸ் பண்ணிட்டு, புள்ளக்கிட்டவும் காமிச்சிசாச்சி...

"அப்படியே உலகமே தெரிஞ்ச மாதிரி பேசத்தெரியும், ஆனா, ஈசியா இருக்க எதையும் வாங்கத்தெரியாது.. பத்தியா எவ்ளோ ஈசியா இருக்கு...  (கமெண்ட் அடிச்சிட்டு வெளியில் போயாச்சி..)

திரும்ப வீட்டுக்கு வந்தவுடன்....

யம்மாஆ......

என்னடா..?

அதை  Oven'க்கு யூஸ் பண்ணக்கூடாது, நீதான் அதிபுத்திசாலியாச்சே..  Oven ஆயிலா இருக்குன்னு அதுக்கு போட்டுட்டாத..

ஹி ஹி...  எப்பவோ இதைப்போட்டு க்ளீன் பண்ணிட்டேனே.. நீ ஏன் முதல்ல சொல்லல.. வா வந்து பாரு, ஜிகு ஜிகுன்னு இருக்கு... :)

கிர்ர்ர்ர் ஏன்ன்மா இப்படி இருக்க..?  ஃபேனை தண்ணிக்குள்ள விட்டு க்ளீன் பண்ண ஆள் ஆச்சே, எங்க செய்துடப்போறன்னு நினைச்சி வந்தா.?? Oven சாப்பாடு செய்யறதும்மா, இதெல்லாம் போடக்கூடாது, அதுல ஆசிட் கன்ட்டைன்ஸ் இருக்கும்..

ஃபேனை பத்தி மட்டும் பேசாத, ஃபேன் சூப்பரா சுத்தமாச்சா இல்லையா?  Oven' ல இதைப்போட்டு துடைச்சிட்டு, தண்ணிப்போட்டும் துடைச்சிட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லைடா...  எதா இருந்தாலும் நீ முன்னமே சொல்லிட்டு போயிருக்கனும்...

ம்க்கும் சொன்னா மட்டும் கேட்டுடுவியா... ஆனா.. இன்னும் ஒன்னே ஒன்னு தான் நீ இந்த வீட்டுல பண்ணல...

இன்னுமா பாக்கி இருக்கு? என்னடா அது சொல்லு சொல்லு சீக்கிரம், அதையும் பண்ணிடறேன்..

அப்பாவையும் என்னையும் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணல.. :((((

அட சூப்பர் ஐடியாவே இருக்கே.... ஒழுங்கா இரண்டு பேரும் குளிச்சி சுத்தமா இருங்க.. இல்லைன்னா மறந்து போயி குளிக்கிற தண்ணியில ஆசிட் ஐ கலந்தாலும் கலந்துடுவேன்...

அடப்பாவி அம்மா..?!

*********

அணில் குட்டி : ஒரு 15 அடி எப்பவும் தள்ளியெ  இருக்கனும், சுத்தம்னு சொல்லி, என்னையும் தண்ணிக்குள்ள போட்டு எடுத்து பிழிஞ்சி எடுத்தாலும் எடுத்துடுவாங்க..

பீட்டர் தாத்ஸ் : “A person might be an expert in any field of knowledge or a master of many material skills and accomplishments. But without inner cleanliness his brain is a desert waste.”


போவோமா ஊர்கோலம் ..

<=  கடலூர் - (மருதாடு கிராமம் செல்லும் சாலை) தானே' க்கு முன்
தானே' க்கு பின் அதே சாலை =>

தானே ' புயலின் தாக்கத்தை ரொம்ப லேட்டாகத்தான் பார்க்கமுடிந்தது. இருந்தாலும், மனிதர்களை பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால் மரங்கள், நிலங்கள் என, தானே' வின் ஆட்டம் ரொம்பவே அதிகம். 

குறிப்பாக தென்னை மரங்கள் இனி காய்கள் கொடுக்குமா என தெரியவில்லை. பண்ரூட்டி பக்கம் முக்கிய விவசாயம், வியாபாரம் முந்திரி மற்றும் பலாப்பழம். இந்த வருடம் மட்டுமில்லை, புயலில் அழிந்த முந்திரி தோப்புகள் திரும்ப அப்படியே கிடைக்க இன்னும் 10 வருடம் உழைக்க வேண்டி இருக்குமாம். 10 வருடத்திற்கு அதை நம்பியவர்களின் சாப்பாட்டுக்கு வழி?.

தானே வந்து போனது மொத்தமே 10 மணி நேரம். ஆனால் அதன் விளைவுகள் பல ஆண்டுகள் தொடரும்.. நிலை... :(
 
   





ஒரு நாளைக்கு பயிர் அறுவடை செய்ய 70ரூ கூலியாம், ஒரு பெண் 2 ஆள் வேலைய செய்வாங்களாம். ஒரு நாளைக்கு 4 ஏக்கரா முடிப்பாங்களாம் . 
ஒரு  ஏக்கரா = 43560 Sq Ft.  ஒரு நாளைக்கு ஒரு பெண் 4 ஏக்கராவிற்கு 140 ரூ சம்பளம் மட்டுமே வாங்கறாங்க. :(((         =>
விபரம் சொன்னது ரோஸ் கலர் புடவையம்மா.             

காற்றில் தென்னைமரம் அப்படி இருப்பதாக நினைக்கவேண்டாம். பாண்டிச்சேரி தொடக்கத்திலிருந்து, கடலூர் மாவட்டம் முழுக்க அத்தனை தென்னை மரங்களும், மேற்கு நோக்கி திரும்பி, தன் நிலைகுலைந்து, நிற்கின்றன.  இவற்றில் திரும்ப, காய்கள் வருமா என காத்திருந்து தான் பார்க்கவேண்டும் என சொல்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள்.  :( 



<=  இந்த (டேரியா) பூவை தலையில் வைத்து 25 வருடங்களுக்கு மேலாகவே இருக்கும், பள்ளிக்காலங்களில், கலர் கலராக தேடி தேடி எடுப்பேன்.  பிறகு விருப்பம் வாசனை பூக்கள் மட்டுமே வைப்பது என மாறிய ப்பிறகு இந்த பூவை வைப்பதே இல்லை, கிடைப்பதும் இல்லை. திருமண வீட்டில் மாமியார் வீட்டு மக்கள் கொடுத்ததால், எதுவும் சொல்லாமல் வைத்துக்கொண்டேன். :))

   இனி வருங்காலம் இப்படித்தான்  இருக்கும். இதுவே நிரந்தரம். =>


மரங்கொத்தி ????  மிக அருகில் சென்று போட்டோ எடுத்தும் பறக்கவேயில்ல.. .


<=   இந்த அம்மாவுக்கும் ஒரு நாளைக்கு அதே ரூ.70 கூலி.  நாள் பூராவும் வெயில்ல வேல செய்யனும். 

யமுனா சித்தியின் கைவைத்தியம்

சென்னை மாநகர், தண்ணீர் பிரச்சனையில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த சமயம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, லாரிகளில் தண்ணீர் வந்து, தெருக்களில் வைக்கப்பட்டிருந்த, கறுப்பு நிற தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு செல்லும். குடங்களை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று/நிற்காமல் முட்டி மோதி தண்ணீர் பிடித்து வந்துவிட்டால், இமாலய சாதனைதான். இரண்டு நாளைக்கு ஒரு முறை இந்த சாதனையை செய்ய வேண்டிய நிர்பந்தம் சென்னை மாநகரில் அத்தனை குடும்பத்தினருக்கும் இருந்தது.

அப்படி ஒரு காலக்கட்டத்தில் தான் , யமுனா சித்திக்கு முதுகு வலி வர ஆரம்பித்தது. தண்ணீர் தூக்கி தூக்கியே முதுகு வலி வந்து விட்டதாக நினைத்த சித்தி, வலியை குறைக்க கை வைத்தியத்தில் இறங்க ஆரம்பித்தார். முதலில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து பார்த்தார்.  இது ஒரு 15 -20 நாட்களுக்கு தொடர்ந்தது, முதுகு வலியும் விடுவேனா என தொடர்ந்தது. சித்திக்கு, வலியின் மேல் சந்தேகம் வர ஆராய்ச்சியில் இறங்கினார். எப்படி வலிக்கிறது, எங்கே வலிக்கிறது, எப்படி உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால் வலிக்கிறது என ஒரு பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி வைக்கும் அளவுக்கு முதுகு வலியின் தன்மையைப்பற்றி தெரிந்துக்கொண்டு, கட்டுரை முடிவையும் வெளியிட்டார். அது தான் முதுகு சுளுக்கு.

அடுத்து, கைவைத்தியம் முதுகு சுளுக்குக்கு மாறியது. ஒரு தட்டில் தண்ணீர் நிரப்பி வைத்து , சுளுக்குக்கு எண்ணெய் விட்டு நீவி விட்டு, தட்டில் குறைகிறதா என பார்த்துக்கொண்டே வந்தார். சுளுக்கு விலக விலக, தண்ணீர் குறைய ஆரம்பிக்குமாம். அட.. தண்ணீர் குறையவில்லை, சித்தியின் சுளுக்கும் விலகவில்லை.

வீட்டில் சித்தப்பாவும் , பிள்ளைகளும் டாக்டரிடம் வர சொல்லி எத்தனை முறை அழைத்தும், கைவைத்தியத்தில் கில்லாடியான சித்தி வர மறுத்துவிட்டு, சிரித்துக்கொண்டே சொன்னார், "தண்ணீ தூக்கறதுல வர முதுகு வலிக்கு, யாராச்சும் செலவு செய்து டாக்டர்கிட்ட போவாங்களா?" போங்க போங்க. .இதோ இன்னும் கொஞ்ச நாள்ல, என் கை வைத்தியத்தாலேயே குணப்படுத்தி காட்டறேன்னு " சவால் விட்டார்.

நாட்கள், மாதங்களாகி கடந்தது, முதுகு வலியுடன். நடு நடுவே குடும்ப மருத்துவரிடம் சென்று, வலிக்கு மருந்தும் வாங்கி சாப்பிட்டார். ஆனால் வலி அவரை விடுவில்லை. ஆமாம், வலியோடு சித்தி கடந்த மாதங்கள் மொத்தம் எட்டு.  எட்டாம் மாதத்தில் ஒரு நாள், வலி தாள முடியாமல் துடிக்க, குண்டுக்கட்டாக சென்னையில் பிரபல மருத்துவமனை ஒன்றுக்கு தூக்கிக்கொண்டு சென்றார்கள்.  அங்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மருத்துவர்கள் முதுகு வலிக்குக்காரணம் மார்பகப்புற்று நோய் என்றார்கள். .

ஆனால், சித்தி அசரவில்லை." எனக்கு புற்றுநோய் வர வாய்ப்பேயில்லை.என் மூன்று குழந்தைகளுக்கும், 3 வயது வரை தாய்ப்பால் கொடுத்திருக்கிறேன். எனக்கெப்படி புற்றுநோய் வரும். இதை நான் நம்பத்தயாராக இல்லை, வேறு எதாவது காரணம் இருக்கலாம் " என மருத்துவரிடம் வாதிட்டார். மருத்துவர்கள் அடுத்து, பயாப்சி டெஸ்ட் எடுத்து பார்த்துவிடலாம் என்று சொல்லவும், வீட்டில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தவும், டெஸ்ட் எடுக்கப்பட்டது.

முடிவு, புற்றுநோய் முற்றிய நிலை கண்டறியப்பட்டது. மார்பங்களை அகற்ற முடியாத நிலையில் புற்று நோய் பரவிவிட்டு இருந்தது. வேறென்ன செய்யமுடியும் இனி, ஒரளவு குணப்படுத்த மருத்துவர்கள் சொன்ன கிமோத்தெரஃபி(Chemotherapy) மற்றும் ரேடியஷன் தெரஃபி(Radiation Therapy) சிகிச்சை முறைகளை சித்தி தொடர்ந்து செய்ய வேண்டி வந்தது.

சென்னை, அடையாரில் உள்ள, புற்றுநோய் மருத்துமனைக்கு சென்று, தகுந்த சிகிச்சை மேற்கொண்டார்கள். முதுகு வலி ஆரம்பித்தது அவரது 50 ஆவது வயதில்.  எட்டு மாதங்கள் கழித்த நிலையில், நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டு , தொடர்ந்து இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். இரண்டாவது வருட முடிவில் பரவியிருந்த மார்பக புற்றுநோய் , விரைந்து குறைய ஆரம்பித்த நிலையில், சித்திக்கு திடீரென்று சாப்பாடு சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது. ஏனிந்த பிரச்சனை என , திரும்பவும் மருத்துவர்களை நாடியதில், மார்பகத்தில் குறைந்த புற்றுநோய், நுரையீரலை ப்பற்றி பரவ ஆரம்பித்தது தெரிய வந்தது.

மாதம் ஒரு முறை மருத்துவமனை சென்று, கீமோத்தெரஃபி மற்றும் ரேடியஷன் சிகிச்சைகளை பெற்று வந்த சித்தி, ஒரு கட்டத்தில், முடியாமையில், மருத்துவமனையில், நிரந்தர நோயாளியாக சேர்க்கப்பட்ட்டார்.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது 53 ஆவது வயதில் எங்கள் அனைவரையும் விட்டு மறைந்தார்.

இப்பவும் சித்தியின் மன தைரியத்தை அனைவரும் பாராட்டினாலும், கைவைத்தியம் பார்க்காமல், வலி வந்தவுடனேயே மருத்துவரை சென்று பார்த்து, அனைத்து பரிசோதனைகளையும் செய்திருந்தால், இன்றும் அவர் எங்களுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது.

படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரும் செய்யும் ஒரே தவறு... நமக்கு நாமே டாக்டர் ஆவது தான்.

*** **** ***

மார்பகப்புற்று நோய் பற்றி மேலும் விபரங்கள் அறிய :


1. மார்பகப்புற்று நோயின் அறிகுறிகள் :


http://en.wikipedia.org/wiki/Breast_cancer
http://health.msn.com/health-topics/breast-cancer/5-surprising-signs-of-breast-cancer
http://www.medicinenet.com/breast_cancer/article.htm
http://www.webmd.com/breast-cancer/guide/breast-cancer-symptoms-and-types



2. மார்பகப்புற்று நோய் விளக்கப்புகைப்படங்கள் :


http://breastcancerpictures.blogspot.in/2010/08/sign-of-breast-cancer.html
http://beauty-healthcare.blogspot.in/2010/12/breast-cancer-treatment-breast-cancer.html



3. மார்பகப்புற்று நோய் காணொளிகள் : 

What Is Breast Cancer?  http://www.youtube.com/watch?v=YNUBnX9JHQs 

How to Recognize Breast Cancer Symptoms  http://www.youtube.com/watch?v=yTHyMNBkbOY

Breast Cancer Progression and Staging  http://www.youtube.com/watch?v=l2lRZuEK4Y0&feature=related

 


இது நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை க்காக எழுதப்பட்டது. 

 

எங்க வீட்டு சமையல் - மக்ரோனி மட்டர் மசாலா

தேவையானவை :

மக்ரோனி - ஒரு பாக்கெட் (200 (அ) 250 கிராம்)
பச்சை பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - பெரியது ஒன்று
தக்காளி - பெரியது ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - 1.5 டீஸ்பூன் (இத்துடன், சோம்பு 1/4 ஸ்பூன், லவங்கம் 2 சேர்த்துக்கொண்டேன்)
தாளிக்க : சோம்பு, லவங்கம், பட்டை, பட்டைஇலை
மிளகாய் தூள் : 3/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் : ஒன்று (நீட்டில் வெட்டவும்)
முட்டை - இரண்டு
கொத்தமல்லி : சிறிது
எண்ணெய் , உப்பு : தேவையான அளவு

செய்முறை : மக்ரோனியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு வேகவைத்து , வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.  ஒன்றோடு ஒன்று ஒட்டிக்காமல் வேகவைக்கனும். அவனில் 9 நிமிடங்கள் வைத்து எடுத்தேன்.

வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, லவங்கம், சோம்பு, பட்டை, பட்டைஇலை போட்டு தாளிக்கவும், பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி சிவந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கி, கடைசியாக பட்டாணி , தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் நன்கு சுண்டியவுடன் முட்டை உடைத்து ஊற்றி கிளரி, கடைசியாக வேகவைத்துள்ள மக்ரோனி சேர்த்து உப்பு த்தேவைப்பட்டால் சேர்த்து கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

மக்ரோனி எப்படி செய்தாலும் சூடாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும். 

நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகள் எதுவுமே எங்க வீட்டு சமையல் இல்லைதான். ஒரே ஒரு முறை கூட எங்க வீட்டில் இவையெல்லாம் செய்ததில்லை. காலத்திற்கு தகுந்தார் போன்றும், குழந்தைக்காகவும் சமைக்க கற்றுக்கொண்டவை. நிச்சயமாக எங்க வீட்டு பாரம்பரிய சமையல் இல்லை.

அணில் குட்டி : ஹி ஹி.. உங்க வீட்டு ஸ்பெஷல் இதுன்னு எதாது ஒன்னு உங்களுக்கு செய்யத்தெரியுமா.. எப்பவும் சும்மாவே ஓவர் பில்டப்பூஊ......

பீட்டர் தாத்ஸ் : A good cook is a certain slow poisoner, if you are not temperate”

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்...2



* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் 

வரைந்தது பெயின்ட் பிரஷ். அதிகமாக ரெடிமேட் ஷேப்ஸ் வைத்தே வரைந்தேன். அதே ஓல்ட் ஸ்டோரி தான், கை பழகல, பேப்பர்லியோ, தெருவிலோ கோலம் போட்டு அதை ஸ்கேன்/ ஃபோட்டோ எடுத்தோ பதியனும், அது ரியலா இருக்கும்னு நினைக்கிறேன். இது முடிந்தவரை முயற்சி.  தொடர்ந்து செய்யாமல் இருப்பதால், முன்ன மாதிரிக்கூட ஃப்ரி டிசைன்ஸ் வரைய முடியல.

அதிகமாக/ பொதுவாக ஆண்டு முழுதும்,தேடி பார்க்கப்படும் பதிவு "ரங்கோலி கோலங்கள்" அப்படின்னு ப்ளாகர் ஸ்டேடஸ் சொல்லுது. .


அணில் குட்டி : ம்ம் அப்புறம்???? !  தொடர்ந்து வரைஞ்சிட்டா மட்டும்... ?  என்னா பில்டப்பூஊஊ ...

பீட்டர் தாத்ஸ் : Usually I begin with a small line, so a lot of lines are coming out in the Kolam. But even then, I still allow for and want to make changes.

க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

 பெசென்ட் நகர் பீச் , சாலையோர மரம்

 நல்லா உத்து பாருங்க.... பெசென்ட் நகர் பீச்..

 பின்னாடி வீட்டு தேங்காய் , மழையில் நனைந்த போது எடுத்தது..

 குன்றத்தூர் கோயில், உட்கார்ந்து பிரசாதம் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும் போது என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து பிரசாதம் தருவேனான்னு பார்த்துச்சி.. :(.

பஸ்ஸில் முன் சீட்டு குழந்தை, குட்டி குட்டி முடி, அதுல எப்படியோ இறுக்கி இரண்டு பக்கம் இரண்டு குடுமி,  குடுமியில் பூ, நீட்டு கறுப்பு பொட்டு, கீழ சந்தனம். அப்பாக்கூட தனியா வந்திருந்த குழந்தை. என் பயணத்தை அழகாக்கிய குழந்தை. :)

கீச்சுகளின் கதம்பம்

=> TPKD / TBCD : அடி மாடா இருந்தால் பசுவையும் கொல்லலாம் என்று சொல்லிருக்காம் ! RT @kavi_rt: Beef eating in ancient india http://www.jstor.org/pss/3516533

=> senthazalravi புல்லட் மணி Verified  :  ட்விட்டரில் ஆணாதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஒருத்தன் / தி வருவானா / ளா ? 

=> vivaji  :  பில்லா-2 TITLE TRACK யார் நடனம் அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது # Dance Master தேவையோ? #Walking Master போதாதா?

=> sowmya : ஆக்குதல் வெகு சுலபம்! அழித்தல் (முடித்தல்) வெகு சிரமம்!! #உப்புமா

=> விஜி  :  நண்பன்ல இலியானாவுக்கு எதுக்கு ஒரு கோடி?

=> பேயோன் :   பத்து வார்த்தைகள் பொடி வைத்து எழுதினால் அதில் நான்கிற்குத்தான் தும்முகிறார்கள். #புள்ளிவிவரம்

=> sowmya பட்டாடை அணிந்து சைவம் பற்றி சிலாகிப்பது ஜீவகாருண்யமாகாது

=> சுட்டி விகடன் ஆசிரியர்: ‘‘வேடந்தாங்கலுக்கு வர்ற பறவைங்க எங்கிருந்து வருது?’’ மாணவன்: ‘‘முட்டையில் இருந்துதான் சார்!’’

=> GiRa :  பத்தினியைச் சந்தேகப்பட்டது ஒரு காவியம். பரத்தையைப் பத்தினியாக்கி, பத்தினியைப் பகவதியாக்கியது சிலப்பதிகாரம். சிலம்பு சிறப்பு.

=> Guru :  ரெண்டு 10வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போறாங்க..என்னன்னு கேட்டா மாறுவேஷ போட்டியாம்!!
 
=> TPKD / TBCD :  RT @ayyanar: @Sowmi_ இன்று the so called குடும்ப பெண்களுக்கு சமூகத்தால் அதிக துன்பம் நேராமைக்கு பாலியல் பெண்கள்தாம் உண்மையான காரணம்     

=> புதுகை.அப்துல்லா :  நக்கீரரே... நீர் பெரிய ஆளுய்யா... அதிமுக காரங்க கையாலேயே ஜெயலலிதா படத்தை எரிக்க வெச்சிட்டியேய்யா?...

=> Kavitha Gajananan  :பணக்கார பெண்களுக்கு சமூக சேவை என்பது ஒரு பொழுதுப்போக்கு.
 
=> அதிஷா @ LawyerSundar : பத்திரிகை சுதந்திரம் என்பது கலைஞரை என்னவேண்டுமானாலும் அவதூறாக பேசுவது.. ஜெவைப்பற்றி பேசாமல் இருப்பது ;-) 
 
=> vivaji  : ஆண்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் ஒருத்தருக்கும் கல்யாணம் நிலைத்திருக்காது

=> shruti haasan   : say it to my face say it behing my back only if words have truth and meaning do they have an effect.#byebyenegativety
 
=> Kavitha Gajananan : //ஆன்மிக ஆர்வலர்களுக்காக ஃபேஸ்புக்கில் விடிய விடிய 'வைகுண்ட ஏகாதசி' - சக்தி விகடனின் சிறப்பு கவரேஜ்! //இதெல்லாம் ரொம்ப ஓவர் ! :)

=> வைரமுத்து  : “மனதின் உயரமே மனிதன் உயரம்” இது என் கையொப்ப வாசகம்(ஆட்டோகிராஃப்) நீங்கள் எழுதினால்...?

=>Ma Sivakumar  : RT 1330 குறளையும் டுவீட்டுகளாக இங்கே பாருங்கள் @THIRUKURAL1330

=> Rohan Joshi  : Lok Sabha = School. Rajya Sabha = Alumni Group. Lokpal = New statue on campus. Very shiny, but does nothing to improve quality of education
 
=> கார்க்கி :  இதாண்டா செல்ஃப் சூசைட். நான் தேடும் செவ்வந்தி பூவிது, ராஜாஆஆஆஆஆ #rajaconcert

=> vivaji :  என் வாரிசுகளை நான் கொஞ்சும்போது தெரிகிறது என் தந்தைக்கும் எனக்குமான பாசமும்.

=> ihatequotes™  : Cry as hard as you want to. But make sure, when you stop crying, you'll never cry for the same reason again. #ihatequotes
 
=>shruti haasan  :  Its always sad saying goodbye to a character you've enjoyed becoming being and loving:( but they're out there forever
   
=> என். சொக்கன் :  மனைவியாருக்கும் அவரது அண்ணியாருக்கும் இடையே நிகழும் ஃபோன் உரையாடல்களில்தான் மாறி மாறி எத்தனை உள்குத்துகள்! #அப்ஸர்வேஸன்

=> Dev  : பேர் தெரியாத போதும் பூ குழந்தை இரண்டுமே நம்மில் புன்னகையை வரவழைக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன
 
=> Vel Ravimohan  @BalaramanL: : சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமலும படிககலாம. உஙகளால இதைப படிகக முடிநதால இதை மீளகீசசவும்.”

=> Dev  : எதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளம் கொண்டு தான் வாழ்க்கையின் சந்தோஷங்கள் நிர்மாணிக்கப்படுகினறன

=> வைரமுத்து  : எனக்குப் படித்த பொன்மொழி:- ஒரு பறவை தலையில் எச்சமிடுவதைத் தடுக்கமுடியாது; ஆனால் தலையில் அது கூடுகட்டாமல் தடுக்கமுடியும்.

    Note : Sorry  I didnt get permission from the authors to post their twits. I really dont know how to get it from all :(. People whom I follow are not following me was also a reason.

    அவளின் பயணம் ..

    விடியற்காலை 6 மணிக்கு சென்னை -பெங்களூர் சதாப்தி ரயில். இங்கிருந்து குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்னர் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். முதல் நாளே, கிண்டி சென்று, வண்டியை அங்கே நிறுத்திவிட்டு, ரயிலில் செல்வதாக திட்டம். காலை எழுந்தது என்னவோ 4.15 மணிக்கு. ஆனால் எப்படி எதனால் தாமதமாகியது என தெரியவில்லை. இருவரும் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு தான் கிளம்பினோம். கதவை தாழிடும் போது 5.30 ஆகியிருந்தது. எனக்கு அப்போதே டென்ஷன் ஆரம்பித்தது.

    அவரிடம், "நான் வண்டியை ஓட்டுகிறேன்" என்றேன். டென்ஷனாக இருப்பது தெரிந்து "வேணாம் நானே ஓட்டுகிறேன்" என்றார். வண்டியை தெருவில் இறக்கியபோது,  நேரே சென்ட்ரலுக்கு சென்றுவிடுவதாக முடிவு செய்து கிளம்பினோம்.

    விடியற்காலை, சென்னை சாலைகள்  வெறிச்சோடி இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக வண்டிகள். அண்ணாசாலையில் எங்கும் நிற்காமல் வேகமாக செல்ல முடிந்தது. சென்ட்ரலை நெருங்கிய  போது 5.55. இன்னும் 5 நிமிடம் , சென்றுவிடுவோம் ஆனால் வண்டியை பார்க் செய்வது ஒரு பக்கம், வெளியூர் ரயில் நிலையம்  ஒரு பக்கம்.  "சீக்கிரம் சீக்கிரம்" என குடைச்சல் கொடுக்க தொடங்கினேன். வண்டி பார்க்கிங் வந்தவுடன், "நீங்க வாங்க நான் போறேன்" என பைகள் இரண்டையும் தூக்கிக்கொண்டு அவருக்காக காத்திராமல் ஓட ஆரம்பித்தேன்.

    ரயில் நிற்கும் ப்ளாட்ஃபாரம் தேடி நின்றபோது, நிமிடங்கள், நொடிகளாக மாறி இருந்தன.  இவரை காணவில்லை. ஓடும் போதே மூன்று முறை அழைத்துவிட்டேன்,  அவர் பேசியது எனக்கு காதில் விழுவில்லை, என்றாலும் நான் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருந்தேன்.

    "நடக்கக்கூடாதுப்பா ஓடி வரணும், ஓடி வாங்க..ஓடிவாங்க.. சிக்னல் போட்டுட்டுடாங்க.. வண்டி எடுக்கப்போறாங்க.." என்று கத்திக்கொண்டு இருந்தேன்.  முதல் பெட்டியின் அருகில் அவர் வரும் வழிப்பார்த்து, ஃபோனும் கையுமாக, கத்துவதுமாக இருந்தேன். வண்டி நகரத்தொடங்கியது....அவரை காணததால் நான் வண்டியில் ஏறவில்லை. அவரிடமிருந்து கால்,

    "எங்க இருந்தாலும் உன் எதிரில் இருக்கும் கம்பார்ட்மென்டில் ஏறு"

    "நீங்க எங்க இருக்கீங்க, நான் தனியா எப்படி போக? ... "

    "நான் ஏறிட்டேன்.. நீ ஏறு .."

    என்னைத்தாண்டி எப்படி சென்றார் என தெரியவில்லை, தட தடவென பைகளை தூக்கிக்கொண்டு, நகரும் வண்டியில் ஏறிவிட்டேன், என் படப்படப்பு குறையுமுன்னே, என் பின்னால் என்னைப்போலவே ஓடி வந்து ஏறிய ஒருவர், ஈஸ் திஸ் சதாப்தி ? என்றார்.. (ஆமாய்யா ஆமா) .."எஸ்.." என்றேன்.

    இவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை, நான் ஏறியது தான் முதல் பெட்டி, அதில் அவரை காணவில்லை, ஏனோ அவர் மேல் சொல்லமுடியாத கோவம் வந்தது ...பைகளை தூக்கிக்கொண்டு வெகுதூரம் ஓடிவந்ததில், கைகள் வலிப்பதை அப்போது தான் உணரத்தொடங்கினேன். படப்படப்பு குறையவில்லை, வியர்த்துக்கொட்டியது. திரும்பவும் அழைத்து, கோவத்தோடு, ...

    'தனியா நிக்கறேன்.. எந்த சீட் தெரியல, இது எந்தப்பெட்டின்னு (பெயர்) தெரியல, நான் முதல் பெட்டியில் ஏறினேன்.. நீங்க எங்க இருக்கீங்க?

    ரயில் சத்தத்தில் அவர் பேசியது துளியும் எனக்கு காதில் விழவில்லை. என் ஃபோன் சவுண்டு அடிக்கடி போயிட்டு வரும் பிரச்சனை வெகு நாட்களாக உள்ளது, அதை தூக்கிப்போட்டு புதுசு வாங்கச்சொல்லி பலமுறை இருவரும் சொல்லியும், மாற்றாமல் இருப்பது என் பிடிவாதம். அவர் பேசுவது காதில் விழாததில், அவர் ரயிலில் தான் இருக்கிறாரா ? விட்டுவிட்டு ஏறிவிட்டோனோ? சுற்றி கண்களை சுழட்டி அவரை தேடும் போது கறுப்பு கோட் போட்ட டிடிஆர் கண்ணில் பட டிக்கட் நினைவு வந்தது, டிக்கட் என்னிடம் இல்லை, அவரிடம் தான் உள்ளது.  டென்ஷன் அதிகமாகி, திரும்பவும் நானே அழைத்தேன். அவருக்கு என் மொபைல் நிலை  புரிந்துவிட்டது..

    "நீ எங்க இருக்கியோ அங்கவே இரு, நான் வரேன்"  கத்தினார்.

    ஃபோனை  நிறுத்திவிட்டு, காத்திருந்தேன். அவரும் கோபமாகவே வந்தார், அவர் பேசியதை காதில் வாங்காமல் திரும்ப திரும்ப அழைத்தது கோவமாக இருக்கும், நான் என்ன செய்யமுடியும், என் ஃபோன் பிரச்சனை அது. எனக்கு வியர்த்துக்கொட்டுவதை பார்த்து லேசாக பயந்தது தெரிந்தது.  எதுவும் மேற்கொண்டு இருவருமே பேசிக்கொள்ளவில்லை.  பையை என்னிடம் இருந்து வாங்கியவர், பிறகு என்னைத்தூக்கவே விடவில்லை. நானும் அவர் வெயிட் எடுக்கக்கூடாதே என பின்னால் நடந்துவாறே பிடிங்கியும் பார்த்தேன்.

     "வேணாம், முதல்ல நீ உக்காரு"  என சீட்டை தேடி இருவரும் அமர்ந்தோம்.

    இதயத்துடிப்பின் வேகம் குறையவில்லை, பளுவாக இருந்தது.

    " தண்ணீ வேணும்.. "

    சொல்லிக்கொண்டு இருக்கும் போதே,  ரயிலில் உணவு கொடுக்கும் ஊழியர் ஒரு தட்டில் 2 சாக்லெட், 2 பிஸ்கெட் , 1 தண்ணீர் பாட்டிலை வைத்துவிட்டு போனார். தண்ணீரை பிரித்து குடித்தேன். இதயத்துடிப்பு நிதானத்திற்கு வந்திருந்தது. வலி குறைந்த லேசான உணர்வு. அன்னிச்சையாக, அவருடைய கைகள் இரண்டையும் தடவி திருப்பி திருப்பி பார்த்த்தேன். வீக்கமொன்றுமில்லை. விரல்களில் என் விரல்களை கோர்த்து அழுத்தி "வலிக்குதாப்பா?  "

    "நீதான பையத்தூக்கிட்டு வந்த....."

    "ஆமா... நான் தான் தூக்கிட்டு வந்தேன்.  பெருமூச்சு விட்டு நிம்மதியாக சிரித்தேன்.  "பசிக்குது.. இந்த ட்ரைன்ல எப்ப சோறு போடுவாங்க?"

    "ஹா ஹா ஹா. .ஆரம்பிச்சிட்டா (இனி இவள பெங்களூர் வரை சமாளிக்கனும்)  டீ வரும்ம்மா வெயிட் பண்ணு.. "

    "அப்புறம் ?"

    "டிபன் ஆர்டர் செய்து இருக்கேன் வரும்."

    "அப்புறம் ?"

    "ஆங்,,,, மதியம் மைசூர் வரைக்கும் அப்படியே போனீன்னா இலப்போட்டு சோறு போடுவாங்க..உக்காந்து சாப்பிட்டுட்டு அப்படியே ஒரு தூக்கம் போட்டுட்டு வா!  10.30 பெங்களூர் போயிடும். .அதுக்குள்ள உனக்கு  இன்னும் என்னவெல்லாம் வேணும் ?"

    "....... ஒன் மோர் டீ ?"

    "தருவாங்க.."

    அவர் சொன்னபடி எல்லாம் வந்தது.. சாப்பிட்டு முடித்து, மொபைலில் பாட்டைப்போட்டு, காதில் ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு, ஒரு காலை மடக்கி, ஒரு பக்கமாக திரும்பி உட்கார்ந்து, அவர் தோள் மேல் முகம் சாய்த்து தூங்கிப்போனேன்.

    எழுந்தபோது , அவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்.  அவர் தோளில் வெகு நேரம் முகம் அழுத்தி தூங்கி இருக்கிறேன்...   கைகள் மறுத்திருக்கோமோ? ... இரண்டு கைகளையும் பார்த்தேன்...வீக்கமில்லை.... மீண்டும் ஒரு பெருமூச்சு.

    தூக்கம் கலைந்து போயிருந்தது..... அவரை தொந்தரவு செய்யாமல், வேறு பக்கம் திரும்பி அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..


    கூகுல்காரா உனக்கு என்னத்தான்யா பிரச்சனை? ..

    ஒரு மட்டு மரியாதை இல்லாம, யாரையும் எதையும் கேக்காம இவங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் மாத்தறாங்க.. மாத்திட்டு

    "இது எப்படி இருக்கு?" ரேஞ்சுல சர்வே எடுக்கறாங்க..

    "அடச்சீ த்தூஊ...கேவலமா இருக்குன்னு"  திட்டி மெயில் அனுப்பினப்பிறகும், எதையும் பழையபடிக்கு மாத்த மாட்டேங்கறாங்க...

    அட மாத்தாட்டின்னா கூட பரவாயில்ல.. மேல மேல நம்மை கன்ஃப்பூயூஸ் செய்யாமையாச்சும் இருக்காங்களா.. ? நம்ம மெயில் பொட்டியில் நமக்கு தெரியாம உள்ளார நுழைஞ்சி கலரு டிசைனு எல்லாத்தையும் மாத்தி விளையாட்டிப்போறாங்க..  எப்ப வராங்க எதுக்கு வராங்க ஏன் வராங்கன்னு தெரிய மாட்டேங்குது...

    என்னதான் ஃப்ரீ சர்வீஸ்னாலும் நாம எல்லாம் இல்லாம இவிங்க சர்வீஸ் நடத்தி காசு சம்பாதிக்கமுடியுமா சொல்லுங்க..  ஒரு நியாயம் நேர்மை நீதி இதுல எதாது ஒன்னு வேணாம்..?.

    அப்படி என்னத்தான் பிரச்சனை எனக்குன்னு கேக்கறீங்களா..

    1.  கூகுல் மெயில் புது டிசைன் ?! :( படு கேவலமான டிசைன் கண்ணு பூத்து போகுது .. பகல்லியே பசுமாடு தெரியாத என்னை மாதிரி ஆளுக்கு, இந்த மெயிலை ஒரே ஒரு நாள் யூஸ் பண்ணா போதும், கண்ணு நொள்ளையாகி கைத்தடி வாங்க வேண்டிய ரேஞ்சுக்கு போயிடும்.. .நானும் விடாம பழைய டிசைனை சேஞ்ச் செய்துக்கிட்டே வரேன். ஆனா முடியலைங்க.. பொழுது விடிஞ்சி பொழுதுபோனா வந்து மாத்திவிட்டுட்டு போயிடாறாங்க.. 

    2. கூகுல் தேடலில், முன்ன எல்லாம் படம் டவுன் லோட் செய்தால், நேரா இமேஜ் ஃபைல் ஆ சேவ் ஆகும். இப்ப.. லிங்க்கு போயிடுது, அது ஏதோ நல்ல லிங்கா இருந்துட்டா பிரச்சனையில்லை. .கண்ட கருமத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போது..  இதயம் பலகீனமான நானெல்லாம் கண்டதையும் பார்த்து வாய் பொளந்தா? வேற என்ன சங்குதான் !  இமேஜ்ஜும் காப்பி செய்து பேஸ்ட் செய்து சேவ் செய்து தொலைக்க வேண்டியதா இருக்கு. எவ்ளோ நேர விரயம் ?! :(. இவிங்களா எந்நேரத்தையெல்லாம் திருப்பிக்கொடுப்பாங்க?

    3. யூ டியூப்... எங்க என்ன நடந்துச்சின்னே தெரியல. .புது டிசைன்ல எந்த ஆப்ஷன் எங்க இருக்குன்னு தெரியல...தேடி கண்டுப்பிடிக்க நேரம் ஆகறத விட,..சில ஆப்ஷன் எங்க தேடியும் இன்னமும் கிடைக்கல..

    4.  புதுசா வந்த G+...  ல , எதாது நல்ல மெசேஜ் இருந்தால்,  ஈமெயில் மூலம் அனுப்பலான்னு பார்த்தா வழியில்ல. நமக்கு யாரும் கமெண்டு போட்டா 7 நாள் கழிச்சி டைம் லைன்ல காட்டுது. .ஆனா நோட்டிஃபிகிஷேனல முதல்ல வந்து தொலைக்குது. அதுல இருந்து கமெண்டு போடலாம்னு பார்த்தா ஒரே கன்ஃபூயூஷன் ஆஃப் கண்றாவியாக இருக்கு..

    5. பிக்காசவில், முன்ன எல்லாம் போட்டோ அப்லோட் செய்து யாருக்கு அனுப்பனுமோ மெயில் ல அனுப்பற வசதி இருந்துச்சி. .இப்ப.. ??? எகொ கூகுல்காரா இது? ஒவ்வொரு முறையும் ஒரு ஜங்கிலை... ம்ம்கும்..இல்லல்ல ஒரு சர்ககிளை கிரியேட் செய்துத்தொலைக்க வேண்டியாதாக இருக்கு.. அது மட்டுமா? ஒருத்தர் ஒருத்தாரா போயி,  என் கூகுல் + ல் படம் போட்டு இருக்கேன் பாருங்க ன்னு தகவல் சொல்ல வேண்டியாதாக இருக்கு.

    6. கூகுல் சேட். ?!????!  யாரக்கேட்டு...இல்ல. தெரியாமத்தான் கேக்கறேன் யாரக்கேட்டு G+ ல இருக்க அத்தனை ப்பேரையும் சேர்த்துவிட்டீங்க? ஒரு பேசிக் டீசன்சி வேணாம்? அட என் சேட்ல ஆட் பண்ண என்னைக்கேக்க வேணாமா? ஓவர் அராஜகமா இருக்கே?

    இன்னுமும் புலம்பல தொடர்ந்தா எனக்கு ஜோடா க்கொடுத்து படுக்க வைக்க வேண்டி இருக்கும்.. அதனால இத்தோட இந்த சொற்பொழிவை நிறுத்திக்கிட்டு..

    இதுக்கெல்லாம் யார் முடிவு கட்டறதுன்னு, உங்களையும் போராட கூப்பிடறேன்.....

    "புறப்படுங்கள் போராடுவோம். கூகுல்காரனுக்கு எதிராக நியாயம் கேட்போம்"

    (பிரபு கல்யாண் ஜிவலர்ஸ் விளம்பரத்தில் கத்தறமாதிரி கர்ர்ர்ர்ர்ர் முர்ர்ர்ர்ர்ர்ர்னு கத்தனும் அப்பத்தான் கூகுல்காரன் காது கிழிஞ்சி ரத்தம் சொட்ட சொட்ட ஓடியாந்து என்னா ஏதுன்னு படிச்சி பார்ப்பான்)

    லேபில் "கூகுல் குரங்கு"ன்னு போடலாம்னு பார்த்தேன்..... அதான் இங்கப்போட்டுட்டேனே.. விடுங்க விடுங்க..

    அடுத்து ஓசி விளம்பரங்காறங்க தொல்லை :  

     ஓசி விளம்பரம் சங்கமம் # 1:

    ஓசியில் போனாப்போவுதுன்னு விளம்பரம் கொடுக்கும் போதே, என்னோட புகழையும் வளர்ச்சியும் கண்டு பொறாமை கொண்ட   சங்கமத்து ஓனர்  அடிக்கடி வந்து திட்டிட்டு போறாரு... முதல்ல ஏன் திட்டறாருன்னு விளங்கல. அப்புறம் ஒரு நாள் இதுக்குன்னே உக்காந்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்தப்பத்தான்,  என் அதீத வளர்ச்சியைக்கண்டு (சைட்ல வளரத பார்த்தான்னு யாராச்சும் கேட்டா ..பிச்சி பிச்சி)  அவரால சகிச்சிக்க முடியில.. எங்க அவர் போர்ட்டலுக்கு அவருக்கே தெரியாமல், நான் ஓனர் ஆயிடுவேனோன்னு பயத்தில், "நீ போர்ட்டல் நடத்தறியா இல்ல நான் நடத்தறேனா?  சங்கமத்துக்கு "நான் தான் ஓனர், நான் தான் ஓனர்" னு அடிக்கடி சொல்லிக்கறாரு... :)) ஹிஹி.. பாவம் அமெரிக்காவில் குளிர் காலத்தில் இப்படி ஒரு வியாதி வரும் போல. .விடுங்க விடுங்க..அவரு இன்னும் அதிகமாக சட்டைய கிழிச்சிக்கிட்டு சுத்தறமாதிரி நீங்க எல்லாம் எனக்கு ஆதரவு கொடுத்து சங்கமம் www.isangamam.com சேர்ந்து அவருக்கு என் அருமை பெருமை எல்லாம் விளக்குவீங்களாம்  :))

    ஓசி விளம்பரம் அதிதம் #2 :

    இவங்க போஸ்ட்ர் தீடீர் தீடீர் ன்னு காணாமப்போது. எங்கங்க காணலன்னு அதீதம் ஓனரோட நண்பர் கிட்ட கேட்டால், நீங்க காசு க்கேட்டதனால காணாமப்போச்சி.. (அடப்பாவிகளா என் பேரை சொல்லி வேற யாரும் ஆட்டைய ப்போடறாங்களோ?) வேணும்னா இன்னொரு தரம் அதீதம் எங்கேன்னு கண்ணாடிப்போட்டுக்கிட்டு தேடிப்பாருங்களேன்னு" சொல்றாரு!  நாங்க கண்ணாடிப்போடறது இருக்கட்டும்,  முதல்ல ஏன் காணாமப்போச்சி ன்னு சொல்லுங்க, அப்புறமா தேடறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இன்னைக்கு வந்து பார்க்கிறேன், http://www.atheetham.com/அழகா சைட் பார்ல வந்து உக்காந்துக்கிட்டு இருக்கு.! எகொஅஇ !

    இணையத்தில் ஓசி விளம்பரம் கொடுக்கறவங்க எல்லாருமே இப்படித்தானோ? நல்ல வேள உடான்ஸ் காரங்க யாரும் இன்னும் கிளம்பல ...

    அணில்குட்டி : இதைப்படிச்சிட்டு கூகுல்காரன் இவிங்க அக்கவுண்டை மட்டும் புடுங்கிவிட்டா போதும்.. நாடும் நாட்டு மக்களும் நிம்மதியா இருப்பாங்க. .கூடவே நானும் ரெம்ப நிம்மதியா இருப்பேன்.

    சங்கமத்து ஓனரும் அதீதத்து ஓனரும் உன் விளம்பரமே எங்களுக்கு வேணாம்னு சொல்லி, திரும்பி பார்க்காமல் ஓட வைக்காம விடமாட்டாங்க ப்போலவே.. :)))
    .

    ஐயங்கார் வெதுப்பகம் ரொட்டியும் சங்கமம் திரட்டியும்


    விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து சாந்தி திரை அரங்கம் (நான் படிக்கும் காலத்திலேயே ஏதோ பிரச்சனையில் மூடிவிட்டார்கள்) வரும் வழியில் ரயில் நிலையத்தை ஒட்டி, அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளி செல்லும் தெருவில் ஒரு ஐயங்கார் வெதுப்பகம் இருந்தது. (இப்போது இருக்கிறதா என தெரியவில்லை). எனக்கு தெரிந்து அந்த பகுதியில் அது ஒன்று தான் வெதுப்பகம்.  

    எனக்கோ அண்ணன்'களுக்கோ காய்ச்சல் வந்தால், அங்கு சென்று சுடச்சுட ரொட்டி வாங்கிட்டு வந்து தருவார்கள்.  மாலை 3-4 மணி வாக்கில் சென்றால், சுடச்சுட ரொட்டி கிடைக்கும்.  அது ஐயங்கார் வெதுப்பகத்தின் சொந்த உருவாக்கம், ரொட்டி கேட்டப்பிறகு, முழுசாக இருக்கும் ரொட்டியை நம் எதிரில் கட்டை மேல் வைத்து துண்டுகள் போட்டு, மெல்லிய வெள்ளை கவரால் சுற்றித்தருவார்கள். அதற்கு தயாரிப்பாளர் பெயர் எதுவும் இருக்காது. ரொட்டி. மிருதுவாக ருசியாக  இருக்கும். இப்போது போல மளிகை க்கடையில் எல்லாம் ரொட்டி கிடைப்பது இல்லை. ரயில் நிலையம் வரை நடந்து சென்று வாங்கி வர வேண்டும் என்பதால் ரொட்டி வாங்குவதை மிகப்பெரிய வேலையாக நினைப்போம்.

    எங்களுக்கு காய்ச்சல் என்பது வருடத்திற்கு ஒரு முறை வந்தால் அதிகம்.அப்படியே வந்தாலும், மிளகு ரசமும், மிளகு தட்டிப்போட்ட மீன் குழம்பும், வயக்காட்டு நண்டு குழம்பும் வைத்து ஒரே வேளையில் காய்ச்சலை இறக்கி விடுவதில் ஆயா கெட்டி. வயல் நண்டுவை பற்றி சொல்லியே ஆகனும். காய்ச்சல் வரும் நேரம், விடாத நெஞ்சு சளி, இருமல் இருக்கும் நேரங்களில், இந்த நண்டு வரும். யாரிடமோ சொல்லி வைத்து வாங்குவார்கள், இது வரும் போதே கச்சா முச்சான்னு ஒன்றோடு ஒன்று மோதி சத்தம் எழுப்பிக்கிட்டே வரும். அதை வேடிக்கை பார்க்கும் போதே பாதி காய்ச்சல் ஓடிப்போயிடும். :). உயிரோடு அதை ஒவ்வொன்றாய் எடுத்து அம்மியில் வைத்து நச்சக்" ன்னு குழவியை அதன் உடம்பின் மேல் போடுவார்கள். அவ்வளது தான் ஆள் அவுட்.  பிறகு எடுத்து சுத்தம் செய்து குழம்பு ரெடி. கடல் நண்டுவை விட, கழனிவெளி நண்டு தான் சூப்பர் ருசி.

    ரொட்டிக்கு வருவோம், குடும்ப டாக்டர் ராஜாராம் மனசு வைத்தால் மட்டுமே ரொட்டி சாப்பிட வாய்ப்புண்டு. சாப்பாடே கூடாது என அறிவுரை செய்தால் ஒழிய இந்த ரொட்டியும் கிடைக்காது. சாப்பாடு வேண்டாம் என்றாலும் அடுத்து வந்து நிற்பது கஞ்சி தான். நொய் அரிசிக்கஞ்சி, அர்ரொட்டி மாவு கஞ்சி என்று எதையாவது செய்து க்கொடுப்பார்கள். தொட்டுக்கொள்ள காரமில்லாத உப்பு நார்ந்தங்காய் ஊறுகாய். (ஸ்ஸ்ஸாஆ.)  இதை எழுதும் போது, அந்த கஞ்சியும் ஊறுகாயும் கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. கஞ்சிக்கூட வைத்து விடலாம், அந்த ஊறுகாய். சான்சே இல்ல.  ஆனால் அப்போதோ மனம் ரொட்டிக்கு தான் ஏங்கியது. . அதற்கு கண்டிப்பாக சாப்பாடு சாப்பிட முடியாத வாய் கசப்போடு கூடிய காய்ச்சல் வந்தே ஆகவேண்டும். அநாவசியமாக ரொட்டி வாங்கித்தரவே மாட்டார்கள். கடையில் சென்று ரொட்டி வாங்கி சாப்பிடுவது கெட்ட பழக்கம், காய்ச்சல் என்றால் மருந்து போல் சாப்பிட வேண்டிய லிஸ்டில் மட்டும் வருபவை.

    ஓரிரு முறை அந்த வெதுப்பகத்திற்கு நானும் சென்று ரொட்டி வாங்கி வந்த நினைவு இருக்கிறது. பொதுவாக வெளி வேலைகளுக்கு, கடைகளுக்கு என்னை அனுப்பவுதில்லை. அனுப்பினாலும் கூட அண்ணன், அத்தை, அத்தை மகள், மகன் என்று யாராவது வருவார்கள்.

    இருங்க..இருங்க..... தலைப்பில் ரொட்டிக்கும் திரட்டிக்கும் என்ன சம்பந்தம் னு தெரியாமல் படித்துக்கொண்டு வருபவர்களுக்கு............... சங்கமம் திரட்டியின் அறிமுகம்..
    ================================================================
    பிரபல பதிவர் + இயக்குனரும், இந்திய நாட்டின் மீதும்,  தமிழ் நாடு மற்றும் மொழியின் மீதும் தீராத தீவிர காதல் கொண்டிருக்கும் அமெரிக்கரான (?!) திருவாளர் இளா அவர்கள், தமிழ் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ் திரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.  நம்மை எல்லாம் நம்பி ஆரம்பித்த அவரை நாம் கைவிடலாமா?? விடவேக்கூடாது. அந்த திரட்டியில் உங்களின் பதிவை சேர்ப்பது மிகவும் எளிதுதான். ஒரு Gmail கணக்கு இருந்தாலே போதுமானது.  இதை படிக்கும் போதே, www.isangamam.com லிங்கை க்ளிக்கி, ஓடிப்போய்  ஒரு "உள்ளேன் ஐயா"  போட்டுட்டு, உங்க வலைப்பதிவையும் இணைச்சுட்டு வந்து  மிச்சத்தை படிங்க. அப்பத்தான் அமெரிக்காவில் இருந்து எனக்கு கமிஷன் வந்து சேரும்.
        
    உங்க பதிவை சேர்த்துட்டீங்களா?  வாங்க திரும்ப ரொட்டி சாப்பிட கிளம்புவோம்.
    ===============================================================
    வீட்டில் எங்கள் மூவருக்கு மட்டும் தான் இந்த ரொட்டி கணக்கு. அதுவும் காய்ச்சலை சாக்காக வைத்து அடம் பிடித்து ரொட்டி வேண்டுமென கேட்கும் ஒரே ஆள் நான் தான். அண்ணன்கள் கஞ்சி கொடுத்தால் குடித்துவிட்டு பேசாமல் இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் அடம் பிடிப்பது,  கேட்டதை தராவிட்டால் உண்ணாவிரதம் இருந்து சாதிப்பது போன்ற எல்லா நற்செயல்களும் செய்து, நற்செயல்களுக்கு ஏற்றவாறு எல்லோரிடமும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிவாங்குவதும் நானாகத்தான் இருக்கும். பெண் குழந்தை இப்படித்தான் இருக்கனும்னு சட்டம் திட்டம் பேசும் வீட்டில், பெண் குழந்தையை அடிப்பதில் மட்டும் தயவு தாட்சன்யம் பார்த்தது இல்லை. யப்பா என்னா அடி.. அதுவும் எது கையில் கிடைக்குதோ அதை வைத்து அடி பின்னிடுவாங்க பின்னி..ம்ம்ம்...இப்ப நினைத்து பார்த்தால் கூட, என் உடம்பு எவ்வளவு அடி உதைகளை தாங்கி, கடந்து வந்து இருக்கிறது என்பதை நினைத்து பிரம்மிப்பாக உள்ளது.  குடும்ப குல விளக்கு என ஒரு பக்கம் போற்றப்பட்ட என்னை மட்டுமே பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது....... எவ்வளவு நல்லவளா இருந்து இருக்கேன்னு மட்டும் புரியுது. . 

    இப்படி அடி உதை வாங்கினாலும், அது ஒரு காலம், ரொட்டிக்காக ஏங்கிய காலம் ! வருசத்திற்கு ஒரு தடவையோ இரண்டு தடவையோ கிடைக்குமா அதற்காக காய்ச்சல் வருமா என்று எதிர்பார்த்ததுப்போக , இன்று வாரத்திற்கு 3-4 நாட்கள் காலை நேர உணவில் ரொட்டி சேர்ந்துவிட்டது. மைதா ரொட்டி போக, இப்போது கோதுமை ரொட்டி வந்துவிட்டது. பிரட் ஆம்லெட், பிரட் ரோஸ்டு வித் ஜாம் , சீஸ் & பட்டர், பிரட் சான்ட்விஜ், பிரட் ஃப்ரென்ச் ஃப்ரை , பிரட் முட்டை பொரியல்,  பிரட் & பால். இப்படி ரொட்டியில் செய்யும் உணவுகள் உடலுக்கு நல்லது கலோரி குறைவு என சாப்பிடுவதும் அதிகமாகிவிட்டது.  காலை வேளை அவசரத்தில் செய்வதற்கும் மிகவும் எளிதாக உள்ளது.

    சீஸ், பட்டர்,  முட்டை  பால் எல்லாம் கலோரி குறைச்சலா என கேட்டால், முட்டை தவிர மற்றவை கொழுப்பு நீக்கியதாகத்தான் வாங்குகிறோம். நாம் கடைக்கு போனாலே,  ரொட்டியை எடுத்து கையில் கடைக்காரர் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.   ரொட்டி இல்லாத வாரம் இருப்பதே இல்லை.

    எப்போது ரொட்டி சாப்பிட்டாலும், காய்ச்சல் நினைவுகளும், காய்ச்சல் வரும் போது ரொட்டிக்காக அடம் பிடித்த நினைவுகளும், ஐயங்கார் வெதுப்பகமும் நினைவில் வராமல் இருப்பதில்லை.

    அணில் குட்டி : மக்கா... ரொட்டிய பத்தி படிச்சதுல சங்கமம் திரட்டியில் பதிய மறந்துடாதீங்க. யாரும் பதியாமல் போனால், திரட்டி ஓனர் அமெரிக்காவிலிருந்து துப்பினால், எங்கையும் நடுவில் விழாமல் நேரா கவி முஞ்சி மேல வந்து தான் விழும்.. ஹி ஹி...அது அந்தம்மாவோட கவலை நமக்கென்ன..??

    நீங்களும் உங்க பதிவில் சங்கமம் திரட்டியை விளம்பரம் செய்தீங்கன்னா, அமெரிக்காவில் இருந்து கமிஷன் வரும் ! அதான் இப்ப மேட்டர்..  விளம்பரம் செய்து கமிஷனை வாங்க மறக்காதீங்க .. திரட்டி ஓனர் அமெரிக்காஆஆஆ......ங்கறதையும் மறந்துடாதீங்க.. :)

    பீட்டர் தாத்ஸ் : Good days are to be gathered like grapes, to be trodden and bottled into wine and kept for age to sip at ease beside the fire. 
    Our memories are the only paradise from which we can never be expelled
    .