Sorry Appa, I just ignored u in my thought, here you go.....
1. வசீகரா
2. அனல் மேலே பனித்துளி
1. வசீகரா
2. அனல் மேலே பனித்துளி
! என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு !
Labels: அப்பாவிற்காக 8 Comments
Labels: சமூகம் 18 Comments
Labels: அப்பாவிற்காக 5 Comments
புத்தகம் கையுமாக அவர் அமர, அவர் பக்கத்தில் நான். ரொம்ப ஆர்வமாக பாடம் நடத்த ஆரம்பித்தார், மாணவி கவனிக்கிறாளா இல்லையான்னு பார்க்கும் சமர்த்து அவரிடம் இல்லை, பாடம் நடத்துவதிலேயே கவனமாக இருந்தார். கையை இரண்டையும் ஆட்டி ஆட்டி பாடம் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார், ஆனா பாருங்க, யாருக்குன்னு தான் தெரியல. எனக்கு சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. போதும்னு சொன்னால், வாத்தியார் கோவப்படுவார்னு, ரொம்ப கஷ்டப்பட்டு வாயை மூடிட்டு பேசாமல் இருந்தேன். ஆனா நேரம் செல்ல செல்ல தூக்கம் கண்களை செருக........ தூங்கி..... நானும், அவரும் எதிர்ப்பார்க்காத ஒரு தருணத்தில், அவர் மடியில் தொப்பென்று விழுந்தேன். 
Labels: பழம்-நீ 10 Comments
Labels: கதம்பம் 11 Comments
கர்ப்பமான ஒரு பெண் கொல்லப்பட்டு, அவள் வயிற்றில், கிழிந்த ஒரு துவாரத்தின் வழியாக, உள்ளே இறந்துபோன சிசுவின் ஒரு கை வெளியே வந்துத் தொங்கிக் கொண்டு இருந்தது. கடவுளே, இந்தக் காட்சியைப் பார்த்தபின், இதற்கு மேலும், மோசமான ஒரு காட்சியே இனி பார்க்கவேண்டியதில்லை என நினைக்க வைத்தது. இதற்குப்பின், பெண்ணின் கற்பும், துன்புறுத்தல்களும், அவளின் உடல் பற்றிய பிரஞ்ஞையும் இல்லாமலே போனது." கில்லிங் ஃபீல்ட்ஸ்' வீடியோவில் குழந்தை கொல்லப்பட்ட காட்சி, புலிகளை மட்டுமல்ல, தமிழினத்தையே வேரோடு அறுத்து எரிய வேண்டுமென்ற வெறி அந்த அரக்கர்களிடம் இருப்பதை தெளிவாக்கியுள்ளது. .
ஆமாம், அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரி என ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்தில் நாம்(இந்தியா) இருக்கிறோம். ஈராக்கோடு போர் தொடுத்து, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் அழித்து, அமெரிக்காக்காரன் செய்யாத குற்றங்களா? அங்கு, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்போடு தான் இருந்தார்களா? மனித சடலங்களே இல்லாத, எதையுமே அழிக்காத ஒரு போராகத்தான் அது இருந்ததா? சதாம் ஹூசைன் என்ற மாவீரன் ஏன் தூக்கிலிடப்பட்டார் ? ஈராக் போரில், அமெரிக்கா போர் குற்றமே செய்யவில்லையா? பின்லேடன் + குழு விசாரனையின்றி ஏன் கொல்லப்பட்டார்கள்? ஆக, அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரியே ! உலகத்தை அவன் கையில் கொண்டுவர வேண்டும் என்ற திமிரும், அவனை வீழ்த்த யாருமில்லை என்ற மதப்பும் இருப்பதில், எப்போதும் குரலையும், கையையும் ஓங்கிக்காட்டிக்கொண்டு இருக்கிறான். இவனோ வேற்று நாட்டு போர்க்குற்றங்களைப் படம் பிடித்து க்காட்டி, அதை ஐ.நா வாக்கெடுப்பில் வெற்றிப்பெற செய்து இருப்பதை, நமக்கு சாதகமான ஒரு நிலைபாடாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ராஜதந்திரமாக எதற்கோ உள்நோக்கத்தோடு அடிப்போடுகிறான் என்றே நினைக்க முடிகிறது. Labels: சமூகம் 4 Comments
Labels: பழம்-நீ 18 Comments
Labels: ஓவியம்/புகைப்படம், பயணம்/இடங்கள் 11 Comments
Labels: சமூகம் 9 Comments
Labels: பத்மா'ஸ் கிட்ச்சன் 10 Comments
Labels: ஓவியம்/புகைப்படம் 4 Comments
Labels: ஓவியம்/புகைப்படம் 19 Comments
Labels: கதம்பம் 7 Comments
"நடக்கக்கூடாதுப்பா ஓடி வரணும், ஓடி வாங்க..ஓடிவாங்க.. சிக்னல் போட்டுட்டுடாங்க.. வண்டி எடுக்கப்போறாங்க.." என்று கத்திக்கொண்டு இருந்தேன். முதல் பெட்டியின் அருகில் அவர் வரும் வழிப்பார்த்து, ஃபோனும் கையுமாக, கத்துவதுமாக இருந்தேன். வண்டி நகரத்தொடங்கியது....அவரை காணததால் நான் வண்டியில் ஏறவில்லை. அவரிடமிருந்து கால், Labels: கதை, பயணம்/இடங்கள் 10 Comments
Labels: சமூகம், பழம்-நீ 21 Comments
எனக்கோ அண்ணன்'களுக்கோ காய்ச்சல் வந்தால், அங்கு சென்று சுடச்சுட ரொட்டி வாங்கிட்டு வந்து தருவார்கள். மாலை 3-4 மணி வாக்கில் சென்றால், சுடச்சுட ரொட்டி கிடைக்கும். அது ஐயங்கார் வெதுப்பகத்தின் சொந்த உருவாக்கம், ரொட்டி கேட்டப்பிறகு, முழுசாக இருக்கும் ரொட்டியை நம் எதிரில் கட்டை மேல் வைத்து துண்டுகள் போட்டு, மெல்லிய வெள்ளை கவரால் சுற்றித்தருவார்கள். அதற்கு தயாரிப்பாளர் பெயர் எதுவும் இருக்காது. ரொட்டி. மிருதுவாக ருசியாக இருக்கும். இப்போது போல மளிகை க்கடையில் எல்லாம் ரொட்டி கிடைப்பது இல்லை. ரயில் நிலையம் வரை நடந்து சென்று வாங்கி வர வேண்டும் என்பதால் ரொட்டி வாங்குவதை மிகப்பெரிய வேலையாக நினைப்போம்.
பிரபல பதிவர் + இயக்குனரும், இந்திய நாட்டின் மீதும், தமிழ் நாடு மற்றும் மொழியின் மீதும் தீராத தீவிர காதல் கொண்டிருக்கும் அமெரிக்கரான (?!) திருவாளர் இளா அவர்கள், தமிழ் நல்லுலகத்திற்கு ஒரு தமிழ் திரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார். நம்மை எல்லாம் நம்பி ஆரம்பித்த அவரை நாம் கைவிடலாமா?? விடவேக்கூடாது. அந்த திரட்டியில் உங்களின் பதிவை சேர்ப்பது மிகவும் எளிதுதான். ஒரு Gmail கணக்கு இருந்தாலே போதுமானது. இதை படிக்கும் போதே, www.isangamam.com லிங்கை க்ளிக்கி, ஓடிப்போய் ஒரு "உள்ளேன் ஐயா" போட்டுட்டு, உங்க வலைப்பதிவையும் இணைச்சுட்டு வந்து மிச்சத்தை படிங்க. அப்பத்தான் அமெரிக்காவில் இருந்து எனக்கு கமிஷன் வந்து சேரும்.Labels: பழம்-நீ 16 Comments