பைத்தியக்காரி !!

ரயிலில் அவளைப்பார்த்தேன்..
மூவர் இருக்கையை அவளே ஆக்கரமித்திருந்தாள்...
எதிர் இருக்கை காலியாகயிருக்க உட்கார எத்தனித்தேன்...
தோள் தொட்டு வேரிடம் நகர்த்தினார் என் கணவர்
என் மனம் என்னவோ அவளையே சுற்றியது...

அவள் ஒரு இருக்கையிலும்
அவளின் சொத்து மூட்டை இரண்டு இருக்கையையும் பிடித்திருந்தது
மூட்டையின் பின்னாலிருந்து ஒரு நாய்க்குட்டி எட்டிப்பார்த்தது
என்னைவிட அதிர்ஷ்டசாலி தான்,  அவளுக்கு தனிமையில்லை !!
இரண்டு ரயில் நிலையங்கள் கடந்திருக்கும்....


நாய்க்குட்டியை தூக்கி இடதுகை அக்கத்தில் இடுக்கினாள்
மூட்டையை தூக்கி தோளில் போட்டாள்
முக்காடிட்டிருந்த துணி மெதுவாக நழுவியது
ஒருப்பக்கத்து சட்டையில்லா மார்பகம் பளீச்'சென தெரிந்தது
வெறித்துப்பார்த்த கூட்டத்தில் நானும் இருந்தேன்...

நாய்க்குட்டியை பாதுகாப்பாய் அணைத்த அந்த கைகள்
அவளின் மார்பை மூட முற்படவில்லை
நாய்க்குட்டியின் கழுத்தில் கிழிக்கப்பட்ட சிகப்புத்துணியில் நீளமான "பெல்ட்"
அவளின் ஊன்றுகோலாக கையில் ஒரு குச்சி !!
இப்போது, ஓடும் ரயிலில் கதவோரம் நின்றாள் !

இறங்கப்போகிறாள் என்றே நினைத்தேன்
அவள் எழுந்த ரயில் நிலையத்திலிருந்து கூட்டம் அதிகரித்திருந்தது -
அவளை சுற்றியிருந்த பைத்தியங்களைப்பற்றி
அவளுக்கு தெரிந்துதான் இருந்தது -
கதவோரம்  உட்கார்ந்தாள் !

முக்காடை சரிசெய்து இறுக்கப்போர்த்திக்கொண்டாள்
அப்படியே சாய்ந்து உறங்கிப்போனாள்-
நாய்க்குட்டி அவள் மடியில் பாதுகாப்பாய் உறங்கியது -
நான் அவளையே நினைத்து விழித்திருக்கிறேன் -

அந்த நாய்க்குட்டி
அவள் மேல் வைத்த நம்பிக்கையைக்கூட
நாம் அவள் மீது வைக்கவில்லை !!

இங்கே
பைத்தியக்காரி யாரென
இன்னமும் நானறியேன் ?!!  

கெஜானனம் பூத கனாதி சேவிதம்...

பட்டை அடித்திருப்பவர்...  (நெல்லையப்பர் கோயில் யானை, திருநெல்வேலி)
************

 காசுக்கேட்க மட்டும் தும்பிக்கை தூக்கற, ஃபோட்டோ எடுக்கவும் தூக்கிக்காட்டுன்னு சொன்னேன்.. .. உடனே போஸ் கொடுத்துட்டார்...

(ஹிஹி.. பாகன், நான் சொன்னதைக்கேட்டு போஸ் கொடுக்கவைத்தார்.. )
*****************
 நாமம்?!???? போட்டவர்...
ஆனா கணபதிக்கும் நாமத்துக்கும் என்ன சம்பந்தம் ?! விட்டால், லிங்கத்திற்குக்கூட நாமம் போடுவார்கள் வைணவர்கள். -(நவ திருப்பதியில் ஒரு கோயிலில், திருநெல்வேலி)

(ராகவன் சார் மிஸ்ஸிங் யூ...)

********************



இவரு, வேல் போட்ட குட்டி குட்டி யானையார்... (திருச்செந்தூர்)
********************
 இவரு வேலும், பட்டையும் அடிச்ச பெரிய பெரிய யானையார். (திருச்செந்தூர்)

********************

 ரிலேக்ஸிங்... :)

(நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் யானை )  
******************
செந்தூரம் வைத்தவர்...
பெருமாள் கோவில்களில் யானை வைத்திருப்பது ......?! எதுக்குன்னு தெரியல..

 (ஆழ்வார்திருநகரி)



**************







இவங்க எல்லாருக்காகவும் "கெஜானனம் பூத கனாதி சேவிதம்..." & அப்பாவிற்கு....



ஓ...பட்டர்ஃப்ளை...பட்டர்ஃப்ளை

வீணையில் - ஓ... பட்டர்ஃப்ளை...


படம் :  மீரா
இசை : இளையராஜா

Thx to my Guru Madam Saranya 



Default  : ஸ, ரி2, க2, ப, த, நி2, ஸ்



மப மபம கமக ஸரி கமக மபம கம  - (2)

பநிபஸ்..... ரிகஸ்ரிரிஸ்  தநிநிஸ்ஸ்
நிததநி தபபத பமநிமப

மப மபம கமக ஸரி கமக மபம கம - (2)

நிநிநி பக ககபகநி நிநிநிக கரிகபபப
நிநிநி பக ககபகநி நிநிநிக கரிககரி

ஸரிக மபமபம மபத நிஸ்நிஸ்நி
தநிநிஸ்ஸ்  ரிகஸ்ரிரிஸ்  தநிநிஸ்ஸ்
நிததநி தபபத பமநிமப

மப மபம கமக ஸரி கமக மபம கம - (2)


Note : Red marked second string நி2,
          Blue marked மேல்ஸ்தாயி
.

ஏதோ சொல்கிறேன்...


மனச்சுமை-
என்னையும் உயிரையும்
கூட்டுக்குள்
இழுத்துக்கொள்கிறேன்-

பிழைக்கவுமில்லை
இறந்துவிடவுமில்லை
உள்ளே
உயிர் துடிக்கிறதே...........
********************




 பெளர்ணமி இரவு -

தூரத்தில்
தலைவிரித்து ஆடும்
தென்னங்கீற்றுகள்-

சீவி சடைப்போட்டு
சிங்காரிக்கத் தோன்றுகிறது -

 ********************




அரசின் இலவச சக்கரவண்டி
பக்கத்தில் அவன்
கால்கள் ஊனம்-

பூக்கட்டி விற்கலாமே ?!!

பிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்
நன்றாகத்தானிருந்தன !

********************




ஏரிக்கரையை
ஒட்டி
ஒற்றைப் பனைமரம்

பேச்சுத்துணையின்றி
தனியாக -

********************





ஒடுங்கிய கூன் கிழவிகள்-
ஒட்டிப்போன ஒற்றைநாடிக் கிழவன்கள்-
கைக்குச்சி பக்கத்தில் கிடக்கும் குருடன்கள்-

ஒர் நடுஇரவில்
வழிநெடுக
சாலையோரங்களில் உறங்கியவர்களின்
தொடர்...

வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை -
இவர்களின் குடும்பம்
எங்கோ
இறக்கமின்றி உறங்கிக்கிடக்கிறது !!


************************


நகைக்கடையின்
விற்பனைப்பெண்-
குனிந்து கும்பிட்டு
நகையை
நன்றியோடு தருகிறாள்-
 
ஊக்கத்தொகை
உறுதியானதை-
அவளின் புன்னகை சொல்லியது ! 

                                                                                      *****************************

இலக்கியவாதிகள்  பலருக்கு
"யோனி" மட்டுமே -
வாழ்க்கையாகிப் போனதை
நினைத்து
வெறுமையாக சிரிக்கிறேன் !!

கைப்பிடித்தவன் சொன்னான் -
"அது' வும் ஒருவகை போதை" !!

பெண் குழந்தையைப்
பெற்ற அப்பனுக்குத்தெரியும்
"யோனி" அவனின்
பெண்ணிற்கும் உண்டு !!! 

************************************

என்னால்
சீரணிக்க முடியாதவற்றை
பார்க்காமல்
படிக்காமல்
தெரிந்துக்கொள்ளாமல்
அறிவிலி' யாக
இருக்கவே
விரும்புகிறேன்....
****************************************

என்னை -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
நான் -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
இருக்கிறேன்

        - சுயநலத்தின் பிரதிபலிப்பு

இருவரிடமும்
ஒரே முகமாக மாறும் தினம்
என்னை நான் வெல்வேன் !!

************************************
பழையத்துணிகளை
சேமித்து வைக்கிறேன் !

படுக்கையிலேயே
எல்லாமும் செய்யும்
அம்மா'விற்கு
பழைய உடைகளை அணிவிக்கும்
போதெல்லாம் -

"அவள் குழந்தையாகிவிட்டாள்"
எனக்கு நானே
சமாதானம்
சொல்லிக்கொள்கிறேன்

************************************

திவ்யா'வும் மனதளவில்
நிராகரித்துவிட்ட
வேதனையில்
தன்னை கொன்றுக்கொண்ட
இளவரசன் -

அறியாதொருக்கூட்டம்
சாதிவெறியென
பிதற்றிக்கொண்டிருக்கிறது !

**************************************