பிரமோஷனுக்காக பெருசுகள் செய்யும் அநியாயங்கள்

இங்கே பெருசுகள் என்று சொல்லுபவர்களின் வயது வரம்பு 40-55 என்று வைத்துக்கொள்ளலாம். MBA வகுப்புகளுக்கு இந்த வயதுக்காரர்கள் அதிகம் வருகிறார்கள். நிச்சயமாக அவர்கள் வயதிற்கு அலுவலகத்தில் மேனேஜர் அல்லது உதவி மேனேஜர் பதவியில் இருப்பார்கள், அதற்கான அனுபவம் இருக்கும் என்றும் நம்பலாம். இவர்கள் அனைவருமே தங்களின் வேலை அனுபவங்களை கொண்டே தேர்வுகள் எழுதமுடியும், அப்படி ஒன்றும் மிக சிரமமான படிப்பும் அல்ல. அப்படி அனுபவ படிப்பு உதவவில்லை என்றால், சரியான அனுபவம் அவர்களுக்கு இல்லை மேலும், அலுவலகத்தில் “ஈ” ஓட்டுகிறார்கள் அல்லது அடுத்தவரின் உழைப்பில் சம்பாதித்து உடம்பையும் வளர்க்கிறார்கள் என்று தெளிவாக முடிவு செய்யலாம்..

பார்த்தவரை, அவர்கள் தேர்வுகளில் பக்கம் பக்கமாக பிட் எழுதிவந்து (இப்படி எழுதும் நேரம், படித்து விடலாம்) காப்பி அடிப்பதை பார்த்தால் மிகவும் வெட்கக்கேடாக உள்ளது. அவர்கள் வயதுக்கும் வகிக்கும் பதவிக்கும் மிக கேவலமான விஷயம் மட்டும் அல்ல அவர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பார்கள், வளர்த்து இருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படியே அவர்கள் நல்ல பிள்ளைகளை வளர்த்து இருந்தாலும், பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால், எத்தனை அசிங்கம். மதிப்பார்களா?

பிட் அடித்து அப்படி பாசாகி என்ன பயன்?? “பிரமோஷன்’ அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். அப்படி கிடைக்கும் பதவி உயர்வால் ஒரு குறிப்பிட்ட பிரிவில் அதாவது Finance, HR, Systems, Marketing மேனேஜராக ஆகிறார் என வைத்து கொள்வோம். அவருடைய வேலை தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலை தரத்தினால் அந்த அலுவலகமும், அவர் சார்ந்த வேலை மற்றும் அவரின் கீழ் வேலை செய்பவர்களுன் தரமும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதில் இளைஞர்களையும் இந்த பெருசுகள் முன்னுக்கு வர விடுவதில்லல. அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

பிட் அடிப்பது மட்டும் இல்லை, assignment , project போன்றவைகளும் காசு கொடுத்து முடித்து விடுகிறார்கள். இதனை பார்த்து சிறுசுகளும், நாமும் காசு கொடுத்து முடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். நல்ல வழிக்காட்டிகள் இவர்கள். இந்த வயதில் இவர்கள் படிக்கவில்லை என்று யார் அழுதார்கள், இப்படிப்பட்டவர்களால், அந்த படிப்பிற்கே தரமில்லாமல் போகிறது. விழுந்து விழுந்து படித்து சென்று எழுதியவர்களை விட, பிட் அடித்து அதிக மதிப்பெண் எடுக்கும் இப்படி பட்டவர்கள் அதிகமே. உழைப்பை விட குறுக்கு வழிதான் சிறந்தது என உழைப்பவர்களும் நினைத்துவிட்டால்.....?? படிப்பிற்கும், திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பில்லாமால் போகிறது என்பது மட்டும் உண்மை.

அணில் குட்டி அனிதா:- அம்மணி பொறாமை பட வேண்டியது தான் அதுக்குன்னு இப்படியா.. ஒன்னும் இல்லீங்க.. அம்மணி கூட exam எழுதினவரு நிறைய மார்க் எடுத்துடாருங்க.. அதான் இந்த புலம்பல்ஸ்..அம்மணிக்கு எப்பவுமே அவங்க தான் அறிவாளி மத்தவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லைன்னு ஒரு நெனப்பு அதுல எழுதறது தான் எல்லாம்.. exam க்கு போனோமா.. நம்ம பேப்பர பாத்து எழுதினோமான்னு இல்லாம எதுக்கு இப்படி அடுத்தவங்கல பாத்து காதுல போக விடனும்.. நாட்டுல ஏதோ நாலு பேரு நல்லா இருக்கட்டும், நாலு காசு சம்பாதிக்கட்டும் ன்னு ஒரு நல்ல மனசு இருக்கா பாருங்க...... பொறாமை ..விடுங்க.. அம்மணி..நீதி, நேர்மை, நியாயம் ன்னு பேசி நம்ம பொழப்புல மண்ண தூவுவாங்க........... நாட்டுல இப்படி சிலதுங்க இருக்கறதனால தான் நாடு உருப்பட மாட்டேங்குது.. என்னத்த சொல்ல.. தாத்ஸ் நீங்க சொல்லுங்க..... கவிதா புலம்பல்ஸ்க்கு உங்க பீட்டர் எவ்ளோ தேவலாம்............

பீட்டர் தாத்ஸ் : Courage is a special kind of knowledge; the knowledge of how to fear what ought to be feared, and how not to fear what ought not to be feared..

கோடான கோடி ரசிகர்களுக்கு - அணில் குட்டியின் அறிவுப்பு

(பாருங்க..தலைப்ப பார்த்து யாரும் உணர்ச்சி வச படவோ.. பொறாமை படவோ க்கூடாது.. ஒரு அணில் குட்டிக்கு இவ்வளவு ரசிகர்களான்னு.. அதுக்கு எல்லாம் ஒரு இது வேணும் அந்த இது உங்களுக்கு இல்லைன்னு.. அமைதியா அழுகைய நிறுத்திட்டு.. மேட்டர மட்டும் படிங்க.... சரியா.)

ஹாய்ய்ய்ய்ய்ய்ய் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எல்லாரும் எப்படி இருக்கீங்க..?!! நான் நல்லா இருக்கேன்.. அம்மணி கவிதா எப்பவும் போல நான் சொல்ற பேச்ச கேட்காம ஓவர் சீன் போட்டு கிட்டு இருக்காங்க.....அவங்கள திருத்த முடியாதுங்க.. எப்படியாவது போகட்டும்னு.. உங்க அன்புக்காக நானே கவிதாவின் எல்லா தடைகளையும் தாண்டி குதிச்சி பெரிய ரிஸ்க் எடுத்து மெஸேஜ் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மூச் அம்மணிக்கிட்ட யாரும் போட்டு குடுத்துடாதீங்கப்பா.. அம்மணி ஆட்டம் தாங்காது.. சந்தரமுகி கெட்டாங்க... அப்புறம் லக லக லக ன்னு சொல்ல தலைவர என்னால கூப்பிட முடியாது..

சரி மேட்டருக்கு வரேன்.... என்னோட கோடான கோடி ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க முடியலைங்கோ..... எப்ப திரும்பு வர அனிதா ன்னு போட்டு நச்சரிக்கறாங்க.. தபாலுக்கு பதில் போட்டு கை ஒடஞ்சி போச்சுங்க...... எவிடன்ஸ் க்கூட இருக்கு ப்ளீஸ் படத்தை பாருங்க.. (சரி....சரி...அடங்கு அனித்தூதூஊ..யாரவது இன்னொரு கையையும் ஒடச்சிட போறாங்க..) ..

Photobucket - Video and Image Hosting

(ச்சீனு அண்ணே கை ஒடஞ்ச என்னை ஓடியாந்து படம் புடிச்சீங்களே.. உங்க பாசம் யாருக்கும் வராதுங்க..நன்றிங்கோ........சரி..தனியா ஒரு 5 star வாங்கி தந்து உங்கல கவனிக்கறேன்..)

அம்மணி க்கிட்ட எழுத வர சொல்லி..கேட்டு கேட்டு பார்த்தேன்... ம்ம்ம்..எங்க.. அழுத்தமுங்க.. இதைவிட வேற வேல நிறைய இருக்குன்னு ஓவர் சீன்.. அம்மணி சீன் பத்தி புதுசா உங்க யாருக்கும் நான் சொல்ல வேணாம்.. சரி.....

பிளாக்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க.. ஒரு அப்டேடும் இல்ல... யாருக்கு கல்யாணம் நடந்தது.. யாரு..மூச்சு விட மறந்துட்டாங்க.. எதுவா இருந்தாலும் நமக்கு யாராவது வந்து அப்டேட் பண்ணிட்டு போங்க...

நம்ம தல(கைப்பூ) எப்ப பார்த்தாலும் என்னைய போன் போட்டு விசாரிக்காரு.. அவருக்கு ரொம்ப டாக்ஸ் ங்க.. பாசமுள்ள மனுஷங்க...ம்ம்ம் நாட்டுல இருக்கத்தான் இருக்காங்க.. அம்மணிக்கு எங்க புரியுது..

அப்புறம் அண்ணன் ச்சீ’ ’னு கவிதா அம்மணி எழுத திருப்பி வந்தா கல்லால அடிப்பேன்னு சபதம் போட்டு இருக்காருங்க.....,அண்ணே..என்னையும் உங்க க்கூட சேர்த்துக்கோங்க.. நான் நல்லா பெரிய கல்லா பொறுக்கி தரேன்.. 2 பேருமா சேர்ந்து அம்மணிய அடிப்போம்..... நான் எப்பவுமே கவிதா’ க்கு எதிர்கட்சி தானுங்கோ.. !! நம்புங்கோ...

ஆமா நம்ம பாலா அண்ணனுக்கு சிக்குன் “(கு)கன்னி ’ ஜீரம் வந்து ஒரே அடியா படுத்துட்டாருன்னு கேள்விப்பட்டு மாலையெல்லாம் வாங்கி ரெடியா வச்சா..... என்னத்த சொல்ல.. மாலைக்கு வாங்கின பணம் தான் வேஸ்ட் ஆச்சி.. அம்மணிவேற ஒரு ஆட்டம் போட்டாங்க... என்ன பாலாண்ணே இப்படி.. கால வாரீட்டீங்க..

அப்புறம் ஜொள்ஸ் அண்ணன்.. அணிலு நீ இல்லாம விடியோ கேமரா க்கு வேல இல்லாம இருக்குன்னு... ஒரே புலம்பலுங்கோ........

சரிங்கோ நம்ம புலம்பல்ஸ் ஒரு பாச புலம்பல்ஸ்ங்கோ........... கவிதா எழத வரவரைக்கும்.. இப்படி அப்ப அப்ப வந்து லுக்கு விட்டுட்டு போறேனுங்க.. உங்க எல்லார் லவுஸ்’ க்கும் டாங்ஸ்ங்கோ.. ...நான் இப்ப ஜீட்’ங்கோ..

ஓய்..தாத்தா.. பீட்டர அவத்துவுடு..

பீட்டர் தாத்தா :- Goals must be under our control. We need targets and directions upon which to focus our efforts.


Blog & தமிழ்மணம் விட்டு போகிறோம் - கவிதா & அணில்குட்டி

சொந்த காரணமாக நானும் அணில் குட்டியும் எழுதுவதை நிறுத்திவிட முடிவெடுத்துள்ளோம்.

இது வரை எங்களின் எழுத்தை மிக பொருமையுடன் பார்வையிட்டவர்கள் அனைவருக்கும் எங்களுது இதயபூர்வமான நன்றி.யை தெரிவித்துகொள்கிறோம்.

எங்களின் எழுத்து மூலமாக யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மறந்தும் மன்னித்து விடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

நன்றி..

அணில் குட்டி அனிதா :- இங்க பாருடா.. இந்த அம்மணி பண்ற அநியாயத்த......... இவங்க யார் கூடையோ சண்ட போட்டது வேணுமான சொந்த பிரச்சனையா இருக்கலாம்.. இவங்க எழுதறத நிறுத்தறத விட்டுப்புட்டு என்னைய ஒரு வார்த்தக்கூட கேட்காம..என்னையும் கூட சேர்த்துக்கிட்டாங்க..இது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?.. ஆரம்பத்திலிருந்தே..என் மேல ஒரு பொறாம இவங்களுக்கு, எங்க இவங்கள விட பெரிய எழுத்தாளரா ஆயிடுவேன்னு பயந்து.. என்னையும் எழுத விடாம பண்றாங்க.. ம்ம்.. நம்ம தல வேற என்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டு போறேன்னு சொன்னாங்களே.. அப்பவே அவங்க கிட்ட போய் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம்.. இப்ப பாருங்க சோத்துக்கு சிங்கி அடிக்கற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க.. ம்ம்..இப்படி நம்மல புலம்ப விட்டுடாங்களே..சே..சே.. நிறுத்தறவங்க பேசாம நிறுத்த வேண்டியது தானே.. பெருசா மெஸேஜ் வேற.. என்னத்த சொல்ல.. ம்ம்.. இந்த அம்மணி எல்லாத்திலேயும் கொஞ்சம் ஓவர் தான்...

என்னவோங்க.. அம்மணி எப்படியிருந்தாலும் ரொம்ப பாசமா அவங்க சாக அடிச்ச அணிலா நினைச்சு நம்மல பார்த்துக்கிட்டாங்க...அதனால கொஞ்சநாள் சோத்துக்கு சிங்கி அடிச்சாலும், அவங்கள கொஞ்சம் கூல் பண்ணி திருப்பி வேற வேல ஏதாவது குடுப்பாங்களான்னு பார்க்கலாம்.....

இது வரைக்கும், நீங்களும் நானும் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்துட்டோம்..பிரியத்தான் கஷ்டமா இருக்கு... என்ன செய்ய ம்ம்..ஒரு ஓரமா உக்காந்து கொஞ்சம் அழுதுக்கறேங்க..................சரி.. வரேங்க.. எனக்கு ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ.............அழுதுக்கிட்டே நம்ம பீட்டர் தாத்தா கடைசியா என்ன சொல்றாருன்னு பார்ப்போம்..

பீட்டர் தாத்தா :- Be so strong that nothing can disturb your peace of mind.

2. Blog நண்பர்கள் நட்பு பற்றி..

Blog நண்பர்கள் - பீட்டர் தாத்தா இனிமே தத்துவத்துக்கு எங்கேயும் போகவேண்டாம் போலிருக்கிறது.. பாருங்க..நம்ம நண்பர்கள் அத்தனை பேரும் எப்படி அற்புதமா நட்பை பற்றி சொல்லியிருக்காங்க......நண்பர்கள் அத்தனை பேரின் எழுதும் திறமையை பார்த்து பெருமை அடைகிறேன்.. என் வார்த்தைக்கு மதிப்பளித்து எழுதி கொடுத்த கார்த்திக், சந்தோஷ், ரவி, பிரியன், சிவகுமார்ஜி, கைப்புள்ள மற்றும் சிவாவிற்கு என் மனமார்ந்த நன்றி.......

கார்த்திக்ஜெயந்த்:-

"A friend is a beautiful gift you give your self"

It is by chance we met, by choice we became friends... Friendship is a strange thing....we find ourselves telling each other the deepest details of our lives....But what is a friend?
A confidant?
A lover?
A fellow email junkie?
A shoulder to cry on?
an ear to listen?
a heart to feel?...

A friend is all these things...and more. No matter where we met, I call you friend. A word so small...yet so large in feeling...a word filled with deep emotion.

சந்தோஷ்

விதை இல்லை
செடி இல்லை
காய் இல்லை
பழம் இல்லை

ஆனாலும் பூக்குது
இந்தப்பூ!
அட அதுதாங்க நட்பு

செந்தழல் ரவி

எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...

ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று..

பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்..

பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்...

ஆனால்..

எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...

பிரியன்


பாய்மரக்கப்பல் வாழ்க்கையில் நம்மை அன்பால் செலுத்தும் துடுப்பு தாய் , சரியான திசையினில் செலுத்துவது தந்தை உறவு.நம்மை தாங்கி நிற்கும் மரம் இறைவன்.இவர்கள் கூட கைவிட்டுவிடும் ஒரு நிலையில் , கடலில் தத்தளிக்கும் நிலையில் கையில் கிடைக்குமே ஒரு மரக்கட்டை அது நட்பு.

பெண் நட்பை பொறுத்தவரை: எந்த நண்பி கடைசி வரை காதலியாகாமல் இருக்கிறாளோ அவள் நண்பி.

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
வந்து நீயே
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
பறித்து நான்
தரும் வரை காத்திருந்தால்
நீ காதலி!

மா.சிவகுமார்


நட்பு என்பது என்னைப் பொறுத்த வரை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், உண்மையான நட்பு ஒன்றை பல கட்டங்களில் பெறும் வாய்ப்புகள் கிடைத்தன.

பள்ளியில் கிடைத்த நண்பன், அவன் வேறு பள்ளிக்குப் போய் விட்ட பிறகு ஏற்பட்ட வெறுமை, பல ஆண்டுகளாக நட்புகள் தவிர்த்து வாழ்ந்த பாலைவன நாட்கள், கல்லூரியில் கிடைத்த ஒரு நட்பு, அப்புறம் வேலையில் சேர்ந்த பிறகு மீண்டும் வெறுமை. பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகச் சிறந்த நண்பனைக் கண்டு கொண்டு இன்று வரை, தொலைவாகப் போய் விட்டாலும், இளைப்பாறும் நிழலாக இருக்கும் சுகம்.

ஆமாம், என்னைப் பொறுத்த வரை நட்பு என்பது இளைப்பாறும் இடம். பாசாங்குகளை எல்லாம் துடைத்துப் போட்டு விட்டு முகமூடிகளை எல்லாம் கழற்றி விட்டு நாம் நாமாக இருக்கும் இடம் நட்பு. எந்த விதக் கேள்விகளும் இல்லாமல் நிபந்தனையற்ற அன்பு நட்பில் ஒன்றுதான் கிடைக்கிறது. இன்றைக்கும் என்னுடைய நண்பனுக்குத் தொலை பேசி என்ன வேண்டுமானாலும் பேசி மனதைக் கொட்டி விடும் சுவாதீனம் இருக்கிறது. அதுதான் நட்பின் கொடை. பல மாதங்கள் கழிந்து சந்தித்த பிறகு பிரியவே இல்லாதது போல பேச்சு தொடர்வது இந்த உறவில் மட்டும் நடக்கும் அற்புதம்.

இதை(நட்பை) விரிவு படுத்தி உலகெங்கும் இத்தகைய உறவாக மாற்றுவது சாத்தியம் என்று தோன்றுகிறது.

பெயர் வெளியிட விரும்பாத நண்பர்

எல்லா எல்லைகளையும் கடந்தது நட்பு என்கிற காலம் போய்..
நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற காலத்தில் வாழ்கிறோம...கடன் நட்பை முறிக்கும் என்கிற வாசகம் சொல்லும் நட்பின் எல்லையை...நட்பு என்பது முள் செடியில் இருக்கும் ரோஜா, கண்னில் இருக்கும் கருவிழி என்பதெல்லாம--நம்முள் இருக்கும் யாதர்த்தத்திற்கு நாம் போட்டுக்கொள்ளும் முகமூடிகளே...

Friendship = Friendship

சந்தோஷத்தை தரும் பொய்யை விட உண்மை தரும் வலி மிகவும் இன்பமானது யாதர்த்தமானது....எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்குமான பதில்கள்தான் வெற்றிகளும் தோல்விகளும்........இதுதான் வாழ்க்கை என்று எடுத்துக்கொள்வதை விட இதுவும் வாழ்க்கை என்பது யாதர்த்தம்...

இங்கு காதலியின் தோல்வியை காதலின் தோல்வியாக சொல்லும் இளைஞர்கள் ஏராளம்....

தன் இயலாமையை சமுதாயத்தின் இயலாமையாக பார்க்கும் மக்கள் ஏராளம்..
ஏன் இந்த முரண்பாடு??? யதார்த்த வாழ்க்கைக்கு முரணாக வளர்க்கப்பட்டதன்
விளைவு....நடப்பதை யார் அறிவார் என்று உளறிக்கொண்டிருப்பதை விட நடந்ததையாவது அறியும் குணம் வளரவேண்டும். குடித்தால் மட்டும்தான் போதையா... படித்தாலும் போதைதான் கவிதைகளை..

கைப்புள்ள

நட்பைப் பற்றி எனை எழுதத் தூண்டினீர்! நான் கவிஞனும் அல்லன் எழுத்தாளனும் அல்லன். ஆயின் இரு கைகள் இல்லாத ஒருவன் தான் இடுப்பில் அணிந்துள்ள உடை விலகி கீழே விழ இருக்கும் அக்கண நேரம், அவனுடைய மானத்தினைக் காக்க தக்க நேரத்தில் (கவனத்தில் கொள்க: தக்க நேரத்தில்) உதவ ஓடோடி வரும் அவ்வுறவே நட்பு என்பதனை குறள் வழி நானறிந்ததைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு"


நாகை சிவா

தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது. நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை) நேற்றயே பொழுது நல்ல நினைவுகளோடு நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு
நட்பு: நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.

"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்"

இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள். ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம். ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.

நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள். ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி..... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்..... இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை... காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன். என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.

அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்


குறிப்பு:- அணில் குட்டிக்கு மனசி சரியில்லையாம், அதனால பேச வராம் "உம்னு" இருக்கு..சமாதானம் செய்து நாளைக்கு கூட்டிட்டு வரேன், இன்னைக்கு பீட்டர் தாத்தா வரலை..நம்ம நண்பர்களே தத்துவத்தை உதிர்த்துவிட்டார்களே....

Blog நண்பர்கள் நட்பு பற்றி..

Blog நண்பர்கள் - இவர்களை பற்றியும், இவர்களின் பேச்சு திறமை, எழுத்து திறமை என சொல்லி மாளாது.. எனக்கு இவ்வளவு திறமையானவர்களை ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக கூட இருக்கும். அதிர்ஷ்டம் என்று சொல்லுவவர்களே, அது இருப்பதால் தான் இப்படி ப்பட்ட திறமை வாய்ந்த நண்பர்கள் எனக்கு தினந்தோரும் கிடைத்து கொண்டிருக்கிறார்கள் எனலாம். நட்பு பற்றி அவர்களிடம் கேட்டறியும் ஆர்வத்தில், அவர்களை நச்சரித்து எழுதி கொடுக்க சொல்லியிருந்தேன். என் நச்சரிப்பு தாங்க முடியாமல், இதோ நட்பை பற்றி நம் நண்பர்கள் சொல்லியதாவது.....

எஸ்.பாலபாரதி

அம்மா- தொப்புள்கொடி கொடுக்கும் உறவு.
அப்பா- உயிர் கொடுத்த உறவு.
உடன் பிறப்புகள்- ஒரே ரத்தம் என்பதால் வரும் உறவு.
மனைவி- காமத்தின் அடித்தளம் அமைந்த உறவு.
நட்பு--- எங்கோ பிறந்து, எங்கோவளர்ந்து, எந்த ரத்த உறவுமில்லாமல்.. அன்பு செலுத்துகிற உறவு.
சுருக்கமாகச் சொன்னால்....
எங்கொல்லாம் ஒரு மனம் காயப்படும் போது..
அதற்கு ஆதரவாய் இன்னொரு மனம் குரலெழுப்புகிறதோ..
அங்கே இருக்கிறது நட்பு.


பொன்ஸ்

நண்பர்கள் என்பவர்கள் ஆற்றின் கரை மாதிரி. நம் கருத்துகளில், செயல்களில், அதிகம் ஊடுறுவக் கூடாது. அந்தக் கருத்துகளைச் செதுக்குவதற்கு உதவலாம் ஆனால், கட்டாயப் படுத்தும் அன்போ, நட்போ நிச்சயம் போகப் போகக் கசப்பைத் தரும்.

ஜொள்ஸ்

நட்பு
எனக்கு மிகவும் பிடித்த பூ !
---------------------------------------
உன்னை என்
நண்பர்களுக்கும்
என்னை உன்
நண்பர்களுக்கும்
பிடிக்காவிட்டாலும்
நம்மை பிடித்துவிட்டது
நட்புக்கு!

------------------------------------------
உன்னைக் கொடுத்தால்தான்
என்னைக் கொடுப்பேன்
என்ற பேராசையெல்லாம்
காதலைப்போல்
நட்பிற்கு இல்லை !


சீனு

இந்த உலகில் உள்ள எந்த ஒரு உறவும், ஏதோ ஒரு எதிர்ப்பார்புடனோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ உண்டாவது.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் இருப்பது திருமணம்
தாய் பிள்ளையை நேசிப்பது, தன் பிள்ளை என்பதால்
தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் இருப்பது கட்சி என்னும் பந்தம்.

ஆனால், எதையும் எதிர்ப்பார்க்காமல் வெறும் நேசத்தை மட்டுமே கொண்டுள்ளது நட்பு மட்டுமே. காரணம், நண்பர்கள் பெரும்பாலும் ஒரே வயது உள்ளவர்கள். அதனால் ஒரே wavelength இருக்கும். இதுவே,மிக முக்கியமான காரணம், அங்கே எதிர்காலத்தினைப் பற்றின பயம் சுத்தமாக இருக்காது. அதனால், கவலைகள் இல்லை. Hostel Life வாழ்ந்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

தேவ்

Friendship is something which nurtures no expectations...It allows you to be yourself... Its the most comfortable feeling mankind has been ever blessed with. Friends are reflections of oneself...Friendship is nothing but just taking a look at yourself in a mirror

தேவ் பதிவிலிருந்து எடுத்த அவரின் சில வரிகள்:-

மேடைப்போட்டு அறிவிக்கத் தேவையில்லை
கடமையென்னும் கயிற்றில் கட்டிவைக்க அவசியம் இல்லை
இதயத்தின் ஒரு ஒரம் போதும் நினைத்தவுடன் பூப்பதற்குஅதற்கு நட்பு என்று பெயர்..

அணில் குட்டி அனிதா :-

பாலா அண்ணே சும்மா கலக்கிட்டீங்க போங்க.., எப்படீண்ணே உங்களுக்கு இப்படியெல்லாம் எழுத வருது..அம்மணிய பாருங்க..எதுக்கும் லாயிக்கில்ல..

பொன்ஸ் அக்கா, என்னக்கா இவ்வளவு அற்புதமா friends நொய் நொய் பண்ணக்கூடாதுன்னு சொல்லீட்டீங்க.. முதல்ல இந்த அம்மணி’க்கு சொல்லுங்க.. எப்படி எல்லாரையும் டார்ச்சர் பண்ணி எழுதி வாங்கி இருக்காங்க பாருங்க.. திருத்தமுடியாது இவங்கள.. ,ம்ம்..

ஜொள்ஸ் அண்ணே, ஜொள்ளுமட்டுந்தேன் தெரியும்னு நெனச்சேன்..கவிதையில நட்பை ஸ்பூன் போட்டு கலக்கியிருக்கீங்க... சூப்பரண்ணே..

சீனு அண்ணே வாங்க..ஏதோ கத/லெக்சர் சொல்ல ஆரம்பிச்சி, ஒருவழியா.. எதிர்பார்ப்பு இல்லாதது நட்பு’ ஒரு மேட்டர ஸ்டாராங்கா சொல்லிடீங்க.. உங்களுக்கு எதிர்பார்க்காம ஒரு நாள் கவிதா ஒரு நல்ல அதிர்ச்சிய குடுக்கப்போறதா சொன்னாங்க..(பெரிசா ஒன்னுமில்ல, அவங்க உங்கள பாக்க போறாங்களாம்.. அவங்கள பாத்துட்டு ஜன்னி, கின்னி வந்துர போது பாத்து..உஷாரா இருங்க)

தேவ் அண்ணாச்சி நீங்க எப்பவும் நம்ம கட்சி, அம்மணிய அலக்கழிச்சி எழுதி குடுத்தீங்க போல இருக்கு, உங்கள மாதிரி 2 பேரு இருந்தா போதுமே..கவிதா ஆட்டம் எல்லாம் தானா அடங்கிபோய்டும் அடங்கி.. ம்ம்..அலய விட்டு சொன்னாலும் ‘நட்பு உன்னின் reflection” சொல்லி அசத்திட்டீங்க..

சரி மத்தவங்க எல்லாம் அடுத்த பதிவுல... so......you are in queue...please wait ..(இத எல்லாரும் தேஞ்சிப்போன ரெக்கார்டர் மாதிரி திருப்பி திருப்பி சொல்லுங்க பார்ப்போம் .. அதுக்குள்ள அம்மணி அடுத்த பதிவு போட்டுருவாங்க)


பீட்டர் தாத்ஸ்:

A friend is one who knows who you are, understands where you have been, accepts what you become, and still gently invites you to grow.
A friend is someone who thinks you're a good egg even though you're slightly cracked.
A friend is someone who knows the song in your heart, and can sing it back to you when you have forgotten the words.

மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்

திருமணம் நிச்சயம் செய்வதற்கு முன் மாப்பிள்ளை வீட்டாரின் பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று நன்றாக தெரிந்து கொண்டு திருமண ஏற்பாடுகளை செய்வது நல்லது. பொதுவாக குல தெய்வம் என்று ஒன்று இருக்கும். இது ஒவ்வொரு வீட்டுக்கும் மாறுபடும். அதனால் ஏற்படும் பழக்கவழக்கங்களும் மாறுபடும். பெண்கள் (என்னையும் சேர்த்துதான்) இயல்பாகவே புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை தன்னுடையதாக்கி கொண்டு தன் வீடு, தன் மக்கள், தன் கடவுள் என்று மாறிவிடுகிறார்கள். கடவுள் என்று வரும்போது, சைவம்-சிவன்(பட்டை), வைணவம்-விஷ்னு(நாமம்) என்று இரண்டும் எப்போதும் திருமணங்களில் கலந்து விடுவதுண்டு. எங்களுது வீட்டில் இப்படி நிறைய திருமணங்கள் நடந்திருக்கிறது. என்னுடைய அத்தை-சைவம் மாமா-வைணவம் இதனால் பழக்கவழக்கங்களில் நிறைய பிரச்சனைகள். அத்தை, மாமா வீட்டிலுள்ளவாறு தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் மாமா சிவன் கோயிலுக்கு போகக்கூடாது என்பார். அவருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் பெயர் உட்பட எதிலும் சிவன் (கடவுள்) வந்துவிடக்கூடாது.

சரி, மாமியாரை மொட்டை அடித்த மருமகள் கதைக்கு வருவோம். திருமணம் முடிந்து, குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது, குழந்தையின் அம்மாவும் மொட்டை அடித்து கொள்ளவேண்டும் என்பது தான் அந்த மாப்பிள்ளை வீட்டு வழக்கம். இதை திருமணத்திற்கு முன்பு அவர்கள் பெண் வீட்டாரிடம் சொல்லவில்லை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது தான் இந்த மொட்டை விஷயம் அந்த பென்ணிற்கு தெரிய வந்தது. இந்த பெண்ணிற்கோ மிகவும் சிறிய வயது.. யாருமே தலை வாரிவிட பயப்படும் (இறுக்கி பிடித்து சீவி விட முடியாது) அளவிற்கு கருகருவென்று மிகவும் அடர்த்தியான கூந்தல்.. இந்த பெண்ணிற்கோ அந்த வயதில் தன் தலை முடியை இழக்க மனமில்லை, மொட்டை அடித்து கொள்ள மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது..

என்ன செய்வது, மாமியார் வீட்டில் இதற்கு முன் திருமணம் ஆன அத்தனை பெண்களும் மொட்டை அடித்து இருந்தனர், தப்பிக்க வழியில்லை. தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பழக்கவழக்கத்தை எப்படி இந்த சின்ன பெண்ணால் தடுத்து மாற்றமுடியும் பெண்ணின் கணவரும், தன் வீட்டு வழக்கப்படிதான் எல்லாம் செய்ய நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மாமியாரை எதிர்த்து கொள்ளவும் இஷ்டமில்லை. என்னசெய்வது என்ற ரொம்ப நாள் யோசித்த அந்த பெண், குழந்தைக்கு மொட்டை அடிப்பதற்கு முன், அதே குல தெய்வத்திடம், எனக்கு பதிலாக, என் மாமியார் மொட்டை அடித்து கொள்வார், நான் உனக்கு பூ முடி கொடுக்கிறேன் என வேண்டிக்கொண்டு, அதை நாசுக்காக மாமியாரிடமும் சொல்லிவிட்டாள். மாமியாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தெய்வகுத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து மொட்டை அடித்து கொண்டார்கள். இந்த பெண் பூ முடி மட்டும் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டாள். வீட்டில் உள்ள அனைவருமே என்ன செய்வது என்று தெரியாமல், பிரச்சனையும் வளர்த்த முடியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க..நான் தான்...என் மாமியாருக்கு, நான் நல்லபடியாக மொட்டையடித்து வைத்தேன். எனக்கு நம்பிக்கை இல்லாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று, வேற வழியே தெரியாமல் மாமியாருக்கு மொட்டை அடிக்க வேண்டியாதாயிற்று..

அணில் குட்டி அணிதா:- கேளுங்கம்மா..கேளுங்கய்யா இந்த அக்கறமத்த.. அம்மணி எவ்வளோ மோசமான ஆள்ன்னு இப்பவாவது புரிஞ்சிகோங்க.. .மாமியாருக்கே மொட்டை போட்டுட்டாங்களே.. அப்ப நாம எல்லாம் என்ன கதி..? அம்மணிக்கு போன பதிவுல சப்போர்ட் பண்ண அத்தன பேரும் தயவுசெய்து அத வாபஸ் வாங்குங்க.. இல்லைனா..மாமியார் மொட்டை உங்களுக்குதான்..... சொல்லிட்டேன்.. ம்ம் இனிமே நானுமே உஷாரா வாலை சுருட்டி வச்சிக்கணும், ராமருக்கு வேண்டிக்கிட்டேன்னு, என் வாலை கட்பண்ணி பிரஷ் பண்ணாலும் பண்ணிடுவாங்க......... (குட்டி குட்டி பெயிண்டிங் பிரஷ் எல்லாம் நம்ம வால்ல பண்றதாதான் கேள்வி, உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?)

பீட்டர் தாத்தா :- Many receive advice, only the wise profit from it.

VIP யின் கார்களுக்கு வாலாட்டும் போலிஸ்காரர்கள்...

அரசாங்க உத்தியோகத்தில், பொது மக்களுக்கு சேவை செய்யும் பணியில் இருக்கும் போலிஸ்காரர்கள், உயர் அதிகாரிகளின் காருகளுக்கு வாலாட்டுவது மட்டுமல்லாமல் பொதுமக்களை எத்தனை இடைஞ்சலுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்குகிறார்கள் என்பதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இவர்கள், அவர்களுக்கு வாலாட்டவில்லை என்றால் என்னவாகும் என்பது வேறு கதை. அதற்கு தனி பதிவு தான் போடவேண்டும்.

சென்னையில் VIP கள் வருகிறார்கள் என்றால் போதும், (ஆட்சியில் இருக்கும் போது அம்மா வருகிறார்கள் என்றால் 1 மணி நேரம், ஏன் சில சமயம் 2 , 3 மணி நேரம் கூட நிற்கவேண்டி இருந்திருக்கிறது) அரை மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தை சீர் செய்கிறோம் என்று சிக்னலுக்கு சிக்னல் வாகனங்களை நிற்க வைத்து விடுகிறார்கள். VIP களின் கார்கள் சென்றவுடன், போக்குவரத்தை சரிசெய்து அனுப்பவும் மாட்டார்கள், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என நேடு நேரம் வேலை செய்த கலைப்பில் ?!! போக்குவரத்து காவலர்கள் ரோடோர மரம், இல்லை டீ கடை என்று ஓரம் கட்டி ஓய்வெடுக்க சென்றுவிடுகிறார்கள். அதாவது, அவர்கள் நிற்கும் இடத்தை VIP களின் கார்கள் கடந்த மறுவினாடியே இவர்களை காணாமல் போய்விடுவார்கள்.

இங்கே நமக்கு அவசரம், அடித்தவர்களை பற்றி கவலை படாமல், போக்கவரத்து விதிகளையும் மதிக்காமல் நான் முந்தி நீ முந்தி என்று நடுநடுவே புகுந்து, யாருமே சரியாக போகமுடியாமல் நெரிசல் அதிகமாகி அவதிபட்டு, வாகனத்துடன் வாகனங்கள் மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு வண்டியை ஓரம் கட்டிவிட்டி, சில பேர் சண்டையில் மிக வேகமாக இறங்கிவிடுவதுண்டு. அடிதடிக்கூட சில சமயம் நடக்கும். இப்படி நடக்கும் பல சமயங்களில், போலிஸ்காரர் பக்கத்தில் இருக்கிறாரா, இதை சரிசெய்ய மாட்டாரா என நான் தேடுவதுண்டு. ஒவ்வொரு முறையும் அவர்கள் பக்கத்தில் எங்காவது மரநிழலில் நின்று கொண்டு இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து ரசித்தவாறு இருப்பார்களே அன்றி, வந்து தன் பணியை செய்ய மாட்டார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் இது போன்ற மேல் அதிகாரிகள், VIP கள், அமைச்சர்கள் கார்களுக்கு வாலாட்ட மட்டுமே என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு சமுதாய நல்லெண்ணம் உடைய சிலர், தானாக முன்வந்து போக்குவரத்தை சரிசெய்து அனுப்புவார்கள். ஆனால் நாம் இருக்கிறோமே, அவர்களையும் திட்டுவோம், இவர் யாராடா நடுவில் நம்மை நிறுத்தி நிறுத்தி அனுப்பிகிறார், வேலைசெய்யும் போலிஸ்காரரே நம் சவுகரியத்துக்கு போகட்டும் என விட்டுவிட்டார், இவர் தான் நாட்டை சரி செய்பவர் போல் முன்னுக்கு வந்துவிட்டார் என வசவுபாடுவோம். நாமும் திருந்தமாட்டோம், திருந்தியவர்களையும், திருத்துபவர்களையும் விடமாட்டோம்.

இன்று காலை அடையார் பார்க்’ கிலிருந்து வெளியில் வரும் ஏதோ ஒரு அதிகாரியின் காருக்கு வாலாட்ட மட்டும், அங்கே 3 காவலர்கள், 2 போக்குவரத்து காவலர்கள். அடையார் பார்க் வெளி கதவு டி.டி.கே சாலையில், ரோடு வளையும் இடத்தில் உள்ளது. வளைவு திரும்பும் போது இவர்கள் தடாலென்று நடுவில் புகுந்து வாகனங்களை நிறுத்தினார்கள். அடையார் பார்க்'குக்கு சற்று அருகில், எதிர் புறமாக டி.டி.கே சாலையில் ஒரு பள்ளி உள்ளது. பள்ளிக்கு போகும் குழந்தைகள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் நிறுத்தியவுடன், அதிகாரிகளின் கார்கள் சென்றிருந்தால் பரவாயில்லை. நிற்கிறோம் நிற்கிறோம் யாரும் வரவில்லை, என்ன ஹோட்டலை விட்டு கார்கள் வெளிவர அத்தனை நேரமா.. ?! இந்த ஆட்டோவில் இருந்த குழந்தைகள், பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என கத்த, அந்த பொறுப்பில்லாத ஆட்டோ டிரைவர், பக்கத்தில் தானே பள்ளி, "இறங்கி போங்கடா" என்றாரே பார்க்கலாம், சின்ன குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாக வேக வேகமாக போக்குவரத்துக்கு நடுவில் இறங்கி குதித்து ஓட ஆரம்பிக்க, VIP களின் கார்கள் வாராததால் ஞானோதயம் அடைந்த போக்குவரத்து காவலர்கள், தீடீரென்று கைகாட்டி போக்குவரத்தை விட, இந்த நடுவில் இறங்கிய குழந்தைகள் நடு நடுவே சிக்கி தவிக்க ஆரம்பித்தன.. ஒரு 10 வாகனம் விட்டிருப்பார்கள், திரும்பவும், கை காட்டி நிறுத்தி விட்டார்கள். குழந்தைகள் பாவம் அங்கும் இங்கும் அல்லாடி, வாகனங்களையும் கடக்க முடியாமல், சாலையையும் கடக்க முடியாமல் கஷ்டப்பட்டன.

யார் எப்படி போனால் என அவர்கள் எதிரில் நடக்கும் குழப்பங்களை, அதுவும் ஒரு மனிதனின் உயிருடன் சம்பந்தப்பட்ட குழப்பங்களை கண்டும் காணாமல் இருக்கும் இவர்கள் எப்போது தான் சக மனிதர்களை மனிதர்களாக மதித்து திரும்பி பார்த்து தன் கடமைகளை செய்வார்களோ தெரியவில்லை.

அணில் குட்டி அணிதா:- முடிச்சிடீங்களா அம்மணி, ஏன் நீங்க வண்டிய ஓரங்கட்டிட்டு குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரவேண்டியது தானே..செய்தீங்களா.. செய்யல இல்ல.. அப்படிதான் அவரும்.. அவரவருக்கு அவரவர் வேல முக்கியம்..உங்களுக்கு உங்க வேல முக்கியம்.. சும்மா எல்லாத்துக்கும் சவுண்டு விடறதுல மட்டும் குறைச்சல் இல்ல. ஒன்னுத்துக்கு பிரயோசனம் இல்லாமா..... சவுண்ட குறைக்கற வழிய பாருங்க.... அப்புறம் நான் குறைக்க வைக்க வேண்டியாதா இருக்கும்..சொல்லிட்டேன்.. என்ன இன்னைக்கு முந்திரி பழம் வாங்கி வச்சிருக்கீங்களா?.. இனிமே கேக்கறது எல்லாம் கேக்கற டயத்துல இருக்கனும் சொல்லிட்டேன்..

பீட்டர் தாத்தா : A great pleasure in life is doing, what people say you cannot do.

அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...

வாங்க அக்காங்களா, தம்பிகளா.. வாங்க அண்ணன்களா தங்கச்சிங்களா.. கேளுங்க என் சோக கதைய.. இந்த அம்மணி கவிதா அவங்க முதல் பதிவுல என்ன சொல்லியிருக்காங்கன்னு கொஞ்சம் பார்த்துட்டு வாங்க.. அணில் குட்டிய ஏன் பிடிக்கும்ன்னு ஒரு சோக கதை இருக்குதுன்னு சொன்னாங்க.. நானும் ஏதாவது இண்டரிஸ்டிங்கா இருக்கும்னு நெனைச்சி அவங்கள என்ன ஏதுன்னு ஒரு கேள்வி க்கூட கேக்காம இந்த வேலையில சேர்ந்தேன்.. நேத்திக்கு அம்மணிக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த கதைய கேட்டேன்ங்க.. கேட்ட பிறகு எடுத்த முடிவுதான்..இந்த புது வேலை தேடும் படலம்.. தாங்க முடியலங்க..

என்ன கதைன்னு கேக்கறீங்களா.. அம்மணிக்கு 8 வயசு இருக்கும்போது, என்னமாதிரி ஒரு அணில் குட்டி (பிறந்த குட்டி) இவங்களும் இவங்க அண்ணனும் சேர்ந்து எங்கேர்ந்தோ பிடிச்சிட்டு வந்து இருக்காங்க.. அம்மணி ரொம்ப அடம் பிடிச்சி இந்த அணில் குட்டிய நான் தான் வளர்பேன்னு அவங்க கிட்டேயே வச்சிக்கிட்டாங்க.. சரி ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தாங்களே.. ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களான்னு பார்த்தா..அதான் இல்லை.. அந்த அணில் குட்டிய இம்ச பண்ணி இருக்காங்க..எப்படின்னு கேக்கறீங்களா.. சொல்லும் போதே எனக்கு அழுகை அழுகையா வருதுங்க.. ம்ம்ஹ்ம்ம்ம்ச்ச்ச்ச்ச்ச் (ஒன்னும் இல்ல மூக்கை சிந்திக்கிட்டேன்.. anybody..please give a kerchief ...!) அதுக்கு அனிதா ன்னு பேர் வச்சி, ஈர துணியால அது மூஞ்சிய தொடச்சி, பவுடர் போட்டு.. பொட்டு வச்சி.. அய்யோ..என்னா அக்கரமம் பாருங்க... நெசமாவே அந்த அணில் குட்டி பாவம்டா சாமீ..... அடுத்தது.. ஒரு பெரிய கப் நிறையா பால் கொண்டாந்து.. இங்க் பில்லரை வச்சி அது வாயா தொரந்து சகட்டு மேனிக்கு பால ஊத்தியிருக்காங்க... சாப்பாடு ஊட்டறாங்களாமா.. என்னடா அக்கரமம் இது...! அது மூச்சு முட்ட குடிச்ச பிறகாவது விட்டாங்களா.. அதுக்கு தனியா ஒரு குட்டி பெட் எல்லாம் தச்சி படுத்து தூங்க வச்சி இருக்காங்க.. பாவம் அது குட்டியினால இவங்க பண்ண கொடுமையெல்லாம் தாங்கி கிட்டு ஓட தெரியமா பொறுமையா இருந்து இருக்கு..

அதோட விட்டாங்களா.. தனியா டப்பாகுள்ள 2 நாள் வச்சி பாத்திருக்காங்க.. ஓவரா பாசம் பொங்கி 3 வது நாள், அம்மணி மதியம் தூங்க போகும் போது அணில கொஞ்சரேன் பேர் விழின்னு அதை பெட்’டோட இவங்க பக்கத்துல, பெட் ல படுக்க வச்சிட்டு, அத கொஞ்சரேன் ன்னு இம்சை பண்ணிட்டு தூங்கி போய்ட்டாங்க.. அம்மணி தூங்கறத சொல்லறதுன்னா தனி பதிவுதான் போடனும்.. ரூமையே ஒரு ரவுண்ட் அடிப்பாங்க.. அப்படி ஒரு அடக்கம்.. பெட்ல தூங்கனவங்க.. தூக்கதுல ரவுண்டு அடிக்கறேன்னு அந்த குட்டி பாப்பா அணில் குட்டி மேலயே..போய் உருண்டு படுத்தாட்டாங்க.. ஆஆஆஅங்க்க்.... ஆஆஅங்க்க்க்…. ஆஅயேஆஆ..ஒன்னும் இல்லலங்க திருப்பியும் அழறேன்.....இப்படி ஒரு கொடுமைய நீங்க எங்கையாவது கேட்டு இருக்கீங்களா?..

தூங்கி ஏன்ச்சி.. அனிது அனிது ன்னு தேடறாங்க.. எங்க அனிது.. பரலோகம் அனுப்பிட்டு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டா வருமா அனிது...... அது கால கெளப்பிக்கிட்டு பல்ல துருத்திக்கிட்டு செத்து போய் கிடந்தது..... அம்மணிக்கு பாத்தவுடனே ஒரே அதிர்ச்சி.. அவங்க சவுண்டு தான் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்குமே... என் அணில் அணில் வேணும்னு ன்னு ஓவரா சவுண்டு போட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. யார் வந்தும் நிக்கல..3 - 4 நாள் அழுதுட்டு விட்டு இருக்கலாம் இல்ல.. இப்ப பாருங்க.. விடாம..என்னைய புடிச்சிட்டு வந்து இப்போ கொடும பண்றாங்க..

நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு.... வாழ்க்கையில சம்பாதிக்கனும் தான் அதுக்காக..இப்படி என் உயிர இந்த அம்மணி க்கிட்ட பனையம் வச்சி எல்லாம் வேல செய்ய முடியாதுப்பா.. அப்பவாவது குட்டி பாப்பா வா இருந்தாங்க.. இப்போ இருக்கறதோ பீப்பா.....ஒன்னுகெடக்க ஒன்னு ஆகி....என்னால முடியாதுப்பா.. எப்ப இந்த கதைய கேட்டேனோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்..வேற வேல தேடி என்னோட life ஐ safe ஆ செட்டில் ஆக்கிகனும்னு....

யாராச்சும் பெரிய மனசு பண்ணி என்னோட கீழ்க்கண்ட புரொபைல பார்த்து வேல குடுங்கோ.. .

பெயர் :- அணில் குட்டி அனிதா

அனுபவம்: 4 மாதம் (கவிதா’வுடன் பிளாக் எழுதிய அனுபவம்)

பேச்சு திறன் : ஓவர் ஆ இருக்கு
(அருளையும், சந்தோஷயையும் கேளுங்க சொல்லுவாங்க)

எழுதும் திறன் :- அதுவும் ஓவர் ஆ இருக்கு
(ஸ்பெஷல் கவிதை எழுதறது..)

கண்டிஷன் :-
1. நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..
2. அடிக்க கூடாது
3. ஓவரா கொஞ்சவும் கூடாது
4. கொய்யா பழம் மட்டும் குடுத்து எஸ்கேப் ஆகக்கூடாது.. ஒரு முந்திரி பழம், பாதாம் பருப்பு, ஆப்பில், பேரீச்சம் பழம், பால்னு குடுத்து என் உடம்ப தேத்தனும்..(அம்மணி நம்மல அந்த மோசாமான ரேஞ்ல வச்சிருக்காங்க)

இந்த பதிப்புல No kavitha ..only peter தாத்தா..

பீட்டர் தாத்தா:- You may be disappointed if you FAIL, you are doomed, if your don’t TRY.

பார்வையற்றவர்களின் - பார்வையில்..

பார்வை என்பது எத்தனை அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாள், சில மணி நேரம், இரவில் மின்சாரம் இல்லாவிட்டால், திண்டாடி போகிறோம். நிறைய வீடுகளில் மின்சாரம் போனவுடன் (எமர்ஜன்ஸி லைட் இல்லை என்றால்) வேறு விளக்கு ஏற்றுவதற்குள் பெரும்பாடாகிவிடும். குழந்தைகள் இருட்டில் பயந்து கத்த ஆரம்பித்துவிடுவார்கள், பல நாள் பழகிய வீட்டில் முட்டி மோதி நடப்போம்.. சிறிய விளக்கில் நம் வேலைகளை செய்ய சிரமப்படுவோம். எளிதாக மொட்டை மாடிக்கு சென்று நிலா வெளிச்சத்தில் நேரத்தை கழிக்கத்தான் நாம் விரும்புவோம்..

ஆனால், பார்வையற்றவர்கள்? அவர்களுக்கு தெரிந்த ஒன்று இருட்டுமட்டுமே..இந்த உலகமே அவர்களுக்கு ஒரே இருட்டுதான். இருட்டை தவிர வேறொன்றும் அறியாதவர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன நிறத்தில் உடை அணிந்திருக்கிறார்கள்.. பூக்கள், வானம், மழை, நிலவு, ஈ, எறும்பு, பாம்பு, பல்லி, ரஜனி, கமல், கைப்புள்ள,அணில் குட்டி என்று எதுவுமே தெரியாது.

என் அப்பாவின் சித்தி மகனுக்கு (எனக்கு சித்தப்பா’வாக வேண்டும்), எனக்கு தெரிந்து கண் தெரியாது. ஆனால் அவருக்கு கண் தெரிந்து கொண்டுதான் இருந்ததாம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை குறைந்து தெரியாமலே போய்விட்டது. என் அப்பாவிடம் ஏன் அவரை டாக்டரிடம் காட்டி குணப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, அவருடைய பார்வை நரம்புகளே செயலிழந்து போய்விட்டன அதனால் ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டதாக சொன்னார். இவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். இவருடன் சிறு வயதில் நிறைய நாள் நான் கழித்திருக்கிறேன். உச்சிக்கு வந்த சூரியனை நேராக பார்த்து காட்டுங்கள் என்று அடம்பிடித்து அவரை பார்க்க வைப்பேன். அவருக்கு கண்கள் கூசாது, நேராக சூரியனை பார்ப்பார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும், நான் பார்க்க முயற்சி செய்வேன்..முடியாது..

அவரால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்வார். எனக்கு மறக்கமுடியாதது, அவர் எப்போது கழிவரை சென்றாலும் (இந்தியன் மாடல்) தண்ணீர் ஊற்றிவிட்டு என்னை அழைத்து சரியாக பேசீனில் தண்ணீர் ஊற்றியிருக்கிறாரா என்று பார்க்க சொல்வார், சில சமையங்களில் சரியாக இல்லையென்றால், சித்தப்பா நான் ஊற்றுகிறேன் என்று சொன்னால் விடமாட்டார், இல்லை, நீ இங்கேயே இரு, என்று தண்ணீர் பிடித்து பிடித்து ஊற்றுவார், நான் சரியாக இருக்கிறது என்று சொல்லும் வரை விடமாட்டார். இப்படிப்பட்ட சமயங்களில் கண் தெரியாமால் அவர் சிரமபடுவதை பார்க்க மிகவும் வேதனையாக நான் உணர்ந்து இருக்கிறேன்.

இறந்த பின் மண்ணுக்கு போகும்/எரிந்து போகும் உடலுடன் நம் கண்களும் வீணாகத்தான் போகப்போகிறது.. ஒவ்வொருவரும் அதை வீணாக்காமல் கண்தானம் செய்தால் எத்தனை பேர் இந்த உலகத்தை நம் கண்களால் பார்ப்பார்கள். இறந்தபின் கண்ணை எடுத்துவிட்டால் முகம் அசிங்கமாகி போகும் என உறவினர்கள் அதை செய்ய விடுவதில்லை. ஆனால் கண் எடுத்தவுடன், அதை எடுத்தது தெரியாமல் தான் தைத்து அனுப்புகிறார்கள். இதில் இன்னுமொரு விஷயம், நாம் கண் தானம் செய்து இருந்தாலும், நாம் இறந்தவுடன் நம் உறவினர்கள் அதை சில மணி நேரங்களுக்குள் சொல்லி, கண்களை தானம் செய்ய வேண்டும். இங்கு கவனிக்க வேண்டியது, நம் துக்கத்தை அடுத்து வைத்து தான் இதை செய்ய வேண்டும் என்பதே.

தயவுசெய்து கண்தானம் செய்யுங்கள்..நம் கண்களால் யாரோ ஒருவர் இவ்வுலகை பார்க்கட்டுமே...

அணில் குட்டி அணிதா :- ஆங்..இதோடா.. கிளம்பிட்டாங்கய்யா... ஒரு வாரத்துக்கு முன்னாடி.. வூட்டாண்டா உள்ள பைபாஸ் ரோட்ல.. இராத்திரி ஒரு 8 மணி இருக்கும் போய்கிட்டு இருந்தாங்க.. பகல்லையே அம்மணிக்கு பசுமாடு தெரியாது (சோடா புட்டி) இராத்திரியில கேக்கவா வேணும், நிஜமாவே ஒரு பசுமாடு எதுதாப்பல வந்து நிக்குது..அம்மணி அது கிட்ட போற வரைக்கும் கவனிக்கல.. அத டச் பண்ற நேரத்துல..பின்னாடி உட்கார்ந்திருந்த இவங்க பையன்..அம்மா......!. மாடுமா....! வண்டிய நிறுத்து ..என சவுண்டு விட்டுட்டு, கிரேட் ஜம்ப் பண்ணிட்டான்.. அம்மணி தட்டு தடுமாறி வண்டிய சைடு வாங்கி மாட்டு மேல மோதாம எஸ்கேப் ஆய்ட்டாங்க.. பையன் வுடலியே..”அம்மா சாவறது நீ சாவு என்னையும் ஏன் சேத்து சாவடிக்க பாக்கறன்னு..” அம்மணிய டோஸ் விட்டுகிட்டு இருந்தான்.. இதுக்கு அப்புறமா தான் அம்மணிக்கு இந்த ஐடியா வந்திருக்கனும்..

அம்மணி.. சூப்பர் ஐடியா..!!. உங்களுக்கு இப்பவே சரியா கண்ணு தெரியலயே..உங்க ஒன்னு விட்ட 2 விட்ட சித்தப்பா மாதிரி ஏதாவது ஆயிடுத்துன்னா என்னா பண்றதுன்னு இப்பவே அடிப்போட்டு வைக்கறீங்களா?! பாத்துக்கோங்க பா.. கண் தானம் செய்ய சொன்னது..ஊருக்கு இல்ல.. வருங்காலத்துல தேவைபடுமோன்னு இப்பவே சொல்லிவைக்கறாங்க.. நேரக் கொடுமைடா இது எல்லாம்

குறிப்பு :- நம்ம கவிதா பிளாக்’க்கு புதுசா ஒருத்தர் அறிமுகம் ஆகிறார்.. அவரு பேரு பீட்டர் தாத்தா - பீட்டர் இங்கிலீஷ்ல தத்துவம் எல்லாம் உங்களுக்கு சொல்லுவார். இன்னையிலிருந்து பீட்டர் தாத்தாவின் தத்துவம் ஆரம்பம்...என்னை மாதிரி , கவிதா மாதிரி யார் கூடேயும் பேச மாட்டார். No interactions. இவர் only for தத்துவம்..தாத்தா ரெடி..ஸ்டார்ட்...

தாத்தாவின் தத்துவம்:- “Don’t sit back and take what comes.. go after what you want”

இறந்தால் தான் மரணமா?

இறந்தபின் தான் மரணம்..
இருக்கும் போதே இறந்தால்...

இதயத்தை குத்தி கிழிக்கும் பேச்சில்
செவிடாய் போன காதுகளும்

எடுத்தெறியும் பார்வையில்
குருடாய் போன கண்களும்

எச்சில் துப்பும் வார்த்தையில்
ஊமையாய் போன வாயும்,

வேற்கூரின் வாசங்களும் மறந்து
தொண்டைக்குழிக்குள் இறங்கும் சோறும்

சொரணையற்ற உடம்பை மூட
பிச்சை(என) போட்ட துணியும்

மனமென்னும் பட்டறையில்
பூட்டிவைத்த துயரங்களுடன்

விழிகளை மட்டுமே அசைத்து
மெளனத்தை மட்டுமே சுவாசித்து

மனிதர்களுடன் மனிதர்களாய்
உலவிதான் வருகிறார்கள்..

இந்த...............

மரத்துப்போன இதயங்கொண்ட ....
மரணத்தைவென்ற மனிதரகளும்...


அணில் குட்டி அனிதா:- அம்மணி நல்ல வேள..நான் என்னவோ நீங்க “மரணம்” பற்றி எழுத போறேன்னு சொன்னவுடனே.. வீட்டுல யாரையாவது போட்டு தள்ளிட்டு (அதான் இப்ப சர்வ சாதாரணமா நடுக்குதே, பொம்பளைங்க கிட்ட ஆம்பளைங்க எல்லாம் உஷாரா இருங்கப்பா....அம்மணிங்க எல்லாம் இப்ப சூப்பரா போட்டு தள்ள ஆரம்பிச்சிட்டாங்க..! அவ்ளோதான் நான் சொல்லுவேன்...............அப்புறம் ரிஸ்க் எடுக்கறது உங்க இஷ்டம்) அதை கருவா வச்சி, எழுதபோறீங்கன்னு.. ம்ம்.. என்னவோ.. ..உங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு ஆயுள் கெட்டிதான்..

வாரமலர் படிப்பவரின் தரம் எப்படி இருக்கும் ?

பொதுவாக நாம் மனிதர்களை எதை வைத்து மதிப்பிடுகிறோம். அவர்களின், படிப்பு, பணம், குணம், தோற்றம், பழக்க வழக்கங்கள் என சொல்லி கொண்டே போகலாம். சமீபத்தில் எனக்கு கிடைத்த அனுபவம், படிக்கும் பத்திரிக்கை, புத்தங்ககளை கொண்டு மனிதர்களை எடை போடுகிறோம் என்பதே. எனக்கு ஒன்று புரியவில்லை, The Hindu, Economic Times, Indian Express மற்றும் பல ஆங்கில தின பத்திரிக்கைகள் படிப்பவர்களை மிகுந்த தரம் உடையவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், தினமலர், வாரமலர், தினதந்தி மற்றும் பல தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்களை தரக்குறைவாகவும், தாழ்வாகவும் நினைக்கும் பண்பு நம்மில் உள்ளது.

கன்னிதீவு (சிந்துபாத்) என்ற ஒரு பட கதை தினப்பத்திரிக்கையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.. அதை தொடர்ந்து சிறுவயதிலிருந்து படித்து வந்த என்னுடைய கணவர், நடுவில் பல காரணங்களால் படிப்பதை விட்டுவிட்டார். இப்போது சிந்துபாத் என்ற தொடர் சன் டீவி யில் ஒளிபரப்பபடுகிறது. அதனை விடாமல் உட்கார்ந்து ரசித்து பார்க்கிறார். அவர் தமிழ் பத்திரிக்கை படித்ததற்காகவும், இத்தனை வயதுக்கு பிறகு தான் படித்த கதையின் தொடர்ச்சியை ஆர்வத்துடன், டிவியில் பார்க்கிறாரே என்று தாழ்வாக எடைபோடுவதா, இல்லை அவர் The Hindu, Business Line, Management weekly, monthly books படிக்கிறாரே அதனால் அவரை தரம் உடையவராகவும், உயர்ந்தவராகவும் நினைப்பதா.? படிப்பதை வைத்து ஒருவரின் தரத்தையும், குணத்தையும் எப்படி ஊகிப்பது. அது சரிதானா?

வாரமலர் ஒருவர் படிக்கிறார் என்பதால் மட்டுமே அவர் இப்படி பட்டவர் தான் என நாம் முடிவுக்கு வந்து விட முடியுமா?! இல்லை இவர் ஹிந்து பத்திரிக்கை படிக்கிறார் இவரின் தகுதி மிக உயர்ந்தது என முடிவுடன் இருக்கலாமா?. பள்ளியிலும், கல்லூரியிலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வது எல்லோரும் அறிவர். மெத்த படித்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களையே இவர் நல்லவர்/கெட்டவர் என்பதை அவரின் இயல்பான குணம் வெளிபடும் போது தான் தெரிந்து கொள்ளமுடிகிறது.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, பெண்களை ஏமாற்றும் எத்தனை ஆண்கள் நம்மிடையே உண்டு அதே போல் ஆங்கிலத்தில் பேசி ஆண்களை இழிவு செய்யும் எத்தனை பெண்கள் நம்மிடையே உண்டு. என் நண்பர்கள் சிலர் ஒரே மாதிரி பட்ட படிப்பு படித்தவர்கள். அதில் ஒருவர் IIT யிலிருந்து வந்தவர், IIT என்றாலே அதனுடைய தரம் நமக்கு தெரியும். அந்த தரத்தை அந்த நண்பரிடம் பார்க்கலாம். மற்றவர் சாதாரண கல்லூரியிலிருந்து வந்தவர். இவர்கள் இருவரும் ஒருமுறை ஏதற்கோ விவாதம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது, இந்த IIT-நண்பர் என்னிடம்”பாரு, ரிக்க்ஷாகாரன் மாதிரி பேசுகிறான் அவன், ஒரு என்ஜினியர் மாதிரியா பேசுகிறான்” என்றார். அவரோ “இவர் IIT பந்தாவெல்லாம் நம்ம கிட்ட காட்டறார்..நாங்க ரிக்க்ஷாகாராங்களாவே இருக்கிறோம், ஆனா இவனாட்டம் திருட்டுதனமா பண்றோம்” என்றார்.

மெத்தபடித்தவர்களும், ஆங்கலத்தில் அளப்பவர்களும், ஆங்கில பத்திரிக்கைகள் படிப்பவர்களும் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என சொல்லிவிட முடியாது, தமிழில் பேசி, தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்கள் தாழ்ந்தவர்கள், தகுதியில்லாதவர்கள் என சொல்லிவிட முடியாது.

மனிதர்களின் நற்குணம் ஒன்றே அவர்களை யாரென்று சொல்லும். அதை அறிந்து மனிதர்களின் தரத்தை உணர நாம் முயற்சிக்க வேண்டும்.

அணில் குட்டி அனிதா: அம்மனி நீங்க நல்லவங்களா.. கெட்டவங்களா? உயர்ந்தவங்களா, தாழ்ந்தவங்களா.. எப்ப பார்த்தாலும் தப்பு தப்பா பீட்டர் English ல பேசறீங்களே.. அதான் சரியா என்னால உங்கள judge பண்ணமுடியல... தமிழ் மட்டும் என்னா?.. ஆற்றலரசி அக்கா பொன்ஸ்’ ஐ கேட்டா தெரியும் நீங்க தமிழ்ல எவ்ளோ..தப்பு பண்றீங்கன்னு... இப்படி 2 மே உங்களுக்கு சரியா வரலியே..உங்கள எதுல சேக்கறது..... இதுல என்ன மேட்டர் னா அம்மனி தமிழும் தெரியாம.. English ம் தெரியாமா.. எல்லாம் தெரிஞ்சமாதிரி உங்ககிட்ட எல்லாம் சீன் போடறாங்க பாருங்க அதுதாங்க.... அதுதாங்க என்னால தாங்கவே முடியல.....

(ஒரு ரகசியம்-அம்மனி அவங்க friend அ நக்கலா “ஓ வாரமலர் படிக்கறீங்களா?..ன்னு கேட்டாங்க..அவரு ..டென்ஷன் ஆகி வுட்ட சவுண்டுல தான்..இப்படி பதிவு போட்டு இருக்காங்க...அம்மனி காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு அவரு சவுண்டு வுட்டாருன்னா பார்த்துகோங்க..)

வாழ்க்கையை இழந்து வரும் - இன்றைய மங்கைகள்

எங்களுடைய அலுவலக செக்யூரிட்டி சில நேரங்களில் பொழுது போகாமல் இருக்கும் போது பேப்பர் பேணா வைத்துக்கொண்டு கோலம் போடுவதை பார்த்திருக்கிறேன். அவரின் திறமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மிக நேர்த்தியாக, தெளிவாக, அழகாக போடுகிறார். அவரை பாராட்டி, அவரிடம் எங்களது வீட்டில் வாங்கும் பெண்கள் பத்திரிக்கையை கொண்டுவந்து கோல ப்போட்டி இருக்கு முயற்சி செய்து பாருங்கள் என்று கொடுத்தேன். இது பழக்கமாகி, 2 புத்தகங்கள் நான் கொடுப்பேன், படித்துவிட்டு அவர் திரும்ப கொடுத்தவுடன் திரும்பவும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன்.

நேற்று அவரிடம் உங்கள் மனைவி க்கூட இதை படிக்கிறார்களா? என்று கேட்டதற்கு.. தயக்கத்தோடு “இல்லைங்க” என்று சிரித்து சென்றவர், திரும்பி வந்து, மேடம், என் மனைவிக்கு இந்த புத்தங்களை நான் படிக்க கொடுக்கவில்லை என்பதே உண்மை, ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் படித்தால் என்னை அவர் மதிக்காமல் போய் விடுவார், பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பிப்பார் அதனால் படிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன் என்றார்.

ஒரு பெண் புத்தகங்கள் படிப்பதின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வது மட்டும் இல்லை, அதையும் தாண்டி, தன்னால் தனியாக இருக்க முடியும், ஆணை விட தான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை, இருவரும் சமம் போன்ற சிந்தனையும் கூடவே வளர்ந்துவிடுகிறது. அதில் என்ன தவறு என்று விதண்டாவாதம் செய்ய தயாராக இல்லை, மேலும் ஆணும் பெண்ணும் எந்த சமயத்திலும் சரிசமமாக இருக்க வாய்பில்லை. இது அறிவியல் சார்ந்த உண்மை. :)

அவருடைய சொந்த வாழ்க்கை, தன் மனைவி எப்படி இருந்தால் தன் வாழ்க்கைக்கும் தன் குழந்தைகள் வாழ்க்கைக்கும் நல்லது என்பதில் தெளிவாக இருக்கிறார், இது ஆணாதிக்கம் என நினைப்பவர்கள் நினைத்துக்கொண்டு போகட்டுமே, அதனால் அவருக்கும் என்ன நஷ்டம் அல்லது லாபம் இருந்துவிட போகிறது. எனக்கு அவர் சொல்லியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆணும் தன் குடும்பம் அமைதியாக இருப்பது தன் மனைவியின் கையில் இருக்கிறது என்று நினைக்கிறார்காள், தன் மேல் இல்லாத ஒரு நம்பிக்கை தன் மனைவி மேல் வைத்திருக்கிறார்கள் என்பது பெண்களுக்கு பெருமை தானே.. நம்முடைய சென்னை விவாகரத்து நீதிமன்றத்தில் ஒரு வருடத்தில் திருமணமுறிவுக்காக 2000 வழக்குகள் வந்துள்ளன. அதிலும் எல்லாமே காதல் திருமணம் மட்டுமன்றி, அவை திருமணம் ஆன 6 மாதங்களுக்குள் கொடுக்கப்பட்ட வழக்ககுகள் என்பது ஆச்சரியமான அதிர்ச்சியான விஷயம். பெண்கள் இழந்தும், மறந்தும் வருவன

  • ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளதல்
  • விட்டுகொடுத்தலை மறந்துபோனது
  • பொறுமையின்மை
  • அதிகமான படிப்பும் அதனால் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் விதமும்
  • ஆணுக்கு நிகரான வருமானம் அதனால் ஏற்படும் கர்வம்
  • ஆணுக்கு நிகர் பெண் என்ற தேவையில்லாத சிந்தனை
  • தங்களுது வாழ்க்கையை படிப்போடும், பணத்தோடும் ஒப்பிடும் சிந்தனை.
  • தனது சம்பாத்தியம் தனக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கை.
  • வளர்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம்
  • கலாச்சார மாற்றங்களினால் தங்களின் நிலை மறந்த சிந்தனை.

பெண்கள் புரிதலில் தவறு செய்கிறார்கள், ஒரு பெண் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நம் பாட்டி, அம்மா எதை சாதிக்கவில்லை நாம் சாதிக்காமல் போக.?. நல்ல குடும்பத்தை அவர்களால் கொடுக்க முடிந்தது, நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க முடிந்தது.அவர்கள் வேலைக்கு செல்லவில்லை பொருள் ஈட்டவில்லை தவிர, ஏதாவது குறை வைத்தார்களா?. வெளி உலகமே தெரியாதவர்கள், ஆனால் வீட்டின் நிம்மதி கெட்டுபோனதா? இல்லையே..! இப்போது நம்மால் நம் பிள்ளைகளை சரியாக வளர்க்க முடிகிறதா?. வேலைக்கு செல்கிறோம் என்பதால் என்ன தலையில் 2 கொம்பு முளைத்து விடுகிறதா ?. பொருள் ஈட்டுகிறோம் என்பதால் என்ன நமக்கு வால் முளைத்து விடுகிறதா? இல்லையே.. வீடு மற்றும் வேலையை சரிவர செய்யமுடியாமையை இயலாமை என்று எடுத்து கொள்ளவேண்டுமே தவிர ஆண்களின் மேல் குறை சொல்லுவதும், பெண் உரிமை பேசி நம் வாழ்க்கையை நாமே கெடுத்து கொள்வதும் தான் நடக்கிறது.

பெண்கள் வளர்ப்பு முறையில் பெரும் பங்கு எடுப்பது பெற்றோர். சிறு குழந்தையிலிருந்தே நம் குடும்ப அமைப்பையும் அதன் பலத்தையும் சொல்லி சொல்லி ஆண், பெண் இருவரையுமே வளர்க்கவேண்டும். ஒரு பெண்ணால் மட்டுமே நல்ல குடும்பத்தை ஆக்கவும் முடியம் அழிக்கவும் முடியம். நம்முடை படிப்பும், வேலையும் நம்மின் பொறுமையையும் நிதானத்தையும் அதிக படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. என்னுடைய
ஆண்களின் நிழலில் பதிவில் சொன்னது போன்று ஒரு சிறிய குடும்பத்தை, கணவனை கட்டிக்காக்க முடியாத ஒரு பெண்ணால் எப்படி வெளி உலகத்தில் சாதிக்க முடியம். அப்படி அவர்கள் எதையாவது சாதித்தால் அது சாதனையாகாது. குடும்பம் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லவில்லை ஆனால் குடும்ப அமைப்பை முறிப்பது பெண்கள் கையில் அதிகமாகிவருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் படிப்பும் , சம்பாதியமும் என்றால் அதை சரியான முறையில் செயற்படுத்த பெண்கள் முயற்சிக்க வேண்டும்.

அதிக படிப்பினாலும், அதிக சம்பளத்தாலும் பெண்கள் அவர்களின் இயல்பையும் அவர்களின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருவது என்னவோ உண்மை, உணர்வார்களா?!!

அணில் குட்டி அனிதா:- அடடடடாடாடா டா?!! உபதேசம் ஆரம்பிச்சாச்சிடோய்..! நாட்டுல 2 மாசம் எல்லாரும் நிம்மதியா இருந்து இருப்பாங்க.. அம்மணி. “கஜினி “ சூர்யா ரேஞ்சுக்கு அவங்கல பத்தி மறந்து......ஸ்டார்ட் பண்ணிட்டாங்கடோய்... இவங்களே வூட்டல யாருக்கும் அடங்கறது இல்ல..வேலைக்கு போற திமுரு மட்டுமா... சம்பாதிக்கறோம்னு திமுறுல.. அவங்க ஆடற ஆட்டத்த நாங்க இல்ல தினமும் பாக்கறோம். பாவம்ப்பா அவங்க வூட்டுகாரரும், பையனும், இந்த அம்மணிக்கிட்ட ஒன்னும் முடியாம ......”why blood...! same blood..!, you start..... we close nnu” கம் போட்டு ஒட்ட வச்ச மாதிரி வாய தொறக்கறதே இல்ல. பாவம் ரொம்ப நல்லவங்க..... அம்மணி உண்மைக்கு எதிரா எழுதறத தாங்கமுடியாம புலம்பறேங்க.. நீங்களும் என்கூட join பண்ணிக்கறீங்களா?..

தாத்ஸ் நீங்க பீட்டர எடுத்து..சொல்லுங்க...........

பீட்டர் தாத்ஸ் :-

  • Success doesn’t come to you, you go to it.
  • In the middle of difficulty lies opportunity.

மறக்கமுடியாத அடி'களில் - ஆறு

குறிப்பு:- அணில் குட்டியை யாருமே ஆறு விளையாட்டுக்கு அழைக்கவில்லை, என்னை மட்டும் அழைச்சிருக்காங்க. அதனால் முன்பை போல என்னை அழைக்கவில்லை என்று ஆட்டம் போடுமோ என்று பயந்து, அணிலுடன் ஆலோசனை செய்து அது விருப்பத்திற்கு இணங்க, அணிலோட language ல இந்த பதிப்பை எழுதியுள்ளேன்.

ஆறு விளையாட்டுக்கு, என்னை எங்க வீட்டில எப்படியெல்லாம் நல்லவிதமா அவங்களால முடிஞ்ச அளவிற்கு கவனிச்சிருக்காங்கன்னு சொல்றேன். ரொம்ப வருஷமா துக்கத்தை மனசுலியே வச்சிருக்கேன். உங்ககிட்ட சொல்லும் போது துக்கம் தொண்டைய விட்டு இறங்கி வந்துடும் இல்லையா?.. சாதாரணமா பெண் குழந்தைகளை வீட்டுல அடிக்க மாட்டாங்க. அதுவும் நான் குலவிளக்கு, புரியலயா..என் அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர், இருவருக்கும் பெண் குழந்தை இல்லை. அதனால் நான் தான் எங்கள் வீட்டு குலவிளக்கு. ஆனா எங்க வீட்டுல அதிகமா கவனிக்க பட்டதும் நான் தான். அதுவும் உங்க வீட்டு கவனிப்பு, எங்க வீட்டு கவனிப்பு இல்லைங்க, இப்படி பதிவு போடற அளவுக்கு கவனிச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க.

எங்க வீட்டுல என்னை நன்றாக கவனித்தவர்கள், என் ஆயா(பாட்டி), தாத்தா, அப்பா, உடன் பிறந்த அண்ணன்கள் இருவர் (பெரிய அண்ணன், சின்ன அண்ணன்), கடைசியா என் பையன். பையன் கூட விளையாடிடான்னு ஆச்சிரிய படாதீங்க, பொறுமையா படிங்க..

1. ஆயா (இது ரொம்ப special.) பொதுவாக எங்களது வீட்டில் கட்டுபாடு அதிகம், வெளி ஆட்கள் வரும் போது, அவர்களை “வாங்க” என்று சொல்லிவிட்டு, முன் நிற்காமல் உள்ளே சென்று விட வேண்டும். அவர்கள் திரும்பி செல்லும் வரை வெளியில் வரக்கூடாது. 12 வயது இருக்கும், யாரோ தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள், நான் வெளியில் ஈசி சேரில் சாய்ந்து படுத்து கொண்டு கதை புத்தகம் படித்து கொண்டு இருந்தேன். வந்தவர்களை கவனிக்கவே இல்லை..என் ஆயா வெளியில் வந்தவர்கள் என்னை பார்த்து, வந்தவங்கள வா’ ன்னு சொன்னியான்னு கேட்டாங்க.. நான் கதை படிக்கற ஆர்வத்துல சீட்ட விட்டு எழாமல்,(மரியாதை இல்லையாமா?) “இல்ல அதான் புக் படிக்கறேன் இல்லை” என்றேன். அதக்கூட பரவாயில்லை உள்ளேயாவது போயிருக்கலாம் இல்ல..அதுவும் செய்யல. என் ஆயா..இரண்டு, மூன்று முறை கண்ணால் சாடை செய்து உள்ளே போக சொன்னார்கள். என்னவோ எனக்கு நேரம் சரியில்லைங்க.. அன்னிக்குன்னு பார்த்து, எனக்கு என்னதான் செய்யறாங்க பார்க்கலாம் என்று கவனிக்காத மாதிரி உட்கார்ந்திருந்தேன்.

விருந்தாளி வீட்டை விட்டு போனது தான், அங்கிருந்த பூந்தொடப்பத்தை எடுத்து, பின்புறமா திருப்பி வச்சி விலாசிட்டாங்க விலாசி.. விலாசும் போது, திட்டு வேற..மரியாத கொஞ்சம் கூட இல்லாம, சேரை விட்டு எந்திரிக்காம, வயசுக்கு வர போற பொண்ணு, இப்படி வரவன், போரவன் எதுக்க வந்து நிக்கலாமான்னு..ஆஹா..என்ன வலி ..நமக்கு வேற அழவே தெரியாதா.. வாய தொரந்தா போதுமே..ஒரு 7 , 8 கிமீ சத்தம் கேக்கற அளவுக்கு இல்ல கவர் பண்ணி அழுவோம். எப்படியோ நம்ம சவுண்டால அவங்க இவங்கன்னு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டா எல்லாரும் நான் என்னவோ கொலை குத்தம் பண்ண மாதிரி, ஆயாவை இன்னமும் ஏத்தி விட்டு அடிவாங்க வைச்சாங்க.. எனக்கா தொடப்பதால அடிச்சிட்டாங்களேன்னு ஒரே அவமானம் வேற... அழும் போதே நடு நடுவே.. அடி..அடி.. இன்னைக்கு நான் தொடப்பத்தால அடி வாங்கினா நாளைக்கு பெரிய பணக்காரியா ஆவேன்னு டயலாக் வேற..
(யாரோ எப்போதோ சொன்னது..செருப்பாலும், தொடப்பதாலும் அடி வாங்கினா பணக்காரா ஆவங்களாம்)

2. தாத்தா.. :- 10 வயது இருக்கும், மதில் சுவர் அருகில் (மாடியில்) ஒரு காலில் (style லு மா style) நின்று கொண்டு நோட்டு புத்தகத்தை புரட்டி பார்த்து,(ஒரே நோட்டில்) மற்றொரு பக்கத்தில் எழுதிகொண்டு இருந்தேன். அந்த பக்கம் போன என் ஆயா, நிற்காமல் , உட்கார்ந்து படி என்றார்கள். நான் பதில் ஒன்றும் சொல்லாமல் திமிரா ஒரு லுக் விட்டுட்டு எழுதி கொண்டே இருந்தேன். தாத்தா கொஞ்சம் தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து சுருட்டு பிடித்து கொண்டு இருந்தார். வில்லி (அதான் என் ஆயா) திருப்பி என்னை கடக்கும் போது இன்னொரு முறை சொன்னார்கள். நமக்குதான் அடி வாங்கனும்னு முடிவாயாச்சே..வாய் சும்மா இருக்குமா.. “ஆயா சும்மா உன் வேல என்னாவோ அத மட்டும் பாரு ஏன் என்னையே கவனிக்கற..போ..” அவ்வளவு தாங்க.. அவங்க வூட்டுகாருக்கு (அதான் என் தாத்தா) கோவம் வந்துடுத்து. என் கிட்ட பொருமையா வந்து பாப்பா, சட்டைய கழட்டு, அப்படின்னாரு.. அடடா..பாசமா ஏதோ தாத்தா சொல்லாறேன்னு கழட்டன அடுத்த நிமிஷம் இடி மாதிரி அடிங்க.. முதுகுல விழுந்தது.. 5 விரலும் பதிந்து போச்சு.. கால் தரையில நிக்கல.. வலியில குதிக்க ஆரம்பிச்சிட்டேன்.. நம்ம சவுண்டு எட்டு திக்கும் பரவ.. எல்லாரும் தாத்தாவின் கோவத்துக்கு பயந்து பேசாமல் நான் குதிப்பதை ரசிக்க.. நம்ம வாய் எப்பவும் போல சும்மா இருக்குமா.. இருங்க எங்க அப்பா வரட்டும் உங்க 2 பேரையும் என் முதுகை காட்டி மாட்டி விடறேன்னு சொன்னதுதான்..தப்பு பண்ணது இல்லாம..அத அப்பங்கிட்ட சொல்றேன் ஆத்தாகிட்ட சொல்றேன் வேற..எதுத்து பேசறையான்னு ..அதே இடத்தில இன்னும் 5 , 6 சகட்டு மேனிக்கு கிடைச்சுது.. வில்லி தான் கடைசில வந்து வில்லன் கிட்ட இருந்து காப்பாதினாங்க..

இதுல என்ன high light னா.. பொம்பல பிள்ளைய கண்ட இடத்துல அடிச்சி காயப்படுத்த கூடாதாம்மா.. அதனாலதான் சட்டைய கழட்ட வச்சி பிண்னி எடுத்தாங்களாம்மா.. என்ன நல்ல எண்ணம் பாருங்க.....வீங்கின முதுக சரி பண்ண 3 நாளாச்சுங்க..

3. அப்பா:- அப்பா ரொம்ப அமைதி, கோவமே வராது.. அவர் கிட்ட அடிவாங்கன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன். இதுவும் ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க. வீட்டுல எல்லாரும் வெளியில போயிருந்தாங்க.. நாம தனியாத்தானே இருக்கோம்..கொஞ்சம் விசில் அடிச்சி (தேவையில்லா தான் என்ன செய்ய , ஒரு ஆர்வ கோளாறு தான்) பழகலாம்னு..விசில் அடிச்சி பழகிட்டு இருந்தேன்.. அப்பா பின்னாடி வந்தத கவனிக்கல.. என் விசில் practice ஐ கேட்டு டென்ஷன் ஆயிட்டாரு போல.. தலையில நல்லா கட்டைவிரல மடக்கி வச்சு“நறுக்குன்னு” ஒரு ஸ்டார்ங் கொட்டு.. அய்யோ.. யம்மா..தல ஒரு இன்ச் உள்ள போய்ட்டு வந்த மாதிரி ஒரு feeling. அழுக எல்லாம் வரவே இல்ல.. ஏன்னா நம்ம சீன் போட்டா கவனிக்க யாராவது வேணுமே.. வீட்டிலேயும் யாரும் இல்ல..அடிச்சிட்டு இவரும் ஒன்னுமே பேசல.. அவரு பாட்டுக்கும் போயிட்டாரு.. எனக்கோ.. என்னடா நாம பெத்த புள்ளைய இப்படி கொட்டினோமே.. அது தல இருக்கா..இல்லை உடம்புகுள்ள போச்சான்னு பாக்காம.. அவரு பாட்டுக்கு போயிட்டாரேன்னு தான் கவல (இந்த விஷயத்தை அவரும் யார் கிட்டேயும் சொல்லல நானும் யார் கிட்டேயும் சொல்லல). ம்ம் இப்படி ஒரு கொட்டு வாங்கின பிறகும் நான் விசில் அடிக்கறத நிறுத்தி இருப்பேன்னு நீங்க நெனச்சா அது உங்க தப்பு.. இப்பவுமே விசில் சரியா அடிக்க வரலைன்னு எனக்கு வருத்தம் தான்...

4. பெரிய அண்ணன் :- ஒரு நாள் ஆயாவோட காசு பைல இருந்து யாருக்கும் தெரியாம காசு எடுக்கும் போது பார்த்துட்டேன். நாம தான் ஹானஸ்டுராஜி ஆச்சே சும்மா இருப்போமா.. அண்ணனை பார்த்து இரு இரு ஆயாகிட்ட சொல்றேன்ன்னு சொன்னேன். அண்ணனோ வேணா, பாப்பா (நானே தான்) உனக்கு வேண்ணா முட்டாய் வாங்கி தரேன்னு சொன்னாங்க. நாம இந்த லஞ்சத்துக்கெல்லாம் தலை வணங்கிட்டா என்னா ஆவறது.. ..ஓடி போய் முதல்ல சொல்லிட்டு தான் மறுவேலையே. அண்ணன் சமயம் பாத்துக்கிட்டே இருந்தாரு, ஒரு நாள் வசமா மாட்டினேன்.. தனியா ரூம்குள்ள போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினாரு.. பெரிய அண்ணாவுடைய style லே direct ஆ தலையில தாக்கறது தான். நான் என்ன நெனப்பேன்னா.. என்னடா நம்ம பாப்பா நம்மவிட புத்திசாலியா இருக்காளேன்னு பொறாமையில தலையில வச்சி வாங்கறாறோன்னு.. சரி single gape ல தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடி வந்து, நம்ம as usual style ல சவுண்டு விட ஆரம்பிச்சது தான்.. எங்க ஆயா..வந்து விசாரிச்சிட்டு, நேரா உள்ள போய் அடிக்கற மாதிரி ஒரு பிரம்ப எடுத்து கிட்டு வந்து, அண்ணன் கிட்ட கொடுத்து.. வாடா இப்ப இதால்ல நல்லா அடி, பொம்பல புள்ளன்னு இல்லாம.. அவள இப்படி போட்டு அடிச்சி இருக்கியே..(என்னவோ இவங்க என்ன அடிக்காத மாதிரி) உனக்கு அந்த பொண்ணு மேல எவ்வளவு கோவம் இருந்தா இப்படி அடிச்சி இருப்ப..வா வந்து ஆசை தீர அடின்னு சொல்ல.. நமக்கு இங்க கதி கலங்கி போச்சு... என்னா இந்த கிழவி same side goal போடறாங்களேன்னு, ஆனா..அண்ணன் பாவம் பாத்து விட்டுடாங்க.. ஆயா விடலயே.. அவங்க அடிக்க ஆரம்பிச்சிடாங்க.. நல்லா கண் குளிர அந்த பொண்ணு அழுறத பார்த்துகோடான்னு.. வச்சி விலாச ஆரம்பிச்சிடாங்க.. ம்ம்..பஞ்சாயத்து பண்ணாம ஒழுங்கா அண்ணன்கிட்ட மட்டும் அடிவாங்கனமா போனமான்னு இருந்திருக்கலாமா.. எங்க..

5. சின்ன அண்ணன். :- இவர் கிட்ட வாங்கினது சூப்பர். கேரம் போடு ஆடும் போது, 2 பேருக்கும் சண்டை ஆரம்பிச்சது.. நான் தான் சரி, நீதான் சரி..ன்னு ஆரம்பிச்சு.. அதுபாட்டுக்கும் நடக்குது. நாமத்தான் எதையும் சாமான்யத்துல சரின்னு ஒத்துக்க மாட்டோமே.. அண்ணன் பொறுமை இழந்து போய் ஒரே குத்து மூக்கு மேல.. வெத்தல பாக்கு தான்..வேற என்ன..கொட கொடன்னு ரத்தன் வர ஆரம்பிச்சிடுத்து.. அவருக்கு தான் நம்மல பத்தி நல்லா தெரியுமே.. உடனே ஓவர் சவுண்டு விடுவோம்னு.. குத்தன அடுத்த செகண்ட் என் வாய சத்த இல்லாம பொத்தி.. “இங்க பாரு.. ஓவரா சீன் போட்டு ஊற கூப்பிட்ட மவளே முஞ்சியில ஒரு பார்ட் ஒழுங்கா இருக்காதுன்னு சொல்லிட்டு ...’லேசா கைய என் வாயில இருந்து எடுத்து சவுண்டு (test ஆம்) வருதான்னு பார்த்தாரு.. எங்க வரும்.. வரலியே...


6. கடைசியா என் பையன் ;- நாங்க குடும்பத்தோட 25-30 பேர் இருக்கும் திருப்பதிக்கு பஸ்ல போய்க்கிட்டு இருந்தோம். என் பையனுக்கு அப்போ 2.5 வயசு..பஸ்ல என் மடியில உட்கார்ந்துகிட்டு, கைல ஒரு ரோஜா பூ வை வச்சிக்கிட்டு விளையாடிட்டே வந்தவன் தூங்கிட்டான். கீழ் திருப்பதி பஸ் ஸ்டாண்டில், பஸ் நிற்கும் போது அவனும் எழுந்துட்டான். எழுந்து முதல் கேள்வி “அம்மா, பூ? ‘ எந்த பூவை கேக்கறான்னு நான் யோசிக்கறதுக்கு முன்ன கீழ இறங்கி அவனே தேட ஆரம்பிச்சிட்டான். அவன் கையில இருந்த ரோஸ் கீழ உதிர்ந்து விழுந்து கிடந்தது.. பார்த்தவுடனே அழ அரம்பிச்சான்.. அந்த ரோஸ் முழுசா வேணும்னு அழ ஆரம்பிச்சவந்தான்..என்னவோ சமாதானம் சொல்லியும் கேட்கல.. என் பையனாச்சே சவுண்டு 'மேல் திருப்பதி வெங்கட்’டுக்கு கேட்டு அவரே ஒரு பூ கொடுக்கற ரேஞ்சுக்கு கத்தறான். என் வீட்டுகாரர் எங்கயோ தேடி கண்டுபிடிச்சி ஒரு ரோஸ் வாங்கிட்டு வந்தாரு.. அவனோ..”என்ன பார்த்தா என்ன கேன மாதிரி இருக்கான்னு (சொல்லல) ஒரு லுக்கு விட்டுட்டு அத ஜன்னல் வழியா தூக்கி எறிஞ்சான். அழுகையும் நிக்கல.. எல்லாரும் சாப்பிட ஹோட்டலுக்கு போனாங்க.. நானும் இவன அழுகையோடேயே தூக்கிட்டு போனேன். ஹோட்டலுக்கு உள்ள கால வைக்கல, நான் இங்க ஒருத்தன் பூ கேட்டு அழுதுகிட்டு இருக்கேன்..நீ சாப்பிடவா போறே...எப்படி சாப்பிடறன்னு பாக்கறன்டீ நானுன்னு நெனச்சி.. பளார் பளார் ன்னு கண்ணதுல அடிக்க ஆரம்பிச்சிட்டான். என் பையன் face specialist. முகம் தான் அவனோட டார்கெட்டெ. இத பார்த்த என் பாசமலர் அண்ணன் ஓடி வந்து..’டேய்.. ஏண்டா என் பாப்பாவ இப்படி அடிக்கற (இவரு நம்மல அடிச்சது நமக்கு தானே தெரியும்), அழுகைய நிறுத்திட்டு ஒழுங்கு மரியாதையா சாப்பிடு இல்லைனா அடி நொறுக்கிடுவேன்னு சொன்னது தான் என் பையனுக்கு ஆவேசம் அதிகமாகி இன்னும் வேகமா என்னை சாத்த ஆரம்பிச்சான். சரி நம்ம பையன் நம்மல அடிக்கட்டும்னு பஸ்ல வந்து உட்கார்ந்து “அடிப்பான்னு” சொல்லிட்டேன். கிடச்ச chance அ அவன் மிஸ் பண்ணாம தலைமுடிய பிச்சி எடுத்து, காது கம்மலை பிடிச்சி இழுத்து, கண்ணத்திலே போட்டு சாத்தறான். தாயாச்சே எருமையிலும் பொறுமையா இருக்கனும்னு..பார்த்தேன்..ஆனா வலி தாங்க முடியாம என் கண்லேர்ந்து தண்ணியா வர ஆரம்பிச்சிடுத்து.. என் பையன் உஷார் ஆயிட்டான்.. ஆஹா..அம்மா அழ ஆரம்பிச்சா ஓவர் சீன் ஆயிடுமே..ன்னு அப்புறம் நம்மல எல்லாரும் சாத்த ஆரம்பிச்சிடுவாங்கலேன்னு, என் கண்ண தொடச்சி விட்டுட்டு.. கீழ கடந்த உதிர்ந்த ரோஸ்ஸின் காம்பை கைல எடுத்து வச்சிகிட்டு அமைதியா விளையாட ஆரம்பிச்சிட்டான்.....

மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…

மனசு அடக்கமின்றி திரியும் பலநேரங்களில் மெளனமாய் மனதுடன் அறிவை பேசவைக்கும் தருணங்கள் அதிகமாகி, இரண்டும் விவாதித்து விடைக்கிடைக்காத பல நேரங்களில் அறிவும், மனசுடன் கைக்கோர்த்து கொண்டு ஆனந்த கூத்தாடும். அடக்கமுயலும் பிரச்சனைக்கு திர்வு இன்றி, பதில் விளங்காத மெளனப் புலம்பல்களாகவே தொடரரும்..

பதில்கள் இல்லாத கேள்விகளாய்…ஏன் இந்த மனசு இப்படி.. என்னேரமும் குரங்கை போல் தாவி தாவி…… தாவும் போது….ஏதோ மிக தூரத்தில் இருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயம் கூட சில நேரம். எப்போதோ அப்படி விழுந்தவிட்ட தருணங்களின் நினைவுகள் நெஞ்சை அடைக்கும். கண்கள் குளமாகும். எத்தனை முறை விழுந்தாலும், அடிப்பட்டு ரத்தம் சிந்தினாலும் விடாது முயற்சிக்கும் மனதை பாராட்டுவதா..அதனுடம் கைக்கோர்த்து கொள்ளும் அறிவை சீ… அறிவே உனக்கு அறிவில்லையா…..என கோபப்படுவதா..?

மாடு தன் உணவை வேகமாய் உண்டு விட்டு, பிறகு, பொருமையாய் அமர்ந்து நாளெல்லாம் அசைபோடுமே..அதுபோல் எப்போது பார்த்தாலும் அறிவும், மனசும் நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை என அசைப்போட்டு கொண்டே இருக்கிறது…

1. நடந்தவை சரியாக இருந்துவிட்டால், இப்படியே செய்து இனிமேலும் எல்லாவற்றையும் சரியாக்கிவிடாலாம் என்றால்
2. அடுத்து நடப்பவை தவறாக முடியும் போது..
3. நடக்க இருப்பவை பற்றி, சரியான கோணத்தில் மட்டும் இல்லை, தவறான கோணத்திலும் சிந்திக்காமல் இருக்க முடியவதில்லை..

ஏன் இத்தனை சிரமம் எடுத்து சிந்திக்க வேண்டும், இப்படி எல்லாவற்றிக்கும் யோசிக்க ஆரம்பித்து, எல்லாமே நல்லபடியாய் ந்டந்து விட்டால், எல்லோருமே எல்லாவற்றையும் யோசித்தே செய்வார்களே..அது விதி..என்று கை பிசைய வேண்டிய அவசியம் இல்லையே. எது எப்படி அமைகிறதோ அதை அப்படியே எடுத்து கொண்டு, வருவது வரட்டும்..போவது போகட்டும்.. என்று எளிமையாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என கூறுபவர்களை பார்க்கும் போது எப்படி இவர்களால் முடிகிறது என்று ஆச்சரிமாக தான் இருக்கிறது.

தெருவோரம், வயிற்று பசியில் பிச்சை எடுக்கும் ஒரு வயதான மூதாட்டி, இவர்கள் காசு போடுவார்கள் என வயதுக்கு மீறி, தள்ளாட்டத்தையும் மீறி ஓடி வந்து கை நீட்டும் போது, ஒதுக்கும் பார்வையோடு ஒதுங்கி போகும் மனிதர்களை பற்றி யோசிக்காமல் இருக்க முடிவதில்லை.

8 வயதுக்கூட ஆகாத குழந்தை, சோற்றுக்கு வழி இல்லாமல், பெற்றவர்கள் “போடா போய் உன் வயிற்று பிழைப்பை பார்” என்று எவருடனோ அனுப்பி வைக்க, மளிகை கடையில் ஒரு கூலியாக தன் வயிற்றை கழுவிக்கொள்வதை கேட்டு/பார்த்த பிறகும் எல்லோரையும் போல் “டேய் ஒரு பால் பாக்கெட் கொடு” என்று வாங்கிகொண்டு வந்துவிடமுடிவதில்லை..

பக்கத்து வீட்டில் செடி வளர்க்கிறார்கள் என்று தானும் தொட்டி வாங்கி வைத்து, வளர்க்கிறேன் பேர்விழி என்று, தண்ணீர் சரிவர ஊற்ற முடியாமல் அந்த செடி வாடி வதங்கி..”ஐயோ மனிதர்களே எனக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என கதுறும் சத்தம் கேட்டும், திரும்பிபார்க்காமல் எனக்கென்ன அது அவர் வீட்டு செடிதானே என வந்து விடமுடிவதில்லை.. ஒருமுறை ஊற்றுவதை யாரேனும் பார்த்து விட்டால் போதும், மேடம்! கொஞ்சம் செடியை பார்த்துகோங்க என்று சொல்லும் மனிதர்களின் நிலை குறித்து நினைக்காமல் இருக்க முடிவதில்லை..

பஸ்ஸில் அமர்ந்து வரும் கொஞ்ச நேரத்தில் பக்கத்து சீட்டு பெண்மணி சொல்லும் அவரின் சொந்த இன்ப/துன்ப கதைகளை பொருமையுடன் கேட்டுவிட்டு..ஏன் இவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை மனதுக்குள் கேட்காமல் இருக்க முடிவதில்லை ..

எல்லோரும் பேசி சிரித்து கும்மாளம் இட்டுகொண்டு மதிய உணவு உண்ணும் போது, என்னிடம் பேச நினைக்கும் நண்பரின் பார்வையை புரிந்து, என்ன சொல்லுங்க..ஏதோ சொல்லனும்னு நினைக்கறீங்க , ஏன் யோசிக்கறீங்க என்று கேட்டால், ஆச்சரியத்துடன்..எப்படிங்க என் மன ஓட்டத்தை கண்டுப்பிடிச்சீங்க என்ற அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நாளைக்கு லன்ச்’க்கு எல்லோரும் வெளியில போறீங்களே என்னையும் வரச்சொல்லனுமா?.. நண்பர் “இல்லைங்க”.. அப்போ நான் வரவேண்டான்னு சொல்லனுமா?! நண்பர் “அய்யோ..இல்லைங்க…”சரி, உங்களுக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தீங்களே? அதை பற்றி கேட்கனுமா?.. நண்பர் “இல்லைங்க” அதற்கு மேல் பொறுமை இல்லாமல், பாருங்க ..நீங்க ஏதோ சொல்ல நினைக்கறீங்க என்னன்ன சொல்லுங்க இதற்கு மேல் என்னால் ஊகிக்க் முடியாது என சொல்லி அவர் சொல்ல வந்ததை தெரிந்து கொள்ளாமல் விடவதில்லை என்ற நிலைக்கு மனமும், அறிவும் ஒன்றாக தள்ளபடுவதை தடுக்கமுடியாத நிமிடங்களை நினைக்கும் போது..நாம் ஏன் நம்மிடம் இல்லை என …அசைபோடும் நேரங்களில் யோசிக்காமல் இருக்க முடிவதில்லை.

இப்படிதான் எல்லோருடைய சிந்தனை ஓட்டமும் இருக்குமோ ..இல்லை நாம் மட்டுமே இப்படி எதையும் செய்யும் முன்னும், செய்த பின்னும் யோசிக்கிறோமோ….வினா, பதில், பிரச்சனை, அமைதி, ஆட்டம், எரிச்சல், கோபம், சிரிப்பு., அழுகை என அலையும் புத்தியை அவ்வபொழுது உணர்ந்து பிடித்து இழுத்து நம் பிடிக்குள் வைப்பது கூட எத்தனை சிரமமாகிறது. அலுவலகத்தில் பரவாயில்லை.. வீட்டில் மோசம்..இருமுறை கூப்பிட்டு திரும்பவில்லை என்றாலே “யேய் லூசே”..என்று பெயர் மாறி போகிறது…..

எத்தனை எத்தனை மனிதர்கள், அவர்களின் எண்ணங்களிலும். செயல்களிலும் எப்போதுமே ஒரு முரண்பாடு….உதடுகள் ஒன்று பேசும், அவர்களின் கண்களை உற்று நோக்கினால், உள்மனசின் விகாரம் பேயாய் நம்மை பயமுறுத்தும்..

நல்லவைகளை யோசிக்க யோசிக்க முடிவில் மிஞ்சி இருப்பதோ.. அதற்கு நேர் எதிர்.. ஊரோடு ஒத்து வாழ்..தனி மரம் தோப்பாகாது., ஊர் வம்பு நமக்கெதற்கு, சமுதாயம் என்பது சாக்கடை அதில் நீ மட்டும் பன்னீராய் எப்படி இருப்பாய், புத்தி இருப்பவர்கள், உன்னை போன்று யோசிக்க மாட்டார்கள், வேலையை முடித்து விடுவார்கள் என்று அறிவுரை கூறுபவர்கள் அத்தனை பேரும் ஒரு புரம் இருக்க..சிந்தித்து இது தான் சரி.. இது தவறு என்று முடிவுடன் இருக்கும் நாம் பலரின் கண்களுக்கு கேலி கூத்தாகி போய் கொண்டிருப்பது என்னவோ நிஜம்தான்… செயற்படுத்த முடியாத நிஜங்கள் ஆவேச புலம்பல்களாய் மனதுக்குள் மெளனமாய்..தொடர்கிறது……….

அணில் குட்டி அனிதா :- ம்ம்..ஹா.. …..கவி.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது.. …பாருங்க கண்ணு சொக்குது.. என்ன அதுக்குள்ள தூக்கம்ன்னு கேக்கறீங்களா?.. எல்லாம் மேல இருக்கறத படிக்க போனதால வந்த.து… சரி.. நீங்க ஓவர் தெளிவா எத பத்தியோ எழுதி இருக்கீங்களே....அது என்னா?!! மக்கா உங்களுக்கு ஏதாவது புரிஞ்சா எனக்கு லெட்டர் போடுங்க.. அட்ரஸ் கவிதாவோடது தான்..எப்படியாவது எனக்கு வந்துடும், கவலபடாதீங்க..

அணில் குட்டி அணிதா
C/o. கவிதா கெஜானனன்
கீல்பாக் 3வது மெயின் ரோடு
கீல்பாக்கம்
சென்னை

SMS முலம் வரும் அசிங்கமான தகவல்களின் பாதிப்பு

Mobile phone இருப்பது எத்தனை வசதி என்பது உபயோகிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும், ஆனால் எனக்கு மட்டும் அது உபத்திரமாக தான் இருக்கிறது. அதை நான் இப்போது வைத்திருப்பது என் கணவர், மகனுக்காக மட்டுமே என சொல்லலாம். எனக்கும் எல்லோர் போலவும் உபயோகிக்க ஆசைதான்.. என்ன செய்வது.. எனக்கு ஏற்பட்ட மிக கசப்பான அனுபவம் காரணமாக நான் யாருக்கும் நம்பர் கொடுப்பதில்லை. இந்த நம்பர் கொடுக்காமல் இருப்பது கூட நண்பர்களுக்குள் மிக சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

நான் உபயோகித்தது, உபயோகிப்பது எல்லாமே pre paid தான். முன்னர் வைத்திருந்த நம்பரை யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எழுதி கொடுத்துவிடுவேன். என்னை சுற்றி உள்ளவர்கள் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை.

Mobile phone ல் அலாரம் வைப்பதால், தலை மாட்டில் வைத்துக்கொண்டு தூங்குவது வழக்கம். ஒரு நாள் இரவு மணி 11 இருக்கும், தூங்கி கொண்டிருந்த நான் சத்தம் கேட்டு எடுத்து பார்த்தேன், SMS ல் தகவல்.. “ I Love you “ என்று இருந்தது. நான் பயந்து போய்விட்டேன்.. என்னை சார்ந்தவர்கள், தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் என் தூக்க பழக்கம் தெரியும், இத்தனை மணிக்கு மேல் யார் இப்படி அனுப்புகிறார்கள் அதுவும் இப்படி ஒரு தகவலை..என்று யோசிக்கும் போதே என் கணவர் விழுத்துக்கொண்டு... “என்ன..இந்த நேரத்துல Mobile ல வைச்சுக்கிட்டு என்ன பண்ற” என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவரின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என, "இல்லை அலாரம் செட் பண்ண மறந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு Mobile லை ‘off‘ செய்துவிட்டு, யாராய் இருக்கும் என யோசித்து கொண்டே தூங்கி போய்விட்டேன்..

காலையில் எழுந்து எனக்கு Mobile லை ‘On’ செய்யவே பயமாக இருந்தது. சரி அலுவலகம் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.. அலுவலகம் சென்று எனக்கு தெரிந்த அத்தனை நம்பர்களையும் செக் செய்து பார்த்தும், தெரிந்த நம்பராக இல்லை. சரி பார்க்கலாம் என விட்டுவிட்டேன். படுக்கும் முன் silent mode ல் வைத்து விட்டு படுத்துவிட்டேன், அடுத்த நாள் பார்த்தால் முந்தைய இரவும் 11 மணிக்கு மேல் தகவல் வந்திருந்தது..

உன் கண்கள்.............. உதடுகள்........... என்று மிக அசிங்கமாக வர்ணித்து கடைசியில் படுக்கை அறை வரை அவன் என்னை அழைத்திருந்தான் என்பது தாங்கமுடியாத மன உளைச்சலை எனக்கு தந்தது. எத்தனை நம்பிக்கையாக நான் எல்லோரிடமும் என் நம்பரை கொடுத்திருக்கிறேன். ஏன் இத்தனை அசிங்கமாக தகவல் அனுப்புகிறார்கள். பார்க்கும் அத்தனை பேரையும், இவராக இருக்குமோ இவராக இருக்குமோ என என் மனது எண்ண ஆரம்பித்தது. அந்த நம்பரை திருப்பி கூப்பிட்டால் யாரும் எடுப்பதில்லை. பிறகு நானாக “ if you don’t stop this, I’ll call Police” என்று தகவல் அனுப்பினேன். ஆனால் அவனோ..திருப்பி யாரிடம் வேணுமாலும் போ..ஆனால் உன்னை.............தீருவேன் என்றான் இப்படி தினம் தினம் அசிங்கம் அதிகமானது, என் மன உளைச்சலும் அதிகமாகி போனது.

இதில் நான் அதிகம் பயந்தும், அசிங்கபட்டதும் என் மகனின் கண்ணில் இந்த தகவல்கள் பட்டுவிடுமோ என்று தான். செல் ஃபோன் ஆன் செய்யவே பயமாகி போனது. என் மகன் games விளையாட செல் ஃபோனை எடுப்பான்.. என் கணவரும் ஏதாவது நம்பர் தேவைக்கு எடுப்பார்..அவர்கள் இந்த அசிங்கத்தை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று என்ற எண்ணமே என் நிம்மதியை குலைத்தது.

ஆனால் நாளுக்கு நாள் அதிகமாகி பொறுக்க முடியாமல் என் கணவரிடம், மிக மோசமான தகவல்களை அழித்து விட்டு படிக்கும் படியாக இருந்ததை மட்டுமே காட்டினேன். அவரோ உடனே ‘police’ க்கு போகலாம் என்றார். நான் அதற்கு உடன்படவில்லை. போலிஸ்ஸிடம் போனால் எல்லா தகவல்களையும் காட்டவேண்டும், என்னையே நான் அசிங்கபடுத்தி கொள்ள வேண்டுமா? என தோன்றியது. இது ஒரு 10 நாட்கள் தொடர்ந்தது.. நான் போலிஸ்க்கு வராததால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனையும் ஆனது. பின்பு ஒரு முடிவு செய்து ‘pre paid’ தானே தூக்கி எரிந்து விடலாம் என சிம்’மை எடுத்துவிட்டு புது நம்பர் போட்டுவிட்டேன்.

இப்போது யாருக்குமே கொடுப்பது இல்லை.. இந்த 10 நாள் அனுபவம் என்றாலும் மிக மோசமான அனுபவம்..இது.. இத்தனை அசிங்கமாக எப்படி என்னை சார்ந்தவர்கள், நண்பர்கள் என நான் நம்புபவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை என்னால் சகித்து கொள்ளவே முடியவில்லை..யாரை நம்புவது என்று ஒட்டு மொத்தமாக யாருக்குமே நான் நம்பர் கொடுக்காமல் இருக்கிறேன் (பெண்கள் உட்பட-அவர்கள் மூலம் யாருக்காவது தெரிந்துவிட்டால்) என்பது தான் உண்மை....

அணில் குட்டி அனிதா:- கவிதா ...நீங்க நினைக்கற மாதிரி உங்களுக்கு பக்கத்துல, இல்ல..உங்கள நேர்ல பாத்தவங்களா இருக்க வாய்ப்பே இல்ல.. ஏன்னா.. உங்கள நேர்ல பாத்தவாங்க எல்லாம் அம்மன் கோயில்ல போய் விபூதி வாங்கி வச்சிக்கிட்டு இராத்திரி ஆன அத பூசிக்கிட்டு தான் தூங்கறதா கேள்விப்பட்டேன்.. அதனால அநாவசியமா அப்பாவிங்க மேல சந்தேக படா...தீ..ங்க.. ..

ஆஆ..அய்யோ....யம்மா..ம்ம்..யப்பா........கவிதா..ப்ளீஸ்..விடுங்க.. இனிமே இப்படி எல்லாம் சொல்லமாட்டேன்...பொய்யா இருந்தாலும் நீங்க 40 kg தாஜ்மகல்’ னு சொல்றேன்.. அய்யோ.. ! யம்மா. ! வலிக்குது... கவிதா..ப்ளீஸ்...விடுங்க..வலிக்குது.. .விடுங்களேன்.. கவிதா ஜஸ்ட்..ஒன் நிமிட் ப்ரேக் ப்ளீஸ்........யா டான்க்ஸ்.......

அட உங்களத்தான்...எங்களதான் தான் இங்க நொக்கறாங்கன்னு தெரியுது இல்ல... அப்புறம் என்ன லுக்கு.. டீசன் ட்டா கிளம்ப வேண்டியது தானே...?.. படிச்சமா.. போனமான்னு இல்லாம...ம்ம்..ம்ம் கிளம்புங்க.. சீக்கிரம்.. வெளியில யாரும் மூச்..புரிஞ்சிதா.....ம்ம்..அது... அம்மனி .நீங்க ஆரம்பிங்க...நாம..அப்படி கொஞ்சம் உள்ளுக்கு போயி..க்...க்..க..லா...மா....................ஆஆஆ.....

திருமணத்திற்கு பிறகு பெண்கள் என்ன பீப்பா’வா??

ஏன் திருமணத்திற்கு பிறகு இந்திய பெண்கள் பீப்பா’ மாதிரி ஆகிவிடுகிறார்கள்..விவரியுங்கள் பார்க்கலாம்? நண்பர் தரண் அவர்கள் ‘கூந்தலும் கணவனும்” பதிவில் இப்படிதான் குறிப்பிட்டு இருந்தார். எங்கேயோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, எப்போது பார்த்தாலும், இந்தியர்களையும், இந்திய கலாசாரத்தையும், இந்திய பெண்களின் அழகை ?!! யும் குறை கூறுவதே அவருக்கு வேலையாய் போயிற்று..

என் முதல் கேள்வி - ஏன் திருமணதிற்கு பிறகு ஆண்கள் ரோட் ரோலர் போல ஆவதில்லையா.?.. உதாரணத்திற்கு அவர்களின் தொப்பை ஒன்றே போதுமே.. ஒரு எண்ணெய் விளம்பரத்தில், “ஏங்க இவங்க தொப்பையை குறைக்கக்கூடாதா? “ என வித விதமான தொப்பைகளை காட்டுகிறார்கள்.. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அடக்கமுடியாது..சிரிப்பு சிரிப்பா வரும்...இப்படி தொப்பைக்கு சொந்தமானவர்கள் பெண்களை கிண்டலடிப்பது எப்படி பொருந்தும் என்று புரியவில்லை.

திருமணத்திற்கு பின் ஆண்கள் குண்டாவதற்கு முக்கிய காரணம் மாமியார் வீட்டில் பந்தாவாக மாப்பிள்ளை என்ற புது சர்டிவிக்”கேட்” டோடு மூன்றுக்கு 5 முறை மூக்கு முட்டவும், அதற்கு மேலும் சாப்பிட்டு விட்டு, வீடு வீடாக விருந்தும் என்று, ஒரு வாரத்திற்குள் பாருங்கள்..”மாப்புள நீயா?” ன்னு கேட்கற அளவுக்கு குண்டாகிவிடுகிறார்கள்.. ஆனால் பெண்கள் அப்படியா?.. மனசுல கை வைச்சு சொல்லுங்க பார்க்கலாம். பெண்கள் ஏன் குண்டாகி போகிறார்கள் என்பதற்கான எனக்கு தெரிந்த காரணங்களை கூறுகிறேன்..

1. குழந்தை பிறந்தவுடன், தன்னை கவனிப்பதை விட குழந்தையை கவனிக்கவும், குழந்தைக்கு பாலூட்டவும் அவர்கள் நிறைய சாப்பிட தொடங்குகிறார்கள். தனக்கும், தன் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுவதால் சதை விழுந்து போகிறது..
2. நிறைய பெண்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக சதை விழுகிறது என்பது தெரிவதில்லை.
3. கர்ப்பபை பிரச்சனை, சரியான இடைவெளி இல்லாத உதிரப்போக்கு, அதிக (அ) மிக குறைந்த உதிர போக்கு காரணமாகவும் குண்டாகி போகிறார்கள்.
4. மன ரீதியான பாதிப்பு, திருமணம் ஆன பிறகு அவர்கள் மேல் உள்ள அழகின் அவசியம் போய், மற்றவர்களின் மீது (கணவன், குழந்தை) திரும்புவதும் இதற்கு காரணம்.
5. எந்த உடல் பிரச்சனையும் இல்லாத பெண்கள், கணவரும், குழந்தைகளும் வெளியில் சென்றபிறகு, வேலை எதுவும் இல்லாமல் போவதால், பகல் நேரங்களில் தூங்குவதாலும், தொலைக்காட்சியே கதி என்று உட்கார்ந்து விடுவதும் காரணங்களாகிறது.
6. வீட்டில் மீந்து போன சாப்பாட்டை (வீணாக போகிறதே என்று) தலை எழுத்தே என்று சாப்பிடுவதாலும் குண்டாகிறார்கள்.
7. உடலுக்கு சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவதும் ஒரு முக்கிய காரணம். (எல்லாவற்றிக்கும் இப்போது தான் மிஷின் வந்துவிட்டதே)
8. கடைசியாக, வேலைக்கு போகும் பெண்கள், காலையில் சீட்டில் போய் உட்கார்ந்தால், மாலை தான் எழுவார்கள். உடலுக்கு எந்த பயிற்சியும் இல்லாது போகிறது.

இப்படி தன் நலம் பாராட்டாமல், தன் கணவன், குழந்தை நலம் பாராட்டுவது மட்டுமன்றி, உழைத்து உழைத்தே குண்டாகி போகும் பெண்களை, சும்மா கிண்டல் செய்வதை விட்டுவிட்டு உங்களின் தொப்பை ஏன் வளர்ர்ர்ர்ர்ர்ந்ந்ந்ந்ந்ந்தூ..வந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு 7 காரணம் வேண்டாம் ஒரே ஒரு உருப்படியான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அணில் குட்டி அனிதா:- அம்மனிக்கு வாய் சும்மாவே இருக்கறது இல்லை.. நம்மளயே தினமும் ஒருத்தர் உருட்டி விடற மாதிரி இருக்கோமே.. இந்த மாதிரி subject எல்லாம் எழுதலாமா.. ம்ம்ம்...அம்மனிக்கு கொஞ்சம் கூட அடக்க ஒடுக்கம் இல்லங்க.!

அப்புறம்..ஒரு விஷயம்., இவங்க வீட்டுல renovation க்கு அவங்க hubby ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு.. என்னான்னு கேக்கறீங்களா?.. single door எல்லம் double door ஆ மாத்தறாங்க.. அட..நீங்க நினைக்கற மாதிரி “வாஸ்து “ சாஸ்த்திரம் எல்லாம் பாக்கலைங்க.. அம்மனி சைஸ்’ க்கு single door பத்தலையாமா...!! ஹி..ஹி.. விட்டுகுள்ள ஆட்டோ வைச்சி தான் இவங்கள ஒரு சுத்து சுத்த வேண்டி இருக்கு .!! .. பஸ், ட்ரைன் எல்லாத்திலுமே 1-1/2 டிக்கட் தான்.. இப்படியே போனா.. இருந்தாலும், செத்தாலும்.. அம்மனிக்கு பெரிய பெரிய வாசல் வச்சி..”கவிதா மகல்” தான் கட்டனும்...

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும், கலாச்சார சீர்கேடும்

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் சென்னையில் அதிகமாகிவிட்ட நிலையில் அயல்நாட்டவரின் கலாசாரமும் நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. அலுவலகத்தில் மாதம் ஒருமுறை 5 ஸ்டார் ஹோட்டலில் லன்ச், (அ) டின்னர் ஏற்பாடு செய்கிறார்கள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு எப்போதாவது இதுபோல் அலுவலக வேலை காரணமாக சென்றிருந்தாலும், வெளிநாட்டரவுடன் சேர்ந்து செல்லும் போது தனி அனுபவமாக தான் இருக்கிறது. குறிப்பாக அசைவ உணவு, வெளிநாட்டு உயர்ந்த வகை மது வகைகள் நிச்சயம் இருக்கும். இவை இல்லாமல் ஆண், பெண் என்ற வித்தியாசம் எங்களிடம் இல்லாமல் எங்களுது வெளிநாட்டு மேலாளர் பார்த்துக்கொள்வார். அவ்வப்போது நடுநடுவே எங்களுக்கு அதற்கான அறிவுரை வழங்கப்படும் அதேசமயம் நம் கலாசாரமும் அவருக்கு தெரிந்து இருப்பதால் எங்களை எதற்கும் அவர் கட்டாயபடுத்துவதும் இல்லை.

இப்படி செல்லும் போது நம் இந்திய நண்பர்களிடம் பார்த்த சில பழக்கவழக்கங்கள், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது நாங்கள் விருப்பப்பட்ட எதையும் அங்கே சாப்பிடலாம். Standard Menu கிடையாது. ஆண்கள் சிலர், மது சாப்பிடும் பழக்கம் மிக அறிதாக இருந்தாலும், உயர்ந்த ரக மதுபானத்தை பார்த்தவுடன் அதிகமாக குடிப்பார்கள். சொல்லும் காரணம் “ஓசியில் கிடைக்கும் போது அனுபவிக்கனும் என்பதே”. குடித்தாலும் பரவாயில்லை, நேரம் ஆக ஆக அவர்களின் முன்பே அழகாக இருக்கும் முகம் லேசாக மாறிவிடும், பேச்சும் தான்.. தாங்கமுடியாத அளவுக்கு பேசுவார்கள். திருமணம் ஆகாதவர்கள் அதிகம், அதே சமயம் எங்களுடன் சாப்பிட வந்த வெளிநாட்டவர்களும் இவர்களை விட அதிகம் மது அருந்துவார்கள் தான், ஆனால், அவர்கள் முகத்திலோ, பேச்சிலோ அதிக மாற்றம் இருக்காது. இதை நான் நண்பர்களிடம் கேட்கும் போது, அவர்கள் எப்போதுமே சாப்பாட்டுடன் குடிப்பதால் பழகி போய் விட்டாரகள். நாம் அப்படியா, இப்படி எப்போதாவது ஓசியில் கிடைக்கும் போது சாப்பிடுவாதால் உளர ஆரம்பித்துவிடுகிறோம் என்பார்கள். இதில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு வயது 22- 25 க்குள் தான் இருக்கும். இவர்கள் மட்டும் அல்ல பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் குடிப்பது என்பதை தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஆக்கி கொண்டார்கள். இதற்கு அவர்களின் அதிகமான சம்பளம், வாழ்க்கை முறை, நிறுவனங்களில் சொல்லித்தரப்படும் கலாசாரம் எல்லாமும் காரணமாகிறது.

பிச்சா கார்னரில் மொய்க்கும் கூட்டம், எப்போதும் சாட் உணவு என்று தங்களை வெளிநாட்டில் இருப்பது போன்று பாவித்து கொள்கிறார்கள். இந்த உணவு பழக்கவழக்கங்களால், 20 வது வயது மதிக்க தக்க பிள்ளைகள் 30 பது வயது போல் தோற்றமளிக்கிறார்கள். குடி பழக்கம், தூக்கமின்மை காரணமாக கண்களுக்கு அடியில் எப்போதும் ஒரு சிறு வீக்கம் தெரிகிறது.

சாஃப்ட்வேர் டிவலப்மெண்டு என்று எப்போது பார்த்தாலும் கம்பூயட்டரையே வெறித்து கொண்டும், எப்போதும் அதைப்பற்றிய கவனத்துடம் இருப்பது இல்லாமல், “டென்ஷன்னா இருக்கு , ஒரு தம் போட்டுடு வந்தால் சரியாகி போகும்” என்று புகைப்பதும் கூட நிரந்தர பழக்கமாகிவிட்டது. இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்க்கும் பல பிள்ளைகளுக்கு தலையில் முடி பஞ்சம். 22-25 வயதுக்குள்ளேயே முடி கொட்டி போகிறது, இள நரை வேறு. முதிற்ச்சியான, வயதான தோற்றம், திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருக்குமோ என்று எண்ண தோன்றும்.

பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜன்க் உணவை அதிகமாக சாப்பிட்டு மிகவும் குண்டாகி போய் இருக்கிறார்கள். உடம்பை குறைக்க ஜிம் வேறு தனி. ஜிம், அழகு நிலையத்திற்கு இவர்கள் கொடுக்கும் காசுக்கு இவர்களின் கல்யாண செலவையே பார்த்து விடலாம்.

உணவு பழக்கங்களையும், குடி மற்றும் புகைக்கும் பழக்கத்தை மாற்றினாலே இவர்களின் தோற்றத்தில் நல்ல வேறுபாடு தெரியும். சம்பாதித்தல் என்பது முக்கியமே….அதற்காக சம்பாதிப்பதை இப்படி தான் பயன்படுத்த வேண்டுமா.. அலுவலக நேரம் போக.மீதி நேரத்தை விளையாட்டு, டிரைவிங், நீச்சல் , குடும்பம், நண்பர்கள் என்று செலவிட எத்தனையோ வழிகள் இருக்கிறது..

ஆரோக்கியம் எதில் உள்ளது என்பதை உணர்வார்களா நம் இளைஞர்கள்?.

அணில் குட்டி அணிதா:- முடிச்சிட்டிங்கீங்களா அம்மனி?.. அது எப்படி அம்மனி எப்பவுமே ஊருக்கே உபதேசம் பண்றீங்க?.. என்னவோ நீங்க என்னவோ மார்கேண்டேயினின்னு நெனப்பா?.. வயசானாவே..இப்படிதான்.. சின்ன பசங்க எது பண்ணாலும் உபதேசம் பண்ண தோனும்.. ஆனா நம்ம கவிதா உபதேசம் பண்ணல.. புலம்பறாங்க.. ம்ம்..என்னடா.. நம்மால தம் போட முடியலயே.. ராத்திரியல நைட் கிளப்’ல போய் பீர் அடிச்சிட்டு, dance பண்ணமுடியலேன்னு.. பொறாம.. விடுங்க..அவங்க அப்படிதான்..! அப்புறம் இன்னொரு விஷயம்..காத குடுங்க.. அம்மனி புள்ளைய எப்படி வளக்கறாங்கன்னு கேளுங்க.. புள்ள கேட்கும் போது எல்லாம்..pizza, burger, sandwidch..தான்.. ம்ம்.. வூட்டுகுள்ள ஒன்னும் ..வேளியில ஒன்னு.. கேப்பாரு இல்ல… நானும் ஒவ்வொரு வாட்டியும்..நீங்க யாராவது கேப்பீங்கன்னு டிப்ஸ் குடுக்கறேன்.. ம்ம்ம்.. கவனிங்க!!.

பெண்ணிற்காக ஒரு தாஜ்மகல், ஆணிற்காக..?

காதல் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ்மகல், காதலிக்காக கட்டப்பட்டது இல்லை என்பதை தெரிந்து கொண்டது, மிக சில வருடங்களுக்கு முன் அங்கு சென்ற போது தான்.

சிறு வயதில் பள்ளியில், ஷாஜஹான் தன் காதலி மும்தாஜுக்காக ஆக்ராவில் தாஜ்மகல் கட்டினார். இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.. என்று படித்தது மட்டுமே.. கொஞ்சம் பெரிய பிள்ளை ஆனாதும், சினிமாக்களில் காட்டும் போது, பிரம்மிப்பாக இருக்கும், நேரில் சென்று ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆசை நிறைவேறிற்று.. அங்கு மகலின் உள்ளே செல்வதற்கு முன் தாஜ்மகலின் வரலாறை பதித்துள்ளனர். அதை படித்தபிறகு தான் ஷாஜஹான் தன் காதல் மனைவிக்காக கட்டியது என்று தெரிந்தது. மும்தாஜ் தன் 15 ஆவது குழந்தை பிறந்தவுடன், இறந்து போனார், அதற்கு பிறகு அவரின் நினைவாக கட்டியது தான் தாஜ்மகல்.

தாஜ்மகலை நேரில் பார்த்த போது, ஷாஜகான் அவர் மனைவி மேல் வைத்த அன்பு எத்தனை ஆழமானது என்று புரிந்தது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய மகலை கட்டியிருக்கிறாரே..என்று மிக பிரம்மிப்பாக இருந்தது.. ஒவ்வொரு கல்லிலும் அவரின் காதல் தெரிகிறது. மறைந்து போன அந்த மனிதரை பார்க்க முடியாவிட்டாலும் அவரின் ஆழமான அன்பை அந்த மகலில் உணரமுடிந்தது.

காதலிக்கும், மனைவிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.. காதலிக்கும் போது ஆண்களுக்கு பெண்களிடம் உள்ள காதலும் அன்பும், மனைவியான பிறகு இருக்காது என்பது தெரிந்த விஷயம்.. மனைவிக்காக..அதுவும் 15 குழந்தைகள் பிறந்த பிறகும் க்கூட ஒருவர் மனைவி மேல் இருக்கும் அன்பை இப்படி வெளிப்படுத்தமுடியுமா என ஆச்சரியமாக இருந்தது.. என் கணவரிடம் கூட இதைப்பற்றி சொன்னேன்.. “நீங்களும் நம் அன்பின் வெளிப்பாடாக எனக்கு இப்படி ஒரு மாளிகை கட்டுங்களேன்னு...” அவரோ “இது ஷாஜஹான் அவர் மனைவி இறந்தபிறகு கட்டியது.. உனக்கு எப்படி வசதி என்றார்.........”

சரி விஷயத்திற்கு வருவோம்... தாஜ்மகலை பார்த்த போது, ஏன் பெண்கள் ஆண்களுக்காக எதுவுமே இப்படி செய்வதில்லை.. பெண்கள் என்ன அன்பில்லாதவர்களா?.. காதல் இல்லாதவர்களா.. கல் நெஞ்சக்காரர்களா?.. காதலனுக்கோ, கணவருக்கோ இதுவரை எந்த பெண்ணாவது (வரலாற்று கதைகளை தவிர) இப்படி நினைவு சின்னங்களோ, இல்லை ஏதோ ஒரு வகையில் வியக்கும்படி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்காங்களான்னா?.. எனக்கு தெரிந்து இல்லை. தாஜ்மகலை விடுங்கள், ஒரு தெருவில் நடந்து போகும் போது பார்த்தால் வீடுகளின் பெயர் “லஷ்மி இல்லம்” “பத்மாவதி இல்லம்”... இப்படி அந்த வீட்டு குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும். நிச்சயம் இவை பிள்ளைகள் பெயர் இல்லை, (பொதுவாக பிள்ளைகள் பெயர் வாகனங்களில் (கார், பைக்..) பார்க்கலாம்.) இப்படி ஆண்கள் எல்லாவற்றிலும் அதிகமாக தங்களின் அன்பை வெளிபடுத்தும் போது, பெண்கள் ஏன் வெளிபடுத்துவது இல்லை..?!!

எனக்கு தெரிந்து, பொதுவாக பெண்கள் ஆண்களை விட மன வலிமை பெற்றவர்கள். எதையும் எளிதில் வெளியில் சொல்லிவிட கூடியவர்கள் இல்லை. பெண்ணின் மனதை இதுவரை முழுதும் அறிந்தது யாரும் இல்லை எனும் அளவிற்கு மனதளவில் வலிமை கொண்டவர்கள் என்றாலும் உள்ளுக்குள் ஆண்களை விட அதிக அன்பு, நேசம், பாசம் கொண்டவர்கள் பெண்களே.

ஒரு பத்திரிக்கையில் படித்த உண்மை சம்பவம் இது, ஒரு பெண்ணின் கணவர், சிறு வயதிலேயெ ஒரு விபத்தின் மூலம் நடக்கும் மற்றும், பேசும் சக்தியை இழந்து, படுத்த படுக்கையாகிவிட்டார். அவரை அவரின் மனைவி விட்டு விலகி செல்லாமல், வருட கணக்காக ஒரு குழந்தையை போல் கவனித்து வருகிறார். அவரின் பார்வையில் மட்டுமே அசைவு இருக்கிறது..அதையே தன் வாழ்க்கையாக நினைத்து அந்த பெண்மனி இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு முழு பணிவிடையும் இவரே செய்கிறார் (உணவு கொடுப்பது, குளிப்பாட்டுவது, உடைகள் மாற்றுவது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது). இத்தனை வருடம் ஆன பிறகும் கூட அவர் இதை செய்ய சோர்ந்து போகவில்லை என்பது வியக்கதக்க பெண்ணின் குணம் அல்லவா?.. இதில் எத்தனை காதல் உள்ளது. அடுத்து கேரளாவிலும் இதை போன்றே ஒரு பெண் தன் கணவரை பார்த்து கொள்கிறார்..அவர் வெளி உலகை பார்த்தே ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற செய்தியும் கூட என்னை பெண்ணின் அன்பையும் காதலையும் எண்ணி வியக்கவைத்தது. இந்த உண்மை கதை, மலையாளத்தில் நடிகை ரேவதி, நடிகர் மோகன்லால் நடித்து திரைபடமாக வெளிவந்துள்ளது. (படம் பெயர் தெரியவில்லை)

ஆக, ஆண்களை போன்று பெண்கள் காதலை வெளிப்படுத்துவது இல்லையே தவிர..ஆண்களை விட பெண்களின் அன்பிற்கே சக்தியும், ஆயுட்காலமும் அதிகம். ஒரு தாஜ்மகல் என்ன ஒராயிரம் தாஜ்மகல் ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள்ளும்......

அணில் குட்டி அனிதா:- ஹா..ஹா..ஹா.. கவிதா சூப்பரா வூடு(தாஜ்மகல்) கட்டி இருக்கீங்க போங்க.. ம்ம்... பெண் மனசு பெண்ணுக்கு தானே தெரியும்.. அது இருக்கட்டும்... உங்களுக்கு போய்.. ஹா..ஹா....தாஜ்மகல் ஹா..ஹா... எல்லாம் கட்ட சொல்லி.. ஹா..ஹா...தமாஷ்ஷு போங்க..வர வர நீங்க பண்ற தமாஷ் தாங்க முடியல...அய்யோ..அய்யோ..இது எல்லாம் கேட்டு வரக்கூடாது..அம்மனி..தானா வரனும்.......ஆனா உங்க hubby correct ஆ பதில் சொல்லி இருக்காரு.. என்னைய மாதிரி அவரும் எப்ப விடுதலை கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருக்காரு போல........அடடா..உடனே..சும்மா முட்ட கண்ண வச்சிக்கிட்டு முறைக்காதீங்க.. பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்குது இல்ல......

பெண்கள் சுடுக்காட்டிற்கு செல்வதில்லை...ஏன்?

ஏதோ ஒரு நல்ல காரணத்துக்காக தான் பெண்களை தெருவுடன் விட்டு செல்கிறார்கள் என்றால் அது என்ன?.. எங்களது வீட்டில் சொல்லப்பட்ட விளக்கம்- பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், அவர்களால் சுடுக்காட்டில் நடப்பவைகளை பார்த்து மனம் தாங்கமுடியாது..செய்ய வேண்டிய வேலைகளை கவனிப்பார்களா..இல்லை பெண்கள் அழுவதை பார்த்து கொண்டும், சமாதானம் செய்து கொண்டும் இருப்பார்களா?. அதனால் தான் வீட்டுடனே அவர்களை நிறுத்தி விடுகிறார்கள் என்பதே

இந்த விளக்கம் சரியானதா என எப்பவும் ஒரு கேள்வி. ?.. பெண்கள் மென்மையானவர்கள், அதிக துக்கத்தை தாங்கமாட்டார்கள் என்றால், கிறுத்துவ மதத்தில் துக்கத்தில் கடைசி வரை பெண்கள் இருக்கிறார்களே?.. மதத்திற்கு மதம் பெண்களின் இயல்பான குணம் மாறி போகிறதா?.. இதற்கு அவர்கள் சிறு வயது முதலே அப்படியே வளர்க்கப்படுகிறார்கள், அதனால் அது அவர்களுக்கு பழகி விடுகிறது என்றே வைத்து கொள்வோம். ஏன் நாமும் அப்படி பழகக்கூடாது... ஏன் தெருவுடன் நிற்க வேண்டும்.

பல காரணங்களை யோசிக்கும் போது...தோன்றிய ஒன்று....எல்லா ஆண்களும், பெண்களும் சுடுகாடு வரையில் சென்றுவிட்டால், வீட்டை சுத்தம் செய்வது யார்?.. இதற்காக பெண்கள் வீட்டோடு நின்று விட்டால்.. இந்த வேலைகள் தானாக நடக்கும் என்று இப்படி நடைமுறை படுத்தி இருப்பார்களோ..?! என்பது தான்.

இந்த பதிவிற்கு முக்கிய காரணம், எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு நண்பர் மாரடைப்பால் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு ஒரே மகள் (22 வயது), அவருடைய உறவினர்கள், அந்த பெண்ணின் சித்தப்பா மகனை எல்லா காரியங்களையும் செய்ய சொல்ல, அந்த பெண், தன் உறவினர்களிடம், என் அப்பாவிற்கு எல்லாம் நான் தான் செய்வேன் என வாதம் செய்து எல்லாமே அவள் தான் செய்தாள். கடைசியாக சுடுக்காட்டிற்கு அவள் வரக்கூடாது என உறவினர்கள் மறுக்க, அவர்கள் சொன்ன காரணம் அவள் அங்கு வந்தால் பயந்து போவாள் என்பதே. ஆனால் அந்த பெண்ணோ..”அவர் என் அப்பாங்க..நான் எப்படி அவரை பார்த்து பயப்படுவேன்..நான் தான் அவருக்கு சுடுக்காட்டிலும் எல்லாம் செய்வேன்” என்று விடாப்பிடியாக சென்று செய்து விட்டு வந்தாள்.

இது சென்னை போன்ற நகரங்களில் சாத்தியமானது.. இதுவே..நம் கிராமங்களில் சாத்தியப்படுமா?.. பெண்கள் இப்படி செய்ய அனுமதிப்பார்களா..?!!

தன் சொந்த அப்பாவிற்கு கடைசியாக செய்யும் ஈமச்சடங்கை க்கூட ஒரு பெண் போராடித்தான் செய்ய வேண்டி உள்ளது என்பதை நினைக்கும் போது நம் சமுதாயத்தின் பார்வைகளும், பழக்கவழக்கங்களும் எப்போது மாறுமோ என வேதனையாக இருக்கிறது....

அணில் குட்டி அனிதா:- ஏன் கவிதா நீங்க வேதனை படறீங்க.. உங்களுக்கு என்ன பையன் தானே....ஆனா நான் ஒன்னு..சொல்றேன்.. நீங்க மூச்சு விட மறந்த பிறகு..உங்கள பாக்கவர அத்தனை ladies ஐயும், வேன், கார், ஆட்டோ ன்னு வச்சி எப்படியாவது உங்கள எரிக்கிற இடத்துக்கு கூட்டிட்டி வரது என் பொறுப்பு....அது சரி.....நீங்க எப்ப மூச்சு விட மறப்பீங்க.. அதுக்காக....ரொம்ப நாள் எடுத்துக்காதீங்க சரியா?!!!

அணில் குட்டியின் வருத்தம் - வாருங்கள்..கேளுங்கள்..

அடடடடா.. என்ன வெயில்... என்ன வெயில்.. இந்த வெயில் தாங்க முடியாம தாங்க குளிர் பிரதேசமா போய், அங்க இருக்கற தோப்புங்களை எல்லாம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வராலான்னு “கோடை” போனேங்க.. ..

இந்த அம்மனி கவிதா இருக்காங்கலே...நான் லீவு கேட்டவுடனே ..காத்திருந்த மாதிரி ..போய்ட்டு மெதுவ்வ்வ்வ்வ்வா வா..ன்னு அனுப்பிட்டு..இங்க blog ல நமக்கு அல்வா குடுத்துட்டாங்க.....

இத்தனை பேர் இருக்கீங்க..ரெண்டு பேர் வேணாம்..அட..ஒருத்தர்...ஒரே ஒருத்தர்.. இந்த அம்மனிய ஒரு வார்த்தை க்கூட கேக்கலையே ..அதுதாங்க எனக்கு வருத்தம்.. வருத்தமோ வருத்தம்..அழுக அழுகையா..வருது...ம்ம்ம்ம்ஸ்ஸ்ஷ்ஷ்.. (ஒன்னும் இல்ல கொஞ்சம் மூக்கை சிந்திக்கிட்டேன்..)

மேட்டர்க்கு இன்னும் நான் வரலையோ...இதோ வந்துட்டேன்.. என்னை இந்த அம்மனி (க)பாவிதா..அவங்க எழுதின “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே..

ஆற்றலரசி..ஆருயிர் அக்கா பொன்ஸ்...அமெரிக்கா போங்க..இல்லை ஆஸ்திரிலியா போங்க..ஆனா..என்னைய மறக்கலாமா.. இப்படி ஒன்னுக்குள்ள 2, 3 , 4 பழகிட்டு ஒரு வார்த்தை க்கூட..என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா.. அவங்கள மட்டும் புகழ்ந்து பதில் போட்டுட்டுடு போயிடீங்க...நியாமா...

அடுத்தது..நற..நற..நற..பாலா...பல் இருக்கா அண்ணாச்சீ..சீ சீ.. இப்படியே பல்லை கடிச்சீங்க..ஒரு நாள் “பொக்கை பாலா “ வா ஆகபோறீங்க.. சரி நம்ம மேட்டருக்கு வாங்க.. நீங்களாவது என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா..

அடுத்தது.. நக்கீரர் நெ.1. அருள்..நான் இருந்தாலும் ஒரம் கட்ட பாப்பீங்க..இல்லைனாலும் கேட்பீங்க.. “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே.. கேட்டீங்களா.. உங்களுக்கு தான் நான் இல்லைனா..கொண்டாட்டாமாச்சே..!

பெருமதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய ஐயா பெருந்தகை..பேனை 106 பெருமாள் ஆக்கிய...சந்தோஷ் அவர்களே.......... (போதுமா மரியாதை…..யப்பா...இதுவே மூச்சி வாங்குது..ஒரு fanta ப்ளீஸ்) நான் வாய் தொறக்க கூடாதுன்னு அம்மனி சொல்ற அளவுக்கு பண்ணீங்களே.. அந்த அம்மனி என்னைய வலைப்பூடேட்டா லிருந்து கழட்டி விட்டுட்டாங்களே.. கேட்டீங்களா....

சிங்கபூர்லேர்ந்து ஒருத்தர் சென்னையில கால் வைக்கல அதுகுள்ள phone பண்ணி, கவிதா..கவிதா..அந்த அணில் குட்டி யாருன்னு கேக்க தெரியுது இல்ல... “வலைப்பூடேட்டா “ வில இல்லையே எங்கனு கேக்க தெரிஞ்சிதா.. ஆமா நான் தான் சொல்லியிருக்கேன் .இல்ல... செயகுமார்...புரியலனா விட்டுடனும்னு..திருப்பி திருப்பி அது என்ன.. அணில் குட்டி யாரு? அணில் குட்டி யாருன்னு.?.

நான் தெரியாமா தான் கேக்கறேன்.. ஆமா.. இந்த கவிதா..யாரு.. நான் இல்லாமே இந்த அம்மா தனியா..எப்படி எழுதுவாங்க.. இவங்க பதிவ படிக்க வர கொஞ்ச நஞ்சம் பேரும் என் அறிவையும்,ஆற்றலையிம் மதிச்சி, என் முகத்துக்காக வராங்க.. அது தெரியாம..இவங்க..என்னடான்னா.. என்ன விட்டுட்டு ஒரு “வலைப்பூடேட்டா” பதிவாக்கி இருக்காங்க.. இதுல இருந்து ஒரு விஷயம் புரியது..நம்மல ஒரு ஜீவனாவே இந்த blog ல யாரும் மதிக்கல.. சே..! ஹ்ம்ம்..என் அறிவுக்கும், ஆற்றலுக்கும்..அழகுக்கும் வந்த சோதனை அல்லவா இது..!

ஆனா ஒன்னு சொல்லிட்டேன்.. எனக்கு நீங்க அத்தன பேரும் அந்த அம்மனிக்கிட்ட கேட்டு..பதில் சொல்லியே தீரனும்..

புரியுது..இவ்ளோ சீன் போடற நான் ஏன்..அந்த அம்மனிய நேரா கேக்க கூடாதுன்னு தானே கேக்கறீங்க.. அக்காங்களா...தம்பிகளா... அண்ணாச்சிகளா.. தங்கச்சிகளா.. ஒரு சின்ன விஷயத்தை நீங்க எல்லாரும் புரிஞ்சிக்கனும்.. இந்த விஷயத்தை நான் நேரா கேட்டா.. அம்மனி என் சீட்டை கிழிச்சி. ஒரேடியா அனிப்பிடுவாங்க... அப்புறம்.. நான் ooti, kodai ன்னு டிரிப் அடிக்க முடியாது....ஓட்ட சட்டி வைச்சு பிச்ச இல்ல பிச்ச அதுதான் எடுக்கனும்.....