இது 100 ஆவது பதிவு.. இது வரைக்கும் என்ன எழுதியும் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.
இங்கு எழுத ஆரம்பித்து நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள், சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். 100 ஆவது பதிவை எழுதும் போது எனக்கு தோன்றியது இனி நிறைய எழுதவேண்டும், நடுவே எதற்காகவோ யாருக்காகவோ எழுதுவதில் தடைகள் இருந்தன.. ஒரு முறை இல்லை மூன்று முறை இனிமேல் எழுதவே கூடாது என்று நினைத்தேன். ஆனால் இப்போது என்னுடைய குழந்தைக்கு எப்போதும் என்னுடைய எழுத்துக்கள் என்னுடைய நினைவுகளாக இருக்க வேண்டும் என்று நினைத்து தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவுடன் வந்துள்ளேன்.
100 என்றவுடன் சட்டென்று/பட்டேன்று நினைவுக்கு வந்த சில -
1. சச்சின் :))))))
2. போலிஸ்
3. 100 ரூபாய் அதில் காந்தி தாத்தாவின் சிரிப்பு
4. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா..
5. கமல்ஹாசனின் ராஜபார்வை
6. பிளாகர்கள் எழுதும் அவர்களின் 100 ஆவது பதிவு....
7. 100 ஆவது நாள் - திரைப்படம்
8. எல்.கெ.ஜி யில் முழு ஆண்டு தேர்வில் ஆங்கிலோ இந்தியன் டீச்சரிடம் 100/100 என்று என்னுடைய சிலேட்டில் வாங்கிய மதிப்பெண். அதை அழிக்காமல் வீடு வரை கொண்டு வந்து காட்டி எல்லோரிடமும் முத்தம் பெற்றது.
9. பத்தாம் வகுப்பில் கணிதத்தில் 100 வாங்க முயற்சி செய்து 99 வாங்கி 1 மதிப்பெண்' ணில் 100 ஐ இழந்தது.
10. நமக்காக, நாட்டுக்காக உயிர் விட்ட ராணுவ வீரர்கள் பற்றிய பதிவர் சந்தோஷ்' சின் 100 ஆவது பதிவு.
உங்களுக்கு இந்த 100 என்ற எண்ணை பார்த்தவுடன் நினைவுக்கு வருவதை எழுதுங்களேன்...
அணில் குட்டி அனிதா : இந்த அநியாயத்த கேக்க ஆள் இல்லையா? எப்படிங்க இது அம்மணிக்கு 100 ஆவது பதிவாகும். கொஞ்சூண்டு லெப்ட் சைட் பாருங்க.. லேபல்ஸ் ல பாருங்க.. 17 பதிவு நான் எழுதி இருக்கேன். .இவிங்க என்னானா... 100 ஆவது பதிவுன்னு போடறாங்க... இதுல கணக்கல 99 மார்க் ன்னு வேற பீத்தல்... .. கவி.. இதை என்னால ஒத்துக்க முடியாது...... பதிவ மாத்தி எழுந்துங்க...
பீட்டர் தாத்ஸ்:- We cannot adopt the way of living that was satisfactory a hundred years ago. The world in which we live has changed, and we must change with it.
100 ஆஆஆஆஆஆ?
Labels: கதம்பம் 25 Comments
எங்க வீட்டு சமையல் : சோளா பட்டூரா
சன்னாமசாலா செய்ய தேவையான பொருட்கள்:-
வெள்ளை கடலை - 1 கப்
வெங்காயம் : 2
தக்காளி -4
பச்சைமிளகாய் : 1
மிளகாய் + தனியா தூள் - 1.5 ஸ்பூன்
மஞ்சள் பொடி: 1/2 சிட்டிகை
கேசரிப்பொடி (சிகப்பு) - 1/2 சிட்டிகை
பூண்டு : 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
பட்டை, லவங்கம் : 2, 2
சோம்பு : சின்ன ஸ்பூன்
பட்டை இலை - சிறிய துண்டு
எண்ணெய் : தேவைக்கேற்ப
கொத்தமல்லி : சிறிது
இவை நன்கு வதங்கியவுடன் வேகவைத்த கடலையை தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி இந்த கலவையில் போட்டு மிளகாஉ, மல்லித்தூள், மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கிளரி சிறு தீயில் கொதிக்கவிடவும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. தக்காளி வெங்காயத்தில் உள்ள தண்ணீரே போதுமானது. மிளகாய் தூள் வாசனை போகும் அளவிற்கு கொதித்தவுடன் நிறுத்திவிடவும்.
மேல் அலங்காரத்திற்கு கொத்தமல்லியை சின்ன சின்னதாக வெட்டி மேலே தூவி விடலாம்.
பூரிசெய்ய தேவையான பொருட்கள் :
மைதாமாவு : 3 கப்
நெய் : 3 ஸ்பூன்
தயிர் : 1/4 கப்
பால் : 1/4 கப்
ஆப்பசோடா : 3-4 சிட்டிகை
எண்ணெய் :- தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
அணில் குட்டி அனிதா:- பத்மா பாட்டி ஒருவழியா போய் சேந்துட்டாங்க.. இந்த அம்மணி அவங்க பேர்ல சமையல் சொல்லித்தரேன் னு நம்ம எல்லாரையும் சாக அடிக்க போறங்கன்னு நினைக்கிறேன்.. மக்கா எதுக்கும் உஷாரா இருங்க.. சமையல செய்து பாத்தாலும் உங்களுக்கு பிடிக்காதவங்க யார் கிட்டயாவது முதல்ல டேஸ்ட் பண்ண சொல்லி அப்புறம் நீங்க சாப்பிடுங்க..
பீட்டர் தாத்ஸ் :- A will finds a way
Labels: பத்மா'ஸ் கிட்ச்சன் 4 Comments
திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு…..
உங்களுடைய தசாவதாரம் பார்த்தப்பிறகு, மனதில் தோன்றிய சில எண்ணங்களை இங்கே எழுதுகிறேன். நிறைகளை பாராட்டியும் குறைகளை சொல்லி விமர்சனம் செய்வதும் மிக மிக மிக எளிது…. அதை உணர்வேன்.. அதனாலேயே திரை விமர்சினங்களை நான் எழுதுவதில்லை. அதனால் இந்த கடிதத்தை விமர்சனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அந்த படத்தில் நீங்கள் எடுத்து க்கொண்ட உழைப்பையும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தேவையான மேக்கப் செய்து கொள்ள நீங்கள் எடுத்துக்கொண்ட நேரமும், சிரமமும், பொறுமையையும் கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கவே முடியாது….. உங்களின் உழைப்பிற்கு HATS OFF.
அதே சமயம் உங்களுடைய சில படங்களையும் அதில் உங்களின் மேக்கப்பையும் நினைவு கூறவேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் நடிப்பை விடவும் உங்களின் மேக்கப்பில் அசந்துபோன சில படங்கள்.
“எனக்குள் ஒருவன்” – இந்த படத்தில் இரண்டாவது கதாபாத்திரத்தில் செய்து இருந்த மேக்கப்பில் உங்களை அடையாளமே தெரியவில்லை. அதில் உங்கள் முகத்தில் இந்தியன் தாத்தாவை போன்றோ, தசாவதார கதாப்பாத்திரங்களை போன்றோ முகத்தில் ஒரு செயற்க்கைதனம் தெரியவில்லை.
கல்யாணராமன், ஜப்பானில் கல்யாணராமன், சலங்கை ஒலி வயதான பாத்திரம், அன்பே சிவம் விபத்து பிறகு காண்பிக்கப்பட்ட முகம், ஹே ராம், மகாநதி படங்களில் காலத்திற்கு ஏற்றாற்போன்று நீங்கள் போட்டுக்கொண்ட கதாபாத்திரம் – இவை அனைத்துமே மிக மிக யதார்த்தமாக இருந்தன.
இன்னும் இதைப்போன்ற உங்களின் பல கதாப்பாத்திரங்களை பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
நமக்கு முகத்தில் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் காண்பிப்பது முகத்தில் உள்ள தசைகள் தானே? அந்த தசைகளை மூடிமறைத்து சமீபகாலமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் மேக்கப்பால் கதாபாத்திரங்களின் முகங்களை உணர்ச்சிகள் அற்ற பொம்மைகளை பார்ப்பது போன்று உள்ளதே தவிர.. யதார்த்த உணர்வுகளையும் முகத்தில் ஏற்படும் பல உணர்ச்சிகளை குறிப்பாக முகச்சுளிப்பு, புருவத்தை சுருக்குதல், கண்கள் அசையும் போது முகத்தில் ஏற்படும் மாற்றங்கள், கோபம், சிரிப்பு என்று எதையுமே புரிந்து கொள்ள முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவை இல்லவே இல்லை எனலாம். மாபெரும் நடிகனான உங்களுக்கு இதைப்பற்றி சொல்ல தேவையில்லை இருப்பினும் இதை நீங்கள் உணர்ந்தீர்களா என்று தான் தெரியவில்லை.
இந்தியன் தாத்தாவில் கூட உங்களின் உழைப்பை போன்று நடிகை சுகன்யாவிற்கு இருந்ததா என்றால் இல்லை. என்னவோ பொம்மை முகம் இங்கே அங்கே போவதும் வருவதுமாக இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நவராத்திரி’ யில் இப்படி அதிகமான மேக்கப் என்று எதுவுமே இல்லாமல் கதாப்பாத்திரங்களில் வித்தியாசம் காட்டி இருந்தார். ஒருவருடன் ஒருவரை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும், இதற்கு முன் அவர் 9 கதாபாத்திரங்கள் செய்து இருக்கும் போது ஏனோ அப்படத்தின் கதாப்பாத்திரங்களையும் அவற்றின் யாதார்த்தையும் நினைவு கூற நேரிடுகிறது.
இனி வரும் படங்களில் முகத்தில் உள்ள உணர்ச்சிளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் மேக்கப் இருக்கும் என்று நம்புகிறேன்….
கடும் முயற்சி செய்து அற்புதமான படம் அளித்த உங்களுக்கு நன்றி…..
உங்களின் சிறப்பான படங்களை பார்த்து ரசித்த, ரசிக்கும் ஒரு ரசிகை....
அணில் குட்டி அனிதா:- ஐயோ..!! கவி.. இது நியாயமா? உலக நாயகன் கே அறிவுரையா? இது உங்களுக்கு ரொம்ப ஓவரா தெரியலையா? அது எப்படி கவி.... கைப்பூ மாதிரி எவ்வளவு அசிங்க பாட்டாலும், அடிப்பட்டாலும் எதையுமே வெளியில தெரியாதமாதிரி திருப்பி திருப்பி ...உங்களாள இருக்கமுடியுது....??? நிசமாவே நீங்க ரெம்பபபபப..... நல்லவங்க கவி...... !! :((((((((
பீட்டர் தாத்ஸ்:- You can never get enough of the things you don't need, because the things you don't need can never satisfy.
Labels: சமூகம் 8 Comments
பெப்சி, க்ரீம் கோக்...குங்கோ...!!
அணில் குட்டி அனிதா:- நம்ம கவிதா க்கு ஒரு புள்ள இருக்குதுன்னு ஊரு உலகத்துக்கு நல்ல தெரியும்.. அந்த புள்ள எப்பவும் எல்லாருக்கும் தான் தெரியுமே சொன்ன பேச்சி கேக்காது..!! :))) அடங்காத புள்ள.. மேட்டர் என்னான்னா அந்த புள்ள போன மாசம் நம்ம ஊர்ல விக்கற பெப்சிய வாங்கி குடிச்சி குடிகாரப்பயலா இருக்கான்ங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல... டெய்லி ஒன்னு இரண்டுன்னு உள்ள தள்ளி ..என்னா ஆச்சின்னு கேக்கறீங்களா.. ஒரு வாரம் தம்பி படுக்கைக்கு போற மாதிரி ஆயுடுத்து...
டாக்டர் கிட்ட போயி ஓவரா பேசினாரு எதப்பத்தின்னு நீங்க கேக்கனும்... அதாங்க.. அவர் குடிச்ச பெப்சிய பத்தியும் அதோட பராக்கிறமத்தியும் அதுமட்டுமில்லாம அதானால அவருக்கு கிடைக்கற சக்திய பத்தியம் பேசினாரு..பேசினாரு.. பேசினாரு..கவியோட புள்ள இல்ல பேச்சுக்கு சம்பந்தம் இல்லாம இருக்குமா? சரி என்னாச்சுன்னு கேளுங்க...
டாக்டர்.. சீ..வாயமூடுன்னு சொல்லவரைக்கும் பேசினாரு.. அப்புறம்.. டாக்டர் இப்ப பேச ஆரம்பிச்சாரு.. சொன்னாரு பாருங்க..சூப்பரா... தம்பி உங்க வீட்டுல டாய்லட் இருக்கு இல்லப்பா.. அதுல பெப்சிய சுத்தி கொஞ்சம் ஊத்தி 3 மணி நேரம் கழிச்சி கழுவி பாரு.. டாய்லட் பளிச்சின்னு ஆயிடும்னு... ஆஹாஹாக ஆஹா... தம்பி மொகத்த பாக்கனுமே... எனக்கு சந்தோச்சமா இருந்துச்சி...
இதுல ஹைலைட் என்னான்னா நம்ம கவி இல்ல... அதிசயமா.. அவங்க இரண்டு பேரும் பேசறத கேட்டுட்டு ரெம்பத்தான்..அமைதியா இருந்தாங்க... ஏன் ன்னு நீங்க ரெம்பவும் யோசிக்காதீங்க.... பெத்த தாய் இல்லையா புள்ளைக்கு உடம்புக்கு முடியலன்னா சந்தோச்சப்பட முடியுமா? அதான் அந்த அமைதி சோகம் etc எல்லாம்...
சரி இப்ப இன்னொரு விஷயம் அமெரிக்காகாரன் நல்ல பெப்சிய அவன் வச்சிக்கிட்டு கெட்ட டாய்லட் கீளினர நமக்கு கொடுத்துட்டான்...அதனலா.. கவிதா புள்ளக்கைக்கு நல்ல பெப்சி எப்படி இருக்கும்னு காட்ட நான் ஆசப்படரேன்.. சோ... யாராவது அமெரிக்கக்காரன் கிட்ட இருந்து ஒரு சேம்பல் பெப்சி டின்' னும், ஒரு கோக் கீரும்...எப்படி வாங்கி இங்க எடுத்துட்டு வரதுன்னு சொன்னீங்கன்னா... கவிதாக்கிட்ட... நானு கொஞ்சம் காசு பாப்பேன்.. யாராச்சும் உதவி பண்ணுங்கப்பா....அயோ.. அம்மாவா விட்டுட்டேன்.. பண்ணுங்கம்மா...
பீட்டர் தாத்ஸ் : Wise saying often fall on barren ground; but a kind word is never thrown away.
Labels: அணில் குட்டி 9 Comments
சத்தம்……..
சத்தம் – அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கம், ஏதோ ஒரு சத்தம் எப்போதும் நம் காதுகளில் விழுந்துக்கொண்டே தான் இருக்கின்றன… சில சத்தங்கள் சங்கீதமாக சுகமாக இருக்கும்…... சில சத்தங்களின் பாதிப்புகளும் அதிகம்……
காலையில் எழுந்திருக்கும் போது, விடியலுக்கு என்று ஒரு சத்தம் இருக்கும்…எங்கோ தூரத்தில் சில வண்டிகளின் ஹாரன் சத்தம், படுக்கை அறையில் ஓடும் fan சத்தம்…. ஜன்னல் வழியே பக்கத்துவீட்டில் வாட்டர் டேங்க் தண்ணீர் நிரம்பி கொட்டும் சத்தம்……. எங்கேயோ…கத்தும் காக்கை…இப்படி.. சின்ன சின்ன சத்தங்களுடன் எழுந்துவந்தால்…..
சமையல் அறையில்….சமைக்க ஆரம்பித்தால்..எல்லாமே சத்தம்..தான், குக்கர், ஓவனில் ஏதோ சமைக்க வைத்தால் நேரம் முடிந்தவுடம் அது கொடுக்கும் அலாரம், மேலே அட்டை பெட்டியில் தூங்கி எழுந்த என் அணில்குட்டி கீச் கீச் என்று கத்திக்கொண்டு எகிரி குதித்து வெளியில் ஓடும், நடுவில் ரேடியோ, டிவி நிகழ்ச்சிகள்…. கதவிற்கு வெளியே படிகளை பெருக்கும் போது வரும் சத்தம்…. கைபேசி அழைக்கும்… பக்கத்து வீட்டில் துணி துவைக்கும் சத்தம்…. குழந்தைகளை அம்மாக்கள் அதட்டும் சத்தம்… கண்டுக்கொள்ளாமல் அவர்கள் கத்திக்கொண்டு மொட்டை மாடியில் ஓடி விளையாடும் சத்தம்… இதில் வீட்டில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டால்…அதில் வரும் சத்தத்திற்கு அளவே இல்லை……..
சில நேரங்களில் வெறும் தரையில் படுத்தால்…மிக மெலிதாக கீழ்தளத்தில் fan ஓடும் சத்தம், சில நேரங்களில் அவர்கள் வீட்டு ஊஞ்சல் ஆடும் சத்தமும் இங்கே கேட்கும்….பக்கத்துவீட்டில் ஒவ்வொருத்தர் செருப்பை தேய்த்து நடக்கும் சத்தத்தை வைத்து யார் அவர் என்று அனுமானித்து விடலாம்… எட்டி பார்க்கவேண்டி இருக்காது… என் கணவர் சவரம் செய்யும் போது மெலிதாக சர் சர் என்று ஒரு சத்தம்….
வீட்டை சுற்றியே இப்படி என்றால்…அலுவலகம் பற்றி சொல்லவே வேண்டாம்… எல்லோருக்குமே என்னுடைய சத்தம் பெரிய தொல்லையாக இருக்கும் என்றாலும், ஒரு ஒரு அலுவலக பிரிவிலிருந்து வரும் சத்தமும் பல விஷயங்களையும், அனுபவத்தையும் நமக்கு கொடுக்கும்…. நாம் மட்டுமே வேலை செய்கிறோம், நமக்கு மட்டுமே வேலையால் மன அழுத்தம் அதிகம் என்று நினைத்து சோர்வு அடைந்தால் மற்ற பிரிவுகளிலிருந்து வரும் சத்தங்களிலிருந்து நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றும்..
எத்தனை எத்தனை சத்தம்…….. எதை கேட்பது எதை விடுவது…..??....
கேட்கும் அத்தனை சத்தத்திலும் ஏதோ ஒன்று இருக்கிறது…… உணர்ந்து ரசிக்க பல சமயங்களில் நமக்கு நேரம் இருப்பதில்லை.. அல்லது அப்படி ஒரு சத்தம் வருகிறது என்று நாம் உணராமல் கூட வேறு வேலையில் லயித்து இருப்போம்… ஆனால் இதற்காக உட்கார்ந்து பார்த்தால் ஒரே நேரத்தில் எத்தனை சத்தங்களை நாம் உள்வாங்குகிறோம்.. அதற்கு பதில் அளிக்கிறோம்..அல்லது அதனை கண்டுக்கொள்ளாமல் நம் வேலையை செய்கிறோம் என்று உணர்வோம்….
இதை எல்லாசத்தத்தை விட…….. மனத்திற்க்குள் நாம் நமக்குள்ளேயே பேசும் சத்தம்…. ரொம்ப பெரிய சத்தம்……….. வெளியில் தெரியாத சத்தம்…..
அணில் குட்டி அனிதா :- ம்ஹிம்…..சத்தத்த பத்தி இன்னொரு சத்தம் பேசுது.. .என்னத்த சொல்ல… இவங்கள சுத்தி இருக்கறவங்க எல்லாருமே சொல்லிட்டாங்க… பெத்த அம்மாவிலிருந்து பெத்து போட்ட புள்ள வரைக்கும் “சவுண்ட குறை..”னு.. எங்க…. இவிங்க சவுண்டு இன்னமும் குறையலப்பா…!!! … வாசுகி மேடம் க்கு துணையா பீட்டர் தாத்ஸ் யை கூட்டிட்டு வந்தாச்சி……
மிஸஸ் வாசுகி:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு
பீட்டர் தாத்ஸ் :- Whatever thing, of whatsoever kind it be, Ii is wisdoms part in each the very thing to see.
கடவுள் – சில கேள்விகள் பதிலகள்
பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் கடவுள் – டெல்லிகணேஷ் என்ற கதாபாத்திரத்தை பார்த்து கேட்கும் கேள்விகள் –
1.நீங்கள் ஆள் இல்லாத மலை உச்சிக்கு ஒத்தைஅடி பாதையில் நடந்து போயிருக்கிறீர்களா?
2. நடுகடல் வரை படகு பயணம் செய்து இருக்கிறாயா?
3. ஏழை 10 பேருக்கு சாப்பாடு போட்டு இருக்கிறாயா?
கேட்பது மட்டும் இல்லை இது எல்லாம் செய்யாமல் எப்படி உங்கள் வாழ்க்கை நிறைவடைந்தது என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வி நிறைவு வேறு????
தனிமனிதனின் விருப்பம் என்பது வேறு..ஒருத்தருக்கு பிடித்த ஒரு விஷயம் நிம்மதி, சந்தோஷம், நிறைவு எல்லாம் எப்படி மற்றவருக்கு நிறைவை தரும். எனக்கு பச்சை நிறம் பிடிக்கும், அதனால் பிடிக்காத அல்லது பச்சை நிறம் பற்றி தெரியாத ஒருவரை பார்த்து உனக்கு பச்சை நிறம் பிடிக்கவில்லை (அ) தெரியவில்லை அதனால் உன் வாழ்க்கையில் நீ நிறைவடையவில்லை என்று சொல்ல முடியுமா?... முட்டாள் தனமான ஒரு சிந்தனை என்றே சொல்லலாம்.
மேல் உள்ள மூன்று விஷயங்களுமே செய்யாமல் எத்தனையோ பேர் நிம்மதியோடும், மிக பெரிய சாதனைகள் செய்தும் , சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சில உதாரணங்கள் :-
1. குடும்பம், குழந்தை , கணவன், சமையல் அறை, உறவுகள், டிவி சீரியல்கள், மதிய நேர தூக்கம், கண்ணில் வைக்கும் மை, தினமும் செய்யும் பூஜை, பக்கத்துவீட்டு கதை, புதிதாய் வந்த புடவை டிசைன் மட்டுமே உலகம் சந்தோஷம் என்ற நிறைவுடன் இருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது போதும்…இதற்கு மேல் தேவையில்லை… இதை முழுமையாக அவர்கள் பெற்றாலே அவர்களின் சந்தோஷத்தை முகத்தில் பார்க்கமுடியும்…..
2. என் நண்பர் ஒருவர் உதவி கேட்கும் போது ரூ.1500/- கொடுத்தார் ஆனால் அவரே கேளிக்கைக்கு ரூ.5000/- மும் அதற்கு மேலும் செலவு செய்யவும் தயாராக இருந்திருக்கிறார், இருக்கிறார். அவரிடம் கேட்பதற்கு முன் நானே என்னை கேட்டு கொண்டு கேள்விகள். அவரின் சம்பாத்தியம் ,அவருக்கு அதை எப்படி செலவு செய்யவேண்டும் என்ற உரிமை உள்ளது…அவரின் சந்தோஷம் – ஏழைக்கு உதவும் போது இருப்பதை விட கேளிக்கைகளில் ஈடுபடும்போது இருக்கிறது.
3. சமீபத்தில் நீயா நானா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்த போது ஒரு பெண் தனக்கு ஹை ஹீல்ஸ் அணிவது மிகவும் பிடிக்கும், அதை அணியவிடக்கூடிய, அணிந்தபிறகும் தன்னைவிட உயரம் அதிகம் உள்ள ஒருவரை மணக்க வேண்டும் என்று சொன்னார். மிக சாதாரணமான அல்லது ஆண்களை பொருத்தவரை கேலிக்குறிய, நக்கல் செய்யக்கூடிய ஒரு விஷயமாக இது இருக்கலாம் ஆனால் அந்த பெண்ணை பொருத்தவரை அது தான் சந்தோஷம், நிம்மதி மனதளவில் நிறைவு.
மனநிறைவை தரக்கூடிய எந்த செயலும் அவரவரை பொருத்தவரை வாழ்க்கையின் சாதனையே… வாழ்க்கையின் நிறைவும் கூட….. ஆசைகள், கனவுகள், கற்பனைகள் அத்தனையுமே ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனித்தனி…….அதையும் தாண்டி ஒருவரை ஏதோ விஷயத்திற்காக பிரகாஷ்ராஜை (கடவுள் கதாபாத்திரம்) போன்று- இதை செய்தால் நீ நிம்மதியாக இருப்பாய், சாதனை புரிவாய், சந்தோஷமாக இருப்பாய், வாழ்க்கையில் நிறைவை பெருவாய் என்று உணர்த்துவாரானால். உணர்த்துபவரின் பங்கு அதில் என்ன என்பதை பார்க்கவேண்டும்…
கேள்விகள் மிக எளிதாக கேட்கமுடியும்…..ஆனால் பதில்………….
அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….ஆரம்பிச்சிட்டாங்கய்யா 'தருமி சீவி…ஹோ'..சாரி…டங் ஸ்லிப்ட்… அறிவு ஜீவி…. சரி கவி மேட்டர விடுங்க.. நம்ம பீட்டர் தாத்ஸ் கவி இம்சை தாங்க முடியாம ஓடிட்டாரு.. சோ…நான் கொஞ்சம் தீவிரமா யோசிச்சி…மிஸஸ்.வாசுகி ய இண்ட்ரோ கொடுக்கிறேன் யாருன்னு பாக்கரீங்களா… அதாங்க நம்ம திருவள்ளூஸ்’ ஒயிஃப் வாசுகி இல்ல அவிங்கதான்… …வூட்டுக்காரு எழுதினத உங்களுக்கு தினம் ஒன்னு சொல்லபோறாங்க.. வாசுகி மேடம் யூ ஸ்டார்ட்… ஆல் தி வெரி பெஸ்டூஊஉ…
மிஸஸ். வாசுகி:-
அன்போடு இயந்த வழக்கென்ப ஆருயிருக்கு
என்போடு இயந்த தொடர்பு
அன்பு-பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் பண்பை நல்கும். அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்ற அளவுகடந்த சிறப்பையும் தரும்.
-Of precious soul with bodys flesh and bone, The union yields one fruit, the life of love alone.
Labels: Naveen's Review, சமூகம் 3 Comments
வேலையினூடே ஒரு நாள் (A Day at Work)
கைப்புள்ள அறிவித்துள்ள புகைப்பட போட்டிக்காக -
1. சுற்றலா பயணிகளுக்காக உணவு தயாரித்து விற்கும் பெண் -
2. டார்ஜிலிங் மலையில் - சுற்றுலா பயணிகளுக்காக தேநீர் கடை நடத்தும் பெண் -
Labels: ஓவியம்/புகைப்படம் 18 Comments
செய்வினை, பில்லி சூனியம்……..???? உண்மையா???
இது மிகவும் புதியதகவல், சினிமாவிலும், செய்திகளிலும் மட்டுமே பார்த்தும் படித்தும் வந்த எனக்கு, நேரடியாக செய்வினை’யால் பாதிக்கபடுகின்றேன் ?? என்று சொன்ன ஒரு பெண்ணெய் பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. மூடநம்பிக்கைக்கு அளவில்லாமல் போய் விட்டதாகவே கருதுகிறேன். அவள் இப்படி சொல்லும் போது எல்லாம் அவளின் தன்னம்பிக்கையை மட்டுமே எண்ணிப்பார்க்க முடிந்தது. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் எல்லோருமே பிரச்சனைக்கு காரணமாக மற்றவர்களை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பெண், நன்கு படித்தவள், வேலைக்கும் செல்கிறாள், அவளுடைய குடும்பத்திலும் எல்லோரும் படித்து இருக்கிறார்கள். அவளுக்கும் மாமியாருக்கும் எப்போதும் ஓயாத பிரச்சனை, புலம்பிக்கொண்டே இருப்பாள். ஆனால் அதிகபட்சமாக “என் மாமியார் எனக்கு செய்வினை வைத்து விட்டார்கள்,என் இரண்டு கையையும் தூக்கமுடியாத அளவு வலி, வீங்கி வேறு போய் விடுகிறது, எந்த உடல் உபாதைகளும் இல்லாமல் எனக்கு அடிக்கடி இப்படி ஆகிறது” என்று ஓரே அழுகை, அதற்கு காரணம் மாமியாரின் செய்வினையே என்று ஆணித்தரமாக நம்புகிறாள்
எனக்கு அழுவதா சிரிப்பதா தெரியவில்லை, செய்வினையில் நம்பிக்கை சுத்தமாக இல்லாததால், அவளிடம் டாக்டரிடம் சென்றாயா? என்றேன். அவளோ இல்லை சாமியாரிடம் சென்றேன் அவர் என்ன சொல்கிறாரோ அப்படி நடந்து க்கொள்கிறேன் என்றாள். படித்தவர்களே இப்படி மூடநம்பிக்கையுடன், செய்வினை சாமியார், செய்வினை எடுக்கும் நல்ல சாமியார் என்று நம்பி நேரத்தையும், நிம்மதியையும், பொருளையும் இழக்கிறார்கள். மிச்சமாவது என்னவொ மன உளைச்சல் மட்டுமே.
அவளின் செய்வினையை சரி என்று இன்னொரு நண்பரும் உதாரணம் சொன்னார். ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் அந்த பையனின் வீட்டில் , அந்த பெண்ணுக்கு செய்வினை வைத்ததால் அவள் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டும், பின்பு மனநிலை பாதிக்கப்பட்டும் போனாள், அந்த பெண்ணின் கணவர் எல்லா நல்ல ஆஸ்பித்திரிகளிலும் மனைவியை அழைத்துசென்றும், நோயை குணப்படுத்தமுடியவில்லை என்றும், அதற்கு காரணமும் செய்வினையே என்றார்.
சரி செய்வினை என்றால் என்ன ? என்று அவர்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது. செய்வினை செய்யும் சாமியார்கள் கொடுக்கும் மருந்தை நமக்கு பிடிக்காதவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கொடுத்துவிட்டால், அது அவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அது எந்த மருத்துவரிடம் சென்றாலும் குணமாகாது???? அதை வெளி எடுக்க நாம் மற்றொரு செய்வினையை எடுக்கும் நல்ல சாமியாரின் உதவியை நாடவேண்டும்.
கதை என்னவோ நன்றாக தான் இருக்கிறது. நான் அந்த பெண்ணிடம் கேட்ட சில கேள்விகள்.
1. மாமியார் ஏதோ சாப்பாட்டில் கலந்து கொடுக்கிறார்கள் என்றால், ஏன் அவர்கள் சமைத்து கொடுக்கும் உணவை சாப்பிடுகிறாய்?
2. மாமியார் இல்லாமல் தனிவீட்டில் உன் வாழ்க்கையை துவக்கலாமே.
3. உன்னுடைய நல்ல சாமியார் அவ்வளவு நல்லவராக, நடப்பதை சொல்பவராக இருந்தால், அவரே மாமியார் செய்வினை வைக்கபோகிறார்கள் இல்லை இனிமேலும் வைப்பார்கள் என்பதை ஏன் சொல்லவில்லை. அல்லது.. தெரிந்தும் ஏன் அதை அவரால் தடுக்க முடியவில்லை.
4. அந்த நல்ல சாமியாருக்கு நீ அடிமையாகிவிட்டாய் என்பதை ஏன் உணராமல் இருக்கிறாய்?
5. அவரால் தான் உனக்கு வாழ்க்கையில் நிம்மதி என்றால், உனக்கு வேறு யாருமே வேண்டாமே?
6. உனக்கு என்று சுயபுத்தி இல்லையா? சுயமாக எது உண்மை எது பொய் என்று யோசிக்க மாட்டாயா.. ஏன் இப்படி நடக்கிறது, அதற்கு நீ என்ன செய்யவேண்டும் யோசித்து செயல் படமாட்டாயா?.. அதைவிட்டு ஏன் இப்படி செய்வினை, சாமியார் என்று அலைந்து கொண்டு இருக்கிறாய்?
எதற்குமே அவளிடம் சரியான பதில் இல்லை என்றாலும், சாமியாரிடம் செல்வதை மட்டும் குறைத்துக்கொள்ளவில்லை. அதில் அதிகபட்சமாக, சாமியார் என்னிடம் எப்படி பேச வேண்டும் நடந்துக்கொள்ள வேண்டும் என்று கூட சொல்லிக்கொடுத்து உள்ளார்.
இப்படி படித்தவர்கள், நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட இப்படி சாமியார்களிடம், செய்வினை செயல்பாட்டுவினை, பில்லி சூனியம் என்று பழிகிடந்தால்… என்னவாவது…???
அணில் குட்டி அனிதா:- ஆஹா… கவி..நீங்களே ஒரு சூனியக்காரி ரேஞ்சுக்கு எல்லாம் செய்வீங்கன்னு அந்த அக்காவுக்கு தெரியாம இல்ல போச்சி… உங்க கிட்டேயே..எப்படி பேசனும்னு சாமியார் சொன்னாராமா…? முடியலப்பா !! உங்கள பத்தி தெரியாம அவரு சொல்லிட்டாரு…....சரி வுடுங்க..…நீங்க ஒரு ஹாஃ ஹவர் அந்த சாமியாரை பாத்து பேசுங்க..போதும் !! சாமியார் துண்ட காணோம் துணியக்கானோம்னு ஓடிடுவாரு……. ம்ஹீம்….!! எல்லாரும் என்னைய மாதிரியே இருந்துருவாங்களா,,…கவீஈஈஈஈ…………….
பீட்டர் தாத்ஸ் :- In the middle of the every difficulty lies an opportunity
ஏரிக்குள்ளேயே வாய்க்கால் வெட்டி……..
வேளிச்சேரி்..!!! மிக குறுகிய காலத்தில், மிக வேகமான வளர்ச்சியை எல்லாவிதங்களிலும் பெற்றுவிட்ட ஒரு இடமாகிவிட்டது.. நாங்கள் கடந்த 1991 ஆம் ஆண்டில் வேளச்சேரியில் குடியேறியபோது அக்கம் பக்கம் இருக்கும் காலி இடங்களில் எப்போதும், (ஆண்டு முழுதும்) தண்ணீர் தேங்கி இருக்கும், மதிய நேரங்களில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது அந்த ஒளியில், தண்ணீரில் நீந்தும் பெரிய பெரிய மீன்’களையும், பாம்பு களையும் எங்கள் வீட்டு சன்னல் வழியாக நின்று கவனிப்பேன். தினம் எனக்கு இது தான் பொழுதுபோக்காக இருந்தது.
ஆனால் இப்போது, வேளச்சேரியில் காலி இடங்கள் கிடைப்பதே அறிதாகிவிட்டது, கிடைத்தாலும், விலையைப்பற்றி பேசி நம் இரத்த அழுத்ததை அதிகபடுத்திக்கொள்ள வேண்டாமே.
இப்படி, ஏரிக்குள்ளேயே நாம் குடியேறி எல்லா இடங்களையும் ஆக்கரமித்து விட்டோம். அதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வேளச்சேரி தான் தண்ணீரில் மூழ்கும் இடங்களில் முதல் இடத்தில் இருக்கும். தண்ணீர் இனிமேல் தேங்காமல் இருக்க., போன வருடத்தில் இருந்து அரசாங்கம் ஒரு புது திட்டத்தை அறிமுகப்படுத்தி செயற்படுத்தியும் வருகிறது. அதாவது, வேளச்சேரி தண்ணீர் அதிகம் நிற்கும் இடங்களிலில் , தெருக்கலின் ஒரு ஓரமாக வாய்க்கால் வெட்டி, அதனை தெற்கு வேளச்சேரியில் உள்ள ஒரு ஏரிக்கு கொண்டு செல்கிறார்கள். 5 x 5 ஆழமும் அகலமும் இருக்கும் இந்த வாய்க்கால் எனக்கு தெரிந்து வேளச்சேரி பைப்பாஸ் ரோட்டில் உள்ள ஏரி இருக்கும் இடத்தில் இருந்து ஆரம்பித்து தெற்கு நோக்கி வருகிறது.
பிரச்சனை என்ன?.. முன்னேமே நாம் இருப்பது ஏரி பள்ளத்தில், இதில் எப்படி இந்த வாய்க்கால் நமக்கு தண்ணீரை தேக்காமல் ஏரிக்கு எடுத்துச்செல்லும், அதற்காக சரியான முறையில் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை தண்ணிர் தேங்காதவாறு வாய்க்கால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. காண்ட்ராக்டில் விடப்பட்ட இந்த வேலை, வாய்க்காலை முடிக்கும் தீவிரத்தில் செயல் படுகின்றனவே தவிர, சரியான முறையில் சரிவான மட்டத்தை கடைப்பிடிக்கப்படவில்லை.
அதனால் தெருவில் தேங்கும் தண்ணீரை தவிர இனி, இந்த வாய்க்கால்களிலும் தண்ணீர் தேங்கும். தெருவில் தேங்கும் தண்ணீராவது 2, 3 நாளிலில் இரங்கிவிடும்..ஆனால் இந்த வாய்க்கால்களில் தேங்கும் தண்ணீரால், கொசு அண்ணன்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. நன்றாக இருந்த எங்களில் ஏரியாவெல்லாம் இப்போது கொசுக்கள் சொகுசாக வளரும் இடமாக ஆகிவிட்டது.
2, 3 நாள் தண்ணீர் நிற்பதே பரவாயில்லை, இந்த வாய்க்கால்களால் ஆண்டுமுழுதும் தொல்லை. அதுமட்டுமல்ல, நம்முடைய நகராட்சி தெருக்கள் எல்லாம் அகலமான தெருக்கள் இல்லை, இதில் இந்த வாய்க்கால்கள் ஒரு பகுதியில் கட்டிவிடுகின்றனர். அதன் வடிவமைப்பு அதன் மேல் வண்டிகள்,பாதச்சாரிகள் செல்ல இயலாதவாறு மேடும் பள்ளமுமாக கட்டப்படுகின்றன. அதனால் வாய்க்கால் இல்லாத மீதமுள்ள குறுகிய ரோட்டை தான் பாதச்சாரிகள், வண்டிகள் உபயோகிக்க வேண்டியுள்ளது.
இதில் கொசுவின் தொல்லை தாங்காமல், நிறைய வீட்டுக்காரர்கள் தெருவிற்கும், வாய்க்காலுக்கும் இடையே தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டிருக்கும் வழிகளை மண்ணைக்கொண்டு மூடிவிடுகின்றனர். நிச்சயம் அவர்கள் மேல் எந்த தப்புமும் இல்லை, இந்த கொசுக்களால் அவர்களுக்கு வரும் பிரச்சனையை விட இது ஒன்றும் பெரிய தவறாகவும் தெரியவில்லை. இப்போதே மழை இல்லாத இத்தனை வெயிலிலும் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் தேங்கிகிடப்பது… வாய்க்கால் வடிவமைப்பின் லட்சனத்தை எடுத்துறைக்கிறது….!!
அணில் குட்டி அனிதா:- கவி..நீங்க அந்த காண்ட்ராக்டரை நொய் நொய் ன்னு கேள்வி க்கேக்கும் போதே நெனச்சேன்.. பிளாக்ல எழுதப்போறீகன்னு.. எழுதிட்டீங்களா.. ப்பாத்து… காண்ட்ராக்டருக்கு கோவம் வந்து வாய்க்கல்குள்ள போட்டு மூடிட போறாங்க… ஒரே நாள்ல காலியாய்டுவீங்க…...!
பீட்டர் தாத்ஸ் :- Rather fail with honour than succeed by fraud.
Labels: சமூகம் 2 Comments
இது இவங்களுக்கு தேவையா.... ஹா...ஹா..ஹா... !!
அணில் குட்டி அனிதா :- பொதுவா யாராவது ஜோக் அடிச்சா நாம சிரிப்பா சிரிப்போம்..ஆனா..நம்ம கவிதா இருக்காங்க பாருங்க..யார் கிட்டையாவது வாய கொடுத்து …அவங்க திருப்பி கவிதா’வ சுத்தி சுத்தி பேசவிடாம ஓட்டுவாங்க பாருங்க.. அப்ப…கவிதா “ஞே’ ன்னு முழிக்கறத “பாத்தா… அட போங்க… சொல்ல எல்லாம் முடியாது… உருண்டு உருண்டு சிரிக்கறமாதிரி இருக்கும்.. உங்களுக்காக சில சேம்பல்ஸ்… நீங்களும் உருளுங்க.. என்னோட சேர்ந்து…..
கவி அவங்க பிரண்டுக்கு மாட்டு பொங்கலுக்கு வாழ்த்து சொன்ன கதைய கேளுங்க..
கவி :- ஹேப்பி மாட்டு பொங்கல் ..பா….!! (சொல்லிட்டு இவங்களே ஹிஹி ஹிஹி ஹிஹி ன்னு சிரிச்சிக்காறாங்க…)
கவி பிரண்டு :- போதும் பொதும் இளிச்சது…அத “பன்னி பொங்கல்” கொண்டாடறவங்க சொல்லக்கூடாது….
கவி : (“ஞே” ன்னு முழுச்சிக்கிட்டு ) சைலன்ட்’ டா எஸ் ‘ ஆயிட்டாங்க..
ஆனா இவங்களுக்கு ஒரு டவுட்.. “பன்னி பொங்கல்” ன்னு ஒன்னு இருக்கா?.. இன்னமும் டவுட் ல தான் இருக்காங்க… யாராவது இந்த அறிவு ஜீவி க்கு விளக்கமா சொல்லுங்கப்பா…
========================================================
கவிதா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்ச பிறகு அடிக்கடி சில்லறை பொறுக்கறாங்க…….அதுல ஒரு வாட்டி மவுண்ட் ரோடு ல சில்லறை பொறுக்கி, செம உள்காயம் பாவம்..வெளியில சொல்ல முடியாத அளவு உள்ளடி…15 -20 நாள் அம்மணிக்கு ஒழுங்கா நடக்க முடியல… அப்ப முதல் மாடியில இருக்க ஆபிஸ்க்கு லிஃட் ல போய்ட்டு வந்துக்கிட்டு இருந்தாங்க.. ஒருநாள்..ஆபிஸ் விட்டு வரும் போது லிஃட் ‘ட தொறந்து உள்ளே போய் கீழ போறத்துக்கு பட்டனை அமுத்த போக…. அம்மணி’ யோட ஒரு பிரண்டு வெளியில நின்னுக்கிட்டு,
“கவிதா…ஏன்… சிரமபடறீங்க.. நீங்க லிஃட்’ குள்ள ஏறி நின்னா போதும், அது தானா கீழ போகும்..எதுக்கு ஸ்விட்ச் எல்லாம் அமுத்துக்கிட்டு….!! “
கவி :………………………..
=============================================================
ரெம்ப டிராஃபிக் இருந்ததுன்னு எல்லாரும் புட்பாத் மேல வண்டிய ஓட்டிக்கிட்டு போக அம்மணியும்… (தேவையா???? ) அவங்க பின்னாடியே போக… புட்பாத் முடியும் போது ஒரு 2 அடி க்கு கீழ ரோடு இருக்கு… போனவங்க எல்லாம் தட்டு தடுமாறி வண்டிய எப்படியோ இரக்கி கொண்டுபோக .. .அம்மணிக்கு தெரியல.. அப்படியே நின்னுக்கிட்டு இருந்தாங்க. .போற வரவங்க யாருமே கண்டுக்கல.. எல்லாருமே.. ஏம்மா நாங்களே அவரசத்துல இருக்கோம் நீ..வேற நடுவுல நின்னுக்கிட்டு ன்னு திட்டிட்டு வேற போனங்க… யாரும் ஹெல்ப் பண்ணாத கடுப்பை ஆபிஸ்’ல வந்து அம்மணி கோவத்தோட புலம்ப…...வழக்கம் போல..
கவி பிரண்டு :- ஏதோ டீன் ஏஜ் பொண்ணுங்க நின்னுக்கிட்டு இருந்தா நாங்க எல்லாம் ஓடி போய் உதவி செய்வோம்……
ஆபிஸ்’ல எல்லாரும் கவிதா;வை பார்த்து சிரிக்க……..
கவி : வழக்கம் போல “ஞே” த்தான்………..
==============================================================
அம்மணிக்கு தான் பொய் சொன்னா பிடிக்காதே… அவிங்க பிரண்டு ஒருத்தர் பொய் சொல்றது பிடிக்காம… செம டென்ஷனா…..
கவி :- உங்க வாயில புழு தள்ள போது பாருங்க….
கவி பிரண்டு :- (செம கூல்’லா) ஹோ.. ரொம்ப தேக்ஸ் கவிதா… நான் அப்படியே சைனா போய் ஒரு பாஸ்ட் புட் கடை ஆரம்பிச்சிடுவேன்….!!
கவி :- “ஞே” த்தான்…..
அதே பிரண்டுக்கிட்ட திரும்பவும் :-
கவி:- நீங்க பொய் சொல்லாம இருக்கணும்னு, நாக்குல வேல் குத்தி போடறேன்னு சாமிக்கு வேண்டிக்கிட்டேன்……
கவி பிரண்டு :- ….. நான் கூட உங்க இம்சை தாங்க முடியலன்னு… முதுகுல டின்’ கட்றேன் ன்னு வேண்டிக்கிட்டேன்…. இரண்டு பேருமா வேண்டுதல நிவர்த்தி செய்யலாமா????
கவி:- டின்’ ஆஆஆஆஆஅ???? (வழக்கம் போல “ஞே” த்தான்…..)
==============================================================
அம்மணி எப்பவும் இவிங்கள பாத்து ஊரே பயப்படுதுன்னு நினெப்புல இருப்பபாங்க. .இவிங்க பிரண்ட்ஸ் யாருமே.. இவிங்கள மதிக்கறது இல்ல… அது தெரியாம… சில சமயம் … இவங்களுக்கு பிடிக்காம ஏதாவது செய்துட்டா மணி கணக்கா திட்டி தீப்ப்பாங்க.. ஓவர் அட்வைஸ் வேற……
ஒருவாட்டி அப்படித்தான் ரொம்ப ஆவேசமா வசனம் எல்லாம் பேசி அவிங்க பிரண்டை திட்ட.. ..
கவி:- இவ்வோ நேரம் திட்டறனே அட்லீஸ்ட் கவனிக்கறீங்களா நீங்க?? கொஞ்சமாது உங்களுக்கு பயம் இருக்கா… ?
கவி பிரண்டு :- அய்யோ…கவி….. நீங்க பேசினத தவிர வேற எதையுமே நான் கவனிக்கல… பாருங்க..பயத்துல… உடம்பு நடுங்குது….. ஹிஹிஹி….…டவுசர் கூட நனஞ்சு போச்சி……..…
கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)
=======================================================
கவி அவங்க பிரண்டு வீட்டுக்கு போனாங்க. .இவிங்க வராங்கன்னு அவங்க பிரண்டோட அம்மா விதம்விதமா சாப்பாடு செய்து வச்சி இருந்தாங்க… அம்மணி க்கு அவங்க அம்மா படற சிரமத்தை பாக்கமுடியாம….
கவி:- ஆன்ட்டி !! நான் ரொம்ப சிரமம் கொடுக்கிறேனா…?!! (அம்மணி என்னவோ… திருப்பி அவங்க…. "இல்லமா. .நல்லா சாப்பிட்டு ரெஸ்டு எடு உன் ஒரு ஆளால எனக்கு என்னமா சிரமம் ன்னு" கேப்பாங்க ன்னு நினச்சாங்க…ஆனா…)
ஆன்ட்டி :- “ஆமா கவிதா… ரொம்ப சிரமமா இருக்கு..பேசமா.. சாப்பிடறத அப்படியே வச்சிட்டு வீட்டுக்கு கெளும்பும்மா…. “ மிச்சமீதியாவது எங்களுக்கு இருக்கட்டும் ன்னு செம சீரியஸா சொல்ல…. “
கவி:- ……………………… (வேற என்னங்க.. அதே “ஞே’…தான்)
=============================================================
அம்மணி ஆபிஸ் ல ஏதோ பிரச்சனை…. இவிங்கள யாரோ செமத்தியா திட்டிட்டாங்க… (அது எப்பவும் நடக்கறது தானே…) கவலையும் கம்பலையுமா.. .வூட்டூக்காரர் ஏதாவது உதவி செய்வாறுன்னு சொன்னாங்க..
கவி:- ப்பா…. நான் ஒன்னுமே தப்பு பண்ணாம என்னோட கிளையன்ட் என்னை “இடியட்” ன்னு திட்டிட்டான்…. . ……
கவி வூட்டுக்காரர் :- ஓ….அவனுக்கும் தெரிஞ்சிப்போச்சா……….
கவி:- …………………….
===============================================================
பீட்டர் தாத்ஸ் :- Imagination is your power house where you can shape your plans and make them a reality.
Labels: அணில் குட்டி 3 Comments
அதிசயம் ஆனால் உண்மை - இப்படியும் சிலர்..
சென்னை கிரிம்ஸ் ரோடில், ஹெச்.சி.ல் அலுவலகம் இருக்கும் சாலை மிகவும் நெருக்கமான சந்தாக இருக்கும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும், சமீபத்தில் ஒருநாள் அந்த சாலையில் செல்லும்போது வண்டிகள் வரிசையாக நெரிசல் காரணமாக நிற்க ஆரம்பித்தன, நானும் என்ன பிரச்சனை என்று எட்டி ப்பார்த்தேன், தொலைவில் இருந்த எனக்கு தெருவின் நடுவில் ஒரு சிறுமி குனிந்து நின்று என்னவோ செய்துக்கொண்டு இருந்தாள், அவள் ஒருத்திக்காக அத்தனை வண்டிகளும் நின்று க்கொண்டு இருந்தன, அவளை புறக்கணித்து போக முடிந்த வண்டிகள் முன்னே செல்ல, நானும் மெதுவாக முன்னே சென்றேன், என்னுடைய ஆர்வம், அந்த சிறுமி என்ன செய்து க்கொண்டு இருக்கிறாள் என்பதிலேயே இருந்தது.
அருகில் சென்று பார்த்தவுடன் அசந்தும், அதிசயித்தும் போனேன்…அங்கு நான் பார்த்தது இன்னமும் எனக்கு வியப்பாக உள்ளது..இப்படியும் நம்மில் சிலரா?.. எனக்கு உடம்பும் புல்லரித்து போனது. அந்த சிறுமியை போன்று நாம் ஒவ்வொருவரும் இருந்துவிட்டால்..இந்தியா எங்கோ சென்று விடும் அல்லவா?..
அப்படி அந்த சிறுமி என்னத்தான் செய்தாள்?... அவள் சாலை ஓர வண்டி கையேந்தி பவன் கடைகளில் ஏதோ ஒரு கடைக்கு சொந்தமான (அ) வேலை செய்யபவளாக இருக்கவேண்டும், அவர்கள் டீ, டிபன், சமையல் பாத்திரங்களை கழுவும் தண்ணீரை கீழே ஊற்றாமல், ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து, அது நிரம்பியவுடன், தெருவின் நடுவே இருக்கும் பாதாளசாக்கடையின் மூடியில் (மூடியையும் திறக்கவில்லை) இருக்கும் ஒரு சிறிய துவாரம் வழியாக , கையுடன் கொண்டு வந்து இருந்த ஒரு பெரிய புனலின் வசதியோடு, நிதானமாக அந்த கழிவுநீரை சாக்கடைக்குள் ஊற்றினாள்.
அவள் அதை ஊற்றிமுடிக்கும் வரை வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை, அவளும் வாகனங்கள் அவளுக்காக காத்திருக்கின்றன என்ற பதட்டம் இல்லாமல் தன் வேலையை செய்துக்கொண்டு இருந்தாள். எனக்கு என்னவோ நான் இப்படி ஒரு நிகழ்வை வாழ்க்கையின் முதன் முறையாக பார்க்கிறேன்…
எனக்கு தெரிந்து சாலையோர கையேந்தி பவன்கள் எல்லாம், கழிவுநீரை தெருவில் இறைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த சிறுமியின் செய்கையும், சமூகம் சார்ந்த பொறுப்பும் எனக்கு வியப்பை அளித்தது…இப்படியும் இருக்கிறார்களா?.
அணில் குட்டி அனிதா:- அட அம்மணி இன்னும் பிளாக்’கை விட்டு போலையா? சாவித்திரி அக்காவை சாவி ஆக்கி திருப்பி உள்ள வந்துட்டாங்க...போல...??!! ஹீம்…! அடுத்து யாராவது பெரிய அளவுல பிரச்சனை பண்ணாம அடங்கமாட்டாங்கன்னு நினைக்கிறேன்…..பாக்கலாம் எத்தனை நாளைக்குன்னு…. சரி.. கவி பாத்த குட்டிப்பாப்பா மாதிரி நீங்களும் யாராவது சாக்கட தண்ணியை தெருவில ஊத்தறத பாத்த… இந்த ஐடியாவை சொல்லுங்க...சூப்பர் ஐடியா ப்பா…முதல்ல கவி வீட்டுக்கிட்ட இப்படி ஏதாவது இருக்கான்னு பாத்து எல்லாருக்கும் அம்மணி செலவுல ஒரு புனல் வாங்கி தரனும். நான் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்……..
பீட்டர் தாத்ஸ் :- The highest wisdom is kindness
Labels: சமூகம் 0 Comments
ஒரு தோழிக்காக, அவள் குழந்தையின் படிப்புக்காக…..
என்னுடன் பணிபுரிந்த தோழியிடமிருந்து, மனம் நொந்து ஒரு ஈமெயில் வந்து இருந்தது, அவளுக்கு போலியோ தாக்குதலினால் இரு கால்களும் நடக்க இயலாது, இருப்பினும், 3 சக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு வேலைக்கு வந்துக்கொண்டு இருந்தாள், கால்களுக்கு அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஷீ அணிந்து நடப்பாள், என்னிடம் பலமுறை அந்த ஷீ’ வை போட்டு நடப்பதால் வரும் கடும் வலியையும் , அதனால் அவள் கால்களில் ஏற்பட்ட வடுவையும் காட்டியிருக்கிறாள்.அவளின் வலியை என்னால் எப்போதும் உணரமுடிந்தது,
இருவரும் வேறு வேறு வேலைக்கு மாறி விட்டாலும் தொடர்பு இருந்து வந்தது. அவளுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை. இப்போது 6 ஆம் வகுப்பிலிருந்து 7 ஆம் வகுப்பிற்கு செல்கிறான். கணவர் என்ற பெயருடன் ஒருவர் வீட்டில் இருக்கிறார், அந்த கதையை சொல்லவோ பேசவோ எனக்கு உரிமை இல்லை என்பதால் ஒரு வரியில் முடித்துக்கொள்கிறென். அவர்களின் குடும்பம் இவளின் வருமானத்தில் மட்டுமே நடக்கிறது.
இப்போது அவளின் வயது காரணமாகவும் தொடர்ந்து வேலை செய்து கால்களில் சுத்தமாக வலுவிழந்ததினாலும் அவளால் முன்பு போல் வேலைக்கு செல்ல இயலவில்லை, மேலும் சென்னை போக்குவரத்து நெறிசல் காரணமாக அவளால் வெகு தொலைவில் கிடைக்கும் வேலையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நடைமுறை பிரச்சனைகள், உடல் பலவீனம், வீட்டு சுமை, குழந்தையின் கல்வி என்று அவளால் சமாளிக்க முடியவில்லை.
இப்போது வேலை இல்லாததால், LIC Agent க்கு பயிற்சி பெற்று, என்னிடம் ஒரு பாலிசி எடுக்குமாறு கேட்டாள். நானும் எடுத்து க்கொள்கிறேன் என்று சொன்னேனே தவிர, அவளின் எதிர்பார்ப்புக்கு தகுந்தமாறு என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதில் அளித்து, பாலிசியை எடுக்க முடியவில்லை. அதற்கு என் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் நானும் முன்பு போல் இல்லாமல் மாறிவிட்டேன் என்று தான் நினைக்கிறேன். யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு பதில் அளித்தும், உதவிகள் செய்தும் வந்தேன், இப்போது ஏனோ அப்படி செய்ய முடியவில்லை என்பதை விட, செய்யும்படி என் மனநிலை இல்லை என்று சொல்லலாம். இந்த சுயநலத்தின் காரணமாக என் தோழியின் அழைப்பை மிக எளிதாக எடுத்துக்கொண்டு விட்டேன்.
ஆனால் அவளோ, மனம் நொந்து போய், நான் இறந்து போகலாம் என்றே நினைக்கிறேன், எல்லோரையும் போல் எனக்கும் கால்கள் இருந்தால் நான் இப்படி ஒரு துயரை சந்திதிருக்கமாட்டேன் என்று வேதனையாக எழுதியிருந்தாள். அவளின் இயலாமை அவளை இத்தனை வருடங்கள் கழித்து இப்படி யோசிக்கவைத்துவிட்டது. அதற்கு நானும் ஒரு காரணமக ஆகிவிட்டேன்.
இதை படிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், அவள் குழந்தையின் கல்விக்கு இந்த வருடம் ரூ. 7000/- தேவைப்படுகிறது, உங்களால் முடிந்த அளவு அவளுக்கு பண உதவி செய்து குழந்தையின் கல்விக்கு உதவுமாறு கேட்டு க்கொள்கிறேன். ஏதாவது உதவும் குழுக்குள் அந்த குழந்தையின் வருங்கால படிப்பிற்கான செலவையும் எடுத்துக்கொள்ளுமானால், அவளின் சுமை 80% குறைந்துவிடும். அவள் Data Entry வேலையும் செய்வாள், தேவைப்படுபவர்கள் அவளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இன்சூரன்ஸ் பாலிசி தேவைப்படுபவர்கள், அவளை தொடர்பு கொள்ளூங்கள், இல்லையேல், எனக்கு ஈமெயில் அனுப்பினால், நான் அவளை உங்களை தொடர்பு கொள்ள செய்வேன்.
தோழியின் பெயர் : சாவித்திரி
குழந்தையின் பெயர் : நவீன்
அவளின் தொடர்பு எண் : 9884269499
என் ஈமெயில் : gkavith@gmail.com
அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்…நிம்மதியா இருந்தேன்ங்க.. இந்த அம்மணி எழுத வரமாட்டாங்கன்னு நிம்மதியா இருந்தேன்…யாரோ தோழியாம்..சென்டிமென்ட்டா தாக்க, இவங்க நம்மள தாக்க வந்துட்டாங்கடோய்…. சரி மக்கா… பணம் அனுப்பறவங்க எல்லாம், சாவித்திரி அக்காவை நேரா கூப்பிட்டு கொடுங்க… கவிதா’ ஏதோ புது பிசினஸ், ஆரம்பிக்கறமாதிரி எனக்கு சந்தேகமாவே இருக்கு… உங்களுக்கு??????
பீட்டர் தாத்ஸ் :- It is not enough to have a good mind; the main thing is to use it well.
Labels: சமூகம் 0 Comments
அடித்துக்கொண்டு சாகுங்கள் ஆணவக்காரர்களே!!
பெண் இல்லாமல்
பூமிக்கு வந்துவிட்டதாக
நினைக்கும்
ஆணவக்காரர்களே!
பெற்றத்தாயையும்
உடன் பிறந்த தமக்கையும்
உன்னை நம்பிய துணைவியும்
உனக்கு பிறந்த பெண்ணும்
உனக்காக எதையும் செய்யும் உன் தோழியும்
எப்போதும்
வேண்டும் உங்களுக்கு…
அடித்துக்கொண்டு
சாகும்போதும் கூட .......??
ஆம் வேண்டுமே….
ஆத்தா..அம்மா’ வென்று
அன்புடன் அழைக்க……………
பெண் வேண்டுமே…!!
உங்களின்
வீரத்தை(??)க்காட்ட
வீட்டு பெண்கள்
அத்தனை பேரையும்
வீதிக்கு இழுங்கள்
ஆம்
ஒருவரையும்-
விட்டு விடாதீர்கள்
அவன் வீட்டு பெண்ணை
நீ நிர்வாணமாக்கு
உன் வீட்டு பெண்ணை
அவன் நிர்வாணமாக்கட்டும்
உங்களையே
உலகமென்று நம்பும்
ஒரு பெண்ணை க்கூட
நீங்கள்
விட்டுவிடக்கூடாது -
அடித்துக்கொண்டு சாகும்
ஆணவக்காரர்களே…
உங்களின் வீரத்திற்கு ??!!
பின்னால் கூட
பெண் வேண்டுமா????…….
வெட்கமாயில்லை…………..?????????
குறிப்பு :- வீரம் அதிகமாகி என்னிடம் வந்துவிடாதீர்கள்… அய்யோ!!முடிந்தால் எந்த ஒரு பெண்ணை’யும் வீதிக்கு இழுக்காமல் சண்டையிட்டு செத்து மடிந்துத்தான் போங்களேன்….
உங்களை-
பெற்றவள் பெருமிதம் கொள்வாள்,
கட்டியவள் நிம்மதி பெருமூச்சு விடுவாள்
உடன் பிறந்தவளும் ஒழிந்தான் இன்றோடு என்று விழா எடுப்பாள்,
தோழிகள் மட்டுமே துக்கப்படுவார்கள்–(கடைசிவரை இவனை திருத்தவே முடியவில்லையே என்று)-
அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா………….நான் எஸ்கேப்பு… .. அம்மணி ரெம்ப சூடா இருக்காங்கோ………….நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆயிக்கிறேன்ன்ன்ன்னுங்க….நீங்களாச்சு, அவங்களாச்சு…..
பீட்டர் தாத்ஸ்:- The scars you acquire by exercising courage will never make you feel inferior.
Labels: கவிதை 48 Comments
பத்மா’ ஸ் கிட்ச்சன்
ரொம்ப நாட்களாக சமையலையும் பதிவுல சேர்க்க வேண்டும் இருந்தேன், சமையல் இல்லாமல் நாம் இல்லை. அடிக்கடி உடல் நலமின்றி டாக்டரிடம் போவதற்கு பதில், நல்ல சாப்பாட்டை சாப்பிட்டாலே போதும் என்று என் ஆயா அடிக்கடி சொல்லுவார்கள்.
பத்மாவதி அம்மாள்’ என்னுடைய ஆயா,(அப்பாவின் அம்மா) அவர்களுடைய சமையலை சாப்பிட தவம் செய்து இருக்கவேண்டும். சமையல் மட்டுமே அல்ல, அதை மற்றவர்கள் வயிறு நிறைய சாப்பிட வைப்பதிலும் அவருக்கு நிகர் அவரே. மனசு நிறைய, சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் நல்லபடியாக இருக்கவேண்டும் என்று பரிமாறுவார்கள். அவர்களிடம் சாப்பிட்ட உடம்பு மற்றவர்களிடம் இருந்து தனியாக நம்மை காட்டும். என் ஆயாவின் சமையலை சாப்பிடவே சொந்தக்காரர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வருவதுண்டு.
என்னுடைய ஆயாவிற்கு என்று தனி கைப்பக்குவம் இருந்தது, என் அத்தைகளும், நானும் அவர்களிடம் தான் சமையல் கற்றுக்கொண்டோம், ஆனால் அவர்கள் செய்வது போன்ற ருசி எங்களது சமையலில் இல்லாதது மிக பெரிய குறையாக உள்ளது. சமையல் சொல்லி தரும் போது, சமையலை தவிர, உடன் என்ன வேலைகளை செய்யலாம், என்பதையும் சொல்லி தருவார்கள். கண் பார்த்து கை வேலை செய்யவேண்டும், யாரும் சொல்லிதராமேலேயே வேலை செய்ய பழக வேண்டும் என்று, கண்களால் பேசியே வேலை வாங்கும் திறமை அவர்களிடம் இருந்தது.
எனக்கு அவரின் சமையலில் பிடித்தது, அல்லது எனக்காக நான் விரும்பி சாப்பிடுவேன் என்பதற்காக அவர்கள் சமைக்கும் உணவு.
1. எல்லா வகை கீரையும்
2. வாழைக்காய் வருவல்
3. கத்திரிக்காய் பொறியல்
4. ரசம்
5. மீன் குழம்பு, (மீன் முள்’ளிற்கு பயந்து அதை சாப்பிடமாட்டேன்,ஆயா, ஆய்ந்து கொடுக்க கொடுக்க சாப்பிடுவேன். இன்னமும் எனக்கு மீன் ஆய்ந்து சாப்பிட தெரியாது, 1, 2 முறை முயற்சி செய்து தொண்டையில் மாட்டி பிரச்சனை ஆகி, அந்த பக்கமே தலைவைப்பதில்லை, சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன்)
பொதுவாக எல்லோருக்கும் அவரின் எல்லா சமையலுமே பிடிக்கும், குறிப்பாக மீன் குழம்பு, ரசம்.. சான்ஸே இல்லை, இது வரை அப்படி யாருமே ருசியாக சமைத்தது இல்லை. வெறும் ரசமும், வாழைக்காய் வறுவலும் இருந்தால் போதும் உலகமே மறந்து போகும். சாப்பாட்டின் ருசியால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தார்கள்.
பத்மா ஆயா எனக்கு கொடுத்த சில நல்ல குறிப்புகள் :-
1. தலைக்கு குளிக்கும் தினம், முடியை முடிந்துக்கொள்ளாமல் (முடியை விரித்து போட்டு) சமையல் அறைக்கு மட்டும் அல்ல, வீட்டிற்க்குள்ளேயும் வரக்கூடாது என்பார்கள். தலைமுடி சாப்பாட்டில் வந்துவிட கூடாது என்பதற்காக சொல்லுவார்கள். சமையல் செய்யும் போது தலைமுடி கட்டி இருக்கவேண்டும்.
2. சமையல் செய்யும் போது பேசக்கூடாது, சிலர் பேசும் போது வாயிலிருந்து எச்சில் தெறிக்கும். ஆனால் எச்சில் தெறிப்பது அவர்களுக்கே கூட தெரியாது. அது சமையல் பொருட்களில் படும், அதனால் பேசக்கூடாது என்பார்கள். சாமிக்கு படையல் வைக்கும் நாட்களிலும் எச்சில் படாமல் சமையல் செய்யவேண்டும், அதற்கும் இதே தான் –பேசக்கூடாது.
3. சமையல் செய்யும் போது நல்ல மனதுடன், நிதானுத்துடன் செய்யவேண்டும், அதாவது கோபமாக இருக்கும் போது சமைத்தால் அதன் ருசி நன்றாக இருக்காது என்பார். பிறரின் பசியை போக்கும் உணவு நல்ல மனதுடன், அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சமைத்தால் நல்ல ருசியாகவும், பக்குவமாகவும் சமைக்க முடியும் என்பார்.
4. டிவி பார்த்துக்கொண்டு, அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டும் சமைக்க கூடாது என்பார். சமையலில் பல்லி விழுந்தால் கூட நமக்கு தெரியாது சமையல் விஷமாகிவிடும், கவன குறைவால் சமையல் தீய்ந்து விடும், அல்லது அதிக நேரம் அடுப்பில் இருந்தால் அதன் ருசி மாறிவிடும் என்பார்.
5. எந்த வகை சமையல் செய்தாலும் அதற்கு தேவையான எல்லா பொருட்களும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு தான் சமையலை தொடங்க வேண்டும், இல்லையென்றால், அதை வாங்கிவந்த பிறகே அந்த சமையலை செய்வார். சரி வெந்தயம் இல்லை, பரவாயில்லை என்று காரக்குழம்பு தாளிக்கவே மாட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு பொருள் சேர்ப்பதும் அது சாப்பாட்டிற்கு தனி ருசியும், சக்தியும் தரும் என்பதற்காகவே. அதனால் ஒன்று இல்லை, பரவாயில்லை என்று விட்டு விட்டு சமைக்க கூடாது என்பார்.
6. சமைத்த பாத்திரங்களுடனே பரிமாற எடுத்துசெல்லக்கூடாது. பரிமார தனிப்பாத்திரம் வைக்கவேண்டும்.
7. சாம்பார் கரண்டியை மற்ற உணவுகளில் போடக்கூடாது. கெட்டுவிடும்.
8. பால் காய்க்கும் பாத்திரங்களை வெயிலில் காயவைக்க வேண்டும். பொதுவாகவே பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்த பிறகு தான் கவிழ்த்து வைக்கவேண்டும், இல்லையென்றால், பூச்சிகள் அண்டும் என்பார்.
9. சூட்டு உடம்புக்கார பெண்கள் இட்லி மாவை அவர்கள் கைவைத்து கரைக்க க்கூடாது. சீக்கிரம் புளித்துவிடும் என்பார்.
10. கீரை, மீன் குழம்பு போன்றவை சமைக்க தனித்தனி சட்டி வைத்து இருப்பார்கள். இதில் தனித்தனி என்றால் அசைவம், சைவம் வித்தியாசம் இல்லை. சட்டியின் டிசைன் அப்படி இருக்கும். கீரை கடையும் சட்டி உட்புறம் வரி வரியாக இருக்கும். ஆனால் மீன் குழம்பு செய்யும் சட்டி டிசைன் எதுவும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும்.
11. எப்போதுமே (அவர் இருந்த வரை) முழு சமையலுக்கும் நல்லண்ணெய் மட்டுமே உபயோகித்தார். நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி மற்றும் தோற்றம் இளமையாக இருக்கும். அவருக்கு தலைமுடி 82 வயதிலும் நரை இல்லாமல் இருந்தது, இப்படி ஒரே எண்ணெய்யை பயன்படுத்தியது தான் அதற்கு காரணம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். அப்பளம் , வத்தல் பொறிக்க மட்டும் ரீபைன் ஆயில் உபயோகித்தார்.
எல்லாமெ எனக்கு அவர்கள் சொல்லிக்கொடுத்தது என்றாலும், 2, 3 ம் எனக்கு அவர் அடிக்கடி சொல்லும் உபதேசங்கள். நான் இருந்தாலே வீட்டில் சத்தம் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக்கொண்டே இருப்பேன், வேகமாக வேறு பேசுவேன். அவர்களுக்கு வயதாகி விட்டது அல்லவா அதனால், சில சமயம் காதை மூடிக்கொண்டு, “பாப்பா எனக்கு நீ பேசவதை ஜீரணிக்க முடியவில்லை, காது வலிக்குது, கொஞ்சம் அமைதியா இரு” நீ பேசறதனால் நிறைய சத்து உடம்பை விட்டு போய்டும், அப்புறம் வேலை எப்படி செய்வே? “ என்பார்கள். எந்த வேலை செய்தாலும் அமைதியாக செய்”என்பார்கள்.
நிறைய பதிவுகளில் சொன்னது போன்று அதிவேக கோபம், பிடிவாதம் போன்ற குணங்கள் என் சொத்தாகி போனதால், நான் சமைக்கும் போது நெடி நிறைய வந்து அனைவருக்கும் தும்மல் வருகிறது என்று, என் குணத்தை மாற்ற சொல்லுவார்கள். “நல்ல பெண்மணி இவள் நல்ல பெண்மணி “ என்ற பாட்டை அடிக்கடி பாடி என்னை வெறுப்பேற்றுவார்கள்.
இன்று ஒரு இனிப்போடு “பத்மா’ஸ் கிட்சன் ” னில் சமையலை ஆரம்பிக்கலாம். இது என்னுடைய ஆயாவின் சமையல் இல்லை. அத்தையிடம் கற்றுக்கொண்டு, இப்போது அடிக்கடி ஓவன்’ ல் எளிதாக செய்ய கற்றுக்கொண்ட டிஷ்.
பத்மா’ஸ் கிட்சன் – 1. பீட்ரூட் ஹல்வா
பீட்ரூட் – 4 மீடியம் சைஸ் (துருவி, கப்’பில் அளந்து கொள்ளவும்)
சர்க்கரை – பீட்ரூட் அளவில், 3/4 அளவு (இனிப்பு வேண்டும் என்றால் அதிகமாக போட்டு க்கொள்ளலாம்)
ஏலக்காய் :- 1 (நுணுக்கியது)
நெய்:- 5 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4-5 (சிறு துண்டுகளாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.)
1. ஓவனில் வைக்கும் கண்ணாடி/பீங்கான் பாத்திரத்தில் மைக்ரோ வேவ்’ 100 ல், 1.5 mins செட் செய்து நெய்யை ஊற்றி சூடு செய்யவும். பிறகு அதில் பொடித்த முந்திரி பருப்பை போட்டு 2-3 mins வைக்கவும்.
2. முந்திரியை நெய்யை வடிகட்டி எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யுடன் பீட்ரூட் துருவலை போட்டு – 4-5 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.
3. பீட்ரூட் நன்றாக வதங்கி இருக்கும், இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி, திரும்பவும் 6-8 mins வைக்கவும். நடுவில் ஒரு முறை ஓவனை நிறுத்தி கிளறி விடவும்.
அவ்வளவு தான் பீட்ரூட் ஹல்வா ரெடி – ஓவனிலிருந்து எடுத்து, பரிமாற தட்டில் கொட்டி ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி பருப்பு தூவி பரிமாறவும். இதே போன்று கேரட் ஹல்வாவும் செய்யலாம். இதை சூடாகவும் சாப்பிடலாம், பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடலாம்.
அணில் குட்டி அனிதா:- ம்ஹீம்! வீட்டுல 2 பேரு கஷ்டபடறது பத்தாதுன்னு… இது வேற ஆரம்பிச்சிட்டாங்களா?.. நீங்க எல்லாம் இவங்க சமையலை படிக்கறதோட நிறுத்திக்கோங்க.. அவ்ளோத்தான் நான் சொல்லுவேன்……….அவங்க ஆயா சமைச்சத சாப்பிட்டு இவங்க என்னவோ நல்லாத்தான் இருக்காங்க. .ஆனா இவங்க செய்த சமையல சாப்பிட்டுட்டு இவிங்க வூட்டுக்காரரும், பையனும்… எப்படா விடுவு காலம் கிடைக்கும்னு ..வெயிடிங்ஸ்………..!! ரொம்ப யோசிக்காதீங்க.. நானும்தேன்……….
பீட்டர் தாத்ஸ்:- The secret of happiness is not in doing what one likes, but in liking what one does.
Labels: பத்மா'ஸ் கிட்ச்சன் 12 Comments
6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா--Part-2
சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு- தொடருது............
பாவம் அம்மணிக்கு டிரிப்ஸ் ஒரு கையில ஒரு stage க்கு மேல ஏத்த முடியாம..போக......இன்னொரு கைக்கு மாத்தினாங்க. என்ன பிரச்சனைன்னு தெரியாமையே 3 நாளும் போய்ட்டு இருக்கு.. நம்ம கொசு அண்ணனால், மலேரியா வந்திருக்குமோன்னு ஒரு சந்தேகமே தவிர அதுவும் டெஸ்ட் ரிசல்ட் எதிலும் பாஸிட்டிவா இல்ல..பாஸிட்டிவா வரும்னு யூகத்திலேயே இத்தன டிரீட்மெண்டும் நடக்குது..................(ஒரு வேல சிக்குன் குனியவாக்கூட இருக்கலாம் னு நான் guess பண்னேன்..எதுவா இருந்தாலும்..அம்மணியோட இம்சை இல்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கும் எனக்கு......ஹி..ஹி...)
4வது நாள்....குடுத்த மருந்து, மாத்திரையால அம்மணி நிலைம ரொம்ப மோசமாயிடுத்து. மனசு இறங்கி, அவங்க hubby, டாக்டர் தம்பதிகளை ரொம்ப request பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. வந்த பிறகு தான் தெரியுது, over dosage ஆல், அம்மணி வயிரெல்லாம் வெந்துபோய், தண்ணி க்கூட குடிக்க முடியாம ஆயிடுத்து. ஒரு ஸ்பூன்(ஆமாங்க நெசந்தான்) ஜீஸ் குடிப்பாங்க.. அப்படியே வாந்தி எடுப்பாங்க.. எதுவுமே உள்ளே போகல.. பேசற திராணிக்கூட இல்லாம போச்சு. திருப்பி டாக்டர் கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வாந்தி எடுக்க பயந்துக்கிட்டு liquid food ஒரு ஸ்பூன், 2 ஸ்பூன் ன்னு குடிக்க யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க.......சாப்பிடவே முடியாம நிலைம ரொம்ப மோசமாயிடுத்து.........
அவங்க வூட்டுக்காருக்கு..ஒரே டென்ஷன்.. .வீட்டுல வந்து படுத்துக்கிட்டு ஓவரா சீன் போட்டு இம்சை கொடுக்கறாளே என்ன செய்யறதுன்னு தெரியல...... சரி என்ன ஆனாலும் ஆஸ்பித்திரியிலேயே ஆகட்டும்னு.. அம்மணிய நைஸ்ஸா ஏத்தி விட்டாரு.. எப்படி இருந்த உன்னை இப்படி ஆக்கிட்டாங்களேமா.. வா..போய் சண்டைப்போட்டுடு வரலாம்னு.. சொன்னதுதான்.. “சண்டை” ன்ற ஒரு வார்த்தைய கேட்டவுடனே...எங்க இருந்துதான் அம்மணிக்கு வீரம் வந்துதுன்னே...தெரியல.....” ஆமாங்க..விட கூடாது வாங்க போலாம்...” வரிஞ்சிக்கட்டிகிட்டு கிளம்பிட்டாங்க........
திருப்பியும் அதே ஆஸ்பித்திரி........அதே நர்ஸ் அக்கா.......ஆனா இந்த தரம் டாக்டர் அம்மா இல்ல டாக்டர் ஐயா..பார்த்தாரு.. கவிதாவோட கேஸ் ஹிஸ்ட்ரி (3 நாள்ல சாதரண ஜுரம் ஹிஸ்ட்ரி ஆயிடுத்து) படிச்சிட்டு, பெட்ல வந்து படுங்கம்மான்னாரு.
டாக்டர் “என்னமா ஆச்சு.?.”ன்னு .
(கவிதா செம கடுப்புல இருக்காங்க..அவங்கள பாத்து இந்த மாதிரியா அவரு கேப்பாரு)..
“ ம்ம்..சங்கு ஊதல ..அது ஒன்னுதான் பாக்கினாங்க..”
.டாக்டர் காதுல சரியா விழல.. உடனே..அவரு அவங்க hubby பக்கம் திரும்பி,
மேடம் என்ன சொல்றாங்க சார்?..
மேடத்தோட படத்துக்கு மால போடற நிலைமைக்கு கொண்டுவந்ததுக்கு நன்றின்னு மனசுல சொல்லிக்கிட்டு..
“டாக்டர், நீங்க ஹிஸ்டிரிய படிச்சிங்க..அவ்வளவு drugs கொடுத்த நீங்க அசடிட்டி கன்ட்ரோல் பண்ண ஒரு மருந்து கூட கொடுக்கல..அதனால அவங்களால தண்ணி க்கூட இப்ப குடிக்க முடியாம கஷ்ட படறாங்க..”
“ஓ..is it, அசடிட்டி கன்ட்ரோல் பண்ண மருந்து கொடுக்கலையா? “ஏன் கொடுக்கல.?”.
கவிதா வீட்டுகாரரும் டென்ஷன் ஆயிட்டாரு.. ‘என்ன டாக்டர் என்ன கேட்கறீங்க?”
டாக்டர், கவிதாவின் வயிரை அவரால் முடிந்த அளவுக்கு அழுத்தி (சோதனை பண்றாராமா) பார்க்க..
கவிதா..“டாக்டர்..ப்ளிஸ்..ரொம்ப வலிக்கது..”
டாக்டர்..”எங்கமா வலிக்குது..இங்கயா..இங்கயா..” என்று வயிறை ஒரு இடம் விடாம அழுத்த...
கவிதா..”டாக்டர்ர்ர்ர்ர்ர்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நீங்க அழுத்தறதுதான் வலிக்குது..” விட்டுடுங்க...” என்றார்கள்
டாக்டர் ”இல்லமா..உங்களுக்கு என்ன problem ன்னு தெரிய வேண்டாம..பொருத்துகோங்க...”
“ டாக்டர் நான் தான் சொன்னேனே அசடிட்டி problem“ என்றார் கவிதாவின் வீட்டுக்காரர்.
“ஓ is it soo..” சரி சரி வாங்க உட்காருங்க.. உங்களுக்கு நான் புரியரமாதிரி சொல்றேன் “ ன்னு சொல்லிட்டு, நர்ஸ் அம்மாவை கூப்பிட்டு “அந்த 106 நம்பர் ரூம் ரெடி பண்ணுங்க..மேடம் ரொம்ப சீரீயஸ்யா இருக்காங்க..அட்மிட் பண்ணனும்..”
சார், மேடம் நிலைமைய பார்த்தா ஒரு 2 days complete rest and observation ல இருக்கணும், அதுக்கு அப்புறம் தான் என்ன ப்ராப்ளம்னு சொல்லவே முடியும்.....அதனால் நான் அவங்கள அட்மிட் பண்ணிக்கிறேன்..
(கவிதா “அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசி, ஆளமடக்கறீங்க” ன்னு மனசுலதான் நினைச்சிக்கிட்டாங்க.. வெளியில சொல்லவா முடியும்.)
“இல்ல அட்மிட் எல்லாம் வேண்டாம் டாக்டர், அசிடிட்டிக்கு மருந்து கொடுங்க போதும், அவங்கள வீட்டுல வச்சே நாங்க பார்த்துக்கறோம் “ என்றார் கவிதா வீட்டுக்காரர்.
கொஞ்ச நேரம், டாக்டரும், கவிதா வீட்டுக்காரரும் அட்மிஷன் பற்றி விவாதத்தில் இறங்க.. கவிதா..என்னடா இது வம்பா போச்சு திருப்பியும் நம்மை அட்மிட் பண்ணிடுவாங்களோன்னு பயந்து போய்,..........
“ Excuse me டாக்டர்,” என்று சொல்லிவிட்டு.........முடியாட்டாலும்....:ஓட்டமும் நடையுமா..ஆஸ்பித்திரிய விட்டு வெளியில வந்து..........அவங்க வண்டி பக்கதுல வந்து நின்னக்கிட்டு...ஸ்.ஸ்ஸ்ஸ்… தப்பிச்சேன்..ன்னு பெருமூச்சி விட்டாங்க..!
அப்புறம் என்ன, அசடிட்டிக்கு மருந்து சாப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆனாங்க.....இதில இன்னும் ஒரு வாரம் ஆயிடுத்து….
ஆஸ்பித்திரியிலிருந்து வந்த பிறகு அம்மணி நினைச்ச அளவுக்கு நிஜமாவே இளைச்சுதான் போய் இருந்தாங்க.. கொஞ்சம் நார்மல் ஆன பிறகு office போனவங்கள..”யாரு நீங்க” இந்த சீட்டுல வேற ஒருத்தங்க இல்ல இருந்தாங்க..நீங்க நுயூ அப்பாயின்மெண்டான்னு” கேக்கற அளவுக்கு ஆளு இளைச்சு போய் இருந்தாங்கன்னா..பாருங்களேன்...
இதான வேணாங்கறது.. எப்படி இருந்த கவிதா இப்படி இளைச்சாங்கன்னு சொன்ன நான்..அவங்க actual weight என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேட்கறது புரியுது.. அதெல்லாம் கேக்கப்பாடது........ஏன்னா சொல்லவே முடியாது.....அம்மணி இன்னமும் அடங்காம........கொசு அண்டாத ஜிம்’மா கண்டுபிடிச்சி போய்க்கிட்டு தானே இருக்காங்க.. ......
யாருக்காவது வெயிட் குறையனும்னா.. தனி மெயில் அனுப்புங்க.......... அந்த ஆஸ்பித்திரி அட்ரஸ் தரேன்.....நேரா போனீங்கன்னா..அவங்களே அட்மிட் பண்ணிடுவாங்க.. அப்புறம் வெயிட் என்ன வெயிட்..............டேரக்ட் சங்குதாண்டீஈஈஈஈஈஈஈஈ.........................
பீட்டர் தாத்ஸ்:- Everything you need for a happy life is within yourself.
Labels: அணில் குட்டி 3 Comments
6 நாளில் 5 கி எடை குறைந்த கவிதா-ஒரு உண்மை கதை ..
அணில் குட்டி அனிதா:- கவிதா 6 நாளில் எடைகுறைத்த நிஜத்தை எழுதபோவது நான் தேன்..வேற யாரு?? அம்மணி எவ்வளவு மிரட்டியும் இந்த ரகசியத்தை உங்கக்கிட்ட சொல்லாம விடறது இல்லைன்னு கலத்துல இறங்கிட்டேன்ங்க.........அம்மணியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாத நெஞ்சம் படைத்த அசிங்கம்..ச்சே..ச்சே........சிங்கம்” இந்த “அணில்குட்டி” ன்னு சொல்லி, இந்த கதையல்ல நிஜத்தை எழுதுகிறேன்...
கவிதாவுக்கு எப்பவும் மார்கண்டேயினி'ன்னு நெனப்பு... அவங்க பையன் குழந்தையா இருக்கும் போது.........கவிதாவ எல்லாரும் அவனுக்கு “அம்மா” ன்னு சொன்னாங்க..பையன் கொஞ்சம் பெரிசா ஆனதும், பையனுக்கு “அக்கா” ன்னு சொன்னாங்க.. அதனால இப்போ அவங்க பையனுக்கு “தங்கச்சி” ன்னு சொல்ல வைக்கனுமாம்?!!!. ம்ம் ஆசை யாரைவிட்டது..அதுவும் இது பேராசை..யாராவது ரோடுல பார்த்து..என்னங்க உங்க பையன் வளர்ந்துகிட்டே போறான்..நீங்க..இன்னும் அப்படியே இருக்கீங்கன்னு சொல்லிட்டா போதும்..அம்மணிக்கு தலக்கால் புரியாது,..அன்னைக்கு பூரா..சீனோ சீன் தான்... என்ன நவீனோட “பாப்பா” ன்னு (அவங்க சொல்லல இவங்களே சொல்லிக்குவாங்க) சொன்னாங்கன்னு, பில்டப் பண்ணி சொல்லிக்குவாங்க..(ரொம்ப over தான், பீப்பா மாதிரி இருந்துக்கிட்டு பாப்பா ன்னா?) என்னத்த பண்ண, எனக்கு தங்கச்சி” ன்னு சொல்லாத வரைக்கும் நான் பிழைச்சேன்.
பீப்பாவின் sorry sorry ! பாப்பாவின் எடையை குறைக்க என்ன வழின்னு யோசிச்சி, gym க்கு போலாம்னு முடிவு பண்ணாங்க. ஆனா வீட்டுல ஆத்துகாரர் சரின்னு சொல்லனுமே?! நைசா matter ஐ ஆரம்பிச்சாங்க.. அவரோ ஒரு super look விட்டுட்டு, “உனக்கு அவசியம் தானா.. சும்மா இருக்கும் போதே அங்க கொடையது, இங்க குத்துதுன்னு சொல்லுவ..gym எல்லாம் உனக்கு சரிவராது, படுத்துடுவ..ன்னு” சொல்லிட்டு விட்டா பரவாயில்லையே.. “உனக்கு என்னமா.. இப்பவும் கல்யாணம் பண்ணப்ப எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்க “ என்றார்.
ம்ம்..இதுக்கு நீ குண்டாத்தான் இருக்கேன்னு நேரடியா சொல்லியிருக்கலாம். புருஷன்காரன் சொல்லி எந்த மகராசியாவது கேட்டதா சரித்தம், பூகோளம் இருக்கா?! நம்ம கவிதாவும் அப்படிதான்.. விடறதா இல்லை, “அப்படின்னா நான் தினமும் 2 வேலைதான் சாப்பிடுவேன், ஒரு வேலை பட்னி இருப்பேன்” னாங்க. அவரோ.. “நீ 3 வேலை சாப்பிடாம இருந்தாலும் பரவாயில்ல gym க்கு போகக்கூடாது” ன்னு சொல்லிட்டாரு. அம்மணி, விடல, நச்சறிச்சு, உண்ணாவிரதம் இருந்து, கடைசியில “என்ன பிரச்சனை வந்தாலும் என்னை (அவரை) தொந்தரவு செய்ய கூடாதுன்னு”சொல்லி, பர்மிஷன் குடுத்தாரு.
முதல் நாள் போனாங்க.. exercise எப்படி செய்யனும், எவ்வளவு நேரம் செய்யனும்னு சொல்லி கொடுத்தாங்க. வேகாதி வேகமா செய்ய ஆரம்பிச்சாங்க.. அம்மணி உள்ள போனதும், fan போட்டுக்கிட்டு தான் exercise பண்ணுவாங்க. ஆனா அந்த gym ஆளுங்க fan எல்லாம் போடக்கூடாது, வியர்வை வராதுன்னு சொல்லிடாங்க. அப்புறம் தான் அம்மணிக்கு பிரச்சனை நம்ம அண்ணன் “கொசு” மூலமா வந்தது. அம்மணிக்கு கொசுன்னாவே அலர்ஜி, bus, train ல போகும் போது கூட கொசுவத்தி ஏத்தி வச்சிகிட்டு போற கேசு.. இங்க ஒன்னும் முடியில.. கொசுவ விரட்டுவாங்களா?..வேக வேகமா exercise பண்ணுவாங்களா.?? பாக்க கொஞ்சம் பாவமா இருந்தது.. போன 2 -3 நாள்ல அவங்களுக்கு நின்னுடலாம்னு ஆயிடுத்து............
ஆனா ஆத்துக்காரரும், பையனும் கிண்டல் பண்ணுவாங்களேன்னு போய் வந்துக்கிட்டு இருந்தாங்க..3 ஆவது நாள் முடிந்த நிலையில்.. இராத்திரி தூங்கும் போது “உம்” கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. “அப்பவும்..இதெல்லாம் உன் உடம்புக்கு சரிவராது..நிறுத்திடுன்னு, அவங்க வீட்டுல வூட்டுக்காரரும், பையனும் சொல்லி பாத்தாங்க…. ம்ம்.. இவங்க எங்க...!! எப்படியும் ஒரு 5 கிலோ குறைச்சிட்டு தான் நிறுத்துவேன்னு சொல்லிடாங்க.. 4வது..நாள்...இராத்திரி.. பூரா உடம்பு வலியில தூக்கம் வராம கஷ்டப்பட்டாங்க.........ஆனாலும் எங்க கவிதா யாரு? விடுவாங்களா.. .5..நாள்..உடம்பை யாரோ முறுக்கி எடுக்கிற மாதிரி வலி, அப்புறம் லேசா சுரம் வந்துவிட்டது.. இராத்திரி ஒரு 1.30 மணி இருக்கும்..அம்மணிக்கு ஜன்னியே வந்துடுத்து.. இவங்க அனத்தறது தாங்கமுடியாம, இவங்க hubby என்னாச்சுன்னு தொட்டு பார்த்தா..?!! fever எகுறுது...105 டிகிரி....... அவரு அப்ப கோவத்தை காட்டமுடியாம..அர்த்த இராத்திரியில ஆஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போனாரு..
இவங்க வீட்டு பக்கதுல..ஒரு super டாக்டர் “தம்பதி” சகிதமா ஆஸ்பித்திரி நடத்தி ஓஹோன்னு சம்பாதிக்கறாங்க. 24 மணி நேர ஆஸ்பித்திரி என்பதால் அங்க கூட்டிட்டு போனாங்க.. எப்படா பேஷண்டு வருவாங்க அட்மிட் பண்ணலாம்னு ஒரு கும்பலே அங்க காத்துக்கிட்டு இருந்தது.. ஒரு நர்ஸ் அக்கா, அம்மணி போட்ட சீனை பார்த்துட்டு..”இவங்க ரொம்ப சீரியஸ்ஸா இருக்காங்க.!! டாக்டர எழுப்பி கூட்டிட்டு வரோம்னு போனாங்க.. ம்ம்! வந்தாங்க டாக்டர் அம்மா, அவங்கள பார்த்தவுடனே அம்மணி சுரம் இன்னும் ஒரு டிகிரி ஜாஸ்தியாயிடுத்து........பின்ன என்னங்க,..அர்த்த இராத்திரியில பூதம் மாதிரி நைட்டீன்னு ஒன்ன மாட்டிக்கிட்டு..தல நிறைய (தூங்கறதுக்கு முன்னாடி வைச்சிருப்பாங்க போல) பூ வைச்சிக்கிட்டு...நெத்தி நிறைய பெரிய ரவுண்டு ஸ்டிக்கர் பொட்ட வைச்சிக்கிட்டு வந்தா.. பாக்கறவங்களுக்கு கதி கலங்கி போகாதா..?!!
வந்த டாக்டர் அம்மா, உடனே அட்மிட் பண்ணனும், டிரிப்ஸ் ஏத்தனும். ஜுரத்த குறைக்கனும்னு சொல்லி வேக வேகமா எங்க ஓடிட போறாங்களோன்னு ஒரு ரூம்ல போட்டு அடச்சி, டிரிப்ஸ் ஏத்த ஆரம்பிச்சிட்டாங்க...அடுத்த நாள் காலையில ஒரு பெரிய (மாத்திரை, ஊசி, மருந்து) லிஸ்ட் கொடுத்து வாங்கிட்டு வரசொன்னாங்க.. ஊசி மாத்திரமே ஒரு 20 இருக்குங்க.. அப்புறம் ஒரு நர்ஸ அம்மா வந்து, இரத்தம், யூரின் டெஸ்டு எடுக்க எழுதி கொடுத்தாங்க. அதுவும், அவங்க சொல்லற லேப்ல போய்த்தான் எடுக்கனுமாம். பாவம் அவங்க hubby, பெருங்குடியில், ஏதோ ஒரு சந்துல இருந்த அந்த லேப்பை கண்டுப்பிடிச்சி, கொடுத்து, ரிசல்ட் வாங்கி வர்றத்துகுள்ள நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தாரு,,,,,.
நம்ம கவிதா நிலைமைக்கு வருவோம், காலையில போட ஆரம்பிச்ச ஊசிங்க..நர்ஸம்மா..நிறுத்தல.. இந்த கை, அந்த கை, இந்த இடுப்பு, அந்த இடுப்புன்னு போட்டு தாக்கறாங்க...... எனக்கு சிரிப்பு அடக்க முடியல.........அம்மணிக்கோ வாய திறக்க முடியில. அந்த பக்கம் அவங்க hubby நடக்கறத எல்லாத்தையும் “மவளே வேணான்னு சொன்னேன் கேட்டியா, அனுபவி” ன்னு பார்த்து ரசிச்சிகிட்டு இருந்தாரு.. 3வது நாள் கவிதாவால பேசக்கூட முடியல..தட்டு தடுமாறி அவங்க hubby ஐ கூப்பிட்டு, “பழிவாங்கனும்னு முடிவோடதான் இருக்கீங்களா..படிச்சவரு தானே நீங்க?.. இவ்ளோ ஊசி போடறாங்க.. என்ன என்னவோ மாத்திர தராங்க என்ன ஏதுன்னு கேக்க மாட்டீங்களா?.. இன்னும் ஒரு நாள் இங்க நான் இருந்தா..எனக்கு சங்கு ஊத வேண்டியது தான்..என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுங்க..ப்ளிஸ்..”: கெஞ்ச ஆரம்பிச்சிட்டாங்க........... அவரோ ‘’அப்போ ஒரு நாள் கழிச்சே வீட்டுக்கு போலாம்னு” கூலா சொல்லிட்டு போய்ட்டாரு.. வாழ்க்கையில அவருக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் தவற விட தயாரா இல்ல.
சரி ..சரி.............சங்கு ஊதனாங்களா...இல்லையான்னு....அடுத்த பதிவுல பார்ப்போம்......
பீட்டர் தாத்ஸ் :- A new attitude invariably creates a new results.
Labels: அணில் குட்டி 7 Comments
அய்யோ! இந்த பக்கம் வந்துடாதீங்க!! கவிதா பாடியிருக்காங்க..
அணில் குட்டி அனிதா:- ஜன கன மன பாட சொன்னா... இங்க பாருங்க..அம்மணி அழுது தீத்துட்டாங்க..அத வேற சர்வேசன் அண்ணன் சூப்பர் ன்னு சொல்றாரு.. நிசமாத்தான் கேட்டாறா..இல்ல..அம்மணி வருத்தப்பட போறாங்கன்னு.. சொன்னாறான்னு தெரியல.. அவ்வளவு சோகமா பாடியிருக்காங்க.... அம்மணிய பாட வேண்டாம்னு நானும் எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன்..முடியல... நீங்களும் கூட அழணும்னா... இங்க போங்க...!!
http://neyarviruppam.blogspot.com/2007/07/12.html
சரி..அம்மணி'மட்டும் இல்ல இன்னும் நிறைய பேரு பாடி அசத்தி இருக்காங்க.. நீங்களும் சீக்கிரம் பாடி அசத்துங்க.. .பாவம் சர்வேசன் அண்ணே... கூவி கூவி அழைக்கிறாரு..நீங்க யாரும் கண்டுக்கவே மாட்டேன்ங்கறீங்க...
கொஞ்சம் அவரை கண்டுக்கோங்களேன்.........
பீட்டர் தாத்ஸ்:- Success is a journey, not a destination.
Labels: அணில் குட்டி 2 Comments
சினிமாவை பார்த்து திருந்தியவர்கள் உண்டா?
சினிமா என்பது ஒரு தனிமனிதனின் கற்பனை. நடந்த நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது தன்னுடைய கற்பனையை கதைகளாக்கி சினிமாவை படைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு தனிமனிதனின் படைப்பு அன்றி வேறு ஒன்றும் இல்லை. ஒரு படத்தின் மொத்த அம்சமும் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட கருத்தே. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.
ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை அவர் காசாக்குகிறார். நாமும் அவரின் கற்பனையை, திறமையை கண்டு மகிழ்ந்து, திரைப்படத்தை காசாக்கி கொடுக்கிறோம். ஒரு படத்தில் சொல்லியிருக்கிற கதையில் வரும் நல்லவை, கெட்டவை எல்லாமே அந்த தனி நபரின் முழு கற்பனை, அவருடைய பார்வையில் அவர் சொல்ல நினைப்பதை சொல்லியிருப்பார் அல்லது அவரின் இயற்கை குணத்தின் பிரதிபலிப்பாக கூட இருக்குமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. அப்படியிருக்க ஒரு கதையை இது சரி, இது தவறு என்று யாராலும் யாரையும் சாடமுடியாது, அதில் எந்த அர்த்தமும் இல்லை.
அப்படி நாம் விமர்சனம் செய்தால் அந்த குறிப்பிட்ட திரைப்படத்தை நம் சிந்தனையில், நம் பார்வையில் நாம் எப்படி யோசிக்கிறோம் அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்ற தனிப்பட்ட கருத்தே. பருத்திவீரன் என்ற திரைப்படத்தை அனைவரும் பாராட்ட ஒருவர் மட்டும் அது ஒரு படமா? பெண்ணிடம் பணத்தை வாங்கி, வேலை வெட்டி இல்லாமல் ஊரை ஏமாற்றி சுற்றும் ஒரு உதவாக்கரை இளைஞனின் கதை. இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று எழுதி இருந்தார். இப்படியும் சிலரால் திரைப்படங்களை அவர்களின் பார்வையில் விமர்சிக்க முடிகிறதுதான்.
இதில் சினிமாவை பார்த்து பாதிப்பு என்று சொன்னால், “காதல்” என்ற ஒரு விஷயம் மட்டுமே. காதலினால் சிந்திக்கும் தன்மையை இழந்த நம் மக்கள், சினிமாவை பார்த்து அதில் வரும், ஒரு தனிப்பட்ட மனிதனின் கற்பனையை மையமாக வைத்து சொல்லப்பட்ட காதலை, பின்பற்றும் காதலர்கள் அதிகம். “ஜில்லுன்னு ஒரு காதல் “ படம் பார்த்துவிட்டு, அதைபோன்று வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒரு பெண், எந்த அளவு தன் அறிவை இழந்தவளாக இருக்கிறாள் என்பது அவளுக்கே தெரிவதில்லை. “ஏக் துஜே கேலியே “பார்த்து தற்கொலை செய்து கொண்ட காதலர்களும் உண்டு. "அலைபாயுதே" பார்த்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் பைத்தியங்கள் உண்டு. "இதயத்தை திருடாதே" பார்த்து, எல்லோரைடமும் "ஓடி போலமா?" என்ற கேட்டவர்களும் உள்ளனர்.
சினிமாவை பின்பற்றி, அது பொழுது போக்கிற்கு மட்டுமே என்பதை மறந்து, தன் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் இவர்கள், சினிமாவில் சொன்னப்பட்ட ஒரு விஷ்யம் ஒரு தனிமனிதனின் கற்பனை, அது சினிமாவிற்கு மட்டுமே பொருந்தும், யாதர்த்த வாழ்க்கைக்கு பொருந்தாது என்பதை சிந்திக்க தவறுகிறார்கள். Start Camera, Action, and Pack up, என்பதோடு சினிமா காதலும், காதல் வசனங்களும் முடிந்து போகின்றன.
வியாபார நோக்கோடு, கவிர்ச்சிக்காக வேண்டி, பெண்கள், பாட்டு, நடனம் இத்தியாதிகள் சேர்க்கபடுகின்றன. இதில் ஒரு விஷயம் புரியவில்லை, பெண் அமைப்புகள் - பெண்களை திரையில் இழிவாக பேசிவிட்டாலோ, பாடல்கள் எழுதிவிட்டாலோ, குய்யோ, முய்யோ என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் ஆனால், அவிழ்த்து போட்டுவிட்டு ஆடும் பெண் நடிகைகளை எதிர்த்து இதுவரை போர்கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரியவில்லை.
மிகவும் சமுதாய நோக்கோடும், சிந்தனையோடும் எடுக்கப்பட்ட எத்தனையோ படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறுவது இல்லை. நாமும் அந்த படங்களை பார்த்து திருந்திவிடுவதும் இல்லை. அப்படி திருந்தி இருந்தோமானல், அப்படி படங்கள் மட்டுமே திரைக்கு இப்போது வந்திருக்கும். சினிமாவை நம்பியே வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அது அவர்களின் தொழில், செய்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.
அதற்கு அடிமையாகி மூடர்கள் போல திரியும் நாம், சினிமா என்பது ஒரு பொழுது போக்குக்காக மட்டுமே என்பதை உணர்ந்து அதற்கு எந்த அளவு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவும் தரவேண்டுமோ, அவ்வளவே தரவேண்டும்.
கறுப்பு பணம் என்பதை கருவாக கொண்டு எடுத்த “சிவாஜி” படத்தில் உள்ளேயும் , வெளியேயும் எவ்வளவு கறுப்பு பணம் நடமாட்டத்தில் இருந்தது என்பதை அனைவரும் அறிவர். சமீபத்தில் தான் ஜாக்கி சேனின், “Rob B Hood “ திரைப்படம் பார்த்தேன், அதில் வருகின்ற சில முக்கிய காட்சிகள் “சிவாஜி” படத்தில் அப்பட்டமாக அப்படியே வருகின்றன. இப்படி தனிமனித கற்பனையன்றி, அடுத்தவர்களின் கற்பனையையும் திருடி படங்கள் வெளிவருகின்றன. நாமும் அதை பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று கொண்டாடுகிறோம், திரை அரங்குகளில் அடித்துக்கொள்கிறோம், பால் அபிஷேகம் செய்கிறோம்.. பாராட்டு மழையும் பொழிகிறோம்….
அணில் குட்டி அனிதா:- மக்கா… தனியா லெட்டர் அனுப்பி சினிமா விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. …...அடடா….அம்மணி திருந்திட்டாங்க போல இருக்குன்னு நினைச்சேன்….ம்ஹீம்.. எங்க.. …. பதிவா எழுதிட்டாங்க… முடியலைங்க….!!
பீட்டர் தாத்ஸ்:- Failure is the opportunity to begin again more intelligently.
Labels: சமூகம் 4 Comments
எங்கள் வீட்டு மரம்ஏறி’யும் - சட்டியில் சாப்பாடும்
எங்கள் வீட்டில் தென்னை மரம் ஏறி, தேங்காய் மற்றும் ஓலைகளை வெட்டி தருபவரை “மரம் ஏறி” என்று அழைப்போம். அவரின் பெயர் ஜெயபால். ஆயா, தாத்தா, அப்பா மட்டுமே பெயர் சொல்லி அழைப்பார்கள். மற்றவர்கள் “மரம் ஏறி” என்று தான் கூப்பிடுவோம். 3 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து அவரே வேலை இருக்கிறதா என்று கேட்பார்.
எங்களுக்கு தேவை என்றால், யாராவது அவருடைய கிராமத்திற்கு போய் தான் அழைத்து வர வேண்டும். விழுப்புரம் தாண்டிய உடனே சென்னை வரும் நெடுஞ்சாலையில் ஒரு மேம்பாலம் வரும். (இப்போதும் உள்ளது), அதனை அடுத்த சிறு கிராமம் தான் அது. பெயர் மறந்துவிட்டது. அங்கே சென்று ஜெயபால்’ என்று கூறினால் போதும், அவர் எங்கிருந்தாலும் மக்கள் நம்முன் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள்.
இவர் வரும் போது ஒரு குடுவை (படம் #.1) எடுத்து வருவார். இந்த குடுவை முறம் செய்யும் நாரை கொண்டும், தென்னைமரத்து பாலையை கொண்டும் செய்திருப்பார்கள். மிக கடினமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். இந்த குடுவையை இடுப்பில் பச்சை கலர் பெல்ட்டை கொண்டு எப்படியோ முடிந்து இருப்பார். அது மரம் ஏறும் போது அவருடன் இருக்கும். அதில் தேங்காய், ஓலைகளை வெட்டும் கத்தி இரண்டு, ஒரு சிகப்பு கலர் துண்டு இருக்கும். கால்களில் விழலால் அல்லது வைக்கோலால் செய்த ஒரு பெல்ட்டை (படம் #.2) மாட்டிக்கொண்டு (படம் #.3) மரம் ஏறுவார். இந்த பெல்ட்டை அவர் தோலில் தொங்கவிட்டுக்கொண்டு வருவார்.
கூலி,தேங்காய்’களின் எண்ணிக்கை பொருத்து தான், ஒரு மரத்திற்கு ரூ.3ம், ஒரு தேங்காய்க்கு மட்டை உரித்து கொடுப்பதற்கு 10 பைசா கொடுப்பார்கள். கடைசியாக 5 ரூ & 25 பைசாவாக அவரின் கூலி உயர்ந்தது. ஓலை பின்னுவதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது எனக்கு மறந்துவிட்டது. அநேகமாக ஒரு ஓலைக்கு ரூ.1 –க்குள் தான் இருக்கும். அதற்கு மேல் இருக்க வாய்ப்பிருப்பதாக தோன்றவில்லை.
கண் சிமிட்டாமல் கவனித்தால் கூட எப்படியும் 1, 2 தேங்காய்களை அவர் எடுத்து குடுவையில் மறைத்து விடுவார். அவர் குடுவையை கழட்டி வைத்துவிட்டு அப்படி இப்படி போகும் சமயம் பார்த்து, நான் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். நல்ல பழக்கம் இல்லை என்றாலும், கூலி கொடுத்த பின்னும் அவர் தேங்காய்களை மறைத்து வைப்பது வாடிக்கை என்பதால், எத்தனை எடுத்து வைத்துள்ளார் என்பதை பார்ப்பேன். அதில் அவரின் சாமர்த்தியத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அன்றி வேறொன்றும் இல்லை. அந்த தேங்காய்களை கடையிலோ, வீடுகளிலோ விற்றுவிடுவார். அதில் அவருக்கு கொஞ்சம் பணம் வரும். மேனஞ்மென்ட் படித்தவர்கள் இப்போது இவையெல்லாம் என்னையும் சேர்த்து தொழில் சாதூரியம் என்று சொல்லுவார்கள்.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு சாப்பாடு சட்டியில் ஓரமாக கைப்படாமல் வைப்பார்கள். அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு, கழுவி ஓரமாக கவிழ்த்துவிட்டு போவார், பிறகு அதனை நாங்கள் ஒரு முறை நன்றாக கழுவி அதற்கான இடத்தில் எடுத்து வைப்போம். நாங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களை அவர்கள் தொட்டதே இல்லை. ஓரமாக சந்து வழியே வந்து அப்படியே சென்று விடுவார்கள். வீட்டிற்க்குள் அவர்களாகவே வரமாட்டார்கள். வெளியில் கொடியில் தொங்கும் துணிகளை கூட தொடாமல் குனிந்து அல்லது ஒதுங்கி செல்வார்கள். வேலை நடக்கும் போது அவர்கள் தொட்டுவிடுவார்களோ என்று , ஆயா துணிகளை உள்ளே எடுத்துவந்து விடுவார்கள்.
அவர் ஓலை கழித்து , ஓலை பின்னும் வேலைக்கு வரும்போது எல்லாம், சாப்பாடு நாங்கள் தான் தருவோம். சாதம் வடித்த கஞ்சி, சாதம், புளிவிட்டு கடைந்த அரைக்கீரை தான். ஓலை பின்ன வரும் போது குடும்பத்தோடு வருவார். பெண் ஆட்களும் வேலை செய்ய வருவார்கள். ஒரு 4, 5 ஆட்கள் வேலைக்கு வருவார்கள்.
ஆயாவை நான் தான் ரொம்பவும் தொந்தரவு செய்து கேள்விகள் கேட்பேன். அவர் தொட்டு வெட்டி கொடுக்கும் தேங்காவை மட்டும் நாம தொட்டுத்தானே உள்ளே எடுத்து வைக்கிறோம், சாமிக்கும் அந்த தேங்காவை தானே உடைக்கிறோம். ஏன் இப்படி சட்டியில் சாப்பாடு கொடுக்கிறாய்?, மனுஷன் தானே அவர்? பாவமாக இருக்கிறது என்பேன். “உனக்கு அது எல்லாம் புரியாது, தெரியாது, பேசாமல் சொன்னதை மட்டும் செய், கூட கூட பேசாதே” என்று வாயை அடைத்து விடுவார்கள். எனக்கு மட்டும் இந்த பாகுபாடு பிடிக்காது. “ஏன் சுட சாதம் கொடுக்கும் போது கஞ்சி வேற கொடுக்கற?, என்று கேட்பேன். அதற்கு அவர்- “கஞ்சி அவங்களுக்கு குளுக்கோஸ் கொடுக்கற மாதிரி, வெயில்ல நிறைய வேலை செய்யறாங்க, இது தான் தாகத்தை தணிக்கும் “ என்பார்கள்.
அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிணற்றலிருந்து இரைத்து ஊற்றவேண்டும், குனிந்து கையை குவித்து குடிப்பார்கள் அல்லது அவர்கள் கொண்டு வந்த பாத்திரத்தில் தண்ணீரை ஊற்ற சொல்லி வாங்கி வைத்து க்கொள்வார்கள். எனக்கு இதில் புரியாத விஷயம், அவர்கள் பின்னிய ஓலையை எண்ணும்போது நாங்களும் தொட்டு தான் வாங்கி அடுக்கி வைப்போம். ஓலைகளில் அவர்களின் கைப்படாத இடம் இருக்கவே முடியாது.
எப்படியும் மதியம், என்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆயா தூங்கிவிடுவார்கள். அப்போது யாருக்கும் தெரியாமல் மரம் ஏறி குடும்பத்துடன் ஒன்றுக்குள் ஒன்றாகி ஆகிவிடுவேன். மரம் ஏறி மனைவி பக்கத்தில் உட்கார்ந்து ஓலை பின்ன கற்றுக்கொள்வேன், வித விதமான முறைகளை சொல்லிதருவார்கள். சின்ன சின்ன சொப்பு கூட நான் விளையாட ஓலையில் பின்னித்தருவார்கள். (என் தொந்தரவு தாங்காமல்) எனக்காக சில கழித்த (வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட) ஓலைகளை ஜெயபால் வெட்டி தருவார், நானும் அவர்களுடம் உட்கார்ந்து பின்னுவேன், அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு சுற்றி வருவேன், ஓடிப்பிடித்து விளையாடுவேன். ஓலையை வைத்து பாம்பு செய்து அவர்களை பயமுறித்தி விளையாடுவேன். ஓலையை மேல் நோக்கி பிடித்து வேகமாக கிழித்து ராக்கெட் விடுவேன்.
ஆயா எழுந்துவிடும் சமயம், நானும் அவர்களிடமிருந்து தள்ளி வந்து விடுவேன். நான் யாரோ அவர்கள் யாரோ என்று. கூலி வாங்கும் போது என்னன குழந்தைகளும், பெண்களும் தூர இருந்து பார்த்து லேசாக சிரிப்பார்கள்.
அணில் குட்டி அனிதா:- கதை சொல்லிட்டாங்களா? ம்ஹீம்..அப்பன்னா.. இந்த வேலை இல்லன்னா.. வீடு வீடா போயாவது ஓலைபின்னி நீங்க பொழச்சிக்குவிங்களா கவிதா?.. மக்கா உங்க வீட்டுல ஏதாவது ஓலை பின்ற வேல இருந்தா சொல்லுங்க………..அம்மணி துள்ளி குதிச்சி வந்து செஞ்சி குடுத்துடுவாங்க… as she mentioned above, you guys can pay to her.. oopppppppps….ஏழை மக்களை ஒரு குடும்பம் கூலி விஷயத்துல எப்படி ஏமாத்தி இருக்கு பாருங்க.. ??!!
பீட்டர் தாத்ஸ் :- We will not know unless we begin.
Labels: பழம்-நீ 13 Comments



