இன்று எங்க விட்டு சமையலில் சுறா புட்டு செய்வதை பார்ககலாம்..

தேவையான பொருட்கள் : 

சுறா - 1 

மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1.5 ஸ்பூன்

மிளகு பொடி - 1 ஸ்பூன்

வடவம் : 1/2 ஸ்பூன் - தாளிக்க வடவம் இல்லயென்றால் கடுகு, உளந்து, சீரகம், வெந்தயம்.

வெங்காயம் : 2 

பூண்டு - 10-12 பல்
 

உப்பு - தேவைக்கு

நல்லெண்ணெய் - 1 கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

செய்முறை ; மற்ற மீன்கள் மாதிரி இல்லாமல் சுறா சுத்தம் செய்வது, தோல் நீக்கி வேகவைப்பது எல்லாமே வித்தியாசம். சுறா மீன் வாங்கும் போதே தோல் நீக்கி , கட் செய்து வாங்கி வந்துவிடுவது நல்லது. 

மீனை சட்டியிலோ, கோடுகள் டிசைன் நிறைந்த பாத்திரத்திலோ கொட்டி உப்பு கொஞ்சம் சேர்த்து மீனை நன்கு கழுவி, பின்னர் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்கு கலக்கி நன்கு கழவவும். மெல்லிய மண் இந்த மீனில் அங்கங்கே இருக்கும். அதனால் நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மீன் நன்கு மூழ்கும் அளவிற்கு தேவையான தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்கவைத்து, அதை மீனில் ஊற்றி 10 -12 நிமிடம் மூடிவைக்கவும்.

12 நிமிடம் கழித்து, தண்ணீரை வடிகட்டி, அதில் 1 ஸ்பூன் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து மீனை பொடியாக உதிர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும்.

வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், வடவம் தாளித்து, கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கொட்டி நன்கு வதக்கவும். பொன்னிறமாக ஆகும் போது உதிர்த்து வைத்த மீனை கொட்டி, மிளகாய் தூள் வாசம் போக நன்கு வதக்கி,
இரக்கும் போது மிளகு பொடி போட்டு கலக்கிவிட்டு  எடுத்தால் சுறா புட்டு ரெடி. 

சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும், தொட்டுக்கவும் செய்யலாம்.

பீட்டர் தாத்ஸ் : Featuring & realsing the flavors of the ocean.