யாருக்கோ நடக்கும் போது, அடடே..அய்யோ பாவம்.. என்ன இப்படியெல்லாம் நடக்குது என்று கடந்து போக முடிகிறது. நமக்கு நெருக்குமானவர்கள் என்றால், அதைவிட்டு இப்படி அப்படி நகரமுடியாமல் போவதும், நியாயமே இல்லாமல் நடந்துவிட்ட அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமலும் போகிறது.

இந்தப்புள்ள மற்ற நண்பர்கள் போல் இல்லாது சற்றே வித்தியாசமானவர். அதிகம் பேசக்கூடியவரில்லை, அவருடைய பேச்சும் நடவடிக்கையும் அதிகம் சமூகம் சார்ந்தே இருக்கும். எதையோ சாதித்தே தீரவேண்டும் என்ற சிந்தனையும் அதை செய்து கொண்டும் இருந்தார். 'தஞ்சாவூர் கல்வெட்டு' அவர் பெயர் சொல்லும்.
இருவரும் வேளச்சேரி, நேரிலும் , தொலைபேசியிலும் அதிகம் பேசியிருக்கிறோம். பேச்சு அநேகமாக சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கும். சொந்த விசயமோ, வேறு யாரைப்பற்றியோ பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்குட்'டில் முதலில் என்னுடன் பேச ஆரம்பித்தார், தயக்கத்தோடு ஆரம்பித்த அந்தப்பேச்சு, என்னுடைய Blog ல் வந்து ஏதோ பதிவில் பேச ஆரம்பித்த போதுதான் தெரிந்தது அவரும் HR என்பது. எந்தவித எதிர்ப்பார்ப்பும், தேவையும் இல்லாமல் பேசக்கூடியவர். அதனாலேயே என் மனதுக்கு நெருக்குமான நண்பராக இருந்தார்.
 
அம்மாவின் இறப்பின் போது எனக்கு ஆறுதல் சொல்லி, அடுத்தடுத்த வருடங்களில் அம்மாவின் நினைவு நாளில் whatsapp இல் மறக்காமல் msg் அனுப்புவார்.
 
அணிலுக்கும் எனக்குமான சம்பந்தம் அநேகமாக எல்லா blogger களுக்கும் தெரியும், ஆனால் ஒருசிலர் மட்டுமே அணில் சம்பந்தட்ட தகவல்கள், படங்களை எந்த பிரதிபலனும் பார்க்காமல் அனுப்புவார்கள். அப்படி கிடைத்ததுதான் FB Cover ல் உள்ள photo. லண்டனில் சில மணி நேரம் காத்திருந்து எடுத்ததாக சொல்லி அனுப்பியிருந்தார். யார் செய்வாங்க? என் மனதுக்கு நெருக்குமான அணில், இந்த லண்டன் அணில் தான்.
 
Insta வில் அதிகம் என் புகைப்படங்களுக்கு like செய்பவர் இவர் மட்டுமே. சிறந்த புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. Twitter லும் என்னுடைய முக்கிய பதிவுகளை கவனிப்பவர், ஒரே மாதிரியான சிந்தனையும் இதற்கு காரணம். சில வருடங்களாக நிறைய zoom , youtube link எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தார், எல்லாமே கல்வி, வாழ்க்கை, வேலை என சமூகம் சார்ந்தவை. என்னை கலந்துக்கொள்ள சொல்லி ஒருமுறை சொன்னார், இயலாது என்று சொல்லவும், அதன்பின் என்னை கேட்பதில்லை ஆனால் link மட்டும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது.
 
அவருடைய Whatsapp profile photos எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும், இப்போது ஒரு Dubbing Photo இருக்கிறது. அதைப்பற்றி அவரிடம் விசாரித்திருந்தேன். எந்த புகைப்படமாயிருந்தாலும், சட்டுன்னு கடந்துப்போகாமல் கவனிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
 
நான் யாரோ...., என்னாலேயே இந்த நியாயமே இல்லாத நிகழ்வை தாங்கமுடியவில்லை, வெளிவரவும் முடியவில்லை... அவருடைய தாயார், தமக்கை & மனைவி, குடும்பத்தாருக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை.
நல்ல நண்பர் என்பதைவிட நல்ல மனிதர், நாகரீகமாக பழகக்கூடியவர், ஒரே ஒரு முறைக்கூட தவறான, தரம் தாழ்ந்த வார்த்தைகளை அவருடைய பேச்சில் நான் கண்டதில்லை. அவருடைய Twitter, FB, Insta & Linkedin கணக்குகள் அவரைப்பற்றி சொல்லும். 
 
இதை எழுதும் போதும் என்னால் நம்பமுடியவில்லை, தவிர என்ன காரணம், எதனால் இப்படின்னும் எனக்கு விவரமான தகவல் எதுவும் தெரியவுமில்லை...
 
செந்தில் .....   Rest in Peace. 

குறிப்பு - கொரானா வால் பாதிக்கப்பட்டு குணமாகி இருக்கிறார், Heart Attack வந்திருக்கிறது.- நண்பர் தகவல் சொன்னார்.