ஓவியாவிடம் ஆரவ் பழகியவிதம் தவறே. வேணாம்னு நினைக்கறவன் தள்ளியிருக்கனும். இங்க இருக்கவரை டைம் பாஸ் னு தொட்டு பேசறதும், கேமரா இருக்கு தள்ளியிருன்னு ரகசியமாக அடிக்கடி சொல்வதும், ஸ்மோக் ரூம்மில் வேற மாதிரி பேசறதும் னு அவன் செய்தது எல்லாமே பொறுக்கித்தனம். ஏன்னா காயத்திரியிடம் முதல் முதலில் சொல்லும் போதே ஓவியா அவனை நிஜம்மாவே காதலிக்கறான்னு தெரிஞ்சி தான் சொன்னான்..

நாமிநேஷன் ஆகாம இருக்கனும்னா காயத்திரி & கோ விற்கு சொம்பு தூக்கனும் அதே சமயம் ஓவியாவிடம் நெருக்கமா இருக்கறது அவங்களுக்கு த்தெரியவும் கூடாதுன்னு திட்டமிட்டு அதை செயல்படுத்த ஓவியாவை மனதளவில் தயார்ப்படுத்த நினைத்தான். ஆனால் நம்ம ஓவியா தான் உண்மையாச்சே எப்படி சரின்னு சொல்லுவாங்க. சொன்னாலும்.. ஏன் அப்படி நடிக்கனும்னு அடுத்த நொடியே மாறிடுவாங்க.

இங்க தான் ஆரவ்'க்கு பிரச்சனை ஆரம்பிச்சுது. தள்ளிவிடறது, பேசாமல் போறது, அடுத்தவங்கக்கிட்ட "ஓவியா என் மேல வந்து விழறா"ன்னு சொல்லி, தனக்கு ஓவியாவை பிடிக்காதுன்னு வெளியில் இருக்க அவன் காதலிக்கும், உள்ள இருக்க மத்தவங்களுக்கும் "தான் நல்லவன்" னு புரிய வைப்பதில் ஆரம்பிச்சி டென்ஷனாவே இருந்தான்.

ஓவியா  "காதல் இல்லை" ன்னு ஆரவ் சொன்னதால், அந்தக் கோவத்தை  மற்றவர்களிடத்தில் காட்டினாங்க. அதற்குப்பிறகும் ஓவியா குழப்பமடையக்காரணம், ஆரவ் திரும்ப வந்து பேசறது தான். தவிர, இரவே, "நாளை நான் இருக்கமாட்டேன்னு " னு சொல்லி ஓவியாவை அதிகளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் அவனே. அதை நினைத்தே இரவு தூங்காமல் "மிஸ் பன்றேன்" னு சொல்லிட்டே இருந்தாங்க.

காலையில் காயத்திரி "ஆரவ் இருக்கான்"னு சொன்னதும், ஓவியா ஓரளவு நார்மல் ஆனாங்க. ஆனால், ஆரவ் திரும்பவும் மற்றவர்களால் நாமிநேட் செய்யப்பட்டதும், எப்பவும் போல இவ்ளோ நாடகம், திட்டம் போட்டும் நம்மை நாமிநேட் செய்துட்டாங்களேன்னு, ஓவியா இன்னமும் மன உளைச்சலில் இருக்காங்கன்னு புரியாமல், சுயநலமாக "இப்ப சந்தோஷமா"" ன்னு கேட்டு , ஓவியாவை இன்னமும் மன அழத்தத்திற்கு ஆளாக்கிவிட்டான். அவனிடம் பேச, ஓவியா படுக்கை அறைக்கு சென்ற போதும், "யாரோ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க" ன்னு திரும்பவும் அப்படியே பேசி ஒவியாவை காயப்படுத்தவும் செய்தான்.

ஓவியா , உண்மையாக நேசிப்பதால், நம்மால் தான் இப்படியெல்லாம் ஆச்சோ? ...ஏன் திரும்பவும் நம்மக்கிட்ட சாதாரணமா பேசறான்..?  அவனுக்கு காதல் இருக்குமோங்கற சந்தேகம் அதிகமாகி அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மட்டுமே நீச்சல் குளத்தில் இறங்கி என்னவோ முயற்சி செய்தாங்க. அந்த ஆழத்தில் நீச்சல் தெரியாவிட்டாலும் சாகமுடியாது என்பதும் உள்ளே ப்போன கொஞ்ச நேரத்தில் ஒவியாவிற்கு தெரிந்திருக்கும்.

ஓவியா இப்படியிருக்க 90% ஆரவ் வும், 10% மட்டுமே மற்றவர்களும் காரணம்.ஓவியாவிற்கு, ஆரவ் ஓவியாவைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசிய குறும்படத்தைக்காட்டியும்,வெளியில் மக்களின் ஆமோக ஆதரவையும், அன்பையும் காட்டியும் மனக்குழப்பத்தை எளிதாக ப்போக்கிட முடியும்.

செய்திருக்குமா விஜய் டீவி?

நிகழ்ச்சிக்காக அந்த பெண்ணின் மனதோடு விளையாடி, பைத்தியக்காரி பட்டத்தை விஜய் டீவி கொடுக்காது என்று நம்பலாமா? பரணியை அப்படி சொல்லிதான் அங்க இருக்கவங்க அனுப்பினாங்க.


பின்குறிப்பு : ஓவியா போயிடுவாங்கன்னு தெரிஞ்சவுடனே, ஆரவ் க்கு ஒரு நிம்மதியும், தான் அங்கு தொடர்ந்து இருக்கமுடியும் என்ற நம்பிக்கையும் வந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இவன் அக்கறையோடு இல்ல சும்மாக்கூட பேசாமல் இருப்பது ஓவியாவிற்கு நல்லது. எப்படி பொய்க்காரி சூலி இப்ப அமைதியா தள்ளி இருக்காளோ அப்படி..