பாம்பு, என் கண்ணில் அடிக்கடி படக்கூடியது, பயமில்லை தான். நாம ஒன்னும் செய்யாதவரை அதும் ஏதும் நம்மை செய்வதில்லை என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை. பாம்புக்கு காதில்லை, நம் காலடி அதிர்வுகளை க்கொண்டு வேகவேகமாக கடந்துப்போகும். அதிலிருந்தே, நாம் அதைப்பார்த்து பயப்படுவதுப்போல அதும் நம்மைப்பார்த்து பயப்படுதுன்னு ஒரு தைரியம் வந்துவிடும்..

பாம்பு கனவுகளும் எனக்கு புதிதல்ல. ஒரு நாளும் பாம்பு கனவுகள் என்னை பயமுறுத்தியதல்ல. எப்பவும் எனக்கும் அதற்கும் ஒரு ஸ்நேகம் இருக்கும்.

அதான் என் வூட்டுக்கார் கனவெல்லாம் எழுதி வைக்க சொல்லி இருக்காறே, போன வாரத்தில் வந்த பாம்பு கனவுக்குள் போகலாமா?

*******
மிக நீளமான கருப்பு பாம்பு, 6 அடி இருக்கும், வீட்டினுள் வருகிறது. நானும் அவரும் அமர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அது எங்களை கண்டுக்கல, நாங்கள் கண்டுக்கிட்டாலும் காட்டிகல. அது எதாது செய்துவிடும் என்ற பயமெதும் எங்களுக்கு இருப்பதாக தெரியல. உள்ளே அறையில் சென்று சுருண்டுப்படுத்துக்குது.

"இருங்கப்பா, அதை எடுத்து வெளியில்போட்டுட்டு வரேன்", னு சென்று சர்வ சாதாரணமாக அதன் வாலைப்பிடித்து தூக்கி எடுத்துட்டு வரேன். அது நான் தூக்கிட்டு வரும் போது, எந்த ரியாக்ஷனும் பண்ணாமல் பேசாமல் இருக்கு, அதனைத்தூக்கிப்பிடித்து, , அவரிடம் அது எப்படி இருக்குன்னு காட்டறேன். எனக்கு ஏதோ ஒரு மீன்'ஐ கையில் பிடிச்சிக்கிட்டு இருக்காப்ல இருக்கே ஒழிய, பாம்பை பிடிச்சிருக்கோம்னு தோணல, அந்த பாம்பின் உடல் அப்படித்தான் இருந்தது, என்ன வகைன்னு தெரியல....

சன்னல் வழியாக மிக சாதாரணமாக ஏதோ பூச்சியை பிடிச்சி விடாற்பல விடறேன். அவரோ, "ஏண்டி இங்கவே விடற, அது திரும்ப வீட்டுக்குள் தான் வரும், வெளியில் போய் தூரமாய் விட்டுட்டு வரலாமில்ல" னு சொல்றார். அதே சமயம் நவீன் என் பக்கத்தில் வந்து உட்கார்றான். அவரும் நானும், அது என்ன செய்யுதுன்னு சன்னல் வழியா அதையே பார்க்கிறொம்.

அவர் சொன்னபடியே, அது யூ ட்ர்ன் அடிச்சி திரும்ப வீட்டுக்குள் மெதுவா வர ஆரம்பிக்குது. அது வரும் வழியில் தான் நவீன் உட்கார்ந்திருக்கான். அது ஒன்னும் செய்யாது என்று எனக்கு தோன்றினாலும், நவீன் அதனை எதாது
செய்ய, அது திரும்ப எதாச்சும் செய்யுமோன்னு, அவனை இடுப்பை அணைத்து என் பக்கமாக இழுத்து, "அசையாமல் கொஞ்சம் நேரம் அப்படியே உக்காரு குட்டி, அது போயிடட்டும்"னு சொல்றேன். கையை அவன் மேலிருந்து எடுக்காமல், அது அவனை கடந்து செல்லும் வரை என் பக்கமாகவே இழுத்துப்பிடிக்கிறேன். அது நவீனின் ஓரமாக மெதுவாக நழுவி நழுவி உள்ளேப்போகுகிறது.

அவன் இது எதையும் கவனிக்காமல், மொபைலை நோண்டிட்டு இருக்கான். அது முன்னப்போலவே உள்ளப்போயி சுருண்டு படுத்துக்குது.

இப்ப அதனை திரும்ப தொந்தரவு செய்ய நானும் நினைக்கல, அவரும் எதும் சொல்லல. ஆனா அது அங்க இருக்கக்கூடாதுன்னு மட்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நினைக்கிறோம். அவர் பார்வையை புரிந்தவளாக, "சரிப்பா, நான் பாம்பு பிடிக்கறவங்க யாராச்சும் வரவைக்கிறேன்" னு சொல்லிட்டே பாம்பை திரும்பி பார்க்கிறேன்.

கனவு கலைந்துவிட்டது... 

படங்கள் : நன்றி கூகுள்