பல்பு வாங்கறது ஒன்னும் நமக்கு புதுசில்ல..நவீன் ஏகத்துக்கும் பல்பு கொடுத்து.. கொடுத்து..பழகிப்போச்சி...... அவனிடம் 'பல்பு" வாங்கவே அவனுக்கு அம்மா'வா ஆண்டவன் என்னை படைத்திருக்கிறான்.

அதே சமயம் வெளியாட்களிடம் அப்படியல்ல.... சென்ற மாதத்தில் ஒருநாள் யார்னே தெரியாதவர்களிடம் அநியாயத்திற்கு 'பல்பு' வாங்கினேன். ......அப்படியே கொஞ்சம் மேல பாருங்க....... (கொசுவத்தி..)

*******

"மொட்டு.. விஜய் நகர் பஸ் ஸ்டாண்டில், இன்னைக்கு ஒரு தாத்தா, பாட்டிய பாத்தேன்.  ஜோடியா பிச்சை எடுத்துட்டு  இருந்தாங்க. ரொம்ப பாவமா இருந்திச்சிடா.. "

"ம்ம்ம்..."

"அந்த பாட்டி தலையில் பூ வெல்லாம் வச்சியிருந்துச்சி.. கையில தடி.. கூன் வேற, ஆனா தாத்தா கைய இருக்கமா பிடிச்சி ஜாக்கறதையா அவர பாத்துக்குது. அவரு கொஞ்சம் நல்லாதான் இருக்காரு.. கையில் கட்டப்பை, புதுசா இருந்துச்சி.".

"ம்ம்ம்.."

"அந்த பாட்டி பிச்சைக்கேக்கறது ரொம்ப பாவமா இருக்குடா.. வீட்டில் கோச்சிக்கிட்டு வந்துட்டு இருப்பாங்க.. இல்லைன்னா விரட்டி விட்ருப்பாங்க போல... அவங்கள பாத்தா சாதாரணமா பிச்சை எடுக்கறவங்க..மாதிரி தெரியலடா.... நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க போல.."

"நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க பிச்சை எடுக்க மாட்டாங்க..."

"ம்ம்..ஆமால்ல.. ஆனா.. இவங்கள பாத்தா..பிச்சைக்காரங்க மாதிரி இல்லடா..."

"ம்ம்ம்..""

"அவங்கள பாத்துட்டு வந்ததிலிருந்து.. அவங்கள ஏன் ஒரு ஹோம்ல சேர்த்துவிடக்கூடாதுன்னு யோசிக்கிறேன்.. கூகுள் செய்து சில ஹோம்ஸ் அட்ரஸ் எடுத்து வச்சியிருக்கேன். விஜய் நகர்ல இன்னொரு தரம் அவங்களை பாத்தா.. பேசி, கூட்டிட்டு போகப்போறேன்..."

"அவங்க ஹோம்க்கு எல்லாம் வரமாட்டாங்க..".

"ஏன்..ஏன் வரமாட்டாங்க?"

'வர மாட்டாங்கம்மா... சொன்னா புரிஞ்சிக்கோ... போய் கேட்டுக்கிட்டு இருக்காத..."

"ஏன் னு காரணம் சொல்லு அப்பதான் எனக்கு புரியும்..

"ஹோம் கு போறவங்க பிச்சை எடுக்க மாட்டாங்க... உனக்கு சொன்னா புரியாது..சும்மா கேள்வி தான் கேக்க தெரியும்.. அவங்க வரமாட்டாங்க..விட்ரு."..

"ம்ம்ம்...."

என் குழந்தை சொன்னா சரியாதான் இருக்கும்..

அத்தோடு அந்தப்பேச்சு முடிந்து போனது. ஆனால், நான் ஹொம் அட்ரஸ் எடுத்து என் கைப்பையில் வச்சிக்கிட்டேன். வேற யாருக்காச்சும் பயன்படுமே..

**********

அடுத்தநாள் மதிய வேளை, மருந்தகம் செல்ல தரமணி சாலைக்கு சென்றேன். போகிற வழியில், மூடியிருந்த கடை வாசலில், அதே முதியவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தனர். பக்கத்து கடையிலிருந்து ஒரு பையன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துட்டு ப்போனான்.

நவீன் சொன்னதை ஒரு பக்கமாக தூக்கி வச்சிட்டு, அவர்களிடம் சென்றேன்..

"பாட்டி, இப்ப இங்க சாப்படறீங்க.. ராத்திரி எங்க தூங்குவீங்க?"

"எங்க பொண்ணு வீட்ல.."

(ஞே!!.. பொண்ணு வீடா? ,அப்பவும் என் அறிவுக்கு எட்டல.. பொண்ணு வீடுங்கறதால , தங்க முடியல போலன்னு நினைச்சி..)

"சரி.. என் கூட வரீங்களா..?  வயசானவங்க தங்கற ஹோம்ல சேர்த்து விடறேன், காசு எல்லாம் கொடுக்க வேணாம், செளகரியமா இருக்கலாம்.."

சொல்லி முடிக்கல... கிழவி முகத்த ப்பார்க்கனுமே.. அந்த பாவமான முகம்
அப்படியே மாறி...ஆங்கிலப்படத்தில் வரும்"விட்ச்" போலானது. சன்னமான, கெஞ்சும் குரல் காணாமல் போயி.. சத்தம் அதிகமான அதிகார  குரல் வெளிவந்தது..

"அங்கெல்லாம் நாங்க வரல..எங்களுக்கு சரிப்படாது.."

"இல்ல பாட்டி, நல்லாயிருக்க்....."

"அட வரமாட்டோம்னு சொல்றேன் இல்ல..?  எங்க பொண்ணு வீடு பள்ளிக்கரணையில் இருக்கு..அது பகலில் வீட்டு வேலைக்கு போகும், நாங்க இங்க வந்துடுவோம்.. ராவுக்கு பொண்ணு வீட்டுக்கு போயிடுவோம்...எங்களுக்கு எதுக்கும்மா ஹோம்மூ... போம்மா இங்கிருந்து.. ..காசு இருந்தா குடு..... இல்லன்னா போயிட்டே இரு... சாப்படவுடாம வந்து நின்னுக்கிட்டு....ஓமு..கீமூன்னு....."

அவ்வ்வ்வ்வ்..... அந்த பாவமான மூஞ்சியா இது? அந்த மூஞ்சிய நம்பி 10,10 ரூபாயா இல்ல எல்லாரும் எடுத்துக்கொடுக்கறாங்க..

அடப்பாவி கிழவி..... என்னா கேடித்தனம்?!!

அன்னைக்கும் தலையில் பூ இருந்தது.. ..(சென்னையில் ஒரு முழம் பூ 20 ரூ)
************

இரவு நவீன் வந்ததும் நடந்ததை சொன்னேன்.. ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணாட்டியும், "ம்ம்ம்...அதான் தெரியுமே.. நீ தெரிஞ்சிக்கிட்டல்ல.." ன்னு முடிச்சிட்டான்..

மெனக்கெட்டு வீட்டுக்கார் கிட்டவும் ஃபோன் செய்து சொன்னேன்....ஃபோன் காசு போனாலும் பரவாயில்லன்னு............ஒரு 15 நிமிஷம்........ .ம்ஹூம்....இதுவும் பழகிப்போச்சி....

**********

*Image courtesy Google : Thanks !