மெகா 'பல்பு'

பல்பு வாங்கறது ஒன்னும் நமக்கு புதுசில்ல..நவீன் ஏகத்துக்கும் பல்பு கொடுத்து.. கொடுத்து..பழகிப்போச்சி...... அவனிடம் 'பல்பு" வாங்கவே அவனுக்கு அம்மா'வா ஆண்டவன் என்னை படைத்திருக்கிறான்.

அதே சமயம் வெளியாட்களிடம் அப்படியல்ல.... சென்ற மாதத்தில் ஒருநாள் யார்னே தெரியாதவர்களிடம் அநியாயத்திற்கு 'பல்பு' வாங்கினேன். ......அப்படியே கொஞ்சம் மேல பாருங்க....... (கொசுவத்தி..)

*******

"மொட்டு.. விஜய் நகர் பஸ் ஸ்டாண்டில், இன்னைக்கு ஒரு தாத்தா, பாட்டிய பாத்தேன்.  ஜோடியா பிச்சை எடுத்துட்டு  இருந்தாங்க. ரொம்ப பாவமா இருந்திச்சிடா.. "

"ம்ம்ம்..."

"அந்த பாட்டி தலையில் பூ வெல்லாம் வச்சியிருந்துச்சி.. கையில தடி.. கூன் வேற, ஆனா தாத்தா கைய இருக்கமா பிடிச்சி ஜாக்கறதையா அவர பாத்துக்குது. அவரு கொஞ்சம் நல்லாதான் இருக்காரு.. கையில் கட்டப்பை, புதுசா இருந்துச்சி.".

"ம்ம்ம்.."

"அந்த பாட்டி பிச்சைக்கேக்கறது ரொம்ப பாவமா இருக்குடா.. வீட்டில் கோச்சிக்கிட்டு வந்துட்டு இருப்பாங்க.. இல்லைன்னா விரட்டி விட்ருப்பாங்க போல... அவங்கள பாத்தா சாதாரணமா பிச்சை எடுக்கறவங்க..மாதிரி தெரியலடா.... நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க போல.."

"நல்ல குடும்பத்தை சேர்ந்தவங்க பிச்சை எடுக்க மாட்டாங்க..."

"ம்ம்..ஆமால்ல.. ஆனா.. இவங்கள பாத்தா..பிச்சைக்காரங்க மாதிரி இல்லடா..."

"ம்ம்ம்..""

"அவங்கள பாத்துட்டு வந்ததிலிருந்து.. அவங்கள ஏன் ஒரு ஹோம்ல சேர்த்துவிடக்கூடாதுன்னு யோசிக்கிறேன்.. கூகுள் செய்து சில ஹோம்ஸ் அட்ரஸ் எடுத்து வச்சியிருக்கேன். விஜய் நகர்ல இன்னொரு தரம் அவங்களை பாத்தா.. பேசி, கூட்டிட்டு போகப்போறேன்..."

"அவங்க ஹோம்க்கு எல்லாம் வரமாட்டாங்க..".

"ஏன்..ஏன் வரமாட்டாங்க?"

'வர மாட்டாங்கம்மா... சொன்னா புரிஞ்சிக்கோ... போய் கேட்டுக்கிட்டு இருக்காத..."

"ஏன் னு காரணம் சொல்லு அப்பதான் எனக்கு புரியும்..

"ஹோம் கு போறவங்க பிச்சை எடுக்க மாட்டாங்க... உனக்கு சொன்னா புரியாது..சும்மா கேள்வி தான் கேக்க தெரியும்.. அவங்க வரமாட்டாங்க..விட்ரு."..

"ம்ம்ம்...."

என் குழந்தை சொன்னா சரியாதான் இருக்கும்..

அத்தோடு அந்தப்பேச்சு முடிந்து போனது. ஆனால், நான் ஹொம் அட்ரஸ் எடுத்து என் கைப்பையில் வச்சிக்கிட்டேன். வேற யாருக்காச்சும் பயன்படுமே..

**********

அடுத்தநாள் மதிய வேளை, மருந்தகம் செல்ல தரமணி சாலைக்கு சென்றேன். போகிற வழியில், மூடியிருந்த கடை வாசலில், அதே முதியவர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தனர். பக்கத்து கடையிலிருந்து ஒரு பையன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துட்டு ப்போனான்.

நவீன் சொன்னதை ஒரு பக்கமாக தூக்கி வச்சிட்டு, அவர்களிடம் சென்றேன்..

"பாட்டி, இப்ப இங்க சாப்படறீங்க.. ராத்திரி எங்க தூங்குவீங்க?"

"எங்க பொண்ணு வீட்ல.."

(ஞே!!.. பொண்ணு வீடா? ,அப்பவும் என் அறிவுக்கு எட்டல.. பொண்ணு வீடுங்கறதால , தங்க முடியல போலன்னு நினைச்சி..)

"சரி.. என் கூட வரீங்களா..?  வயசானவங்க தங்கற ஹோம்ல சேர்த்து விடறேன், காசு எல்லாம் கொடுக்க வேணாம், செளகரியமா இருக்கலாம்.."

சொல்லி முடிக்கல... கிழவி முகத்த ப்பார்க்கனுமே.. அந்த பாவமான முகம்
அப்படியே மாறி...ஆங்கிலப்படத்தில் வரும்"விட்ச்" போலானது. சன்னமான, கெஞ்சும் குரல் காணாமல் போயி.. சத்தம் அதிகமான அதிகார  குரல் வெளிவந்தது..

"அங்கெல்லாம் நாங்க வரல..எங்களுக்கு சரிப்படாது.."

"இல்ல பாட்டி, நல்லாயிருக்க்....."

"அட வரமாட்டோம்னு சொல்றேன் இல்ல..?  எங்க பொண்ணு வீடு பள்ளிக்கரணையில் இருக்கு..அது பகலில் வீட்டு வேலைக்கு போகும், நாங்க இங்க வந்துடுவோம்.. ராவுக்கு பொண்ணு வீட்டுக்கு போயிடுவோம்...எங்களுக்கு எதுக்கும்மா ஹோம்மூ... போம்மா இங்கிருந்து.. ..காசு இருந்தா குடு..... இல்லன்னா போயிட்டே இரு... சாப்படவுடாம வந்து நின்னுக்கிட்டு....ஓமு..கீமூன்னு....."

அவ்வ்வ்வ்வ்..... அந்த பாவமான மூஞ்சியா இது? அந்த மூஞ்சிய நம்பி 10,10 ரூபாயா இல்ல எல்லாரும் எடுத்துக்கொடுக்கறாங்க..

அடப்பாவி கிழவி..... என்னா கேடித்தனம்?!!

அன்னைக்கும் தலையில் பூ இருந்தது.. ..(சென்னையில் ஒரு முழம் பூ 20 ரூ)
************

இரவு நவீன் வந்ததும் நடந்ததை சொன்னேன்.. ரொம்ப பெருசா ரியாக்ட் பண்ணாட்டியும், "ம்ம்ம்...அதான் தெரியுமே.. நீ தெரிஞ்சிக்கிட்டல்ல.." ன்னு முடிச்சிட்டான்..

மெனக்கெட்டு வீட்டுக்கார் கிட்டவும் ஃபோன் செய்து சொன்னேன்....ஃபோன் காசு போனாலும் பரவாயில்லன்னு............ஒரு 15 நிமிஷம்........ .ம்ஹூம்....இதுவும் பழகிப்போச்சி....

**********

*Image courtesy Google : Thanks ! 

அந்த திகில் நிறைந்த நிமிடங்கள்...

அதிகமாக குளிரூட்டப்பட்ட அந்த அறையில், கைப்பிடித்து மெதுவாக அழைத்துச் செல்லப்பட்டேன். அறை வெளிச்சம் குறைவாக இருட்டாக இருந்தது. "நகையெல்லாம் கழட்டி கொடுத்திட்டியா? " வெற்றாக இருக்கும் என்னை இன்னும் ஒருமுறை சரிப்பார்த்துக்கொண்டாள் அவள் ..!!

உள்ளே ஒரே ஒருவர் இருந்தார், வேக வேகமாக பெரிய பெரிய ட்ரே போல் எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.  ஏன் இத்தனை அவசரமாக இந்த வேலையை செய்யவேண்டும்? தெரியவில்லை...

என்னை சற்றே உயரமான ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள். என் கைகளை உடலோடு வைத்து கட்டிப்போட்டார்கள். திமிரவோ கத்தவோ முடியவில்லை. அவர்கள் அறியாமல் அசைந்து பார்த்தேன்..ம்ஹூம்.. ஒன்றும் நடக்கவில்லை.  மிக அழுத்தமாக கட்டப்பட்டிருக்கிறேன், நம் வேலை இங்கு பலிக்காதுன்னு தெரிந்துக்கொண்டேன்.

வேகமாக அந்த இளைஞன்  பெங்காலியில் ஆரம்பித்து, நான் முழிப்பதை கவனித்து..அதே வேகத்தில்.... "அச்சா" என்று ஹிந்தியில் மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே போனான். என்னை கட்டிப்போட்டுவிட்டு "பேச்சப்பாரு பேச்சை"ன்னு அவன் சொல்வதை சரியா கவனிக்கல..... இன்னும் என்னை என்ன செய்யப்போறாங்களோ? தனியா வந்து இதுங்கக்கிட்ட இப்படி சிக்குவேன்னு நினைச்சிக்கூட பாக்கலையே...ன்னு சிந்தனை வேறெங்கோ இருந்தது.

ஹிந்தியில் சொல்லி முடிக்கும் போது, என் இடது கையில், எதையோ திணித்தான்.. ரப்பர் பந்து போல உணர்ந்தேன். இப்போது திறந்திருந்த என் கண்களை மூட சொன்னார்கள். "கண்ண திறக்கக்கூடாது சரியா...." என ஹிந்தியில் பயமுறத்தப்பட்டேன்.  தலையில் ஹெல்மெட் போல ஏதோ ஒன்றை மாட்டி அப்படி இப்படி என் தலையை திருப்ப முடியாமல் லாக் செய்தனர்..லாக் செய்யும் முன்னர் காதுகளும் அடைக்கப்பட்டன. அடேய் அப்பரெண்டீஸுகளா..." மூக்கும், வாயும், இன்னும் பாக்கி இருக்குடா..அதிலும் எதையாச்சும் வச்சி அடச்சிட்டா.." வேல சீக்கிரம் முடிஞ்சிடும், காசையும் வாங்கிட்டு, வீட்டுக்கும் நல்ல தகவலை சொல்லிடலாம் நீங்க" ன்னு .....ஹிஹி.. சொல்லல. .நினைச்சிக்கிட்டேன்.

இதுவரை நடப்பதைப்பார்த்தேன். இப்போது உணர ஆரம்பிக்கிறேன்.

என்னை ஏதோ ஒரு குகைக்குள் தள்ளுகிறார்கள்...  உடல், தலை இரண்டையுமே அசைக்க முடியல..ஆர்வத்தில் டகால்னு கண்ணைத்திறந்து பார்த்து மூடிக்கொண்டேன். குகைக்குள் வெளிச்சம் இருந்தது. ஆனால் இதுல என்னத்த தெரிஞ்சிக்க முடியும்? ,,,நடப்பது நடக்கட்டும்னு அமைதியாக படுத்துக்கிடந்தேன். வேற வழியும் இல்லை என்பதே உண்மை.

நான் இருந்த படுக்கை..குகைக்குள் செல்ல ஆரம்பித்தது.. "செத்துப்போயிட்டா.. உடலை இப்படி தள்ளி த்தான் எரிப்பாங்க போல" ன்னு நினைக்கும் போதே..."அடடே..நாம இன்னும் சாகலையே" ன்னும் தோணியது.

ட்ர்ர்ர்ர்ட்டக்க் ட்ர்ர்ர்ர்ட்டக்க்.....ன்னு சென்று நின்றுவிட்டது. மயான அமைதி.. லேசாக கண்ணைத்திறக்க முயற்சி செய்தேன். பயமாகவும் இருந்தது. முகத்துக்கு நேரே எதாச்சும் வந்து நின்னு..அதைப்பார்த்து பயந்து..ஹார்ட் அட்டாக் வந்துட்டா? இதுவே பெரிய தண்டனையா இருக்கு.. இதுக்கும் மேல நாமே  எதையும் இழுத்து விட்டுக்க வேணாம்னு , ரொம்ப முயற்சி செய்து கண்ணை த்திறக்காமல் கட்டுப்படுத்திக்கிட்டேன்.

அப்போது தான், என் வலது கை எதன் மேலோ உரசுவதை உணர்ந்தேன். அட அப்ரண்டீஸூகளா? கை தோல் உறிஞ்சிட போகுது..கட்டிப்போட்டீங்களே.. கைய ஒழுங்கா வச்சி கட்டலையான்னு....."... எனக்குள் நானே கேட்டுக்கிட்டு..கை உரசாதவாறு என் உடலோடு, அதாது..படுத்தபடி ஒரு கை மட்டும் சற்றே உயர தூக்கி க்கொண்டேன். சிறுது நேரத்தில் எந்த பிடிமானமும் இல்லாததால் கை வலிக்க ஆரம்பித்தது. கட்டப்பட்ட நிலையில் இதற்கு மேல் என்னால் கையை மேலே கொண்டு வர முடியவில்லை. கீழே கொண்டு சென்றால் எதன் மீதோ உரசி பயமுறுத்தியது.. ஆக வலியைப்பொறுத்துக்கொண்டேன்...

நான் சற்றும் எதிர்பாராத விதமாக... பலவிதமான அளவுகளினால் ஆன சுத்தியல்' கொண்டு, மாற்றி மாற்றி என் தலையில் அடிக்க ஆரம்பித்தார்கள். மூளை பிய்த்துக்கொண்டு வெளியில் வந்து, எதால் அடிக்கிறார்கள் எனப்பார்த்துவிடும் போல இருந்தது. சத்தம் தாங்காமல் காது கிழிந்துவிடும் போல இருந்தது..ஆனால் அடி என்னவோ....என் தலையில் படுவதாக தெரியவில்லை.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டக்...ட்டாக்டக் ட்டாக்டக் ...ட்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர் ட்டாக்டக்க் ட்டாக்க்க்டக்...ஜட்ட்ட்ட்ட்ஜட்ட் ஜட்ட்ட் ஜட்ட்ட்.. வீவ்வ்வ்வ்ர்ர்ர்ர்ர்ர் வீவ்வ்வ்ர்ர்ர்...ட்டாக்டக் ட்டாக்டக்..டர்ர்ர்ர்ர்ர்ட்ஷ்ஷ்.. டார்ர்ர்ஷ்ஷ்...

இப்படியான தொடர் ஒலிகள்...இடைவிடாது மிக சத்தமாக கேட்க ஆரம்பித்தது...நிற்காமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது..

ஒலி நிற்கும் போது குகைக்குள் மேலும் கீழுமாக நான் தள்ளப்பட்டேன்.

கட்டை அவிழ்த்துக்கொண்டு எகிறி குதித்து தெறிச்சி ஓட வேண்டும் போல இருந்தது. ஆனால்....அப்போது தான் உணர்கிறேன்..... மூச்சுக்கூட என்னால் சரியாக விட முடியவில்லை...

அதீத சத்தத்தை கிரகிக்க முடியாமல், அதிலிருந்து தப்பிக்க முடியாமல், கத்தவும் முடியாமல்.. தொண்டை வரண்டு, இரும ஆரம்பித்தேன். ஆனால் மூச்சே சரியாக விடமுடியாமல் இருந்த எனக்கு இ்ருமவும் முடியவில்லை, எச்சில் கூட முழுங்க முடியவில்லை... மூச்சு விட கடினமாக....ஆக....என் பயம் அதிகமானது.

என்னை நானே அசுவாசப்படுத்த முயன்றேன். சத்தத்தினை கவனிக்காமல் என் மூச்சை கவனித்து மெதுவாக மூச்சை இழுத்து விட ஆரம்பித்தேன். இருமவும் முயற்சி செய்து உடல் தலை கட்டியிருப்பதால் முடியாமல் லேசாக வாய்த்திறக்காமல் இருமினேன்.

கையில் கொடுத்த ரப்பரை அழுத்தலாமான்னு நினைத்து, வேண்டாம்.... என்ன தான் நடக்கிறது பார்ப்போம், எவ்வளவு தான் என்னால் சமாளிக்க முடிகிறது என, திரும்பவும் சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தேன்...

வரும் சத்தம் அதிகமாக இருந்தாலும் அதைக் கோர்வையாக்கி.. ஒரு கோரசாக மாற்றி இசையாக்க முயற்சி செய்தேன்... பிடிப்பட்டது... 2-3 வினாடிகளுக்கு ஒரு முறை இந்த கோரஸ்ஸில் நான் உருவாக்கி பாட ஆரம்பித்த வார்த்தைகள் மாறிக்கொண்டே இருந்தன....

"வீடு வீடு வீடு........./ஜெயா ஜெயா ஜெயா..../வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்.. / வீடு வீடு வீடு..../டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா /கிர்னீஈஈப் கிர்னீஈஈப்.../வீடு வீடு வீடு.... ஜெயா ஜெயா ஜெயா...வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்........"..  இன்னும் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகள்......

வீடு'ன்னா அது தொடர்ந்து 2-3 வினாடிகளுக்கு அல்லது மேலாக ஒலிக்கும்.... பிறகு ஒலி்யின் தன்மை வேறாக மாறும்..  ஜெயா'ன்னு எனக்கு ஒரு தோழி இருக்காங்க , அதனால் ஜெயா சொல்லும் போது தோழியை நினைத்தபடியே சொல்லிக்கொண்டு இருந்தேன்..."விட்ரு போதும்" சத்தம் கோர்வையாக வரும் போதெல்லாம்... இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடே சொல்லிக்கொண்டிருந்தேன். ..

ஆக... ஏதேதோ தமிழில் புதுப்புது வார்த்தைகளை அர்த்தத்தோடும், ஹாரிஸ் பாடல்கள் போல அர்த்தமற்ற ஆரம்பமாகவும் , சத்தத்திற்கு ஏற்றவாறு  உருவாக்கி இசையாக்கிக்கொண்டிருந்தேன்....

மல்லக்க ஒரே நிலையில் படுத்து, இறுக்க கட்டப்பட்டு இருந்ததால்.. நடு இடுப்பில் இனம் புரியாத வலி, வலது கை தூக்கியபடி வைத்திருந்த வலி ஒரு பக்கம்....இதில்.. கன்னா பின்னா கடும் சத்தம் ஒரு பக்கம் என..இதைவிட ஒரு பெரிய தண்டனையை இது வரையில் நான் வாழ்க்கையில் அனுவித்தது இல்லை....


சரியாக 45 நிமிடம்.. ?!!!! ஹய்யோ..45 நிமிடம்.?????. நல்ல நினைவோடு, ஒரே இடத்தில் , கட்டிப்போடப்பட்டு, ஏதும் செய்ய முடியாமல் , அசையாமல் என் வாழ்க்கையில் நான் அமைதியாக இருந்த முதல் மறக்க முடியாத திகில் அனுபவம் !!

எவண்டாது இந்த MRI SCAN ஐ கண்டுப்பிடிச்சது...?!! அவன் மட்டும் என் கையில் கிடைச்சான்.. .....

*******

படுக்கை வெளியில் வந்தது.... கட்டுகள் அவிழ்த்து, தலை கவசம் கழட்டப்பட்டது.  எழ சொன்னார்கள்... நானும் அவர்கள் சொல்லும் முன் முயற்சி செய்தேன்..."ஹைய்யா.... முடியலையே.. ?!!" அப்படியும் இப்படியுமாக.. இருவர் அலேக்காக என்னைத்தூக்கி உட்கார வைத்தனர்.

இளைஞர் ஹிந்தியில் ஆரம்பித்தார்..."ஆப்கா நாம் க்யாஹே...?" .....
"ஏ கித்தனா? ."

"அடேய்......உடம்பு சரியில்லாத மனுசங்கள, இவ்ளாம் பெரிய மெஷின்குள்ள, இவ்ளோ சவுண்டுல, உசுரோட உள்ள விட்டு எடுத்துட்டு.. .மூள  கலங்கி லூசாகி இருப்போம்னு தானே டெஸ்ட் பண்றீங்க..?!"

"டேய் டேய்...நாங்கெல்லாம் மெஷினியே லூசாக்கறவங்க டா....எங்கக்கிட்டவேவா?".. 

*********
பீட்டர் தாத்ஸ் : You can create a music in any circumstances,  depends on your interest.