=> கோலி , பம்பரம் விளையாட்டு, பட்டம் பறக்க விடறது, தண்ணி அடிக்கறது , புகைப்பிடிக்கறது மாதிரி இதுவும் மிக மிக மிக சாதாரணமான ஒரு விசயம்..  விளையாட்டு, பொழுதுப்போக்கு & சந்தோஷம்.

=> இதையெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிக்கிட்டு??! என்னாச்சி இவங்களுக்கு எல்லாம்?!  இதை ஏன் இவ்ளோ பெருசாக்கி பேசறாங்கன்னு சத்தியமா எனக்கு புரியல.

=> 200 பேர்..இல்ல சரியான கணக்கில்ல, அதுக்கும் மேல இருக்கலாம்..அதனால நீங்க 200 ன்னு ரவுண்டு செய்துக்கோங்க. இதுல 12-13 ரேப் கேஸ் தான் ரெஜிஸ்ட்டர் ஆகியிருக்கு. மிச்சம் இருக்க 187 பொண்ணுங்க ...?!! வேறென்ன சைலன்ட் மோட் ல இருக்காங்க.

=> மேல சொன்ன 200 சொச்சம் பேரை ரேப் செய்துட்டு, ரொம்ப சாதாரணமா கணக்கு சொல்ற ஒருத்தன்  மாதிரிதான்.. நிர்பயா ரேப் லிஸ்ட்ல இருக்க 4 பேரும்.



யார் கூட இப்படி ரேப் செய்து விளையாடுவாங்க?!

=> இரவு நேரங்களில் வெளியில் "சுற்றும்" பெண்கள், தனியாகவோ, யாருடனோவோ.  இப்படி சுற்றும் பெண்கள் எல்லாருமே ஒழுக்கமற்றவர்கள், இவர்களை ரேப் செய்வதால் ஒரு பிரச்சனையும் இல்லை, இவங்கள கண்டிப்பா ரேப் செய்யனும். அதில் எந்த தப்புமில்லை. முக்கியமாக அவங்க இந்த ரேப் விசயத்தை வெளியில் சொல்லவே மாட்டாங்க.

=> சரி, ரேப் செய்தீங்க..அது ஏண்டா அந்தப்பொண்ணை அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்கீங்க?  ...வாய்!! என்னா வாய் அந்த பொண்ணுக்கு?! ரொம்ப ஓவர் பேச்சு..முடியல.. அதுவாச்சும் பேசுச்சி.. கூடவந்தவன்.. கைவேற நீட்டிட்டான். ராத்திரியில் இப்படி சுத்தறதே தப்பு..இதுல..எதிர்த்து பேசலாமா?!

வக்கீல் வண்டுமுருகன்கள் :

=> பெண்கள் எப்படி வளர்க்கப்படனும்? யார் கூட வெளியில் போகனும். பூ, வாசம், வெங்காயம் . etc

 # ண்ணா.... எங்கூர்ல சொந்த தாத்தா, 4 வயசு பேத்திய ரேப் செய்து, கிணத்தில் தூக்கிப்போட்டு சாகடிச்சிட்டாருங்கண்ணா.. இதுக்கு உங்க கருத்து என்னங்கண்ணா?!!

=> என் வீட்டு பொண்ணு இப்படியிருந்தா..பண்ணை வீட்டில் வச்சி கொளுத்திடுவேன். !!

# ஸ்ஸ்ஸ்ஸ்.....இஞ்சி பூண்டு நசுக்கறாப்ல இந்த ஆளை நசுக்கினா என்ன? !!

மருத்துவர் :

=> இந்த குற்றவாளிகள் எல்லோருமே "நார்மல்" ஆனவர்கள். அதாது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படாத சாதாரண மனிதர்கள்.

அப்பாவிகள் :

=> தன் புருஷன் இப்படியான செயலை செய்யவே மாட்டான் என நம்பும், அப்பாவி மனைவி. திருதிருன்னு முழுச்சிட்டு அப்பெண்ணை சுற்றிவரும் குட்டிக்குழந்தை. "கணவனை சார்ந்து தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை.. தனியா எப்படி வாழமுடியும்? அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம்?! நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?! " # நிர்பயாவா? இந்த பெண்ணா?!

=> ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படற மக்கள் நாங்க.... எங்க வயிறை நிறைக்க தான் வெளியில் வேலைக்கு போறான்.. எங்க புள்ள இப்படி செய்துட்டானா..... என்ன சொல்றது தெரியலன்னு அழுகின்ற தாய் தகப்பன்..

காவல்துறை :

டெல்லி : எந்த நாட்டு தலைநகரோடு ஒப்பிட்டாலும், டெல்லி ஒரு தலைசிறந்த பாதுகாப்பான தலைநகரம். அதில் மாற்று கருத்தேயில்லை !

India' daughter : (Click it to watch the Video)
1. குற்றவாளி : எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான். சரியாத்தான் பேசறான்.
2. குற்றவாளியின் மனைவி : நியாயமான கேள்வி கேக்கறாங்க. .
3. குற்றவாளியின் பெற்றோர் : அப்பாவிகள்
4. காவல்துறை:  கடமையை செய்துக்கொண்டேதான் இருக்காங்க.

பொதுமக்கள் : நீங்கதான் பிரச்சனை செய்யறீங்க. கொடி தூக்காம, பொங்காம, உங்க வீட்டு பொண்ணை ஒழுக்கமா வளக்கற வழியப்பாருங்க. !