கண்ணெதிரில்
களையும்
என்
கனவுகள்.....
பகல் கனவுகளோ?!!
**************************
இரவின் கனவுகள்......, ?????!
காற்புள்ளியிட
அவசியமில்லை
அவையும்
முற்றுப்புள்ளி தான் !!


Image : Baby Kaavya - Thekkikattan's daughter. Thx. Dr.Prabhakar.
******************************
நிழலாக
தொடர்கிறேன்..
இருட்டில் சென்றுவிடாதே..

*****************************

மெளனத்தில்
மறைந்திருப்பது -
நம்பிக்கை மட்டுமல்ல
வெறுப்பும் கோபமும்
கூட...

******************************


நாய்'க்கும்
மனிதனுக்கும்
வித்தியாசம் உண்டு
புலர்ந்ததிலிருந்து
புணர்வது வரையில்...


************************************

அடங்காத உடல்பசிக்கு
அறிவை முன்னிருத்தும்
இலக்கியவாதிகள்
பிண அறையின் காவலர்களாக
இருந்திருக்கலாம்
விதவிதமான
பெண்ணின் உடல்கள் அங்குமுண்டு !!

அதைக்கூட அனுபவித்து
இலக்கியம் கலந்து
சுவைப்பட
கவிதையாக்குவர்....
கைதட்டி சிரித்து சிறப்பு
சேர்க்குமொருக் கூட்டம் !!!


*************************************
எங்கோ
இழையோடும் அன்பும்
நம்பிக்கையும்
துடிக்கவைக்கிறது
இதயத்தை....

***************************
காவியின் குறியீடு துறவல்ல..
வெற்றுடலும் துறவல்ல

ஆசைகளற்றது துறவு...

முடிவென்று நினைத்தே
துறவைத்தேடினால்

அதை அடையும் போது
இவ்வாழ்வெதற்கு?!

துறவும் முடிவல்ல...!!!

**********************

இறந்துவிட வேண்டுமென
நெஞ்சம் துடிக்கையில்-
என் இறப்பும் 
என் கையிலில்லை-
வாழ்க்கை !!
****************************************

Images : Thx Google