சிரிப்பைப்பற்றி எழுதனும்னு எனக்கு ஆர்வம் வந்ததற்கு காரணம் நண்பர் ஜே.கே. (ஜெயகுமார்). இவரை சந்தோஷ் திருமணத்தில் சந்தித்தேன். மற்ற நண்பர்கள் அனைவரும், விடுதியில் தங்கிவிட, இவர் சந்தோஷ்க்கு ஆஸ்தான ஓசி ஃபோட்டோகிராஃபராக சர்வீஸ் செய்ததால், இரவு வெகுநேரம் மண்டபத்திலேயே இருந்தார், காலையிலும் சந்தோஷ் தூங்கி எழுந்ததிலிருந்து ஃபோட்டோ எடுக்கவேண்டிய கடமை கட்டிப்போட்டதால், 5 மணிக்கு முன்னதாகவே வந்து அவர் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தார். எப்படியாவது சந்தோஷை "அழகாக" ஒரே ஒரு ஃபோட்டோவாது எடுக்க வேண்டுமென்பதே ஜே.கே'வின் அன்றைய லட்சியமாக இருந்ததுன்னா பாருங்களேன் !! ஸ்ஸ்யப்பாஆஆஆ....

அங்க பிரச்சனை என்னன்னா..நம்ம ஜே.கே' இருக்காறே அவருக்கு சிரிக்கவே வரலைங்க. சீரியாஸாக பேசினாலும் முகத்தை உர்ர்ன்னு வச்சி இருக்காரு, யாராவது சிரிக்க சிரிக்கப் பேசினாலும் முகத்தை உர்ர்ன்னே வச்சியிருக்காரு. அப்பப்ப... "நண்பா..இதுக்கு நீங்க சிரிக்கனும்னு" சொல்லித்தரவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். அப்பதான் எனக்கு தோணிச்சி, இவரை இப்படி "சிரி சிரி" ன்னு சொல்லவேண்டியதாக இருக்கே. இவருக்குக்காக சிரிப்பைப்பற்றிய நல்ல விசயங்களை தொகுத்து எழுதினால் என்னன்னு. எப்ப?? சந்தோஷ் திருமணம் நடந்த நவம்பர் மாதம், ஆனால் அதை இப்பதான் எழுதறேன். சரி விசயத்திற்கு வருவோம்...

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் சிரிப்பு. சிரிக்கத்தெரியாத மனிதர்கள் என்றில்லை, எந்தவித உணர்ச்சிகளையும் அதாவது நவரசங்களையும் சட்டென்று வெளிப்படுத்தாத மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருமுறை நீயா-நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணியின் முகத்தை "டைட் க்ளோஸ் அப்" பில் காண்பித்து, "நிகழ்ச்சி ஆரம்பித்திலிருந்து முடியும் வரை, அதாவது 3 மணிநேரத்திற்கும் மேலாக, அவர் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் ஒரே மாதிரியாக அமர்ந்திருந்தார்" என்று குறிப்பிட்டனர். இப்படி ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துவது எத்தனை சிரமம் என்று அவரின் கணவர் அன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு விளக்கம் அளித்தார். எகொசஇ !!!
 
கொஞ்சம் யோசிங்க, எப்போதும் ஒரே மாதிரியான இறுகின முகத்தோடு இருக்கும் ஒருவரைப்பார்த்தால், எப்படி நம் அன்றாட வேலைகள் சாதாரணமாக நடக்கும்.?! சீக்கிரமே, நம் முகமும் அவர்களைப்போலவே இறுக்கமாக மாறிவிடும். சிரிச்சிட்டா மட்டும் என்ன ஆகிடப்போகுதுன்னு கேட்கறீங்களா? சிரிப்பில் என்னவெல்லாம் இருக்கிறது எனப் பார்க்கலாமே:-

=> சிரிக்கும் போது, உடலில் 300 தசைகள் தளர்ச்சி அடைகின்றன.

 => நாம், ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் சிரித்தோமானால் கிட்டதட்ட 40 கலொரிகள் எரிக்கபடுகின்றதாம், அப்படியானால் ஒரு வருடத்தில் எந்த வித உடற் பயிற்சியும் செய்யாமல் 1.82 கி.கி உடல் எடையை குறைக்கலாமாம். ஆக, எந்த செலவும், உடல் உழைப்பும் இல்லாமல் நம்மால் உடல் எடையை குறைக்கமுடியுமானால்? பைத்தியம்னு சொன்னால் கூட சிரிக்கலாமே..

 => ஒரு நல்ல, ஆத்மார்த்தமான சிரிப்பு, நம் உடலின் தசைகளை, 45 நிமிடங்களுக்கும் அதற்கு மேலாகவும் தளர்த்தி, உடல் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை விடுவிக்க செய்கிறது.

=> நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கிறது மற்றும் தொற்றுகளை எதிர்க்கவல்ல ஆன்டிபாடிகளை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நம் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தமுடிகிறது.

 => உடலில் இயற்கையாகவே நல்ல இரசாயனங்களை வெளியிடும் எண்டோர்பின்'ஐ சிரிப்பு தூண்டுகிறது. இந்த எண்டோர்பின்கள் ஒட்டுமொத்தமாக நம் உணர்வுகளை நேர்மறையாக, நல்லமுறையில் தூண்டவும், உடல் உபாதைகளால் ஏற்படும் வலியை தற்காலிகமாக குறைக்கவும் உதவுகிறது.

=> முக்கியமாக, சிரிப்பு , நம் இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பிற இதய பிரச்சினைகளுக்கு எதிராக நம்மை பாதுகாக்க உதவுவதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

சிரிப்புக்கும் நம் மனதிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அதையும் பார்க்கலாம்:-

=> சிரிப்பு, நமக்கு கவலையேற்படுத்தக்கூடிய உணர்ச்சிகளை எளிதாக கரைத்துவிடுகிறது. பொதுவாக நாம் சிரிக்கும் போது, நம் கவலைகளையும், வருத்தங்களையும் அந்த நேரத்திற்கு கண்டிப்பாக மறந்துவிடுவோம்.

 => நம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளவும், மன அழுத்ததிலிருந்து விடுபட்டு, மனதுக்கு தேவையான நேர்மறையான சக்தியைப் பெறமுடிகிறது. இதனால், நம் அன்றாட வேலையில் அதிக கவனம் செலுத்தவும், சாதிக்கவும் முடிகிறது

 => நகைச்சுவை, நம்மை மிகவும் யதார்த்தமான, மன அச்சுறுத்துல் இல்லாத நிலையில் பார்க்க/பழக/சிந்திக்க வைக்கிறது.

 => சிரிப்பைத்தவிர, வேறெதுவும், நம் மனதையும் உடலையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேகமாக உதவுவதில்லை.

=> நகைச்சுவை, நம் மனச்சுமைகளை குறைத்து, நம்பிக்கையை தூண்டுகிறது, மற்றவர்களுடன் நம்மை இணைக்கும் கருவியாகவும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க உதவுகிறது.

இப்படி சிரிப்பின் சிறப்புகளை சொல்லிக்கிட்டே போகலாம். இப்போதெல்லாம், சத்தம் போட்டு சிரிக்க நேரமில்லாத நாட்களில் நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். இதில் குறிப்பாக பெண்கள் சத்தம் போட்டு சிரிப்பதென்பது நம் சமூகத்தில், சபையில் செய்யக்கூடாத செயல். அதனால் பொது இடங்களில் சிரிப்பு வந்தாலும் அதை வாய்மூடி சிரித்தோ, சிரிப்பை அடக்கியோ தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். மனைவி பொது இடங்களில் அதிகமாக சிரிக்கிறாள் என விவாகரத்து வாங்கிய ஆண்கள் இங்குண்டு. ஆண்கள் சிலரும் கூட பொது இடங்களில் சத்தம் போட்டு சிரிக்க தயங்குவர். நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.

"Laughing Bird " என்ற செல்லப்பெயர் எனக்குண்டு. இதைத்தவிர ஓவராக அடக்கமுடியாமலும், சம்பந்தமில்லாமலும் சிரித்து, "லூசு, கழண்டக்கேசு' ன்னு பேரெல்லாம் அடிக்கடி வாங்குவதுமுண்டு. நமக்கு பேர் வாங்கறதா முக்கியம்? சிரிப்பது தானே முக்கியம்.. சிரிப்பதை வெட்கப்படும் ஒரு செயலாக நான் இதுவரை நினைத்ததில்லை. காரணம் ஒன்னும் பெரிசா இல்லை, என்னால சிரிப்பை அடக்கமுடிவதில்லை. அறிந்தவர் அறியாதவர் என யாரைப்பார்த்தாலும் புன்னகைக்கும் பழக்கமும் இருக்கிறது. சோகத்தில்/கவலையில்/பிரச்சனைகளில் இருப்பவரும், நாம் சிரிப்பதைப் பார்த்து பதிலுக்கு சிரிப்பர். சிரிக்கும் போது அடுத்தவர் முகத்தில் ஏற்படும் புத்துணர்ச்சியைப் பார்ப்பதில் எனக்கொரு சந்தோஷம் திருப்தி ஏற்படும், மேற்கொண்டு அவரிடத்தில் எளிமையாக நட்பு பாராட்டிக்கொள்ளவும் முடியும்.

சென்றவாரம் சென்னையில் நடனம் சம்பந்தப்பட்ட ஒரு Workshop' க்கு சென்றேன். அங்கு நவரசங்களையும் சொல்லிக்கொடுத்து, அவற்றிலிருந்து மன அழுத்தத்தை வெளிக்கொண்டு வருவதையும் சொல்லிக்கொடுத்தனர். அதில் ஒன்று சிரிப்பு. Laughter therophy பற்றிய ஒரு வீடியோ : pls watch this -> http://www.youtube.com/watch?v=w5KjERog9uM  

சிரிப்பின் சிறப்பு & வகைகளைப்பற்றி அந்தக்காலத்திலேயே "என்.எஸ்.கே" பாடியிருக்காரு... 
 

மதுரம் அம்மா சிரிக்கறதை பார்த்தப்பிறகும் நீங்க யாராச்சும் சிரிக்காம இருந்தீங்கன்னா... கண்டிப்பா உங்களுக்கு.......... ....... :)

அணில் குட்டி : //"லூசு, கழண்டக்கேசு'//....அட ?!!  புதுசா சொல்லிக்கறாங்களாம்...ஹய்யோ ஹய்யோ....!

 பீட்டர் தாத்ஸ் : To truly laugh, you must be able to take your pain, and play with it!

Thx to : Google & Youtube