பழம்நீ : பரிட்சை எப்படிடி எழுதின?

கவி : ம்ம் நல்லா எழுதியிருக்கேன்ப்பா... ஆனா ஹால் மாத்தி உக்காந்துட்டேன்..ஒரே டென்ஷனாப்போச்சி..கொஞ்ச நேரம் வீணாப்போச்சி..

பழம்நீ : அட லூசே..ஏண்டி?

கவி : 10 நிமிஷம் முன்னாடி போர்ட்ல ஹால் நம்பர் ஒட்டறாங்கப்பா... ஒரே கூட்டம்.. தூரக்கிருந்து பார்த்தேனா..சப்ஜெக்ட் மட்டும் ஓரளவு தெரிஞ்சிச்சி...என் நம்பர் சரியா கண்ணுத்தெரியல..குத்துமதிப்பா இந்த ஹால் தான்னு போய் உக்காந்துட்டேன்..

பழம்நீ : என்னது கண்ணுத்தெரியலையா? அப்ப சப்ஜெக்ட் மட்டும் எப்படி படிச்ச?

கவி : அது ரெட் கலர் மார்க்கர்ல பெரிய எழுத்தா எழுதி இருந்தாங்க..நம்பர் எல்லாம் கம்பியூட்டர் பிரிண்ட் தூரக்கிருந்து ஒன்னும் தெரியலப்பா...

பழம்நீ: கண்ணாடி போட்டிருந்தியா?

கவி : ஹி ஹி..இல்ல...

பழம்நீ : ..நமக்கு தான் நொள்ளக்கண்ணாச்சேன்னு கண்ணாடி போட்டா என்னவாம்.. ஏழு கழுத வயசாச்சி..அட்டண்டன்ஸ்ல கையெழுத்து போடாட்டி ஆம்சென்ட் தெரியுமில்ல..? உன்னால அடுத்தவங்களுக்கு எவ்ளோ பிரச்சனை? ஒழுங்கா பாத்து ஒக்கார வேணாமா?...ஒன்னுக்கு 2 பிஜி முடிச்சி இருக்க..இதுக்கூட தெரியல.?...இதுல இன்னொரு பிஜி வேற எழுதற...10 பேருக்கு நீ சொல்லித்தரனும்..நீயே இப்படி இருக்கி........

கவி : ப்ப்ப்பா....... சும்மா இருங்கப்பா..!!!!  மாற்று திறனாளிகளை திட்டக்கூடாது அது ரொம்ப...பாவம்ப்பா.....

பழம்நீ : மாற்று திறனாளிய நான் எங்கடி திட்டினேன்..?! அவங்கள ஏன்டி நடுவுல வம்புக்கிழுக்கற?

கவி : அட..நாந்தாம்ப்பா... கண்ணுத்தெரியலல்ல..அப்ப நானும் மாற்று திறனாளி தான..?

பழம்நீ :அடி செருப்#$@$#@....#$@% @$%#^%^ @%$$#  $#%$#  $%@%  @%$%$%  @%$%$ %%$^%   @$^%#$^  @#$#@ #@$%$#^%$^&

கவி : எச்ச்சூமி பழம்...ஹோல்ட்...!!!  இதுக்கு மேல ஒரு வார்த்தைக்கூட வரக்கூடாது. ! இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு ?? என் கண்ணு தானே. என்னால பகல்ல கூட  நட்சத்திரத்தை ஒன்னு விடாம எண்ணமுடியும் .... என் கண்ணு அவ்ளோ பளீச்..பளீச்....போதுமா? .....

பழம்நீ : ம்ம்ம்ம்ம்ம்ம் ...அது..! 

*******************



கவி : ப்பாஆ....ப்பாஆ.. இப்ப நல்லாயிருக்கா?  (தலைவிரி கோலம்)

பழம்-நீ : இருக்கு......

கவி : இப்ப ?

பழம்-நீ : இருக்கு......

கவி : இது?!

பழம்-நீ : நல்லாயிருக்கு...

கவி : என்னப்பா நீங்க?  எப்படியிருந்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க? இது சீட்டீங்...

பழம்-நீ :.............................
............................. நீஈஈஈ.... ரஜினிகாந்த் மாதிரிடி........ எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் சூப்பர்ர்ர்ர்ர் தான். வேற மாதிரி மாத்தி சொல்லவே முடியாதுடி..........

கவி : அவ்வ்வ்வ்...!!


*************************

கவி : பின்னாடி வீட்டுல புதுசா ஒரு நாய் வளக்கறாங்க போல எந்த நேரமும் வாயமூடாம குலைச்சிக்கிட்டே இருக்கு...எரிச்சலா இருக்குப்பா...அவங்க வீட்டுல இருக்கவங்க அதை ஏன் வாயமூடு" ன்னு சொல்லவே மாட்டேங்கறாங்க?

பழம்-நீ : ..............................
...

(என்ன பதிலைக்காணமேன்னு திரும்பி பார்த்தால்...என் பின்னாடி அமைதியாக என்னைப்பார்த்தவாறே  புன்முறவலோடு நிற்கிறார்)

கவி :.(.நானும் புரியாமல் திரும்பிவிட்டு....... புரிந்து மீண்டும் ) ஆவ்வ்வ்வ்வ்...என் வாயக்கூடவாஆஆஆ????

பழம்-நீ : ஹா ஹா ஹா ஹா...

கவி : கிர்ர்ர்ர்ர்ர்.... :))

*************

கவி : நேருஜி ஜெயில்ல இருக்கப்ப அவரோட பொண்ணு இந்திராஜிக்கு லெட்டர் எழுதினாராம்..அதை படிச்சி படிச்சி அவங்க ரொம்ப வீராதி வீரியா வளந்தாங்களாம்.. அது மாதிரி நான் உனக்கு இனிமே லெட்டர் எழுதப்போறேன்...  

நவீன் : இப்ப ஜெயில்ல இருக்கறது நீயா? நானா?

கவி : ஜெயில்ல நேருஜி வெட்டியா இருந்தாரு...இப்ப அதே மாதிரி நானும் வெட்டியா இருக்கேன்னு வச்சிக்கோயேன்... .
 

நவீன் : நீ வெட்டி............ஆனா நான் வெட்டியில்ல.....அது மாதிரி எதாச்சும் வந்துச்சி.... நேரா ட்ரேஷ்க்கு போகும்...சொல்லிட்டேன்
 

கவி: என் செல்லக்குட்டி..பட்டுக்குட்டி....ராஜாகுட்டி..தானே..? படிடா குட்டி...நீ எதையும் இம்பிளிமென்ட் பண்ண வேணாம்..ஒன்னு இரண்டு பாயின்ட்ஸ் படிக்கும் போது தானா மனசுல பதிஞ்சுடும்..  
நவீன் : சரி சரி அனுப்பித்தொல..படிச்சித்தொலைக்
கிறேன்...

கவி : (அது!!)... குட் செல்லம்.!


**************************

கவி : கத்திரிக்காயில் இருக்க ஒரு என்சைம், மூளைய சுத்தி இருக்க கொழுப்பை சரியான % ல் வச்சிக்க பயன்படுதாம்..நீ கத்திரிக்காயே சுத்தமா சாப்பிடமாட்டற..உன் மூளைய நினைச்சி எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா...

நவீன் : ஹா ஹா...மூளைய பத்தியெல்லாம் நீ பேசறப்பாரு..அதான் இங்க காமெடி..:))) .  நானு... வெளியில் பிரியாணி சாப்பிடுவேன் இல்ல..அதுக்கு கத்திரிக்காய்  தான் தொட்டுக்க வைப்பாங்க..அப்ப சாப்பிட்டு இருக்கேனே...

கவி : அடி செல்லமே..?! கத்திரிக்காய் சாப்பிடுவியா நீனு? இது எனக்கு தெரியவே தெரியாதே?......  ஏண்டா இதை முன்னமே சொல்லல்ல ..!!! நான் வீட்டுல செய்தா துளிக்கூட சாப்பிடாம ஒதுக்கி வைக்கிற... ஹோட்டல சாப்பிடுவேன்னு வெக்க மானமே இல்லாம சொல்ற...

நவீன் : ஹே ஹே.. நீ செய்யறதை எவன் சாப்பிடறது..

கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சோத்துக்
கு சிங்கி அடிக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரா...?

நவீன் : நான் சாப்பாடே கிடைக்காம பட்டினி கிடந்தாக்கூட உன் சாப்பாடு நல்லாயிருக்குன்னு சொல்லுவேன்னு கனவுல கூட நினைக்காதே..நடக்காது..!!

கவி :... :(((((((( நீயெல்லாம் ஒரு புள்ளையா..?!

நவீன் : :))))))))


***************

அணில் குட்டி : .........

பீட்டர் தாத்ஸ் :  Miss U Naveen