நவீன் சந்தர் எங்க?

அம்மா நவீன்' மா.. உங்கக்கிட்ட வந்து சொல்லிட்டு தானம்மா போனான். படிக்கப்போயிருக்கான் ம்மா..

ஆங்...ஆமா நீ சொன்னியே.. மறந்துட்டேன்..

நவீன் சந்தர் எப்ப வருவான்?

அம்மா நவீன்'மா.. நவீன்னு சொல்லுங்க..

அவன் பொறந்தப்ப நவீன் சந்தர்னு தானே பேர் வச்சீங்க.. (இதெல்லாம் மட்டும் தெளிவு)

ஆமாம்மா... அப்புறம் நவீன்'னு மாத்திட்டோமே...

ஆங்க்...ஆமாம்மா மறந்துட்டேன்...நவீன் சந்தர் எப்ப வருவான்..?!

அவன் படிக்கனுமா இல்லையா..படிப்பை முடிக்க 2 வருசம் ஆகும்....ஃபோட்டோ பார்க்கறீங்களா?. (மொபைலிலிருந்த அவன் ஃபோட்டோவை எடுத்து காட்டினேன்.. உடனே ஃபோனை வாங்கி..)

ஹல்லோஒ....நவீன் சந்தர்.....எப்ப வருவ???

அம்மா, ஃபோட்டோ பாக்க கொடுத்தேன்...அவன் லைன்ல இல்ல..

நான் சொல்லுவதை துளியும் காதில் வாங்காமல், "ஹல்லோ, நவீன் சந்தர்..அம்மும்மாவை பாக்க எப்படா வர?

ஞே..!!

***************

கவிதா... இவ்ளோ லேட்டா வரியே இப்பதான் அப்பா இங்க வந்துட்டு...அதோ அந்த பக்கமா போனாரு...பாரு......

ஓ..(நானும் அவங்க சொன்ன திசையில் பார்த்துவிட்டு), சரிம்மா அப்புறமா நான் போயி பாக்கறேன் ....

பக்கத்து பெட்டில் துணையிருந்த பெண் : ஏங்க, அப்படி யாரும் இங்க வரலங்க...

தெரியுங்க....அப்பா இறந்து பல வருஷம் ஆச்சிங்க............

ப.பெ.து.பெ: ஞே! 

********************

கவிதா...இங்க வா.... என் பக்கத்தில் உக்காரு... நவீன் சந்தர் ஐ கூட்டிட்டு வர சொன்னேனே...கூட்டிட்டு வரல?

(ஸ்ஸ்ஸ்ஸ்.... ) முதல் பத்திய திரும்ப படித்துக்கொள்ளவும்..

*********************

கையில் போட்டிருந்த வளையல் எங்கம்மா? (திக்க்...)

என் கையில வளையலே போடலியே...

அம்மா..... நாந்தானமா போட்டுவிட்டேன்... எங்கம்ம்ம்ம்மா?

இங்க பாருடி கழுத........என் கையில் வளையலே இல்ல...

இப்ப இல்லம்மா..இதுக்கு முன்ன வளையல் இருந்துச்சே எங்க??

சிஸ்டர் : கவிதா.. கழட்டி வச்சிட்டாங்க.. எடுத்து வச்சி இருக்கேன். இனிமே போட்டுவிடாதே...

தாங்ஸ் சிஸ்டர்..

********************

கவிதா உன் வீட்டுக்கார் எப்ப மும்பை போறாரு... ?

அம்மா, அவர் சென்னை வந்து இரண்டு வருசம் ஆச்சே...மறந்துட்டீங்களா? நவீனோட உங்களை வந்து பார்த்தாரே...

ஆமாம்ம்மா..வந்தாரே...டிரஸ் வாங்கி கொடுத்தாரே..பீச் போனோமே.... (இதெல்லாம் மட்டும் தெளிவு)

அட... பீச் போனது ஞாபக இருக்கா..?

ஏன் இல்ல...(ஒரே சிரிப்பு)...ஐஸ்க்ரீம் வாங்கி தந்தியே... (நெற்றிய சுருக்கிக்கொண்டு) ஆமா அவரு மும்பாய்க்கு எப்ப திரும்ப போறாரு...??

(ஆத்தா முடியல ஆத்தா என்னைவுட்ரூ.)

*************************

லைட்டா ஃபீவர் இருக்கும்மா..

ஆமா...இருக்கு..எனக்கு அப்பவே தெரியுமே....  (சரிங்க டாக்டர்)

சிஸ்டர்கிட்ட மாத்திரை வாங்கி தரவா?

உனக்கேன் இந்த வேல? அவங்க இப்ப வந்து செக் பண்ணிட்டு, அவங்களே மாத்திரை கொடுப்பாங்க. நீ அமைதியா உக்காரு...

சரி..(ங்க டாக்டர்) .:(.

*********************

அம்மா... அம்மா இங்க பாருங்களேன்..நான் சொல்றதை கொஞ்சம் கவனிக்கறீங்களா..?

கவனிச்சிட்டு தான் இருக்கேன் கவிதா..என்ன சொல்லு? (ம்க்கும் கேக்கும் போது தெளிவு தான்)

பாத்ரூம் போனா மறக்காம தண்ணீ ஃப்ளஷ் பண்ணிவிடனும். தண்ணீ  ஊத்தாம வந்தீங்கன்னா..நாத்தம் அடிக்கும்..க்ளீன் பண்றவங்க பாவம் இல்லையா?

நான் என்ன சின்னக்குழந்தையா கவிதா.. உபதேசம் பண்ற...(ஆவ்வ்வ்வ்.......)

சிஸ்டருங்க தினம் கம்ப்ளைட் பண்றாங்கம்மா...உங்க வேலைய நீங்கதான்ம்மா செய்யனும்.. நம்ம வீடு இல்லமா இது ஹாஸ்பிட்டல்....

சரி.... .நானு போயி பாத்ரூம் கழுவி விட்டுட்டு வரட்டா....?!

அய்யோஒ... பாத்ரூம் கழுவ சொல்லல்லமா..நீங்க தண்ணி மட்டும் ஃபள்ஷ் பண்ண மறந்துட்டு வந்துடறீங்க..

இல்லையே........சரியாத்தானே செய்யறேன்...நீ வேணா போயிப்பாரு...

(ஸ்ஸ்ஸ்........இதை இத்தோட முடிச்சிப்போம். அடுத்து சிஸ்டரை சமாளிக்கனும்)  

*************************

பக்கத்து பெட் பாட்டி : கஸ்தூரி, இது யாரூஊ?

அம்மா : என் மக

ப.பெ.பா : பேர் என்ன?

அம்மா : க்க்கவிதாஆஆ

ப.பெ.பா: கவிதா என் பொண்ணாச்சே... நானும் கவிதாவும் இப்ப வெளியில் போகப்போறோம்...

அம்மா : இல்லல்ல கவிதா என் மக.. (என்னை இறுக்கி கட்டிக்கொள்கிறார்)

ப.பெ.பா: என்ன படிக்குது?

அம்மா : அவ எம்.பி.ஏ படிச்சி இருக்கா..


ப.பெ.பா: இதுல எல்லாம் தெளிவாத்தான் இருக்க..ஆனா செத்துப்போன உன் புருஷன் வந்தாரு வந்தாருன்னு சொல்லி எங்க எல்லாத்தையும் ராத்திரியும் பகலுமா ஆட்டி வைக்கறியே தாயீ.....

அம்மா : (ரொம்ப கேஷுவலாக) ஆமா, கெஜானனன் இங்க தான் எப்பவும் இருக்காரு...

ப.பெ.பா: ஞே...!! (பீதியோடு சுத்திப்பார்க்கிறார்)

********************

சிரிக்கவும் முடியாம அழவும் முடியாம ந.கொ.ப.கா நண்பர்கள் போல, பேஎஎஎ...ன்னு...உக்காந்து,  அம்மா பேசறதை வேடிக்கை பார்ப்பது தான் எனக்கு வேலையாப்போச்சி.

அம்மாவிற்கு கொஞ்சம் மாதங்களாக நினைவாற்றலில் அதிக தடுமாற்றம். இப்போது அடிக்கடி அப்பாவை பார்த்ததாக சொல்லுகிறார். மறக்காத எப்போது கேட்டாலும் தடுமாற்றம் இல்லாமல் நினைவில் இருக்கும் ஒரே விசயம், 3 பிள்ளைகள் அதில் 2 ஆண், 1 பெண், பேரக்குழந்தைகளில் நவீன். நவீனை தவிர, அண்ணனின் பிள்ளைகளும் இருக்காங்க. ஏனோ அவங்களைப்பற்றிய நினைவே அம்மாக்கு இல்லை. :(


வீடு, மருத்துவமனை என அம்மாவின் காலம் ஓடுது. நினைவாற்றல் தவிர்த்து வேறு எந்த பெரிய உடல் பிரச்சனையும் இப்போதைக்கு அவங்களுக்கு இல்லாமல் இருப்பது நிம்மதியை தருகிறது. எனினும் குழந்தையாகவே மாறிவிட்டார். சாப்பாடெல்லாம் அப்படித்தான்.  ஏதோ ஒரு சில நேரங்களில் மிகத்தெளிவாகவே ஞாபகசக்தியோடு பேசுகிறார்.  மற்ற நேரத்தில் எல்லாம்..............ம்ம்ம்..தலைப்பை படிங்க...

அணில்குட்டி : அவங்களாச்சும் இந்த வயசுக்கு மேல இப்படி இருக்காங்க.. அம்மணி இப்பவே அப்படித்தான் இருக்காங்க... எப்படியோ ஹாஸ்பிட்டல் போகாமல் வீட்டிலேயே நாங்க சமாளிச்சிக்கறோம்..

பீட்டர் தாத்ஸ் :  At a stage, parents become our children.