ஜி+ ல் நண்பர்களுடன் மேற்கண்ட தலைப்பில் நடந்த ஒரு விவாதத்தை இங்கு பகிர்கிறேன். இது வெளிநாடு செல்லும் பெற்றோருக்கும்,  NRI'களுக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். விவாதத்தில் கலந்துக்கொண்ட நண்பர்கள் பாஸ்டன் ஸ்ரீராம், முகிலன் தினேஷ், வெண்பூ,டைனோ, சுசிகுணா, ஓ.ஆர்.பி ராஜா & இளா.  

கவிதா : வெளிநாடுகளில் குழந்தை வளர்ப்பு, அதில் உள்ள பிரச்சனைகள். அநேகமாக நாம் இங்கு வளர்ந்தவிதம், பழக்கவழக்கங்கள், மொழி, கல்வி, வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், கலாசாரம் என எல்லாமே நம் குழந்தைகளுக்கு வேறுபடுகின்றன. வெளிநாடுகளில் பிறந்து/தங்கி வளரும் பிள்ளைகள் இந்தியா பக்கம் வருவதையே விரும்புவதில்லை. அந்நியர்களாகவே உள்ளனர். கடவுளை பிராத்தனை செய்வது முதல், சாப்பிடுவது, பேசுவது, பழகுவது வரை எல்லாவிதத்திலும் அவர்கள் அந்நியப்பட்டு இருக்கின்றனர். நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு அவர்களின் உடல் வளர்ச்சியும் வித்தியாசமாகவே உள்ளது. அதிக உயரம், அகன்ற உடல்வாகு. (Girl or a Boy heavy built), அதே குடும்பத்தில் இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் அப்படியில்லை. இப்படியான மாற்றங்கள் நாளடைவில் இந்திய வம்சாவழி என்ற வார்த்தையே அவர்களிடமும் காணாமல் போகும், இதை வரவேற்கிறீர்களா? அல்லது மாற்றம் தேவை என்பதனை நியாப்படுத்துகிறீர்களா? நாம் வேற்று நாட்டிற்கு சென்று அவர்களாகவே மாறிவிடுவதில்லை...ஆனால் நம் குழந்தைகள் மாறிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? 

பல செய்திகளிலும், சர்வேக்களிலும் இந்திய கலாசாரம், குடும்பம், நம்பிக்கைகள், போன்றவற்றிற்காகவே நம்மை வேற்றுநாட்டவர்கள் விரும்புகிறார்கள். அவை 
 1. நம் சந்ததியினரால் இல்லாமல் போகும் என்று நினைத்ததுண்டா.. ?! 
2 இவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள், சமாளிப்பது எப்படி என திட்டம் ஏதும் உள்ளதா? 
3. குழந்தைகளிடம் (கல்வி, வசதிவாய்ப்புகள் தவிர்த்து) மற்றவற்றில் இந்தியப் பெற்றோரின் நிலை என்ன? 
4. நம் மொழி, கலாசாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தேவைகள் எந்தளவில் தரமுடிகிறது, தேவையில்லை நம்மோட அது முடியட்டும் என்ற நிலையிலும் இருக்கிறீர்களா? 
5. பெண் குழந்தைகள் வளர்ப்பு, அந்த நாட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்த பயம்/கவலை இருக்கிறதா?  

வெண்பூ வெங்கட் ; ஒரு ப‌க்க‌ம் க‌ஷ்ட‌மாத்தான் இருக்கும். ஆனா டிஸ்அட்வான்டேஜ‌ஸை விட‌ அட்வான்டேஜ‌ஸ் அதிக‌ம். ப‌ச‌ங்க‌ இன்டிபென்ட‌ன்ட்டா இருக்க‌ க‌த்துக்குவாங்க‌, ல‌ஞ்ச‌ம் மாதிரி க‌ர‌ப்ட‌ட் சொசைட்டி இல்லை மாதிரி நிறைய‌ இருக்கு. இந்தியாவில் இருக்குற‌தை விட‌ இங்க‌ என் பைய‌ன் ச‌ந்தோச‌மாவே இருப்பான்னு நினைக்குறேன், அதைத்த‌விர‌ வேறென்ன‌ வேணும்?  

கவிதா : வெண்பூ நீங்க இங்கு இருந்ததைவிட, உங்க பையன் அங்க சந்தோஷமாக இருப்பார்னு நம்பறீங்க.. சரியா..? (எனக்கு விபரம் தெரியாததால், என்ன நீங்க இழந்தீர், என்ன உங்க பிள்ளை பெற்றார் எனபதைப்போல கேக்கறேன்)
  
 முகிலன் தினேஷ்: 1. நம் சந்ததியினரால் இல்லாமல் போகும் என்று நினைத்ததுண்டா.. ?! இல்லை 2 இவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள், சமாளிப்பது எப்படி என திட்டம் ஏதும் உள்ளதா? இல்லை என்று நினைப்பதால் சமாளிக்கவோ, சமாளிப்பது எப்படி என்பதற்கோ திட்டம் ஏதும் இல்லை. 3. குழந்தைகளிடம் (கல்வி, வசதிவாய்ப்புகள் தவிர்த்து) மற்றவற்றில் இந்தியப் பெற்றோரின் நிலை என்ன? என் நிலை, Be roman at Rome. நம் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு வந்துவிட்டோம். இங்கு வந்து நம் பழக்க வழக்கங்களையும், கலாச்சாரத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை அவர்கள் பயிலும், பழகும் இடங்களில் தனித்துத் தெரிய வைத்து ஒரு தாழ்வுமனப்பான்மையை வளர்த்துவிடுவது தவறு என்ற எண்ணம் கொண்டவன் நான். ABCD - American Born Confused Desi என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர்கள் அப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிறந்து இந்தக் கலாச்சாரத்தையும் முழுதும் தெரியாமல், அந்தக் கலாச்சாரத்தோடும் முழுதும் சேராமல் தனித்து நிற்பவர்கள். இப்படி ஒரு நிலை என் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்று நினைக்கிறேன். 4. நம் மொழி, கலாசாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தேவைகள் எந்தளவில் தரமுடிகிறது, தேவையில்லை நம்மோட அது முடியட்டும் என்ற நிலையிலும் இருக்கிறீர்களா? வீட்டுக்குள் இருக்கும்போது மட்டும் தமிழனாக இருந்தால் போதும். கண்டிப்பாத தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காக 14 வருடத் திட்டமிருக்கிறது. கண்டிப்பாக என்னோடு முடியட்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் என் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு அதைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன். 5. பெண் குழந்தைகள் வளர்ப்பு, அந்த நாட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்த பயம்/கவலை இருக்கிறதா?  

முகிலன் தினேஷ் : //கடவுளை பிராத்தனை செய்வது முதல், சாப்பிடுவது, பேசுவது, பழகுவது வரை எல்லாவிதத்திலும் அவர்கள் அந்நியப்பட்டு இருக்கின்றனர்// அந்நியப்பட்டு தெரிவதென்பது அவர்கள் (எப்போதாவது) இந்தியாவுக்கு வரும்போதுதான். அவர்கள் பெரும்பாலான நாட்களைக் கழிக்கும் நாட்டில் அவர்கள் வித்தியாசமாகத் தெரிந்தால் நன்றாக இருக்குமா? யோசித்துப் பாருங்கள்!  

Sriram Narayanan : இழப்புன்னு பாத்தா, சொந்தங்கள் - தாத்தா பாட்டியின் அருகாமையின்மை சொல்லலாம். நீண்ட நாட்களுக்கு நம்மால் பெற்றோர்களை இங்கு வைத்துக் கொள்ள முடியாது - குழந்தை பிறந்து ஓரிரு வருடங்களுக்கு சப்போர்ட் சிஸ்டம் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது சிரமமாக இருக்கும்  

முகிலன் தினேஷ் : அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு இந்தியா பிடிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பேசினால் குழந்தை வளர்ப்பு என்ற இந்த ப்ளஸ்ஸின் நோக்கம் மாறிவிடும்.  

//இழப்புன்னு பாத்தா, சொந்தங்கள் - தாத்தா பாட்டியின் அருகாமையின்மை சொல்லலாம்.// உண்மை. //நீண்ட நாட்களுக்கு நம்மால் பெற்றோர்களை இங்கு வைத்துக் கொள்ள முடியாது - குழந்தை பிறந்து ஓரிரு வருடங்களுக்கு சப்போர்ட் சிஸ்டம் இல்லாமல் குழந்தையை வளர்ப்பது சிரமமாக இருக்கும்//// சப்போர்ட் சிஸ்டம் இல்லாதது சிரமம் தான். ஆனால் இந்த நாட்டுக்கு ஏற்றபடி வளர்க்க வேண்டுமென்றால் தாத்தா பாட்டி பக்கத்தில் இல்லாமல் இருப்பதே நல்லது.   

Sriram Narayanan: வெண்பூ சொன்னா மாதிரி Positives weigh over negatives. எனக்கு அமெரிக்காவின் கல்வி முறை பிடிச்சிருக்கு சுதந்திரமா சிந்திக்க விடும் வளர்ப்பு முறை பிடிச்சிருக்கு கடிவாளம் போட்ட குதிரை மாதிரி இஞ்சிநியரிங், பொட்டி தட்டி சம்பாதித்தல் இப்படி இல்லாமல், விருப்பப் பாடத்தை படிக்கலாம், எத்துறையில் இருந்தாலும் முன்னேறலாம். Corrupted environment இல்லாமை இப்படி பல
 ***********
Dyno Buoy : கவிதாஜி கலாச்சாரத்தை காக்கணும்னு இங்க பெரிய பாகீரத பிரயத்தனமே நடக்கும். நான் பார்த்தவரை எத்தனைதான் கலாச்சாரத்தை கைகால் கட்டி வாயில் பால் கிண்ணத்தை கொண்டு ஊட்டினாலும் ஹை-ஸ்கூலுக்கு பிறகு அவர்கள் சுயமாய் இருக்கவே விரும்புவர். அமெரிக்காவில் கொஞ்சம் லேட்டாகும். கனடா மற்றும் ஐரோப்பிய நண்பர்கள் அவர்கள் குழந்தைகள் சற்று விரைவாகவே assimilate ஆகிவிடுவதாக கூறுகிறார்கள். காரணம் அமெரிக்க பெற்றோர் அவர்களே அமெரிக்க கலாச்சாரத்திற்கு சற்று லேட்டாகத்தான் அசிமிலேட் ஆகிறார்கள்!

 பாஸ்டனில் இருக்கும் என் உறவினருக்கு மூன்று பெண் குழந்தைகள். கலாச்சாரத்தை அப்படி கட்டிக்காத்த குடும்பம். பாட்டு, இசை, நாட்டியம், வீட்டு பாடம் எல்லாம் வீட்டிற்கு ஆள் வந்து சொல்லிக்கொடுப்பார்கள். ஒரே அவுட் சைட் இன்டராக்‌ஷன் பள்ளி (அவ்வப்போது இந்திய வம்சாவழி நிகழ்ச்சிகள்). அதெல்லாம் அவர்கள் கல்லூரி முடிக்கும்வரைதான். இன்று மூன்று பெண்களில் மூத்தவள் பாஸ்டனிலேயே இருக்கிறார். தன் அப்பா வீட்டில் இருந்து 35 மைல் தொலைவில் பாஸ்டனில் தனி அப்பார்ட்மென்ட். இரண்டாமவள் நியூ யார்க்கில் அதுவும் மான்ஹாட்டனில் தனி அப்பார்ட்மென்ட். மூன்றாவது பெண் படித்துவிட்டு அடுத்த மேற்படிப்பிற்கு வேறு மாநிலம் போக முயற்சித்தாள். அப்பாவின் உடல்நிலைக்காக பாஸ்டனிலேயே இருக்கிறார். இந்த மூவரும் குடும்பத்தினரோடு சேர்ந்து உணவருந்தி ஒன்றரை வருடங்கள் இருக்கும். இதுதான் இங்கு வாழ்க்கை. இதை ஏற்று பழகிக்கொள்ளவேண்டும். 

இதைப்போலவே வீட்டிலேயே அடைத்து வளர்ந்த பெண் நிஜெவில் 18வது வயதில் மூன்று நாள் காணாமல் போன கதை நிஜெ நண்பர்களுக்குத்தெரியும்!

 நாம் என்னதான் கலாச்சாரம் என்றெல்லாம் நினைத்தாலும் இது அவர்கள் கலாச்சாரம் அதை ஏற்று அவர்கள் வாழ நாம்தான் பழக்கிக்கொள்ளவேண்டும்! தியாகப்பிரம்மத்தின் கதை கீதங்களையும், பரதநாட்டியத்தையும், மிருதங்கம் கஜல் எல்லாம் 13-14 வயது வரை சொல்லிக்கொடுத்து பார் எப்படி இந்தியனாய் இருக்கிறான் என்று நண்பர்களிடம் பெருமை பேசலாம். அதன் பிறகு அவர்கள் மாறிவிடுவார்கள். ஸ்போர்ட்ஸ், ஹையர் எஜுகேஷன் என்று அவர்கள் தடம் வேறாகிவிடும். உண்மையில் இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால் அங்கே அந்த குழந்தைகள் வெளியே பழகும் ஆட்களும் அதே கலாச்சாரத்தோடு இருப்பதால் நாமும் மாறிக்கொள்கிறோம். ஆனால் அயல் கலாச்சாரத்தில் வளர்ந்த நமக்கு அது கடினமாகத்தான் இருக்கும்.

 நான் பல முறை யோசித்ததுண்டு. இப்போது தகிரியமாக இங்கே குழந்தைகளோடு வந்து விட்டோம். பிள்ளைகள் எல்லாம் தனியாக போனபின்பு இங்கு இருப்பது கொடுமையானதாகவே இருக்கும். அதற்க்கான தயாரிப்புகளை 40 வயதிலேயே துவங்கிவிடவேண்டும். அல்லது அந்த வயதுடையோர் சேர்ந்து ஒரே இடத்தில் (அல்லது சட்டென்று சென்று மீட் செய்யும் அளவு) செட்டில் ஆக வேண்டும்!

 1. நம் சந்ததியினரால் இல்லாமல் போகும் என்று நினைத்ததுண்டா.. ?
 ஆம், அவர்களை நம் சந்ததியினராய் வளர்க்கவே முடியாது. அதற்க்காக முன்னரே, குறைந்தது 40வது வயதிலேயே தயார் செய்துகொள்ளவேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் கண்டிப்பாக மகனோ மகளே கல்லூரிக்கு செல்லும்முன் ஏதாவது வேலையில் சேர்ந்துவிடுவது நலம். இல்லாவிட்டால் ennui கொன்றேவிடும்!

2. இவற்றை எப்படி சமாளிக்கிறீர்கள், சமாளிப்பது எப்படி என திட்டம் ஏதும் உள்ளதா? குழந்தைகள் 6 வயதிலேயே அவர்களுக்கான தேர்ந்தெடுப்பு உரிமைகளை வழங்கிவிடுங்கள். எமோசனல் ப்ளாக் மெயில் செய்யவே செய்யாதீர்கள் (உம்மாச்சி கண்ணு குத்தும், பாட்டிகிட்ட ஃபோன்ல பேசலை அப்புறம் நின்டென்டோ பிடுங்கிடுவேன்). முடிந்தவரை கலாச்சார விசயங்களை (நாட்டியம் இசை) கற்றுக்கொடுக்கலாம், ஆனால் அவர்கள் அதில் சோர்வு காட்ட ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடுங்கள்.கூடியவரை அவர்களை இந்த கலாச்சாரத்தை அசிமிலேட் செய்ய உதவுங்கள். (பால் கேம், பாஸ்கட் பால் கேம், ஐஸ் ஹாக்கி, மூவி அழைத்து செல்லுங்கள். மற்ற குழந்தைகளுடன் ஸ்லீப் ஓவர், ப்ளே டேட் அரேஞ்ச் செய்யுங்கள்). 

3. குழந்தைகளிடம் (கல்வி, வசதிவாய்ப்புகள் தவிர்த்து) மற்றவற்றில் இந்தியப் பெற்றோரின் நிலை என்ன?   Never force cultural behavior but never give up on discipline. இதான் என் நிலை. 

4. நம் மொழி, கலாசாரம் பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தேவைகள் எந்தளவில் தரமுடிகிறது, தேவையில்லை நம்மோட அது முடியட்டும் என்ற நிலையிலும் இருக்கிறீர்களா?  அவர்கள் நம்மை பார்த்து கற்றுக்கொள்ளட்டும். எதையும் வலிய ஃபோர்ஸ் செய்வதில்லை. வழிபாடு முதல் உணவு வரை கம்ப்ளீட் ஃப்ரீடம். பட் மற்ற விசயங்கள் - நோ வேஸ்டேஜ், நோ லையிங், நோ லேசினெஸ், ஹோம் வர்க் இதிலெல்லாம் எந்த கன்செஷனும் கிடையாது. கலாச்சாரம் பொருத்தவரை நம்மோடு முடிந்தால்கூட பரவால்லை என்ற மனோபாவம் வளர்த்துக்கொண்டேன். Whatever they learn is an added bonus. :)) 

5. பெண் குழந்தைகள் வளர்ப்பு, அந்த நாட்டில் அவர்களின் எதிர்காலம் குறித்த பயம்/கவலை இருக்கிறதா? அமெரிக்க இந்தியர்கள் பலர் தாய்நாடு திரும்ப செல்ல சொல்லும் ஒரு முக்கிய காரணம் "எனக்கு பொம்பளை பிள்ளை இருக்கு, இங்க வளர்க்க முடியாது". ஆனால் என் கண்ணோட்டம் வேறு. இங்கிருப்பதைபோல பெண் சுதந்திரம், கான்பிடன்ஸ் கண்டிப்பாக இந்தியாவில் இல்லை. பல சமயம் அது ஒரு ரேஸிஸ்ட் மென்டாலிட்டி. என் பொண்ணு ஒரு கருப்பரையோ லத்தினோவையோ இழுத்துகிட்டு வந்துடுவாங்கற மனோபாவம் (அதே பணக்கார பேங்கர் ஜூயு, லாயர் இட்டாலியன்ன்னா ப்ரச்சனை இல்லை). I just hate those people and their attitude. ரெண்டு காரணங்கள் - 1. உன் பெண்மேல் உனக்கே நம்பிக்கை இல்லைன்னா உன் வளர்ப்புதான் சரியில்லை, 2. ரேஸிஸ்ட் மன்ப்பான்மையோட இந்த ஊரில் இருப்பதைவிட உன் ஊருக்கு திரும்பபோய் களை எடுத்து பிழை. You are fit to live only in a 3rd world country and hope you stay there ங்கறதுதான் அவர்களுக்கான என் கருத்து. உங்களுக்கு டைரியமான செல்ஃப் ரிலையன்ட் பெண் வேண்டுமானால் முன்னேறிய நாடுகள்தான் தி பெஸ்ட்! 

கவிதா : +Dyno Buoy Nice reply. :) & still //என் பொண்ணு ஒரு கருப்பரையோ லத்தினோவையோ இழுத்துகிட்டு வந்துடுவாங்கற மனோபாவம் (அதே பணக்கார பேங்கர் ஜூயு, லாயர் இட்டாலியன்ன்னா ப்ரச்சனை இல்லை). I just hate those people and their attitude. ரெண்டு காரணங்கள் - 1. உன் பெண்மேல் உனக்கே நம்பிக்கை இல்லைன்னா உன் வளர்ப்புதான் சரியில்லை,//  

ஒரு ஆணோ பெண்ணோ யாரையோ (யாரோவேண்டுமானாலும் இருக்கட்டும்) இழுத்துக்கிட்டு (காதலிப்பது/திருமணம் செய்துக்கொள்வது) வந்துவிடுவது என்பது, வளர்ப்பை சார்த்த ஒரு செயலா? அப்ப, இந்தியாவில் காதலித்து திருமணம் செய்துக்கறவங்களை எல்லாம் சரியா வளர்க்கவில்லையா? இந்த கருத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.


Sriram Narayanan : கவிதா : நீங்க சரியா புரிஞ்சிக்கலை - அமெரிக்க வாழ் இந்தியப் பெற்றோர்களின் பெருங்கவலையே - பெண் கருப்பனை கல்யாணம் பண்ணிக்கிடுவாளோ என்பதுதான், இதைத்தான் பெரிப்ஸ் சாடுகிறார் . வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்லமாட்டான் என்பது இந்தியர்களின் ஆழ்மன நம்பிக்கை



வெண்பூ வெங்கட் : இப்பஅமெரிக்கவாழ் பையனபெத்தங்களுக்கும் அதே மாதிரி லை ந்துடுச்சி.. ம் பையன் ஒரு பொண்ணை ல்யாணம் ண்ணிக்கணுமேன்னு :)))


கவிதா : :)  புரியுது ஸ்ரீ. .ஆனா அதில் வளர்ப்பு சம்பந்தப்படலன்னு நினைக்கிறேன்.....

முகிலன் தினேஷ் :  //  புரியுது ஸ்ரீ. .ஆனா அதில் வளர்ப்பு சம்பந்தப்படலன்னு நினைக்கிறேன்.....//

தன் மகள்/மகன் தேர்ந்தெடுத்த துணை சரியா இருக்காதுன்னு நீ நினைச்சா, உன் மகனையொ மகளையோ சரியாத் தேர்ந்தெடுக்கிற அளவுக்கு நீ வளர்க்கலைன்னு தானே அர்த்தம்? 

Sriram Narayanan : கவிதா, பெரிப்ஸ் சொன்னது : நான் ஒழுங்காத்தான் வளக்கறேன், ஆனா அமெரிக்கா என் பொண்ணை கெடுத்துடும்னு நெனச்சி இந்தியாவை நோக்கி ஓடுபவர்கள் தவறு செய்கிறார்கள் -
. இந்தியாவிலும் நிலை அப்படி ஒன்றும் பாலாறு தேனாறு ஸ்டைலில் இல்லை
. அமெரிக்காவில் வளர்ந்தாலும் ஒழுங்கா வளர்க்கலாம் - அப்படி இல்லாம போன அது பெற்றோரோட தவறுதான்

Dyno Buoy  :  //நாளைக்கு என் புள்ள ஒரு ஃப்ரன்ச்காரிய கல்யாணம் செய்துட்டு வந்தால், நான் அவனை சரியா வளர்க்கலன்னு அர்த்தமாகுமா?;
கவிதாஜி : நான் சரியா சொல்லைன்னு நினைக்கிறேன். இங்க வளர்ர குழந்தைகளுக்கு அரேஞ்ச்ட் மேரேஜ் செய்யணும்னு எண்ணமிருந்தா இன்னிக்கே ப்ளைட் புக் பண்ணிடணும். :)))  நான் சொன்னது குழந்தையை நம்பிக்கை இல்லாம வையாதீங்க, அப்படி எந்த தப்புன்னு நீங்க நினைச்சாலும் அதுக்கு நீங்களே பொறுப்பேத்துக்கிடணும்னுதான். என்னைப்பொருத்தவரை அவிங்க திருமணம் பர்சனல் வாழ்க்கையில் நாம தலையிடவேக்கூடாது (அவர்களே கேட்டால் கூட)!
 ******** 

விவாதம் தொடரும்...... 1/2