பெண்ணின் நிர்வாணம் அழகு " என்ற பதிவை எழுதுவதற்கு காரணமான, அந்தக் காணொளியைப் பார்க்க நேர்ந்தது தான் முதல் தரம். அதிலிருந்து வெளிவர 3-4 நாட்கள் ஆகின. பின்னர் நண்பரிடம் பேசும் போது, பெண்கள்,குழந்தைகளை மட்டுமே பார்க்கிறீர்கள், வயதானவர்கள், நோயாளிகள் என எல்லோருமே போரிலிருந்து காக்கப்பட வேண்டியவர்கள் என்றார். பெண்களைத் தவிர்த்து மற்றவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன்.  போர்க்காலத்தில் ரத்தமும், பிணங்களும் சகஜமே என்றாலும், கதை சொல்லி கேட்டும், சரித்திரத்தில் படித்தும் தான் தெரிந்துகொண்டு இருக்கிறேன். காணொளிகளைப் பார்த்து, நானே அங்கிருப்பது போல உணர்வது இணையத்தின் உதவியால்...

அடுத்து, உ.த கூகுள் பஸ்ஸில் ஒரு காணொளியைப் பகிர்ந்தார். கடவுளே, அதைவிட கொடுமையை இனி என் வாழ்நாளில் பார்க்க வாய்ப்பிருக்காது, இது தான் முற்று,  எல்லை என முடிவுக்கு வருமளவுக்கு இருந்தது. பெண் போராளிகள் துன்பறுத்தப்பட்டு, கொல்லப்பட்டு, பெண் பிணங்களை, "நல்ல வடிவு" என இழுத்துக்கொண்டு சென்ற காட்சியைப் பார்த்தே, மனம் பதறிப்போனது. உடனே  நிதானம் இழந்து உடல் நடுக்கத்தோடு தப்பும் தவறுமாக எழுதினேன். ஆனால் அதற்கு பின் பார்த்ததை எழுத வார்த்தைகள் இல்லை, இப்போது நினைத்துக்கொண்டாலும், சகலமும் ஒடுங்கிப்போகிறது.. அந்தக் காணொளியில் நான் கண்டது.. 

கர்ப்பமான ஒரு பெண் கொல்லப்பட்டு, அவள் வயிற்றில், கிழிந்த ஒரு துவாரத்தின் வழியாக, உள்ளே இறந்துபோன சிசுவின் ஒரு கை வெளியே வந்துத் தொங்கிக் கொண்டு இருந்தது.  கடவுளே, இந்தக் காட்சியைப் பார்த்தபின், இதற்கு மேலும், மோசமான ஒரு காட்சியே இனி பார்க்கவேண்டியதில்லை என நினைக்க வைத்தது. இதற்குப்பின், பெண்ணின் கற்பும், துன்புறுத்தல்களும், அவளின் உடல் பற்றிய பிரஞ்ஞையும் இல்லாமலே போனது." கில்லிங் ஃபீல்ட்ஸ்' வீடியோவில் குழந்தை கொல்லப்பட்ட காட்சி, புலிகளை மட்டுமல்ல, தமிழினத்தையே வேரோடு அறுத்து எரிய வேண்டுமென்ற வெறி அந்த அரக்கர்களிடம் இருப்பதை தெளிவாக்கியுள்ளது. .  

ஆமாம், அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரி என ஏற்றுக்கொள்ளும் நிர்பந்தத்தில் நாம்(இந்தியா) இருக்கிறோம். ஈராக்கோடு போர் தொடுத்து, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் அழித்து, அமெரிக்காக்காரன் செய்யாத குற்றங்களா? அங்கு, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்போடு தான் இருந்தார்களா? மனித சடலங்களே இல்லாத, எதையுமே அழிக்காத ஒரு போராகத்தான் அது இருந்ததா? சதாம் ஹூசைன் என்ற மாவீரன் ஏன் தூக்கிலிடப்பட்டார் ? ஈராக் போரில், அமெரிக்கா போர் குற்றமே செய்யவில்லையா? பின்லேடன் + குழு விசாரனையின்றி ஏன் கொல்லப்பட்டார்கள்? ஆக, அமெரிக்காக்காரன் எது செய்தாலும் அது சரியே ! உலகத்தை அவன் கையில் கொண்டுவர வேண்டும் என்ற திமிரும், அவனை வீழ்த்த யாருமில்லை என்ற மதப்பும் இருப்பதில், எப்போதும் குரலையும், கையையும் ஓங்கிக்காட்டிக்கொண்டு  இருக்கிறான். இவனோ வேற்று நாட்டு போர்க்குற்றங்களைப் படம் பிடித்து க்காட்டி, அதை ஐ.நா வாக்கெடுப்பில் வெற்றிப்பெற செய்து இருப்பதை, நமக்கு சாதகமான ஒரு நிலைபாடாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ராஜதந்திரமாக எதற்கோ உள்நோக்கத்தோடு அடிப்போடுகிறான் என்றே நினைக்க முடிகிறது. 

நிற்க, ஐ.நா இலங்கை போர்குற்றத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகள் அனைத்தும்,அநேகமாக அமெரிக்காவுக்கு எதிரானவை. இந்தியாவோ, தலையெழுத்தே என பத்தோடு பதினொன்னாக வாக்களித்திருக்கிறது என்பதற்கு மேலாக, எப்போதும் அமெரிக்காவுக்கு சொம்பு தூக்குவதால், இதை செய்ய வேண்டிய காட்டயத்தில் இருக்கிறது. அமெரிக்காகாரன் எதிர்காலத்தில் தரப்போகும் பிரச்சனைகள் என்னவென்றே தெரியாத ஒரு சூழலில், நாமோ உணர்ச்சிவசப்பட்டு நம் நாட்டுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறோம், அமெரிக்காக்காரனைப் பாராட்டுகிறோம். தமிழின மக்களுக்காகவோ, அவர்களின் எதிர்கால நல்வாழ்வுக்காகவோ, அமெரிக்காகாரன் இதை நிச்சயமாக செய்யவில்லை.  இந்த வாக்கெடுப்பைக் கணக்கில் கொண்டு நாம், ஏதேனும் நல்லது நடக்கும் என நம்பினால், தமிழனின் நெற்றியில் பெரிய நாமம்...இல்லையில்லை, மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி வேடிக்கை பார்க்கும் அமெரிக்கா கூடவே சொம்பு தூக்கும் இந்தியா.   

Mr.Dynobuoy கூகுள் +ல இருந்து பகிர்கிறேன். நன்றி Mr.Dyno...

ஐ.நா தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்:

1. ஐநாவின் பங்களிப்பு இருப்பதால் கொஞ்சமேனும் பக்க சார்பு இல்லாத உண்மையான விசாரிப்புகள் வெளிவர'லாம்.

2. சேனல் 4ல் வெளியான விடியோவின் சாரம் பொதுமக்கள் இலங்கை அரச படைகளால் தாக்கப்பட்டனர். அதே சமயம் புலிகள் மக்களை கேடயமாக உபயோகித்தனர். இதை பற்றிய உண்மை தகவல்கள் வெளிவரலாம். போர் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட மேலும் பல விடியோக்கள் போர்வீரர்கள் கையிலும் பொது மக்கள் கையிலும் சிக்கி உள்ளது. தற்போதைய லங்கா ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் / ஜர்னலிஸ்ட்டுகளிடம் இருக்கும் அந்த விடியோக்கள் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கலாம். மீதம் இருக்கும் புலிகளின் கிளைகள் வேர் அறுக்கப்படலாம். புலிகளின் பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும் அதை அரசாங்கம் களவாண்டதா என்பதும் தெரியவரும்.

3. புலிகளுக்கு யார் ஆயுதங்களைக் கொடுத்தார்கள்/விற்றார்கள், லங்கா அரசுக்கு யார் ஆயுதங்கள் வழங்கினார்கள் என்பது விசாரணையில் தெரிய வரும். (இந்தியாவின் அண்டர் டாயர் அங்கு கிழிபடலாம்). சீனா புலிகளுக்கும், லங்கா அரசுக்கும் ஆயுதங்கள் விநியோகித்ததும் தெரிய வரலாம். லங்கா அரசுக்கு மத்தியகிழக்கு நாடுகளுடன் இருக்கும் தொடர்பு வெளிவரலாம்!

4. இதன் மூலம் லங்கா அரசப்படைகள் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தவறியதாக நிருபிக்கப்படலாம். அவ்வாறு நேரும் பட்சத்தில் தமிழர்களுக்குத் தங்களை சுயாட்சியாக ஆளும் அதிகாரம் வழங்கப்படலாம். சுயாட்சியான மாகாணம்/ஆட்சி அமையும் வரை ஐநா பாதுகாப்புப்படை அங்கேயே இருக்கலாம். தமிழர்களுக்கு பாதுகாப்பு, அதே வேளை சுயாட்சியாக ஒரு மாகாணமாவது கிடைக்க இதைத்தவிர வேறு அறவழிகள் இன்று இல்லை!


5. தனி மாகாணம் கிடைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் இன ஒழிப்புகளிலும் அக்கிரமிப்பில் இருந்தாகிலும் எஞ்சி உள்ளோர் தப்பி புணர்வாழ்வு அமைக்க இதை தவிர வேறு வழிகள் இல்லை!

இதில் டைனோ, பயன் என்று சொல்லப்பட்டவை எல்லாமே "..லாம்" என்றே முடித்திருக்கிறார். இந்த லாம்.'.. நடக்க'லாம், நடக்காமலும் போகலாம்... எதுவுமே நடக்கும் என உறுதியாக சொல்லமுடியாது. இப்படி உறதியில்லாத ஒரு விசயத்தை நம்பி, அமெரிக்காவிற்கு ஜல்லி அடித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சனம், இருப்பினும், ஒரு வேளை நல்லது நடந்தால்.........  காலம் மட்டுமே பதில் சொல்லும்..எதுவும் அதுவரை நிரந்தரமல்ல..

அணில் குட்டி : கவி, ஃப்ரம் ஹார்ட் சொல்றேன்... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை, இட்லி குஷ்பூவுக்கு பதிலா, ஐ.நாவில் பேச உங்களை அனுப்பி இருக்கலாம், அமெரிக்காக்காரன் துண்ட காணோம் துணியக்காணோம்னு ஓடியே போயி இருப்பான், இந்தியானாவே அவனுக்கு ஒரு இது...... ........ எது????? அட அதான் ஒரு இது....... ....வந்து இருக்கும்.... ம்ஹூஉம்ம்.....ஜஸ்ட்டு மிஸ்ஸூ.... 
என்ன மக்கா சொல்றீங்க? ! (ஏய் யாரும் சிரிக்க க்கூடாது இது சீரியஸ் குவஸ்டீனு:)))) ) (கிக்கி.. கிக்கி. கிக்கி...... இது கவி'க்கு தெரியாம பின்னாடி திரும்பி நின்னு சிரிச்சது.... :))))))))))) )

பீட்டர் தாத்ஸ் : Man has no right to kill his brother. It is no excuse that he does so in uniform: he only adds the infamy of servitude to the crime of murder.