<=  கடலூர் - (மருதாடு கிராமம் செல்லும் சாலை) தானே' க்கு முன்
தானே' க்கு பின் அதே சாலை =>

தானே ' புயலின் தாக்கத்தை ரொம்ப லேட்டாகத்தான் பார்க்கமுடிந்தது. இருந்தாலும், மனிதர்களை பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால் மரங்கள், நிலங்கள் என, தானே' வின் ஆட்டம் ரொம்பவே அதிகம். 

குறிப்பாக தென்னை மரங்கள் இனி காய்கள் கொடுக்குமா என தெரியவில்லை. பண்ரூட்டி பக்கம் முக்கிய விவசாயம், வியாபாரம் முந்திரி மற்றும் பலாப்பழம். இந்த வருடம் மட்டுமில்லை, புயலில் அழிந்த முந்திரி தோப்புகள் திரும்ப அப்படியே கிடைக்க இன்னும் 10 வருடம் உழைக்க வேண்டி இருக்குமாம். 10 வருடத்திற்கு அதை நம்பியவர்களின் சாப்பாட்டுக்கு வழி?.

தானே வந்து போனது மொத்தமே 10 மணி நேரம். ஆனால் அதன் விளைவுகள் பல ஆண்டுகள் தொடரும்.. நிலை... :(
 
   





ஒரு நாளைக்கு பயிர் அறுவடை செய்ய 70ரூ கூலியாம், ஒரு பெண் 2 ஆள் வேலைய செய்வாங்களாம். ஒரு நாளைக்கு 4 ஏக்கரா முடிப்பாங்களாம் . 
ஒரு  ஏக்கரா = 43560 Sq Ft.  ஒரு நாளைக்கு ஒரு பெண் 4 ஏக்கராவிற்கு 140 ரூ சம்பளம் மட்டுமே வாங்கறாங்க. :(((         =>
விபரம் சொன்னது ரோஸ் கலர் புடவையம்மா.             

காற்றில் தென்னைமரம் அப்படி இருப்பதாக நினைக்கவேண்டாம். பாண்டிச்சேரி தொடக்கத்திலிருந்து, கடலூர் மாவட்டம் முழுக்க அத்தனை தென்னை மரங்களும், மேற்கு நோக்கி திரும்பி, தன் நிலைகுலைந்து, நிற்கின்றன.  இவற்றில் திரும்ப, காய்கள் வருமா என காத்திருந்து தான் பார்க்கவேண்டும் என சொல்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள்.  :( 



<=  இந்த (டேரியா) பூவை தலையில் வைத்து 25 வருடங்களுக்கு மேலாகவே இருக்கும், பள்ளிக்காலங்களில், கலர் கலராக தேடி தேடி எடுப்பேன்.  பிறகு விருப்பம் வாசனை பூக்கள் மட்டுமே வைப்பது என மாறிய ப்பிறகு இந்த பூவை வைப்பதே இல்லை, கிடைப்பதும் இல்லை. திருமண வீட்டில் மாமியார் வீட்டு மக்கள் கொடுத்ததால், எதுவும் சொல்லாமல் வைத்துக்கொண்டேன். :))

   இனி வருங்காலம் இப்படித்தான்  இருக்கும். இதுவே நிரந்தரம். =>


மரங்கொத்தி ????  மிக அருகில் சென்று போட்டோ எடுத்தும் பறக்கவேயில்ல.. .


<=   இந்த அம்மாவுக்கும் ஒரு நாளைக்கு அதே ரூ.70 கூலி.  நாள் பூராவும் வெயில்ல வேல செய்யனும்.