நவீன் : ஏன்ப்பா இவ்ளோ கஷ்டப்படறீங்க, நம்ம வீட்டு ஃபோட்டோகிராபர் கிட்ட கேளுங்க .. அவங்க சொல்ற இடத்தில் நின்னு எடுத்தா..நல்லா வரும்.

போட்டோ எல்லாம் எடுத்து முடிந்து, நவீன் தோழி என்னிடம் தனியாக...


நவீன் தோழி : ஆன்ட்டி, நீங்க என்ன வேல பார்க்கறீங்க

கவி : அட்மின் & ஹெச் ஆர்

நவீன் தோழி : ஹோ..ரியிலி...பட்,  நீங்க பெரிய ஃபோட்டோகிராபரா ஆன்ட்டி.. உங்களுக்கு ஃபோட்டோகிராஃபிதான் பேஷனா ஆன்ட்டி.........

கவி : அவ்வ்வ்வ்.... .. (அசிங்கப்பட்டாடா ஆட்டோக்காரி )
 
********

கவி : ப்பா.. இன்னைக்காச்சும் பேப்பரை கடையில் போட்டுடுங்க..

பழம்நீ: நிறுத்து................. அத்தோட நிறுத்து........  போடறேன்...

கவி :  (கடுப்பாக.) ம்க்கும் இப்படிதான் வார வாரம் சொல்றீங்க.. ஒரு மாசத்துக்கு மேல அப்படியே கிடக்கு.. நான் போட்டுடவா?

பழம்நீ: வேணாம். ஒரு மாசம் தானே ஆச்சி.. கிடக்கட்டும். அதை அதை வருசக்கணக்கா என்ன செய்யறதுன்னே தெரியாம இந்த வீட்டுல வச்சி இருக்கேனில்ல.. இது கிடந்தா பரவாயில்லை..
 
கவி: ஆங்.. ...... 

***********

நவீன் : அம்மா, உன் முகத்தில கண்ணு தாம்ம்மா இருக்கு.. எவ்ளாம் பெரிய கண்ணு....

கவி : :) :)

பழம்நீ: உன் முகத்தில மூக்கும் , கண்ணும் தாண்டி இருக்கு..

கவி : அய்யய்ய .. .. என்ன சும்மா எப்பப்பாத்தாலும் கண்ணு இருக்கு மூக்கு இருக்குன்னு..முகத்தில் வேற என்ன இருக்குமாம்?

பழம்நீ : முகம் இருக்கனும்டீ...

கவி: ஞே... ! 

*************

கவி : வாவ்.. .என்னா சூப்பரா இருக்கு சாம்பார். . ஆனாலும் உங்க பொண்டாட்டி சமைக்கிற சாம்பார் சூப்பர்ர்ர்ர்ராஆஆ இருக்கு... என்னா டேஸ்ட் என்னா டேஸ்ட்

பழம்நீ - ஆமாம்மா என் பொண்டாட்டி ஒரு சாம்பார்..... அவ புள்ள சாம்பாரோ சாம்பார்... 

கவி: .. :((((       சாம்பார் ரொம்ப பிடிக்கும்னு சாப்பிட்டா... அவங்க எல்லாம் சாம்பாரா..?

பழம்நீ : நேராவே சொல்லியும் கேள்வி கேக்கும் போதே தெரியல...

கவி : .......அவ்வ்வ்...

**********

(காலை 6 மணி)

கவி : ப்பா... இன்னைக்கு என்ன டிபன் செய்யட்டும் ?

பழம்நீ: பிட்ஸா

கவி : அவ்வ்.... பிட்ஸா செய்ய நோ Base . (காலங்காத்தால என்ன கொடுமைடா இது)

பழம்நீ: மக்ரோனி

கவி : நான் வாங்கல

பழம்நீ : ம்ம்ம் ....அந்த இத்தாலி ஃபுட்...... பாஸ்தா...

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அதெல்லாம் நான் வாங்கறது இல்லப்பா.. 

பழம்நீ - பர்கர் ...

கவி :  யப்பாஆஆஆ ....... என்ன டிபன் செய்யட்டும்னு சொல்லித்தொலைங்க.. இத்தாலி, அமெரிக்கா, அண்டார்ட்டிக்கான்னுக்கிட்டு

பழம்நீ : ஏய் நீ எப்பேர்ப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்டி... பொறுப்பா என்ன டிபன் வேணும்னு கேட்டுட்டு போயி, அதை தவிர்த்து மத்ததை செய்ய போற.. எத்தனையோ  தரம் பாத்தாச்சு... போடி போ.. .  உன் இஷ்டத்துக்கு எதையாது செய்துக்கோ.... 

கவி : :((((((  (என்ன இவ்ளோ சீக்கிரம் தெளிவா ஆகிட்டாரு?)

***********

கவி :  ப்பாஆஆஆஆ   எத்தனை நாளா சொல்றேன், வலது கண் அடிச்சிக்கிட்டே இருக்கு. இப்படி தொடர்ந்து அடிச்சதே இல்லை. எதாச்சும் செய்ங்கப்பா எரிச்சல் எரிச்சலா இருக்கு... :(

பழம்நீ: ( என் எதிரில் வந்து நின்று ) உன்னோட வலது கைய அந்த கண்ணுக்கு நேரா கொண்டு வா ....

கவி : ம்ம்... ஆச்சி..அப்புறம் ???

பழம்நீ : இப்ப.. உன்னை இத்தனை நாளா அடிக்கற அந்த கண்ணை, நீ உன் வலது கையால திருப்பி அடி......

கவி : ஆங்க்.... :((

*********

பழம்நீ : என்னடி இது? :((( (செம கடுப்பில்)

கவி : ஹி ஹி..அதுவா சேமியா புட்டு. அணில் சேமியாவில் தானே செய்வேன். ஆனா ஒரு சேஞ்சுக்கு பேம்பினோவில் ட்ரை பண்ணலாம்னு பார்த்தா ............ஸ்ஸ்ஸ் இப்படி வந்துடுத்துப்பா...... எஸ்க்யூஸ்மீ...  :) 

பழம்நீ : (அதே கடுப்பில்)  எப்பிட்ரீ இதை சாப்பிடறது... ?

கவி : கையாலதாம்ப்பா...

பழம்நீ : கிர்ர்ர்ர்ர்ர்...........

*************

கவி : (ரொம்ப மும்மரமாக இரவு 9.30 மணிக்கு மேல் அலுவல் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவரை)  ப்பா.. .இங்க வாங்களேன் உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லனும், ரொம்ப முக்கியம். .இப்ப சொல்லாட்டி மறந்துடுவேன்...

பழம்நீ : (எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்து) ........ ம்ம் சொல்லு...

கவி : இல்ல எனக்கு தூக்கம் தூக்கமா வருதா... நான் தூங்கறதை யாராச்சும் வேடிக்கை பார்த்தா நல்லா இருக்கும்னு தோணிச்சி அதான் கூப்பிட்டிட்டேன். ... எதிர் ல உக்காந்து கொஞ்சம் வேடிக்கை பார்க்கறீங்களா?

பழம்நீ : அடி.. #@$#%$@$#^%  . .எவண்டி உன்னை எல்லாம் பெத்தது.. ?! :(((

கவி : :)))))))))  ஹி ஹி.. எங்கப்பா ன்னு சொல்லமாட்டேனே. .அவரு ஆம்பளையாச்சே அவராலே பெத்துக்க முடியாதே.... :)))

பழம்நீ:  அட ஆண்டவா இன்னும் எத்தனை வருசத்துக்கோ......இதெல்லாம்.... .

கவி :...... :)))))))))

************

கவி : அப்பா கார்ட் வச்சி இருக்கியாடா... ?

நவீன் : இல்லம்மா.

கவி : கவர்மென்டு ஆபிஸ் போனால் டக்குன்னு அப்பா கார்ட்டை எடுத்து க்காட்டு, அவரை யாரும் மதிக்க மாட்டாங்க. .ஆனா அவர் கார்ட்டை காட்டின்னா கொஞ்சமாச்சும் மரியாதையா பதில் சொல்லுவாங்க..

பழம்நீ: மவளே ஆனாலும், உனக்கு இருக்க திமுரு இந்த உலகத்தில் வேற யாருக்கும் இருக்காதுடி...

கவி : ஹி ஹி.. தாங்ஸ் ஆபிசர்.. :)))

************

நவீன் : ஏன் உன் மூஞ்சி சைஸ் க்கு கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்க

கவி : சன் லைட் அலர்ஜிடா... கண்ணுல   தண்ணி தண்ணியா வருதுடா..... அதான்..

நவீன் : நொள்ளக்கண்ணு ன்னு நேரா சொல்லேன்.. ..ரொம்ம்ம்ம்ம்ப பில்டப் கொடுக்கற.. ..

கவி : கிர்ர்ர்ர்ர். !  (சன் க்ளாஸ் போடறது ஒரு குத்தமாய்யா?)

***********

அணில் குட்டி : துப்பின கதை எல்லாம் வெளிய வரக்காணோம்... ???

பீட்டர் தாத்ஸ் : Other things may change us, but we start and end with family”