........நம்மை ஆச்சரியப்பட வைத்துவிடுகிறார்கள். அவர்களை பற்றிய எண்ணங்கள் சில பல நாட்கள் நம்மைவிட்டு நீங்குவதில்லை.. அப்படி ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன்.

அலுவலகத்திற்கு, காசோலை வாங்க வந்தவர், காசோலையை பெற்றுக்கொண்டு, அதை பையில் வைத்தபடி என்னைப்பார்த்துக்கொண்டே இருந்தார். ஏதோ சொல்ல போகிறார், அல்லது ஏதோ கேட்கப்போகிறார் என எதிர்பார்த்து அவ்வப்போது பார்வையை அவர் மேல் செலுத்தியும், என் வேலையையும் பார்த்தபடி இருந்தேன். நினைத்தபடியே

"மேடம்... இதெல்லாம் கொஞ்சம் பார்க்கறீங்களா?"

பையில் இருந்து பட்டாம்பூச்சி, பச்சைக்கிளி சிறிய முதல் பெரிய படங்கள் அடங்கிய குளிர் சாதனப்பெட்டி மற்றும் சுவர்களில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்கள் அவை.

"கொடுங்க பார்க்கலாம்..." வாங்கிப்பார்த்தவாரே, சற்றே ஆச்சரியத்துடன். .இதெல்லாம் எப்படி உங்கக்கிட்ட...?? என்ன விதமான வியாபாரம் இது புரியல...

"எனக்கு வீடு அரக்கோணம் மேடம், எங்க ஆபிஸ் அட்ரஸ் தான் தெரியுமே உங்களுக்கு, ஸ்பென்ஸர்ஸ் ல வேல, அங்க இருந்து ரயில் ல வர போக வர 3 மணி நேரம் செலவாகும். இதில் ரயில் வரைக்குமே போக வர இரண்டு மணி நேரத்துக்கு மேல செலவிட வேண்டி இருக்கு. ரயிலில் சும்மா உட்கார்ந்து இருக்கும் நேரம் இதை வித்துடுவேன்... " சிரிக்கிறார்.

(அட? எப்படி இப்படி எல்லாம்ம்ம்ம்ம்ம்... )

"நல்ல ஐடியாங்க.. இதெல்லாம் நல்லா விற்குமாங்க ?"

"வித்துடும் மேடம்.... நிறைய வாங்கறாங்க.. பேமென்ட் வாங்கப்போற இடத்தில் கூட சில சமயம் வியாபாரம் ஆகும் மேடம்.."

"ம்ம்ம்...அதான் தெரியுதே... சரி வாங்கிக்கிறேன்... எவ்ளோ ?

"25 ரூபாய் மேடம்"

" :))))) விலை அதிகம்... கவரை விட்டு எடுக்கும் போதே பட்டாம்பூச்சி தனித்தனியா வந்துடும் போல இருக்கே.. ....(குத்து மதிப்பாக சொன்னேன்) "

"தனியா வந்துட்டா லைட்டா ஃபெவி ஸ்டிக் தடவி ஒட்டிடுங்க.. வேற ஒன்னும் ஆகாது மேடம்.. நல்லா இருக்கும் மேடம்"

"அப்ப ஃபெவி ஸ்டிக்'க்கு யாரு காசு தருவா?"

"20 ரூ தாங்க மேடம்..."

"ம்ம்ம்ம் குட்"

அதிகம் பேசாமல் டக்கென்று பேரத்தை முடித்து, பணத்தை வாங்கிக்கொண்டும் கிளம்பிவிட்டார். ஒரு தனியார் ட்ராவல்ஸில், "ஆபிஸ் பாய்" ஆக வேலை செய்யும் இவர்,வருமானத்திற்கு தன் பயண நேரத்தையும் பயன் படுத்திக்கொள்வது ...

நம்மில் பலர் பயண நேரங்களில் செய்யும் வேலை.. பேச்சு,தொலைபேசியில் மணிக்காக பேச்சு, அதைவிட்டால் ஒருவரோடு ஒருவர் அக்கம் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து கேவலமான சண்டை. .அதையும் விட்டால் தூக்கம், இப்ப அதிகமாக பார்ப்பது காதில் ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்பது..

தேவை என்ற ஒன்றும் இதில் அடங்கி இருக்கிறது. தேவை என்பது இங்கு பணம் மட்டுமே இல்லை. பணத்தை தாண்டி அந்த பயண நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த அவருக்கு தோன்றி இருக்கிறது. அதையுமே ஒரு தேவையாக (தேடலாக) எடுத்துக்கொள்ளலாம்.

நம் தேவைகள் பேசவதிலும், பாட்டுக்கேட்கபதிலும் முடிந்து போகிறது..... . :(

அணில் குட்டி : ஹி ஹி ஹி.... மனசாட்சியே இல்லாம பேசறதுல யாருக்காச்சும் அவார்டு கொடுக்கனும்னா அது அம்மணிக்கு தான்... கடைசி வரிய படிங்க.. அதை மட்டும் தான் இவங்க செய்யறாங்க...

பீட்டர் தாத்ஸ் :

It’s not enough to be busy, so are the ants. The question is, what are we busy about?

Ordinary people think merely of spending time. Great people think of using it.

Time = life; therefore, waste your time and waste of your life, or master your time and master your life.

Time is the school in which we learn, time is the fire in which we burn.

Better three hours too soon, than one minute too late.
- William Shakespeare