பேரூந்த நிறுத்தத்தில் தினம் வரும் இவருக்கு கண்கள் தெரியாது., சத்தத்தை வைத்தே பஸ் நிற்கும் இடம் நோக்கி சென்று, இறங்குமிடம் கேட்டு, ஏறுவார். சில சமயங்களில் உதவி இருக்கிறேன். ஆனால் இவரின் தன்னம்பிக்கை - ?! தினம் பிரம்மிக்கும் விஷயம்....
 ஜவுளிக்கடை பொம்மைக்கூட கட்டுதம்மா பட்டுசேலை... 
 குண்டு மல்லிகைப்பூ -ன்னு சொன்னால் நம்பனும் ! (ரோஜாவென்று நினைத்தே வாங்கினேன்.. அலுவலக நண்பர் கொடுத்தது)
 என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த இந்த ஆயா, என்னை த்தூங்கவிடாமல் ரம்பம் போட்டுவிட்டு, தூங்கறதை பாருங்க..
 திருப்பதியில் என் முன்னே சென்ற ஆந்திரா பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்... சூப்பர் டிசைன்ஸ்.. கிராமங்களிலிருந்து கண்டெடுக்கவேண்டியவை..
 அவருடன் வந்த இன்னொரு பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்...
அலுவலகம் போகும் வழியில், நேற்றைய மழையில் வேரோடு சாய்ந்தவிட்ட மரம்.

*  Mobile photos.