ஏழாம் அறிவு - Movie Review by Naveen !


Movie Review: 7aam Arivu

7aam Arivu was one of the most anticipated movies of the year, directed by A.R.Murugadoss.

For the first half hour It starts off well exploring the Pallava dynasty around Kanchipuram 1600 years ago which was rich in medicine and martial arts at that point of time. It is here where we first meet Bodhi Dharmar (Suriya) a Pallava Prince who travels to China under his mothers instructions to spread his knowledge on medicine and martial arts. It takes him 3 years to finally reach China where an interesting life awaits him.

The present day portrays Suriya as Aravind a circus worker who hails from Kanchipuram himself. He is casual, playful and mindlessly falls in love with Subha Srinivasan (Shruti) a geneticist. Shruti does a good job as a geneticist but her Tamil accent is horrible at the least.

The first half of the film leads you to expect something big in the second half. But it all goes downhill from there. Operation red was a downright joke and the dialogues that explain it will tickle your funny bone rather than explain the plot and the way our protagonists deal with a national crisis makes you think "Dude! I have more brains than that!!!!". Realism is as rare as a Strawberry Tiger and logic goes right out the window in the second half where disappointment takes a major share among all the other feelings the film gives you.

The villan Dong Lee (Johnny Tri Nguyen) is one of the plus's of the film plays the role of a martial arts expert who can control minds. Believe it or not Dong lee actually gets more whistle's and claps than Suriya does.

Harris's Music generally aids the story line and adds a bit of spice to it but here it disrupts the plot and creates a sense of irritation. Removing the music would have helped the plot a bit.

Overall 7aam Arivu starts off well enough and ends with a large dose of disappointment. 

Would I watch it again? I dont think so.

By
Naveen



Kavitha;s Note : OMG ... This is the first Review & Writeup from Naveen in my blog !  I am so excited to post this. I felt that he could write well & now guess he proved.   Wish You All The Very Best Baby ! I Love You !

க்ளிக்....க்ளிக்....க்ளிக்..

 பேரூந்த நிறுத்தத்தில் தினம் வரும் இவருக்கு கண்கள் தெரியாது., சத்தத்தை வைத்தே பஸ் நிற்கும் இடம் நோக்கி சென்று, இறங்குமிடம் கேட்டு, ஏறுவார். சில சமயங்களில் உதவி இருக்கிறேன். ஆனால் இவரின் தன்னம்பிக்கை - ?! தினம் பிரம்மிக்கும் விஷயம்....
 ஜவுளிக்கடை பொம்மைக்கூட கட்டுதம்மா பட்டுசேலை... 
 குண்டு மல்லிகைப்பூ -ன்னு சொன்னால் நம்பனும் ! (ரோஜாவென்று நினைத்தே வாங்கினேன்.. அலுவலக நண்பர் கொடுத்தது)
 என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த இந்த ஆயா, என்னை த்தூங்கவிடாமல் ரம்பம் போட்டுவிட்டு, தூங்கறதை பாருங்க..
 திருப்பதியில் என் முன்னே சென்ற ஆந்திரா பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்... சூப்பர் டிசைன்ஸ்.. கிராமங்களிலிருந்து கண்டெடுக்கவேண்டியவை..
 அவருடன் வந்த இன்னொரு பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்...
அலுவலகம் போகும் வழியில், நேற்றைய மழையில் வேரோடு சாய்ந்தவிட்ட மரம்.

*  Mobile photos.

NRI கொசுத்தொல்லைகள்

ஆன்சைட்’க்கு ஒரு மாசமோ,  இரண்டு மாசமோ  இல்ல ஒரு வருசம்னே வச்சிக்கோங்களேன், அமெரிக்கா போவாங்க. ஆனா வந்தப்பிறகு இவங்க பண்ற அலும்பு இருக்கே. இதுல அங்கவே செட்டில் ஆகிற நம்ம மக்கள் போடற சீன் இருக்கே ஸ்ஸ்யப்பா முடியாது.

* ஏதோ 3-4 வருஷத்துக்கு ஒரு தரம் வாராங்களே, நம்ம சொந்தமாச்சே, நமக்கு இருக்க வேலைகளுக்கு நடுவில்  இப்ப பார்க்காட்டா  இதுக்கு அப்புறம் எப்ப பார்க்க முடியுமோன்னு, இவங்களை அதுவும் சென்னை ட்ராஃபிக்ல அடி உதை குத்து எல்லாம் வாங்கி பார்க்கப்போனால்.. என்னமோ இவங்கக்கிட்ட நாம் ஒன்னுமே இல்லாம பிச்ச எடுக்க வந்த ரேஞ்சிக்கு பேச ஆரம்பிப்பாங்க... ”கவிதா , வரும் போது நிறைய க்கொண்டு வந்தேன்.. ஆனா பாரு நீ வரத்துக்குள்ள எல்லாம் காலியா போச்சி, அடுத்த முறை வரும் போது எடுத்துக்கிட்டு வரேன்”

இல்ல நாங்க கேட்டோமா? கேக்காமயே ஏன் இந்த பில்டப்பூ?   என்னமோ இவங்க கொண்டு வந்து கொடுக்கற 4 ரூ சோப்பும், 10 ரூ செண்டும் இல்லாம நம்ம வாழ்க்கையை ஓட்டவே முடியாதுப்பாரு...?!  தெரியாமத்தான் கேக்கறேன்.. நீங்க எல்லாம் அமெரிக்கா போயிட்டா இந்தியாவே பிச்சை எடுக்குதுன்னு நினைச்சிக்குவீங்களா?

* அமெரிக்கா போயிட்டு வந்தாவே பீட்டரே தனி பீட்டர்த்தான்.. . இங்க இருக்கவரைக்கும் தெருவை ரோடு ந்னு சொல்றவங்க அங்கப்போயிட்டு வந்தா பார்க்கனுமே.. “லேன்” ந்னு சொல்லுவாங்க..இந்த ஊர்ல எங்க "லேன்" இருக்கு?  இது பரவாயில்லை,   வார்த்தைக்கு வார்த்த பிரிஃபிக்ஸ் ஆக "ஆசம்...ஆசம்" ன்னு சேர்த்துக்கிட்டு படம் காட்டுவாங்கு... பாருங்க..

அவங்க "ஆசம்" ன்னு சொல்லும் போது.. "ச்சீ.... நீங்க ரொம்ப "மோசம்" ன்னு   காது "சோசம்" ஆகிற அளவு விளாசனும் போல இருக்கும்......... 

* அடுத்து, பார்க்கும் எல்லாத்தையும் அமெரிக்காவோட ஒப்பிட்டு பேசுவாங்க.. பாருங்க. .அப்படியே கொமட்டுலேயே குத்தனும் போல இருக்கும். ! அங்க எல்லாம் இப்படி இல்ல.. ஏன் இந்தியா இன்னும் அப்படியே இருக்கு... .நான் போனப்ப இருந்ததை விட ரொம்ப மோசமா இருக்கு.. ஏன் இப்படி எச்சி த்துப்பறாங்க.. ஏன் இப்படி குப்பை கொட்டறாங்க.. ஹோ...... நோ பவர்.....அங்க எல்லாம் சான்ஸே இல்லத்தெரியுமா........ கொசு கடிச்சி ப்பாரு. முகமெல்லாம் எபப்டி இருக்குன்னு ?! யூநோ.. .அங்கெல்லாம் இன்ஸெக்ட்ஸே ஃப்ரீ... ந்னு கொடுக்கற பில்டப் இருக்கே..

ம்ம்ம் அப்புறம் ???!  உங்க பரம்பரையே அமெரிக்கா அதிபராவே இருந்தவங்களா... ? சொல்லவே இல்ல? !


* ஆண்களை விடுங்க..இந்த பொண்ணுங்க போனால், தலை அலங்காரம் முதல்ல மாறும். பின்னலோ, குதிரைவாலோ போயி எப்பவும் ஃப்ரி ஹேர் தான். அப்புறம் உடைகள் மேல கொஞ்சம் குறையும், கீழக்கொஞ்சம் ஏறும். கேட்டா எங்க பரம்பரையில் இப்படித்தான் நாங்க ட்ரஸ் செய்வோம்னு ரேஞ்சுக்கு சீன் போடுவாங்க.

இங்க முகத்தில் எண்ணெய் வடிய அருக்காணி சடைப்போட்டுக்கிட்டு மூக்கு ஒழிகினது எல்லாம் மறந்தே போச்சா அம்மணிங்களா?.

* அடுத்து கடன், ஒரு வேள வெளிநாட்டில் இருந்து வரவங்கள குறிவைத்தே எல்லோரும் பணம் கேட்பாங்களானு தெரியல..நாம சாதாரணமாக பேசிக்கிட்டு இருக்கும் போதே அவங்களோட சொத்துக்கணக்கு எல்லாம் சொல்லுவாங்க. அமெரிக்காவில் இருந்தாலும் நான் பிச்சைக்காரன் ரேஞ்சிக்கு சொல்லி, நாம அவங்கக்கிட்ட பணம் கேட்காத அளவு நம்மை மனதளவில் தயார்படுத்துவாங்க..  எல்லா பில்டப் பும் முடிஞ்சி, "உனக்கு எதாது ஹெல்ப் வேணும்னா என்னைய கேளூஊஊ கண்டிப்பா செய்வேன்னு "  சொல்லி முடிப்பாங்க.

அது எப்படிங்க? இதெல்லாம் அமெரிக்கா போனா தானா வருமா.?. இல்ல அங்க ஏதாச்சும் இதுக்குன்னு தனியா க்ளாஸ் நடத்தறாங்களா??


*அடுத்து புள்ளைங்கக்கிட்ட தமிழ்ல பேசவே மாட்டாங்க. நம்மக்கிட்ட தமிழ்ல பேசுவாங்க..நடுவுல புள்ளைங்க வந்தா அவங்கக்கிட்ட ஒரே பீட்டர் தான். ஏன்ப்பா தமிழ் சொல்லி த்தரலியான்னு கேட்டா.. கொன்ச் கொன்ச் த்ரியும்.. ஆனா இங்கிலீஷ் நா ஈசியா புரிஞ்சிக்குவாங்க..அதனால் இங்கிலீஷ்லியே பேசிடுவோம் நு சொல்லுவாங்க. புள்ளைங்க நம்ம என்னவோ வேற்று கிரகத்து ஆட்களை பார்ப்பது போல மேலும் கீழும் பார்க்கும். சரி நாமும் குழந்தைங்கக்கிட்ட பேசி வைப்போம்னு.. அதான் தமிழ் தெரியாதே... Hai I am your Chitthi / Athai.... means..your mom;s younger sister/ your dad's younger sister" னு சொன்னாப்போதும்.. ஒரு மாதிரி வினோதமாக ”ஹாய்...சித்தி../அத்த....  இட்ஸ் கிரேட்.. டு சி யூ.. ஹே.. யூ கேரியான்.. மீத் யூ லேத்தர்.. ” ந்னு நாலு வார்த்தைக்கு மேல பேசமுடியாமல் ஓடி போயிடுவாங்க.  

சொந்தக்காரங்க வருவாங்க. .எல்லாம் பக்கி பனாதிங்க.. .அதுங்க க்கிட்ட நின்னு பேசாத ன்னு சொல்லியே கூட்டுட்டு வருவாங்களோ?

* அடுத்து டைம் ஸோன் பிரச்சனை. வந்து ஒரு 1 வாரத்திலிருந்து 10 நாளாவது, இவங்க அர்த்த ராத்திரியில் எழுந்து நடமாடுவாங்க. டிவி ய வச்சிக்கிட்டு பார்க்கிறது... கண்ட நேரத்தில் சாப்பிடறதுன்னு ஒரு மார்க்கமாவே இருப்பாங்க... .தனியா இருக்காங்களேன்னு பாவம் பார்த்து நாமும் கூட சேர்ந்து முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருந்தா............ சரி செய்யறோமேன்னு இல்லாம.. அமெரிக்கா மொக்கைய ஆரம்பிச்சி ... ராத்திரி பொழுதையும் நிம்மதியா விட்டுவைக்க மாட்டாங்க..

இங்க இருக்க கொசுத்தொல்லை இல்லாம அமெரிக்காவிலிருந்த வந்த கொசு ..இங்க இருக்கறதையாச்சும். அடிச்சே கொல்லலாம்..ஆனா இதுங்கல... ?! 

* கடைசியா இந்த ஆசம் அமெரிக்க மாப்பிள்ளைகள். ஒரு வீட்டுல நாலு மாப்பிள்ளை இருந்தாலும், அதுல ஒரே ஒருத்தர் அமெரிக்காவில் இருந்துட்டா போதும்.. அடடடா டாஆ.... முடியாதுடா சாமி.. ! :) இவரு தான் அந்த குடும்பத்தையே அமெரிக்கா போயி உசத்திட்டத்தா நினைச்சிக்குவாரு.. அதிகம் பேசமாட்டாரு.... அடுத்தவங்க எது பேசினாலும். .ஒரு கிரேட் ஸ்மைல் பண்ணுவாரு.... என்ன சொன்னாலும் டவுன் டு எர்த் ஆ இருப்பாரு.....எல்லா இடத்திலும் முக்காப்பேண்ட்ஐ போட்டுக்கிட்டு சுத்துவாரு, . ரொம்ப ரொம்ப சிம்பிள் ஆ காமிச்சிக்குவாரு...  நம்ம மக்களோ இங்க இருக்க உள்நாட்டு மூணு மாப்பிள்ளைய மாட்டைவிட கேவலமா மதிப்பாங்க.. ஆனா இவரை விழுந்து விழுந்து கவனிப்பாங்க...

பேசாமயே ...கிரேட் ஸமைலியோடயே..வந்த வேலைய முடிச்சிட்டு அமெரிக்கா பேரைச்சொல்லி எவ்ளோ கறக்க முடியுமோ கறந்துட்டு  கிளம்பிடுவாரு.... :)) இவரு தான் இருக்கறதிலேயே ரெம்ப நல்லவரு...

===========

இளா எழுதிய  NRI கொசுத்தொல்லைகள் பதிவை அச்சு அசலாக காப்பி செய்து எழுதியது. :). அவரிடம் ப்ர்மிஷன் கேட்டு (ஒரு வருசம் முடிஞ்சி இருக்குமோ?) மெயில் அனுப்பிய போது.. .எவ்ளோ திட்டிக்கனுமோ திட்டிக்கோங்கன்னு பெரிய மனசோட பர்மிஷன் கொடுத்தாரு. நன்றி இளா.

அணில் குட்டி : எச்சூச்சுமி கவி.. உங்க புள்ள  ஜிஆர்ஈ..எழுதிட்டாரு.. ட்டோஃபல் எழுதப்போறாரு...  .... இதெல்லாம் எதுக்கு ?! ...ச்ச்சும்மா ஒரு இன்ஃபோ க்கு கேட்டேன்.. ...  அப்புறம் இன்னொரு மேட்டரு கேக்கனும்.. சத்தமா கேட்டா உங்கள எல்லாரும் கல்லால அடிப்பாங்க. .காதக்கொடுங்க. .ரகசியமா கேக்கறேன்.. "உங்க புள்ளைக்கு தமிழ் படிக்கத்தெரியுமா? "   (மக்கா நீங்களும் கவிதா காதை  இழுத்து இதே கேள்வி ய கேட்டுட்டு போவீங்களாம்)

பீட்டர் தாத்ஸ் :  Patience when teased is often transformed into rage

வெள்ளை காக்கா

போன வாரம் தஞ்சாவூர் போயிட்டு வந்ததிலிருந்து சிவா'விடம் ஒரு மாற்றம் தெரிந்தது.  சொந்தக்காரர்கள் திருமணம் என்று சென்று வந்தான். ஆனால் அவன் வந்தலிருந்து கவனிக்கிறோம்... எப்போதும் போல இல்லை. வேலை நேரங்களில், விசிட்டர் ரூம் சோபாவில் அடிக்கடி சென்று தனியாக அமர்ந்து கொள்கிறான், அங்கிருக்கும் கண்ணாடியிட்ட கதவின் முன் வேடிக்கை பார்த்தவாறு நேரம் போவதே தெரியாமல் நிற்கிறான். கத்தி கதறி கூப்பிட்டால் தான் சாப்பிடவே வருகிறான். எப்போதும் போல் நடக்கும் அரட்டை கச்சேரி எல்லாம் நின்றுவிட்டது, தனிமையில் இருப்பதை விரும்புவதாக தெரிந்தது... விட்டறவா முடியும்..?!

"ஏன் டா என்ன ஆச்சி உனக்கு "  

".............................................. .......... ஒரு பொண்ணை பாத்தேன்..  ரொம்ப பிடிச்சி போச்சி... உன் கிட்ட சொல்லனும் தான் இருந்தேன்.. ஆனா எப்படி சொல்றது தான் தெரியல.. "

"ஓ...அதான் மேட்டரா.. ஹே பொண்ணு எப்படிடா இருக்கா...? "

"ம்ம் போட்டோ இருக்கு பாக்கறியா? "

"என்ன கேக்கற....எடுடா முதல்ல... "

ஓடி போயி, அவனுடைய டெஸ்க்கிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து வந்து "யார் ன்னு சொல்லு பாக்கலாம்".  என்று சிரித்தான்.

அது ஒரு குரூப் போட்டோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடிவில்,  தாவணி போட்ட இரண்டு பெண்கள் இருந்தனர். ஒரு பெண் அழகாக லட்சணமாக இருந்தாள், மற்றவள் ரொம்பவே சுமார் ரகம், கொஞ்சம் குண்டு, கண்ணாடி போட்டு இருந்தாள். நான் அந்த அழகான பெண்ணை காட்டி "இவள் தானே ?" என்றேன்.

சிரித்துக்கொண்டே "நினைச்சேன் நீ அவளை தான் சொல்லுவேன். .அவ இல்ல. .பக்கத்துல இருக்கு இல்ல கண்ணாடி அது தான்.."

சட்டென்று மறைக்க முடியாத முக வாட்டத்தோடு . "ஏன்ன் இப்படி? நிஜமாவே இவளையா பிடிச்சி இருக்கு...?

"ம்ம்.. அவ ரொம்ப நல்ல பொண்ணு அனுஷ்...  அவள கல்யாணத்தில் தான் முதல்ல பாத்தேன்...உனக்கு தான் தெரியுமே எங்க வீட்டு கல்யாணம் எல்லாம் மூணு நாள் நடக்கும். அவள கவனிச்சிட்டே இருந்தேன்.  ரொம்ப இன்னசன்ட்.. அவள கூப்பிட்டு "அங்க பாரு வெள்ளை காக்கா பறக்குது ன்னு சொல்லி பார்... அவளும் ஓடி வந்து எங்க எங்க ன்னு பார்ப்பா" அதான் எனக்கு அவக்கிட்ட பிடிச்சி இருந்தது...அவ்ளோ குழந்தைத்தனம் வெகுளித்தனம் அவ கிட்ட இருக்கு..... ரொம்ப யோசிச்சி அவ தான் என் வாழ்க்கை ன்னு முடிவு செய்துட்டேன்.

"சொல்லிட்டியா? "

"சொல்லிட்டேன் ... ஆனா ரொம்ப பயப்படறா...  பதில் எதுவும் சொல்லல... அவ சொல்லாட்டி பரவாயில்ல. .அவ எனக்கு தான், அதை நான் முடிவு பண்ணிட்டேன்..  போக போக சரின்னு சொல்லிடுவா...... குழந்தை அவளுக்கு என்ன தெரியும்.."

"டேய்... உனக்கே ஓவரா இல்ல.. குழந்தைய போய் லவ் பண்றேன் னு சொல்ற... "

திரும்பவும் வாய்விட்டு சிரித்தான். "மனசால அவ குழந்தை ன்னு சொன்னேன்.... " சரி உனக்கு பிடிச்சி இருக்கா...? "

"அது எப்படிடா மனசாட்சியே இல்லாம இப்படி எல்லாம் கேள்வி கேக்கனும்னு உனக்கு தோணுது...என்னைய பாத்தா கேனச்சி மாதிரியே இருக்கா உனக்கு???.. கேக்கறான் பாரு கேள்வி..  ...அது சரி என்ன படிச்சி இருக்கா?"

"ப்ளஸ் 2....."

"என்னது ப்ள்ஸ் 2 வா?  ஏண்டா.. இது எல்லாம் வேலைக்கு ஆகுமா.. ரொம்ப சின்ன பொண்ணு.. அவ எப்ப படிச்சி முடிச்சி. . உன்னைவிட ரொம்ப சின்னவ டா..."

"ஆமா 7 வருஷம்... "

"தெரிஞ்சுமா?"

"என்னவோ அவ என் மனசுல பதிஞ்சிட்டா... எத்தன வருஷம் னாலும் காத்திருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..."

"என்னமோ போ... பொண்ணும் சுமார் தான்.......சிவா நல்லா யோசிச்சிக்கோ...... சரி நம்ம மக்க கிட்ட சொல்லிடவா? "

வாய்விட்டு சிரித்தான். ."சொல்லாமலா இருக்க போற... உன் கிட்ட சொன்னா பிபிஸி கிட்ட சொன்ன மாதிரியாச்சே...  "

"ஹோ..நான் பிபிசி யா..போடா..யூஸ்லஸ்.. நான் போறேன்..நீயே சொல்லிக்கோ....."

"ஏய்ய் ஏய்ய்...ஏய்...நில்லு.... " கையை பிடித்து இழுத்தான்... "இப்படி போனா எப்படி..?  நீதான் எனக்கு எல்லாம்........உன்னைவிட்டா எனக்கு யார் ஹெல்ப் பண்ணுவாங்க சொல்லு....."

"என்ன...நாய் வால் ஆட்டுது..?"

"ஆமா அனுஷ்.. அவங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்...  பசங்க எல்லாம் போன் செய்து அத்தன ஈசியா பேசமுடியாது.... நீதான் போன் செய்து அவள கூப்பிட்டு என் கூட பேசவைக்கனும்.. ...

"ஆஹா.. ராசா... இதை தான் கண்ணாடி முன்ன நின்னு இத்தனநாளா யோசிச்சிக்கிட்டு இருந்தியா...? அடேய்.... என் ஆருயிர் தோழர்களா எல்லாரும் இங்க  வாங்க. .அண்ணன் ஏதோ மேட்டர் சொல்றாரு.....  வந்து கேளுங்க......,   சிவா... எல்லாரும் ஒக்கே சொன்னா தான் செய்வேன். .இப்பவே சொல்லிட்டேன்... .எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்.. இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது......"
***********

நாங்கள் மொத்தம் எட்டு பேர், நான் மட்டுமே பெண்.. ஆனால் அந்த வித்தியாசம் இதுவரை எங்களிடம் வந்ததில்லை. எப்போதும் எங்கேயும் ஒன்றாகவே இருப்போம். இதில் ஒருவன் தான் சிவா. மற்றவர்கள் ராம், கணேஷ், ஆர்கே, ரகு, பட்டாபி, குமரன். எல்லோரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலுமே மற்றவர்களை விட ராம், சிவா, மற்றும் கணேஷ் ரொம்பவும் நெருக்கமானவர்கள்.

எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லை... எப்போதும் சிரிப்பும் கூத்தும் பாட்டும் என்று அலுவலகத்தில் வேலை செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ரொம்ப ஜாலியாக இருப்போம்..... ..

குமரன், ஆர்கே தவிர வேறு யாரும் பெண்களை பற்றி அதிகம் பேசுபவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரும் எந்த நேரமும் பெண் தோழிகளை பற்றியும் அவர்களுடன் ஊர் சுற்றிய கதை, சைட் அடிச்ச கதை என்று பேசி க்கொண்டே இருப்பார்கள், இதில் ஆர்கே.. குமரனை விட ரொம்பவே அதிகம்.. காதலர்கள் தினத்தில் ஆர்கே அலுவலகமே வரமாட்டான்.. ஒன்றா இரண்டா.. சீக்கிரம் முடித்துவிட்டு வர... அந்த நாள் முழுதும் பெண்களுடனேயே கழிப்பான். அடுத்த நாள் வந்தால் , என்னை தவிர மற்ற எல்லோரும்.. "மச்சி. .இங்க வாடா உன்னை ஒரு தரம் கட்டி பிடிச்சிக்கிறோம்.. அப்படியாது எங்க ஆசையை தீத்துக்கறோம் ன்னு லைன் கட்டி கட்டிப்பிடிச்சி.. அவனின் காதலர் தினத்தை இவர்களும் கொண்டாடி மகிழ்வார்கள்..

எல்லாவற்றிக்கும் நடுவே சிவா'வின் காதல் தான் எங்கள் அனைவருக்குமே முதல் காதல். எல்லோருமே சந்தோஷமாக இருந்தோம், அவன் காதலை அவனுடன் சேர்ந்து நாங்களும் ரசிக்க ஆரம்பித்திருந்தோம். அவனுக்காக போன் செய்ய நானே நியமிக்க பட்டேன். 

ஆயிற்று.. போன் செய்ய ஆரம்பித்து, குந்தவை'வின் தோழி ன்னு அவங்க அம்மா க்கிட்ட அறிமுகம் செய்துக்கிட்டு ஃபோன் கை மாறியவுடன் சிவாவிடம் கொடுத்துவிட்டு அவன் பேசுவதை பார்த்து ரசிப்பது எங்கள் அனைவருக்கும் வாடிக்கையாகி விட்டது..

காதலிக்கறதே பிடிக்காது என்று இருந்த எனக்கு. .சிவாவின் காதல் கதை கேட்கவே நேரம் போதாமல் போனது. எந்த நேரம் பாத்தாலும் அனுஷ் வாயேன். .இன்னைக்கு அவ என்ன சொன்னா தெரியுமா.. .ன்னு ஆரம்பித்தால்.. என் காதில் ரத்தம் வரும் வரை பேசிக்கிட்டே இருப்பான்.. ..கேட்டு கேட்டு  குந்தவை என் மனதிலும் ஆழ பதிந்துவிட்டாள்.. ஒரு சின்ன குழந்தையாக.....

அடுத்த வந்த மாதத்தில் ஒரு நாள் தஞ்சாவூர் சென்று வந்தான்.  வந்ததிலிருந்து அலுவலகத்தில் வேலை பளு காரணமாக யாருமே ஒழுங்காக பேசிக்கொள்ள முடியவில்லை...  மாலை வீட்டிற்கு கிளம்பும் முன்... அனுஷ் நில்லு.. உன் கிட்ட பேசனும் னு சொல்லி, அலுவலகத்தில் வெளியே இருந்த தோட்டத்திற்கு கூட்டி சென்றான்...  யாரும் இல்லாத ஒரு ஓரம்....நேரம் ஆகிறது என்பதை பொருட்படுத்தாமல் , கையை பிடித்து இழுத்து புல் தரையில் அமர வைத்தான்.

"பொண்ணுங்ககிட்ட இப்படி தனியா உட்காந்து... தொட்டு.. தடவி பேசறது எல்லாம் ஒரு சுகம் இல்ல அனுஷ்..."

"ஹான்...செருப்பு........ வந்த விஷயத்தை சொல்லு..".

"நீ கோவப்பட்டா ரொம்ப அழகா இருக்க அனுஷ்.."

"அடச்சீ... டைம் ஆச்சுடா. .சொல்ல வந்தத சொல்லு...போனும்..."

"ஐ லவ் யூ அனுஷ்..."

"நான் கிளம்பறேன்.. ஆளவிடு.......... .."

"சரி சரி.. கூல் கூல்..ச்சும்மா...... .... இந்த தரம்.. அவள பாத்தப்ப... தனியா கூட்டிட்டு போயி... ரொம்ப நெருக்கமா உட்காந்து பேசினேன் அனுஷ்...."

"ம்ம்ம்..."

"அது சொல்லவே முடியாத ஒரு உணர்வு....... அவளோட நெருக்கும்... பார்வை, மூச்சு காத்து... லேசா அப்பப்ப காத்துல வந்து தொட்ட தாவணி.. .. அவ தலைய ஆட்டி பேசும் போது எல்லாம் காதுல கூடவே ஆடின ஜிமிக்கி........ அவ  உள்ளங்கைய பிடிச்சி இழுத்து வச்சி அழுத்தி பேசினது...................................................  அனுஷ்.. . பொண்ணுங்க எல்லாம் தேவதைங்க ....... அவங்களோட நெருக்கும்... நெஞ்சை உறுக்கி எடுக்குது..... என்னமோ ஒரு இனம் புரியாத சந்தோஷம்....இது வரைக்கும் கிடைக்காத சந்தோஷம்..................எப்படி சொல்றது.... அவக்கிட்ட இப்படி பேசினது... அங்கேயே அவ கூடவே எப்பவும் இருந்திடனும் போல  இருக்கு........மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா....."

"...டேய் என்னடா ஆச்சி உனக்கு......இப்படி உறுகி ஓடற..........."

"உனக்கு புரியலையா அனுஷ்.... "

"...........................ம்ம்ம்... .....................புரியுது... ................................. ஆனா .லிமிட் டா இரு... அவள உண்மையா காதலிச்சா. .இந்த நெருக்கத்தை எல்லாம் அவாய்ட் பண்ணு. .சின்ன பொண்ணு.. இப்பத்தான் +2 படிக்கறா.. அவ மனசு சலன படக்கூடாது.....உன்னை மாதிரி இல்ல அவ..  படிக்கனும்.. ஸ்கூல் ஃபைனல் .. நல்லா மார்க் எடுத்தாத்தான் காலேஜ் நல்ல சீட் கிடைக்கும்..... இதை மறந்துடாத... ... சரி நான் கிளம்பவா?"

"இல்ல இரு.. " இன்னும் சொல்லனும்...

"இல்லடா.. டைம் ஆச்சி நாளைக்கு சொல்லு கேக்கறேன்.. உன் மூடு வேற ஒரு மாதிரியா இருக்கு இன்னைக்கு, உன் பக்கத்துல உக்கார எனக்கே பயம்மா இருக்குடா............."

"ஹா ஹா ஹா ......." .வாய்விட்டு சிரித்தான்.......

அடுத்தநாள்... டீ டைம்... 'அனுஷ்... நீ சொன்னத யோசிச்சேன்....நீ சொல்றது ரைட் தான்.... அவ முதல்ல நல்லா படிக்கனும்......!!"

.......................
   
# ஏப்ரல் '11 மாதம் தேவதை இதழில் வெளிவந்தது. நன்றி தேவதை.